Month: June 2024
-

கண்களை கவரும் அம்பானி மகன் திருமண அழைப்பிதழ்… இப்படியா? வீடியோ…
முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சன்ட் திருமணத்தை உலகமே வியந்து பார்த்து வருகிறது. திருமணத்திற்கு முன்பே பல்வேறு நிகழ்ச்சிகள் மூலம், உலக நாடுகளை தங்கள் பக்கம் ஈர்க்க வைத்தார் அம்பானி. அதிலும், உலக பணக்காரர்கள் மட்டுமல்லாமல், பிரபலங்கள், அரசியல்வாதிகள் என ஆயிரக்கணக்கானோர் நேரில் வாழ்த்து தெரிவித்தனர். திருமணம் முடிந்துவிட்டது என்றால் அதுதான் இல்லை. இதுவரை நடந்த நிகழ்ச்சிகள் அனைத்துமே, திருமணத்திற்கு முந்தைய நிகழ்ச்சிகள்தான். திருமணத்திற்கான ஏற்பாடுகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. திருமணத்திற்காக, பல்வேறு…
-

கள்ளக்குறிச்சி சம்பவத்தை விசாரிக்க குஷ்பு தலைமையில் குழு… அதிரடி உத்தரவு…
கள்ளக்குறிச்சி விஷச் சாராய சம்பவத்தில் பெண்கள் உயிரிழந்தது தொடர்பாக விசாரணை நடத்த, குஷ்பு தலைமையில் குழு அமைத்து தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சியில் விஷச் சாராயம் குடித்து உயிரிழந்தவர்களில் 6 பேர் பெண்கள் என்பதால், விவகாரம் பூதாகரமாக மாறியுள்ளது. ஆண்கள் மட்டுமே சாராயம் குடிக்கும் நிலையில், பெண்களும் சாராயம் குடித்ததால் உயிரிழந்திருப்பது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. அதிலும், கணவன் மனைவி சேர்ந்து குடித்து உயிரிழந்திருப்பதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், 6 பெண்கள் விஷச்சாராயத்தால் உயிரிழந்திருப்பதை, செய்திகள்…
-

தமிழக அரசின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்த உச்சநீதிமன்றம்…
வெளி மாநில ஆம்னி பேருந்துகளை இயக்குவதை தடுக்க கூடாது என தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவிட்டுள்ளது. வெளி மாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட ஆம்னி பேருந்துகள் அதிக அளவில் தமிழ்நாட்டில் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், அவ்வாறு இயக்கப்படும் பேருந்துகளை தமிழ்நாடு பதிவெண்ணுக்கு மாற்ற வேண்டும் என்று அவகாசம் விதித்த தமிழ்நாடு அரசு, அவகாசம் முடிந்த பின்னர், பேருந்துகள் இயக்க அனுமதிக்கப்படாது என் திட்டவட்டமாக அறிவித்திருந்தது. இதுகுறித்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியதோடு, தமிழ்நாட்டு பதிவெண்ணுக்கு…
-

டேட்டிங் ஆப் மூலம் சினிமாக்காரருக்கு நேர்ந்த கதி… சிறுவன் உட்பட 4 பேர் கைது…
ஆன்லைன் டேட்டிங் ஆப் மூலமாக பழக்கமான ஆண் நபர் வீட்டிற்கு சென்ற சினிமா சவுண்ட் இன்ஜினியரை மிரட்டி பணம் பறித்த புகாரில், ஒரு சிறுவன் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர். சென்னை கேகே நகர் ராஜ மன்னார் சாலை பகுதியை சேர்ந்தவர் சுரேஷ். 56 வயதாகி திருமணமாகாத சுரேஷ், சினிமா துறையில் சவுண்ட் இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். Grindr என்ற டேட்டிங் ஆப் மூலமாக சுரேஷுக்கு ஆண் நபர் ஒருவர் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அந்த நபர்…
-

உக்ரைனில் பெலுகா திமிங்கலங்களை பாதுகாக்க செய்த செயல்… நெகிழ்ச்சி வீடியோ…
ரஷ்யாவின் தாக்குதலில் இருந்து காப்பாற்ற, உக்ரைனில் இருந்து பெலுகா திமிங்கலங்கள் ஸ்பெயினுக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளன. உக்ரைன் மீது போர் தொடுத்து வரும் ரஷ்யா தொடர்ந்து குண்டு மழை பொழிந்து வருகிறது. கட்டுமானங்களை எல்லாம் சிதைத்து வருவதால், பொதுமக்கள் கட்டடங்களில் வாழ முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதே நிலை அங்கு கர்கிவ் நகரில் உள்ள அக்குவாரியமில் வளர்க்கப்படும் வெள்ளை நிற பெலுகா திமிங்கலங்களுக்கும் ஏற்பட்டுள்ளது. இதனால், அவற்றை பாதுகாக்க உக்ரைன் கால்நடைத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர். அதன்படி, ஸ்பெயினில் உள்ள…
-

ஒடிசாவுக்கு பதவிகளை அள்ளித்தரும் மத்திய அரசு… வாய் பிளக்கும் தமிழர்கள்…
ஒடிசா மாநிலத்தில் உள்ளவர்களுக்கு பதவிகளை மத்தியில் ஆளும் பாஜக அள்ளித் தருவது தற்போது தமிழக அரசியலில் பேசு பொருளாகியுள்ளது. நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலோடு, ஒடிசா மாநிலத்திற்கும் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற்றது. அங்கு, ஆட்சியில் இருந்த பிஜு ஜனதா தளம் கட்சியின் சக்திவாய்ந்த முதல்வராக இருந்த நவீன் பட்நாயக்கை வீழ்த்தி, பாஜக முதல்முறையாக ஆட்சியை கைப்பற்றியது. அதோடு மட்டுமல்லாமல், அங்கு மக்களவைத் தேர்தலிலும் பாஜக அதிக இடங்களில் வெற்றி பெற்றது. இதனால், மத்திய பாஜக ஆட்சியில் ஒடிசா…
-

கள்ளக்குறிச்சி சம்பவம்… முதல்வர் பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டும்… எல்.முருகன் வலியுறுத்தல்…
கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக தமிழக முதல்வர் பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வலியுறுத்தியுள்ளார். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன். கள்ளக்குறிச்சி சம்பவம் குறித்து கடும் விமர்சனங்களை முன்வைத்தார். திமுகவையும், காவல்துறையையும் கடுமையாக அவர் குற்றம்சாட்டினார். கள்ளக்குறிச்சியில் நிகழ்ந்துள்ள இந்த சம்பவம் தமிழக அரசியல் வரலாற்றில் மிகப்பெரிய கரப்பு தினம் என்று தெரிவித்துள்ள எல்.முருகன், இந்த சம்பவத்தை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறியுள்ளார். இந்த சம்பவம், திமுக…
-

ஆப்கனை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி … முழு விவரம்..
உலகக்கோப்பை சூப்பர் 8 ஆட்டத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி பெற்றுள்ளது. பார்படாஸ் நாட்டில் உள்ள கிங்ஸ்டன் ஓவல் மைதானத்தில், உலகக் கோப்பை டி20 தொடரின் 43ஆவது போட்டியும், சூப்பர் 8 சுற்று போட்டியும் இந்தியாவுக்கும் ஆப்கானிஸ்தானுக்கும் இடையே நடைபெற்றது. ஆப்கானிஸ்தான் நல்ல ஃபார்மில் இருப்பதால் போட்டி எப்படி இருக்குமோ என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருந்தது. அதன்படியே, டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய முடிவு செய்தது. முதலில் பேட்டிங்…
-

சென்னை வேளச்சேரியில் பரபரப்பு… மேம்பாலத்தில் இருந்து குதித்து பெண் தற்கொலை…
சென்னை வேளச்சேரி மேம்பாலத்தில் இருந்து பெண் ஒருவர் குதித்து தற்கொலை செய்துகொண்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சென்னை வேளச்சேரி விஜயநகர் பேருந்து நிலையத்தில் இரண்டடுக்கு மேம்பாலம் உள்ளது. இங்கு, காதல் ஜோடிகள், ஆண்கள், பெண்கள் என பல்வேறு தரப்பினர், மேம்பாலத்தில் நின்று பொழுதை கழிப்பது வழக்கம். இந்நிலையில், இந்த மேம்பாலத்தின் கீழ் பெண் ஒருவர் ரத்த வெள்ளத்தில் கிடப்பதை பார்த்த அப்பகுதி மக்கள், அவரை மீட்டு தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி அந்த பெண் உயிரிழந்தார்.…
-

பிரதமர் பதவியேற்பு விழாவில் பங்கேற்க மறுத்த தேவகவுடா… அதிர்ச்சித் தகவல்…
பிரதமர் மோடி பதவியேற்கும் நிகழ்ச்சியில் பங்கேற்கப் போவதில்லை என்று முன்னாள் பிரதமரும், மதசார்பற்ற ஜனதா தளம் கட்சியின் தலைவருமான தேவகவுடா அறிவித்துள்ளார். இந்தியாவின் பிரதமராக, மூன்றாவது முறையாக மோடி பதவியேற்க உள்ளார். அதற்கான நிகழ்ச்சி குடியரசுத் தலைவர் மாளிகையில் இன்று இரவு 7.15 மணிக்கு நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மூன்றாவது முறையாக பதவியேற்க உள்ளதால், அண்டை நாடுகளின் தலைவர்கள், பல்வேறு நாடுகளின் முக்கிய தலைவர்கள், முன்னாள் குடியரசுத் தலைவர்கள், முன்னாள் பிரதமர்கள்…
-

கால்வாயில் கவிழ்ந்த பேருந்து… 13 பேர் படுகாயம்… பரபரப்பு…
இலங்கையில் கால்வாய்க்குள் பேருந்து ஒன்று கவிழ்ந்ததில் 13 பேர் படுகாயமடைந்தனர். இலங்கையின் வராகபோலாவில் 7 பெற்றோர், குழந்தைகளுடன் பேருந்தில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, கட்டுப்பாட்டை இழந்த பேருந்து, திடீரென சாலையோரம் இருந்த கால்வாயில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் குழந்தைகள் உட்பட 13 பேர் படுகாயமடைந்தனர். நல்வாய்ப்பாக உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. படுகாயமடைந்தவர்கள் உடனடியாக மீட்கப்பட்டு, மருத்துவமனையில் அனுதித்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்துக்குள்ளான பேருந்து மீட்கப்பட்ட நிலையில், விபத்து எப்படி எற்பட்டது? எதனால் ஏற்பட்டது என்பது…
-

T20 WC : நெதர்லாந்தை புரட்டி எடுத்த தென்ஆப்பிரிக்கா… ஸ்கோர் விவரத்தை பாருங்க…
உலகக் கோப்பை டி 20 போட்டியில் நெதர்லாந்தை புரட்டிப்போட்டு தென் ஆப்பிரிக்கா அணி வெற்றி பெற்றுள்ளது. அமெரி்க்காவின் நியூ யார்க் நகரில் உள்ள நசாவ் கவுண்டி இன்டர்நேஷனல் கிரிக்கெட் மைதானத்தில் 16ஆவது போட்டி நடைபெற்றது. இதில், டி பிரிவில் உள்ள நெதர்லாந்து மற்றும் தென் ஆப்பிரிக்க அணிகள் மோதின. டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க அணி, பவுலிங்கை தேர்வு செய்தது. போட்டி தொடகியதில் இருந்தே தென் ஆப்பிரிக்க வீரர்கள் அதிரடி பந்துவீச்சில் ஈடுபட்டனர். அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து…







suwnqfdzwkfrpdzlkrqyyvtllwevwz