ஈரான் போர் ஈரான், அமெரிக்கா, இஸ்ரேலுக்கு இடையிலான போராகத்தான் முதலில் தொடங்கியது.
ஆனால், இந்தப் போருக்கு நெருக்கடி கொடுக்கும் விதமாக, ஈரான் ஹார்முஸ் நீர்ச்சந்தியை மூடியபோதுதான், ஈரான் போர் உலக நாடுகளுக்கான பிரச்னையாக மாறியது.
காரணம், உலக நாடுகளின் எண்ணெய் போக்குவரத்து இந்த நீர்ச்சந்தி வழியாகத்தான் பெரும்பான்மையாக நடக்கும்.
இதனால், இந்த நீர்ச்சந்தியை மூடியதும் பல உலக நாடுகள் எண்ணெய் இருப்பு… எண்ணெய் போக்குவரத்தில் நெருக்கடியைச் சந்தித்தன. எண்ணெய் விலையும் எகிறியது.

ஈரானின் எல்லை ஹார்முஸ் நீர்ச்சந்தி விரிந்திருப்பதால், ஈரானுக்கு இதை மூடிவிடுவது எளிதாக இருந்தது.
ஈரானின் தடையை மீறி ஹார்முஸ் நீர்ச்சந்தியைத் கடக்க முயன்ற கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தியது ஈரான்.
தற்போது ஓமனுடன் சேர்ந்து ஹார்முஸ் நீர்ச்சந்தி போக்குவரத்திற்கு சுங்கக் கட்டணம் விதிக்க பிளான் போட்டு வருகிறது ஈரான்.
கப்பல்கள் மீதான தாக்குதலைத் தடுக்கவும், சுங்கக் கட்டண வரியைத் தடுக்கவும், ஈரானுக்கு நெருக்கடி கொடுக்கவும் ஹார்முஸ் நீர்ச்சந்தியில் அமெரிக்கப் படைகளை நிறுத்தியுள்ளோம்… நிறுத்துகிறோம் என்று கூறிவந்தார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.
























