கடந்த ஆகஸ்ட் 22-ம் தேதி முதல், கனடாவில் இருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி ஆகும் சில பொருள்களுக்கு 50 சதவிகித வரியை விதித்திருக்கிறார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.
மேலும், “2027-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல், கனடாவில் இருந்து இறக்குமதி ஆகும் அனைத்துக் கார்கள், டிரக்குகள், வாகன உதிரிபாகங்கள் மற்றும் எஃகு மீதான வரிகள் 50% ஆக உயர்த்தப்படும்” என்றும் அறிவித்திருக்கிறார் ட்ரம்ப்.
கனடாவிற்கு அமெரிக்காதான் ‘டாப் ஏற்றுமதி நாடு’ என்பதால், இந்த அறிவிப்பு கனடாவிற்கு நல்ல அடி.

“அமெரிக்கா – கனடா பேச்சுவார்த்தையின் போது, கனடாவிடமிருந்து அமெரிக்கா அதிகமாக எதிர்பார்த்தது.
இதனால், கனடாவின் தொழிலாளர்கள், வணிகங்கள், முக்கியத் துறைகள் மற்றும் தேசிய நலனைப் பாதிக்கும் ஒரு மோசமான ஒப்பந்தத்தை ஏற்பதை விட, பேச்சுவார்த்தைகளை இடைநிறுத்தம் செய்யக் கனடா முடிவெடுத்தது.
























