TN Weather Update: மண்டையை பிளக்கும் வெயில்.. 100 டிகிரி பாரன்ஹீட் கடந்து பதிவாகும் வெப்பநிலை.. தவிக்கும் மக்கள்..


<p>&nbsp;</p>
<p>தமிழ்நாட்டில் அடுத்த சில நாட்களுக்கு வறண்ட வானிலையே இருக்கும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.&nbsp;அதன்படி இன்று முதல் 3 ஆம் தேதி வரை தமிழகம், புதுவை &nbsp;மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.</p>
<h2>அதிகபட்ச வெப்பநிலை :&nbsp;</h2>
<p>இன்றும் நாளையும் (பிப்ரவரி 29 மற்றும் மார்ச் 1 ஆம் தேதி) தென்தமிழகம் மற்றும் வடதமிழக உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகமாக &nbsp;இருக்கக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p>
<h2>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான &nbsp; வானிலை முன்னறிவிப்பு:</h2>
<p>அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 33 டிகிரி செல்சியஸை ஒட்டியும், குறைந்தபட்ச வெப்பநிலை 23-24 டிகிரி செல்சியஸை ஒட்டியும் &nbsp;இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.&nbsp;</p>
<p>கடந்த சில தினங்களாக சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காலை நேரங்களில் வெப்பநிலை அதிகரித்து காணப்படுகிறது. கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக ஈரொட்டில் 38.4 டிகிரி செல்சியஸும் மதுரையிலும் 37 டிகிரி செல்சியஸும் &nbsp;பதிவாகியுள்ளது. அதாவது 100 டிகிரி பாரன்ஹீட் கடந்து பதிவாகியுள்ளது.&nbsp; சென்னையை பொறுத்தவரை, அதிகபட்சமாக நுங்கம்பாக்கத்தில் 32.4 டிகிரி செல்சியஸும் மீனம்பாக்கத்தில் 33.3&nbsp; டிகிரி செல்சியஸ் வெப்பநிலை பதிவாகியுள்ளது. இந்நிலையில் அடுத்த சில நாட்களுக்கு வெப்பநிலை இயல்பை விட 2 முதல் 3 டிகிரி செல்சியஸ் அதிகரிக்கும் என வானிலை மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இன்னும் வெயில் காலம் தொடங்காத நிலையில் தமிழ்நாட்டில் 100 டிகிரி பாரன்ஹீட் கடந்து வெப்பநிலை பதிவாகியுள்ளது.&nbsp;</p>
<h2>மீனவர்களுக்கான எச்சரிக்கை:&nbsp;</h2>
<p><strong>தமிழக கடலோரப்பகுதிகள்:</strong></p>
<p>29.02.2024: &nbsp;மன்னார் &nbsp; &nbsp;வளைகுடா மற்றும் &nbsp; அதனை &nbsp; ஒட்டிய &nbsp;குமரிக்கடல் &nbsp;பகுதிகள், தென்தமிழக கடலோரப்பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 65 &nbsp;கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும்.&nbsp;மேற்குறிப்பிட்ட நாட்களில் மீனவர்கள் இப்பகுதிகளுக்கு செல்ல வேண்டாமென்று அறிவுறுத்த படுகிறார்கள்.&nbsp;</p>

Source link