Bilkis Bano : பில்கிஸ் பானு வழக்கில் குற்றவாளிகள் சரணடைய கூடுதல் அவகாசம் கோரிய மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. நாளை மறுநாளுக்குள் குற்றவாளிகள் சரணடைய வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.
கடந்த 2002-ஆம் ஆண்டு, குஜராத் கலவரத்தின்போது, கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டவர் பில்கிஸ் பானு. இவரை கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி, அவரது குடும்ப உறுப்பினர்களை கொடூரமாக கொலை செய்த வழக்கில் 11 குற்றவாளிகளின் தண்டனையை குஜராத் அரசு ரத்து செய்தது.
குஜராத் அரசின் இந்த உத்தரவை உச்சநீதிமன்றம் ஜனவரி 8-ஆம் தேதி ரத்து செய்தது. மேலும், பாதிக்கப்பட்ட பெண்ணின் உரிமையைக் காப்பது மிகவும் முக்கியமானது என குறிப்பிட்டது.
குஜராத் அரசின் முடிவை எதிர்த்து பில்கிஸ் பானு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். கடந்த ஜனவரி 24ஆம் தேதி, இந்த வழக்கை விசாரிப்பதற்காக ஒதுக்கப்பட்ட நீதிபதிகள் வேறு வழக்கை விசாரித்ததால், பில்கிஸ் பானு மனு மீதான விசாரணை நடத்தப்படவில்லை. இதையடுத்து, இந்த வழக்கை விசாரிப்பதற்காக சிறப்பு அமர்வு அமைக்க வேண்டும் என பில்கிஸ் பானுவின் வழக்கறிஞர் சோபா குப்தா உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.
இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், அவரின் கோரிக்கையை ஏற்றது. அதன்படி, இந்த மனுக்களை கே.எம்.ஜோசப், பி.வி.நாகரத்னா ஆகிய நீதிபதிகள் கொண்ட சிறப்பு அமர்வு விசாரித்து வந்தது. கே.எம்.ஜோசப் ஓய்வு பெற்றதை தொடர்ந்து, நாகரத்னாவுடன் இணைந்து, உஜ்ஜல் புயான், வழக்கை விசாரித்து வந்தார். கடைசியாக நடைபெற்ற விசாரணையின்போது, விதிகளுக்கு உட்பட்டு குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்தது தொடர்பான ஆவணங்களை சமர்ப்பிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இரு தரப்பு வாதம் நிறைவுபெற்றதை தொடர்ந்து, கடந்தாண்டு அக்டோபர் மாதம் வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.
பில்கிஸ் பானு தாக்கல் செய்த மனு மீது உச்சநீதிமன்றத்தில் 8-ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. அதில், உச்சநீதிமன்றம் பல முக்கியமான கருத்துகளை தெரிவித்துள்ளது. “நீதிமன்றங்கள், நீதியை வழங்க வேண்டுமே தவிர, நீதி வழங்கப்படுவதை பார்த்து கொண்டிருக்கக்கூடாது” என வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.வி.நாக ரத்னா, உஜ்ஜல் புயான் தெரிவித்துள்ளனர்.
மேலும், உச்சநீதிமன்றம் குஜராத் அரசை கடுமையாக சாடியது. குற்றவாளிகளுக்கு அரசு உடந்தையாக இருக்கிறது. அவர்களை விடுதலை செய்த விவகாரத்தில் குஜராத் அரசு தனது அதிகாரத்தை தவறாக பயன்படுத்தி உள்ளது என உச்சநீதிமன்றம் தெரிவித்தது. மேலும் அவர்கள் 11 பேரின் முன்கூட்டிய விடுதலையை உச்சநீதிமன்றம் அதிரடியாக ரத்து செய்தது. அதனை தொடர்ந்து வரும் 21 ஆம் தேதிக்குள் குற்றவாளிகள் சரணடைய வேண்டும் என கெடு விதித்தது, ஆனால் இதனை எதிர்த்து குற்றவாளிகள் தரப்பில் கூடுதல் அவகாசம் கேட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுவை விசாரித்த உச்சநீதிமன்றம் அதனை தள்ளுபடி செய்து உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் நாளை மறுநாளுக்குள் குற்றவாளிகள் சரணடைய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
Tag: பில்கிஸ் பானு

Supreme Court Refuses To Grant Extra Time For Accused To Surrender In Bilkis Bano Case

Kangana Ranaut: பில்கிஸ் பானு கதையை படம் பண்ண நான் ரெடி.. ஆர்வம் காட்டும் கங்கனா.. டென்ஷனான நெட்டிசன்கள்
<p>2002ம் ஆண்டு குஜராத் கலவரத்தால் ஐந்து மாத கர்ப்பிணியாக இருந்த 21 வயதான பில்கிஸ் பானுவை கொடூர கும்பல் ஒன்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தது. அந்த கொடூர சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கி எடுத்தது. </p>
<p>பில்கிஸ் பானு தனக்கு நேர்ந்த வன்கொடுமைக்கு எதிராக சட்டத்தின் மூலம் போராடினர். அதன் மூலம் அந்த கொடூர கும்பலை சேர்ந்த 11 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம். குற்றவாளிகள் மேல்முறையீட்டு செய்தபோதும் உச்ச நீதிமன்றம் அந்த மனுவை தள்ளுபடி செய்தது. </p>
<p> </p>
<p><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/10/f1eb23e073ae7098ced89445d113a8841704900075196224_original.jpg" alt="" width="720" height="540" /><br />15 ஆண்டுகால தண்டனையை அனுபவித்த குற்றவாளிகளின் வேண்டுகோளை மீண்டும் ஒரு முறை பரிசீலிக்குமாறு குஜராத் அரசிடம் அறிவுறுத்தியது நீதிமன்றம். அந்த வழக்கை விசாரிக்க குழு ஒன்றை அமைத்து அதன் மூலம் அந்த 11 குற்றவாளிகளை கடந்த 2022ம் ஆண்டு சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ம் தேதி விடுதலை செய்தது. வெளியில் வந்த குற்றவாளிகள் மாலைகள் அணிவித்து வரவேற்கப்பட்டனர். இந்த சம்பவத்திற்கு நாடு முழுவதிலும் இருந்து பெரும் கண்டங்கள் எழுந்தன. </p>
<p><br />அதனால் கோபமடைந்த பில்கிஸ் பானு அந்த 11 குற்றவாளிகளின் விடுதலையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து நீதிக்காக போராடினார். அதன் அடிப்படையில் குஜராத் அரசின் முடிவை சில தினங்களுக்கு முன் ரத்து செய்த உச்சநீதிமன்றம், அவர்களை மீண்டும் சிறையில் அடைக்க உத்தரவிட்டது. உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. </p>
<p> </p>
<p><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/10/6a1be0d1ece6959419765bb9f4246c2c1704900028192224_original.jpg" alt="" width="720" height="540" /></p>
<p> </p>
<p>அந்த வகையில் பெண்ணியம் குறித்து தொடர்ச்சியாக குரல் எழுப்பி வரும் கங்கனா ரனாவத்திடம் கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளனர் நெட்டிசன்கள். பில்கிஸ் பானுவின் வாழ்க்கையை ஒரு திரைப்படமாக ஏன் அவர் எடுக்க கூடாது என கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த கங்கனா ரனாவத் "நான் பில்கிஸ் பானுவின் கதையை படமாக எடுக்க வேண்டும் என ஆசைப்பட்டேன். கடந்த மூன்று ஆண்டுகளாக அதற்காக ஆய்வுகளை எல்லாம் மேற்கொண்டு கதையையும் தயார் செய்துவிட்டேன். ஆனால் இதில் அரசியல் ரீதியிலான பிரச்சினை இருப்பதால் நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் ப்ரைம் மட்டுமின்றி ஒரு சில தயாரிப்பு நிறுவனங்கள் கூட இந்த கதையை தயாரிக்க மறுப்பு தெரிவிக்கிறார்கள். மேலும் கங்கனா பிஜேபிக்கு ஆதரவு தெரிவிப்பதால் அவருடன் இணைய முடியாது என ஜியோ சினிமாஸ் நிறுவனுமும் கைவிரித்துவிட்டது. இப்படி இருக்கையில் எனக்கு வேறு வழி என்ன இருக்கிறது? என பதிலளித்துள்ளார். ஆனால் இதற்கு நெட்டிசன்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். </p>
<hr />
<p><strong>மேலும் படிக்க: <a title="Meenakshi Ponnunga :கடத்தி கொல்லப்படும் ப்ரியா.. கைதாகும் ஷக்தி – மீனாட்சி பொண்ணுங்க சீரியல் அப்டேட்" href="https://tamil.abplive.com/entertainment/television/zee-tamil-meenakshi-ponnunga-serial-january-10th-episode-update-160953" target="_self">Meenakshi Ponnunga :கடத்தி கொல்லப்படும் ப்ரியா.. கைதாகும் ஷக்தி – மீனாட்சி பொண்ணுங்க சீரியல் அப்டேட்</a></strong></p>
அதிகார துஷ்பிரயோகம் செய்த குஜராத் அரசு.. பில்கிஸ் பானு வழக்கில் நீதியை நிலைநாட்டியதா உச்சநீதிமன்றம்?
<p>பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் பில்கிஸ் பானு வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த 2002-ஆம் ஆண்டு, குஜராத் கலவரத்தின்போது, தன்னை கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி தனது குடும்ப உறுப்பினர்களை கொலை செய்த குற்றவாளிகளை குஜராத் அரசு முன்கூட்டியே விடுதலை செய்ததற்கு எதிராக பில்கிஸ் பானு தொடர்ந்த வழக்கில் தீர்ப்பு வெளியாகியுள்ளது.</p>
<h2><strong>”நீதி வழங்கப்படுவதை பார்த்து கொண்டிருக்கக்கூடாது"</strong></h2>
<p>அதில், உச்சநீதிமன்றம் பல முக்கியமான கருத்துகளை தெரிவித்துள்ளது. "நீதிமன்றங்கள், நீதியை வழங்க வேண்டுமே தவிர, நீதி வழங்கப்படுவதை பார்த்து கொண்டிருக்கக்கூடாது" என வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பி.வி.நாகரத்னா, உஜ்ஜல் புயான் தெரிவித்துள்ளனர்.</p>
<p>சம்பவம் குஜராத்தில் நடந்திருந்தாலும் மகாராஷ்டிராவில்தான் விசாரணை நடத்தப்பட்டு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. எனவே, மகாராஷ்டிர அரசுதான், குற்றவாளிகளின் தண்டனையை குறைக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து விரிவாக பேசிய நீதிபதி நாகரத்னா, "குற்றவாளிகளுக்கு ஆதரவாக அவர்களின் தண்டனையை ரத்து செய்ய மகாராஷ்டிர அரசின் அதிகாரத்தை குஜராத் அரசு அபகரித்துள்ளது.</p>
<p>அதிகாரத்தை அபகரித்ததன் அடிப்படையில் தண்டனை ரத்தை ரத்து செய்கிறோம். இதில், குஜராத் அரசுக்கு அதிகாரம் இல்லை.<br />குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 432(7)(b)இன் கீழ், தண்டனையை ரத்து செய்ய குஜராத் அரசுக்கு அதிகாரம் இல்லை.</p>
<p>சட்டப் பிரிவு 432(7)(b) இல் இருந்து, சம்பவம் நடந்த அல்லது குற்றவாளிகள் சிறையில் அடைக்கப்பட்ட மாநில அரசுக்கு மன்னிப்பு வழங்க அதிகாரம் இல்லை. வழக்கு விசாரணை மாற்றப்பட்டு, குற்றவாளிகள் விசாரிக்கப்பட்டு எங்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டதோ, அதாவது மகாராஷ்டிர அரசிடம் மட்டுமே அதிகாரம் உள்ளது" என்றார்.</p>
<h2><strong>சட்டத்தின் ஆட்சியில் உணர்ச்சிகளுக்கு இடம் இல்லை..</strong></h2>
<p>குஜராத் அரசு, அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபட்டதாகக் கூறிய நீதிபதி நாகரத்னா, "குற்றவாளிகளுக்கு தண்டனை குறைக்கப்பட்டிருப்பது அதிகார துஷ்பிரயோகம் ஆகும். சட்டத்தின்படி ஒரு அரசுக்கு கொடுக்கப்பட்ட அதிகாரத்தை மற்றொரு அரசு பயன்படுத்தியுள்ளது. இது அதிகாரத்தை அபகரிக்கும் செயலாகும்" என்றார்.</p>
<p>அரசியலமைப்பு சட்டப்பிரிவு 142இன் கீழ் தனது அதிகாரத்தை பயன்படுத்தி குற்றவாளிகளை விடுதலை செய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் உச்ச நீதிமன்றம் மறுத்துவிட்டது. "இது சட்டத்தை மீறும் செயலாகும். குற்றவாளிகளை விடுதலை செய்வது நியாயம் இல்லை. சட்டத்தின் ஆட்சி என்பது ஒரு சில அதிர்ஷ்டசாலிகளின் பாதுகாப்பைக் குறிக்காது" என உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.</p>
<p>"அவர்களின் விடுதலையை ரத்து செய்துவிட்டு, அவர்களை மீண்டும் சிறைக்கு அனுப்ப வேண்டுமா? அவர்களின் சுதந்திரம் காக்கப்பட வேண்டுமா? இரக்கத்திற்கும் அனுதாபத்திற்கும் சட்டத்தின் முன் இடமில்லை. சட்டத்தின் ஆட்சியில் உணர்ச்சிகளுக்கு இடம் இல்லை. நடுநிலையாக செயல்பட வேண்டும். சட்டத்தின் ஆட்சி மீறப்பட்டால், சட்டத்தின்படி தண்டனை வழங்க களத்தில் இறங்க வேண்டும். சட்டத்தின் ஆட்சி என்பது அரசின் தன்னிச்சையான செயல்பாடுகளுக்கு எதிரானது" என்றும் நீதிபதி நாகரத்னா தெரிவித்துள்ளார்.</p>
<p> </p>
பில்கிஸ் பானு விவகாரம்: குற்றவாளிகளை முன்கூட்டியே விடுதலை செய்தது செல்லுமா? இன்று தீர்ப்பு
<p>கடந்த 2002ஆம் ஆண்டு, குஜராத் கலவரத்தின்போது, கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டவர் பில்கிஸ் பானு. இவரை கூட்டு பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கி, அவரது குடும்ப உறுப்பினர்களை கொடூரமாக கொலை செய்த வழக்கில் 11 குற்றவாளிகளின் தண்டனையை குஜராத் அரசு ரத்து செய்தது. </p>
<h2><strong>பில்கிஸ் பானு விவகாரத்தில் நீதி நிலைநாட்டப்படுமா?</strong></h2>
<p>குஜராத் அரசின் முடிவை எதிர்த்து பில்கிஸ் பானு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். கடந்த ஜனவரி 24ஆம் தேதி, இந்த வழக்கை விசாரிப்பதற்காக ஒதுக்கப்பட்ட நீதிபதிகள் வேறு வழக்கை விசாரித்ததால், பில்கிஸ் பானு மனு மீதான விசாரணை நடத்தப்படவில்லை. இதையடுத்து, இந்த வழக்கை விசாரிப்பதற்காக சிறப்பு அமர்வு அமைக்க வேண்டும் என பில்கிஸ் பானுவின் வழக்கறிஞர் சோபா குப்தா உச்ச நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்தார்.</p>
<p>இதை விசாரித்த உச்ச நீதிமன்றம், அவரின் கோரிக்கையை ஏற்றது. அதன்படி, இந்த மனுக்களை கே.எம்.ஜோசப், பி.வி.நாகரத்னா ஆகிய நீதிபதிகள் கொண்ட சிறப்பு அமர்வு விசாரித்து வந்தது. கே.எம்.ஜோசப் ஓய்வு பெற்றதை தொடர்ந்து, நாகரத்னாவுடன் இணைந்து, உஜ்ஜல் புயான், வழக்கை விசாரித்து வருகிறார்.</p>
<p>கடைசியாக நடைபெற்ற விசாரணையின்போது, விதிகளுக்கு உட்பட்டு குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட தண்டனையை ரத்து செய்தது தொடர்பான ஆவணங்களை சமர்பிக்க உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இரு தரப்பு வாதம் நிறைவுபெற்றதை தொடர்ந்து, கடந்தாண்டு அக்டோபர் மாதம் வழக்கின் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டது.</p>
<h2><strong>உச்ச நீதிமன்றம் எடுக்கப்போகும் முடிவு என்ன?</strong></h2>
<p>இந்த நிலையில், குற்றவாளிகளுக்கு விதிக்கப்பட்ட தண்டனை, ரத்து செய்யப்பட்டதற்கு எதிராக பில்கிஸ் பானு தொடர்ந்த வழக்கின் தீர்ப்பு வரும் ஜனவரி 8ஆம் தேதி அதாவது இன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>நீதிமன்றத்தில் பில்கிஸ் பானுவின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஷோபா குப்தா, "குற்றங்களின் கொடூரமான தன்மையின் காரணமாக குற்றவாளிகளுக்கு மன்னிப்பு வழங்கக் கூடாது. வழக்கின் விசாரணை மகாராஷ்டிராவில் நடந்தது. எனவே, குற்றத்தை குறைக்கும் அதிகாரம் அங்குள்ள மாநில அரசுக்கே (மகாராஷ்டிரா) உள்ளது" என்றார்.</p>
<p>மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல், ஏ.எம். சிங்வி மற்றும் வழக்கறிஞர் விருந்தா குரோவர், "மும்பையில் உள்ள விசாரணை நீதிபதியும் வழக்கை விசாரித்த மத்திய புலனாய்வு அமைப்பும் (சிபிஐ) குற்றவாளிகளை விடுவிப்பதற்கு உடன்படவில்லை. இருப்பினும் முன்கூட்டியே விடுதலை செய்வதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது" என வாதிட்டனர்.</p>
<p>குற்றவாளிகளின் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ரிஷி மல்ஹோத்ரா, "கடந்த 2022ஆம் ஆண்டு, மே மாதம், உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில் முன்கூட்டியே விடுதலை செய்ய குஜராத் அரசு முடிவு செய்தது. குற்றவாளிகளை முன்கூட்டியே விடுதலை செய்வதற்கான விதி, 1992இன் கீழ் குற்றவாளிகளின் கோரிக்கையை பரிசீலிக்க குஜராத் மாநிலத்துக்கு அனுமதி வழங்குகிறது" என்றார்.</p>
<p> </p>



