Tag: கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்

  • tn govt mtc bus app new facility pay rs40 to go anywhere from Kilambakkam

    tn govt mtc bus app new facility pay rs40 to go anywhere from Kilambakkam


    Kilambakkam Bus Stand: கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் இருந்து பிற இடங்களுக்கும், பிற இடங்களில் இருந்து கிளாம்பாக்கத்திற்கும் மாநகர் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் 4 மணி நேரத்திற்குள் பயணம் செய்யும் திட்டத்தை அமைச்சர் சிவசங்கர் தொடங்கி வைத்தார்.
    கிளாம்பாக்கத்தில் புதிய சேவை:
    இதுதொடர்பாக அரசு தரப்பில் வெளியாகியுள்ள அறிக்கையில், “டாக்டர் கலைஞரின் நூற்றாண்டு விழாவினை முன்னிட்டு, தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினின் உத்தரவுக்கிணங்க, போக்குவரத்துத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் , இன்று (29.02.2024)  தலைமைச் செயலகத்தில், மாநகர் போக்குவரத்துக் கழக பணியாளர்களுக்கான மொபைல் செயலி மற்றும் அரசு விரைவு போக்குவரத்துக் கழக பேருந்தில் முன்பதிவு செய்யும் பயணிகள் ரூ.40/- கூடுதலாக செலுத்தி கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் இருந்து பிற இடங்களுக்கும், பிற இடங்களில் இருந்து கிளாம்பாக்கத்திற்கும் மாநகர் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் 4 மணி நேரத்திற்குள் பயணம் செய்யும் திட்டத்தினை தொடங்கி வைத்தார்.

    மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு.எஸ்.எஸ். சிவசங்கர் அவர்கள் மாநகர் போக்குவரத்துக் கழக பணியாளர்களுக்கான மொபைல் செயலி மற்றும் அரசு விரைவு போக்குவரத்துக் கழக பேருந்தில் முன்பதிவு செய்யும் பயணிகள் 40 ரூபாய் கூடுதலாக செலுத்தி கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து 1/2 pic.twitter.com/4xizJllLI7
    — TN DIPR (@TNDIPRNEWS) February 29, 2024

    திட்டத்தின் விவரங்கள்:
    மாநகர் போக்குவரத்து கழக பணியாளர்களுக்கான செயலியின் வாயிலாக நிர்வாகத்தின் மூலமாக வெளியிடப்படும் சுற்றறிக்கைகள் மற்றும் பல்வேறு செய்திகளை பணியாளர்கள் அறிந்து கொள்ளவும், பணியாளர்கள் விடுப்பு எடுத்திட விண்ணப்பித்திடவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது.
    மேலும், அரசு விரைவு போக்குவரத்துக் கழகப் பேருந்துகளில் முன்பதிவு செய்யும் பயணிகள் ரூ.40/- கூடுதலாக கட்டணம் செலுத்தும் பட்சத்தில், கால விரையமின்றி, கிளாம்பாக்கத்தில் இருந்து சென்னையின் பல்வேறு இடங்களுக்கும்,  சென்னையின் பல்வேறு இடங்களில் இருந்து கிளாம்பாக்கத்திற்கும், 4 மணி நேரத்திற்குள் 2, 3 மாநகர் போக்குவரத்து கழக பேருந்துகளில் பயணம் செய்து தாங்கள் செல்லும் இடத்தை விரைவாக அடையும் வகையில் இத்திட்டம் 01.03.2024 முதல் செயல்படுத்தப்பட உள்ளது.
    இவ்விழாவின் போது, மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆங்பி ஜான் வர்கீஸ் அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் இரா. மோகன், மாபோக இணை மேலாண் இயக்குநர் குணசேகரன் மற்றும் உயர் அலுவலர்கள் உடன் இருந்தனர்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    அண்மையில் திறந்து வைக்கப்பட்ட கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பல்வேறு குறைபாடுகள் இருப்பதாக, தொடர்ந்து குற்றச்சாட்டுகள் வெளியாகி வருகின்றன. எதிர்க்கட்சிகளும் இதை கடுமையாக சாடி வருகின்றன. இந்நிலையில், பயணிகளை ஊக்குவிக்கும் விதமாக இந்த புதிய சலுகை பயணம் அறிவிக்கப்பட்டுள்ளதாக கருதப்படுகிறது.

    மேலும் காண

    Source link

  • Photographs of an sky walk bridge that could connect the kilambakkam bus station to the railway station have been released

    Photographs of an sky walk bridge that could connect the kilambakkam bus station to the railway station have been released


    kilambakkam sky walk bridge கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தையும் ரயில்வே நிலையத்தை இணைக்கக்கூடிய ஆகாய நடைமேடை தொடர்பான புகைப்படங்கள் வெளியாகியுள்ளன
    கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் ( kilambakkam bus stand )
    சென்னையில் இருந்து அனைத்து பகுதிகளுக்கும், கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து, பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டும் அதிகரிக்கும் மக்கள் தொகை கருத்தில் கொண்டும் சென்னை புறநகர் பகுதியாக இருக்கக்கூடிய, கிளாம்பாக்கம் பகுதியில்  சுமார் 400 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் கட்டி முடிக்கப்பட்டு  பயன்பாட்டிற்கு வந்துள்ளது

    கிளாம்பாக்கம் ரயில் நிலையம் ( kilambakkam railway station )
    தமிழ்நாடு அரசின் நிதியில் கிளாம்பாக்கம் ரயில் நிலையம் அமைக்கும் பணிகள் விரிவு படுத்தப்பட்டுள்ளன. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 500 மீட்டருக்கு  குறைவான தூரத்தில் கிளாம்பாக்கம் அமைக்கும் பணிகள் துவங்கப்பட்டுள்ளன. வண்டலூர் –  கூடுவாஞ்சேரி புறநகர் ரயில் நிலையங்களுக்கு இடையே கிளாம்பாக்கத்தில்  20 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த ரயில் நிலையம் அமைக்கப்பட்டு வருகிறது.

    ஆகஸ்ட் மாதம் பயன்பாட்டிற்கு கொண்டு வர திட்டம்
    கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தில் 12 பெட்டிகள் உடைய ரயில் நிற்கும் வகையில், மூன்று நடைமுறைகள் அமைக்கப்பட உள்ளன. இந்த கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தில் ரயில் நிலைய மேலாளர் அறை, ரயில்வே பாதுகாப்பு படை அலுவலகம், டிக்கெட் அலுவலகம், குடிநீர் வசதி, இருக்கை வசதி என அனைத்து வசதிகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ரயில்வே நடைமேடைகளில் சிறுசிறு கடைகளை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.  ரயில் நிலையம் ஆகஸ்ட் மாதம் பயன்பாட்டிற்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    ஆகாய நடைபாதை ( kilambakkam sky walk bridge )
     கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் – ரயில் நிலையத்தை இணைக்கும் ஆகாய நடைபாதை அமைக்க டெண்டர் கோரியது தமிழ்நாடு அரசு. நடைபாதை அமைக்கும் பணிகளை சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் மேற்கொள்ள உள்ளது. கிளாம்பாக்கம் ரயில் நிலையத்தில் இருந்து பேருந்து நிலையத்தின் மையப்பகுதிக்கு 400 மீ நீளத்தில் ஆகாய நடைபாதை அமைக்கப்பட உள்ளது. நகரும் படிக்கட்டுகள் மற்றும் மின் தூக்கி ஆகியவற்றின் கூடிய நடை மேம்பாலம் அமைய உள்ளது. 

     பயன்கள் என்ன ?
    ஆகாய நடை பாலம்அமைக்கப்பட்டால், கிளாம்பாக்கம் ரயில்   நிலையத்திலிருந்து பயணிகள்,  எளிதாக  கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு வந்தடைய முடியும். சென்னை திருச்சி தேசிய நெடுஞ்சாலைக்கு   மேல் இந்த ஆகாய  நடை பாலம்  அமைய இருப்பதால் , சாலையை ஆபத்தான முறையில் கடக்க வேண்டிய சூழ் ஏற்படாது.  இது பயணிகளுக்கு மிக பயனுள்ளதாக இருக்கும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.  மின்சார ரயில் நிலையம் பயன்பாட்டிற்கு வந்தவுடன்,  பொதுமக்கள் பெரும்பாலானோர் கிளாம்பாக்கம் வருவதற்கு மின்சார ரயில் பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
    மாதிரி புகைப்படங்கள் வெளியீடு
    தற்பொழுது அதற்கான பணிகள் நடைபெற்று வரும் நிலையில், ஆகாய நடைபாதை எப்படி இருக்கும் என்பது குறித்த புகைப்படங்கள் வெளியாகி உள்ளன. வெளியாகி உள்ள புகைப்படத்தில், ஆகாய நடை பாதை எப்படி அமைய உள்ளது என்பது குறித்த மாதிரி கட்டிட வடிவமைப்புகள் இடம் பெற்றுள்ளன. இந்த புகைப்படங்கள் தற்பொழுது இணையதளத்திலும் வேகமாக பரவி வருகின்றன.

    மேலும் காண

    Source link

  • Kilambakkam: இனி வேறு எங்கும் பயணிகளை ஏற்றி இறக்க கூடாது.. ஆம்னி பேருந்து உரிமையாளர்களுக்கு கடும் எச்சரிக்கை..

    Kilambakkam: இனி வேறு எங்கும் பயணிகளை ஏற்றி இறக்க கூடாது.. ஆம்னி பேருந்து உரிமையாளர்களுக்கு கடும் எச்சரிக்கை..


    <p>சென்னையில் இருந்து தெற்கு நோக்கி புறப்படும் பேருந்துகள் அனைத்தும் போரூர், சூரப்பட்டு அல்லது கிளாம்பாக்கத்தில் இருந்து மட்டுமே புறப்படும் என போக்குவரத்து கழகம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
    <p>இது தொடர்பாக வெளியிடப்பட்ட செய்தி குறிப்பில், &ldquo; தெற்கு நோக்கி செல்லும் அனைத்து ஆம்னி பேருந்துகளும் சென்னை புறவழிச்சாலையில் போருர் சுங்கச்சாவடி மற்றும் சூரப்பட்டு சுங்கச்சாவடி மற்றும் கிளாம்பாக்கம் பேருந்துமுனையம் ஆகிய மூன்று இடங்களை தவிர வேறு எந்த இடத்திலும் பயணிகளை ஏற்றி இறக்க கூடாது என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் 09.02.2024 தேதியிட்ட இடைக்கால உத்தரவினை எதிர்த்தும் அதனடிப்படையில் போக்குவரத்து ஆணையர் கடந்த 13.02.2024 அன்று வெளியிட்ட ஒரு விரிவான பத்திரிக்கைச் செய்தியை எதிர்த்தும், கடந்த 22.01.2024 அன்று போக்குவரத்து ஆணையர் பிறப்பித்த இரண்டு ஆணைகளை எதிர்த்தும் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த வழக்கு இன்று தள்ளுபடி செய்யப்பட்டது.</p>
    <p>இதன்படி சென்னையில் இருந்து தெற்கு நோக்கி பயணிக்கும் ஆம்னி பேருந்துகளின் உரிமையாளர்கள் எக்காரணம் கொண்டும் கீழ்க்கண்ட 3 இடங்களை தவிர வேறு எங்கும் பயணிகளை ஏற்றி இறக்க கூடாது என அறிவிக்கப்படுகிறது.</p>
    <ol>
    <li>சென்னை புறவழிச்சாலையில் போருர் சுங்கச்சாவடி</li>
    <li>சென்னை புறவழிச்சாலையில் சூரப்பட்டு சுங்கச்சாவடி</li>
    <li>கிளாம்பாக்கம் பேருந்து முனையம்</li>
    </ol>
    <p>மேற்கண்ட 3 இடங்களை தவிர தெற்கு நோக்கி செல்லும் ஆம்னி பேருந்துகள் வேறு எங்கும் பயணிகளை ஏற்றி இறக்குவதற்கு அனுமதி இல்லை என்பது உச்சநீதிமன்ற தீர்ப்பினால் உறுதி செய்யப்பட்டுள்ளது.</p>
    <p>இதனை மீறி மேற்கூறிய 3 இடங்களை தவிர வேறு இடங்களில் தெற்கு நோக்கி செல்லும் ஆம்னி பேருந்துகள் பயணிகளை ஏற்றி இறக்குவது கண்டறியப்பட்டால் தொடர்புடைய ஆம்னி பேருந்துகளின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவது மட்டுமல்லாமல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் தொடரப்படும் என எச்சரிக்கப்படுகிறது.</p>
    <p>உச்சநீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையிலும் சென்னை உயர்நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவின் அடிப்படையிலும் சென்னையில் இருந்து தெற்கு நோக்கி செல்லும் ஆம்னி பேருந்துகள் எக்காரணம் கொண்டும் மேற்கூறிய 3 இடங்களை தவிர வேறு இடங்களை தங்களது பயணச்சீட்டு முன்பதிவு மென்பொருளிலும், Red Bus, Abhi Bus உள்ளிட்ட செயலிகளிலும் பொதுமக்களை குழப்பும் வகையில் பதிவிடக்கூடாது எனவும் அவ்வாறு பதிவு செய்தால் தொடர்புடைய ஆம்னி பேருந்துகளின் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படுவது மட்டுமல்லாமல் நீதிமன்ற அவமதிப்பு வழக்கும் எச்சரிக்கப்படுகிறது.</p>
    <p>இதனை மீறி செயல்படும் ஆம்னி பேருந்து உரிமையாளர்களால் பொதுமக்களுக்கு ஏற்படும் சிரமங்களுக்கு ஆம்னி பேருந்து உரிமையாளர்களே முழு பொறுப்பு ஏற்க நேரிடும் எனவும் எச்சரிக்கப்படுகிறது.</p>
    <p>இதன்மூலம் கடந்த 22.01.2024 அன்று போக்குவரத்து ஆணையர் பிறப்பித்த இரு உத்தரவுகளும், சென்னை உயர்நீதிமன்றத்தின் 09.02.2024 தேதியிட்ட இடைக்கால உத்தரவும் மற்றும் போக்குவரத்து ஆணையரால் 13.02.2024 அன்று வெளியிடப்பட்ட பத்திரிக்கைச் செய்தியும் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பால் உறுதி படுத்தப்பட்டுள்ளன&rdquo; என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
    <p>&nbsp;</p>

    Source link

  • Tamil Nadu government has advised Omni bus owners to avoid picking up and dropping passengers at city | Omni Buses: “சென்னையில் இனி 2 இடத்தில்தான் ஆம்னி பேருந்தில் ஏற முடியும்”

    Tamil Nadu government has advised Omni bus owners to avoid picking up and dropping passengers at city | Omni Buses: “சென்னையில் இனி 2 இடத்தில்தான் ஆம்னி பேருந்தில் ஏற முடியும்”


    பணிமனைகளில் பயணிகளை ஏற்றி இறக்குவதை தவிர்க்க வேண்டும் என்று ஆம்னி பேருந்து உரிமையாளர்களுக்கு தமிழ்நாடு அரசு அறிவுறுத்தியுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு  அரசு வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், ”கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து முனையம் பயணிகளின் முழு பயன்பாட்டிற்குக் கொண்டு வந்த பின்னர் அதனை எதிர்த்து ஒரு சில ஆம்னி பேருந்துகளின் உரிமையாளர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் பல நீதிப் பேராணை மனுக்களை தாக்கல் செய்தனர். 
    ”சென்னைக்குள் 2 இடத்தில்தான் அனுமதி”
    மேற்படி வழக்குகளை விசாரித்த மாண்பமை சென்னை உயர் நீதிமன்றம் கடந்த 09.02.2024 அன்று ஒரு இடைக்கால உத்தரவினைப் பிறப்பித்துள்ளது.  அதன்படி மாண்பமை சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால ஏற்பாடாக வழக்கு தொடுத்த ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சென்னை புறவழிச்சாலையில் உள்ள போரூர் சுங்கச்சாவடி மற்றும் சூரப்பட்டு சுங்கச்சாவடி ஆகிய இரு இடங்களில் மட்டும் பயணிகளை ஏற்றி இறக்குவதற்கு அனுமதித்து உத்தரவிட்டுள்ளது. 
    ஆனால் சென்னை உயர் நீதிமன்றம் தனது இடைக்கால உத்தரவில் பத்தி எண் 16-ல் சென்னை மாநகருக்குள் உள்ள ஆம்னி பேருந்துகளின் பணிமனைகளுக்கு வாகனங்களைக் கொண்டு வருவது குறித்து  குறிப்பிட்டுள்ளதை ஒரு சில ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் தவறாகப் புரிந்துக்கொண்டு அந்தப் பணிமனைகள் அமைந்துள்ள இடங்களிலும் பயணிகளை ஏற்றி இறக்கலாம் என தவறான ஒரு கருத்து உருவாக்கத்தை அனைத்து ஊடகங்கள் வாயிலாக பொது மக்களிடையே தவறான செய்திகளை பரப்பி வருவது குறித்து இந்த துறையின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.
    இவ்வாறு பணிமனைகள் அமைந்துள்ள இடங்களில் பொதுமக்களை ஏற்றி இறக்குவதற்கு உயர் நீதிமன்றம் எந்த உத்தரவையும் வழங்கவில்லை.  எனவே இதனை தவறான கண்ணோட்டத்துடன், தங்களது லாபத்தை மட்டுமே கருத்தில் கொண்டு இயங்கும் ஆம்னி பேருந்துகளின் மீது மோட்டார் வாகன சட்டம் மற்றும் விதிகளின்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கப்படுகிறது.
    ”பணிமனைகளில் பயணிகளை ஏற்றி இறக்குவதை தவிர்த்திடுக”
    அது மட்டுமல்லாமல் அவ்வாறு செய்வது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கைக்கு உள்ளாகும் செயல் எனவும் தெளிவுப்படுத்தப்படுகிறது. சென்னை உயர் நீதிமன்றம் தனது இடைக்கால உத்தரவில் தெரிவித்துள்ளவாறு சென்னை புறவழிச்சாலையில் அமைந்துள்ள போரூர் மற்றும் சூரப்பட்டு சுங்கச்சாவடிகள் மட்டுமே பயணிகளை ஏற்றி இறக்கும் இடங்களாக தங்களது பேருந்து பயணச்சீட்டு முன் பதிவு செய்யும் செயலிகளில் குறிப்பிட பட வேண்டும் எனவும் பிற இடங்களை குறிப்பிடக் கூடாது எனவும் தெரிவித்துள்ளது. 
    ஒரு சில ஆம்னி பேருந்து உரிமையாளர்களின் இந்த தவறான புரிதலின் காரணமாக பொது மக்களிடையே தேயைற்ற குழப்பத்தினை ஏற்படுத்துவதை அனுமதிக்க முடியாது. எனவே, சென்னை உயர் நீதிமன்றத்தின் இடைக்கால உத்தரவின் அடிப்படையில் பயணிகளும் ஆம்னி பேருந்து உரிமையாளர்களும் ஆம்னி பேருந்து பணிமனைகளில் பயணிகளை ஏற்றி இறக்குவதை தவிர்க்குமாறும் கேட்டுகொள்ளப்படுகிறது.
    அதனை மீறுவதால் பயணிகளுக்கு தேவையற்ற சிரமங்கள் ஏற்படும் என்பதையும் மேலும் அத்தகைய நடவடிக்கை ஒருங்கிணைந்த பேருந்து முனையத்தை கிளாம்பாக்கத்தில் பயன்பாட்டிற்கு கொண்டு வந்ததை கேள்விக்குறியாக்கும் செயல் ஆகும் எனவும் தெரிவித்துக்கொள்ளப்படுகிறது. மேலும் பணிமனைகளை ஒருபோதும் பயணிகளை ஏற்றி இறக்கும் இடங்களாகவோ அல்லது பேருந்து நிலையமாகவோ பயன்படுத்த இயலாது” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

    மேலும் காண

    Source link

  • cm mk stalin replied to edappadi palanisamy on kilambakkam bus stand issue

    cm mk stalin replied to edappadi palanisamy on kilambakkam bus stand issue


    பெரிய பிரச்சினைகள் கூட கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்தது. அதை சரிசெய்து தான் திறந்து வைத்திருக்கிறோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். 
    தமிழக சட்டப்பேரவையில் இன்று கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. 
    அதிமுக எம்.எல்.ஏ., செல்லூர் ராஜூ: தென் மாவட்ட மக்களுக்கு வசதியாக கிளாம்பாக்கத்தில் பேருந்து நிலையம் திறந்து வைத்திருக்கிறீர்கள். அங்கிருந்து நகருக்குள் வருவதற்கு தேவையான வசதிகளை செய்து தர வேண்டும். மக்கள் மிகவும் சிரமப்படுகிறார்கள். இப்பிரச்சினையில் முதலமைச்சர், போக்குவரத்து மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும். 
    அமைச்சர் சிவசங்கர்: கிளாம்பாக்கத்தை அதிமுக ஆட்சியில் தான்  தேர்வு செய்தது.நீங்கள் ஆரம்பித்த அந்த திட்டத்தை பாதியில் விடாமல் திராவிட மாடல் ஆட்சியில் செய்யப்பட்டது. 30% பணிகளோடு அதிமுக ஆட்சியில் விட்டு செல்லப்பட்ட நிலையில் இன்று மீதமுள்ள பணிகள் திமுக ஆட்சியில் சிறப்பாக முடிக்கப்பட்டுள்ளது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை முழுவதுமாக மக்கள் ஏற்று பயணித்து கொண்டிருக்கிறார்கள். பேருந்தில் பயணிப்பவர்கள் யாரும் பிரச்சினை செய்வதில்லை. பயணிக்காதவர்கள் தான் பிரச்சினை செய்துக் கொண்டிருக்கிறார்கள். 
    அமைச்சர் சேகர்பாபு: 2013 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட கிளாம்பாக்கம் திட்டம் 2018 ஆம் ஆண்டு டெண்டர் கோரப்பட்டு 2019ல் ஒப்பந்த புள்ளிகள் பெறப்பட்டு பணி தொடங்கப்பட்டது. 2021 ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஒப்பந்த கால அளவு முடிய வேண்டியது. ஆனால் ஆட்சி மாற்றம் நடந்த பின் நிறுத்தப்பட்ட பணிகள் முதலமைச்சர் உத்தரவின் பேரில் தொடங்கப்பட்டது. அதிமுக ஆட்சியில் அடிக்கல் நாட்டிய அப்போதைய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஒருமுறை கூட பணிகளை சென்று பார்க்கவில்லை. நேற்று கூட அவர் ஒரு பேட்டியில், போதிய வசதிகள் செய்யவில்லை’ என குறிப்பிட்டிருந்தார். தொடர்ந்து கிளாம்பாக்கத்தில் நடைபெற்ற பணிகளை பட்டியலிட்டார். 
    எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி: நாங்கள் கொடுத்த அறிக்கையில், சிறு சிறு பிரச்சினைகளை சரி செய்திருந்தால் மக்கள் நடுரோட்டில் போராட்டம் நடத்தியிருக்க மாட்டார்கள். அதனை சரி செய்ய வேண்டும் என்று தான் சொன்னோம். 
    முதலமைச்சர் ஸ்டாலின்: சிறு சிறு பிரச்சினைகள் மட்டுமல்ல பெரிய பிரச்சினைகள் கூட கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்தது. அதை தீர்த்து வைத்து தான் திறந்து வைத்தோம். அமைச்சரே, ‘இன்னும் பிரச்சினை இருந்தால் சொல்லுங்கள். நேரடியாக வாருங்கள். தீர்த்து வைக்கிறோம்’ என சொல்லியிருக்கிறார். அதனால் இந்த பிரச்சினையை இத்தோடு முடித்து கொள்ளுங்கள் என கேட்டுக் கொள்கிறேன். 
    இப்படியான கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் தொடர்பாக இன்று காரசார விவாதம் நடைபெற்றது. 

    மேலும் காண

    Source link

  • Minister sivasankar said that selection of kilambakkam was planned only during the AIADMK regime | Minister Sivasankar: கிளாம்பாக்கத்தை தேர்வு செய்தது அதிமுக ஆட்சி காலத்தில்தான்

    Minister sivasankar said that selection of kilambakkam was planned only during the AIADMK regime | Minister Sivasankar: கிளாம்பாக்கத்தை தேர்வு செய்தது அதிமுக ஆட்சி காலத்தில்தான்


    தமிழகத்தில் சாலை விபத்துகளை குறைக்க அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் பேட்டியளித்தார்.
    போக்குவரத்துத் துறை சார்பில் தேசிய சாலை பாதுகாப்பு மாதத்தை முன்னிட்டு சென்னை, சேப்பாக்கம் அரசு விருந்தினர் மாளிகையில் இருந்து சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு நடைப்பயணத்தை போக்குவரத்துத் துறை அமைச்சர் எஸ். எஸ். சிவசங்கர் இன்று தொடங்கி வைத்து, பின்னர் விழிப்புணர்வு பேரணியில் கலந்து கொண்டார். 
    இந்த பேரணி, சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே தொடங்கி பேரணி, தீவுத்திடலில் நிறைவு பெற்றது.  அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் சிவசங்கர், “சாலை பாதுகாப்பை வலியுறுத்தி நடை பேரணி இங்கே நடைபெறுகிறது. 19 போதிலிருந்து 32 வயதுக்கு உட்பட்டவர்கள் தான் அதிகம் சாலை விபத்தில் பாதிக்கப்படுகிறார்கள். 
    சாலை பாதுகாப்பு குறித்து மக்களிடத்தில் விழிப்புணர்வு ஏற்படுத்த இந்த நிகழ்ச்சி நடக்கிறது. சாலை விபத்தில் உயிரிழந்தவர்களை காப்பாற்ற இன் உயிர் காப்போம் என்ற மகத்தான திட்டத்தை ஏற்படுத்தி, உயிரை காப்பாற்ற தமிழ்நாடு அரசு மருத்துவமனைக்கான தொகையை செலுத்தி உயிரைக் காக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.
    சாலை பாதுகாப்பு குறித்து மக்களிடத்திலும் விழிப்புணர்வு வரவேண்டும், கடந்த காலத்தைக் காட்டிலும் தற்போது சாலை விபத்து குறைந்திருந்தாலும் முற்றிலும் குறைக்க  துறை நடவடிக்கை எடுத்து வருகிறது” கூறினார்.
    தொடர்ந்து கிளாம்பாக்கம் விவகாரம் தொடர்பாக அமைச்சர் சிவசங்கரிடம் செய்தியாளர்கள் விளக்கம் கேட்டனர். அப்போது பதிலளித்த அவர், “அதிமுக ஆட்சியில் 5 ஆண்டுகளில் 3,200 பேருந்துகள் மட்டுமே வாங்கப்பட்டது. ஆனால், திமுக ஆட்சி பொறுப்பேற்று கொரோனா காலத்திற்குபின் சுமார் 4,000 பேருந்துகள் வாங்குவதற்கான ஒப்புதல் பெறப்பட்டு, படிப்படியாக வாங்கப்பட இருக்கிறது. மீதி இருக்கும் காலக்கட்டத்தில் இன்னும் கூடுதலாக புதிய பேருந்துகள் வாங்குவதற்கான நடவடிக்கைகளையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேற்கொண்டு இருக்கிறார்கள். எனவே, எடப்பாடி பழனிசாமி அவரது ஆட்சி காலத்தில் என்ன செய்தார் என்பதை ஆராய்ந்து இங்கு பேச வேண்டும். 
    கிளாம்பாக்கத்தை தேர்வு செய்தது அதிமுக ஆட்சி காலத்தில்தான் திட்டமிடப்பட்டது என அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார். 
    போக்குவரத்து நெரிசலை குறைக்க நடவடிக்கை: 
    போக்குவரத்து நெரிசலை குறைக்க பாலம் கட்டப்படுமா என்று காங்கிரஸ் உறுப்பினர் செல்வப்பெருந்தகை கேள்வி எழுப்பினார். அதற்கு காரணம், ஸ்ரீபெரும்புத்தூரில் அதிகமான தொழிற்சாலைகள் உள்ளதால் கடுமையான போக்குவரத்து நெரிசல் நிலவி வருகிறது. ஸ்ரீபெரும்புத்தூரில் முதல் சிங்கப்பெருமாள் கோயில் வரை நிலவும் போக்குவரத்து நெரிசலை குறைக்க அரசு சார்பில் நடவடிக்கை எடுக்கப்படும். 
    கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் குறைகள் இருப்பதாக எடப்பாடி பழனிசாமி மீண்டும் மீண்டும் சொல்லிக்கொண்டு இருக்கிறார். இன்று ஆசியாவிலேயே மிகச் சிறந்த பேருந்து முனையமாக கிளாம்பாக்கம் பேருந்து முனையம் அமைந்துள்ளது. இதனை பல்வேறு பத்திரிக்கைகளும் பாராட்டி வருகிறது. இதையும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி நம்ப மறுத்தால், அவர் கிளாம்பாக்கத்திற்கு வர தயார் என்றால், அழைத்து சென்று என்னென்ன வசதிகள் உள்ளது என்பதை காட்டுவதற்கு தயாராக இருக்கிறோம்.” என்றார். 

    கிளாம்பாக்கம் பேருந்து முனையம் விவகாரம் குறித்து சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விளக்கம் அளித்தார். அப்போது அவர், ”கிளாம்பாக்கத்தில் சிறு சிறு பிரச்சனைகள் இல்லை, பெரிய பிரச்சனைகள் இருந்தன. அனையெல்லாவற்றையும் நாங்கள் தீர்த்துள்ளோம். எதிர்க்கட்சி தலைவர் சொல்லக்கூடிய சிறு பிரச்சனையையும் தீர்த்து வைப்போம்” என்றார். 

    மேலும் காண

    Source link

  • Transport Minister Sivashankar interview amid allegations there were not enough buses operating in kilambakkam | 5 மணி நேரத்திற்கு மேலாக பேருந்துகள் இல்லையா? வதந்திகளை பரப்பாதீர்கள்

    Transport Minister Sivashankar interview amid allegations there were not enough buses operating in kilambakkam | 5 மணி நேரத்திற்கு மேலாக பேருந்துகள் இல்லையா? வதந்திகளை பரப்பாதீர்கள்


    கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் சரியாக இயக்கப்படவில்லை என பயணிகள் குற்றம் சாட்டி போராட்டம் செய்த நிலையில், போக்குவரத்து துறை சார்பில் தற்போது விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. 
    கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்:
    கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் திறக்கப்பட்டது முதலே தொடர்ந்து பிரச்சினைகளையும், சலசலப்பை கொண்டுள்ளது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு செல்வதற்கே போதிய பேருந்துகள் வசதி இல்லை. மின்சார ரயில்களில் சென்றாலும் ஊரப்பாக்கம் அல்லது பொத்தேரி ரயில் நிலையத்தில் இறங்கி நீண்ட நேரம் நடந்தோ அல்லது ஆட்டோவில் செல்ல வேண்டியது உள்ளது. அப்படியே ஆட்டோவில் சென்றாலும் அதிக அளவு பணம் கேட்கிறார்கள் என்ற குற்றச்சாட்டுகளை பயணிகள் முன்வைத்தனர். 

    #WATCH | Tamil Nadu: People staged a protest at Kilambakkam bus terminus in Chennai, complaining about inadequate bus service towards South Districts. (10.02) pic.twitter.com/j9tGGiQgrd
    — ANI (@ANI) February 11, 2024

    இதையடுத்து, அனைத்து விதமான வசதிகளும் ஏற்பாடு செய்து கொடுத்துவிட்டு, கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தை திறந்து இறக்கலாம் என்று பயணிகள் கோரிக்கை வைத்து வந்தனர். இப்படியான சூழலில் கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக போதுமான பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இல்லை என கோரிக்கை வைத்து போராட்டம் நடத்திய நிகழ்வும் நடைபெற்று வருகிறது. 
    போதிய பேருந்து வசதிகள் இல்லை:
    இந்தநிலையில், நேற்றும் (பிப்ரவரி 11) நள்ளிரவு 01.00 அளவில் கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் திடீரென அதிகரித்த காரணத்தினால்  வந்தவாசி, போளூர் மற்றும் திருவண்ணாமலை ஆகிய ஊர்களுக்கு போதிய பேருந்துகள் இயக்கப்படவில்லை. பேருந்துகள் கிடைக்காமல் 5 மணி நேரத்திற்கும் மேலாக பேருந்து நிலையத்தில் காத்திருப்பதாக பயணிகள் ஆர்பாட்டத்தில் ஈடுபட்டு சாலையில் திரண்டனர். 
    அரசு போக்குவரத்து கழக அலுவலர்களும், காவல்துறையினரும் பயணிகளிடம் உரிய பேருந்துகள் பொதுமக்கள் வசதிக்காக இயக்கப்படுகின்றது என்று சமாதானம் செய்ததன் பேரில் பொதுமக்கள் கலைந்து பின்னர், இயல்பு நிலைக்கு திரும்பியது.
    இது குறித்து போக்குவரத்து கழகங்களின் சார்பில் விளக்கம அளிக்கப்பட்டுள்ளது. அவை, ”10.02.2024 அன்று அரசு போக்குவரத்து கழகம் விழுப்புரம் சார்பாக 350 பேருந்துகளும், அரசு போக்குவரத்து கழகம், கும்பகோணம் சார்பாக 201 பேருந்துகளும், அரசு  போக்குவரத்து கழகம், சேலம் சார்பாக 15 பேருந்துகளும், மேலும் மாநகரப் போக்குவரத்துக் கழகம் சார்பாக திருவண்ணாமலைக்கு 23 பேருந்துகள் இயக்கப்பட்டன ஆக மொத்தம் தினசரி இயக்கக்கூடிய 1,124 பேருந்துகளுடன், 612( திருவண்ணாமலைக்கு 150 பேருந்துகள்) சிறப்பு பேருந்துகள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து வெளியூர்களுக்கு இயக்கப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    வார இறுதி நாட்களில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து வழக்கமாக இயக்கப்படுகின்ற பேருந்துகளை விட நேற்றைய தினம் அதிக அளவில் கூடுதலாக பேருந்துகள் இயக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. மேற்படி கூடுதல் பேருந்துகள் இயக்கப்பட்ட காரணத்தினால் வழக்கம் போல (வார இறுதி நாட்களில்) அதிகாலை 3.30  மணியளவில் பயணிகள் அனைவர்களும் முழுமையாக அவர்தம் ஊர்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டனர். மேலும் இப்பேருந்துகள் இயக்கத்தின் வாயிலாக, நேற்றைய தினம் (10.02.2024) மட்டும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து 1,07,632 பயணிகள் பயணம் மேற்கொண்டுள்ளனர்.” என தெரிவித்தனர். 
    அமைச்சர் விளக்கம்:
    இந்தநிலையில், கிளாம்பாக்கத்தில் போதிய பேருந்துகள் இயக்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்த நிலையில் போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் பேட்டியளித்தார். அதில், “அரசுப்பேருந்து குறைவாக இயங்குகிறது என செய்தி பரவினால், ஆம்னி பேருந்துகளில் பொதுமக்கள் ஏறுவார்கள் என்ற நோக்கில் சிலர் உள்நோக்கத்தோடு இதனை செய்து வருகின்றனர். முடிச்சூர் ஆம்னி பேருந்து நிலையம் விரைவில் செயல்பாட்டிற்கு வந்த பிறகு கிளாம்பாக்கத்தில் இருந்தே அனைத்து ஆம்னி பேருந்துகளும் இயங்கும். வதந்திகளை பரப்ப வேண்டாம்” என தெரிவித்தார்.  

    மேலும் காண

    Source link

  • kilambakkam police Station Address Project Value and full details Tnn

    kilambakkam police Station Address Project Value and full details Tnn


    கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தில் ரூ.14.30 கோடி மதிப்பீட்டில் அமைய உள்ள, புதிய காவல் நிலையம் கட்டுமான பணிகளுக்கு அமைச்சர்கள் தா.மோ. அன்பரசன் மற்றும் பி .கே சேகர்பாபு ஆகியோர் அடிக்கல் நாட்டில் பணிகளை தொடக்கி வைத்தனர்
    கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்
    செங்கல்பட்டு மாவட்டம் கிளாம்பாக்கத்தில் சுமார் 400 கோடி மதிப்பீட்டில் 88 ஏக்கர் பரப்பளவில் சென்னை பெருநகராட்சி வளர்ச்சி குழுமத்தில் சார்பில் கட்டப்பட்டுள்ள, கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம் கடந்த ஆண்டு டிசம்பர் 30ஆம் தேதி முதல் மக்கள் பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இதன் தொடர்ச்சியாக இன்று கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில், 14.30 கோடி மதிப்பீட்டில் அமைய உள்ள புதிய காவல் நிலைய கட்டுமான பணிகளுக்கு, அமைச்சர்கள் தா மோ .அன்பரசன் மற்றும் சேகர்பாபு ஆகியோர் அடிக்கல் நாட்டில் பணிகளைத் தொடங்கி வைத்தனர்.

    இதனை அடுத்து செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சேகர்பாபு தெரிவித்ததாவது :
    கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறக்கப்பட்டு இன்றுடன் 36-நாள் நிறைவு பெற்றுள்ளது. அதிமுக ஆட்சியில் துவங்கப்பட்ட இந்த பேருந்து நிலையத்தில் சரியான திட்டமிடல் இல்லை, ஆட்சி மாற்றத்திற்கு பிறகு பல்வேறு புதிய பணிகள் மேற்கொள்ளப்பட்டன. நாளொன்றுக்கு ஒரு லட்சம் பயணிகள் வந்து செல்லலாம். தினமும் 30,000க்கும் மேற்பட்ட பயணிகள் தற்பொழுது பயன்படுத்திக் கொண்டிருக்கிறார்கள.

    பொதுமக்களுக்கு பாதுகாப்பு வசதிகளை மேற்கொள்ள புதிய காவல் நிலையத்தை முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். பொதுமக்களின் வசதியை மேம்படுத்தவும் போக்குவரத்து நெரிசலை குறைக்கவும் கிளாம்பாக்கத்தில், புதிய ரயில் நிலையம் அமைப்பதற்காக 20 கோடி ரூபாய் ரயில்வே துறைக்கு வழங்கப்பட்டுள்ளது ஆறு மாதங்களில் ரயில் நிலையம் அமைக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.

    இந்நிலையில் தற்போது 14 கோடியே 35 லட்சம் செலவில் காவல் நிலைய கட்டுமான பணிக்கான அடிக்கல் நாட்டு விழா இன்று நடைபெற்றது. இந்த காவல் நிலையம் புதிய முறையில் அமைக்கப்பட உள்ளது காவலர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளுடன் கட்டப்பட உள்ளது. முடிச்சூரில் ஆம்னி பேருந்துகளுக்காக கட்டப்படும் பேருந்து நிறுத்தம் பணிகள் ஏப்ரல் மாதத்தில் நிறைவு பெறும்.கிளாம்பாக்கத்தில் மிக விரைவில் மலிவு விலை உணவகம் அமைக்கப்படும், அங்கு விலை குறைவான தரமான உணவுகள் வழங்கப்படும் என தெரிவித்தார். மேலும், கோயம்பேட்டில் 32-கடைகள் பயன்பாட்டில் இருந்தது‌. அந்த கடைகளுக்கு மொத்தமாக உரிமையாளர்கள் 11-பேர் தான் இருந்தனர். அவர்களுக்கு கிளாம்பாக்கத்தில் மாற்று இடமாக கடைகளை சலுகை விலைக்கு அளிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. 
    ஆம்னி பேருந்துகள் சென்னை செல்வதற்கு நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளது. தொடர்ந்து நீதிமன்ற உத்தரவிற்கு ஏற்ப கலந்தாய்வு கூட்டம் நடைபெற்றது. நீதிமன்றத்தில் எந்த முடிவு எடுக்கப்படுகிறதோ? அதன் பிறகு துறை ரீதியாக முடிவு செய்யப்படும் எனவும், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் 35-நாட்களுக்குள் 90-சதவீதம் அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்பட்டு உள்ளதாக தெரிவித்தார். மேலும் ஏடிஎம் வைப்பதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இதேபோன்று நடைபாலம் ஆகியவை அமைக்கும் பணிகளும் விரைவில் நடைபெற உள்ளதாக தெரிவித்தார். மழைநீர் வடிகால் பணிகள் இரண்டு மாதத்தில் முடித்து மக்களுக்கு பணியாற்றிய அரசு இந்த அரசு என கூறினார். இவ்விழா செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அருண்ராஜ் உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    மேலும் காண

    Source link

  • A list has been published regarding which buses depart from which platform at kilambakkam Bus depot

    A list has been published regarding which buses depart from which platform at kilambakkam Bus depot


    சென்னையில் இருந்து தென்மாவட்டங்களுக்கு செல்லும் பொதுமக்கள் எளிதாக பயணம் மேற்கொள்வதை உறுதி செய்யும் நோக்கில், வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து முனையம் கட்டப்பட்டுள்ளது. 59.86 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.393 கோடியே 74 லட்சம் மதிப்பீட்டில் நவீன தொழில்நுட்ப வசதிகளுடன் புறநகர் பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது.
    சென்னையில் இருந்து தென் பகுதிகளுக்கு செல்லும் அனைத்து விரைவு பேருந்துகள் உள்பட அரசு பஸ்கள், கிளாம்பாக்கம் பேருந்து  நிலையத்தில் இருந்து நேற்று புறப்பட்டுச்செல்ல தொடங்கின. இந்த சூழ்நிலையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் மற்றும் அரசு விரைவு போக்குவரத்து கழகம் ஆகியவற்றில் பயணம் செய்ய விரும்பும் மக்களுக்காக நடைமேடை குறித்து வழிக்காட்டி வெளியிடப்பட்டுள்ளது.

    Passengers guide to platform/ bus bays arrangements – TNSTC/ SETC buses. Check out our guide for a hassle free journey!#kcbt #cmda #publictransport #travel #chennai #development @official_kcbt @mkstalin @CMOTamilnadu @PKSekarbabu @anshulmishra555 @CumtaOfficial @TNDIPRNEWS… pic.twitter.com/TZTzegXMsY
    — CMDA Chennai (@CMDA_Official) January 30, 2024

    நடைமேடை குறித்த விவரம்: 
    நடைமேடை 1:
    செங்கோட்டை, திருச்செந்தூர், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி, நாகர்கோவில், மார்த்தாண்டம் ஆகிய மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் இயக்கப்படும்.
    நடைமேடை 2:
    உடன்குடி, கருங்கல், கன்னியாகுமரி, குலசேகரம், செங்கோட்டை, திசையன்விளை, திருச்செந்தூர், தூத்துக்குடி, நெல்லை, திருவனந்தபுரம், நாகர்கோவில், பாபநாசம், மார்த்தாண்டம், ஸ்ரீவில்லிப்புத்தூர் ஆகிய மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் இயக்கபடும்
    நடைமேடை 3:
    ராமேஸ்வரம், ஏர்வாடி, தொண்டி, கமுதி, காரைக்குடி, சாயல்குடி, சிவகங்கை, தேவக்கோட்டை, பரமக்குடி, பொன்னமராவதி, மதுரை, வீரச்சோழன் ஆகிய பகுதிகளுக்கு பேருந்துகள் இயக்கப்படும்.
    நடைமேடை 4:
    கம்பம், கரூர், குமுளி, கும்பகோணம், தஞ்சாவூர், திண்டுக்கல், திருச்சி, தேனி, பட்டுக்கோட்டை, பேராவூரணி, போடிநாயகன்னூர், மன்னார்குடி, பொள்ளச்சி ஆகிய மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படும்.
    நடைமேடை 5:
    நன்னிலம், நாகை, பட்டுக்கோட்டை, பெரம்பலூர், பேராவூரணி, மயிலாடுதுறை, மன்னார்குடி, அரியலூர், ஒரத்தநாடு, கும்ககோணம், தஞ்சாவூர், திருச்சி, திருவாரூர், துறையூர், வேளாங்கண்ணி ஆகிய மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படும்
    நடைமேடை 6:
    திருப்பூர், திருவாரூர், நாமக்கல், பொள்ளாச்சி, மேட்டுப்பாளையம், ஈரோடு, ஊட்டி, கரூர், குருவாயூர், கோவை, சேலம், எர்ணாகுளம், ஆகிய மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படும்.  
    நடைமேடை 7:
    செங்கம், செஞ்சி, திருவண்ணாமலை, மேல்மலையனூர், போளூர், வந்தவாசி ஆகிய மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படும்.
    நடைமேடை 8:
    திண்டிவனம், திருக்கோவிலூர், விழுப்புரம், ஜெயங்கொண்டம், அரியலூர், கள்ளக்குறிச்சி, சங்கராபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படும்.
    நடைமேடை 9:
    நெய்வேலி, விருத்தாசலம், கடலூர், காட்டுமன்னார்கோயில், சிதம்பரம், திட்டக்குடி, புதுச்சேரி, வடலூர் ஆகிய மாவட்டங்களுக்கு பேருந்துகள் இயக்கப்படும்.
      

    Source link

  • Minister Sivashankar Warned Omni Bus Issue Warned That Strict Action Will Be Taken If Such Unnecessary Rumors Are Spread – TNN | Omni Buses Kilambakkam: வதந்தி பரப்புகிறார்கள்.. வதந்தி பரப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை

    Minister Sivashankar Warned Omni Bus Issue Warned That Strict Action Will Be Taken If Such Unnecessary Rumors Are Spread – TNN | Omni Buses Kilambakkam: வதந்தி பரப்புகிறார்கள்.. வதந்தி பரப்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை

    ஆம்னி பேருந்துகள் நேற்றிரவு முதல் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்திலிருந்து இயக்கப்பட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்திருந்தது. கிளாம்பாக்கத்தில் போதிய வசதிகள் இல்லை; திடீரென மாற்றம் செய்தால் முன்பதிவு செய்த பயணிகள் பாதிக்கப்படுவார்கள் என பல்வேறு காரணங்களை கூறி கோயம்பேடு பேருந்து நிலையத்தில் இருந்தே ஆம்னி பேருந்து இயக்கப்படும் என்று ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்க தலைவர் அன்பழகன் தெரிவித்திருந்தார். இந்தநிலையில், போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் நேரில் வந்து ஆய்வு மேற்கொண்டார். ஆய்வு மேற்கொண்ட நிலையில் தேவைபடும் வசதிகளை குறித்து ஆம்னி பேருந்து  உரமையாளர்களிடம் கேட்டறிந்தார்.
     
    செய்தியாளர்களுக்கு பேட்டி.
     
    கிளாம்பாக்கத்தில் பேருந்து நிலையத்தில் ஆய்வு செய்த தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் பின்னர் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், ”ஆம்னி பேருந்துகளுக்கு இன்னும் பார்க்கிங் வசதி செய்ய வேண்டும் என்பதற்கான நடவடிக்கைகளை சிஎம்டிஏ நிர்வாகிகள் துரிதமாக எடுப்பார்கள். முடிச்சூரில் பார்க்கிங் வசதியானது மார்ச் மாத இறுதிக்குள் தயாராகிவிடும். அதுவரை பேருந்து நிலையத்தில் எதிர்ப்பக்கம் இருக்கக்கூடிய பார்க்கிங்கில் அவர்கள் நிறுத்துவதற்கான வசதியும் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த வசதிகளை பயன்படுத்தி பொதுமக்கள் பயணிப்பதற்கு எந்த இடையூறும் இல்லை என்ற நிலை உருவாகும். அதிலும் குறிப்பாக இன்றைக்கு ஆம்னி பேருந்துகளில் வந்த பயணிகள் கூடுதலாக எதிர்பாராமல் வந்திருந்தாலும் அவர்களை இங்கிருந்து நகரத்தின் மற்ற பகுதிகளுக்கு கொண்டு செல்வதற்கு கூடுதலாக 200 நடை பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளது.
     
    ஐந்து நிமிடத்திற்கு ஒரு பேருந்து
     
    ஏற்கெனவே நாங்கள் தெரிவித்தபடி கிளாம்பாக்கத்தில் இருந்து கோயம்பேட்டுக்கு ஐந்து நிமிடத்திற்கு ஒரு பேருந்து இயக்கப்படுகிறது. கிண்டிக்கு மூன்று நிமிடத்திற்கு ஒரு பேருந்து இயக்கப்படுகிறது. தாம்பரத்திற்கு இரண்டு நிமிடத்திற்கு ஒரு பேருந்து இயக்கப்படுகிறது. அது மட்டுமல்லாமல் நேரடியாக பேருந்து பிடிக்க வேண்டும் என்று வருபவர்களுக்கோ அல்லது தாம்பரம் நேரடியாக செல்ல வேண்டும் என்பவர்களுக்கோ தாம்பரம் டூ கிளாம்பாக்கம் ஒன் டூ ஒன் பேருந்து இன்றிலிருந்து இயக்கப்பட்டு வருகிறது.
     
    அந்த பேருந்துகள் 10 நிமிடத்திற்கு ஒரு பேருந்துகள் இயக்கப்படுகிறது. எனவே பொதுமக்களுக்கான வசதி என்ன என்பதை ஆய்வு செய்து ஒவ்வொரு நாளும் கூடுதலாக தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. எனவே இந்த பேருந்து முனையம் என்பது முழுமையாக மக்கள் பயன்பாட்டிற்கு வர தொடங்கி விட்டது. மற்ற போக்குவரத்துக் கழகங்களுடைய பேருந்துகள் விழுப்புரம், கும்பகோணம், சேலம் போன்ற போக்குவரத்துக் கழகங்களின் பேருந்துகள் 30 ஆம் தேதியிலிருந்து கோயம்பேட்டில் இருந்து கிளாம்பாக்கத்தில் 80 சதவிகித பேருந்துகள் முழுமையாக இயக்கப்படும். ஒரு 20% பேருந்துகள் மாதவரம் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்பட இருக்கிறது. சிலர் திட்டமிட்டு வதந்தி பரப்பி வருகிறார்கள் அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார் என்றார்.
     

    கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும் ஆம்னி பேருந்துகள்…

    இ.சி.ஆர். மார்க்கமாக செல்லும் ஆம்னி பேருந்துகள்..
    சென்னையிலிருந்து வேலூர் உள்ளிட்ட மேற்கு மார்க்கமாக செல்லும் ஆம்னி பேருந்துகள்..
    சித்தூர், ரெட் ஹில்ஸ் வழியாக வடக்கு மார்க்கமாக செல்லும் ஆம்னி பேருந்துகள்..

    இவை ஆம்னி பேருந்து நிலையத்திலிருந்து தொடர்ந்து இயங்குவதற்கு அனுமதிக்கப்படும் என்று போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.
    பயணிகளின் நலனை கருத்தில் கொண்டு அரசு விரைந்து ஓர் தீர்வை எடுக்க வேண்டும் என்பது பயணிகளின் எதிர்பார்பாக இருக்கிறது.

    Source link

  • Kilambakkam Bus Stand Public And Commuters Protested By Holding The Bus Captive As Not Enough Buses Were Plying To Tiruvannamalai

    Kilambakkam Bus Stand Public And Commuters Protested By Holding The Bus Captive As Not Enough Buses Were Plying To Tiruvannamalai

    கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பேருந்தை சிறைபிடித்து பயணிகள் மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு
     
    Kilambakkam bus terminus, Chennai (கிளாம்பாக்கம் புறநகர் பேருந்து நிலையம்)
     
    தென்மாவட்ட பயணிகள் வசதிக்காக வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்தில் ரூ.393 கோடியே 74 லட்சத்தில் 88.52 ஏக்கரில் அமைக்கப்பட்டுள்ள கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். கோயம்பேடு மற்றும் புறநகர் பகுதிகளில் நிலவும் போக்குவரத்து நெரிசலைக் குறைக்கும் வகையிலும், வட மற்றும் தென் மாவட்டங்களுக்கு செல்லும் மக்கள் எளிதாக பயணத்தை மேற்கொள்ள வசதியாக கடந்த 2018-ம் ஆண்டில் அதிமுக ஆட்சியின்போது, வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கத்தில் 88.52 ஏக்கரில் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் சார்பில் ரூ.393 கோடியே 74 லட்சத்தில் புதிய பேருந்து நிலையப் பணிகள் தொடங்கப்பட்டன.
     
    தென் மாவட்டத்திற்கு பேருந்துகளை இயக்குவதற்காக பிரத்தியேகமாக கட்டப்பட்ட,  கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் செயல்பாட்டிற்கு வந்ததிலிருந்து,  பயணிகள் தரப்பில் பல்வேறு குற்றச்சாட்டுகள் இழந்து வண்ணம் உள்ளன. பேருந்து நிலையம் பயன்பாட்டிற்கு வந்து ஒரு மாதத்தை நெருங்கி வரும் நிலையில், பயணிகள் தொடர்பில் தொடர் குற்றச்சாட்டுகள் இருந்த வண்ணம் உள்ளன.
     

    அதிகாரிகள் இடத்தை காலி செய்து விட்டு சென்றதால் காலியாக உள்ள சேர்கள்

     
    திருவண்ணாமலை நோக்கி மக்கள்
     
    இந்தநிலையில் நேற்று பௌர்ணமியை முன்னிட்டு திருவண்ணாமலையில், கிரிவலம் செய்வதற்காக ஆயிரக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலை செல்வது வழக்கம். நாளை விடுமுறை தினம் என்பதால் வழக்கத்தை, விட அதிக அளவு பக்தர்கள் திருவண்ணாமலையை நோக்கி படையெடுக்க துவங்கியுள்ளனர்.

     
    கூட்ட நெரிசல்
     
    கிளாம்பாக்கத்திற்கு மாலை முதல் ஏராளமான பக்தர்கள் திருவண்ணாமலை பேருந்துகள் நிற்கும் இடத்தில் கூட்ட நெரிச்சலுடன் காணப்பட்டது. ஆனால் சரியான பேருந்துகள் இயக்கப்படாததால் பேருந்துகள் முழுவதும் கூட்டத்துடன் காணப்பட்டது. நின்று கொண்டும் படியில் தொங்கிக்கொண்டும் பலர் பயணம் செய்தனர். அப்பொழுதும், பேருந்துகள் முறையாக இல்லாததால் அதை பலர் அதிகாரிகளிடம் முறையிட்டனர். ஆனால் அதிகாரியும் என்ன செய்வது தெரியாமல் பயணிகள் கேள்விக்கு பதில் அளிக்க முடியாமல் , அங்கிருந்து தப்பித்து சென்றால் போதும் என அங்கிருந்து அதிகாரியும் ஓடியது பயணிகள் இடையே அதிர்ச்சி ஏற்படுத்தியது. இதையடுத்து பேருந்துகளை மறித்து 100க்கும் மேற்பட்ட பயணிகள் திடீரென போராட்டத்தில் ஈடுபட்ட தலா பரபரப்பு ஏற்பட்டது.

    இதன் அடுத்து அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் அவர்களுடன் சமாதான பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு அவர்களை சமாதானப்படுத்தினர். ஏற்கனவே, பொங்கல் பண்டிகையின்பொழுது , பேருந்துகள் இயக்கப்படவில்லை என கிளாம்பாக்கத்தில் பயணிகள் பேருந்து சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது. போராட்டத்திற்கு பிறகு சில பேருந்துகள் கிளாம்பாக்கத்திலிருந்து இருந்து இயக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
     

    இது குறித்த பயணிகள் தெரிவித்ததாவது : திருவண்ணாமலை கிரிவலம் செல்லும் பொழுது சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுவது வழக்கம். ஆனால் கிளாம்பாக்கம் பகுதியில் இருந்து சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவில்லை. இதனால் அதிக அளவு பயணிகள் வரும்பொழுது அதை அவர்களால் எதிர்கொள்ள முடியவில்லை. கோயம்பேட்டில் இருந்து சில பேருந்துகளும் இங்கிருந்து சில பேருந்துகளும் இயக்கப்படுவதால் இந்த சிக்கல் நிலவுகிறது. இந்த சிக்கல்களுக்கு விரைவில் தீர்வு காண வேண்டும் என தெரிவித்தார்.

    Source link

  • Prepaid Auto Launched At Kilambakkam Bus Station Safe Travel At Rs 18 Per Kilometer On Trial Basis

    Prepaid Auto Launched At Kilambakkam Bus Station Safe Travel At Rs 18 Per Kilometer On Trial Basis

    கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் பயன்பாட்டிற்கு வந்த நிலையில் தற்போது கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ப்ரீபெய்ட் ஆட்டோ சேவை துவங்கப்பட்டுள்ளது.  சுமார் 200 ஆட்டோக்கள் தற்பொழுது பதிவு செய்யப்பட்டுள்ளன. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து பகுதியில் இருந்து சென்னை உள்பகுதி மற்றும் புறநகர் பகுதிகளில் ஆட்டோ சேவை செயல்படுத்தப்பட்டுள்ளது.
     

    இதற்காக சிஎம்டி அலுவலர்கள் மற்றும் போக்குவரத்து துறை அலுவலர்கள் சார்பில் அரங்கு அமைக்கப்பட்டு ஆட்டோக்கள் புக் செய்யப்பட்டு வருகிறது. சோதனை அடிப்படையில் துவங்கப்பட்டுள்ள இந்த பணி ஒரு கிலோமீட்டருக்கு அரசு நிர்ணயிக்கப்பட்ட கட்டணமாக 18 ரூபாய் வசூலிக்கப்படுகிறது.

     
    ஆட்டோக்களை ஓட்டும் ஓட்டுநர்கள் முறையாக அரசு அதிகாரிகளால் பரிசோதனை செய்யப்பட்டு, ஆட்டோ இன்சூரன்ஸ் ஓட்டுனருக்கு லைசென்ஸ் மற்றும் பேட்ச் உள்ளதா என அனைத்தும் சரியாக உள்ளதா என சோதனை செய்யப்பட்ட பிறகு ஆட்டோ ஓட்டுநர்கள் ஏற்றுக்கொள்ளப்படுகின்றனர். இதை விரிவுபடுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
     
     

    கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் உள்ள வசதிகள்:
    6.40 லட்சம் சதுர அடியில் 2 அடித்தளங்கள், தரைதளம், முதல்தளத்துடன் இந்த பேருந்து நிலையம் அமைந்துள்ளது.
    சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு செல்லும் 3,500 மாநகர பேருந்துகள் வந்து செல்ல, மேற்கூரையுடன் கூடிய நடைமேடைகள் அமைக்கப்பட்டுள்ளன.
    ஒரே நேரத்தில் 130 அரசுபேருந்துகள், 85 தனியார் பேருந்துகளை நிறுத்த முடியும்.
    28.25 ஏக்கர் பரப்பளவில் வாகன நிறுத்துமிடம், கடைகள், உணவகங்கள் உள்ளிட்டவை அமைக்கப்படுகின்றன
    கண் பார்வையற்றவர்களும் எளிதாக புரிந்து கொள்ளும் வகையில் பிரெய்லி பலகைகள் வைக்கப்படுகின்றன.
    கியூஆர் கோடு டிக்கெட்டுகள் வழங்கப்படும். 
    2 அடித்தளங்களில் 340 கார்கள், 2,800 இருசக்கர வாகனங்கள் நிறுத்தமுடியும்
    இங்கு பாலூட்டும் தாய்மார்களுக்கான அறை, ஏடிஎம் மையங்கள், காவல் கட்டுப்பாட்டு அறைகள், போக்குவரத்து அலுவலகங்கள் உள்ளிட்டவை உள்ளன.
    தனியாக காவல் நிலையமும் அமைக்கப்பட்டு வருகிறது.
    முக்கியமாக புயல் வெள்ளக் காலங்களில் மழை நீர் தேங்காமல் வெள்ள நீர் வடிகால் அமைக்கப்பட்டுள்ளது
    ஊரப்பாக்கம் ரயில் நிலையம் கிளாம்பாக்கத்திலிருந்து 1 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது
    விமான நிலையம்- கிளாம்பாக்கம் வரை சென்னை மெட்ரோவை நீட்டிக்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
    2025 இல் ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து நெரிசலும் குறையும்.
    ஊரப்பாக்கம் ரயில் நிலையத்தை அடையும் வகையில் நடைமேம்பாலம் எனப்படும் ஸ்கைவாக் அமைக்கப்படுகிறது.

    பேருந்து முனைய கட்டுமானப் பணிகள் அல்லாமல் ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து நெரிசலின்றி பேருந்துகள் வெளியேறுவதற்காக பிரத்யேக சாலை விரிவாக்க வசதி மற்றும் பேருந்து முனையத்தின் முன்புறம் மழைநீர் வடிகால்வாய் கட்டும் பணி  ஆகிய பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. 
     
    கூடுதல் வசதிகள் என்னென்ன ?
    இப்பேருந்து முனையத்தில் பயணிகளின் குடிநீர் வசதிக்காக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் (TWAD) மூலம் நாளொன்றுக்கு 0.5 மில்லியன் லிட்டருடன் கூடுதலாக நிலத்தடி நீரை சுத்திகரிக்கும், 300 கிலோ லிட்டர் கொள்ளளவுள்ள எதிர் சவ்வூடுபரவல் (RO) முறையிலான நீர் சுத்திகரிப்பு நிலையம், அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் (SETC) / தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (TNSTC) மற்றும் மாநகர போக்குவரத்துக் கழகப் பேருந்துகளின் (MTC) செயல்பாட்டிற்காக தனியாக பேருந்து பராமரிப்புப் பணிமனை /பராமரிப்பிடங்கள் மற்றும் எரிபொருள் நிரப்பும் நிலையங்கள்,  மூத்த குடிமக்கள், நோயாளிகள் மற்றும் மாற்றுத் திறனாளிகளின் பயன்பாட்டிற்காக 5 மின்கல ஊர்தி (Battery Operated Vehicles) வசதி செய்யப்பட்டுள்ளது. முனையத்தின் முகப்பில் 6 ஏக்கர் பரப்பளவில் நீரூற்றுகளுடைய  நடைபாதைகள் கொண்ட பூங்கா, பயணிகளின் அவசர மருத்துவ சிகிச்சைக்காக இலவச மையம் அமைக்கப்பட்டுள்ளதுடன் முனையத்தின் முகப்பில் ஆட்டோ / டாக்ஸி நிறுத்தத்திற்கு தனியாக இடமும் ஒதுக்கப்பட்டுள்ளது.

    Source link

  • kilambakkam:  இடம் நிறைய இருக்கு கொஞ்சம் இருக்கை போடுங்க… கிளாம்பாக்கத்தில் அவதிப்படும் பயணிகள்..!

    kilambakkam: இடம் நிறைய இருக்கு கொஞ்சம் இருக்கை போடுங்க… கிளாம்பாக்கத்தில் அவதிப்படும் பயணிகள்..!


    <h3 dir="auto" style="text-align: justify;"><strong>கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போதிய இருக்கைகள் இல்லாமல் பயணிகள் அவதி</strong></h3>
    <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div>
    <div dir="auto" style="text-align: justify;">
    <div dir="auto">கடந்த மாதம் தமிழ்நாடு முதலமைச்சரால் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் மக்கள் பயன்பாட்டிற்காக திறந்து வைக்கப்பட்டது. பேருந்து நிலையம் செயல்பாட்டிற்கு வந்ததிலிருந்து, பல்வேறு குறைபாடுகளும் சர்ச்சைகளும் இருந்த வண்ணம் உள்ளன.&nbsp;பொதுமக்கள் வைக்கும் கோரிக்கைகளும் தமிழக அரசு மற்றும் சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் &nbsp;அவற்றை நிறைவேற்றியும் வருகின்றனர். &nbsp;புதிய பேருந்து நிலையம் என்பதால் பல்வேறு &nbsp;நடைமுறை சிக்கல்களை கருத்தில் கொண்டு, &nbsp;அவற்றை சரி செய்யும் பணியிலும் அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.</div>
    <div dir="auto">&nbsp;</div>
    <div dir="auto">&nbsp;</div>
    <figure class="image"><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/13/48a6ca39707c54d9a358a1608ca1c6641705113411560113_original.jpg" alt="கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போதிய இருக்கைகள் இல்லாமல் பயணிகள் அவதி" />
    <figcaption>கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போதிய இருக்கைகள் இல்லாமல் பயணிகள் அவதி</figcaption>
    </figure>
    <div dir="auto">பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தென் மாவட்டத்திற்கு செல்லக்கூடிய அனைத்து அரசு விரைவு பேருந்துகளும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து செல்லும் என தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல தென் மாவட்டத்திற்கு செல்லக்கூடிய பிற பேருந்துகள் கோயம்பேட்டில் இருந்து செல்லும் எனவும் கூறப்பட்டுள்ளது. இருக்கைகள் அமைப்பதற்கு இடம் இருந்தும் இருக்கைகள் இல்லாததால், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் பொதுமக்கள் பேருந்துக்காக காத்திருக்கும் பொழுது கரையில் அமர்ந்து கொண்டு குடும்பத்துடன் நீண்ட நேரம் காத்துக் கிடக்கின்றனர். அதே போன்று, உயரமான சுற்று சுவர்கள் மீதும் ஆபத்தான முறையில் ஏறி அமர்ந்து கொண்டு பயணிகள் பேருந்துக்காக காத்திருக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. இருக்கைகள் போடுவதற்கு நிறைய இடம் இருப்பதால், அந்த இடங்களில் இருக்கை அமைத்து தர பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.</div>
    </div>
    <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div>
    <div dir="auto" style="text-align: justify;"><strong>பொங்கல் பண்டிகையை முன்னிட்டு பொதுமக்கள் தங்களது சொந்த ஊருக்கு பணம் மேற்கொண்டு வருகின்றனர்</strong></div>
    <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div>
    <div dir="auto" style="text-align: justify;">
    <p style="text-align: justify;">இந்த ஆண்டுக்கான பொங்கல் விடுமுறை இன்று முதல் தொடங்கிவிட்டது என்றே கூறலாம். இன்று தொடங்கி அதாவது ஜனவரி 13ஆம் தேதி தொடங்கி ஜனவரி 17ஆம் தேதி வரைக்கும் பொங்கல் கொண்டாட்டத்திற்கான விடுமுறையாக உள்ளது. இதனால் வெளியூரில் வேலை செய்யும் மக்கள் தங்களது சொந்த ஊருக்கு படையெடுத்து வருகின்றனர். இதற்காக தமிழ்நாடு போக்குவரத்துக் கழகம் ஏற்கனவே அறிவித்தைப் போல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றது. இதன் மூலம் நேற்று மட்டும் சுமார் 2.17 லட்சம் மக்கள் தங்களது சொந்த ஊருக்குச் சென்றுள்ளனர்.</p>
    <p>&nbsp;</p>
    <figure class="image"><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/13/86dc0bf2cdbfc61d349929a3708ce9af1705113438546113_original.jpg" alt="கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போதிய இருக்கைகள் இல்லாமல் பயணிகள் அவதி" />
    <figcaption>கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் போதிய இருக்கைகள் இல்லாமல் பயணிகள் அவதி</figcaption>
    </figure>
    <p style="text-align: justify;">&nbsp;</p>
    <p style="text-align: justify;">அதாவது 3 ஆயிரத்து 946 பேருந்துகளில் நள்ளிரவு 12 மணிவரை இரண்டு லட்சத்து 17 ஆயிரத்து 30 பேர் பயணம் செய்துள்ளனர். இதுவரை ஒரு லட்சத்து 96 ஆயிரத்து 310 பேர் சொந்த ஊர்களுக்குச் செல்ல முன்பதிவு செய்துள்ளனர். மக்கள் சொந்த ஊருக்குச் செல்ல வரும் 14ஆம் தேதி வரை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படவுள்ளது.&nbsp;</p>
    </div>

    Source link

  • இலவச மினி பேருந்துகள்..!  கிளாம்பாக்கம் பேருந்து பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சி..!

    இலவச மினி பேருந்துகள்..! கிளாம்பாக்கம் பேருந்து பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சி..!


    <h2 style="text-align: justify;"><strong>பொங்கல் பண்டிகை:</strong></h2>
    <p style="text-align: justify;">பொங்கல் பண்டிகையை முன்னிட்டு லட்சக்கணக்கான மக்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு சென்று பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாட உள்ளனர்.&nbsp; வழக்கமாக பண்டிகை காலத்தில் பொதுமக்கள் சிரமமின்றி ஊருக்கு சென்று வர அவர்களின் வசதிக்காகவும், நன்மைக்காகவும் தமிழக போக்குவரத்து கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. அந்த வகையில் இந்த பொங்கல் பண்டிகைக்கும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது. ஜனவரி 12ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரை பொங்கல் சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, 19,484 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. சென்னையில் இருந்து 11,006 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. பொங்கல் பண்டிகை முடிந்து பிற ஊர்களில் இருந்து சொந்து ஊர்களுக்கு மக்கள் செல்வதற்காக ஜனவரி 16 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை 17,581 சிறப்பு பேருந்கள் இயக்கப்படுகிறது.</p>
    <p style="text-align: justify;"><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/13/7b7c507bf233b53b6c7454a9ad9f9a8c1705113690504113_original.jpg" /></p>
    <p style="text-align: justify;">கோயம்பேடு பேருந்து நிலையத்தில் 5 முன்பதிவு மையங்களும், தாம்பரம் பேருந்து நிலையத்தில் ஒரு முன்பதிவு மையமும், கிளாம்பாக்கத்தில் 5 முன்பதிவு மையங்களும் செயல்படுகிறது. இதனை பயன்படுத்தி மக்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல முன்பதிவு செய்து கொள்ளலாம். இச்சிறப்பு பேருந்துகளுக்கு&nbsp;<span class="skimlinks-unlinked">www.tnstc.in</span>&nbsp;மற்றும் tnstc official app ஆகிய இணையதளங்களில் வாயிலாக முன்பதிவு செய்யலாம் என்பது குறிப்பிடத்தக்கது.&nbsp;இந்த ஆண்டு போக்குவரத்து நெரிசலை தவிர்க்கும் வகையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்துகள் புறப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.</p>
    <h2 style="text-align: justify;"><strong>&nbsp;அமைச்சர் சிவசங்கர் நேரில் ஆய்வு</strong></h2>
    <p style="text-align: justify;">&nbsp;</p>
    <div dir="auto" style="text-align: justify;">சென்னை வண்டலூர் அடுத்த கிளாம்பாக்கம் பகுதியில் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் கடந்த மாதம் 30 ஆம் தேதி பயன்பாட்டிற்கு வந்தது. பொங்கல் பண்டிகை முன்னிட்டு கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து இயக்கப்படும் பேருந்துகளை போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் நேரில் ஆய்வு மேற்கொண்டார். முன்னேற்பாடு பணிகள் குறித்தும் மற்றும் செய்ய வேண்டிய பணிகள் குறித்து அதிகாரிகளுக்கு அமைச்சர் அறிவுரை வழங்கினார்.</div>
    <div dir="auto"><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/13/8d19a29247791a87038b6563e194fa5f1705113771849113_original.jpg" /></div>
    <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div>
    <div dir="auto" style="text-align: justify;"><strong>இதனை அடுத்து செய்தியாளரை சந்தித்த அவர் தெரிவித்ததாவது :</strong> மக்கள் அதிகளவு கூடுவதை தவிர்க்கவும் போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில் ஆறு இடங்களில் இருந்து பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திற்கு சென்னையில் இருந்து அனைத்து பகுதியில் இருந்து பேருந்து வருவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.&nbsp; கடந்த ஆண்டு ஒரு லட்சத்து 24 ஆயிரம் பேர் பொங்கல் பண்டிகையின் பொழுது பயணம் செய்தனர். இந்த ஆண்டு ஒரு லட்சத்து 32 ஆயிரம் பேர் முன்பதிவு செய்துள்ளனர். மக்கள் கூடுதலாக இந்த ஆண்டு பயணம் செய்ய உள்ளனர் அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.&nbsp;</div>
    <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div>
    <div dir="auto"><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/13/231da13efecf9b46f98795034638641b1705113786680113_original.jpg" /></div>
    <div dir="auto" style="text-align: justify;">எந்தெந்த பேருந்துகள் எங்கிருந்து இயக்கப்படுகிறது என்பது குறித்து, மக்களுக்கு ஊடகம் மூலமாக பத்திரிகை மூலமாக தொடர்ந்து தகவல் தெரிவிக்கப்பட்டன. முன்பதிவு செய்தவர்களுக்கு எஸ்எம்எஸ் மூலமாக தகவல் அளிக்கப்பட்டது என தெரிவித்தார்.&nbsp; பேருந்து நிலையம் இப்பொழுதுதான் அமைக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து கழகம் சார்பாக இந்த நல்ல முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளது. தேசிய சாலையிலிருந்து பொதுமக்கள் நீண்ட தூரம் நடந்து பேருந்து நிலைய முன்பகுதிக்கு வந்திருப்பதை பார்த்த பிறகு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளேன். பொதுமக்களுக்கு இலவசமாக மினி பேருந்துகள் இயக்கி மினி பேருந்துகள் மூலம் பொதுமக்களை கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் முன்பகுதிக்கு,&nbsp; கொண்டு வந்து விட ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது&rdquo; என கூறினார்</div>
    <p style="text-align: justify;">&nbsp;</p>

    Source link