TN Rain Alert: 3 நாட்களுக்கு லேசான மழை இருக்கும்.. எந்தெந்த பகுதிகளில்? இன்றைய நிலவரம்..


<p>கிழக்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக, அடுத்த 3 நாட்களுக்கு தமிழகத்தின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.&nbsp;</p>
<p>அதன்படி இன்றும் நாளையும், தென்தமிழகம், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை &nbsp;பெய்யக்கூடும். &nbsp; ஏனைய பகுதிகளில் &nbsp;வறண்ட வானிலை நிலவக்கூடும். உள்தமிழகத்தில் ஓரிரு இடங்களில் அதிகாலை வேளையில் லேசான பனிமூட்டத்திற்கு வாய்ப்புள்ளது.</p>
<p>அதேபோல் வரும் 2 ஆம் தேதி,&nbsp; தென்தமிழகம், டெல்டா மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் லேசான மழை &nbsp;பெய்யக்கூடும். &nbsp; ஏனைய பகுதிகளில் &nbsp;வறண்ட வானிலை நிலவக்கூடும்.</p>
<p>மேலும் 3 ஆம் தேதி முதல் 6 ஆம் தேதி வரை,&nbsp; தமிழகம், புதுவை &nbsp;மற்றும் காரைக்கால் பகுதிகளில் வறண்ட வானிலை நிலவக்கூடும்.&nbsp;</p>
<h2>உறைபனி எச்சரிக்கை:</h2>
<p>31.01.2024: தமிழகத்தின் நீலகிரி மாவட்டத்தின் ஓரிரு இடங்களில் இரவு / அதிகாலை வேளையில் உறைபனி ஏற்பட வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.&nbsp;</p>
<h2>சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கான &nbsp; வானிலை முன்னறிவிப்பு:</h2>
<p>அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். அதிகபட்ச வெப்பநிலை 31 டிகிரி செல்சியஸை ஒட்டியும் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலை 22-23 டிகிரி செல்சியஸை ஒட்டியும் &nbsp;இருக்கக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.&nbsp;</p>

Source link