<p>வன்முறை, பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் பாகிஸ்தானில் இன்று (பிப்ரவரி 8) நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலில் மூலம் பாகிஸ்தான் மக்கள் அடுத்த 5 ஆண்டுகளுக்கான எதிர்காலத்தை தீர்மானித்து, பொருளாதார நெருக்கடியை சரிசெய்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. </p>
<p>பாகிஸ்தானில் தற்போது கடும் விலைவாசி உயர்வால் மக்கள் அன்றாட வாழ்க்கை வாழ்வதற்கே தவித்து வருகின்றன. இப்படியான சூழ்நிலையில் இன்று நாடாளுமன்ற தேர்தல் நடைபெறுகின்றது. அசாம்பாவிதங்கள் ஏதும் ஏற்படாமல் இருக்க இந்த தேர்தலையொட்டி, சுமார் 6 லட்சத்து 50 ஆயிரம் பாதுகாப்புப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். </p>
<h2><strong>எத்தனை இடங்களில் தேர்தல்..?</strong></h2>
<p>பாகிஸ்தான் நாடாளுமன்றத்திலும் இரு அவைகள் உள்ளது. அதன்படி, அங்குள்ள உறுப்பினர்களின் எண்ணிக்கை 336 ஆகும். இதில், மக்களால் 266 உறுப்பினர்கள் வாக்களித்து தேர்ந்தெடுக்கப்பட இருக்கின்றனர். இந்த 266 இடங்களில் 60 இடங்கள் பெண்களுக்கும், 10 இடங்கள் முஸ்லிம் அல்லாதவர்களுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளது. </p>
<h2><strong>எத்தனை வாக்காளர்கள் உள்ளனர்..?</strong></h2>
<p>பாகிஸ்தானில் தற்போது 12.85 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இதில், 6.9 கோடி ஆண் வாக்காளர்களும், 5.9 கோடி பெண் வாக்காளர்களும் உள்ளனர். மேலும், இதில் 44 சதவீதம் பேர் 35 வயதுக்குட்பட்டவர்கள். 2018 முதல் பாகிஸ்தானில் வாக்காளர்களின் எண்ணிக்கை 2.25 கோடியாக அதிகரித்துள்ளது. அதில், 1.25 கோடி பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 2018ம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் 52 சதவீதம் பேர் தங்கள் வாக்குரிமையை பயன்படுத்தி இருந்தனர். </p>
<h2><strong>எத்தனை வேட்பாளர்கள் போட்டி..? </strong></h2>
<p>பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தலில் மொத்தம் 5, 121 வேட்பாளர்கள் களமிறங்குகின்றனர். இவர்களில் ஆண் வேட்பாளர்கள் 4,806, பெண் வேட்பாளர்கள் 312, மாற்றுத்திறனாளிகள் 2 பேர் ஆகும். </p>
<h2><strong>பாகிஸ்தான் தேர்தலில் எத்தனை கட்சிகள் போட்டி..?</strong></h2>
<p>பதிவு செய்யப்பட்ட 167 அரசியல் கட்சிகள் மற்றும் சுயேச்சையாக மொத்தம் 5, 121 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர். தேர்தலில் போட்டியிடும் முக்கிய கட்சிகளை பார்த்தால், முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் பாகிஸ்தான் முஸ்லிம் லீ, பிலாவல் பூட்டோ மற்றும் ஆசிப் அலி சர்தாரி தலைமையிலான பாகிஸ்தான் மக்கள் கட்சி. இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாப் கட்சியின் தேர்தல் சின்னம் தேர்தல் ஆணையத்தால் முடக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, இவரது கட்சி வேட்பாளர்கள் சுயேட்சையாக தேர்தலில் போட்டியிடுகிறார்கள். இம்ரான் கான் 2022 ஆம் ஆண்டு பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்டு, தேர்தலில் போட்டியிட தடை விதிக்கப்பட்டது. தற்போது அவருக்கு 14 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.</p>
<h2><strong>எத்தனை வாக்குச்சாவடிகளில் தேர்தல் நடைபெறுகிறது..?</strong></h2>
<p>பிப்ரவரி 8-ம் தேதி நடைபெற உள்ள பொதுத் தேர்தலுக்காக மொத்தம் 90,582 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வாக்குச் சாவடிகளில் சுமார் 17,500 ‘மிகவும் பதட்டமடைந்த’ வாக்குச் சாவடிகள், 32,508 சென்சிட்டிவ் வாக்குச் சாவடிகள் மற்றும் 42,500 பொது வாக்குச் சாவடிகள் உள்ளன. மக்கள் வாக்குச் சீட்டு மூலம் வாக்களிப்பார்கள்.இந்த தேர்தலானது இந்திய நேரப்படி காலை 8.30 மணிக்கு தொடங்கி மாலை 5:30 மணி வரை நடைபெறும்.</p>
<p>பாகிஸ்தானில் 36 லட்சம் சிறுபான்மை வாக்காளர்கள் உள்ளனர். அதில் 18 லட்சம் பேர் இந்து வாக்காளர்கள். அனைத்து வாக்காளர்களும் வாக்காளர் சீட்டு மூலம் வாக்களிப்பார்கள். பாகிஸ்தானில் வாக்குச் சீட்டு மூலம் வாக்களித்த உடனேயே வாக்கு எண்ணிக்கை தொடங்கும். இங்கு பொதுத் தேர்தலுக்காக 26 கோடி வாக்குச் சீட்டுகள் அச்சிடப்பட்டுள்ளன. அதன் மொத்த எடை சுமார் 2100 டன்கள் ஆகும்.</p>
<p><strong>தேர்தலில் எந்த கட்சி வெற்றி பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது?</strong></p>
<p>நவாஸ் ஷெரீப்பும், அவரது பிஎம்எல்-என் கட்சியும் வெற்றிபெற அதிக வாய்ப்புகள் இருப்பதாக பாகிஸ்தான் ஊடகங்கள் தெரிவிக்கின்றன. </p>

Previous Post
Next Post
Latest News

Stay Connected
Categories
ஆரோக்கியம் இந்தியா உலகம் சினிமா தமிழகம் போர் விளையாட்டு வீடியோ
dark web marketplaces dark web market urls
dark market list darknet drugs
betting company offers (Tamera) tip
sports betting agents (Cynthia) website
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports
You May Have Missed
-

H-1B: அமெரிக்காவில் வேலை இழந்தால் கிடைக்கும் 60 நாள்கள் அவகாசம்… அதை நீக்கப் புதிய திட்டம்! | H-1B Workers to Lose Grace Period in White House-Approved Plan | ACTPnews.com
-

திருவாரூர்: அரசு மருத்துவமனை வளாகத்தில் சுகாதார சீர்கேடு! – கண்டுகொள்வார்களா அதிகாரிகள்? | ACTPnews.com
-

“மோடிக்கு இணையாக இன்னொரு பிரதமரை சிந்தித்துக்கூட பார்க்க முடியாது”- விஜய் குறித்து தமிழிசை | tamilisai soundararajan about vijay as a pm | ACTPnews.com
-

Minister Sampathkumar clarifies that moral responsibility for the omission of Periyar and Ambedkar names – ’பெரியார், அம்பேத்கர் பெயர் விடுபட்டதற்கு நானே தார்மீக பொறுப்பு’ – அமைச்சர் சம்பத்குமார் விளக்கம்! | ACTPnews.com
-

Is Kiran Kumar Reddy the Governor of Tamil Nadu? ஆர்.எஸ்.எஸ்ஸின் நண்பர், விஷ்ணு ரெட்டியின் உறவினர்.. கிரண்குமார் ரெட்டி தமிழ்நாட்டின் ஆளுநரா? | ACTPnews.com

















darknet drug store dark market link