Tag: சத்யபிரதா சாகு

  • Sathya Pratha Sahoo: இப்தார் நோன்பில் பங்கேற்கலாம்; ஆனால் வாக்கு சேகரிக்க கூடாது

    Sathya Pratha Sahoo: இப்தார் நோன்பில் பங்கேற்கலாம்; ஆனால் வாக்கு சேகரிக்க கூடாது


    85 வயதான முதியவர்களிடம் வீட்டுக்கே சென்று தபால் வாக்குகள் பெறப்படும் என தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார். 

    மக்களவை தேர்தல்:
    தமிழ்நாட்டில் மக்களவை தேர்தல் நடைபெறும் தேதி ஏப்ரல் 19 ஆம் தேதி என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்நிலையில் தேர்தல் நடத்தை விதிமுறைகளும் அமலுக்கு வந்தது.
    நாடாளுமன்றத்தின் 18வது மக்களவை தேர்தலானது வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி ஜூன் தேதிவரை 7 கட்டங்களாக நடைபெறுகிறது. இந்நிலையில், தமிழ்நாட்டில் மக்களவை தேர்தலானது முதல்கட்டமாக ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 6.19 கோடி வாக்காளர்கள் உள்ளனர். வாக்காளர்கள் வாக்களிப்பதற்கு ஏற்ப 68,144 வாக்குச்சாவடிகள் உள்ளன.
    இந்நிலையில், தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு  செய்தியாளர்களை சந்தித்தார்.

    அப்போது பேசிய அவர், நாடு முழுவதும் உள்ள சூழ்நிலையை கருத்தில் கொண்டு தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது. 18 வயது நிரம்பியவர்கள், வாக்காளர் பட்டியலில் தங்களது பெயரை சேர்த்துக் கொள்ளலாம். அதர்கு நாளைதான் கடைசி நாள்.

    இப்தார் நோன்பில் அரசியல் கட்சி தலைவர்கள் பங்கேற்கலாம்; ஆனால் வாக்கு சேகரிக்க கூடாது. 
    பொன்முடி அமைச்சராவாரா என்பது குறித்தான கேள்விக்கு, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருப்பதால், இதுகுறித்து இந்திய தேர்தல் ஆணையம்தான் முடிவு செய்யும் என தெரிவித்தார்.
    தமிழ்நாட்டில் தேர்தல் ( ஏப்.19 ) முடிந்து, 45 நாட்களுக்கு பிறகு வாக்கு எண்ணிக்கையானது ( ஜூன்.4 ) நடைபெறும் என குறிப்பிடத்தக்கது.
    Also Read: TN Lok Sabha Election 2024 Date: மக்களவை தேர்தல் தேதி அறிவிப்பு: தமிழ்நாட்டில் ஏப்ரல் 19; வாக்கு எண்ணிக்கை ஜூன் 4
     

    Source link

  • TN Voter List: தமிழ்நாட்டில் மொத்தம் 6.18 கோடி வாக்காளர்கள்.. இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு..

    TN Voter List: தமிழ்நாட்டில் மொத்தம் 6.18 கோடி வாக்காளர்கள்.. இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு..


    <p>தமிழ்நாட்டில் இறுதி வாக்காளர் பட்டியலை தமிழ்நாடு&nbsp; தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு வெளியிட்டுள்ளார்.&nbsp;</p>
    <p>இன்னும் சில மாதங்களில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான ஆயத்த பணிகள் நடைபெற்று வருகிறது. முக்கியமாக வாக்காளர் பட்டியல் பணிகள் தேர்தல் ஆணையம் தரப்பில் மேற்கொள்ளப்பட்டது. இதற்காக சிறப்பு முகாம்களும் நடத்தப்பட்டது. இந்திய தேர்தல் ஆணைய அறிவுறுத்தல்படி, ஆண்டுதோறும் &lsquo;சிறப்பு சுருக்கமுறை திருத்தம்&rsquo; எனப்படும், வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் செப்டம்பர் அல்லது அக்டோபரில் நடைபெறும். இதைத் தொடர்ந்து, ஜனவரியில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். ஜனவரி 1-ம் தேதியை தகுதி நாளாக கொண்டு, 18 வயது நிரம்பியவர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படுவார்கள். &nbsp;அந்த வகையில் இந்த ஆண்டுக்கான வாக்காளர் பட்டியல் திருத்த பணிகள் அக்டோபர் மாதம் மேற்கொள்ளப்பட்டது. அன்று வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.&nbsp;</p>
    <p style="text-align: left;">வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்கம் செய்ய, முகவரி மாற்றம் மற்றும் திருத்தம் செய்வதற்கான மனுக்கள் அன்று முதல் பெறப்பட்டன. டிசம்பர் 9 ஆம் தேதி வரை வாக்காளர் பட்டியல் திருத்த பணிகளுக்கான விண்ணப்பங்கள் நேரடியாகவும், ஆன்லைன் வாயிலாகவும் பெறப்பட்டன. இந்த மனுக்கள் பரிசீலிக்கப்பட்டு, இறுதி வாக்காளர் பட்டியல் தயாரிப்பு பணி நடைபெற்றது. முதலில் ஜனவரி 5 ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படுவதாக இருந்தது. ஆனால் தென் மாவட்டங்கள் மற்றும் சென்னையில் வெள்ள பாதிப்பு ஏற்பட்டதால இது தாமதமாகின. அதன்படி இன்று இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.&nbsp;</p>
    <p style="text-align: left;">தமிழ்நாட்டில் மொத்த வாக்காளர்களின் எண்ணிக்கை &nbsp;6,18,9,0348 ஆகும். அதில் ஆண்கள் – 3,03,96,330, பெண்கள் – 3,14,85,724, மூன்றாம் பாலினம் – 8,294 பேர் உள்ளனர். அதிகபட்சமாக சோழிங்கநல்லூர் சட்டப்பேரவை தொகுதியில் &nbsp;6,60,419 பேரும், கேவை மாவட்டம் கவுண்டம்பாளையம் சட்டப்பேரவை தொகுதியில் 4,62,612 பேரும் அடங்குவர். குறைந்தபட்ச வாக்காளர்கள் நாகை மாவட்டம் கீழ்வேளூர் – 1,72,140 உள்ளனர். அதனை தொடர்ந்து சென்னை துறைமுகம் 1,72,624 ஆகும். வெளிநாட்டில் இருக்கும் தமிழ்நாடு வாக்காளர்களின் எண்ணிக்கை 3480 பேர் ஆகும். மாற்று திறனாளிகள் 4,32,805 பேர் உள்ளனர். இதனை தமிழ்நாடு தேர்தல் ஆணையம் இன்று வெளியிட்டது.&nbsp;</p>

    Source link