Stalin


திமுகவின் முப்பெரும் விழா சென்னை அண்ணா அறிவாலயத்தின் கலைஞர் அரங்கில் நடந்திருந்தது. இதில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் முதல்வர் விஜய்யையும் தவெக அரசையும் கடுமையாக விமர்சித்து பேசியிருந்தார்.

Stalin

மு.க.ஸ்டாலின் பேசியதாவது, ‘ஒரு இயக்கம் 75 ஆண்டுகள் நிலைத்திருப்பது சாதாரண விஷயமல்ல. 75 ஆண்டுகள் கழித்தும் அதே கம்பீரத்தோடு நிற்பதும் சாதாரண சாதனை கிடையாது. நடந்து முடிந்த தேர்தலில் ஆளுங்கட்சிக்கும் நமக்கும் 17 லட்சம் வாக்குகள்தான் வித்தியாசம், பெரும்பான்மை கூட கிடைக்கவில்லை.

எதோ பெரிய அலை அடித்ததை போல பேசுகிறார்கள். நம்முடைய கூட்டணி கட்சிகளால்தான் ஆட்சியே நடக்கிறது. அந்த கட்சிகளையும் நம்பாமல் குதிரை பேரம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். திராவிட மாடல் ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை நிறுத்துவதும் பெயரை மாற்றுவதும்தான் மாற்றமா? திமுக ஆட்சியில் பொருளாதார வளர்ச்சியில் நம்பர் 1மாநிலமாக இருந்தோம். இப்போது விலைவாசி உயர்வில் நம்பர் 1 ஆக மாறிக்கொண்டிருக்கிறோம்.

Stalin
Stalin

இந்த துக்ளக் தர்பாரை பற்றி பேசக் கூடாது என்பதற்காக அமைச்சரவை முதல் ஊடகங்கள் வரை டைவர்ட் செய்கின்றனர். முதல்வர் இன்றைக்கு என்ன கோட் போட்டார், வெள்ளிக்கிழமை பட்டு வேட்டி, நெற்றியில் என்ன கலர் பொட்டு வைத்தார் என்று செய்தி வந்துகொண்டிருக்கிறது. முதல்வரும் இதை செய்தால் போதுமென நினைக்கிறார்.தவெக ஆட்சியில் இரண்டே இரண்டுக்கு இடையில்தான் போட்டியே. ஒன்று மின்வெட்டு, இன்னொன்று அரிவாள் வெட்டு’ என்றார்.



Source link


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Latest News

View All

  1. Школа-студия Юлии Бурдинцевой в Москве готовит парикмахеров с упором на реальную практику: уже с четвертого дня ученики работают с моделями.…

Search the Archives

Access over the years of investigative journalism and breaking reports