Tag: ஞானபீட விருது

  • art literature jnanpith award boycott tamil vairamuthu post | ஞானபீட விருது…22 ஆண்டுகளாக தமிழ் புறக்கணிப்பு

    art literature jnanpith award boycott tamil vairamuthu post | ஞானபீட விருது…22 ஆண்டுகளாக தமிழ் புறக்கணிப்பு


    இலக்கிய ஆளுமைகளுக்காக இந்தியாவில் வழங்கப்படும் பெரும் அங்கீகாரமான ஞானபீட விருது, கடந்த 22 ஆண்டுகளாக தமிழை தவிர்த்து வருவது குறித்து கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். 
    ஞான பீட விருது:
    உருது கவிஞரும், இந்தி சினிமா பாடலாசிரியருமான குல்சார் மற்றும் சமஸ்கிருத அறிஞர் ஜகத்குரு ராம்பத்ரச்சார்யா ஆகியோருக்கு 2023-ஆம் ஆண்டுக்கான ஞானபீட விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஞானபீட தேர்வுக்குழு வெளியிட்ட அறிவிப்பினை அடுத்து, இலக்கிய ஆளுமைகள் இருவருக்கும் வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றது. 
    கவிஞர் வைரமுத்துவும் தனது வாழ்த்தினை எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் விருது பெற்ற கவிஞர், பாடலாசிரியர், எழுத்தாளர், என பன்முகம் கொண்ட குல்சாருக்கு வாழ்த்துகளை தெரிவித்திருக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த படங்கள் பலவற்றில், தமிழில் வைரமுத்துவும், இந்தியில் குல்சாரும் பாடல் வரிகளை எழுதிய நிலையில் இருவரும் இணைந்து பணியாற்றி உள்ளனர். இதை தனது வரிகளில் நினைவு கூர்ந்துள்ளார். 
    தமிழ் மொழி புறக்கணிப்பு:
    கூடவே, ஞானபீட விருது கடந்த 22 ஆண்டுகளாக தமிழை புறக்கணித்து இருப்பது குறித்தும் வைரமுத்து அப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.  அவர் பதிவிட்டுள்ளதாவது, ”சமஸ்கிருத மொழிக்காக சமய ஆளுமை ராம்பத்ராசாரியாவும் உருது மொழிக்காக இலக்கிய ஆளுமை குல்சாரும் இந்த ஆண்டு ஞானபீட விருதைப் பகிர்ந்துகொள்வது மகிழ்ச்சி தருகிறது.
    இரு பேராளுமைகளுக்கும் வாழ்த்துக்கள் ஜெயகாந்தனுக்குப் பிறகு ஞானபீடம் தமிழ்மொழியை 22ஆண்டுகள் தவிர்த்தே வருவது தற்செயலானதன்று என்று தமிழ்ச் சமூகம் கவலையுறுகிறது முழுத் தகுதிகொண்ட முதிர்ந்த பல படைப்பாளிகள் காலத்தால் உதிர்ந்தே போயிருக்கிறார்கள் வேண்டிப் பெறுகிற இடத்தில் தமிழ் இல்லையென்ற போதிலும் தூண்டிவிடுவது கடமையாகிறது” இவ்வாறு தெரிவித்துள்ளார். 
     

    சமஸ்கிருத மொழிக்காகசமய ஆளுமை ராம்பத்ராசாரியாவும்உருது மொழிக்காகஇலக்கிய ஆளுமை குல்சாரும்இந்த ஆண்டு ஞானபீட விருதைப்பகிர்ந்துகொள்வதுமகிழ்ச்சி தருகிறதுஇரு பேராளுமைகளுக்கும்வாழ்த்துக்கள்ஜெயகாந்தனுக்குப் பிறகுஞானபீடம்தமிழ்மொழியை 22ஆண்டுகள்தவிர்த்தே வருவதுதற்செயலானதன்று… pic.twitter.com/YLlP2kqykk
    — வைரமுத்து (@Vairamuthu) February 18, 2024

    மேலும் படிக்க
    Rashmika Mandana: விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு: நூலிழையில் உயிர் தப்பிய ராஷ்மிகா: நடந்தது என்ன?
    Shaktimaan: அட… சக்திமானாக ரன்வீர் சிங்! கைகோர்க்கும் மின்னல் முரளி இயக்குநர்? வேற லெவல் தகவல்!
     

    மேலும் காண

    Source link

  • urdu poet gulzar prestigious jnanpith award for 2023 for his contribution

    urdu poet gulzar prestigious jnanpith award for 2023 for his contribution


    60 ஆண்டுகால திரைப்பணியில் இருக்கும் உருது கவிஞர் குல்சாருக்கு 2023 ஆண்டுக்கான ஞானபீட விருது அறிவிக்கப் பட்டுள்ளது.
    குல்சார்
    கவிஞர், இயக்குநர், பாடலாசிரியர் என பன்முகத் தனமைக் கொண்ட படைப்பாளி குல்சார்.  உருது மொழியில்  இவர் எழுதிய கவிதைகள் உலகம் முழுவதும் உள்ள வாசகர்களால் படிக்கப் படுகின்றன. கவிதைகள் தவிர்த்து 60 ஆண்டு காலமாக திரைப்பட பாடல்களுக்கு பாடல்கள் எழுதியும் வருகிறார். அவரது பங்களிப்பை கெளரவிக்கும் வகையில் இந்திய அரசின் உயரிய விருதான ஞானபீட விருது அவருக்கு அறிவிக்கப் பட்டுள்ளது. இது தொடர்பாக விருது குழு வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வமான அறிக்கை கூறப்பட்டுள்ளதாவது

    Congratulations #Gulzar ji for Jnanpith Award. He has written poems & lyrics for countless films in a career spanning over six decades. He is one of the most respected names not just in cinema but also in literary circles. He is considered one of the finest Urdu poets of his era. pic.twitter.com/N0ADG9Y2Rb
    — Dayanand Kamble (@dayakamPR) February 17, 2024

    “ 2023 ஆம் ஆண்டுக்கான ஞானபீட விருது சமஸ்கிருத இலக்கியவாதியான ஜகத்குரு ராமபத்ராச்சார்யா மற்றும் உருது கவிஞர் குலசாருக்கு வழங்கப்பட முடிவு செய்யப்பட்டுள்ளது. தனது தனித்துவமான திறமையால் இலக்கிய உலகின் புதிய மைல் கற்களை எட்டியவர் குல்சார். தன்னுடைய கவிதைகளின் வழியாக புதிய சாத்தியங்களை உருவாக்கியுள்ளார். மேலும் குழந்தைகளுக்கான கவிதை பரப்பிலும் தொடர்ச்சியாக அவர் இயங்கி வருவதை பாராட்டும் விதமாக அவருக்கு இந்த விருது வழங்கப் பட்ட முடிவு செய்யப் பட்டுள்ளது” என்று இந்த அறிக்கையில் குறிப்பிபடப் பட்டுள்ளது.
    குல்சார் பெற்ற விருதுகள்
    2002 ஆம் ஆண்டில் உருது மொழிக்கான சாகித்ய அகாடமி விருது , 2004 ஆம் ஆண்டு பத்மபூஷன் , 2013 ஆம் ஆண்டு தாதா சாகேப் பால்கே விருதுகளை குலசார் இதுவரை பெற்றுள்ளார். மேலும் திரைப்பட பாடல்களுக்காக ஐந்து தேசிய விருதுகளை அவர் வென்றுள்ளார்.
    ஜகத்குரு ராமபத்ராச்சார்யா

    58th Jnanpith Award gets Honour with it being conferred upon Sanskrit Scholar Jagadguru Rambhadracharya, who is founder of Tulsi Peeth in Chitrakoot. A renowned Hindu spiritual leader, educator & writer of 240+ books and texts, incl. 4 epics.Importantly, he is not a Sickular… pic.twitter.com/W0OL6lwQ8X
    — BhikuMhatre (@MumbaichaDon) February 17, 2024

    குல்சார் தவிர்த்து சமஸ்கிருத இலக்கியவாதியான ஜகத்குரு ராமபத்ராச்சார்யாவுக்கு 2023ஆம் ஆண்டுக்கான ஞானபீட விருது அறிவிக்கப்பட்டுள்ளது. துளசி பீடத்தின்  நிறுவனர் மற்றும் தலைவரான ராமபத்ராச்சார்யா ஒரு புகழ்பெற்ற ஆன்மீகத் தலைவர், கல்வியாளர். மேலும் 100க்கும் மேற்பட்ட புத்தகங்களை இவர் எழுதியுள்ளார். பிறப்பில் இருந்தே பார்வையற்றவரான ராமபத்ராச்சார்யா சமஸ்கிருதம் மற்றும் இந்து வேத நூல்களில் புலமை பெற்றவர்.

    மேலும் காண

    Source link

  • Rashmika Mandanna Escaped Death Post As Flight Hit By Technical issues lal salam collection cinema headlines | Cinema Headlines:நூலிழையில் உயிர் தப்பிய ராஷ்மிகா; வசூலில் சொதப்பிய லால் சலாம்

    Rashmika Mandanna Escaped Death Post As Flight Hit By Technical issues lal salam collection cinema headlines | Cinema Headlines:நூலிழையில் உயிர் தப்பிய ராஷ்மிகா; வசூலில் சொதப்பிய லால் சலாம்


    Aishwarya Shankar: இயக்குநர் ஷங்கர் மகளுக்கு உதவி இயக்குநருடன் இரண்டாவது திருமணம்: வாழ்த்திய தங்கை அதிதி!
    இயக்குனர் ஷங்கரின் இரண்டாவது மகள் ஐஸ்வர்யா ஷங்கர்  மற்றும் ஷங்கரின் உதவி இயக்குநர் தருண் கார்த்திகேயனுக்கும் திருமணம் நிச்சயிக்கப் பட்டுள்ளது. இந்தத் தகவலை நடிகை அதிதி ஷங்கர் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார். விரைவில் இவர்களின் திருமணம் குறித்த தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.மேலும் படிக்க
    Kamala Cinemas: மீண்டும் போட்டி போட்டுக்கொண்டு களமிறங்கும் ரீரிலீஸ்! எப்போ யாரு படங்கள்?
    வரும் பிப்ரவரி 22ஆம் தேதி அண்ணாமலை திரைப்படம் கமலா திரையரங்கில் வெளியாகிறது. தொடர்ந்து ரஜினி நடித்த மன்னன் படமும் வெளியாக இருக்கிறது. மேலும் இதே தேதியில் விஜய்யின் திருமலை படமும் திரையிடப்படுகிறது. 
    இப்படங்கள் தவிர்த்து விஜய்  நடித்த காதலுக்கு மரியாதை மற்றும் அஜித் குமார் நடித்த வாலி படமும் வரும் 23ஆம் தேதி வெளியாக இருக்கின்றன. ஹரி இயக்கத்தில் சீயான் விக்ரம் நடித்து கடந்த 2003ஆம் ஆண்டு வெளியான சாமி படம் வரும் பிப்ரவரி 29 ஆம் தேதி வெளியாகிறது. மேலும் படிக்க
    One 2 One: வெளியானது சுந்தர் சி நடித்த ஒன் டூ ஒன் படத்தின் சிங்கம் சிறுத்தை பாடல் லிரிக்ஸ் வீடியோ!
    இயக்குநர் திருஞானம் இயக்கத்தில் சுந்தர் சி அனுராக் கஷ்யப் நடித்துள்ள படம் One 2 One. இருவேறு குணங்கள் கொண்ட கதாபாத்திரங்கள் நேருக்கு நேர் மோதிக் கொள்ளும் படமாக one to one படம் உருவாகி இருக்கிறது. தற்போது இந்த படத்தில் இருந்து சிங்கம் சிறுத்தை என்கிற லிரிக்கல் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த வீடியோ நடிகர் விஜய் சேதுபதியின் குரலில் அமைந்துள்ளது.மேலும் படிக்க
    Lal Salaam Box Office: வசூலில் சொதப்பிய ரஜினியின் லால் சலாம்! 9 நாள் பாக்ஸ் ஆபிஸ் கலெக்‌ஷன் என்ன?
    லால் சலாம் படம் முதல் நாளில் இந்தியளவில் 3.55 கோடியும் இரண்டாவது நாளாக 3.25 மற்றும் மூன்றாவது நாளாக 3.15 கோடியும் வசூல் செய்தது.  இதனைத் தொடர்ந்து அடுத்தடுத்த நாட்களில் படத்தின் வசூல் குறையத் தொடங்கியது. நான்காவது நாளாக 1.13 கோடிகளாக குறைந்த படத்தின் வசூல் அடுத்தடுத்த நாட்களில் சரிவை நோக்கிச் சென்றுள்ளது. மேலும் படிக்க
    Rashmika Mandana: விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு: நூலிழையில் உயிர் தப்பிய ராஷ்மிகா: நடந்தது என்ன?
    மும்பையில் இருந்து ஹைதராபாத்துக்கு விஸ்தாரா நிறுவன விமானத்தில் ராஷ்மிகா மந்தனா புறப்பட்டார். ராஷ்மிகாவுடன் நடிகை ஷ்ரத்தா தாசும் பயணித்ததாகக் கூறப்படுகிறது. இந்த விமானம் மும்பை விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டு நடுவானில் பறந்து கொண்டிருந்த போது,  திடீரென்று தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டுள்ளது. அப்போது உயிர் தப்பித்தது எப்படி? என்பது குறித்து இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் பதிவிட்டுள்ளார்.மேலும் படிக்க
     

    மேலும் காண

    Source link