Tag: தேசிங்கு பெரியசாமி

  • director desingh periyasamy assistant director money Embezzlement case registered details | Desingh Periyasamy: சிம்பு பட இயக்குனரிடம் பண மோசடி! உதவி இயக்குனரை வலைவீசி தேடும் போலீஸ்

    director desingh periyasamy assistant director money Embezzlement case registered details | Desingh Periyasamy: சிம்பு பட இயக்குனரிடம் பண மோசடி! உதவி இயக்குனரை வலைவீசி தேடும் போலீஸ்


    துல்கர் சல்மான் படத்தை இயக்கியவரும், நடிகர் சிம்புவின் அடுத்த பட இயக்குநருமான தேசிங்கு பெரியசாமியிடம் ரூ.3 லட்சம் கையாடல் செய்ததாக உதவி இயக்குநர் மீது அண்ணா நகர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
    இயக்குனர் தேசிங்கு பெரியசாமி:
    இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: “பிரபல மலையாள நடிகர் மம்மூட்டியின் மகன் துல்கர் சல்மான் நடிப்பில் வெளிவந்த ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தின் இயக்குநர் தேசிங்கு பெரியசாமி. சென்னை, அண்ணா நகர் பகுதியில் குடும்பத்துடன் வசிக்கிறார். இவர் தற்போது கமல்ஹாசனின் ராஜ் கமல் நிறுவனம் தயாரிப்பில், சிலம்பரசன் நடிக்கும் புதிய படத்தை இயக்க ஒப்பந்தமாகி அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறார்.
    தேசிங்கு பெரியசாமியிடம் கடந்த 2018ஆம் ஆண்டு முதல் உதவி இயக்குநராக முகமது இக்பால் என்பவர் இருந்துள்ளார். இவர், தேசிங்கு பெரியசாமியின் அனைத்து விதமான வரவு செலவு மற்றும் பணப் பரிவர்த்தனைகளையும் கவனித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த மாதம் தேசிங்கு பெரியசாமி, தனது 150 கிராம் எடை கொண்ட தங்க நகைகளை அதே பகுதியில் உள்ள தனியார் நிதி நிறுவனம் ஒன்றில் அடமானம் வைத்து பணம் பெற்று வரும்படி முகமது இக்பாலிடம் கூறியுள்ளார்.
    3 லட்சம் கையாடல்:
    ஆனால், நகைகளுடன் சென்ற இக்பால் அதை அடமானம் வைத்து பெற்ற தொகை ரூ.3 லட்சம் ரொக்கத்தை தேசிங்கு பெரியசாமியிடம் ஒப்படைக்காமல் கையாடல் செய்துள்ளார். இதுபற்றி கேட்டபோது தகாத வார்த்தைகளால் பேசியதோடு, தேசிங்கு பெரியசாமி மற்றும் அவரது மனைவிக்கு கொலை மிரட்டல் விடுத்தாக கூறப்படுகிறது.
    இதனால், அதிர்ச்சி அடைந்த தேசிங்கு பெரியசாமி இந்த விவகாரம் குறித்து அண்ணா நகர் காவல் நிலையத்தில் புகார் தெரிவித்தார். அதன்படி, காவல் துறையினர் மோசடி, மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிந்து உதவி இயக்குநர் முகமது இக்பாலை தேடி வருகின்றனர்.

    மேலும் காண

    Source link

  • Silambarasan 48 Movie Shooting To Begin Soon Simbu To Act In Dual Roles

    Silambarasan 48 Movie Shooting To Begin Soon Simbu To Act In Dual Roles

    தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிலம்பரசன் நடிக்கும் 48வது படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்க இருப்பதாக தெரியவந்துள்ள நிலையில் இந்தப் படத்தில் இரட்டை வேடங்களில் சிம்பு நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
    சிலம்பரசன்
     நீண்ட இடைவேளைக்குப் பிறகு நடிகர் சிம்பு மீண்டும் தமிழ் சினிமாவில் அதிகம் எதிர்பார்க்கப்படும் நடிகர்களில் ஒருவராக மாறியுள்ளார். வெங்கட் பிரபு இயக்கத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான மாநாடு படம் அவருக்கு ஒரு நல்ல கம்பேக் படமாக அமைந்தது. இதனைத் தொடர்ந்து கெளதம் மேனன் இயக்கத்தில் அவர் நடித்த வெந்து தணிந்தது காடு படம்  நல்ல வெற்றி பெற்றது. தற்போது சிம்பு அடுத்தடுத்த பெரிய பட்ஜெட் படங்களில்  நடிக்க தயாராக இருக்கிறார். இந்த வரிசையில் அடுத்தபடியாக  அவர் நடிக்க இருக்கும் படம் எஸ்.டி.ஆர் 48.
    எஸ்.டி ஆர் 48
    சிம்புவின் 48 ஆவது படமாக உருவாகும் இந்தப் படத்தை தேசிங்கு பெரியசாமி இயக்குகிறார். கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் தேசிங்கு பெரியசாமி. ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இந்தப் படத்தை தயாரிக்கிறது. இந்தப் படத்தில் சிலம்பரசன் இரண்டு வேடங்களில் நடிக்க இருப்பதாக தெரியவந்துள்ளது. அடுத்த மாதம் படப்பிடிப்பு தொடங்க இருக்கும் நிலையில் தற்போது இந்தப் படத்திற்கான செட் அமைக்கும் பணிகள் நடைபெற்று  வருகின்றன. இப்படத்தின் பெரும்பாலான காட்சிகள் செட் அமைக்கப் பட்டு எடுக்கப்பட இருப்பதாகவும் பெரிய அளவிலான வி.எஃப். எக்ஸ் காட்சிகள் இந்தப் படத்தில் இடம்பெற இருப்பதாகவும் கூறப்படுகிறது. படபிடிப்புக்கு முன்னதாக நடிகர் சிம்பு வெளி நாட்டில் இருந்து சென்னை திரும்பிவிடுவார் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

    #STR48 – Shoot Begins from Feb end and Set works to begin from Jan end..💥 90% of the film is said to be filmed in grand indoor sets..⭐• With the Help of the Storyboard and VFX team’s advice, each set will be designed..🔥• #SilambarasanTR is expected to arrive in Chennai…
    — Laxmi Kanth (@iammoviebuff007) January 20, 2024

    எஸ்.டி.ஆர் 48 படத்தைத் தொடர்ந்து சிம்பு வெந்து தணிந்தது காடு படத்தின் இரண்டாம் பாகத்தில் நடிக்க இருக்கிறார். கெளதம் மேனன் இயக்க ஐஷரி கணேஷ் இந்தப் படத்தை தயாரிக்கிறார். மேலும் வேல்ஸ் ஃபிலிம்ஸ் தயாரிப்பில் சிம்பு மேலும் ஒரு படம் நடித்து தருவதாக தெரிவித்துள்ளார் என்று தயாரிப்பாளர் ஐஷரி கனேஷ் தெரிவித்துள்ளார்.

    மேலும் படிக்க : Vidamuyarchi – Goat : அடுத்தடுத்த மாதங்களில் வெளியாகும் அஜித் விஜய் படங்கள்.. படைபலத்தை காட்ட காத்திருக்கும் ரசிகர்கள்
    Siragadikka Aasai :வேண்டா வெறுப்பாக மீனாவுக்கு ஊட்டி விடும் விஜயா… வெளுத்து வாங்கும் பாட்டி- சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோட்

    Source link