<p>அதிக வாக்குகள் பெற்று வெற்றிபெறுவதற்காக ப்ரோமோஷன் மூலமாக ஒருவரை கெட்டவனாக காட்டும் செயல் தேவையற்றது என்று விஷ்ணு தெரிவித்துள்ளார்</p>
<h2><strong>பிக்பாஸ் எப்படியான ஒரு அனுபவம்</strong></h2>
<p>”வாழ்க்கையில் நாம் கற்பனை செய்ய முடியாது சூழ்நிலைகள் இந்த ஷோவில் நமக்கு கொடுக்கப்படும் அந்த சூழ்நிலைகளை நாம் எதிர்கொள்ளும் விதம் நமக்குள் இருக்கும் ஒரு ஆற்றலை வெளிகொண்டு வரும் . பொதுவாக நான் அழமாட்டேன். ஆனால் மிக இக்கட்டான சூழ்நிலைகளை சந்தித்தபோது அதுவும் நடந்திருக்கிறது. வெளியே வந்த பிறகு தான் நான் பிக்பாஸ் விட்டில் சும்மா இல்லை, நானும் சில விஷயங்களை மாற்றியிருக்கிறேன் என்று புரிந்தது.”</p>
<h2><strong>ஒருவரை கெட்டவனாக காட்டுவது ப்ரோமோஷன் கிடையாது</strong></h2>
<p> பிக்பாஸ் டைட்டில் வின்னர் அர்ச்சனா ப்ரோமோஷன்களால் வெற்றிபெற்றார் என்கிற குற்றச்சாட்டு குறித்து அவர் பேசினார் ”பிக்பாஸில் ப்ரோமோஷன் வேலைகளை ஓரளவிற்கு எல்லாம் செய்தோம். நான் என்னுடைய நண்பர்களிடம் இன்ஸ்டாகிராமில் ரீல்ஸ் போட சொல்லிவிட்டு உள்ளே சென்றேன். வாக்குகளைப் பெறுவதற்காக ப்ரோமோட் செய்வதில் சில சிக்கல்கள் இருக்கின்றன. உதாரணத்திற்கு ஒரே வீட்டிற்குள் நாங்கள் எல்லாரும் இருக்கிறோம். அதே வீட்டில் இருக்கும் நான் ஏதாவது சின்னதாக தவறு செய்துவிட்டால் ஒரு நபரை நல்லவராக காட்ட என்னை கொஞ்சம் கெட்டவனாக காட்ட வேண்டிய தேவை ஏற்படுகிறது.</p>
<p>எல்லாரும் மீடியாவை ஒரு ஊடகமாக பயன்படுத்தி ஒரு இடத்திற்கு செல்ல வேண்டும் என்று தான் வந்திருக்கிறோம். அப்படி இருக்கும்போது ஒருவரை கெட்டவனாக காட்டிதான் அதை செய்ய வேண்டியது அவசியம் இல்லை. நான் பார்த்த இன்னொரு விஷயம் நான் பிக்பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போது நான் எலிமினேட் ஆகிவிட்டேன் என்று நிறைய தவறான செய்திகள் பரவின. இதனால் என்னுடைய வாக்குகள் பாதிக்கப்படுகின்றன. அடுத்த முறை உங்களுக்கான பி.ஆர். டீம் உடன் உள்ளே போய்விடுங்கள் என்று பிக்பாஸ் வீட்டிற்குள் புது போட்டியாளர்களிடம் நான் இப்போதே அட்வைஸ் கொடுக்கலாம் என்று இருக்கிறேன். நான் தான் எதுவும் தெரியாமல் இருந்துவிட்டேன்.”</p>
<h2><strong>பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்டு</strong></h2>
<p>” நீங்க நினைக்கிற மாதிரி எல்லாம் கிடையாது. அங்கு ஏகப்பட்ட கேமராக்கள் இருந்தன. ஒவ்வொரு இடத்திலும் ஒரு கதவு இருக்கும் . அங்கு இருந்த போட்டியாளர்கள் யாருக்கும் தெரியாது. ஒருவர் ஏதாவது தவறாக செய்யப் போகிறார் என்று தெரிந்தால் உடனே ஆட்கள் வந்துவிடுவார்கள். பிரதீப் விஷயத்தைப் பொறுத்தவை ஒருவரை வெளியே அனுப்புவதற்காக எல்லாம் சேர்ந்து போட்ட திட்டமாக தான் நான் பார்க்கிறேன். கூல் சுரேஷுக்கும் எனக்கும் ஒரு பிரச்சனை ஆனது.</p>
<h2><strong>திட்டமிட்ட சதி:</strong></h2>
<p>அதை பேசத்தான் நான் கமல்ஹாசனிடம் உரிமைகளை பேச வேண்டும் என்று பேச்செடுத்தேன். ஆனால் அந்த பிரச்சனை கூல் சுரேஷை விட்டு பிரதீப் நோக்கி சென்றது. அவ்வளவு பேர் பார்க்கக் கூடிய நேரத்தில் <a title="கமல்ஹாசன்" href="https://tamil.abplive.com/topic/kamal-haasan" data-type="interlinkingkeywords">கமல்ஹாசன்</a> முன் அப்படி ஒரு குற்றச்சாட்டை வைக்கும் போது, நான் கூட எனக்கு தெரியாமல் வேறு ஏதாவது தப்பாக நடந்து விட்டதோ என்று நினைத்துக் கொண்டேன். அதனால் தான் நானும் ரெட் கார்ட் கொடுத்தேன். இதற்கு போதுமான ஆதாரம் இருப்பதாக தான் நான் நினைத்தேன்.</p>
<p>ஆனால் இதெல்லாம் திட்டமிட்ட சதி என்று தெரிந்தபோது தான் நான் வருத்தப்பட்டேன். பிரதீப் தனது மனதில் எதுவும் வைத்துக் கொள்ளமாட்டார், அவருக்கு ஒரு நல்ல மனசு இருக்கிறது. தன மனதில் அவர் எதையும் வெளியே வைத்துக் கொள்ள மாட்டார். அது தான் ஏதோ ஒரு இடத்தில் அவருக்கு எதிராக திரும்பிவிட்டது என்று நினைக்கிறேன் “ என்று விஷ்ணு கூறினார்.</p>
Tag: விஷ்ணு

Bigg Boss Vishnu: "பிரதீப் ஆண்டனிக்கு ரெட் கார்டு கொடுத்தது திட்டமிட்ட சதி" – பிக்பாஸ் விஷ்ணு பரபரப்பு பேட்டி

Bigg Boss Tamil Season 7 Maya Krishnan Attack Post On Vishnu Vijay Slammed By Netizens | Maya
பிக்பாஸ் சீசன் 7 (Bigg Boss Tami 7) நிகழ்ச்சி முடிந்தும் மாயா விஷ்ணுவை அட்டாக் செய்து பதிவிட்டு வருவது பிக்பாஸ் ரசிகர்களிடையே விமர்சனங்களைப் பெற்று வருகிறது.
பிக்பாஸ் சீசன் 7
சென்ற ஆண்டு அக்டோபர் மாதம் 1ஆம் தேதி மொத்தம் 23 போட்டியாளர்களுடன் கோலாகலமாக பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி தொடங்கியது. பவா செல்லதுரை, சரவண விக்ரம், மணி சந்திரா, மாயா, யுகேந்திரன், விசித்ரா, பிரதீப் ஆண்டனி, கூல் சுரேஷ், ரவீனா, நிக்சன், அனன்யா ராவ், ஜோவிகா, விஷ்ணு விஜய், பூர்ணிமா, அக்ஷயா, ஐஷூ ஆகியோருடன் இந்த நிகழ்ச்சி தொடங்கிய நிலையில்,28ஆம் நாளில் வைல்டு கார்டு எண்ட்ரியாக 5 போட்டியாளர்கள் பிக்பாஸ் வீட்டுக்குள் நுழைந்தனர்.
அர்ச்சனா, கானா பாலா, தினேஷ், ஆர்.ஜே.பிராவோ, அன்ன பாரதி ஆகியோர் வைல்டு கார்டு எண்ட்ரியாக நுழைந்த நிலையில், பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி சுமார் ஒரு மாதம் கழித்து வைல்டு கார்டு எண்ட்ரி போட்டியாளர்களின் வருகைக்குப் பிறகு சூடுபிடிக்கத் தொடங்கியது.
தொடர்ந்து பிரதீப் ஆண்டனியின் ரெட் கார்டு விவகாரம், அர்ச்சனா குழுவாக அட்டாக் செய்யப்பட்டது உள்ளிட்ட காரணங்களால் நிகழ்ச்சி ஜெட் வேகத்தில் சூடுபிடித்த நிலையில், அதன் பிறகு பரபரப்புகளுக்கும் கண்டெண்ட்களுக்கும் பஞ்சமில்லாமல் 105 நாள்களை அடைந்தது.
மாயா – விஷ்ணு இடையேயான பனிப்போர்
நேற்று முன் தினம் ஜன.14ஆம் தேதி பிக்பாஸ் க்ராண்ட் ஃபினாலே பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கொண்டாட்டமாக நடைபெற்ற நிலையில், அர்ச்சனா பிக்பாஸ் சீசன் 7 டைட்டில் வின்னர் பட்டத்தைப் பெற்றார். மணி சந்திரா ரன்னர் அப்பாக உருவெடுத்த நிலையில், அடுத்தடுத்த இடங்களை மாயா, தினேஷ், விஷ்ணு ஆகியோர் பெற்றனர்.
இந்நிகழ்ச்சியில் தொடக்கம் முதலே சண்டை, சச்சரவுகள், காதல், கோபம், செண்டிமெண்ட் என பலவிதமான உணர்ச்சிகளையும் காண்பித்து லைக்ஸ் அள்ளியவர் விஷ்ணு. ஆனால் இவர் கிராண் ஃபினாலே நிகழ்ச்சியில் அவரது ரசிகர்களின் எதிர்பார்ப்புகளுக்கு மாறாக விஷ்ணு முதல் ஆளாக எவிக்டாகி வெளியேறினார்.
விஷ்ணு எவிக்டாகிய காகிதம் நிகழ்ச்சியில் அவரது பரம எதிரியாக வலம் வந்த மாயாவிடம் கிடைத்து அவர் அதனை அறிவித்தது விஷ்ணுவின் ரசிகர்களை மேலும் கடுப்பாக்கியது.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் தொடக்கம் முதலே கடும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்ட போட்டியாளரான மாயா, இறுதிவரை பயணித்தது ஏற்கெனவே பலரது அதிருப்தியையும் சம்பாதித்திருந்தது. மாயா எவிக்டாகாதது குறித்து விஜய் தொலைக்காட்சி, அவரது சக நண்பர்கள், ஏன் கமல்ஹாசனே வாராவாரம் பிக்பாஸ் ரசிகர்களார் விமர்சிக்கப்பட்டிருந்தபோதிலும் மாயா இறுதியில் இரண்டாவது ரன்னர் அப்பாக உருவெடுத்தார். இவற்றுக்கெல்லாம் மத்தியில் பிக்பாஸ் சீசன் 7 டைட்டிலை அர்ச்சனா வென்று பாராட்டுகளைக் குவித்து வருகிறார்.
குறையாத வன்மம்
வழக்கமாக நிகழ்ச்சி முடிந்து வெளியேறியதும் பரம எதிரிகளாக விளங்கிய போட்டியாளர்கள் கூட பேட்ச் அப் செய்து அதிர்ச்சி கொடுப்பது தான் வழக்கம், ஓவியா – ஜூலி – காயத்ரி ரகுராம், ஆரி – பாலா என இதற்கு பல எடுத்துக்காட்டுகள் உண்டு. ஆனால் இவற்றுக்கு மாறாக இந்த சீசனில் பிக்பாஸூக்கு வெளியேயும் போட்டியாளர்கள் வன்மம் குறையாமல் வலம் வருவது ஏற்கெனவே விமர்சனங்களைப் பெற்று வருகிறது.
இறுதி வாரத்தில் பிக்பாஸ் வீட்டுக்கு உள்ளே முன்னாள் போட்டியாளர்களான ஜோவிகா, அக்ஷயா, விக்ரம் உள்ளிட்டோர் கடும் விமர்சனங்களை இதனால் பெற்றனர். இந்நிலையில் அதன் உச்சமாக மாயா கிருஷ்ணன் விஷ்ணுவை அட்டாக் செய்து பதிவிட்டுள்ளது இணையத்தில் கடும் விமர்சனங்களைப் பெற்று வருகிறது.
கர்மா, ஃப்ரெண்ட ஏமாத்திட்ட..
விஷ்ணு மாயாவின் கையில் கிடைத்த சீட்டால் எவிக்டான நிலையில், “கர்மா அதன் வேலையை செய்துள்ளது. என் ஃப்ரெண்ட ஏமாத்திட்ட இல்ல?” என மாயா விஷ்ணுவிடம் கேள்வி எழுப்பும் வகையிலான பதிவினை தன் இன்ஸ்டா பக்கத்தில் மாயா பகிர்ந்துள்ளார்.விஷ்ணு – பூர்ணிமா இடையே போலியான லவ் டிராக்கை கண்டெண்ட்டுக்காக மாயா பயன்படுத்தியது வீட்டில் உள்ளவர்கள் தொடங்கி அனைவராலும் ஏற்கெனவே விமர்சிக்கப்பட்ட நிலையில், மீண்டும் அதனைக் குறிப்பிடும் வகையில் மாயா தற்போது பதிவிட்டுள்ளது, இணையத்தில் கடும் விமர்சனங்களைக் குவித்து வருகிறது.

Bigg Boss Tamil Season 7 Tamil Vishnu Gets Evicted
பிக்பாஸ் கிராண்ட் ஃபினாலே
விஜய் டிவியின் முன்னணி நிகழ்ச்சியான பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி இன்றுடன் முடிவடைகிறது. இன்று மாலை 6 மணிக்கு தொடங்கிய பிக்பாஸ் கிராண்ட் ஃபினாலேவில் போட்டியாளர்களுடன் பல்வேறு சுவாரஸ்யமான விஷயங்களை கமல்ஹாசன் பகிர்ந்துகொண்டார். மேலும் தனது சினிமா கரியர் குறித்து பல்வேறு கேள்விகளுக்கு பதிலளித்தார்.
இந்த சீசனின் ஃபைனலிஸ்ட்டாக விஷ்ணு, மாயா, தினேஷ், அர்ச்சனா மற்றும் மணி ஆகியோர் உள்ளனர். இவர்களில் யார்தான் டைட்டில் வின்னர் என வீட்டில் இருப்பவர்கள், வீட்டில் இருந்து எவிக்ட் ஆன போட்டியாளர்கள், ரசிகர்கள் என அனைவரும் எதிர்பார்ப்பில் காத்திருந்தனர். இப்படியான நிலையில் ஐந்து ஃபைனலிஸ்ட்டுகளில் இருந்து முதல் ஆளாக விஷ்ணு எவிக்ட் செய்யப்பட்டுள்ளார். பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறி விஷ்ணு தனது அனுபவங்கள் பற்றி பேசினார். மேலும் அவருக்கு அடுத்ததாக யார் வெளியே வரப் போகிறார் , யார் டைட்டிலை வெல்லப் போகிறார் என்பது பற்றியும் வழக்கம்போல் பேசினார்.
விஷ்ணு
நிகழ்ச்சி தொகுப்பாளர் கமல்ஹாசனிடம் பேசிய விஷ்ணு “முதல் நாள் நான் பிக்பாஸ் வீட்டிற்குள் செல்லும்போது என்ன பண்ண போறேன்னு எனக்கு தெரியாது, பல குழப்பங்களோடதான் நான் உள்ள வந்தேன். நிறைய விஷயங்கள நான் இங்க கத்துகிட்டேன், உங்களோட வாரவாரம் பேசுறது, நீங்க எனக்கு கொடுத்த அட்வைஸ், எல்லாம் எனக்கு ரொம்ப உதவியா இருந்தது.
நான் 12 வருஷமா தொலைக்காட்சித் துறையில இருக்கேன், நான் இந்தத் துறைய செலக்ட் பண்ணது மக்கள் மனசுல போய் நிக்கனும் என்பதற்காக. அதுதான் என்னுடைய நோக்கம். அந்த நோக்கம் கொஞ்சம் மறைஞ்சிட்டு இருந்த மாதிரி நான் ஃபீல் பண்ணேன், அதுக்கு சரியான ஒரு மேடை எனக்கு தேவைப்பட்டது. அதனால தான் இந்த நிகழ்ச்சிக்குதான் வந்தேன், கண்டிப்பா மக்கள நான் இம்ப்ரஸ் பன்னிருப்பேன்னு நினைக்கிறேன். உங்கள் எந்த இடத்துலயாவது முகம் சுளிக்கிற மாதிரி நான் செய்திருந்தா சாரி” என்று விஷ்ணு கூறினார்.
தொடர்ந்து பேசிய விஷ்ணு “நான் ரொம்ப நாளா மணி தான் வெளிய வருவான்னு நினைச்சுட்டு இருந்தேன், ஆனால் உள்ள இருக்க எல்லாரையும் அவன் வெளிய அனுப்பிட்டு இருக்கான். ஆனால் மணி உணமையாகவே ஒரு நல்ல மனிதன். யாருக்கும் கெட்டது நினைக்க மாட்டான் மணி. அதனாலதான் இவ்ளோ நாள் உள்ள இருக்கான்னு நினைக்கிறேன். அடுத்ததாக அர்ச்சனா. அவரை ஒரு பாப்பானு சொல்லலாம். அவர் வெற்றி பெறுவதற்கு ஒரு வாய்ப்பு இருக்கிறது என்று நான் நினைக்கிறேன்” என்று பேசினார்.
அதிருப்தியை வெளிப்படுத்திய விஷ்ணு
பிக்பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய விஷ்ணுவிடம் கமல்ஹாசன் மீதி போட்டியாளர்களை உள்ளே சென்று பார்க்க அழைத்தபோது அதற்கு விஷ்ணு “இப்போதான் அவங்கள பாத்துட்டு வரேன். நான் எலிமினேட் ஆனத பார்த்து சந்தோஷப்படறாங்க” என்று தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். மேலும் மாயா கிருஷ்ணன் இந்த சீசனில் வெற்றிபெறுவார் என்று தான் நினைக்கவில்லை என்றும் அவர் கூறினார்மேலும் படிக்க : Bigg Boss 7 Winner: பிக்பாஸ் 7 வெற்றியாளரின் பரிசுத்தொகை இவ்வளவா? கை நிறைய அள்ளிச் செல்லப்போவது யார்?

Bigg Boss 7 Tamil Season Review Maya Dinesh Mani Vishnu Archana
பிக்பாஸ் தமிழ் சீசன் 7 நிகழ்ச்சி இறுதிக்கட்டத்தினை நெருங்கிவிட்டது. ஒவ்வொரு சீசனும் அதற்கு முந்தைய சீசன்களை விட வித்தியாசமாக இருக்கும் என்பதை பிக்பாஸ் ரசிகர்களே கூறி வருகின்றனர். இது மட்டும் இல்லாமல் சீசனுக்கு சீசன் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு ரசிகர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. பிக்பாஸ் நிகழ்ச்சி குறித்து ரசிகர்கள் கடந்து மக்கள் மத்தியில் இருக்கும் அபிப்ராயங்களில் ஒன்று ”இது முழுக்க முழுக்க ஸ்கிரிப்ட்டுப்பா” எனும் விமர்சனம். ஆனால் அனைத்தையும் கடந்து பிக்பாஸ் சீசன் தொடங்கும்போது பிக்பாஸ் மீதான எதிர்பார்ப்பு என்பது மக்கள் மத்தியில் கூடிக்கொண்டுதான் போகின்றது.
ஒவ்வொரு பிக்பாஸ் நிகழ்ச்சியும் ரசிகர்களுக்கு ஒவ்வொரு பாடத்தினை கற்பித்துக்கொண்டுதான் உள்ளது. இந்த சீசனின் டைட்டில் வின்னராக யாராவது தேர்வு செய்யத்தான் போகின்றார்கள். ஆனால் ரசிகர்களுக்கு இந்த சீசன் ரசிகர்களுக்கு கற்பிக்கும் பாடம் என்ன? இந்த சீசன் விஜய் டீவிக்கு டி.ஆர்.பியை அள்ளிக்கொடுத்திருந்தாலும், இந்த சீசன் பிக்பாஸ் வீட்டினைக் கடந்து பொதுவெளியிலும் பல்வேறு தாக்கங்களை ஏற்படுத்தியது.குறிப்பாக போட்டியாளர்களின் குடும்பத்தினர் சமூக வலைதளங்களில் மற்ற போட்டியாளர்கள் குறித்து கண்ணியக்குறைவாக பேசியதை பார்த்தோம். பிக்பாஸ் என்பது போட்டி நிறைந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் அது உணர்த்துவது ஒன்றுதான் அது அன்பு பாராட்டுவது. ஆனால் இந்த சீசனில் அன்பு காட்டுவது என்பது சார்புத்தன்மை கொண்டதாக இருந்தது என்றே கூறவேண்டும்.
ஆரி – பாலா
இதற்கு முன்னர் நடந்த சீசன்களில் போட்டி இறுதி கட்டத்தினை எட்டிவிட்டால் போட்டியாளர்கள் தங்களுக்குள் இருந்த பகையை எல்லாம் ஓரம் கட்டிவிட்டு, அன்பு செலுத்த, ஒருவரையொருவர் பாராட்டி வீடு முழுவதும் அன்பைப் பரப்புவார்கள். நான்கவது சீசனில் ஜென்ம விரோதிகள் போல் இருந்த ஆரியும் பாலாவுமே இறுதி கட்டத்தில் உடன் பிறந்த சகோதரர்களைப் போல் பழக ஆரம்பித்துவிட்டனர்.ஆனால் இந்த சீசனில் அப்படி இல்லை. முழுக்க முழுக்க நேர் எதிராக உள்ளது. இன்னும் மற்றவர்களை குறைசொல்லிக் கொண்டு இருக்கின்றனர். மூன்றாவது சீசனில் மிகவும் வில்லிபோல் பார்க்கப்பட்ட வனிதா விஜயகுமார் இறுதி நாட்களில் அனைவரையும் அரவணைத்து அன்பு பாராட்டினார். இப்படி இந்த சீசனில் வில்லி போல் பார்க்கப்பட்ட நபர் என யாருமே இல்லை. ஆனால் இவர்களிடத்தில் அன்பு பாராட்டுவதைப் பார்க்க முடியவில்லை. சில இடங்களில் முகம் சுழிக்கவைக்கின்றனர்.
விஷ்ணு, மணி மற்றும் தினேஷ் என இவர்கள் மூவரும் ஸ்மால் பாஸ் வீடே கதி என இருப்பதுடன் மாயா மற்றும் பூர்ணிமா குறித்து எதாவது கமெண்டுகள் பாஸ் செய்து கொண்டே இருந்தனர். பூர்ணிமா வீட்டில் இருந்து வெளியேறிய பின்னர் மாயாவையும் அர்ச்சனாவையும் சராமாரியாக பேசிக்கொண்டு இருக்கின்றனர். வீட்டிற்குள் இருப்பவர்கள் இப்படி இருக்கும்போது வீட்டில் இருந்து வெளியேறிய போட்டியாளர்கள் வீட்டிற்குள் வந்து மீண்டும் பிரிவினையை வளர்த்துவிடும் விதமாகவே பேசி வருகின்றனர்.மொத்தமும் வேஸ்ட்
இதனைப் பார்க்கும்ப்போது இவர்களுக்கு கமல்ஹாசன் போன்ற கலையுலகின் பல்கலைக் கழகத்தின் மூலம் பட்டை தீட்டப்பட்டதெல்லாம் சுத்த வேஸ்ட். இதுமட்டும் இல்லாமல் போட்டியாளர்கள் வீட்டிற்குள் சோர்வாக இருந்தபோதெல்லாம் பிக்பாஸ் கன்ஃபர்ஷன் ரூமுக்கு அழைத்து அவர்கள் போட்டியில் சிறப்பாக கவனம் செலுத்த ஊக்கமூட்டினார். ஆனால் அது அனைத்தும் சுத்த வேஸ்ட் என்பது போல் போட்டியாளர்கள் நடந்துகொள்கின்றனர். அர்ச்சனா தனக்கு கிடைக்கும் சந்தர்பங்களில் எல்லாம், அனைத்து போட்டியாளர்களையும் அட்டாக் செய்து வருகிறார்.
நீளும் மனக்கசப்பு
வீட்டில் இருந்து வெளியேறிய போட்டியாளர்கள் மீண்டும் வீட்டிற்குள் வரும்போது விஷ்ணு, மணி மற்றும் தினேஷ் தங்களுக்கும் சக போட்டியாளர்களுக்கும் இடையில் நடைபெற்ற மனக் கசப்புகளை மறந்துவிட்டு அன்பாக பேசியிருந்தால் பார்ப்பதற்கே மிகவும் அழகாக இருந்திருக்கும். ஆனால் அவர்களோ தங்களது அணியில் இருந்தவர்களை அனுப்புங்கள் பிக்பாஸ் என அவர்களாகவே தங்களை எல்லைப்படுத்திக்கொண்டு உள்ளனர்.இவர்கள் மூவருக்குமே கூட இந்த சீசன் முடிந்த பின்னர் கடைசி நாட்களின் எபிசோட்களை பார்க்கும்போது ”அன்பாக இருந்திருக்கலாமே” என யோசிக்க வைக்க வாய்ப்பு உண்டு. குறிப்பாக விஷ்ணு டிக்கெட் டூ ஃபினாலேவை வென்ற பின்னர் அனைவரிடத்திலும் கூடுமானவரை நல்ல நினைவுகளை ஏற்படுத்தியிருக்கலாம். ஆனால் அவர் அப்படி செய்யாததற்கு காரணம் அவருக்குத்தான் தெரியும் என்றாலும், சக போட்டியாளர்கள் யாரும் அவரின் ஜென்ம விரோதிகள் இல்லைதானே. அன்பு பாராட்டுங்க மக்கா..



