இன்று சென்னை அடையாறு ஆற்றில் குதித்து இவர் தற்கொலை செய்துகொண்டாதாகச் சொல்லப்படுகிறது. தீயணைப்புத் துறையினர் இவருடைய உடலை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பியிருக்கிறார்கள்.
தற்கொலையா அல்லது விபத்தா என்பது குறித்துப் போலீசார் விசாரணையை தொடங்கியிருக்கிறார்கள்.

கடந்த சில காலமாக, தமிழ் சினிமா நிகழ்வுகள் குறித்துக் காட்டமாகப் பேசி வந்தவர் அதற்காகப் பல சர்ச்சைகளையும் சந்தித்தார்.
இவருடைய மகன் கே.ஆர். பிரபுதான் ஆர்.ஜே. பாலாஜியின் ‘எல்.கே.ஜி’ படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடதக்கது.
தயாரிப்பாளர் கே. ராஜனின் மறைவிற்குத் தமிழ் திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.




















