Tag: போக்சோ சட்டம்

  • crime Youth who kidnapped and molested 16-year-old girl through Instagram arrested in Poso act

    crime Youth who kidnapped and molested 16-year-old girl through Instagram arrested in Poso act


    திருவண்ணாமலை மாவட்டம் செய்யார் பகுதி ஒரு கிராமத்தை  சேர்ந்த 16 வயது பெண். இவர் அருகில் உள்ள அரசு பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு 16 வயது பெண்ணையும் அவருடைய தந்தையும், பெண்ணின் தாய் வீட்டில் விட்டுவிட்டு பெண்ணின் தாய் அவருடைய தாய் வீட்டிற்கு மகன் மற்றொரு மகளையும் அழைத்து சென்று விட்டார்.
    இன்ஸ்டாகிராமில் காதல் நாடகமாடி 16 வயது பெண் கடத்தல் 
    இந்த நிலையில் 16 வயதுடைய பெண் திடீரென மாயமானார். இந்த சம்பவம் குறித்து அனுக்கவூர் காவல் நிலையத்தில் பெண்ணின் தாய் புகார் செய்துள்ளார். இது குறித்து காவல்துறையினர் விசாரணையில் திருவாரூர் மாவட்டம் குச்சிபாளையம் சேர்ந்த கதிரவன் வயது (19) என்பவர் இன்ஸ்டாகிராம் மூலம் 16 வயது பெண்ணுடன் நட்பாக பழகி வந்துள்ளது தெரியவந்துள்ளது.
    இதில் கதிரவன் 16 வயது பெண்ணிடம் ஆசை வார்த்தைகளை கூறி பழகி வந்துள்ளார்.  இந்தநிலையில் இருவருக்கும் இடையே நட்பு காதலாக மாறியுள்ளது. இந்த பழக்கத்தால் 16 வயது பெண்ணை கதிரவன்  வீட்டுக்கு  வெளியே வரச்சொல்லி  பெண்ணை கடத்தி சென்றுள்ளார். 
    மேலும் படிக்க; Tamizhaga Vetri kazhagam: தொடங்கிய சர்ச்சை: தமிழ்நாடு இல்லையா… தமிழக வெற்றி கழகம் ஏன்?

    இளைஞர் போக்சோவில் கைது  
    அதனைத் தொடர்ந்து கடத்தி சென்ற 16 வயது பெண்ணை கதிரவன் பாலியல் வன்கொடுமையில்  ஈடுபட்டது தெரியவந்துள்ளதக கூறப்படுகிறது. இந்த சம்பவம் குறித்து காவல்துறையினர் கதிரவனை போக்சோ சட்டத்தில் கைது செய்து வேலூர் மத்திய சிறையில்  அடைத்தனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
    புகார்கள் குறித்து மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் அமைச்சகத்தின் கீழ் 1098 சைல்ட்-லைன் உதவி எண் சேவை செயல்பட்டு வருகிறது. இந்தச் சேவை இந்தியா முழுவதும் உள்ள 602 மாவட்டங்கள் மற்றும் 144 ரயில்வே நிலையங்களில் செயல்பட்டு வருகிறது. இந்தச் சேவை எண் மூலம் 0 முதல் 18 வயதான குழந்தைகளுக்கான மருத்துவ உதவி, குழந்தைக் கடத்தல், குழந்தைத் திருமணம், வீட்டைவிட்டு வெளியேறிய குழந்தைகள், குழந்தைகள் படிப்பு, பாலியல் வன்முறை, குழந்தைத் தொழிலாளர்கள் என குழந்தைகளுக்கு எதிரான அனைத்துப் பிரச்னைகள் குறித்தும் புகார் தெரிவிக்கலாம். இந்தச் சேவை 24 x 7 மணி நேரமும் வழங்கப்பட்டுவருகிறது. 
    மேலும் படிக்க ;உலகை ஆட்டிப்படைக்கப்போகும் புற்றுநோய்! காத்திருக்கும் அதிர்ச்சி.. பகீர் கிளப்பும் WHO அறிக்கை!

    மேலும் காண

    Source link

  • Lustful grandfathers who molested 14 year old granddaughter Police arrested in pocso act | 14 வயது பேதியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட காம தாத்தாகள்

    Lustful grandfathers who molested 14 year old granddaughter Police arrested in pocso act | 14 வயது பேதியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட காம தாத்தாகள்


    பாலியல் சீண்டல்கள் தொடர்பான விழுப்புணர்வு நிகழ்ச்சி
    திருவண்ணாமலை அடுத்த ஒருகிராமத்தை சேர்ந்தவர் 15 வயது சிறுமி இந்த சிறுமி அருகில் உள்ள அரசு பள்ளியில் ஒன்பதாம் வகுப்பு பயின்று வருகிறார். சிறுமியின் தந்தை சில வருடங்களுக்கு முன்பே உடல்நிலை சரியாமல் உரிழந்துள்ளார். இதனால் சிறுமி தாயின் அறைவனப்பில் வளர்ந்து வந்துள்ளார். குடும்பத்தின் வறுமையால் சிறுமியின் தாய் வெளியூரில் தங்கி வேலை செய்து வருகிறார். இதனால் தந்தையின் தாத்தா மற்றும் பாட்டியுடன் வசித்து வருகிறார்.இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு மாதங்களுக்கு முன்பு அந்த கிராமத்தில் குழந்தைகள் பாதுகாப்பு நல அலுவலகம் சார்பில் பாலியல் சீண்டல்கள் தொடர்பான விழுப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தியுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் குழந்தைகள் நல அலுவலர் பெண் குழந்தைகளுக்கு  குறித்தும் நம்மிடம் பழகும் ஆண் நபர்கள் எந்த என்னதில் பழகுகிறார்கள் என்று குறித்து  “பேட் டச்” “குட் டச்” குறித்து தெரிவித்துள்ளனர். 

    பாலியல் சீண்டல் 
    அந்த கூடத்தில் இருந்த பெண்குழந்தைகளிடம் உங்களிடம் யாராவது பேட் டச் செய்தல் தாயிடம் சொல்ல வேண்டும், இல்லை என்றல் நாங்கள்  அளிக்கும் புகார் எண்ணிறகு தொடர்புகொண்டு புகார் தெரிவிக்கலாம் என அதிகாரி விழிப்புணர்வு கூறிக்கொண்டு இருந்தார். அப்போது கூடத்தில் இருந்து 14 வயது சிறுமி ஒருவர் அதிகாரிகளிடம் சென்று என்னுடைய தாத்தா பள்ளிகள் விடுமுறை நாட்களில் வீட்டில் சிறுமி தனியாக இருக்கும் போது பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளார். இதே போன்று 14 வயது சிறுமியின் சின்ன தாத்தா வீட்டிற்கு சிறுமி விடுமுறை நாட்களில் சென்றுள்ளார். அப்போது சிறுமியிடம்  சின்ன தாத்தா  பாலியல் சீண்டலில் ஈடுபட்டுள்ளதக சிறுமி அதிகாரிகளிடம் இந்த பகீர் தகவலை தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த குழந்தைகள் நல அலுவலர்கள்  அந்த சிறுமியை மீட்டு குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்தனர். மேலும் சிறுமி கொடுத்த தகவலின் அடிப்படையில் திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல்துறையினர் விசாரணை நடத்தினர். 

    போக்சோ சட்டத்தில் தாத்தாக்கள் கைது 
    அதில் சிறுமியின் இரண்டு தாத்தாக்களும் சிறுமியிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து சிறுமியின் தாத்தா  முனுசாமி வயது (62) சின்ன தாத்தா குமரேசன் வயது (60) ஆகிய இரண்டு நபர்கள் மீதும்  திருவண்ணாமலை போக்சோ சட்டத்தில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் , அவர்களை கைது செய்து திருவண்ணாமலை அனைத்து மகளிர் காவல்நிலையத்திற்கு அழைத்துவந்து மேல்விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் திருவண்ணாமலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    புகார்கள் குறித்து மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் அமைச்சகத்தின் கீழ் 1098 சைல்ட்-லைன் உதவி எண் சேவை செயல்பட்டு வருகிறது. இந்தச் சேவை இந்தியா முழுவதும் உள்ள 602 மாவட்டங்கள் மற்றும் 144 ரயில்வே நிலையங்களில் செயல்பட்டு வருகிறது. இந்தச் சேவை எண் மூலம், 0 முதல் 18 வயதான குழந்தைகளுக்கான மருத்துவ உதவி, குழந்தைக் கடத்தல், குழந்தைத் திருமணம், வீட்டைவிட்டு வெளியேறிய குழந்தைகள், குழந்தைகள் படிப்பு, பாலியல் வன்முறை, குழந்தைத் தொழிலாளர்கள் என குழந்தைகளுக்கு எதிரான அனைத்துப் பிரச்னைகள் குறித்தும் புகார் தெரிவிக்கலாம். இந்தச் சேவை 24 x 7 மணி நேரமும் வழங்கப்பட்டுவருகிறது.

    மேலும் காண

    Source link

  • சேத்துப்பட்டு மகளைபாலியல் பலாத்காரம் செய்த காம கொடூரனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    சேத்துப்பட்டு மகளைபாலியல் பலாத்காரம் செய்த காம கொடூரனை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.


    மகளை பாலியல் வன்கொடுமை செய்த தந்தை கைது 
    திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு பகுதியை சேர்ந்த பாண்டியன் வயது  (38). இவருடைய மனைவி கீர்த்திக்கும்  இரண்டு மகள்கள் உள்ளனர். பாண்டியன் குடி போதைக்கு அடிமையானவர். இவருக்கும் அவருடைய மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பாடு வந்துள்ளதாக கூறப்படுகிறது. இதனால் கீர்த்தி கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு பாண்டியனை பிரிந்து வெளியே சென்றுள்ளார்.
    பாண்டியன்  இரண்டு பெண் குழந்தைகளையும் தனியாக வளர்த்து வந்தார். அதன் பிறகு மூத்த மகள் (10, ) 2வது மகள் (7) திண்டிவனத்தில் உள்ள விடுதியில் படித்து வருகிறனர். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கடந்த வாரம் பள்ளியில் விடுமுறை விட்டுள்ளனர். இதனால் பாண்டியன் இரண்டு மகள்களையும்  விடுதியில் இருந்து விடுமுறைக்கு  வீட்டுக்கு அழைத்து வந்தவர். பொங்கல் விடுமுறை முடிந்த பிறகும் மகள்களை மீண்டும்  பாண்டியன் விடுதிக்கு கொண்டு சேர்க்கவில்லை.

    தாய் மாவட்ட ஆட்சியரிடம் புகார்
    இதற்கிடையில்  தான் பெற்றெடுத்த மகள் என்று கூட நினைக்காமல், பாண்டியன் தனது மகளை பாலியல் வன்கொடுமை செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து  மகள்கள் இந்த சம்பவம் குறித்து என்ன செய்வது அறியாமல் பயத்தில் இருந்து வந்துள்ளனர். உடனடியாக இரண்டு சிறுமிகளும்  செஞ்சியில் உள்ள தனது பாட்டி வீட்டிற்கு சென்றுள்ளனர். அங்கு பாட்டியை கண்டவுடன்  தந்தை தகாத முறையில் நடந்து கொண்டதை கூறி சிறுமி கதறி  அழுது உள்ளார். உடனடியாக  பாட்டி அவருடைய மகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனை கேட்ட தாய் அதிர்ச்சி அடைந்துள்ளார். உடனடியாக தன்னுடைய பெண்ணிற்கு நடந்த சம்பவத்தை குறித்து திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியரிடம் சிறுமிகளின் தாய் புகார்  அளித்துள்ளார். உடனடியாக மாவட்ட ஆட்சியர்  மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் தகவல் தெரிவித்துள்ளதாக தெரிகிறது.

     
    போக்சோ சட்டத்தில் தந்தை கைது  
    இதுகுறித்து போளூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு அழைத்து கூறியுள்ளனர். காவல்நிலைய ஆய்வாளர்  பிரபாவதி மற்றும் காவல்துறையினர் உடனடியாக விரைந்து  சேத்துப்பட்டு வந்து பாண்டியனை காவல்நிலையத்திற்கு  அழைத்துச் சென்றனர். பின்னர் 10 வயது சிறுமி அரசு மருத்துவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிறுமிக்கு மருத்துவ  சிகிச்சை அளித்தனர்.
    அப்போது சிறுமி  பாலியல் வன்கொடுமை செய்துள்ளது உறுதி செய்யப்பட்டதன்  அடிப்படையில், பாண்டியன் மீது போக்சோ வழக்கு பதியப்பட்டு அவரை காவல்துறையினர் கைது செய்து வேலூர் மத்திய  சிறையில் அடைத்துள்ளனர். தந்தையே பெற்ற மகளை பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    புகார்கள் குறித்து மத்திய அரசின் பெண்கள் மற்றும் குழந்தைகள் அமைச்சகத்தின் கீழ் 1098 சைல்ட்-லைன் உதவி எண் சேவை செயல்பட்டு வருகிறது. இந்தச் சேவை இந்தியா முழுவதும் உள்ள 602 மாவட்டங்கள் மற்றும் 144 ரயில்வே நிலையங்களில் செயல்பட்டு வருகிறது. இந்தச் சேவை எண் மூலம், 0 முதல் 18 வயதான குழந்தைகளுக்கான மருத்துவ உதவி, குழந்தைக் கடத்தல், குழந்தைத் திருமணம், வீட்டைவிட்டு வெளியேறிய குழந்தைகள், குழந்தைகள் படிப்பு, பாலியல் வன்முறை, குழந்தைத் தொழிலாளர்கள் என குழந்தைகளுக்கு எதிரான அனைத்துப் பிரச்னைகள் குறித்தும் புகார் தெரிவிக்கலாம். இந்தச் சேவை 24 x 7 மணி நேரமும் வழங்கப்பட்டுவருகிறது.

    மேலும் காண

    Source link

  • 10ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை; தனியார் பள்ளி முதல்வர் போக்சோவில் கைது

    10ஆம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை; தனியார் பள்ளி முதல்வர் போக்சோவில் கைது


    <p style="text-align: justify;"><strong>விழுப்புரம்:</strong> திண்டிவனம் அருகேயுள்ள ரெட்டனையில் பத்தாம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த தனியார் பள்ளியின் முதல்வர் போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்து விழுப்புரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியதை தொடர்ந்து நீதிபதி 15 நாட்கள் சிறையிலடைக்க உத்தரவிட்டார்.&nbsp;</p>
    <p style="text-align: justify;">விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகேயுள்ள ரெட்டனை கிராமத்தில் கிரீன் பாரடைஸ் என்ற தனியார் பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் பயிலும் பத்தாம் வகுப்பு மாணவியிடம் பள்ளியின் முதல்வர் கார்த்திகேயன் பாலியல் சீண்டலில் ஈடுபட்டதாக பெற்றோரிடம் சிறுமி தெரிவித்துள்ளார்.</p>
    <p style="text-align: justify;">இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமியின் பெற்றோர் விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கடந்த 14 ஆம் தேதி புகார் அளித்தனர். அந்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்ததில் பள்ளியின் முதல்வர் கார்த்திகேயன் பாலியல் சீண்டலில் ஈடுபட்டது உறுதிபடுத்தவே பள்ளியின் முதல்வர் கார்த்திகேயன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். போக்சோ வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதால் கார்த்திகேயன் தலைமறைவாகிய நிலையில் நேற்றைய தினம் கார்த்திகேயனை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் கைது செய்யப்பட்ட கார்த்திகேயனை விழுப்புரம் போக்சோ நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர்படுத்தியதை தொடர்ந்து நீதிபதி ஹெர்மிஸ் வருகின்ற 1.02.2024 ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் அடைக்க உத்தரவிட்டார். கைது செய்யப்பட்ட பள்ளியின் முதல்வர் தனியார் தொலைக்காட்சியில் செய்திவாசிப்பாளராக பணிபுரிந்தார் என்பது குறிப்பிடதக்கது.</p>
    <p style="text-align: justify;"><strong>போக்சோ சட்டம்</strong></p>
    <p style="text-align: justify;">இந்தியாவில் குழந்தைகள் பாதுகாக்கும் கொள்கைகளின் ஒரு பகுதியாக உருவாக்கப்பட்டது தான் பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் 2012 (The protection of children from sexual offense(pocso) Act 2012). இந்த சட்டம் சுருக்கமாக போக்சோ சட்டம் என அழைக்கப்படுகிறது, மாநிலங்களவையில் 2012 ஆம் ஆண்டு மே மாதம் 10ம் தேதியும், மக்களவையில் மே மாதம் 22 தேதியும் நிறைவேற்றப்பட்டது, நவம்பர் 14-ஆம் தேதி அரசிதழில் அறிவிக்கை செய்யப்பட்டு நடைமுறைக்கு வந்தது. இச்சட்டம் இயற்றப்படுவதற்கு முன்பு வரை குழந்தைகளுக்கு எதிராக பாலியல் குற்றங்கள் நடைபெறும் பொழுது ஐபிசி சட்டம் பிரிவு 375 கற்பழிப்பு, பிரிவு 354 பெண்ணின் அடக்கத்தை மீறுதல், பிரிவு 377 இயற்கைக்கு மாறான குற்றங்கள் எனும் பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்படும்.</p>
    <p style="text-align: justify;"><strong>போக்சோ சட்டத்தின் பொது அம்சங்கள்:</strong></p>
    <p style="text-align: justify;">18 வயதுக்குக் குறைவான அனைத்துக் குழந்தைகளும் பாலின வித்தியாசமின்றி, இச்சட்டத்தின் வரையறைக்குள் வருவர். அதாவது ஆண் குழந்தைகள், சிறுவர்களும் பாதிக்கப்பட்டாலும், இச்சட்டம் தலையீடு செய்யும். பாலியல் தாக்குதல், வன்முறை, பாலியல் துன்புறுத்தல், சீண்டல், ஆபாசப் படமெடுக்கக் குழந்தைகளைப் பயன்படுத்துதல் போன்றவற்றைக் குற்றங்களாக இச்சட்டம் முன்வைக்கிறது. இசட்டத்தில் கீழ் 30 நாட்களுக்குள் குழந்தையின் சாட்சியம் பதிவு செய்யப்பட வேண்டும். ஒரு வருடத்துக்குள் வழக்கு முடியவேண்டும்.&nbsp; இசட்டத்தில் குற்றம் புரிந்த குற்றவாளிகளுக்கு சாதாரண சிறை தண்டனையிலிருந்து, கடுங்காவல், ஆயுள் தண்டனை வரை கொடுக்கலாம், சில வகை பாலியல் வன்முறைக்குக் கூடுதல் தண்டனை உண்டு. உதாரணமாக, காவல் துறையினர், பாதுகாப்புப் படையினர், ராணுவம், அரசு அதிகாரிகள் போன்றவர்கள் பாதுகாவலர்கள் அல்லது நம்பிக்கைக் குரியவர்கள். அவர்களே குற்றம் இழைக்கும் போது, அதிக தண்டனை உண்டு என இச்சட்டம் தெளிவுபடுத்துகிறது.</p>
    <p style="text-align: justify;">மாவட்ட அளவில் குழந்தை பாதுகாப்புப் பிரிவு அமைக்கப்பட வேண்டும். தனி காவல்துறை பிரிவும் ஏற்படுத்தப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட குழந்தை எங்கு இருந்தால், அக்குழந்தையின் நலனுக்கு உகந்தது என்று பார்க்க வேண்டும். சில சமயம், குடும்ப உறுப்பினர்களே குற்றம் செய்பவராக இருந்தால், அங்கிருந்து குழந்தையை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும்.</p>

    Source link