Tag: கருணாநிதி

  • Annamalai said that Congress and Dmk should apologize for covering kachchatheevu – TNN | கச்சத்தீவை தாரைவார்த்ததற்காக காங்கிரஸ், திமுக மன்னிப்பு கேட்க வேண்டும்

    Annamalai said that Congress and Dmk should apologize for covering kachchatheevu – TNN | கச்சத்தீவை தாரைவார்த்ததற்காக காங்கிரஸ், திமுக மன்னிப்பு கேட்க வேண்டும்


    கோவை பீளமேடு பகுதியில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார். அப்போது பேசிய அவர், ”திமுக இத்தனை ஆண்டு காலமாக காங்கிரஸ் அரசு எங்களை கேட்காமல் கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்துவிட்டதாக கூறுவது கட்டுக்கதை. திமுகவினர் தமிழக மக்களை வஞ்சித்து இருக்கிறார்கள். அப்போதைய மத்திய அமைச்சர் கேவல்சிங் கலைஞர் கருணாநிதியை சந்தித்து அனுமதி பெற்ற பின்னரே, கச்சத்தீவு கொடுக்கப்பட்டுள்ளது. கச்சத்தீவு இலங்கைக்கு கொடுக்கப்பட்டதில் கருணாநிதியின் முடிவும் இருந்தது. கருணாநிதி கச்சத்தீவை கொடுக்க சம்மதம் தெரிவித்தது மட்டுமின்றி சிறிய அளவில் போராட்டம் நடத்தி கொள்வதாக அமைச்சர் கேவல் சிங்கிடம் பேசியுள்ளார். முதலமைச்சராக இருந்த கருணாநிதி அனுமதி இல்லாமல் கச்சத்தீவை மத்திய அரசு கொடுக்க வாய்ப்பே இல்லை. இந்திய இறையாண்மை மீது திமுகவிற்கு நம்பிக்கை உள்ளதா?ஆழ்கடலில் நடக்கும் அனைத்து பிரச்சினைகளுக்கும் காரணம் திமுக தான்.
    தமிழக பாஜக கச்சத்தீவை மீட்க வேண்டும் என கோரிக்கையை வைத்துள்ளோம். தமிழக கடல் பகுதியில் மீன் வளம் குறைவாக இருப்பதால் தமிழக மீனவர்கள் சர்வதேச எல்லை அருகே சென்றாலே இலங்கை அரசு கைது செய்கிறது. தமிழக மீனவர்கள் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண கச்சத்தீவு திரும்ப பெற வேண்டும். கச்சத்தீவை தாரை வார்த்தது காங்கிரசும், திமுகவும் சேர்ந்து செய்த சதி. கச்சத்தீவை மீட்கும் விவகாரத்தில் இந்திய அரசு நல்ல முடிவு எடுக்கும். கச்சத்தீவு மீட்பு பாஜகவின் தேர்தல் அறிக்கையில் இடம் பெறும். வங்கதேசத்துடன் உள்ள எல்லை குழப்பங்களை தீர்க்க சில பகுதிகள் கொடுக்கப்பட்டது.  வங்கதேச பிரச்சனையும், கச்சத்தீவு பிரச்சனையும் ஒன்றல்ல. சரித்திரம் தெரியாமல் மல்லிகர்ஜூன கார்கே பேசுகிறார். கச்சத்தீவை இலங்கைக்கு கொடுத்ததில் இந்தியாவிற்கு ஒரு பைசா கூட இலாபம் இல்லை.

    மன்னிப்பு கேட்க வேண்டும்
    கச்சத்தீவை தாரைவார்த்ததற்காக காங்கிரஸ் கட்சி மன்னிப்பு கேட்க வேண்டும். காங்கிரஸ் மற்றும் திமுக மன்னிப்பு பிரச்சாரம் செய்ய வேண்டும். முதலமைச்சர் ஸ்டாலினுக்கு செலக்டிவ் அம்னிசியா உள்ளது. நான் பிடித்த முயலுக்கு 3 கால் என பேசுவது முதலமைச்சர் பொறுப்பிற்கு அழகல்ல.  கடந்த 33 மாதங்களில் திமுக அரசு செய்த சாதனை என்ன? பிரதமர் மோடி 10 இலட்சம் 76 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்களை தமிழகத்திற்கு தந்துள்ளார். அதிக அளவிலான அரசு மருத்துவக் கல்லூரிகளை பிரதமர் தந்துள்ளார். நாங்கள் கேட்கும் கேள்விக்கு முதலமைச்சர் பதில் சொல்ல வேண்டும். அன்று நாடாளுமன்றத்தில் இருந்து திமுகவினர் ஏன் வெளிநடப்பு செய்தனர்?முதலமைச்சர் தான் திசை திருப்ப முயல்கிறார். கச்சத்தீவை இலங்கை கொடுப்பது பற்றி அன்றைய பிரதமர் இந்திராகாந்தி, ஒரு மத்திய அமைச்சர், முதலமைச்சர் கருணாநிதி ஆகியோருக்கு மட்டும் தான் தெரியும்.
    கச்சத்தீவு மதிப்பற்றது என்பது காங்கிரஸ் நிலைப்பாடாக இருந்துள்ளது. மீனவர்கள் நலனுக்காக இந்த பிரச்சனையை தீர்க்க நாங்கள் முயல்கிறோம். இலங்கை முழுவதும் இந்தியா உடன் நட்புறவில் உள்ளது. இலங்கைக்கு நிதியுதவி செய்வது தொப்புள் கொடி உறவு என்பதால் தான். இதற்கும் தேர்தலுக்கும் சம்மந்தம் இல்லை. சீனாவிற்கு நிலம் கொடுத்தது எல்லாம் காங்கிரஸ் ஆட்சி காலத்தில் தான். நாங்கள்  ஒவ்வொரு இடமாக மீட்டு கொண்டுள்ளோம். பாஜக அதிகாரபூர்வமாக எல்லை பகுதியை சீனாவிற்கு தரவில்லை. திசை மாற்றுவதற்காக கார்கே பேசுகிறார். இலங்கை தமிழருக்கு குடியுரிமை உள்ளது. 11 ஆண்டுகள் வாழ்ந்தவர்களுக்கு குடியுரிமை தந்துள்ளோம். எதிர் கட்சிகளை ஒழிப்பேன் என மோடி சொல்லவில்லை. காங்கிரஸ் கட்சி ஆட்சி இருக்க கூடாது என்பது தான் எங்கள் நோக்கம்” எனத் தெரிவித்தார்.

    மேலும் காண

    Source link

  • Vishwaroopam: கமலை அலற விட்ட ஜெயலலிதா.. உதவ முன்வந்த கலைஞர் கருணாநிதி.. விஸ்வரூபத்தின் பின்னணி கதை!

    Vishwaroopam: கமலை அலற விட்ட ஜெயலலிதா.. உதவ முன்வந்த கலைஞர் கருணாநிதி.. விஸ்வரூபத்தின் பின்னணி கதை!


    <p>விஸ்வரூபம் படத்தால் அன்றைய முதல்வர் ஜெயலலிதா – கமல்ஹாசன் இடையே பிரச்சினை வெடித்தது. இன்று அப்படம் வெளியாகி 11 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் அதனைப் பற்றி காணலாம்.&nbsp;</p>
    <p>கடந்த 2013 ஆம் ஆண்டு ராஜ்கமல் நிறுவனம் தயாரிப்பில் வெளியான படம் &ldquo;விஸ்வரூபம்&rdquo;. நடிகர் கமல்ஹாசன் இயக்கி நடித்த இந்த படத்தில் ராகுல் போஸ், பூஜா குமார், ஆண்ட்ரியா, சேகர் கபூர் உள்ளிட்ட பலரும் நடித்திருந்தனர். இப்படத்தின் திரைக்கதையை கமல்ஹாசன், சக்ரி டோலேட்டி மற்றும் அதுல் திவாரி ஆகியோர் இணைந்து எழுதியிருந்தனர். தமிழ் மற்றும் ஹிந்தி ஆகிய இரு மொழிகளிலும் ஒரே நேரத்தில் படமாக்கப்பட்டு விஸ்வரூபம் வெளியானது. இப்படத்துக்கு ஷங்கர் மகாதேவன்-எஹ்சான்-லாய் இசையமைத்திருந்தனர்.&nbsp;</p>
    <p>ஆனால் இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி மிகப்பெரிய அதிர்வலைகளை உண்டாக்கியது. விஸ்வரூபம் படத்தில் இஸ்லாமியர்களை தவறாக சித்தரித்து காட்சிகள் வைக்கப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. அதற்கு தடை போட வேண்டும் என இஸ்லாமிய அமைப்புகள் கொதித்தெழுந்தனர். அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதாவிடம் முறையிட படம் ஜனவரி 25 ஆம் தேதி வெளியாகும் என தெரிவிக்கப்பட்டதற்கு 2 நாட்கள் முன்பு தடை விதிக்கப்பட்டது.</p>
    <p>&nbsp;படத்துக்கு 2 வாரங்கள் தடை விதிக்கப்பட்ட நிலையில் படக்குழுவினர் நீதிமன்றத்தை நாடினர். இதனைத் தொடர்ந்து இஸ்லாமிய நிர்வாகிகள் மத்தியில் படத்தை திரையிட்டு காட்டிஅவர்கள் சொன்ன காட்சிகளை நீக்கியும் படத்துக்கான தடை தொடர்ந்தது. இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த கமல்ஹாசன், &lsquo;என் சொத்துக்கள் அனைத்தையும் அடமானத்தில் வைத்து நான் விஸ்வரூபம் படத்தை இயக்கியுள்ளேன். இதை ரிலீஸ் செய்யாவிட்டால் நான் இந்த நாட்டை விட்டு வெளியேற போவதை தவிர வேறு வழி கிடையாது&rsquo; என கூறினார்.&nbsp;</p>
    <p>இதனால் கமலுக்கு மக்கள் மத்தியில் அனுதாபம் எழ அது அன்றைய ஆளும் அதிமுக அரசுக்கு எதிராக விமர்சனமாக மாறியது. இதனால் படம் ரிலீஸ் செய்யப்பட்டது. இதன்பின்னர் அடுத்த சில மாதங்களில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட கமல்ஹாசன், நாட்டை விட்டு வெளியேறுவேன் என விஸ்வரூபம் படத்தை வெளியிடுவது தொடர்பாக பிரச்சினைகள் எழுந்ததால் கூறினேன். அப்படியெல்லாம் வெளியேற மாட்டேன். மேலும் இஸ்லாமிய சகோதரர்கள் &nbsp;மீது தனக்கு எந்த வெறுப்பும் இல்லை. விஸ்வரூபம் படத்தைப் பார்த்தால் தெரியும். நான் அவர்களை மிகவும் நேசிக்கிறேன். படம் வெளியாவதில் தாமதம் ஏற்பட்டதால் தனக்கு ரூ.30 கோடி முதல் ரூ.60 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டதாக கூறியிருந்தார்.&nbsp;</p>
    <p>ஆனால் கடந்த ஆண்டு பேசிய <a title="கமல்ஹாசன்" href="https://tamil.abplive.com/topic/kamal-haasan" data-type="interlinkingkeywords">கமல்ஹாசன்</a>, &lsquo;விஸ்வரூபம் படம் எடுத்தேன். அப்போது நான் தடுமாறுவதை வேடிக்கை பார்த்து சிரித்தார் ஒரு அம்மையார் (ஜெயலலிதா). அப்போது &nbsp;கலைஞர் என்னை தொடர்பு கொண்டு ஏதாவது உதவி வேண்டுமா ? என கேட்டார். உங்களுக்கு ஏதாவது உதவி வேண்டுமானால் கேளுங்கள் நான் இருக்கிறேன் என கருத்துகளை தெரிவித்தது சர்ச்சையை கிளப்பியது.&nbsp;</p>

    Source link

  • Kalaignar 100 Rajinikan Speaks About Kalaignar Karunanidhi Netizens Slams To Him

    Kalaignar 100 Rajinikan Speaks About Kalaignar Karunanidhi Netizens Slams To Him


    Kalaignar 100 Rajini: கலைஞர் 100 விழாவில் கருணாநிதியை புகழ்ந்து ரஜினி பேசியதால், கலைஞருக்கு எதிராக சிவாஜி பேசியது இணையத்தில் வைரலாகி வருகிறது. 
     
    கடந்த ஜனவரி 6 ஆம் தேதி கலைஞர் 100 விழா சென்னையில் நடைபெற்றது. அதில் தமிழ் திரையுலகை சேர்ந்த முன்னணி நடிகர், நடிகைகள் பங்கேற்றனர். விழாவில் பங்கேற்று பேசிய ரஜினி, ”சிவாஜியை ஒரே படத்தில் ஸ்டாராக்கியவர் கருணாநிதி. சாதாரணமாக இருந்த எம்ஜிஆரை பெரிய வெற்றிப்படங்கள் கொடுக்க வைத்தவர், கலைஞர் அரசியலுக்கு செல்லாமல் சினிமாவில் இருந்திருந்தால் எத்தனையோ சிவாஜி, எம்ஜிஆர்களை உருவாக்கி இருக்கலாம்” என ரஜினி பேசியிருந்தார். 
     
    ரஜினியின் இந்த பேச்சுக்கு சிவாஜி மற்றும் எம்ஜிஆர் ரசிகர்கள் தரப்பில் எதிர்ப்பும் விமர்சனங்களும் வைக்கப்பட்டு வருகின்றன. அதில் கருணாநிதிக்கு பதிலடி கொடுக்கும் விதமாக சிவாஜி கணேசன் பேசியது இணையத்தில் பகிரப்பட்டு வருகிறது. அந்த செய்தி குறிப்பில், ” கருணாநிதி இப்போது என்ன கூறுகிறார் என்பது அவருக்கே தெரியாது. என்னையும், எம்ஜிஆரையும் தனிப்பட்ட முறையில் தாக்கி பேசும் அவசியம் அவருக்கு வந்துவிட்டது. நடிகர்கள் அரசியல் பேசலாமா என்று அவர் கேட்கிறார். 
     
    கருணாநிதி மட்டும்தான் அரசியல் பேச வேண்டும் என்றால், அவருக்கு என்ன கொம்பா முளைத்திருக்கிறது. அவர் வசனத்தை நான் பேசியதால் தானே கருணாநிதிக்கு பெருமை ஏற்பட்டது. எனக்கும், எம்ஜிஆருக்கும் கருணாநிதியின் அரசியல் எப்படிப்பட்டது என்று தெரியும்” என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 
     
    சிவாஜியின் இந்த பேச்சை ட்ரோல் செய்து வரும் சிலர், கருணாநிதி வசனம், கதை எழுதிய உளியின் ஓசை உள்ளிட்ட  படங்களில் ரஜினி ஏன் நடிக்கவில்லை என்று கேட்டதுடன், சிவாஜிகணேசனுக்கு கருணாநிதி இல்லாமல் வெற்றியை கொடுத்தது கட்டபொம்மன் படம் தான் என்றும், அதற்கு கருணாநிதி வசனம் எழுதவில்லை என்றும் விமர்சித்து வருகின்றனர். அப்படி ஒரே படத்தின் மூலம் சிவாஜியை கருணாநிதியை உருவாக்கினார் என்றார், நடிகர் திலகத்தின் மறைவுக்கு பிறகு ஏன் இன்னொரு சிவாஜியை உருவாக்க முடியவில்லை என்றும், தனது மகன்களை ஏன் நல்ல நடிகர்களாக உருவாக்கமுடியவில்லை என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
     

     
    கலைஞர் 100 விழாவில் ரஜினி பேசிய சில கருத்துகள் சிவாஜி, கருணாநிதிக்கு இடையிலாத விவாதத்தையே எழுப்பியுள்ளது. சென்னையில் நடந்த விழாவில் நடிகர் ரஜினிகாந்த், கமல் ஹாசன், சூர்யா, வடிவேல், கார்த்தி, தனுஷ், சிவகார்த்திகேயன், கன்னட ஸ்டார் சிவராஜ்குமார் மற்றும் நடிகை நயன்தாரா உள்ளிட்ட பல திரைக்கலைஞர்கள் கலந்து கொண்டார்கள்.
     

     

    Source link

  • Kalaingar 100 Function Dhanush Speaks About Rajini | Kalaingar 100 Dhanush: கலைஞர் 100 விழாவில் ரஜியை பாராட்டி பேசிய தனுஷ்

    Kalaingar 100 Function Dhanush Speaks About Rajini | Kalaingar 100 Dhanush: கலைஞர் 100 விழாவில் ரஜியை பாராட்டி பேசிய தனுஷ்

    Kalaingar 100 Dhanush: கலைஞர் 100 விழாவில் பங்கேற்ர நடிகர் தனுஷ், ரஜினி நடித்த எந்திரன் படத்தை மறைந்த திமுக தலைவர் கருணாநிதியுடன் இணைந்து பார்த்ததை பேசும்போது, அதை கேட்டு ரஜினி ரசித்து சிரித்த வீடியோ இணையத்தில் வைரலானது.
    மறைந்த முன்னாள் முதலமைச்சரும் தமிழ் சினிமாவுக்கு பெரும் பங்காற்றியவருமான மு.கருணாநிதியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம் சார்பில் ‘கலைஞர் 100’ (Kalaingar 100) விழா ​ சென்னையில் நடைபெற்றது.  
    நேற்று மாலை 5 மணிக்குத் தொடங்கிய இந்த விழா இரவு 11 மணி வரை நடைபெற்றது. தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், விளையாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்,  உச்ச நட்சத்திரங்களான ரஜினிகாந்த், கமல்ஹாசன், நடிகர்கள் சூர்யா, தனுஷ், சிவகார்த்திகேயன், ஜெயம் ரவி, வடிவேலு, நடிகைகள் நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், ரோஜா இயக்குநர்கள் வெற்றிமாறன், பா.ரஞ்சித், பார்த்திபன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 
     
    நிகழ்ச்சியில் பேசிய நடிகர் தனுஷ், 2010ம் ஆண்டு ரஜினிகாந்த் நடித்த எந்திரன் படத்தை முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியுடன் இணைந்து பார்த்தேன். ரஜினிகாந்த் ஒரு சிறந்த கலைஞர் மட்டுமில்லை. நடிப்பில் மிகவும் பொறுமை நிறைந்தவர்” என்று புகழ்ந்து கூறியுள்ளார். தன்னை பற்றி தனுஷ் புகழ்ந்து பேசியதை கீழே அமர்ந்துக் கொண்டு கேட்ட ரஜினி, சிரித்து மகிழ்ந்தார்.  மேடையில் ரஜினியை தனுஷ் பேசுவதும், அதை ரஜினி ரசித்தும் கேட்கும் வீடியோவும் இணையத்தில் டிரெண்டாகி வருகிறது. 

    தொடர்ந்து பேசிய தனுஷ், “கலைஞரின் அரசியல், சினிமா சாதனை குறித்து பேச எனக்கு வயதோ, அனுபவமோ இல்லை. ஒரு படத்தின் பூஜையின்போது தான் முதன்முதலில் அவரை நேரில் சந்தித்தேன். அப்போது அங்கு வந்திருந்தவர் என்னை, ‘வாங்க மன்மத ராஜா’ எனக் கூறி அழைத்தார். நம்முடைய பாடலை இவர் கேட்டுள்ளாரா என ஆச்சரியமாக இருந்தது, நெகிழ்ந்துவிட்டேன்” என நினைவுகளை பகிர்ந்தார்.
     
    நிகழ்வில் கருணாநிதி பற்றி பேசிய ரஜினி, “சில பேர் அவங்களோட அறிவைக் காமிக்குறதுக்காக பேசுவாங்க. மத்தவங்களுக்கு புரியுதானு யோசிக்க மாட்டாங்க. ஆனா கலைஞர் அறிஞர் சபைல அறிஞராவும் கவிஞர் சபைல கவிஞராவும் பாமரனுக்கு பாமரனாவும் பேசுவாரு.  எப்பவுமே ஒருத்தருக்கு எழுத்தாற்றல் இருந்தா பேச்சாற்றல் இருக்காது.பேச்சாற்றல் இருந்தால் எழுத்தாற்றல் இருக்காது ஆனா, கலைஞருக்கு இது ரெண்டுமே இருந்துச்சு. கலைஞர் குறித்து பேச ஆரம்பித்தால் எங்கு ஆரம்பிப்பது, எங்கு முடிப்பது என எனக்கு தெரியாது. அந்த அளவிற்கு கலைஞரால் ஈர்க்கப்பட்டவன் நான்” என்றார். 
     

     
     
     

    Source link

  • உதயநிதி ஸ்டாலின் கத்துக்குட்டியாக இருக்கிறார்… கடுமையாக விமர்சித்த எல்.முருகன்…

    உதயநிதி ஸ்டாலின் கத்துக்குட்டியாக இருக்கிறார்… கடுமையாக விமர்சித்த எல்.முருகன்…

    அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அரசியலில் கத்துக்குட்டியாக இருக்கிறார் என்று மத்திய இணை அமைச்சர் எல். முருகன் விமர்சித்துள்ளார்.

    கோவை – பொள்ளாச்சி இடையே முன்பதிவு இல்லாத ரயில் சேவை துவக்க விழா, கோவை ரயில் நிலையத்தில் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கலந்து கொண்டு, ரயில் சேவையை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

    பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எல்.முருகன், கோவை – பொள்ளாச்சி இடையே முன்பதிவில்லா ரயில் சேவை வேண்டும் என்ற மக்களின் நீண்ட நாள் கோரிக்கை, ஒரே மாதத்தில் மிக வேகமாக மத்திய ரயில்வே அமைச்சரால் நிறைவேற்றி தரப்பட்டுள்ளது என்றார்.

    இந்தாண்டு பட்ஜெட்டில் ரூ.6,000 கோடி ரயில்வே துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், தமிழகத்தில் 10 புதிய வழித்தடங்ககள் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

    காங்கிரஸ் ஆட்சியில் வெறும் ரூ.800 கோடி தான், 2009 முதல் 2014 ஆம் ஆண்டு வரை ரயில்வே துறைக்கு ஒதுக்கப்பட்டதாக குற்றம் சாட்டிய எல்.முருகன், சென்னையில் இருந்து கோவைக்கும், சென்னையிலிருந்து திருநெல்வேலிக்கும் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருவதாக பெருமிதம் தெரிவித்தார்.

    விரைவில் கோவையிலிருந்து பெங்களூருக்கு வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளதாகவும், தமிழகத்தில் கோயம்புத்தூர், மேட்டுப்பாளையம், உதகை, திருப்பூர், சேலம் உட்பட 75 ரயில் நிலையங்கள் அம்ருத் பாரத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட உள்ளதாகவும் கூறினார்.

    அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கருணாநிதி கிடையாது என்ற அவர், உதயநிதி அரசியலில் கத்துக்குட்டியாக இருப்பதாக விமர்சித்தார். பக்குவப்பட்ட தலைவராக இருக்க வேண்டும் என அறிவுறுத்திய எல்.முருகன், மத்திய அரசுடன் இணக்கமாக செயல்படுவதால் தமிழக அரசுக்கு தான் நல்ல பலன் கிடைக்கும் என்றார்.