“என் மனசுல இதெல்லாம் நடக்கும்னு நான் யோசிச்சிருக்கேன். ரஜினி சார் பேசினார். சூர்யா சாருக்கு அமீர்கான் சார் மெசேஜ் அனுப்பிச்சாரு. சிம்பு பேசினாரு. இது மாதிரி பெரிய இயக்குநர்கள் நிறைய பேர் பேசினாங்க.
உண்மையில இவங்க எல்லாரும் பேசணும்னு அவசியமே இல்லை. படம் பார்த்துட்டு, ‘படம் நல்லாருக்கு, பரவாயில்லை இது இப்படி இருக்கு, அது அப்படி இருக்கு’னு அவங்களுக்குள்ளேயே பேசிட்டுப் போயிருக்கலாம்.
ஆனா இவங்க எல்லோரும் பெரிய மனிதர்கள். இன்னொருத்தருக்கு போன் பண்ணி, ‘படம் நல்லா இருந்தது’னு பாராட்டுற நல்ல மனசு அவங்களுக்கு இருக்கு. ரஜினி சார் பேசும்போது எனக்கு அப்படித்தான் இருந்தது.

ஏன்னா நம்ம சின்ன வயசுல இருந்து நிறைய படங்கள் நல்லா ஓடும்போது, ‘இப்போதான் சூப்பர் ஸ்டார் கால் பண்ணாரு’னு ட்வீட் பார்த்திருப்போம். பேப்பர்ல அதையே ஒரு விளம்பரமா போடுவாங்க. அதுமாதிரி ஒரு சிறப்பான தருணம்தான் இது.
நான் சின்ன வயசுல இருந்தே ரஜினி சாருடைய தீவிரமான ரசிகன். எனக்கு விவரம் தெரிஞ்சு நான் தியேட்டர்ல போய் பார்த்த ‘பாட்ஷா’, ‘படையப்பா’, ‘அண்ணாமலை’, ‘முத்து’ போன்ற எல்லாப் படங்களுமே எனக்குப் பிடிக்கும்.
இதெல்லாம் என்னோட வாழ்க்கையில ரொம்ப முக்கியமான நினைவுகள். ‘நம்ம வாழ்க்கையில இது நடந்திருக்குல்ல’னு மனசுல ஆழமாகப் பதியும். இதைத்தான் நாங்க எதிர்பார்த்தோம். அது இப்ப நடக்கும்போது மனசுக்கு ரொம்ப நிறைவா இருக்கு” எனக் கூறியிருக்கிறார்.






















