கோவை விமானநிலையத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியின் தலைவர் மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசியிருக்கிறார்.
அப்போது, “தற்போது 23 கட்சிகள் இந்தியாக் கூட்டணியில் தொடர்கின்றன.
தவெகவுக்கு எப்போது எம்.பிக்கள் வருகிறார்களோ, அப்போது நாங்கள் அவர்களை இந்தியாக் கூட்டணியில் இணைந்து கொள்ளச் சொல்லுவோம். எம்.பி.க்களே இல்லாத தவெகவை எப்படி இந்தியாக் கூட்டணில் தற்போது சேர்க்க முடியும்?

விஜய்யைப் பொறுத்தவரை 106 இடங்கள் கிடைத்ததும், அவரை முதலில் தொடர்புகொண்டு பேசியது ராகுல் காந்தி. தான் முதல்வராக வேண்டும் என்பதற்காக ராகுல்காந்தியிடம் ஆதரவு கேட்டார் விஜய்.
























