"வெற்றிபெறாத போது பாலிவுட் எனக்கான கதவுகளை மூடிவிட்டது!" - ஜோதிகா |"When I didn't succeed, Bollywood closed its doors on me!" — Jyothika

இதுதான் இரு திரையுலகிற்கும் இடையே நான் கண்ட முக்கிய வித்தியாசம். இருப்பினும், இப்போது பாலிவுட்டில் 40 வயதைக் கடந்த பெண்களுக்காக எழுதப்படும் கதைக் களங்கள் ஆரோக்கியமான மாற்றத்தைக் காட்டுகின்றன.” என்றவர், “தென்னிந்திய சினிமாவில் வேலை நேரம் மிகவும் சரியாகத் திட்டமிடப்படுகிறது.

அங்கு 99 சதவீத திரைப்படங்களின் படப்பிடிப்புகள் மாலை 6 மணிக்கெல்லாம் நிறைவடைந்துவிடும். காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை அல்லது காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே அங்கு படப்பிடிப்புகள் நடக்கும்” எனக் கூறியிருக்கிறார்.

இதனைத் தொடர்ந்து நடிகை சோனாக்ஷி சின்ஹா, “நாம் ஏன் இதை இன்னும் ஒரு கேள்வியாகவே பார்த்துக் கொண்டிருக்கிறோம்? இங்குப் பல முன்னணி ஆண் நடிகர்கள் 8 மணி நேரத்திற்கு மேல் ஒரு நிமிடம் கூட வேலை செய்வதில்லை.

அவர்களுடைய ஷாட் முடிந்ததோ இல்லையோ, அவர்கள் தங்களின் காரில் ஏறி கிளம்பிவிடுகிறார்கள். அவர்களை இங்கு யாரும் கேள்வி கேட்பதில்லை.

சினிமாவில் ஒரு குறிப்பிட்ட நிலையை எட்டி, இவ்வளவு காலம் உழைத்த ஒரு நபர் 8 மணி நேர ஷிப்ட் கேட்பதில் எந்தத் தப்புமில்லை” என்றாரைத் தொடர்ந்து ஜோதிகா, “குறிப்பாக ஒரு தாயாக இருக்கும் பெண்களுக்கு இந்த வேலை நேரத் தளர்வு மிகவும் அவசியமானது” என்றார்.

Source link


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports

You May Have Missed

You May Have Missed