Tag: பொங்கல்

  • திருச்சியில் அமித்ஷா செய்த செயலால் நெகிழ்ந்த பாஜகவினர்… அதிர்ந்த திராவிட கட்சினர்…

    திருச்சியில் அமித்ஷா செய்த செயலால் நெகிழ்ந்த பாஜகவினர்… அதிர்ந்த திராவிட கட்சினர்…

    மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா, திருச்சியில் பாஜக சார்பில் நடந்த பொங்கல் விழாவில் பங்கேற்றார். அவருடன் மத்திய அமைச்சர் பியூஸ் கோயல், இணை அமைச்சர் எல்.முருகன், முன்னாள் புதுச்சேரி ஆளுநர் தமிழிசை சௌந்த‍ர‍ராஜன், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், முன்னாள் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை பாஜக தேசிய மகளிரணித் தலைவியும் எம்எல்ஏவுமான வானதி சீனிவாசன் உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.

    பாஜக சார்பில் நடந்த நம்ம ஊரு மோடி பொங்கல் விழாவில், அமித்ஷாவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பூரண கும்ப மரியாதை அளித்து, பரிவட்டம் கட்டி வரவேற்றனர். விழா நடைபெற்ற பகுதியில், நாட்டுப்புற கலைகளுடன், கிராமிய நடனங்களை அமித்ஷா கண்டு ரசித்தார்.

    அப்போது, பாஜகவினர் பொங்கல் வைத்தன‍ர். பொங்கல் பானையில் நெய் மற்றும் வெல்லத்தை போட்டு, அமித்ஷா பொங்கல் வைத்தார். இந்த நிகழ்ச்சியின்போது, அமித்ஷா வெறும் காலுடன் நின்று பொங்கல் வைத்து வழிபட்ட‍து, நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

    திராவிட கட்சியினர் பொங்கல் என்ற பெயரில் பெயரளவு செய்துவிட்டு, செருப்பு அணிந்த காலுடன் புகைப்படம் எடுப்பார்கள் என்றும், ஆனால், அமித்ஷா வெறும் காலுடன் சென்று பாரம்பரியத்தை கடைபிடித்து மரியாதையுடன் பொங்கல் வைத்து வழிபட்டதாகவும் பாஜகவினர் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

    அமித்ஷா, அண்ணாமலை, பாஜக, திமுக, amit shah, bjp, annamalai, dmk, pongal, பொங்கல்,

  • Wherever You Can Go To Celebrate Pongal In The Outskirts Of Chennai

    Wherever You Can Go To Celebrate Pongal In The Outskirts Of Chennai

    உலக அளவில் பல்வேறு வகையான அறுவடை திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. இயற்கையையும் உழவையும் போற்றும் திருநாள். இதில் நான்காவது நாளான காணும் பொங்கல்  கொண்டாடப்படும் முறையும் எதற்காக கொண்டாடப்படுகிறது என்பது குறித்தும் காணலாம். 
     காணும் பொங்கல்: 
    பொங்கல் விழாவின் நான்காவது நாள் காணும் பொங்கல் என்றழைக்கப்படுகிறது. கன்னிப் பொங்கல் அல்லது கணுப் பண்டிகை என்றும் இந்த நாள் அழைக்கப்படுகிறது. உற்றார் உறவினர் மற்றும் நண்பர்களை காணுதல் குடும்பப் பெரியவர்களிடம் ஆசி பெறுதல் போன்றவைகள் காணும் பொங்கல் அன்றைக்கு நடைபெறும். உரி அடித்தல், வழுக்கு மரம் ஏறுதல் உள்ளிட்ட விளையாட்டுப் போட்டிகள் இந்தநாளில் நடைபெறும். 

    கன்னிப் பொங்கல் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக திருமணம் ஆகாத பெண்கள் ஒரு தட்டில் பழங்கள், தேங்காய், பூஜை செய்வதற்கு தேவையான பொருட்களுடன் அருகில் இருக்கும் ஆறு அல்லது குளங்களுக்கு செல்வார்களாம். ஆற்றங்கரையில் எல்லோரும் சேர்ந்து கும்மியடித்து பாடி இறை வழிபாடு நடத்துவார்கள் என்று சொல்லப்படுவது உண்டு. காணும் பொங்கல் அன்று சிலர் நோன்பு கடைப்பிடித்து சிறப்பு வழிபாடு செய்வதும் உண்டு. இது உடன்பிறந்தவர்களின் நலனுக்காக செய்யப்படுவதாக சொல்லப்படுகிறது. காணும் பொங்கல் அன்று வீட்டில் பொங்கல் வைத்து குல தெய்வ வழிபாடு நடத்துவதையும் சிலர் பழக்கமாக கொண்டுள்ளனர்.
    நீங்கள் பார்க்க வேண்டிய இடங்கள்
    சென்னை பொறுத்தவரை மெரினா, எலியட்ஸ் உள்ளிட்ட சென்னையில் உள்ள பல்வேறு கடற்கரைக்கு சென்று தங்கள் குடும்பத்துடன் நேரத்தை செலவழிக்கலாம். சுமார் சென்னை கடற்கரை பகுதியில் மட்டும் மூவாயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். கூட்டத்தை பொறுத்து போலீசாரின் எண்ணிக்கை அதிகரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. சென்னை புறநகர் பகுதிகளில் உள்ள கடற்கரைக்கு வர வேண்டும் என்று நினைத்தால், கோவளம் இருக்கிறது. அதேபோன்று சிற்பங்களை ரசித்துக்கொண்டே கடற்கரையின் அழகை பார்க்க மகாபலிபுரம் உள்ளிட்ட பகுதிகளுக்கு வரலாம்.
     மகாபலிபுரத்தில் ஏற்பாடுகள் என்ன ?
    மகாபலிபுரத்தை பொருத்தவரை செங்கல்பட்டு மாவட்டம் போலீஸ் சார்பில் 200 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மாமல்லபுரம் புறவழிச் சாலை வரை  மட்டுமே பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நகர் பகுதிக்கு உள்ளே செல்வதற்கு தனியாக மினி பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. சுற்றுலா பயணிகள்  மாமல்லபுரம் கடற்கரையில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதற்கான சிறப்பு ஏற்பாடுகளும் காவல்துறை சார்பில் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
     

      வண்டலூர் உயிரியல் பூங்கா?
    பல ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் குவிந்து  காணும் பொங்கலை வண்டலூரில் கொண்டாடுவது வழக்கம். அந்த வகையில்  காணும் பொங்கலை முன்னிட்டு  40,000   சுற்றுலா பயணிகள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனை கருத்தில் கொண்டு கூட்டம் கூடுவதை தடுக்க கியூ ஆர் குறியீடு வசதியுடன் கூடிய 10 டிக்கெட் கவுன்டர்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. டிக்கெட்டுகளை உடனுக்குடன் ஸ்கேன் செய்து உள்ளே அனுப்ப ஏழு ஸ்கேனிங் எந்திரங்கள் மற்றும் திட்டங்கள் 20 இடங்களில் குடிநீர், கழிப்பறை வசதி, சிறுவர்கள் காணாமல் போனால் எளிதாக்கும் வகையில்  ஸ்டிக்கர் ஒட்டுதல், மருத்துவ குழு, தீயணைப்பு வாகனம் உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட்டுள்ளன. 100 வனத்துறை அதிகாரிகள் 100 காவலர்கள் ஆகியோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர். இதுபோக தன்னார்வலர்கள் 100க்கும் மேற்பட்டோர் பணியாற்ற உள்ளனர்.

     ப்ளூ பீச்
    நீல கடற்கரை என அழைக்கக்கூடிய ப்ளூ பீச்  கோவளம் மற்றும் முத்துக்காடு பகுதிக்கு இடையே அமைந்துள்ளது. பார்ப்பதற்கே வித்தியாசமாகவும், அதே வேளையில் சுத்தமாகவும் இருக்கக்கூடிய இந்த பீச்சையும் ஒரு முறை பார்த்து விட்டு வரலாம். சென்னையில் இருந்து கிட்டத்தட்ட 40 கிமீ தொலைவில் கோவளம் அருகே அமைந்துள்ளது. மற்ற கடற்கரையை காட்டிலும் இங்கு குழந்தைகளுடன் செல்வது பாதுகாப்பாக கருதப்படுகிறது.
     படகில் பயணிக்க ஆசையா ?
    படகில் பயணிக்க வேண்டும் என்று ஆசை இருந்தால் முத்துக்காடு அரசு படகு  குழாம், முதலியார் குப்பம் படகு குழாம் ஆகிய இடத்திற்கு செல்லலாம்.
     பறவைகளை பார்க்க ஆசையா ?
    செங்கல்பட்டு மாவட்டம் வேடந்தாங்கல் பறவைகள் சரணாலயத்திற்கு சென்று வரலாம். தற்பொழுது பறவைகள்  நிறைந்து காணப்படுவதால் நிச்சயம் குழந்தைகள் மற்றும் குடும்பத்துடன் சென்று வந்தால் மகிழ்ச்சி தரும்.  அதே போன்று பள்ளிக்கரணை உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சுற்றுலா தலங்களுக்கும் சென்று வரலாம்.  இதுபோக  சென்னை புறநகர் பகுதியில் மற்றும் 50-க்கும் மேற்பட்ட சுற்றுலா  பயணிகள் சென்று வரக்கூடிய இடங்கள் உள்ளது.
     போலீசார் பாதுகாப்பு பணி
     சென்னை மற்றும் சென்னை புறநகர் பகுதிகளில் சுமார் 18,000க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

    Source link

  • Fox Jallikattu: வங்கா நரி ஜல்லிக்கட்டு நடத்தப்படுமா? வனத்துறையினர் கடும் எச்சரிக்கை.

    Fox Jallikattu: வங்கா நரி ஜல்லிக்கட்டு நடத்தப்படுமா? வனத்துறையினர் கடும் எச்சரிக்கை.


    <p>தமிழகம் முழுவதும் பொங்கல் பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழர்களின் வீரத்தின் அடையாளமாக பொங்கல் பண்டிகையின்போது பல்வேறு வீர விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். குறிப்பாக ஜல்லிக்கட்டு தமிழர்களின் வீர விளையாட்டுகளில் ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஜல்லிக்கட்டு என்றாலே அனைவருக்கும் காளைகளை மாடுபிடி வீரர்கள் அடக்குவதை பார்த்திருப்போம். ஆனால் சேலத்தில் ஒரு சில கிராமங்களில் வங்கா நரி ஜல்லிக்கட்டு என்பது விசேஷமான ஒன்று.</p>
    <p>வங்கா நரி ஜல்லிக்கட்டு என்பது ஜல்லிக்கட்டில் காளைகளை அவிழ்த்துவிட்டு அடக்குவது போல வங்கா நரியை வனப்பகுதியில் இருந்து பிடித்து வந்து ஓடவிட்டு பிடிக்கும் ஜல்லிக்கட்டு நடத்தி வருகின்றனர்.</p>
    <p><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/16/63cb4e35e0e705c55e86976c0956e7421705420522232113_original.jpg" alt="" width="720" height="540" /></p>
    <p>இது குறித்து கிராம மக்கள் கூறுகையில், "சேலத்தில் வங்கா நரி ஜல்லிக்கட்டுதான் சிறப்பு". அப்படிச் கடந்த ஆண்டு நடந்துமுடிந்த பொங்கல் விழாவின் போது சேலத்தில் ஒரு சில கிராமங்களில் வங்கா நரி ஜல்லிக்கட்டு நடைபெற்றிருக்கிறதாம். ‘நரி முகத்தில் முழிச்சா நல்ல யோகம் வரும்’ என்பதை நம்பி இன்னும் சில கிராமங்களில் காணும் <a title="பொங்கல் பண்டிகை" href="https://tamil.abplive.com/pongal-celebrations" data-type="interlinkingkeywords">பொங்கல் பண்டிகை</a>யின் போது வங்கா நரியை வனத்திலிருந்து பிடித்து வந்து ஊர்வலமாக அழைத்துவருகின்றனர். அவ்வாறு அழைத்து வரும் நரியை ஊருக்கு மத்தியில் ஓட விட்டு அதை இளைஞர்கள் பிடிப்பது என்பது ஒரு போட்டியாக நடத்தப்பட்டு வருகிறது.</p>
    <p>இதற்கு இளைஞர்கள் வருடாவருடம் போட்டிக்கு முன்பே தங்களைத் தயார் படுத்திக்கொண்டு களத்துக்கு வருவதால், இதை ஜல்லிக்கட்டு என்றே அழைத்து வருகின்றனர். இது போன்று சிறிய விலங்கினங்களைக் கொடுமைப்படுத்தினால் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று ஒவ்வோர் ஆண்டும் அரசுத் தரப்பில் நினைவுறுத்தப்பட்டு வருகிறது. இருந்தாலும் ஒரு சில பகுதிகளில் இந்த வங்கா நரி ஜல்லிக்கட்டு நடைபெற்று வருகிறது.&nbsp;</p>
    <p><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/16/77d33185bc3f3aea397725b6a72f840e1705420499631113_original.jpg" alt="" width="720" height="540" /></p>
    <p>அந்த வகையில், நாளை சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள கிராமங்களில் வங்கா நரியை பிடித்து வந்து ஜல்லிக்கட்டு நடத்த கிராம மக்கள் முயற்சி செய்து வருகின்றனர். வங்கா நரி காட்டு விலங்கு என்பதால் வங்கா நரி ஜல்லிக்கட்டுக்கு தடை விதித்து வனத்துறையினர் உத்தரவிட்டுள்ளனர். வனத்துறையினரின் அனுமதி இல்லாததால் தடையை மீறி வங்கா நரி ஜல்லிக்கட்டு நடத்தினால் வனத்துறையினர் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்து வருகின்றனர். கடந்த ஆண்டு வனத்துறையினரின் தடையை மீறி வங்காநரி ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டது. இந்தத் தகவல் அறிந்து வாழப்பாடி வனத்துறை அதிகாரி துரைமுருகன் தலைமையிலான அதிகாரிகள் சம்பவ இடத்துக்குச் சென்று வங்கா நரியை மீட்டிருக்கின்றனர்.</p>
    <p>மேலும், இது குறித்து வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்திவருகின்றனர். இந்த நிலையில், வனத்துறை எச்சரிக்கையை மீறி கடந்த ஆண்டு சின்னம்மநாயக்கன்பாளையத்தில் பொதுமக்கள் நரியைப் பிடித்துவந்திருக்கின்றனர். பின்னர் கொட்டாவாடியில் வழக்கு பதிவு செய்திருப்பதை அறிந்த கிராம மக்கள் வங்கா நரி ஜல்லிக்கட்டு நடத்தாமல் நிறுத்தி வைத்திருக்கின்றனர். இதேபோன்று இந்த ஆண்டும் வங்கா நரி ஜல்லிக்கட்டு நடத்தினால் அவர்கள் மீது வன உயிரினம் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் தொடர்ச்சியாக எச்சரித்து வருகின்றனர். இதனால் இந்த ஆண்டு வங்கா நதி ஜல்லிக்கட்டு சேலத்தில் நடத்தப்படுமோ என பரபரப்பு எழுந்துள்ளது</p>

    Source link

  • Pongal Festival Women Threw A Ilavatta Kal Weighing About 75 Kg As An Assault

    Pongal Festival Women Threw A Ilavatta Kal Weighing About 75 Kg As An Assault

    தமிழ்நாடு முழுவதும் பொங்கல் பண்டிகை கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. பல இடங்களில் விளையாட்டு போட்டிகள் நடத்தப்பட்டு வருகிறது.
    சமத்துவ பொங்கல் விழா
     
    செங்கல்பட்டு ( Chengalpattu News ) : செங்கல்பட்டு மாவட்டம் கேளம்பாக்கம் அடுத்த  படூர் ஊராட்சி மன்றம் சார்பில் சமத்துவ பொங்கல் விழா நடைபெற்றது. இந்து, முஸ்லீம், கிறிஸ்தவர்கள் மூன்று மண் பானையில் பொங்கல் வைத்து விழாவை ஊராட்சி மன்ற தலைவர் தாரா சுதாகர் துவக்கி வைத்தார். இதில் சிறுவர்கள், பெண்கள், ஆண்கள் என அனைவருக்கும் ஏராளமான போட்டிகள் நடைபெற்றது. 

    இளவட்ட கல் தூக்கும் நிகழ்ச்சி
     
    தென்மாவட்டங்களில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வீர விளையாட்டுகள் நடத்தப்படுவதை போல் படூரிலும் இளவட்ட கல் தூக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. சென்னை மற்றும் புறநகர் பகுதியில் இதுவரை நடைபெறாத பெண்கள் இளவட்ட கல் தூக்கும் போட்டியை படூரில் நடத்தி பெண்களின் வீரத்தை வெளிக்கொண்டு வந்தனர்.  இதில் கலந்து கொண்ட பெண்கள் சுமார் 75 கிலோ எடையுள்ள இளவட்ட கல்லை அசால்ட்டாக தூக்கி வீசி அனைவரையும் வியப்பில் ஆழ்த்தினர். 

     
    பல ஆண்கள் கலந்து கொண்ட போதிலும்
     
    இளவட்ட கல்லை தூக்க ஆண்கள் கூட்டம் முன்வராத நிலையில் பெண்கள் நான் நீ என போட்டி போட்டுக்கொண்டு முன்வந்து இளவட்ட கல்லை சிலர் தூக்க முயற்சித்தனர். சிலர் அசால்ட்டாக தூக்கி வீசினர். அதை தொடர்ந்து ஆண்களுக்கான 150 கிலோ எடையுள்ள இளவட்ட கல்லை தூக்கும் போட்டியில் பல ஆண்கள் கலந்து கொண்ட போதிலும் ஒருவரால் கூட அந்த இளவட்ட கல்லை தூக்க முடியாமல் போனது. 

    6501 ரூபாய் பரிசு தொகை
     
    ஆண்கள் இளவட்ட கல்லை தூக்கினால் ரூபாய் 2000 பரிசு தொகை என முதலில் அறிவித்த நிலையில், இறுதியில் 6501 ரூபாய் பரிசு தொகை என்று அறிவித்தும் ஒருவர் கூட தூக்கவில்லை. இதேபோல் டாடா ஏஸ் வாகனத்தை கயிறு கட்டி பல்லால் இழுக்கும்போட்டியில் ஆண்கள் கலந்து கொண்டு சாகசம் செய்தனர். இதேபோல் சிறுவர்களுக்கான இட்லி சப்பிடும் போட்டி பொதுமக்கள் மத்தியில் வெகு ஆர்வமாகவும் உற்சாகமாகவும் நடைபெற்றது. 
     

    75 கிலோ எடையுள்ள இளவட்ட கல்லை பெண்கள் அசால்ட்டாக தூக்கி அசத்தினர்

    18 வகையான போட்டிகள் 
     
    அதை தொடர்ந்து உறியடி போட்டி, கயிறு இழுத்தல், மியூசிக்கல் சேர், மெதுவாக சைக்கிள் ஓட்டுவது உள்ளிட்ட 18 வகையான போட்டிகள் நடத்தப்பட்டு அதில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் வழங்கினர். இளவட்டக்கல் தூக்கிய இரண்டு பெண்களுக்கு தலா 3 ஆயிரம் மற்றும் ஒரு பாத்திரம் பரிசாகவும், கயிற்றை பல்லால் கடித்து வாகனத்தை இழுத்த நபருக்கு தலா ஆயிரம் உள்ளிட்ட ரொக்க பரிசினை ஊராட்சி மன்ற தலைவர் தாரா சுதாகர் வழங்கினார். 
     

    75 கிலோ எடையுள்ள இளவட்ட கல்லை பெண்கள் அசால்ட்டாக தூக்கி அசத்தினர்

    அனைவருக்கும் பரிசு
     
    இதேபோல் மற்ற போட்டிகளில் வெற்றிபெற்ற அனைவருக்கும் பரிசு, போட்டியில் கலந்து கொண்ட அனைவருக்கும் ஆறுதல் பரிசு வழங்கப்பட்டது. தென் மாவட்டங்களில் நடைபெறும் வீர விளையாட்டுகளை படூரில் நடைபெற்றதை ,  அப்பகுதி மக்கள் வியந்தும் ஆர்வத்துடனும் பார்த்து ரசித்தனர் நிகழ்ச்சியில், மாற்றத்தை நோக்கி நிறுவனர் கே. ஏ.சுதாகர் ஒன்றிய கவுன்சிலர்கள் ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்கள் உட்பட மக்கள் பிரதிநிதிகள் பலர் கலந்து கொண்டனர்.

    Source link

  • Villupuram: A Strange Festival Where Only Men Hold Pongal Near Vanur

    Villupuram: A Strange Festival Where Only Men Hold Pongal Near Vanur

    விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே ஆண்கள் மட்டும் பங்கேற்கும் வினோத பொங்கல் திருவிழா நடைபெற்றது.
    விழுப்புரம் மாவட்டம் வானூர் அருகே உள்ள நைநார்மண்டம் கிராமத்தில் ஐம்பதிற்க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் அமைந்துள்ள கோவிலில் தமிழர் திருநாள் பண்டிகையை முன்னிட்டு ஆண்கள் மட்டுமே கலந்து கொண்டு பொங்கல் வைக்கும் வினோத திருவிழா நடைபெற்றது. பொங்கல் வைப்பதற்காக ஊரில் உள்ள ஆண்கள் அனைவரும் ஒன்றிணைந்து புது பானையை எடுத்துக் கொண்டு ஊர்வலமாக வந்து குளக்கரை ஓரம் அடுப்பு தோண்டி அதில் இருந்து பனை ஓலை மூலம் தண்ணீர் எடுத்து கோவில் அருகில் பொங்கல் வைக்கப்பட்ட பின் படையில் இடப்பட்டு ஆண்கள் மட்டுமே உண்பார்கள்.
    இந்தப் பழக்கம் தங்களது மூதாதையர் காலத்தில் இருந்து தொன்று தொட்டு தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டு வருவதாகவும், இதனால் தங்களது விவசாயம் மட்டுமல்லாது கால்நடைகளும் மற்றும் தலைமுறைகள் தழைத்தோங்கவும் இவ்விதம் செய்கின்றனர். இந்த நேரத்தில் பெண்கள் வீட்டில் இருப்பார்கள் என்று அப்பகுதியை சேர்ந்தவர்கள் கூறுகின்றனர். ஆண்டு தோறும் இந்த பொங்கல் நிகழ்ச்சி அப்பகுதியில் பெரும் வரவேற்பைப் பெற்று வருகிறது.
    பொங்கல் பண்டிகை 
    நம் இந்தியா நாடு பல்வேறு சாதி, மதங்கள், இனங்கள், மொழி, கலாச்சாரம் ஆகியவற்றை கொண்டு இருந்தாலும் இவை அனைத்தையும் ஒன்றிணைப்பது என்றால் அது பண்டிகைகள் தான். ஒவ்வொரு மாநிலமும் ஒரு பண்டிகையின் பிரதிபலிப்பாக திகழும் நிலையில் தமிழ்நாட்டின் தமிழர் திருநாளாக, பொங்கல் பண்டிகையானது கொண்டாடப்படுகிறது.
    ஆடி மாதத்தில் விதைக்கப்படும் நெல்லானது தை மாதம் தான் அறுவடை செய்யப்படும். இந்த அறுவடையில் கிடைத்த புத்தரிசியை கொண்டு மக்கள் இயற்கை தெய்வமான சூரியனுக்கும், மற்றும் விவசாயத்துக்கு உதவும் உயிர்களுக்கும் நன்றி செலுத்தும் நிகழ்வே பொங்கல் பண்டிகையாகும். பொங்கல் பண்டிகை மகர சங்கராந்தியாக தென்னிந்திய மாநிலங்களில் கொண்டாடப்படுகிறது. 
    உற்சாக கொண்டாட்டம் 
    வழக்கமாக பொங்கல் பண்டிகை தமிழ் மாதமான தை 1 ஆம் தேதி கொண்டாடப்படும் நிலையில், இந்த பண்டிகை ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 14 அல்லது ஜனவரி 15 என பஞ்சாங்க கணக்கீட்டின் அடிப்படையில் மாறி மாறி வரும். அந்த வகையில் 2024 ஆம் ஆண்டுக்கான பொங்கல் பண்டிகை உற்சாகமாக கொண்டாடப்பட்டது. தமிழ்நாடு மட்டுமல்லாமல் உலகமெங்கும் வாழும் தமிழ் மக்களும் இப்பண்டிகையை மிகுந்த மகிழ்ச்சியுடன் கொண்டாடி வருகின்றனர்

    Source link

  • Actor Soori's Pongal Celebration : குடும்பத்துடன் பொங்கல் கொண்டாடிய நடிகர் சூரி

    Actor Soori's Pongal Celebration : குடும்பத்துடன் பொங்கல் கொண்டாடிய நடிகர் சூரி


    <p>குடும்பத்துடன் பொங்கல் கொண்டாடிய நடிகர் சூரி</p>

    Source link

  • A Good Opportunity To Remove The DMK Regime Edappadi Palanisami. | திமுகவுக்கு இந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாடம் புகட்டுங்கள்

    A Good Opportunity To Remove The DMK Regime Edappadi Palanisami. | திமுகவுக்கு இந்த நாடாளுமன்றத் தேர்தலில் பாடம் புகட்டுங்கள்

    சேலம் மாவட்டம் ஓமலூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் அதிமுக சார்பில் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதன் அக்கட்சியில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார். அப்போது அவர் பேசியது, “விவசாய தொழிலாளர்கள் கொண்டாடும் பண்டிகை பொங்கல் தை பிறந்தால் வழி பிறக்கும் என்றால் முன்னோர்கள் கூறியது, தை பிறந்துள்ளது திருநாளில் மக்களுக்கு நல்ல வாழ்வு அமையும்.
    நாட்டு மக்களுக்கு உணவு அளிக்கிறவர்கள் விவசாயிகள், வெயில், மழையை பார்க்காமல் தயாரித்து மக்களுக்கு அரிசி வழங்கும் விவசாயிகளின் உன்னதமான நாள் தை திருநாள். உணவில்லாமல் வாழ முடியாது உணவை உற்பத்தி செய்து வழங்கும் திருநாள் விவசாயிகள். நானும் ஒரு விவசாயிதான். வீட்டில் பொங்கல் வைத்து கொண்டாடும்போது எப்படி மகிழ்ச்சியப்படுகிறது. அதேபோன்று தற்போது மகிழ்ச்சியை அடைந்துள்ளேன். கிராமத்தில் பிறந்து வாழ்ந்தவர்களுக்கு தான் தைத்திருநாளின் அருமை தெரியும். நாட்டின் முதுகெலும்பாக இருப்பது கிராமங்கள்தான். எவ்வளவு கிராமங்கள் வளர்ச்சி அடைகிறதோ?, விவசாயிகள் உற்பத்தி பெரிதாகும் அப்பொழுது நாடு வளர முடியும். நாட்டு மக்களுக்காக உணவை தயாரிக்கின்ற விவசாயிகளின் தைத்திருநாள் அனைவருக்கும் வாழ்த்துக்கள் என்று கூறினார்.

    மேலும், இரண்டரை ஆண்டு கால ஆட்சியில் மக்கள் என்ன நன்மையை பார்த்தார்கள்? ஏழை எளிய கடைக்கோடியில் உள்ள மக்களுக்கு எந்தத் திட்டங்களும் நிறைவேற்றவில்லை. இரண்டரை ஆண்டு காலத்தில் மக்களிடம் கொள்ளையடித்ததுதான் திமுகவின் சாதனை. நாட்டு மக்களை பற்றியும், மக்கள் படும்பாடு குறித்து கவலையில்லை. பல்வேறு துறைகளில் பல்லாயிரம் கோடி பணத்தை கொள்ளையடித்து திமுக ஆட்டம் போட்டு கொண்டுள்ளது. சிலர் சிறையில் உள்ளனர், பலர் சிறைக்குச் செல்ல இருக்கிறார்கள். திமுக ஆட்சிப் பொறுப்பேற்ற இரண்டு ஆண்டு காலத்தில், எப்பொழுது திமுகவை வீட்டுக்கு அனுப்பவும் என்று மக்கள் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் காட்சிகளைத்தான் பார்த்துக் கொண்டிருக்கிறோம்.
    திமுக அரசில் நிர்வாக திறமையற்ற, பொம்மை முதலமைச்சர் ஆகவே உள்ள ஸ்டாலின் தலைமையிலான ஆட்சி தான் மோசமான ஆட்சி என்று மக்கள் மத்தியில் எழுந்துள்ளது, இந்த ஆட்சியில் மக்களுக்கு வேதனை மட்டும்தான் மிஞ்சியுள்ளது. ஏழையின் மக்களுக்கு வழங்கும் நியாய விலைக்கடை பொருட்கள் முறையாக வழங்க வேண்டும்.
    நியாயவிலை கடைகளில் பாமாயில் நிறுத்தப்பட்டதாக செய்திகள் வெளியாகி உள்ளது இது வன்மையாக கண்டிக்கத்தக்கது. மழை வெள்ள பாதிப்பில் மக்களை காத்த அரசாங்கம் அதிமுக அரசாங்கம்தான். அதிமுக ஆட்சியில் திட்டமிட்டு செயல்படுவோம். முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை உடனடியாக எடுப்போம். நிலத்தடி நீரை உயர்த்துவதற்கு தடுப்பணைகள் அதிக அளவில் அதிமுக ஆட்சியில் கட்டப்பட்டது.
    விவசாயிகளின் கவலைகளை போக்குகின்ற ஆட்சி அதிமுக அரசாங்கம் என்ற சிறப்பு பெற்றோம். நீர் நிலைகள், ஏரி குளங்கள் அதிமுக ஆட்சியில் பாதுகாக்கப்பட்டது. ஏழை எளிய மக்கள் வசிக்கும் இடங்களை தேர்வு செய்து அம்மா மினி கிளினிக் திட்டம் துவக்கப்பட்டது. அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக திமுக அரசாங்கம் முடிந்தது. புதிய திட்டங்களை திமுக கொண்டு வரவில்லை. நாட்டு மக்களுக்கு பயனளிக்கக்கூடிய அற்புதமான திட்டங்களை மூடிய பெருமை திமுக அரசாங்கத்தில் தான் உள்ளது.
    அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மடிக்கணினி வழங்கும் திட்டத்தை திமுக நிறுத்தியது. ஏழை மாணவர்கள் திமுக அரசுக்கு எதிரானவர்களா? என்று கேள்வி எழுப்பினர்.

    ஏழைகளுக்காக திட்டங்களைக் கொண்டு வந்து நிறைவேற்றுகின்ற அரசாங்கம் திமுக அரசாங்கம்தான். அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் எங்கும் இல்லை.. அதிமுக ஆட்சி கொண்டுவரப்பட்ட திட்டங்களை நிறுத்தியதுதான் திமுகவின் சாதனைகள். விவசாயிகளுக்காக திறக்கப்பட்ட ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான கால்நடை பூங்கா மூடிக்கிடப்பது வருத்தம் அளிக்கிறது. ஒரு நல்ல அரசாங்கமா இருந்தால் முறையாக செயல்படுத்தி இருக்க வேண்டும். கொள்ளையடிப்பதை மட்டும் குறிக்கோளாக கொண்டுள்ளது திமுக அரசாங்கம்தான். வருகின்ற நாடாளுமன்ற தேர்தல் முக்கிய முக்கியமான தேர்தல். திமுக அரசாங்கத்தை வீட்டுக்கு அனுப்புகிற தேர்தலாக அமையும். நாடாளுமன்றத் தேர்தல் திமுக அரசுக்கு ஒரு பாடமாக அமைய வேண்டும்.
    தமிழகம், புதுவை சேர்த்து 40 தொகுதிகளில் போட்டியிடும் அதிமுக கூட்டணி வேட்பாளர்களை மக்கள் ஆதரிக்க வேண்டும். திமுக அரசகாரத்தை அகற்றுவதற்கு ஒரு நல்ல சந்தர்ப்பம். தைத்திருநாளை மகிழ்ச்சியாக கொண்டாடுவது போன்று நாடாளுமன்றத் தேர்தல் வெற்றியை மகிழ்ச்சியாக கொண்டாடுவதற்கு ஒரு வாய்ப்பு வந்துள்ளது. சேலம் அதிமுகவின் கோட்டை. தமிழகத்தில் வேண்டுமென்றாலும் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆட்சி செய்யலாம், ஆனால் சேலத்தில் இரட்டை இலக்கத்தில் வெற்றி பெற்ற ஒரே கட்சி அதிமுகதான். தமிழகத்தில் சேலம் நாடாளுமன்ற தொகுதி அதிகமான வித்தியாசத்தில் வெற்றி பெற செய்ய வேண்டும். சேலம் தலைவாசலில் ₹1000 கோடியில் பிரம்மாண்டமாக கட்டப்பட்ட கால்நடை பூங்கா தற்போது வரை முழுமையாக திறக்கப்படாமல் உள்ளது; ஆயிரம் கோடி ரூபாய் முடங்கி கிடப்பது வேதனை அளிக்கிறது.
    மக்களுக்கு நன்மை பயக்கும் வகையில் செயல்படாமல் கொள்ளையடிக்கும் வகையில் மட்டுமே திமுக அரசு செயல்படுகிறது‌. கொள்ளை அடிக்கும் ஆட்சியை வீட்டுக்கு அனுப்பும் தேர்தலாகவும், திமுகவிற்கு பாடம் புகட்டும் வகையிலும் இந்த நாடாளுமன்றத் தேர்தல் அமைய வேண்டும். தை பொங்கலை மகிழ்ச்சியாக கொண்டாடுவதுபோல தேர்தல் வெற்றியை நாம் கொண்டாடும் காலம் வந்து விட்டது. சேலம் மாவட்டம் அதிமுகவின் கோட்டை. இந்தியாவிலேயே அதிகமான வாக்கு எண்ணிக்கையில் சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் வெற்றி பெற அனைவரும் உழைக்க வேண்டும்” என்று பேசினார்.

    Source link

  • Pongal 2024 Pongal Festival Holiday More Than 1 Lakh Vehicles Pass Vikrawandi Tollgate – TNN

    Pongal 2024 Pongal Festival Holiday More Than 1 Lakh Vehicles Pass Vikrawandi Tollgate – TNN

    விழுப்புரம்: பொங்கல் பண்டிகைக்கு தொடர் விடுமுறை விடப்பட்டதால் சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கு திரும்வுவதால் விக்கிரவாண்டி சுங்கசாவடியில் நேற்று முன்தினம்  இரவு முதல் தற்போது வரை 1 லட்சத்து 20 ஆயிரம் வாகனங்கள் சுங்கச்சாவடியை கடந்துள்ளன.

    பொங்கல் பண்டிகை 14ஆம் தேதி முதல் வரும் புதன் கிழமை 17ஆம் தேதி வரை கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் பண்டிகையையொட்டி பள்ளி, கல்லூரிகளுக்கு அலுவலக பணியாளர்களுக்கும் 13 ஆம் முதல் தொடர்ந்து 5 நாட்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகைக்கு தொடர் விடுமுறை என்பதாலும் குடும்பத்தினருடன் சொந்த ஊர்களில் பண்டிகையை கொண்டாட சென்னையிலிருந்து ஏராளமானோர் கார்கள் பேருந்துகள் ரயில் மூலமாக பயணித்து செல்கின்றனர்.

    தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து கடந்த வெள்ளிக்கிழமை முதல் தினசரி இயக்கப்படும் 2,100 அரசு விரைவு பேருந்துகளுடன் 4,706 சிறப்பு பேருந்துகளும் சேர்த்து 3 நாட்களுக்கு மொத்தம் 11,006 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதேபோல், திருச்சி, கோவை, மதுரை உள்ளிட்ட முக்கிய ஊர்களில் இருந்தும் பிற இடங்களுக்கு 8,478 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இந்த நிலையில் அரசு பேருந்துகளில் செல்ல தமிழ்நாடு முழுவதும் 1.25 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். சென்னையில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு செல்ல 86,000 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர். இதன் காரணமாக முக்கிய வழித்தடங்களில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகமாக செல்கின்றன. குறிப்பாக புதியதாக திறக்கப்பட்ட கிளம்பாக்கம் பேருந்து நிலையம் மற்றும் கோயம்பேடு பேருந்து நிலையங்களில் அதிக அளவில் மக்கள் கூடியுள்ளனர். தங்களது சொந்த ஊர்களான குறிப்பாக தென் மாவட்டங்களுக்கு மக்கள் படையெடுத்து வருகின்றனர்.

     
    இந்நிலையில், சென்னையிலிருந்து அதிகமானோர் தென்மாவட்டங்களான, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி கன்னியாகுமரி ஆகிய பகுதிகளுக்கு கார்களிலும் பேருந்துகளிலும் பயணித்து செல்வதால் விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் வாகனங்கள் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு நின்று அணிவகுத்து சென்றன. அதிகமான வாகன வருகையால் சுங்கச்சாவடியில் அனைத்து வழிகளும் திறக்கப்பட்ட போதும் வாகனங்கள் சுங்கச்சாவடியை கடப்பதில் சிரமம் ஏற்பட்டு வாகனங்கள் ஊர்ந்து சென்றன. வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதையடுத்து போக்குவரத்து போலீசார் சுங்கச்சாவடி ஊழியர்கள் போக்குவரத்தினை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். சென்னையிலிருந்து சொந்த ஊர்களுக்கு திரும்புவதால் விக்கிரவாண்டி சுங்கசாவடியில் நேற்று  முன்தினம்  இரவு முதல் தற்போது வரை 1 லட்சத்து 20 ஆயிரம் வாகனங்கள் சுங்கச்சாவடியை கடந்துள்ளன.

    Source link

  • Pongal 2024: Vanathi Srinivasan Alleges That There Is A Conspiracy To Separate Jallikattu From Hindu Temples – TNN | Pongal 2024: ஜல்லிக்கட்டை இந்து ஆலயங்களில் இருந்து பிரிக்க சதி நடக்கிறது

    Pongal 2024: Vanathi Srinivasan Alleges That There Is A Conspiracy To Separate Jallikattu From Hindu Temples – TNN | Pongal 2024: ஜல்லிக்கட்டை இந்து ஆலயங்களில் இருந்து பிரிக்க சதி நடக்கிறது

    பாஜக தேசிய மகளிரணி தலைவரும், கோவை தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் பொங்கல் வாழ்த்து தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், “உலகெங்கும் வாழும் தமிழர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள். அறுவடைத் திருவிழாவான பொங்கல் பண்டிகை, மகர சங்கராந்தி உள்ளிட்ட பல்வேறு பெயர்களில் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. உலகம் இப்போது ‘மனிதநேயம்’ பற்றி பேசிக் கொண்டிருக்கிறது. ஆனால், நம் பாரதிய கலாசாரம் பல்லாயிரம் ஆண்டுகளாக அனைத்து உயிர்களும் இன்புற்று வாழ வேண்டும் என்ற ‘உயிர்மைநேயத்தை’ வலியுறுத்தி கொண்டே இருக்கிறது. அதனை நமக்கு உணர்த்தும் பண்டிகைதான் பொங்கல் பண்டிகை.

    பொங்கல் வாழ்த்துச் செய்திஉலகெங்கும் வாழும் தமிழர்கள் அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள். அறுவடைத் திருவிழாவான பொங்கல் பண்டிகை, மகர சங்கராந்தி உள்ளிட்ட பல்வேறு பெயர்களில் நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. உலகம் இப்போது ‘மனிதநேயம்’ பற்றி பேசிக் கொண்டிருக்கிறது. ஆனால்,… pic.twitter.com/9Uaoi1cn59
    — Vanathi Srinivasan (@VanathiBJP) January 14, 2024


    “>
    விவசாயம் இல்லாவிட்டால் மனித வாழ்வு இல்லை. சூரியன் இல்லாவிட்டால் எந்தப் பயிரும் விளையாது. விவசாயமே இருக்காது. உலகமே இயங்காது. இப்படி மனித வாழ்வு செழிக்க, உலகம் இயங்க முழுமுதற் காரணமாக இருக்கும் சூரியனுக்கு பொங்கல் வைத்து கடவுளாக வணங்கும் பண்டிகை தான் பொங்கல். ஆடு, மாடுகள் உள்ளிட்ட கால்நடைகளும் விவசாயத்திற்கு அடிப்படை. எனவே, கால்நடைகளுக்கு நன்றி செலுத்த பொங்கல் கொண்டாட்டத்தில் ஒரு நாளையே நம் முன்னோர்கள் ஒதுக்கியுள்ளனர்.
    இந்துக்கள் மட்டும் கொண்டாடி வந்த ‘உயிர்மைநேய’ பண்டிகையான பொங்கல் பண்டிகை இப்போது அனைத்துத் தரப்பினரும் கொண்டாடும் பண்டிகையாக மாறியிருக்கிறது. இது வரவேற்கத்தக்கது. ஆனால், பொங்கல் பண்டிகையின் அடிப்படையான, சூரியனை கடவுளாக தத்துவத்தை அகற்றி அதை வெறும் கொண்டாட்டமாக மட்டும் சுருக்க சில சக்திகள் சுருக்க முயற்சித்து வருகின்றன. பொங்கல் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியான, ஜல்லிக்கட்டு இந்து ஆலயங்களைச் சார்ந்து நடந்து வருகிறது. ஜல்லிக்கட்டை இந்து ஆலயங்களில் இருந்து பிரிக்கவும் சதி நடந்து வருகிறது. இவற்றையெல்லாம் மக்கள் முறையடிப்பார்கள். அனைவருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துகள்” எனத் தெரிவித்துள்ளார்.

    Source link

  • Sales Of Sugarcane And Turmeric Are Huge In Salem Ahead Of Pongal Festival Pongal 2024

    Sales Of Sugarcane And Turmeric Are Huge In Salem Ahead Of Pongal Festival Pongal 2024

    தமிழகத்தில் வரும் நாளை (15 ஆம் தேதி) பொங்கல் பண்டிகை. கொண்டாடப்படுகிறது. 16-ஆம் தேதி மாட்டு பொங்கலும், 17-ஆம் தேதி உழவர் தினம் வருகிறது. பொங்கல் பண்டிகையின்போது விவசாயிகள், பொதுமக்கள் சூரிய பகவானுக்கு பொங்கலிட்டு படையலிடுவார்கள். இதையொட்டி மளிகை கடைகளில் பொங்கல் வைக்க தேவையான வெல்லம், பச்சரிசி, முந்திரி, ஏலக்காய், உலர் திராட்சை, பாசிப்பருப்பு உள்ளிட்ட பொருட்கள் விற்பனைக்காக குவிக்கப் பட்டுள்ளது என்று மளிகை வியாபாரிகள் தெரிவித்தனர். 

    இது போன்ற வ.உ.சி பூ மார்க்கெடில் பூக்கள் விற்பனை அதிகரித்துள்ளது. இருப்பினும் பண்டிகையும் முன்னிட்டு பூக்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. குறிப்பாக மல்லிகை பூ ரூபாய் 2,400 க்கும், முல்லை ரூபாய் 2,400 க்கும், ஜாதிமல்லி 1200 ரூபாய்க்கும், காக்கட்டான் பூ 1,200 ரூபாய்க்கும், கலர் காக்கட்டான் பூ 1,000 ரூபாய்க்கும் விற்கப்பட்டு வருகிறது. மேலும் சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து உழவர் சந்தைகள் மற்றும் சந்தைகளிலும் கரும்பு, மஞ்சள், பானை உள்ளிட்ட பொருட்களின் விற்பனை அதிகரித்து காணப்படுகிறது. கரும்பு ஜோடி 60 ரூபாய் முதல் 200 ரூபாய் வரையிலும், மஞ்சள் பத்து ரூபாய் முதல் 100 ரூபாய் வரை விற்கப்பட்டு வருகிறது. பானை அளவிற்கு ஏற்ப விலை நிர்ணயிக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

    இதுகுறித்து சேலத்தை சேர்ந்த மளிகை வியாபாரிகள் கூறியதாவது, ”ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் பண்டிகைக்கு ஒரு வாரத்திற்கு முன்பே தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்து வெல்லமும், ஆந்திராவில் இருந்து பச்சரிசி, கேரளாவில் இருந்து ஏலக்காய், பண்ருட்டி உள்பட பல்வேறு பகுதிகளில் இருந்து முந்திரி, உலர் திராட்சையும் விற்பனைக்கு வரும். பொங்கல் பண்டிகையை முன்னிட்டு இந்த பொருட்களின் விற்பனை களைகட்டும். நடப்பாண்டு பொங்கல் பண்டிகை நாளை கொண்டாடப்படும் நிலையில் பொங்கல் வைக்க தேவையான பொருட்கள் விற்பனைக்கு குவிக்கப்பட்டுள்ளது. தற்போது 20 முதல் 30 சதவீதம் விற்பனை நடந்து வருகிறது. ஒரு கிலோ வெல்லம் ₹45 முதல் ₹50 என்றும், பச்சரிசி கிலோ ₹35 முதல் ₹40 என்றும், முந்திரி ₹600 முதல் ₹700 என்றும், உலர் திராட்சை ₹250 முதல் ₹300 என்றும், பாசிப்பருப்பு ₹100 முதல் ₹120, நெய் ஒரு லிட்டர் ₹650 முதல் ₹800 கலர் கோலாமாவு ஒரு பாக்கெட் ₹4 முதல் ₹5, வெள்ளை கோலாமாவு கிலோ ₹10 என்றும் விற்பனை செய்யப்படுகிறது” என்றனர்

    Source link

  • Thai Pongal 2024: ஆண்டுதோறும் மகிழ்ச்சி பொங்கும் ’பொங்கல்’! ஏன் கொண்டாடப்படுகிறது? வரலாறு தெரியுமா?

    Thai Pongal 2024: ஆண்டுதோறும் மகிழ்ச்சி பொங்கும் ’பொங்கல்’! ஏன் கொண்டாடப்படுகிறது? வரலாறு தெரியுமா?


    <p>பொங்கல் தென்னிந்தியாவில் அதிலும் குறிப்பாக தமிழ்நாட்டில் கொண்டாடப்படும் மிக முக்கியமான பண்டிக்கைகளில் ஒன்றாக கருதப்படுகிறது. இந்தியாவின் வடநாட்டு பகுதிகளில் இது மகர சங்கராந்தி என்று கொண்டாடப்படுகிறது. இது தமிழ்நாட்டை தவிர ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளாவில் இந்த விழா பெரிதாக கொண்டாடப்படுகிறது. தை மாதத்தின் முதல் வாரத்தில் ஆண்டுதோறும் கொண்டாப்படும் இந்த &rsquo;பொங்கல்&rsquo; பண்டிகை உழவர்களின் பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும் பிரதிபலிக்கும் ஒரு பெருவிழாவாக பார்க்கப்படுகிறது.&nbsp;</p>
    <p>அரைக்கோளத்தின் தெற்குப் புள்ளியில் சூரியன் அஸ்தமித்து, வடக்கு நோக்கி தனது பயணத்தை தொடங்கும் நிகழ்வாக பொங்கல் பண்டிகை நான்கு நாட்கள் கொண்டாடப்படுகிறது. அதன்படி, இந்தாண்டு ஜனவரி 15 அன்று தொடங்கி ஜனவரி 18ம் தேதி வரை கொண்டாடப்படுகிறது.&nbsp;</p>
    <h2><strong>தை மாதம் ஏன் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது?</strong></h2>
    <p>தை மாதத்தை பொதுமக்கள் ஒவ்வொரு ஆண்டும் மிக முக்கியமான மாதமாகவும், நன்மை தரும் மாதமாகவும் பார்ப்பார்கள். இந்த மாதத்தில்தான் தங்கள் வாழ்க்கையில் பல நல்ல மாற்றங்கள் நிகழும் என்றும், தங்கள் பிரச்சினைகள் தீரும் என்றும் மக்கள் நம்புகின்றனர். நெல், கரும்பு, மஞ்சள் போன்றவற்றை அறுவடை செய்யும் காலம் இது. இந்த மாதத்தில் நிச்சயதார்த்தம், திருமணங்கள் மற்றும் &nbsp;புது வீடு பால் காய்ச்சுதல் போன்ற நற்காரியங்களை மக்கள் அதிகளவில் செய்வர்.&nbsp;</p>
    <h2><strong>பொங்கல் வரலாறு உங்களுக்கு தெரியுமா..?&nbsp;</strong></h2>
    <p>புராண கால வரலாறுபடி, பொங்கல் கொண்டாட இருவேறு கதைகள் கூறப்படுகிறது. அதில் ஒன்று, சிவனையும் நந்தியையும் பற்றியது. மற்றொன்று, கிருஷ்ணரையும் இந்திரனையும் பற்றியது.&nbsp;</p>
    <p><strong>கதை: 1</strong></p>
    <p>சிவபெருமான் தனது காளையான நந்தியை பூமிக்கு அனுப்பி, மக்களிடம் ஒவ்வொரு நாளும் தலைக்கு எண்ணெய் தேய்த்து குளிக்கவும், மாதத்திற்கு ஒரு முறை உணவையும் சாப்பிட சொல் என்று தூது அனுப்பியுள்ளார்.</p>
    <p>பூமிக்கு சென்ற நந்தி குழம்பிபோய், மக்களிடம் அனைவரும் தினமும் சாப்பிடவும், மாதம் ஒருமுறை எண்ணெய் குளியல் செய்யவும் அறிவுறுத்தியுள்ளார். இதனால் கோபமடைந்த சிவபெருமான், நந்தியை பூமியில் நித்தமும் கழிக்கும்படி சாபமடைந்தார். மேலும் வயல்களை உழுது, அதிக உணவை உற்பத்தி செய்வதில் மக்களுக்கு உதவும் பொறுப்பை பெற்றது நந்தி. இதன் விளைவாக, தற்போதுவரை &nbsp;புதிய விளைபொருட்களுக்கான பயிர் அறுவடை செய்வதற்கு கால்நடைகள் உதவியாக கூறப்படுகிறது.&nbsp;</p>
    <p><strong>கதை: 2&nbsp;</strong></p>
    <p>புராணங்களின்படி, அனைத்து தேவர்களுக்கும் ராஜாவாகிறார் இந்திரன். இதனால், அவர் அதிக கர்வம் கொண்டதாக கூறப்படுகிறது. அப்போது, குழந்தை பருவத்தில் இருந்த கிருஷ்ணர், பசு மேய்பவர்கள் அனைவரையும் இந்திரனை வணங்க வேண்டாம் என்றும், நிறுத்துமாறும் கூறியுள்ளார். இதனால், கோபம் கொண்ட இந்திரன் இடி மின்னலுடன் கூடிய மழை மற்றும் வெள்ளத்தை ஏற்படுத்த பேரழிவு ஏற்படுத்த மேகங்களை அனுப்பியுள்ளார்.&nbsp;</p>
    <p>இதையறிந்த பகவான் கிருஷ்ணர் கோவர்த்தன மலையை தூக்கி, மக்கள் மற்றும் அனைத்து கால்நடைகளையும் பாதுகாக்க செய்து, இந்திரனுக்கு அருள் புரிகிறார். இதனால், இந்திரனின் கோபம் உடைந்து, கிருஷ்ணரிடம் மன்னிப்பு கேட்டார். இதையே கொண்டாடும் நிகழ்வாக பொங்கல் கொண்டாடப்பட்டு வருகிறது என்று கூறப்படுகிறது.&nbsp;</p>
    <h2><strong>பொங்கல் விழா:</strong></h2>
    <table class="css-g3m580" border="1">
    <tbody>
    <tr>
    <td><strong>விழா</strong></td>
    <td><strong>தேதி</strong></td>
    <td><strong>நாள்</strong></td>
    </tr>
    <tr>
    <td>போகி</td>
    <td>ஜனவரி 14</td>
    <td>ஞாயிற்றுக்கிழமை</td>
    </tr>
    <tr>
    <td>பொங்கல்</td>
    <td>ஜனவரி 15</td>
    <td>திங்கட்கிழமை</td>
    </tr>
    <tr>
    <td>திருவள்ளுவர் தினம்</td>
    <td>ஜனவரி 16</td>
    <td>செவ்வாய்</td>
    </tr>
    <tr>
    <td>உழவர் திருநாள்</td>
    <td>ஜனவரி 17</td>
    <td>புதன்</td>
    </tr>
    </tbody>
    </table>
    <p>&nbsp;</p>

    Source link

  • Bhogi Pandigai R Cleaning Their Houses And Collecting The Unnecessary Items, The Children Lit The Fire And Celebrated With Joy

    Bhogi Pandigai R Cleaning Their Houses And Collecting The Unnecessary Items, The Children Lit The Fire And Celebrated With Joy

    தைப்பொங்கலை வரவேற்கும் விதமாக அதிகாலையிலேயே போகிப் பண்டிகை கொண்டாடிய காஞ்சி நகர மக்கள். தங்கள் வீடுகளை சுத்தம் செய்து சேகரித்த தேவையற்ற பொருட்களை, குழந்தைகள் மேளம் கொட்டிட தீயிட்டு கொளுத்தி மகிழ்ச்சியுடன் கொண்டாடி மகிழ்ந்தனர்.
    Bhogi Pongal 2024 ( போகிப் பண்டிகை )
    உலகம் முழுக்கவே அறுவடை திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில் தமிழ்நாட்டில் அறுவடை திருவிழாவாக பொங்கல் கொண்டாடப்பட்டு வருகிறது. வேளாண்மையே இந்நாட்டின் முதன்மையான தொழில் என்பதால் அறுவடை காலத்தையும், விவசாயத்திற்கு ஆதாரமாக இருக்கும் சூரியனை போற்றி நன்றி தெரிவிக்கும் விதமாக பொங்கல் கொண்டாடப்படுகிறது. அதற்கு முந்தைய நாள், போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

     
    சுத்தம், சுகாதாரத்தை பேணும் விதமாக போகி கொண்டாடப்பட்டு வருகிறது. ‘புதியன புகுதல்’ என்று சொல்லப்படுவதை கேட்டிருப்போம். தை பிறந்தால் வழி பிறக்கும் என கொண்டாடும் தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை, தை மாதத்தின் முதல் நாளான நாளை கொண்டாடப்படுகிறது. தைப்பொங்கலை வரவேற்கும் விதமாக மார்கழி மாதத்தின் கடைசி நாளை போகிப் பண்டிகை என கொண்டாடுவது தமிழ் மக்களின் மரபு.

    தீயவை போக்கும் போகி 

    புராணங்களின் படி, மழை, சூரியக் கடவுளை கொண்டாடும் விதமாக போகிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது. வேளாண்மை செழிக்க விவசயிகள் இறைவனிடம் வேண்டும் வழிபாடு. கலப்பை, உழுமாடு பிற விவசாய உபகரணங்களையும் வணங்குவார்கள். ஆண்டு முழுக்க வீட்டில் இருக்கும் பழைய பொருட்கள், மாடுகளுக்கு வாங்கிய வைக்கோல் மற்றும் பயனற்ற வீட்டுப் பொருட்களை தீயிலிட்டு எரிக்கிறார்கள்.

     
    போகியன்று வீட்டை சுத்தம் செய்வார்கள். பொங்கல் திருவிழாவுக்கு தயாராகும்விதமாக வீட்டுக்கு வெள்ளையடிக்கும் பழக்கமும் இருந்தது. ஆண்டிற்கு ஒருமுறை வெள்ளை அடிப்பார்கள். போகியன்று தீயிட்டு எரிக்கும் பொருட்களுடன் எதிர்மறையான எண்ணங்களை தீயுடன் சேர்த்துவிடலாம். போகி நாளில் புத்தாடை அணிந்து கொண்டாடுவர்.
     
    சிறுவர்,சிறுமியர் மேளம் அடித்து போகி  பண்டிகை கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்
     
    அந்த வகையில் மார்கழி மாதத்தில் கடைசி நாளான இன்று போகிப் பண்டிகை காஞ்சிபுரம் பகுதியில் மகிழ்ச்சியுடன் கொண்டாடப்பட்டு வருகிறது. புகையில்லா போகிப் பண்டிகையை கொண்டாட வேண்டும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இந்நிலையில், காஞ்சிபுரம்  நகர மக்கள் அதிகாலை நேரத்திலேயே குடும்பத்துடன் எழுந்து போகியை கொண்டாடினர். மேலும் சிறுவர் சிறுமியர்களான மேளம் அடித்து போகிப் பண்டிகையை மகிழ்ச்சியுடன் கொண்டாடி தைப்பொங்கலை மகிழ்ச்சியாக வரவேற்றனர்.

    இதேபோன்று,செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் ஒன்றியத்துக்கு உட்பட்ட எடையூர் கிராமத்தில் புகையில்லா போகி கொண்டாடப்பட்டது இப்பகுதி கிராம மக்கள் பிளாஸ்டிக் பொருட்களை தவிர்த்து வீட்டில் உள்ள பழைய பொருட்களான துணி,பாய், தலையணை, உள்ளிட்ட பழைய பொருட்களை போகியில் போட்டு எரித்து பழையன கழிதலும் புதிதன புகுதலும் போகி பண்டிகையை சிறுவர்கள் போகி மேலும் அடித்து கொண்டாடினர்.

    என்னென்ன செய்யலாம்? 

    போகிப் பண்டிகையன்று தெய்வங்களை வழிபடும் வழக்கம் உள்ளது. அன்றைக்கு வீடுகளில் விளக்கேற்றி வழிபடலாம்.
    மழைக்காலம் முடிந்து குளிர்காலம் என்பதால் நோய்க்கிருமிகள் பரவும் ஆபத்து அதிகமிருக்கும் காலம் என்பதால் நோய்த்தொற்று பரவலில் இருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ள வீட்டை சுத்தமாக வைத்துகொள்ள வேண்டும்.
    போகி அன்று போளி, பாயசம் உள்ளிட்ட சமையல் செய்து இறைவனை வழிபடலாம். 
    போகி அன்று மதியத்திற்கு சுத்தம் செய்து முடித்துவிட வேண்டும். முந்தைய நாளில் சுத்தம் செய்யும் பணிகளை தொடங்கிவிடலாம். அப்போதுதான் மறுநாள் பொங்கல் கொண்டாட முடியும்.
    தீய எண்ணங்கள், பழக்கங்களை கைவிட முயற்சி செய்யுங்கள்.
    நன்மைகளே சூழட்டும்.

     

    Source link

  • kilambakkam:  இடம் நிறைய இருக்கு கொஞ்சம் இருக்கை போடுங்க… கிளாம்பாக்கத்தில் அவதிப்படும் பயணிகள்..!

    kilambakkam: இடம் நிறைய இருக்கு கொஞ்சம் இருக்கை போடுங்க… கிளாம்பாக்கத்தில் அவதிப்படும் பயணிகள்..!


    <h3 dir="auto" style="text-align: justify;"><strong>கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போதிய இருக்கைகள் இல்லாமல் பயணிகள் அவதி</strong></h3>
    <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div>
    <div dir="auto" style="text-align: justify;">
    <div dir="auto">கடந்த மாதம் தமிழ்நாடு முதலமைச்சரால் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது. பேருந்து நிலையம் செயல்பாட்டிற்கு வந்ததிலிருந்து, பல்வேறு குறைபாடுகளும் சர்ச்சைகளும் இருந்த வண்ணம் உள்ளன.&nbsp;பொதுமக்கள் வைக்கும் கோரிக்கைகளும் தமிழக அரசு மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் &nbsp;அவற்றை நிறைவேற்றியும் வருகின்றனர். &nbsp;புதிய பேருந்து நிலையம் என்பதால் பல்வேறு &nbsp;நடைமுறை சிக்கல்களை கருத்தில் கொண்டு, &nbsp;அவற்றை சரி செய்யும் பணியிலும் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.</div>
    <div dir="auto">&nbsp;</div>
    <div dir="auto">&nbsp;</div>
    <figure class="image"><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/13/48a6ca39707c54d9a358a1608ca1c6641705113411560113_original.jpg" alt="கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போதிய இருக்கைகள் இல்லாமல் பயணிகள் அவதி" />
    <figcaption>கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போதிய இருக்கைகள் இல்லாமல் பயணிகள் அவதி</figcaption>
    </figure>
    <div dir="auto">பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தென் மாவட்டத்திற்கு செல்லக்கூடிய அனைத்து அரசு விரைவு பேருந்துகளும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து செல்லும் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல தென் மாவட்டத்திற்கு செல்லக்கூடிய பிற பேருந்துகள் கோயம்பேட்டில் இருந்து செல்லும் எனவும் கூறப்பட்டுள்ளது. இருக்கைகள் அமைப்பதற்கு இடம் இருந்தும் இருக்கைகள் இல்லாததால், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் பேருந்துக்காக காத்திருக்கும் பொழுது கரையில் அமர்ந்து கொண்டு குடும்பத்துடன் நீண்ட நேரம் காத்துக் கிடக்கின்றனர். அதே போன்று, உயரமான சுற்று சுவர்கள் மீதும் ஆபத்தான முறையில் ஏறி அமர்ந்து கொண்டு பயணிகள் பேருந்துக்காக காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இருக்கைகள் போடுவதற்கு நிறைய இடம் இருப்பதால், அந்த இடங்களில் இருக்கை அமைத்து தர பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.</div>
    </div>
    <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div>
    <div dir="auto" style="text-align: justify;"><strong>பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் தங்களது சொந்த ஊருக்கு பணம் மேற்கொண்டு வருகின்றனர்</strong></div>
    <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div>
    <div dir="auto" style="text-align: justify;">
    <p style="text-align: justify;">இந்த ஆண்டுக்கான பொங்கல் விடுமுறை இன்று முதல் தொடங்கிவிட்டது என்றே கூறலாம். இன்று தொடங்கி அதாவது ஜனவரி 13ஆம் தேதி தொடங்கி ஜனவரி 17ஆம் தேதி வரைக்கும் பொங்கல் கொண்டாட்டத்திற்கான விடுமுறையாக உள்ளது. இதனால் வெளியூரில் வேலை செய்யும் மக்கள் தங்களது சொந்த ஊருக்கு படையெடுத்து வருகின்றனர். இதற்காக தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் ஏற்கனவே அறிவித்தைப் போல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றது. இதன் மூலம் நேற்று மட்டும் சுமார் 2.17 லட்சம் மக்கள் தங்களது சொந்த ஊருக்குச் சென்றுள்ளனர்.</p>
    <p>&nbsp;</p>
    <figure class="image"><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/13/86dc0bf2cdbfc61d349929a3708ce9af1705113438546113_original.jpg" alt="கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போதிய இருக்கைகள் இல்லாமல் பயணிகள் அவதி" />
    <figcaption>கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போதிய இருக்கைகள் இல்லாமல் பயணிகள் அவதி</figcaption>
    </figure>
    <p style="text-align: justify;">&nbsp;</p>
    <p style="text-align: justify;">அதாவது 3 ஆயிரத்து 946 பேருந்துகளில் நள்ளிரவு 12 மணிவரை இரண்டு லட்சத்து 17 ஆயிரத்து 30 பேர் பயணம் செய்துள்ளனர். இதுவரை ஒரு லட்சத்து 96 ஆயிரத்து 310 பேர் சொந்த ஊர்களுக்குச் செல்ல முன்பதிவு செய்துள்ளனர். மக்கள் சொந்த ஊருக்குச் செல்ல வரும் 14ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.&nbsp;</p>
    </div>

    Source link

  • சொந்த ஊருக்கு படையெடுக்கும் சென்னை மக்கள்… விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் அணிவகுத்து நின்ற வாகனங்கள்

    சொந்த ஊருக்கு படையெடுக்கும் சென்னை மக்கள்… விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் அணிவகுத்து நின்ற வாகனங்கள்


    <p>விழுப்புரம் : பொங்கல் பண்டிகைக்கு தொடர்விடுமுறை விடப்பட்டதால் சென்னையிலிருந்து தென்மாவட்டங்களுக்கு அதிகமானோர் சென்றதால் விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் வாகனங்கள் நின்று அணிவகுத்து சென்றதால் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.</p>
    <p><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/12/c6c22e3f449e3146dcc8924f209fdfd81705083671369113_original.jpg" /></p>
    <p>&nbsp;பொங்கல் பண்டிகை வருகின்ற&nbsp; 14ஆம் தேதி முதல் வரும் புதன் கிழமை 17ஆம் தேதி வரை கொண்டாடப்பட உள்ளது. பொங்கல் பண்டிகையையொட்டி பள்ளி, கல்லூரிகளுக்கு அலுவலக பணியாளர்களுக்கும் 13 ஆம் முதல் தொடர்ந்து 5 நாட்களுக்கு விடுமுறை விடப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகைக்கு தொடர் விடுமுறை என்பதாலும் குடும்பத்தினருடன் சொந்த ஊர்களில் பண்டிகையை கொண்டாட சென்னையிலிருந்து ஏராளமானோர் கார்கள் பேருந்துகள் ரயில் மூலமாக பயணித்து செல்கின்றனர்.</p>
    <p><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/12/daf80b0584fdb57dd7cb6df00c64b0e21705083609459113_original.jpg" /></p>
    <p>தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சென்னையில் இருந்து இன்று (வெள்ளிக்கிழமை) முதல் தினசரி இயக்கப்படும் 2,100 அரசு விரைவு பேருந்துகளுடன் 4,706 சிறப்பு பேருந்துகளும் சேர்த்து 3 நாட்களுக்கு மொத்தம் 11,006 பேருந்துகள் இயக்கப்பட இருக்கின்றன. இதேபோல், திருச்சி, கோவை, மதுரை உள்ளிட்ட முக்கிய ஊர்களில் இருந்தும் பிற இடங்களுக்கு 8,478 சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. இந்த நிலையில் அரசு பேருந்துகளில் செல்ல தமிழ்நாடு முழுவதும் 1.25 லட்சம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். சென்னையில் இருந்து பல்வேறு ஊர்களுக்கு செல்ல 86,000 பயணிகள் முன்பதிவு செய்துள்ளனர். இதன் காரணமாக முக்கிய வழித்தடங்களில் வாகனங்களின் எண்ணிக்கை அதிகமாக செல்கின்றன. குறிப்பாக புதியதாக திறக்கப்பட்ட கிளம்பாக்கம் பேருந்து நிலையம் மற்றும் கோயம்பேடு பேருந்து நிலையங்களில் அதிக அளவில் மக்கள் கூடியுள்ளனர். தங்களது சொந்த ஊர்களான குறிப்பாக தென் மாவட்டங்களுக்கு மக்கள் படையெடுத்து வருகின்றனர்.</p>
    <p><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/12/fe9232b075ea40d974c3ee7159363edb1705083627192113_original.jpg" /></p>
    <p>இந்நிலையில் சென்னையிலிருந்து அதிகமானோர் தென்மாவட்டங்களான, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி கன்னியாகுமரி ஆகிய பகுதிகளுக்கு கார்களிலும் பேருந்துகளிலும் பயணித்து செல்வதால் விக்கிரவாண்டி சுங்கச்சாவடியில் வாகனங்கள் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு நின்று அணிவகுத்து சென்றன. அதிகமான வாகன வருகையால் சுங்கச்சாவடியில் அனைத்து வழிகளும் திறக்கப்பட்ட போதும் அதிகமான வாகனங்கள் வருகையால் சுங்கச்சாவடியை கடப்பதில் சிரம்மம் ஏற்பட்டு வாகனங்கள் ஊர்ந்து சென்றன. வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதையடுத்து போக்குவரத்து போலீசார் சுங்கச்சாவடி ஊழியர்கள் போக்குவரத்தினை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.</p>
    <p>&nbsp;</p>

    Source link

  • Pongal 2024: முதல் முறையாக சொந்த வீட்டில் பொங்கல் விழா; மகிழ்ச்சியாக குத்தாட்டம் போட்ட பழங்குடியினர்

    Pongal 2024: முதல் முறையாக சொந்த வீட்டில் பொங்கல் விழா; மகிழ்ச்சியாக குத்தாட்டம் போட்ட பழங்குடியினர்


    <p style="text-align: justify;">முதல் முதலில் சொந்த வீடுகளில் மகிழ்ச்சியாக சமத்துவ பொங்கல் விழா கொண்டாடிய பழங்குடியின மக்கள். பொங்கல் விழாவிற்காக பழங்குடியினர் வீட்டிற்க்கு வீடு வீடாக சென்று புத்தாடை வழங்கியும், கயிறு இழுத்தல் போட்டி நடத்தியும், அறுசுவை உணவு அள்ளிதனர். மேலும் பெண் ஒன்றிய குழு பெருந்தலைவர் மற்றும் பெண் ஊராட்சி மன்ற தலைவர் இரு குழுக்களாக பிரிந்து கயிறு இருக்கும் போட்டியில் கலந்து கொண்டு விளையாடி மகிழ்ந்தனர்</p>
    <p><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/12/4ddd505b4330f4e066541c1cf52f43481705050480389739_original.jpg" /></p>
    <p style="text-align: justify;"><strong>தமிழ்நாடு அரசு புதியதாக வீடு</strong></p>
    <p style="text-align: justify;">காஞ்சிபுரம் அடுத்த குண்டு குளம் பகுதியில் சுற்று வட்டார பகுதியில் ஏரி மற்றும் குளம் கரையோரம் வீடுகள் இன்றி இன்குடிசை வீட்டில் வசித்து வந்த பழங்குடி இன மக்களுக்காக 58 குடும்பங்களுக்கு தமிழ்நாடு அரசு புதியதாக வீடு கட்டி கடந்த மாதம் திறப்பு விழா தெரிந்து அனைத்து பழங்குடி மக்களும் குடியேறினர்.</p>
    <p><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/12/405f503f234d1b8750b0276dec00db391705050502201739_original.jpg" /></p>
    <p style="text-align: justify;">&nbsp;</p>
    <p style="text-align: justify;"><strong>இன்று முதல் முறையாக</strong></p>
    <p style="text-align: justify;">இந்த நிலையில் வாழ்நாள் முழுவதும் பொங்கல் விழா என்று காணாமல் தனிப்பட்டு இருந்த பழங்குடியின மக்கள் சொந்த வீட்டில் இன்று முதல் முறையாக குடும்பத்துடன் ஒன்றிணைந்து பொங்கல் விழா கொண்டாடி வருகின்றனர்.</p>
    <p><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/12/7a6e6fd4ad28faa30bc916c9f15dbaf21705050531723739_original.jpg" /></p>
    <p style="text-align: justify;"><strong>புத்தாடை வழங்கி பொங்கல் விழா</strong></p>
    <p style="text-align: justify;">விப்பேடு ஊராட்சி மன்ற தலைவர் வசந்தி அருள்நாதன் ஏற்பாட்டில் காஞ்சிபுரம் ஒன்றிய குழு பெருந்தலைவர் மலர் கொடி குமார் புதிதாக குடியேறி உள்ள 58 பழங்குடிய இன மக்களுக்கு வீடு வீடாக சென்று புத்தாடை வழங்கி பொங்கல் விழா கொண்டாடினர்.</p>
    <p style="text-align: justify;"><strong>கயிறு இழுக்கும் போட்டி</strong></p>
    <p style="text-align: justify;">மேலும் பழங்குடி இன மக்களுக்கு உற்சாகப்படுத்தும் வகையில் கயிறு இழுக்கும் போட்டி நடைபெற்றது இதில் ஒன்றிய குழு பெருந்தலைவர் மலர்க்கொடி குமார் மற்றும் ஊராட்சி மன்ற தலைவர் வசந்தி அருள்நாதன் இரு குழுக்களாக பிரிந்து கயிறு இழுக்கும் போட்டியில் கலந்துகொண்டு பழங்குடி மக்களுக்கு உற்சாகப்படுத்துங்கள். மேலும் பொங்கல் விழாவில் கலந்து கொண்ட அனைத்து மக்களுக்கும் அறுசுவை உணவு வழங்கப்பட்டு பொங்கல் விழாவை கோலாகலமாக கொண்டாடினர்.</p>

    Source link

  • Pongal Gift 2024 Distribution Of Pongal Gift Package With Rs.1000 Cash To Family Card Holders Started In Salem – TNN

    Pongal Gift 2024 Distribution Of Pongal Gift Package With Rs.1000 Cash To Family Card Holders Started In Salem – TNN

    தமிழகம் முழுவதும் அரிசி குடும்ப அட்டை தாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படும் என தமிழ்நாடு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். இந்த பரிசு தொகுப்பில் ஒரு வேட்டி, ஒரு சேலை, 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை மற்றும் ₹1,000 ரொக்கத்துடன் முழு கரும்பும் சேர்த்து வழங்கப்படுகிறது. சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பொங்கல் பரிசு விநியோகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ரேஷன் கடைகளிலும் குடும்ப அட்டை தாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது.

    சேலம் மாவட்டத்தை பொருத்தவரை 1,715 நியாய விலை கடைகள் மூலம் தகுதி உள்ள 10 லட்சத்து 70 ஆயிரத்து 970 அரிசி பெறும் குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் 935 இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்கள் என மொத்தம் 10 லட்சத்து 71 ஆயிரத்து 905 குடும்பங்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குவதற்கு ரூ.118.85 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 
    இதன் ஒரு பகுதியாக சேலம் மாவட்டம் சீரகாபாளையம் பகுதியில் உள்ள  நியாயவிலை கடையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் நிகழ்வை சேலம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம், சேலம் வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜேந்திரன், சேலம் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன், சேலம் மாநகராட்சி மேயர் இராமச்சந்திரன், சேலம் மாநகராட்சி துணை மேயர் சாரதா தேவி ஆகியோர் துவக்கி வைத்தனர்.

    குடும்ப அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் வகையில், ரேஷன் கடை விற்பனையாளர்கள் மூலம் குடும்ப அட்டைதாரர்களுக்கு ஏற்கனவே டோக்கன்கள் வழங்கப்பட்டுள்ளது. டோக்கனில் குறிப்பிடப்பட்டுள்ள நாளில் ரேஷன் கடைக்கு நேரில் சென்று, சமூக இடைவெளியை கடைப்பிடித்து பொங்கல் பரிசு தொகுப்பினை குடும்ப அட்டைதாரர்கள் பெற்றுக் கொள்ளலாம் என சேலம் மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இதன்படி, பொங்கல் பரிசு தொகுப்பு பெற டோக்கன் பெற்றிருந்த குடும்ப அட்டைதாரர்கள் அந்தந்த ரேஷன் கடைகளில் ₹1,000 ரொக்கத்துடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பை பெற்று செல்கின்றனர்.

    Source link

  • Bus Workers Strike Withdraw Passengers Expectation Special Bus Announcemnet

    Bus Workers Strike Withdraw Passengers Expectation Special Bus Announcemnet

    தமிழ்நாட்டில் கோலாகலமாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்று பொங்கல் பண்டிகை. தொடர் விடுமுறை என்பதால் வெளியூர்களில் படித்து வரும் மாணவர்கள், வேலை பார்த்து வரும் இளைஞர்கள் உள்ளிட்டோர் பலரும் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று பொங்கல் பண்டிகையை கொண்டாடுவது வழக்கம்.
    வேலை நிறுத்த போராட்டம்:
    சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி, திருப்பூர் உள்ளிட்ட பல நகரங்களில் இருந்து லட்சக்கணக்கானோர் சொந்த ஊர்களுக்கு படையெடுப்பார்கள். இதற்காக பொதுமக்கள் ரயில்களை காட்டிலும் பேருந்துகளையே அதிகளவில் பயன்படுத்துகின்றனர். இந்த நிலையில், அண்ணா தொழிற்சங்கம் உள்பட 23 தொழிற்சங்கங்கள் நேற்று முதல் கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    இதனால், கடந்த 2 நாட்களாக வேலைக்குச் செல்பவர்கள், சொந்த காரணங்களாக பேருந்துகளில் பயணிப்பவர்கள் உள்பட பலரும் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.  பொங்கல் பண்டிகைக்காக நாளை முதல் சொந்த ஊர்களுக்கு செல்ல மக்கள் தயார் ஆவார்கள். இதற்காக ஏற்கனவே அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் முன்பதிவு நடைபெற்றுள்ளது. அரசு சார்பில் போதியளவு பேருந்துகள் இயக்கப்படுகிறது என்று கூறினாலும் பல இடங்களில் மக்கள் மணிக்கணக்கில் பேருந்துகளுக்காக காத்திருக்கும் அவலம் நீடித்தது. இந்த நிலையில், நீதிமன்றத்தின் அறிவுரை, பொதுமக்கள் சிரமம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வரும் 19ம் தேதி வரை தற்காலிக வாபஸ் பெறுவதாக போக்குவரத்து சங்கங்கள் அறிவித்துள்ளது.
    தற்காலிக வாபஸால் மக்கள் நிம்மதி:
    வழக்கமாக, பொங்கல் பண்டிகையின்போது வழக்கமாக இயங்கும் பேருந்துகளை காட்டிலும் ஆயிரக்கணக்கில் பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படுவது வழக்கம். அவ்வாறு பேருந்துகள் இயக்கப்பட்டாலுமே பல இடங்களில் பயணிகள் பேருந்துகள் கிடைக்காமல் அவதியுறும் சம்பவங்களும் அரங்கேறி வருவது நிகழ்வதுண்டு. இந்த நிலையில், ஓட்டுநர்களும், நடத்துனர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருவது பயணிகளை பீதிக்குள்ளாக்கியுள்ளது.
    போராட்டம் தற்போது வாபஸ் பெறப்படுவதாக அறிவித்தாலும், பொங்கலுக்கு எத்தனை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது? என்ற தகவல் கூட இதுவரை மாநில அரசால் வெளியிடப்படவில்லை. வழக்கமாக விழா நாட்களில் பன்மடங்கு கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள், தற்போது முதலே அதிக கட்டணத்தை வசூலிப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
    பேருந்துகள் இயக்க வீதம்:
    இதனால், போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டத்திற்கு விரைவில் முற்றுப்புள்ளி வைத்து வழக்கம்போல பேருந்துகள் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர். தமிழ்நாடு அரசுறு வெளியிட்ட செய்திக்குறிப்பில் மொத்தம் இயக்கப்பட வேண்டிய 16 ஆயிரத்து 28 பேருந்துகளி்ல் 15 ஆயிரத்து 722 பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாகவும், 98.09 சதவீத பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாகவும், அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகள் 100 சதவீதம் இயக்கப்பட்டு வருவதாகவும் அரசு தெரிவித்துள்ளது.
    தற்போது 19ம் தேதி வரை மட்டுமே போராட்டம் வாபஸ் என்று போக்குவரத்து சங்கங்கள் அறிவித்துள்ள நிலையில், போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளை பரிசீலித்து அதற்கு தமிழக அரசு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றும் பயணிகளும், சமூக ஆர்வலர்களும் அறிவுறுத்தியுள்ளனர். போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்த அறிவிப்பை தற்காலிக வாபஸ் பெற்றுள்ளதால், இன்று மாலை அல்லது நாளை சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    மேலும் படிக்க: TN Bus Strike: போக்குவரத்து பணியாளர்கள் ஸ்ட்ரைக் – எந்தெந்த மாவட்டங்களில் எவ்வளவு பேருந்துகள் இயக்கம்! முழு விபரம்
    மேலும் படிக்க: TN Bus Strike: பொங்கல் பண்டிகை வருது.. ஸ்டிரைக் எல்லாம் தேவையா? – போக்குவரத்து ஊழியர்களுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி..!

    Source link

  • “எங்களுக்கும் போனஸ் கிடைக்குமா?”… ஏக்கத்தில் பகுதிநேர சிறப்பாசிரியர்கள்

    “எங்களுக்கும் போனஸ் கிடைக்குமா?”… ஏக்கத்தில் பகுதிநேர சிறப்பாசிரியர்கள்


    <p>தமிழக அரசு பொங்கல் போனஸ் பகுதிநேர ஆசிரியர்களுக்கும் வழங்க வலியுறுத்தி பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் செந்தில்குமார் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது, தமிழக அரசுப் பள்ளிகளில் கடந்த 2012 – ம் ஆண்டு ஓவியம் , உடற்கல்வி, தையல், கணினி, இசை உள்ளிட்ட பிரிவுகளில் 16, 500 பகுதிநேர ஆசிரியர்களை 5 ஆயிரம் தொகுப்பூதியத்தில் பணியமர்த்தியது. அதனைத் தொடர்ந்து கடந்த ஆட்சியில் படி படிப்படியாக ஊதிய உயர்வு வழங்கி தற்போது 10 ஆயிரம் ரூபாய் தொகுப்பூதியத்தில் பணிபுரிந்து வருகின்றனர்.</p>
    <p><a title="Rashmika Mandanna: புஷ்பா 2 படப்பிடிப்பில் இருந்து பாதியில் வெளியேறிய ராஷ்மிகா? டோலிவுட் திரையுலகில் பரபரப்பு!" href="https://tamil.abplive.com/entertainment/rashmika-mandanna-suddenly-walked-out-of-pusha-2-shooting-to-attend-animal-success-meet-160477" target="_self">Rashmika Mandanna: புஷ்பா 2 படப்பிடிப்பில் இருந்து பாதியில் வெளியேறிய ராஷ்மிகா? டோலிவுட் திரையுலகில் பரபரப்பு!</a></p>
    <p><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/09/7738824528ff30cefcc08d14db9d201e1704794606683733_original.jpg" /></p>
    <p>இந்நிலையில் தமிழக அரசு பொங்கல் போனஸ் அரசு ஊழியர், ஆசிரியர்கள் மற்றும் தொகுப்பூதியம், தினக்கூலி, பகுதிநேர பணியாளர்களுக்கும் ஒவ்வொரு ஆண்டும் வழங்குகிறது. ஆனாலும் பகுதிநேர ஆசிரியர்களுக்கு இதுவரை கிடைக்காமல் அநீதி இழைக்கப்பட்டு வருகிறது. 12 ஆண்டாக பணிபுரிகின்றவர்களுக்கு போனஸ் வழங்காமல் மறுத்துவருவது இந்த பள்ளிக்கல்வித்துறையில் மட்டுமே நடக்கிறது. அப்படி இருந்தும் ஒரு கோரிக்கை தொடர்ந்து எழும்போது நியாயமாக போனஸ் வழங்கவேண்டும் என்பதுதான் சரியான தீர்வு.</p>
    <p><a title="108 Ambulance: விழுப்புரத்தில் ஒரே ஆண்டில் 108 ஆம்புலன்ஸ் சேவையை பயன்படுத்தியவர்கள் இத்தனை பேரா?" href="https://tamil.abplive.com/news/villupuram/57-thousand-474-people-108-ambulance-medical-service-in-villupuram-district-last-year-160681" target="_self">108 Ambulance: விழுப்புரத்தில் ஒரே ஆண்டில் 108 ஆம்புலன்ஸ் சேவையை பயன்படுத்தியவர்கள் இத்தனை பேரா?</a></p>
    <p><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/09/c33b0ad431d9bc24a12f07ab8b062d7e1704794657892733_original.jpg" /></p>
    <p>இது சம்பந்தமாக பள்ளிக்கல்வி அமைச்சர் இந்த கோரிக்கை குறித்து உடனடியாக பரிசீலனை செய்து பகுதிநேர ஆசிரியர்களுக்கு பொங்கல் போனஸ் வழங்கப்படும் என உறுதிஅளித்து, உடனே அறிவிக்கவேண்டும். மேலும் 2500 ரூபாய் சம்பள உயர்வு மற்றும் மருத்துவ காப்பீடு 10 லட்சம் ரூபாய் வழங்கப்படும் என பள்ளிக்கல்வி அமைச்சர் கடந்த 4-10-2023 அன்று வெளியிட்ட அறிவிப்பையும் உடனே செயல்படுத்த வேண்டும். அதுபோல் தமிழக முதல்வர் அவர்கள் திமுக தேர்தல் வாக்குறுதி 181-ன்படி கருணையுடன் பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என முதல்வர், தலைமைச்செயலாளர், முதல்வர் அலுவலகத்திற்கு அந்த அறிக்கையில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p>
    <p><a title="ADMK Meeting: " href="https://tamil.abplive.com/news/tamil-nadu/aiadmk-general-secretary-edappadi-palaniswami-in-the-district-secretaries-meeting-not-to-worry-about-the-alliance-for-the-lok-sabha-elections-160702" target="_self">ADMK Meeting: "கூட்டணி குறித்து கவலை வேண்டாம்" மாவட்ட செயலாளர் கூட்டத்தில் இ.பி.எஸ். உத்தரவாதம்</a></p>

    Source link

  • Pongal 2024 Date Tamil Nadu Bhogi Thai Pongal Mattu Pongal Kaanum Pongal Date Government Holidays Sankranti All You Need To Know

    Pongal 2024 Date Tamil Nadu Bhogi Thai Pongal Mattu Pongal Kaanum Pongal Date Government Holidays Sankranti All You Need To Know

    2024ம் ஆண்டில் புத்தாண்டு முடிந்து பொங்கல் நெருங்கி வரும் நிலையில், ஜனவரி மாதம் எத்தனை நாட்கள் விடுமுறை விடப்பட்டுள்ளது என்ற முழு பட்டியலை இங்கே பார்க்கலாம். 



    விழா
    தேதி
    நாள்


    புத்தாண்டு தினம்
    ஜனவரி 1
    திங்கட்கிழமை


    பொங்கல்
    ஜனவரி 15
    திங்கட்கிழமை


    திருவள்ளுவர் தினம்
    ஜனவரி 16
    செவ்வாய்


    உழவர் திருநாள்
    ஜனவரி 17
    புதன்


    தைப்பூசம்
    ஜனவரி 25
    வியாழன்


    குடியரசு தினம்
    ஜனவரி 26
    வெள்ளி

    பொங்கல் 2024: அறுவடையைக் கொண்டாடும் பண்டிகை
    பொங்கல் என்பது தென்னிந்தியாவில் கொண்டாடப்படும் மிக முக்கியமான பண்டிகை ஆகும். அதிலும், குறிப்பாக தென்னிந்தியாவில், தமிழ்நாடு, ஆந்திரா, கர்நாடகா மற்றும் கேரளாவில் இந்த விழா முக்கியமாக கொண்டாடப்படுகிறது. தை மாதத்தின் முதல் வாரத்தில் ஆண்டுதோறும் வரும் ’பொங்கல்’ என்று அழைக்கப்படும் இந்த திருவிழா உழவர்களின் பாரம்பரியத்தையும், கலாச்சாரத்தையும் பிரதிபலிக்கும் ஒரு பெருவிழாவாக பார்க்கப்படுகிறது. மேலும், கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பானது தை மாதத்தின்போது அறுவடை செய்து கடவுளுக்கு படைக்கப்படும். அதையே விவசாயிகள் மிகவும் விமரிசையாக கொண்டாடி தீர்ப்பார்கள். 
    மகர சங்கராந்தியைப் போலவே இந்த பண்டிகையும் சூரியன் வழிப்படும் நாளாகும். தை மாதத்தில் பயிர் அறுவடை செய்யப்பட்டு மகிழ்ச்சியாக கொண்டாடப்படுகிறது. பொங்கல் பண்டிகை 4 நாட்கள் கொண்டாடப்படுகிறது, இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை ஜனவரி 15-ஆம் தேதி தொடங்கி ஜனவரி 18-ஆம் தேதி நிறைவடைகிறது. 
    பொங்கலின் நான்கு நாட்கள் – போகிப் பொங்கல், தைப் பொங்கல், மாட்டுப் பொங்கல் மற்றும் காணும் பொங்கல். 
    பொங்கல் பண்டிகை:
    பொங்கல் பண்டிகை நான்கு நாட்கள் கொண்டாடப்படுகிறது. 2024ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகை ஜனவரி 15ஆம் தேதி தொடங்கி ஜனவரி 18ஆம் தேதி நிறைவடைகிறது. போகி பண்டிகை ஜனவரி 15, தை பொங்கல் ஜனவரி 16, மாட்டுப் பொங்கல் ஜனவரி 17 மற்றும் காணும் பொங்கல் ஜனவரி 18 அன்று கொண்டாடப்படுகிறது. பொங்கல் தினத்தில் இருந்து தமிழ் புத்தாண்டு தொடங்கும் என்பது நம்பிக்கை. ஆனால், தமிழ் வருடப்படி சித்திரை மாதமே முதல் மாதமாக கருதப்படுகிறது. 
    பொங்கல் கொண்டாடுவது எப்படி?

    பொங்கல் பண்டிகை நான்கு நாட்கள் நடைபெறும். பொங்கலின் முதல் நாள் போகி பண்டிகை என்று அழைக்கப்படுகிறது. இந்த நாளில் மக்கள் வீட்டை சுத்தம் செய்து, வீட்டில் உள்ள தேவையற்ற பொருட்களை அகற்றி, நெருப்பு மூட்டி இந்திரனை வணங்குகிறார்கள்.
    பொங்கலின் இரண்டாம் நாள் மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது. அதுதான் தைப் பொங்கல் என்று அழைக்கப்படுகிறது. இந்த நாளில் சூரியதேவரை விவசாயிகள் வணங்கி, பாரம்பரிய உணவான சர்க்கரை பொங்கலுடன் கொண்டாடப்பட்டது. பயிர்களுக்கு சூரியபகவான் தனது ஆசீர்வாதத்தை வழங்குவார் என்று நம்பப்படுகிறது. 
    பொங்கலின் மூன்றாம் நாள் மாட்டுப் பொங்கல் என்று அழைக்கப்படுகிறது. இந்நாளில், கால்நடைகளை அலங்கரித்து வழிபாடு செய்து, அவை பயிர்களை உழுவதற்கு பயன்படுவதால், அவற்றைப் தெய்வமாக வணங்குகின்றனர். 
    பொங்கலின் நான்காவது மற்றும் கடைசி நாள் காணும் பொங்கல் என்று அழைக்கப்படுகிறது.  காணும் பொங்கலைக் கன்னிப் பொங்கல் அல்லது கணுப் பண்டிகை என்றும் அழைப்பர். இப்பண்டிகையின் நிகழ்வுகளில் உற்றார், உறவினர், நண்பர்களைக் காணுதல் மற்றும் பெரியோர் ஆசி பெறுதல் என்பன அடங்கும். இந்நாளில் கரும்பு வைத்து பால், அரிசி, நெய் போன்றவற்றில் இருந்து உணவுகள் தயாரித்து சூரியபகவானுக்கு அர்ச்சனை செய்யப்படுகிறது.

    Source link