Tag: திருமணம்

  • cinema headlines today march 28th tamil cinema news today Siddharth Aditi Rao engaged goat life movie release | Cinema Headlines: வெளியானது ஆடு ஜீவிதம் படம்; சித்தார்த்-அதிதி ராவ் நிச்சயதார்த்தம்

    cinema headlines today march 28th tamil cinema news today Siddharth Aditi Rao engaged goat life movie release | Cinema Headlines: வெளியானது ஆடு ஜீவிதம் படம்; சித்தார்த்-அதிதி ராவ் நிச்சயதார்த்தம்



    Village Cooking : ‘வில்லேஜ் குக்கிங் சேனல்’ தாத்தாவுக்கு என்ன ஆச்சு? மருத்துவமனையில் அனுமதி… ரசிகர்கள் வருத்தம்…

    யூடியூப் சேனல் மோகம் நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணமாக இருக்கிறது. பலருக்கும் ஒரு ஏணி படியாய் இருந்து வரும் யூடியூப் மூலம் மூலை முடுக்கில் இருப்பவர்கள் கூட அவர்களுக்கு இருக்கும் தனித்திறமையை இந்த உலகம் அறியும் வகையில் வெளிக்காட்ட ஒரு சிறந்த பிளாட்ஃபார்மாக இருந்து வருகிறது. மேலும் படிக்க
     


    Siddharth – Aditi Engaged: “நடந்தது நிச்சயதார்த்தம்.. திருமணம் அல்ல” – சஸ்பென்ஸ் உடைத்த நடிகர் சித்தார்த்!

    நடிகர் சித்தார்த் மற்றும் நடிகை அதிதி ராவ் ஹைதாரி இருவரும் பல நாட்களாக டேட்டிங் செய்து வந்த நிலையில் இருவரும் தெலங்கானா மாநிலத்தில் உள்ள ஒரு கோயிலில் நேற்று ரகசியத் திருமணம் செய்து கொண்டனர் என்றும், தங்களின் திருமண அறிவிப்பை விரைவில் வெளியிடுவார்கள் என்றும் தகவல்கள் சோசியல் மீடியா எங்கும் காட்டுத்தீ போல பரவி வந்தன. மேலும் படிக்க

    Robo Shankar : மகளுக்கும் மாப்பிள்ளைக்கும் மட்டுமல்ல… ஊருக்கே ராஜ விருந்து வைத்து அசத்திய ரோபோ ஷங்கர்!

    மாப்பிள்ளைக்கும் மருமகளுக்கும் தடபுடலாக மதுரையில் விருந்து வைத்து அசத்தியுள்ளார் ரோபோ ஷங்கர். ஊருக்கே கிடா விருந்து வைத்து அசத்திய ரோபோ ஷங்கர் விருந்தில் மட்டன் பிரியாணி, மட்டன் ப்ரை, மட்டன் சுக்கா, மீன் ப்ரை, சிக்கன் 65, குடல், கோலா உருண்டை, சிக்கன் குழம்பு, ஈரல் வறுவல் என வகைவகையாக விருந்தளித்து அதகளம் செய்து இருந்தார் ரோபோ ஷங்கர். ஊரே ரோபோ ஷங்கர் வைத்த விருந்தை பார்த்து அசந்து போனது. மேலும் படிக்க

    Clever trailer launch: புதுசா இருக்கே! இரண்டு நாய்கள் மட்டுமே நடித்துள்ள ‘கிளவர்’ திரைப்படம் – ட்ரெயிலர் ரிலீஸ்

    கார்த்திகேயன் பிரதர்ஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் திப்பம்மாள் இப்படத்தை தயாரிக்க படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கி உள்ளார் அறிமுக இயக்குநர் செந்தில்குமார் சுப்ரமணியன். இப்படத்திற்கு ‘கிளவர்’ என தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படத்தின் ட்ரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றதில் தயாரிப்பாளர் கே.ராஜன் உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்து கொண்டனர். மேலும் படிக்க

    AaduJeevitham Twitter Review: பிருத்விராஜ் என்ன ஒரு நடிப்பு.. படம் மாஸ்டர்பீஸ்.. ஆடுஜீவிதம் படத்தின் ட்விட்டர் விமர்சனம்!

    இயக்குநர் ப்ளெஸ்ஸி இயக்கத்தில் பிரபல மலையாள நடிகர் பிருத்விராஜ் சுகுமாரன் நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் இன்று வெளியாகியுள்ள திரைப்படம் ஆடு ஜீவிதம் – தி கோட் லைஃப். அமலா பால் இப்படத்தில் ஹீரோயினாக நடிக்க உலகப் புகழ்பெற்ற நாவலான ஆடுஜீவிதம் நாவலை மையப்படுத்தி இப்படம் அமைந்துள்ளது. மேலும் படிக்க
     

    மேலும் காண

    Source link

  • மகள் திருமணத்திற்கு அழைத்த ஊழியர்… மறுக்காமல் பறந்து வந்து திருமணத்தை நடத்தி வைத்த சிங்கப்பூர் தொழிலதிபர்கள்.!

    மகள் திருமணத்திற்கு அழைத்த ஊழியர்… மறுக்காமல் பறந்து வந்து திருமணத்தை நடத்தி வைத்த சிங்கப்பூர் தொழிலதிபர்கள்.!


    <p dir="ltr" style="text-align: justify;">&nbsp;</p>
    <p dir="ltr" style="text-align: justify;">வடமாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு புலம்பெயர்ந்து வேலை தேடி வந்து இங்கு பணிபுரியும் வட மாநில தொழிலாளர்களைப் போல, நம் தென் தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்து சிங்கப்பூருக்கு சென்று, அங்கு கட்டுமான கம்பெனி முதல் சிறிய ஹோட்டல்கள் வரை வேலை பார்த்து பொருள் ஈட்டி பலரும் வாழ்ந்து வருகின்றனர். அதே வேளை நம்முடைய கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் தெரிந்து கொள்ள தமிழகத்திற்கு வருவதற்கு பல நாட்டினை சேர்ந்தவர்களும் ஆர்வம் காட்டுகிறார்கள்.</p>
    <p dir="ltr" style="text-align: justify;">அவர்களுக்கு கீழ்பணி புரியும் ஊழியரோ, பணியாளரோ அவர்களின் இல்ல விழாவிற்கு அழைப்பு விடுத்தால் நம்மில் ஒருவராக நம்ம ஊர் திருவிழாக்கள் மற்றும் திருமண நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள சிங்கப்பூர் போன்ற செல்வ செழிப்பு மிக்க நாடுகளிலிருந்து அந்நாட்டின் செல்வந்தர்கள் உள்ளக்கனிவோடு வருகை தருகிறார்கள். அவ்வாறு வருபவர்களுக்கு நம் நாட்டு கலாச்சார பாரம்பரிய முறைப்படி வரவேற்பு கொடுப்பதில் தமிழர்களுக்கு நிகர் யாரும் இல்லை என்பதை அவ்வப்போது இதுபோன்ற சம்பவங்கள் நமக்கு நினைவு படுத்துகிறது.</p>
    <p dir="ltr" style="text-align: justify;">ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்துார் செந்துார்பாண்டியன் மகள் திருமண விழாவிற்கு வந்த சிங்கப்பூர் நிறுவன முதலாளி மற்றும் அதிகாரிகள், தமிழர்களின் பாரம்பரிய உடை அணிந்து பங்கேற்று திருமணத்தை நடத்தி வைத்து அரசு பள்ளிக்கு நிதி உதவி வழங்கிய நெகிழ்ச்சி சம்பவம் அனைவரிடையே பெரும் பாராட்டை பெற்றுள்ளது.</p>
    <p dir="ltr"><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/02/90f16dbad862719e4a8774fb3be9480a1709377019258113_original.jpg" /></p>
    <p dir="ltr" style="text-align: justify;">ராமநாதபுரம் மாவட்டத்தில் தன்னுடைய நிறுவனத்தில் பணியாற்றிய ஊழியரின் மகள் திருமணத்திற்கு வருகை தந்து, மணமகள் வேலை பார்க்கும் அரசு பள்ளிக்கு ஒரு லட்சம் நிதி உதவி அளித்த சிங்கப்பூர் தொழில் அதிபர்களின் நல்ல மனதை முதுகுளத்தூர் பகுதி பொதுமக்கள் வாழ்த்தி வருகின்றனர்.</p>
    <p dir="ltr" style="text-align: justify;">ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூரை சேர்ந்தவர் செந்தூர்பாண்டியன். இவர் நீண்ட காலமாக சிங்கப்பூரில் எல் கார்ப்பரேசன் லிமிடெட் என்ற நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். செந்தூர்பாண்டியன் மகள் முகாவிஜிக்கும், கார்த்தி என்பவருக்கும் திருமணம் இன்று முதுகுளத்தூரில் உள்ள தனியார் மஹாலில் நடைபெற்றது. இந்த திருமண விழாவிற்கு சிங்கப்பூரைச் சேர்ந்த எல் கார்ப்பரேசன் லிமிடெட் இயக்குனர் கூ லின், தொழில் இயக்குனர் ஹான் மிங், திட்ட மேலாளர் டிம் ஆகிய 3 பேரும் வருகை தந்திருந்தனர்.</p>
    <p dir="ltr" style="text-align: justify;">திருமணத்திற்கு வந்த மூன்று பேரையும் முதுகுளத்தூர் பேருந்து நிலையத்திலிருந்து குதிரை சாரட்டில் ஏற்றி ஊர்வலமாக அழைத்து வந்தனர். அப்போது செண்டை மேளம் முழங்க, சீர் வரிசை தட்டுகளுடன் அவர்கள் ஊர்வலமாக அழைத்து வரப்பட்டனர். பின்னர் திருமண மண்டபத்தில், தமிழர் முறைப்படி ஆரத்தி எடுத்து வரவேற்கப்பட்டனர். பின்னர் கூ லின் தாலி எடுத்து கொடுக்க, மணமகன், மணமகளுக்கு தாலி கட்டினார். பின்னர் அவர்களுக்கு சந்தனம், குங்குமம் இட்டு வாழ்த்தினர்.</p>
    <p dir="ltr"><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/02/cedbcf14ec5ec9ae5e511c4a0bb290a51709377047672113_original.jpg" /></p>
    <p dir="ltr" style="text-align: justify;">பின்னர், செந்தூர் பாண்டியன் மகள் முகாவிஜி தற்காலிகமாக பணியாற்றும் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளிக்கு சென்ற 3 பேருக்கும் பள்ளியின் சார்பில் பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது. பின்னர் ஆரத்தி எடுத்தும், மாணவ-மாணவிகள் சிலம்பம் சுற்றியும், மலர் தூவியும் வரவேற்றனர்.</p>
    <p dir="ltr" style="text-align: justify;">அப்போது பள்ளியின் வளர்ச்சிக்காக ஒரு லட்ச ரூபாய் நன்கொடை அளித்தனர். தன் நிறுவனத்தில் பணியாற்றிய ஊழியரின் மகளின் திருமணத்திற்கு வந்தது மட்டுமின்றி, மணமகள் பணியாற்றிய பள்ளிக்கு நன்கொடை அளித்த சிங்கப்பூர் தொழிலதிபர்களை பொதுமக்கள் வெகுவாக பாராட்டினர்.</p>
    <div class="yj6qo" style="text-align: justify;">&nbsp;</div>
    <div class="adL" style="text-align: justify;">&nbsp;</div>

    Source link

  • Online marriage registration begins in Karnataka on a pilot basis to be extended across State soon | Karnataka Marriage: காதலர்களுக்கு அடிச்ச ஜாக்பாட்! ஆன்லைனிலேயே திருமணத்தை பதிவு செய்து கொள்ளலாம்

    Online marriage registration begins in Karnataka on a pilot basis to be extended across State soon | Karnataka Marriage: காதலர்களுக்கு அடிச்ச ஜாக்பாட்! ஆன்லைனிலேயே திருமணத்தை பதிவு செய்து கொள்ளலாம்


    திருமண பந்தத்தில் அடியெடுத்து வைக்கும் தம்பதியினர், தங்களின் திருமணத்தைப் பதிவு செய்து கொள்வது என்பது தமிழ்நாடு உள்ளிட்ட பல மாநிலங்களில் கட்டாயமாக்கப்பட்டுள்ளது. பாஸ்போர்ட், விசா பெறுவது முதல் பல்வேறு விஷயங்களுக்கு திருமண பதிவுச் சான்றிதழ் அவசியம் என்பதல், திருமணமான ஒவ்வொருவரும் தங்கள் திருமணத்தைப் பதிவு செய்து வருகின்றனர்.
    திருமணச் சான்றிதழ்:
    திருமணத்தை பதிவு செய்வதற்கு ஒவ்வொரு மதத்திற்கு ஏற்ப வெவ்வேறு சட்டங்கள் இருக்கின்றன. அத்துடன் சிறப்புச் திருமணச் சட்டமும் இருக்கிறது.  இந்த சட்டங்களின் அடிப்படையில் தான் திருமணங்கள் பதிவு செய்யப்பட்டு வருகிறது.  நம்முடைய தமிழ்நாட்டை பொறுத்தவரை 2009ஆம் ஆண்டு முதல் திருமணப் பதிவு செய்வதை கட்டாயமாக்கப்பட்டது. 
    தமிழ்நாட்டில் திருமணத்தைப் பதிவு செய்வதற்கு சார்பதிவாளர் அலுவலகம் சென்று பதிவு செய்ய வேண்டும். ஆனால், அதற்கு முன்பு, தம்பதியினரின் புகைப்படங்கள் உள்ளிட்ட நகலுடன் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பித்த  பிறகு, சார் பதிவாளர் அலுவலகம் வர வேண்டிய தேதி விவரங்கள் அனுப்பப்படும்.
    இதனை அடுத்து தான் சார் பதிவாளர் வந்து திருமணத்தைப் பதிவு செய்ய முடியும். திருமணம் நடந்து 90 நாட்களுக்குள் விண்ணப்பிக்க வேண்டும். இல்லையென்றால், அதற்கான அபராதம் செலுத்த வேண்டியிருக்கும். இதுதான் தமிழ்நாட்டில் தற்போது வரை உள்ள நடைமுறைகள். இதே போன்று, கர்நாடகா, கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் நடைமுறையில் இருக்கிறது.
    ஆன்லைனில் திருமணச் சான்றிதழ்:
    இந்த நிலையில்,  கர்நாடக மாநிலத்தில் ஆன்லைனிலேயே திருமணப் பதிவு செய்யும் நடைமுறை நேற்று கொண்டு வரப்பட்டது. திருமண சட்டம் 1955-இன் படி திருமணப் பதிவை ஆன்லைனில் பதிவு செய்யும் வசதியை கர்நாடக அரசு அறிமுகப்படுத்தியது. இந்த வசதியை மல்லேஸ்வரம் துணைப் பதிவாளர் அலுவலகத்தில் வியாழக்கிழமை வருவாய்த்துறை அமைச்சர் கிருஷ்ண பைரே கவுடா தொடங்கி வைத்தார். இதன் மூலம், இனிமே  சார் பதிவாளர் அலுவலகம் செல்ல வேண்டிய அவசியமில்லை.  
    வீட்டில் இருந்தப்படியே ஆதார் அட்டை, தம்பதியரின் புகைப்படங்கள், திருமணப் புகைப்படங்கள், திருமண வீடியோக்கள், வயது விவரத்திற்கு கல்லூரி, பள்ளி சான்றிதழ்கள் உள்ளிட்டவற்றை சமர்பித்து, ஆன்லைனிலேயே கையெழுத்திட்டு, திருமணப் பதிவு செய்யலாம்.

    Now one doesn’t have to visit the sub-registrar’s office for registering their marriage under Hindu Marriage Act. A cerificate is generated at the comfort of home by providing wedding invite,video, Aadhaar. One more step towards transparency and service delivery. #revenue #gok… pic.twitter.com/a233SlXO9l
    — Krishna Byre Gowda (@krishnabgowda) February 15, 2024

    இதுகுறித்து வருவாய்த் துறை அமைச்சர் கிருஷ்ண பைரே கவுடா  கூறுகையில், ”திருமண பதிவு செயல்முறையை நவீனமயமாக்கும் நோக்கில் ஆன்லைனில் நடைமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. கர்நாடகாவில் 30 சதவீத திருமணங்கள் மட்டுமே பதிவு செய்யப்படுகின்றன.
    இதனால், ஆன்லைனில் திருமணப் பதிவு நடைமுறையை கொண்டு வந்தோம். இந்த நடைமுறை சிறப்பு திருமணப் பதிவுக்கு கிடையாது. இந்த  ஆன்லைனில் திருமணப் பதிவு இந்து மதத்திற்கு மட்டுமே பொருந்தும். இந்த மாத இறுத்திக்குள் மாநில முழுவதும் விரிவுப்படுத்தப்படும்” என்றார். 

     

    மேலும் காண

    Source link

  • திருமணம் செய்துகொள்வதாக கூறி பெண்ணிடம் பாலியல் உறவு கொள்வது பாலியல் வன்கொடுமையா? நீதிமன்றம் பரபர

    திருமணம் செய்துகொள்வதாக கூறி பெண்ணிடம் பாலியல் உறவு கொள்வது பாலியல் வன்கொடுமையா? நீதிமன்றம் பரபர


    <p>திருமணம் செய்து கொள்வதாக கூறிவிட்டு, பாலியல் உறவு கொள்வதும் பெற்றோர் சம்மதிக்காததால் உறவை முறித்துக்கொள்வதும் பாலியல் வன்கொடுமையாக கருத முடியாது என மும்பை உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.&nbsp;</p>
    <h2><strong>திருமணம் செய்து கொள்வதாக கூறி பெண் ஏமாற்றப்பட்டாரா?</strong></h2>
    <p>குற்றம்சாட்டப்பட்ட நபரும் பாதிக்கப்பட்ட பெண்ணும் காதலித்து வந்துள்ளனர். கடந்த 2019ஆம் ஆண்டு, காதலித்து வந்த சமயத்தில் இருவரும் பாலியல் உறவில் ஈடுபட்டுள்ளனர். பின்னர், அந்த நபருக்கு வேறொரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் நடந்திருப்பதும், அவர் திருமணம் செய்யப் போவதும் பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தெரியவந்தது.</p>
    <p>இதையடுத்து, நாக்பூரில் உள்ள காவல்நிலையத்தில் அந்த பெண் புகார் அளித்தார். குற்றம் சாட்டப்பட்ட நபரை வரவழைக்கப்பட்டபோது, ​​அவர் புகார்தாரரை திருமணம் செய்யத் தயாராக இருப்பதாகவும், ஆனால் அவரது பெற்றோர் திருமணத்திற்கு ஒப்புக் கொள்ளவில்லை என்றும் அவர் காவல்துறை அதிகாரிகளிடம் தெரிவித்தார்.</p>
    <p>இதனை தொடர்ந்து, பாதிக்கப்பட்ட பெண், குற்றம்சாட்டப்பட்ட நபரின் தந்தையை சந்திக்கச் சென்றார். அப்போது, பாதிக்கப்பட்ட பெண்ணுக்கு தனது மகனை திருமணம் செய்து வைப்பதில் விருப்பமில்லை என்று அவர் கூறியுள்ளார். இதனால், குற்றம் சாட்டப்பட்டவர் மீது இந்திய தண்டனை சட்டம் பிரிவு 376(2)(n) கீழ் நாக்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.</p>
    <h2><strong>மும்பை உயர் நீதிமன்றம் பரபரப்பு கருத்து:</strong></h2>
    <p>குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்ட பிறகு, வழக்கில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும் என்று குற்றம் சாட்டப்பட்டவர் செஷன்ஸ் நீதிமன்றத்தை அணுகியுள்ளார். ஆனால், குற்றம் சாட்டப்பட்டவரை விடுவிக்க மறுத்த செஷன்ஸ் நீதிமன்றம், உயர் நீதிமன்றத்தை அணுகும்படி தெரிவித்தது.</p>
    <p>எனவே, வழக்கில் இருந்து விடுவிக்கும்படி குற்றம்சாட்டப்பட்ட நபர் மும்பை உயர் நீதிமன்ற நாக்பூர் கிளையில் மனு தாக்கல் செய்தார். இதை விசாரித்த நீதிபதி M.W. சந்த்வானி, "திருமணம் செய்து கொள்வதாக கூறி, பெண்ணுடன் பாலியல் உறவில் கொண்டு, ஆனால், பெற்றோர் சம்மதிக்காத காரணத்தால் திருமணம் செய்து கொள்ள மறுத்த குற்றம்சாட்டப்பட்ட நபரை" விடுவிக்க உத்தரவிட்டார்.</p>
    <p>"திருமணத்திற்கு பெற்றோர் ஒப்பு கொள்ளாத காரணத்தால் கொடுத்த வாக்குறுதியை அவர் நிறைவேற்றவில்லை. இதனாலேயே, இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 375 (பாலியல் வன்கொடுமை) கீழ் தண்டனைக்குரிய குற்றத்தை மனுதாரர் (குற்றம்சாட்டப்பட்ட நபர்) செய்தார் என சொல்ல முடியாது.</p>
    <p>சூழ்நிலை காரணமாக அவர் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை. என்ன நடக்கும் என்பதை குற்றம்சாட்டப்பட்ட நபர் ஊகிக்க முடியாது. அது, அவருக்கு அப்பாற்பட்ட விஷயம். திருமணம் செய்து கொள்ள வேண்டும் என எண்ணம் இருந்தபோதிலும், பாதிக்கப்பட்ட பெண்ணை அவரால் திருமணம் செய்து முடியவில்லை.</p>
    <p>திருமணம் செய்து கொள்ள பாதிக்கப்பட்ட பெண் தான் முதலில் மறுத்துள்ளார். வேறு ஒரு பையனை திருமணம் செய்து கொள்வதாக குற்றம்சாட்டப்பட்டவரிடம் தெரிவித்தார். குற்றம்சாட்டப்பட்ட நபர், வேறொரு பெண்ணுடன் நிச்சயதார்த்தம் செய்தபோதுதான், பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துள்ளார்" என நீதிபதி தெரிவித்துள்ளார்.</p>
    <p>&nbsp;</p>

    Source link