Tag: சரவண விக்ரம்

  • Pandian stores bigg boss 7 fame saravana vickram latest photos in social media has shocked his fans

    Pandian stores bigg boss 7 fame saravana vickram latest photos in social media has shocked his fans


    சினிமா, தொலைக்காட்சி மட்டுமே பொழுதுபோக்கு அம்சமாக இருந்த நிலை மாறி, ட்விட்டர், யூடியூப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் என மக்களை எந்த நேரமும் போனும் கையுமாக சுற்றவைத்துள்ளது இன்றைய டெக்னாலஜி. அதிலும் யூடியூப் மூலம் இப்போது சாமானிய மக்களும் சம்பாதிக்கும் அளவுக்கு முன்னேறியுள்ளனர்.
    அப்படி யூடியூப், டிக் டாக் மூலம் பிரபலமான பலரும் சின்னத்திரை, வெள்ளித்திரை என கலக்கி வருகிறார்கள். அந்த வகையில் ஒரு யூடியூபராக இருந்து சின்னத்திரையில் வாய்ப்பு பெற்று இன்று ஒரு பிரபலமான செலிபிரிட்டியாக இருப்பவர் சரவண விக்ரம். 
     

    யூடியூப் மூலம் பிளாகிங், சமையல் மற்றும் டிராவல் வீடியோக்களைப் பகிர்ந்து வந்த சரவண விக்ரமுக்கு ஏராளமான சப்ஸ்க்ரைபர்கள் உள்ளனர்.  விஜய் டிவியின் மிகவும் பிரபலமான தொடரான ‘பாண்டியன் ஸ்டோர்ஸ்’ சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதன் மூலம் பாண்டியன் ஸ்டோர்ஸ் அண்ணன் – தம்பிகளில் கடைக்குட்டி தம்பி கண்ணனாக சரவண விக்ரம் சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்தார்.
    அந்த சீரியல் மூலம் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலமானார். அவரின் நடிப்புத் திறமையை நிரூபிக்கும் வகையில் அவரை மையப்படுத்தி கதைக்களத்தில் சில போர்ஷன் அமைக்கப்பட்டு இருந்தது. பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் தன்னுடைய ரீல் ஜோடியான விஜே தீபிகாவுடன் இணைந்து ஏராளமான ரீல்ஸ் எல்லாம் போஸ்ட் செய்து இருந்தார். சரவண விக்ரமுக்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நல்ல ஒரு டர்னிங் பாயிண்டாக அமைந்தது.  
     

    அதைத் தொடர்ந்து “பிக்பாஸ் சீசன் 7” நிகழ்ச்சியில் ஒரு போட்டியாளராக என்ட்ரி கொடுக்க வாய்ப்பு கிடைத்தது. அங்கும் ஏராளமான ஏச்சுகளுக்கும் பேச்சுகளுக்கும் ஆளானார். அதிகமாக மிக்சர், காமெடி பீஸ், டைட்டில் வின்னர் விக்ரம்  என்றெல்லாம் ட்ரோல் செய்யபட்டார்.
    பல விமர்சனங்களை எதிர்கொண்டாலும் 84 நாட்கள் வரை பிக்பாஸ் வீட்டில் தாக்குப்பிடித்தார். பிக் பாஸ் வீட்டில் இருந்து வெளியேறிய பிறகு சோசியல் மீடியாவில் பெரிய அளவில் தலைகாட்டாமல் இருந்த சரவண விக்ரம் தற்போது ஒரு சில புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். அதைப் பார்த்த ரசிகர்கள் சரவண விக்ரமுக்கு என்ன ஆச்சு ஏன் இப்படி இருக்கார் என கேள்வி எழுப்பி வருகிறார்கள். 
     

    தலை நிறைய முடியும் தாடியுமாக பார்க்கவே மிகவும் வித்தியாசமாக, ஆள் அடையாளமே தெரியாத அளவுக்கு மாறி போய் இருக்கிறார் சரவண விக்ரம். சமீபத்தில் தனக்கு மிகவும் பிடித்தமான நடிப்புத்தொழில் இருந்தும் விலகுவதாகத் தெரிவித்து பின்னர் அவரே அதை டெலீட் செய்தார்.
    இப்படி அவர் போட்டோஸ் போஸ்ட் செய்ய என்ன காரணம்? உண்மையிலேயே அவர் இனி நடிக்க மாட்டாரா என ரசிகர்கள் அவரின் பதிலுக்காக காத்திருக்கிறார்கள். 

    மேலும் காண

    Source link

  • Biggboss 7 Tamil Fame Saravana Vickram Said I Quit My Passion | Saravana Vickram: நடிப்பை விட்டு விலகும் பிக்பாஸ் சரவண விக்ரம்?

    Biggboss 7 Tamil Fame Saravana Vickram Said I Quit My Passion | Saravana Vickram: நடிப்பை விட்டு விலகும் பிக்பாஸ் சரவண விக்ரம்?

    பிரபல சின்னத்திரை நடிகர் சரவணன் விக்ரம் தான்  நடிப்பு தொழிலில் இருந்து விலகுவதை குறிக்கும் வகையில் பதிவு ஒன்று வெளியிட்டுள்ளது ரசிகர்களுடைய பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 
    தேனியை சேர்ந்த சரவணன் விக்ரம் கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் 2023 ஆம் ஆண்டு வரை விஜய் டிவியில் ஒளிபரப்பான பாண்டியன் ஸ்டோர் சீரியலில் கண்ணன் என்ற கதாபாத்திரத்தில் நடித்த ரசிகர்களிடம் மிகப்பெரிய அளவில் பிரபலமானார். ஒரு யூட்யூபர் ஆக தனது வாழ்க்கையை தொடங்கிய அவர் சமையல் மற்றும் பயணம் செய்யும் வீடியோக்களை பதிவு செய்து வந்தார். இந்த நிலையில் தான் சீரியலில் களமிறங்கி மேலும் பிரபலமானார் சரவண விக்ரம். அது மட்டுமல்லாமல் விஜய் டிவியில் ஒளிபரப்பான ரியாலிட்டி ஷோவான ஸ்டார்ட் மியூசிக் சீசன் 4 இல் பங்கேற்று ஜெயித்தார். 
    மேலும் கடந்த ஆண்டு நடைபெற்ற விஜய் சின்னத்திரை விருதுகள் விழாவில் சிறந்த துணை நடிகர் என்ற விருதை பாண்டியன் ஸ்டோர் சீரியலுக்காக சரண விக்ரம் பெற்றிருந்தார். இதற்கிடையில் தான் சமீபத்தில் நடந்து முடிந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் சீசன் 7ல் 23 போட்டியாளர்களில் ஒருவராக சரவண விக்ரம் கலந்து கொண்டு இருந்தார். ஆரம்பம் முதல் அந்த வீட்டில் அமைதியான மனிதராக வலம் வந்த அவர், தன்னுடைய கேமை விளையாடாமல் சக போட்டியாளர்களுக்கு சப்போர்ட் செய்வதை வேலையாக கொண்டிருந்ததாக மிகப்பெரிய குற்றச்சாட்டு எழுந்தது.

    If it’s the passion that we saw in Bigg Boss, then it needs to be quit for sure 😜#BiggBossTamil #biggbosstamil7 #SaravanaVickram #Vickram pic.twitter.com/7H1hUpkQC8
    — Bad Boss (@StoryTimeWithK) January 20, 2024

    இதனைத் தொடர்ந்து கடந்த நவம்பர் 17ஆம் தேதி சரண விக்ரமின் தங்கை சூர்யா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருந்தார் அதில் ஒரு மணி நேர எபிசோடு வைத்து என் அண்ணனை தவறாக நினைக்க வேண்டாம் என தெரிவித்திருந்தார். அதே சமயம் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற சரவண விக்ரம் தான் டைட்டில் வின்னர் என தனக்குத்தானே சொல்லிக் கொண்ட வீடியோக்களும் இணையத்தில் கடும் கேலி கிண்டலுக்கு உள்ளானது.
    84 நாட்கள் வரை பிக் பாஸ் வீட்டில் இருந்த சரவணன் விக்ரம் அதன்பின் வெளியேற்றப்பட்டார். இருந்தாலும் கடைசி வாரத்தில் போட்டியாளர்களை உற்சாகப்படுத்தும் வகையில் மீண்டும் உள்ளே நுழைந்தார். இந்த நிகழ்ச்சியில் இருந்து வெளியேறும் வரை ஒருவித குழப்பத்திலேயே சரவண விக்ரம் இருந்ததாகவும் எந்தவித டாஸ்கிலும் பெரும் ஆர்வம் கொண்டு பங்கேற்கவில்லை எனவும் அவரது ரசிகர்கள் கவலைப்பட்டுக் கொண்டனர். 
    இப்படியான நிலையில்தான் சரணம் விக்ரம் தனது instagram பக்கத்தில் “I Quit My Passion” என்ற பதிவு ஒன்றை வெளியிட்டு அதனை நீக்கியுள்ளார். . மேலும் அதில் எல்லோருக்கும் நன்றி என்ற கேப்டனும் இடம் பெற்றிருந்தது. இதனால் தனது கனவான நடிப்பை விட்டு விட்டாரா என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால் இது குறித்த உண்மையை சரவண விக்ரம் தெரிவித்தால் மட்டுமே என்ன நடந்தது என்பதை வெளி உலகத்திற்கு தெரிய வரும். 

    Source link

  • Bigg Boss Season 7 Tamil Saravana Vikram Sister Surya Slams Maya And Her Brother Ralationship

    Bigg Boss Season 7 Tamil Saravana Vikram Sister Surya Slams Maya And Her Brother Ralationship

    Bigg Boss 7 Tamil Vikram: மாயாவிடம் மீண்டும் பேசும் சரவண விக்ரம் தவறான பாதைக்கு செல்வதாக அவரது தங்கை காட்டமாக சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். 
     

    விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு அதிக ரசிகர்கள் இருக்கும் நிலையில், கடந்த அக்டோபர் மாதம் தொடங்கிய பிக்பாஸ் சீசன் 7 இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. பிக்பாஸ் டைட்டில் பட்டத்தை வெல்லும் ரேஸில் மாயா, அர்ச்சனா, தினேஷ், மணிச்சந்திரா, மற்றும் டிக்கெட் டூ ஃபினாலே வென்று பைனலுக்கு நேரடியாக சென்று விஷ்ணு விஜய் உள்ளனர். 
     
    ஓரிரு நாட்களில் பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவுக்கு வர உள்ள நிலையில், பிக்பாஸ் வீட்டில் இருந்து கடந்த வாரங்களில் வெளியேறிய போட்டியாளர்கள் மீண்டும் ரீ- என்ட்ரி கொடுத்து நிகழ்ச்சியின் சுவாரசியத்தை அதிகரித்துள்ளனர். அந்த வகையில் பிக்பாஸ் வீட்டிற்கு மீண்டும் வந்துள்ள சரவண விக்ரம், மாயாவிடம் சென்று மன்னிப்பு கேட்டு அவரிடம் சரண்டராகியுள்ளார். மேலும், சரவண விக்ரமின் தங்கை பேசியது தனக்கு சுத்தமாக பிடிக்கவில்லை என்று மாயா கூறியபோது, ” நாம் பழகியது நமக்கு தானே தெரியும்” என சரவண விக்ரம் பதில் கூறியுள்ளார். 
     
    இது சரவண விக்ரமின் குடும்பத்தாரை எரிச்சலடைய செய்துள்ளது. இந்த நிலையில், மாயாவிடம் மீண்டும் சரவண விக்ரம் பேசியது குறித்து அவரது தங்கை சூர்யா இன்ஸ்டகிராமில் பதிவு செய்துள்ளார். அதில், “உங்களுடைய குடும்பத்தை விட நீங்கள் வேறொருவருக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்தார், நீங்கள் தவறான பாதையில் செல்கிறீர்கள் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்” எனப் பதிவிட்டுள்ளார். 
     
    முன்னதாக ஃப்ரீஸ் டாஸ்கில் பிக்பாஸ் வீட்டிற்குள் வந்த சரவண விக்ரமின் குடும்பத்தார், அவர் சரியான வழியில் இல்லை என்றும், யாரையும் நம்ப வேண்டாம் என்றும் கூறினர். குறிப்பாக மாயாவை பங்கமாக பேசிய சரவண விக்ரமினி தங்கை சூர்யா, மாயாவிடம் இருந்து தனது அண்ணன் ஒதுங்கி இருக்க வேண்டும் எனக் கூறிச் சென்றார். அடுத்த வாரத்தில் சரவண விக்ரம் வெளியேறினார். அப்போது, மாயா சரவண விக்ரமிடம் சரியாக பேசாமல் அவரை புறக்கணித்தது பிக்பாஸில் சர்ச்சையானது.  இந்த நிலையில் மீண்டும் பிக்பாஸ் வீட்டிற்குள் சென்ற சரவண விக்ரம் மீண்டும் மாயா பக்கம் சென்றுள்ளார். 
     

     

    Source link