நாடு முழுவதும் உள்ள பெரும்பான்மையான ஊடகங்களில் இடம் பெற்றுள்ள தலைப்புச் செய்தி அயோத்தி ராமர் கோவில் குடமுழுக்கு தொடர்பானதாகத்தான் உள்ளது. பிரதமர் மோடி குழந்தை ராமர் சிலையை பிரான பிரதிஷ்டை செய்ததும்தான். இந்த நிகழ்வுக்காக இந்தியா முழுவதும் இருந்து லட்சக்கணக்கான மக்கள் உத்திரபிரதேசத்தில் உள்ள அயோத்திக்கு படையெடுத்தனர். இதற்காக சிறப்பு ரயில்களும் நாடு முழுவதும் இருந்து அயோத்திக்கு இயக்கப்பட்டது.
இந்த குடமுழுக்கு விழாவிற்கு நாடு முழுவதும் இருந்து சுமார் எட்டு ஆயிரம் சிறப்பு மற்றும் முக்கிய விருந்தினர்களுக்கு ராமர் கோவில் அறக்கட்டளை சார்பாக அழைப்பிதழ்கள் நேரடியாக வழங்கப்பட்டது. தமிழ்நாட்டில் உள்ள அரசியல் பிரபலங்கள், சினிமா பிரபலங்களுக்கு அழைப்பிதழ் வழங்கப்பட்டது. இப்படியான நிலையில், இன்று நடைபெற்ற ராமர் கோவில் குடமுழுக்கு விழாவில் ரஜினிகாந்த் உள்ளிட்ட திரைப்பிரபலங்கள் அவர்களின் குடும்பத்தினருடன் கலந்து கொண்டனர்.
ராமர் கோவில் திறப்பு விழாவின் தொடக்கம் முதல் இறுதி வரை இருந்த ரஜினிகாந்த், அங்கிருந்து கிளம்பும்போது தனது அனுபவத்தை ஊடகவியலாளரிடம் பகிர்ந்து கொண்டார். அதில் “ இந்த வரலாற்று தருணத்தில் நான் பங்கேற்றது எனது பாக்கியமாக கருதுகின்றேன். இனி ஒவ்வொரு ஆண்டும் நான் தவறாமல் இங்கு வருவேன். இன்று இங்கு நடந்தது ஒரு இதிகாச நிகழ்வு” என பேசியுள்ளார்.
#PM’s Reaction After Seeing #Thalaivar 🤩☺️@rajinikanth @narendramodi#SuperStar #Rajinikanth#SuperstarRajinikanth#Modi #NarendraModi#Ayodhya #AyodhyaRamMandir #RamMandirPranPrathistha pic.twitter.com/oHIV8wAUjt
— KarthickPrabhakaran (@KarthiPrabha23) January 22, 2024
கோவில் திறப்பு நிகழ்வில் கலந்து கொள்ள வந்த ரஜினிகாந்த், விழா மேடையில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு விருந்தினர்களுக்கான இடத்தில் முன் வரிசையில் அமர்ந்திருந்தார். சிறப்பு விருந்தினர்களுக்கு வணக்கம் சொல்லிக்கொண்டு வந்த பிரதமர் மோடி சூப்பர் ஸ்டார் ரஜினியை பார்த்ததும், மிகவும் உற்சாகமாகி தனது இரண்டு கரங்களையும் உயர்த்தி ஏதோ கேட்டார். இதற்கு ரஜினியும் ஏதோ பதில் சொன்னார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

























casinos près de paris Here is my blog post :: bonus vip roulette en ligne France