மார்கழி பிரதோஷம்; கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலய நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்


<p style="text-align: justify;"><strong>மார்கழி மாத பிரதோஷத்தை முன்னிட்டு கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் நந்தி பகவானுக்கு சிறப்பு பொருட்களால் அபிஷேகம் மற்றும் வெள்ளி கவச அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.</strong></p>
<p style="text-align: justify;">&nbsp;</p>
<p style="text-align: justify;">&nbsp;</p>
<p><strong><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/10/79d95922109a0dc1d31ef8aa4b32e47e1704867986877113_original.jpeg" /></strong></p>
<p style="text-align: justify;">தென் தமிழகத்தில் புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, ஸ்ரீ சௌந்தரநாயகி உடனுறை ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் மார்கழி மாத பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு என்னை காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம்,தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், அபிஷேக பொடி, அரிசி மாவு, பன்னீர்,விபூதி உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.</p>
<p style="text-align: justify;">&nbsp;</p>
<p><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/10/380e23f46345e5a2606d7b9e15a995851704868081883113_original.jpeg" /></p>
<p style="text-align: justify;">அதைத் தொடர்ந்து நந்தி பகவானுக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்த பிறகு, வெள்ளிக்கவசம் சாத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக ஆலயத்தின் சிவாச்சாரியார் உதிரி பூக்களால் நந்தி பகவானுக்கு சிறப்பு அர்ச்சனை செய்தார். பின்னர் நந்தி பகவானுக்கு தூப தீபங்கள் காட்டப்பட்டு, நெய்வேதியம் சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன் மகா தீபாராதனை நடைபெற்றது.</p>
<p style="text-align: justify;">&nbsp;</p>
<p><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/10/73e5d26645b8d69fd6c487ec973b46a01704868100876113_original.jpeg" /></p>
<p style="text-align: justify;">&nbsp;</p>
<p style="text-align: justify;">கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற மார்கழி மாத பிரதோஷ நிகழ்ச்சியை காண கரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய செயல் அலுவலர் மற்றும் பணியாளர்கள் சார்பாக சிறப்பாக செய்தனர்.</p>
<p style="text-align: justify;">&nbsp;</p>
<p style="text-align: justify;">&nbsp;</p>
<p style="text-align: justify;">&nbsp;</p>
<p style="text-align: justify;">&nbsp;</p>
<p style="text-align: justify;">&nbsp;</p>

Source link