<p>டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது விவகாரம் சர்வதேச அளவில் பெரும் பரபரப்பை கிளப்பி வருகிறது. மத்திய விசாரணை அமைப்புகளை கொண்டு எதிர்க்கட்சி தலைர்கள் மிரட்டப்படுவதாக தொடர் புகார் எழுந்தது.</p>
<h2><strong>அசாதாரண அரசியல் சூழல்:</strong></h2>
<p>குறிப்பாக, ஆம் ஆத்மி கட்சி தலைவர்கள் தொடர்ந்து சிறை வைக்கப்பட்டு வருகின்றனர். டெல்லி அமைச்சராக பதவி வகித்து வந்த சத்யேந்திர ஜெயின், டெல்லி துணை முதலமைச்சராக பதவி வகித்து வந்த மணீஷ் சிசோடியா, ஆம் ஆத்மி மாநிலங்களவை உறுப்பினர் சஞ்சய் சிங் உள்ளிட்டோர் வரிசையில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் சிறையில் அடைக்கப்பட்டார்.</p>
<p>இதைத் தவிர்த்து, நாட்டின் பிரதான எதிர்க்கட்சியான காங்கிரஸின் வங்கி கணக்குகள் முடக்கப்பட்டதும் பெரும் பிரச்சினையாக வெடித்துள்ளது. தேர்தல் நெருங்கும் சூழலில், முக்கிய எதிர்க்கட்சி தலைவர்கள் கைது செய்யப்படுவது, எதிர்க்கட்சிகள் வங்கி கணக்குகள் முடக்கப்படுவது ஜனநாயகத்திற்கு நல்லதல்ல என விமர்சனம் எழுந்து வருகிறது.</p>
<p>உள்நாட்டை தாண்டி சர்வதேச நாடுகளிலும் இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது. கெஜ்ரிவால் கைது தொடர்பாக ஜெர்மனி, அமெரிக்கா, ஐக்கிய நாடுகள் சபை ஏற்கனவே கருத்து தெரிவித்துவிட்டது. இதற்கு இந்தியாவும் கடும் எதிர்வினையாற்றி இருந்தது.</p>
<h2><strong>குடியரசு துணை தலைவர் பரபர கருத்து:</strong></h2>
<p>இந்த நிலையில், இந்த விவகாரத்தில் குடியரசு துணை தலைவர் ஜெகதீப் தன்கர் இன்று பதிலடி அளித்துள்ளார். இந்தியா ஒரு தனித்துவமான ஜனநாயக நாடு என்றும் சட்டத்தின் ஆட்சி குறித்து யாரும் தங்களுக்கு பாடம் கற்று தர தேவையில்லை என்றும் விமர்சித்துள்ளார்.</p>
<p>நேற்று நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய அவர், "வலுவான நீதித்துறையை கொண்ட ஜனநாயக நாடாக இந்தியா உள்ளது. இதை எந்த ஒரு தனிநபராலும் அல்லது எந்த குழுவாலும் சமரசம் செய்ய முடியாது. சட்டத்தின் ஆட்சி குறித்து இந்தியாவுக்கு யாரிடமிருந்தும் பாடம் தேவையில்லை. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பது இந்தியாவில் புதிய நடைமுறை. தாங்கள் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் என்று நினைத்தவர்கள் மீதும் தற்போது நடவடிக்கை எடுக்கப்படுகிறது" என்றார்.</p>
<p>கெஜ்ரிவால் கைதை கண்டித்து இந்தியா கூட்டணி தலைவர்கள் போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்ததை <span class="Y2IQFc" lang="ta">மறைமுகமாக விமர்சித்த குடியரசு துணை தலைவர், "</span>நாம் என்ன பார்க்கிறோம்? சட்டம் அதன் போக்கை எடுக்கும் தருணத்தில், அவர்கள் தெருக்களில் இறங்குகிறார்கள், விவாதங்களில் கத்துகிறார்கள், மனித உரிமைகள் என சொல்லிக் கொண்டு மோசமான குற்றத்தை மறைக்கிறார்கள். இது நம் கண் முன்நடக்கிறது.</p>
<p>சட்டத்தின் மூலம் நடவடிக்கை எடுக்கும்போது, ஒரு நபரோ அல்லது நிறுவனமோ அல்லது ஒரு அமைப்போ வீதியில் இறங்குவது என்ன நியாயம்?" என தெரிவித்தார்.</p>
<p> </p>

Previous Post
Next Post
Latest News

Stay Connected
Categories
ஆரோக்கியம் இந்தியா உலகம் சினிமா தமிழகம் போர் விளையாட்டு வீடியோ
nexus link wethenorth market link
leuke casino Also visit my site – beste Poker nederland (https://barriosenaccion.com.ar)
dark market list nexus dark web
Для выбора надежного партнера рекомендуем ознакомиться с [url=https://media-garage.ru/moya-kollekciya/rejting-sistemnyh-multimedia-integratorov-goroda-moskvy]рейтинг мультимедийных интеграторов[/url], который поможет найти лучших специалистов в Москве. На первых позициях…
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports
You May Have Missed
-

முதல்வரும் அவையில் இல்லை; தலைமைச் செயலாளரும் இல்லை – சபாநாயகரிடம் ரிப்போர்ட் செய்த உதயநிதி | ACTPnews.com
-

தளபதி எக்ஸிட்; பி.டி.ஆர் என்டரி? டு `புது நட்பு?’ விஜய் – மத்திய மாண்புமிகு ரகசிய சந்திப்பு| கழுகார் | Kazhugar updates on PTR and TVK, BJP politics | ACTPnews.com
-

“தமிழ்நாட்டிலிருந்து ஒரு பிரதமர் வரவேண்டும் என நாங்கள் பேசக் கூடாதா?” – கேட்கிறார் அமைச்சர் விக்னேஷ் | TN Minister Vignesh Questions: “Why Can’t Tamil Nadu Produce a Prime Minister? | ACTPnews.com
-

“கவிஞர்கள் ஒரு வரியை இரண்டு முறை ஆழமாக சொல்வது என்பது வழக்கம்”- கே.என்.நேருவுக்கு விஸ்வநாதன் பதில்! | minister Viswanathan explain about k.n nehru statement | ACTPnews.com
-

Iran: "மொஜ்தபா காமேனி இறந்துவிட்டதாக நான் நினைக்கவில்லை; ஆனால்.." – ட்ரம்ப் சொல்வது என்ன? | ACTPnews.com


















Если вам требуется качественный [url=https://remont-dvig124.ru]Ремонт двигателей[/url], обращайтесь к профессионалам. Так обеспечивается длительная и стабильная эксплуатация транспортного средства.