Tag: காங்கிரஸ் தலைவர்

  • congress leader mallikarjun karghe asked bjp to submit white paper on electoral bond and money recieved | Mallikarju Karghe: ”மத்திய அமைப்புகளை தவறாக பயன்படுத்தி நிதி பெற்ற பாஜக”
    congress leader mallikarjun karghe asked bjp to submit white paper on electoral bond and money recieved | Mallikarju Karghe: ”மத்திய அமைப்புகளை தவறாக பயன்படுத்தி நிதி பெற்ற பாஜக”


    தேர்தல் பத்திரங்களில் நன்கொடை பெற்றது தொடர்பாக பாஜக அரசு வெளை அறிக்கை வெளியிட வேண்டும் என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தெரிவித்துள்ளார்.
    தேர்தல் பத்திரங்கள்:
    அரசியல் கட்சிகளுக்கு நிதி அளிக்கும் வகையில், தேர்தல் பத்திரங்கள் என்ற முறை தொடங்கப்பட்டது. இந்த பத்திரங்களானது, எஸ்.பி.ஐ வங்கி மூலமாக மட்டுமே வழங்கப்பட்டது. இந்த பத்திரங்கள் வழங்கப்பட்டதில், பணம் அளித்தவர்களின் பெயர்கள் ரகசியம் காக்கப்பட்டன. இந்நிலையில், தேர்தல் பத்திரங்கள் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இதையடுத்து, தேர்தல் பத்திரங்கள் தொடர்பான விவரங்களை தேர்தல் ஆணையத்துக்கு வழங்குமாறு எஸ்.பி.ஐ வங்கிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
    அதன் அடிப்படையில் தேர்தல் பத்திரங்களின் விவரங்கள் தொடர்பாக எஸ்பிஐ வங்கி வழங்கியது. இதில் பாஜக மற்றும் பிற கட்சிகள் தேர்தல் பத்திரங்கள் மூலம் பல கோடி பணம் பெற்றது தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கே தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    Was it Blackmail, Extortion, Loot and Coercion to get more donations ??A fresh investigation shows 15 more companies, donated to BJP after ED, CBI, IT raids, making it a total of 45 companies paying BJP nearly ₹400 Cr ! According to reports, 4 SHELL COMPANIES also funded… pic.twitter.com/5EPBps0R9L
    — Mallikarjun Kharge (@kharge) March 14, 2024

    சட்டவிரோத தேர்தல் பத்திரங்கள்:
    அதில், “ அமலாக்கத்துறை, சிபிஐ, வருமானவரித்துறை ரெய்டுகளுக்குப் பிறகு மேலும் 15 நிறுவனங்கள் பாஜகவுக்கு நன்கொடையாக  நிதி வழங்கப்பட்டுள்ளது அம்பலமாகியுள்ளது. மொத்தம் 45 நிறுவனங்கள் பாஜகவிற்கு கிட்டத்தட்ட  ரூ.400 கோடி பணம் கொடுத்துள்ளது. இவற்றில் 4 போலி நிறுவனங்களும் அடங்கும். சர்வாதிகார மோடி அரசு, காங்கிரஸ் கட்சியின் வங்கிக் கணக்குகளை முடக்கி வைத்துள்ளது.
    அதே சமயம் மத்திய ஏஜென்சிகளைப் பயன்படுத்தி பணம் பெற்றுள்ளது! பாஜக அரசியலமைப்பிற்கு எதிரான மற்றும் சட்டவிரோதமான தேர்தல் பத்திரங்களைப் பயன்படுத்தியுள்ளது. மேலும் அதனை பயன்படுத்து நன்கொடை பெற்றுள்ளது. இதிக நன்கொடை பெறுவதற்காக செய்யப்படும் பிளாக்மெயிலா? பணம் பறிப்பா? கொள்ளையா? பாஜக உண்மையிலேயே ஜனநாயக தாய் மீது அக்கறை இருந்தால் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என தெரிவித்துள்ளார்.     

    மேலும் காண

    Source link

  • Lok Sabha Election 2024 Congress Chief Mallikarjun Kharge Answer Contest Election
    Lok Sabha Election 2024 Congress Chief Mallikarjun Kharge Answer Contest Election

    மக்களவைத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், இந்தாண்டு பிறந்தது முதலே அரசியல் கட்சிகள் அதற்கான பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். மத்தியில் மீண்டும் ஆட்சியை பிடிக்க பா.ஜ.க.வும், 10 ஆண்டுகளாக இழந்த ஆட்சியை இந்த முறை எப்படியாவது கைப்பற்றித் தீர வேண்டும் என்று காங்கிரசும் இந்தியா கூட்டணியை அமைத்து தீவிரமாக பணியாற்றி வருகிறது.
    மக்களவைத் தேர்தல்:
    இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி இன்னும் சில மாநிலங்களில் தங்களது கூட்டணி பங்கீட்டை இறுதி செய்யவில்லை. இந்த மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், அக்கட்சியின் பெரும் பலமான சோனியா காந்தி போட்டியிடவில்லை. அவர் முதன்முறையாக மாநிலங்களவையில் இருந்து நாடாளுமன்றத்திற்கு உறுப்பினராக தேர்வாகியுள்ளார்.
    கார்கே போட்டியா? இல்லையா?
    மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியில் புதியவர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்படும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த சூழலில், காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூனே கார்கே இந்த தேர்தலில் போட்டியிடமாட்டார் என்று கூறப்படுகிறது. இதுதொடர்பாக, டெல்லியில் நிருபர்கள் அவரிடம் கேள்வி எழுப்பினர். அதற்கு அவர் பதிலளித்து கூறியதாவது, பத்திரிகையாளர்கள் நீங்கள் 65 வயதில் ஓய்வு பெறுகிறீர்கள். எனக்கு 83 வயதாகிறது. கட்சியில் எனக்கு வாய்ப்பு அளித்தால் நான் கண்டிப்பாக போட்டியிடுவேன். சில சமயங்களில் நாங்கள் பின்னால் நிற்போம். சில சமயங்களில் நாங்கள் முன்னால் நிற்போம். எங்களிடம் ஏற்கனவே ஒரு தொகுதிக்கு போட்டியிட 10 நபர்கள் ஆர்வத்துடன் கேட்கும் பட்டியலே உள்ளது.
    பா.ஜ.க. எங்கள் உத்தரவாதங்களை திருடுகிறது. நாங்கள் கர்நாடகாவில் தொடங்கினோம். அங்கு வெற்றி பெற்றோம். தெலங்கானாவிலும் வெற்றி பெற்றோம். மோடி எங்கள் உத்தரவாதத்தை திருடி இது எங்கள் உத்தரவாதம் என்று கூறி வருகிறார். பயிர்களுக்கான குறைந்த பட்ச ஆதாரவிலை எங்களது உத்தரவாதம்.”
    இவ்வாறு அவர் கூறினார்.
    தீவிர தேர்தல் பணியில் இந்தியா கூட்டணி:
    இந்தியா கூட்டணியில் முக்கிய பங்கு வகிக்கும் கட்சி காங்கிரஸ். மற்ற கட்சிகளை ஒருங்கிணைக்கும் கட்சியாகவும் காங்கிரஸ் உள்ளது. இந்தியா கூட்டணியை உருவாக்கிய நிதிஷ்குமார் கடந்த சில வாரங்களுக்கு முன்பு, இந்த கூட்டணியில் இருந்து விலகி பா.ஜ.க.வில் இணைந்தார். மேற்கு வங்கத்தில் உள்ள அனைத்து தொகுதிகளிலும் ஆளுங்கட்சியான திரிணாமுல் காங்கிரசே போட்டியிடுகிறது. காங்கிரஸ் கட்சிக்காக ராகுல்காந்தி இந்தியா முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருவதும் குறிப்பிடத்தக்கது.
    மேலும் படிக்க: Kharge On PM Modi: “பொய்களை பரப்பும் பிரதமர் மோடிக்கு 9 கேள்விகள் – பதில் வருமா?” காங்கிரஸ் தலைவர் கார்கே ஆவேசம்
    மேலும் படிக்க: அமமுக – பாஜக கூட்டணி நிபந்தனைகள் இல்லாமல் உறுதியானது- அமமுக பொதுச்செயலாளர் டிடிவி. தினகரன்
     

    Source link