Tag: கனிமொழி

  • Caste, Gender Discrimination to the President in BJP Rule: Kanimozhi Condemns | Kanimozhi: பாஜக ஆட்சியில் நாட்டின் தலைவருக்கே சாதி, பாலினப் பாகுபாடு
    Caste, Gender Discrimination to the President in BJP Rule: Kanimozhi Condemns | Kanimozhi: பாஜக ஆட்சியில் நாட்டின் தலைவருக்கே சாதி, பாலினப் பாகுபாடு


    பாஜக ஆட்சியில் நாட்டின் அரசமைப்புத் தலைவரையே சாதி, பாலினப் பாகுபாடு தொடர்வதாக திமுக துணைப் பொதுச் செயலாளரும் தூத்துக்குடி எம்.பி.யுமான கனிமொழி கண்டனம் தெரிவித்துள்ளார்.
    இந்தியாவில் குடிமக்களுக்கு வழங்கப்படும் உயரிய விருது பாரத ரத்னா. எந்தத் துறையாக இருந்தாலும் அதில் உயரிய சேவை புரிந்தவர்களை அங்கீகரிக்கும் விதமாக இந்த விருது வழங்கப்படுகிறது. அரசியல், கலை, இலக்கியம் மற்றும் அறிவியல் ஆகிய துறைகளில் சிறப்பாகப் பணியாற்றும் விஞ்ஞானிகள், தொழிலதிபர்கள், எழுத்தாளர்கள், சமூக சேவகர்கள் போன்றோருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்படுகிறது. 
    பாரத ரத்னா விருது
    அந்த வகையில், மறைந்த பிஹார் முதலமைச்சர் கர்பூரி தாக்கூர், முன்னாள் துணை பிரதமர் எல்.கே. அத்வானி ஆகியோருக்கு இந்தாண்டுக்கான பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, நாட்டின் முன்னாள் பிரதமர்கள் நரசிம்ம ராவ், சரண் சிங், வேளாண் விஞ்ஞானி எம்.எஸ். சுவாமிநாதன் ஆகியோருக்கு பாரத் ரத்னா விருது அறிவிக்கப்பட்டது.
    இந்த நிலையில் மார்ச் 30ஆம் தேதி அன்று குடியரசுத் தலைவர் மாளிகையில், விருதாளர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. தொடர்ந்து எல்.கே.அத்வானியின் வீட்டுக்கே நேரில் சென்று குடியரசுத் தலைவர் திரெளபதி முர்முவும் பிரதமர் மோடியும் நேற்று விருதை வழங்கினார்.
    நின்று கொண்டிருந்த குடியரசுத் தலைவர்
    அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களில் சிலவற்றில், மோடி, அத்வானிக்கு அருகில் முர்மு நின்று கொண்டிருந்தார். அவர்களின் இருவரின் அருகில் நாற்காலி காலியாக இருந்தும் அவர் அமரவில்லை. இது சமூக வலைதளங்களில் சர்ச்சையைக் கிளப்பியது.
    இதுகுறித்துத் திமுக துணைப் பொதுச் செயலாளரும் தூத்துக்குடி எம்.பி.யுமான கனிமொழி, கண்டனம் தெரிவித்துள்ளார்.
    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ’’பாஜக ஆட்சியின் கீழ், நமது நாட்டின் அரசியலமைப்புத் தலைவரையே கூட சாதி மற்றும் பாலினப் பாகுபாடு எவ்வாறு தொடர்கிறது என்பதற்கு இந்தப் படம் ஓர் அப்பட்டமான சான்றாக விளங்குகிறது’’ என்று பதிவிட்டுள்ளார்.  

    Deeply dismayed by the blatant disrespect shown towards our @RashtrapatiBhvn. This image serves as a stark evidence of how caste and gender discrimination persist, even towards the constitutional head of our nation, under BJP rule. pic.twitter.com/8jZVOrtZGg
    — Kanimozhi (கனிமொழி) (@KanimozhiDMK) April 1, 2024

    எனினும் இதற்கு பாஜக ஆதரவாளர்கள், சற்றே தள்ளி இருந்த நாற்காலியில் முர்மு அமர்ந்திருப்பதைச் சுட்டிக் காட்டுகின்றனர்.
    ஆனாலும் அருகில் இருந்த நாற்காலியில் அமராமல், தள்ளி அமர வைக்கப்பட்டதற்குக் காரணம் என்ன என்று மேலும் சிலர் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

    மேலும் காண

    Source link

  • 2G Case: யாரும் எதிர்பார்க்கல.. 2ஜி வழக்கில் ட்விஸ்ட்.. கனிமொழி, ஆ. ராசாவுக்கு மீண்டும் நெருக்கடி!
    2G Case: யாரும் எதிர்பார்க்கல.. 2ஜி வழக்கில் ட்விஸ்ட்.. கனிமொழி, ஆ. ராசாவுக்கு மீண்டும் நெருக்கடி!


    <p><strong>2G Case:</strong> 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீட்டில் முறைகெடு நடந்ததாக தொடரப்பட்ட வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ. ராசா, திமுக மூத்த தலைவர் கனிமொழியை விடுவித்து சிறப்பு நீதிமன்றம் வழங்கிய தீர்ப்புக்கு எதிராக&nbsp; சிபிஐ தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை விசாரிக்க டெல்லி உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.</p>

    Source link

  • PM Modi avoid Minister EV Velu kanimozhi MP name inauguration speech | விழா மேடையிலே கனிமொழி, எ.வ.வேலு பெயரை தவிர்த்த பிரதமர் மோடி
    PM Modi avoid Minister EV Velu kanimozhi MP name inauguration speech | விழா மேடையிலே கனிமொழி, எ.வ.வேலு பெயரை தவிர்த்த பிரதமர் மோடி


    தூத்துக்குடியில் இன்று நடைபெற்ற அரசு நிகழ்ச்சியில் குலசேகரப்பட்டினம் ராக்கெட் ஏவுதளத்திற்கு அடிக்கல் நாட்டியது உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார், இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவி, மத்திய அமைச்சர் எல்.முருகன் ஆகியோருடன் தமிழ்நாடு அரசு சார்பில் அமைச்சர் எ.வ.வேலு, தூத்துக்குடி எம்.பி. கனிமொழி ஆகியோர் பங்கேற்றனர்.
    எ.வ.வேலு, கனிமொழி பெயரை தவிர்த்த பிரதமர் மோடி:
    இந்த நிகழ்ச்சியில் பல்வேறு திட்டங்களைத் தொடங்கி வைத்து மக்கள் முன்பு பேசிய பிரதமர் மோடி ஆளுநர் விழா மேடையில் ஆர்.என்.ரவி, மத்திய அமைச்சர்கள் சோனாவால், சாந்தனு தாக்கூர், ஸ்ரீபத் யஷோநாயக் மற்றும் எல்.முருகன் அமர்ந்திருந்தனர். அவர்களது பெயர்களை எல்லாம் குறிப்பிட்ட பிரதமர் மோடி, இவர்கள் இருவரது பெயரை மட்டும் தவிர்த்து விட்டார். பொதுவாக, எந்தவொரு அரசு நிகழ்ச்சியாக இருந்தாலும் அந்த நிகழ்ச்சியில் கட்சி பேதமின்றி அந்த தொகுதி மற்றும் துறை சார்ந்த பிரதிநிதிகள் பங்கேற்பது வழக்கம். அந்த நிகழ்ச்சியில் அவர்களுக்கு முறையான வரவேற்பு அளிக்கப்படுவதும் வழக்கம்.
    ஆனால், பிரதமர் மோடியே தமிழ்நாடு அரசியலில் பிரபலமான கனிமொழி மற்றும் எ.வ.வேலு ஆகியோரது பெயரை தவிர்த்துள்ளார். ஏற்கனவே இந்த நிகழ்ச்சியில் தனக்கு முறையான அழைப்பு வழங்கப்படவில்லை என்று அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் பங்கேற்கவில்லை.
    தமிழக அரசு மீது குற்றச்சாட்டு:
    மேலும், இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி தமிழ்நாடு அரசு மீது சராமரியான குற்றச்சாட்டுகளை அடுக்கினார். பிரதமர் மோடி தனது உரையில், மத்திய அரசின் திட்டங்களை தமிழ்நாடு அரசு மறைக்கிறது என்றும், தமிழக அரசின் தடைகளை தாண்டி மத்திய அரசின் திட்டத்தை செயல்படுத்தியே தீருவோம் என்று பேசினார்.
    ஆர்.என்.ரவி, மத்திய அமைச்சர் அமைச்சர் எல்.முருகன் மற்றும் வட இந்தியாவைச் சேர்ந்த மத்திய அமைச்சர்கள் ஆகியோர் பெயர்களை கூறி வரவேற்றார். ஆனால், அதே மேடையில் தமிழ்நாடு அரசு சார்பில் பங்கேற்றிருந்த அமைச்சர் எ.வ.வேலு மற்றும் கனிமொழி எம்.பி. ஆகியோர் பெயர்களை அவர் தவிர்த்துவிட்டார்.
    அதற்கு பதிலாக, பொதுவாக அமைச்சர்கள் என்று கூறினார். தூத்துக்குடியில் இன்று பிரதமர் மோடி பங்கேற்றிருந்த நிகழ்ச்சியில் முதலில் அமைச்சர் கீதா ஜீவன் பங்கேற்கவிருந்த நிலையில், அவருக்கு பதிலாக மக்களவை உறுப்பினர் கனிமொழி பங்கேற்றார். அரசு நிகழ்ச்சி ஒன்றில் பிரதமர் மோடி மத்திய அமைச்சர்களின் பெயர்களை கூறி வரவேற்று, தமிழ்நாடு அமைச்சரையும், தூத்துக்குடி மக்களவை உறுப்பினரது பெயரையும் மட்டும் தவிர்த்திருப்பது பெரும் அதிர்ச்சியை தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    மேலும் படிக்க: எல்லா துறைகளிலும் முதலிடத்தை நோக்கி தமிழ்நாடு…அதற்கு காரணம் திராவிட மாடல் அரசின் சாமர்த்தியம் – முதல்வர் ஸ்டாலின்
    மேலும் படிக்க: PM Modi TN Visit LIVE: மத்திய அரசின் திட்டங்களை தமிழ்நாடு அரசு மறைக்கிறது – பிரதமர் மோடி

    மேலும் காண

    Source link

  • ஜனநாயகத்துடன் சிறந்த நாடாக மோடி தலைமையில் இந்தியா – அர்ஜுன் சம்பத் பேச்சு…
    ஜனநாயகத்துடன் சிறந்த நாடாக மோடி தலைமையில் இந்தியா – அர்ஜுன் சம்பத் பேச்சு…

    உலகத்திலேயே நீதி சட்டம் ஜனநாயகம் அடிப்படையில் தலைசிறந்த நாடாக மோடி தலைமையில் இந்தியா திகழ்வதாக இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜூன் சம்பத் குற்றம்சாட்டியுள்ளார்.

    மீண்டும் மோடி வேண்டும் மோடி என்ற முழக்கத்தோடு, செங்கோல் வழிபாடு தமிழகத்தில் உள்ள அனைத்து சிவாலயங்களிலும் பூஜைகள் செய்யப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக நெல்லை நெல்லையப்பர் காந்திமதி அம்பாள் திருக்கோவிலில், இந்து மக்கள் கட்சி மாநில தலைவர் அர்ஜுன் சம்பத், மூன்றாவது முறையாக மீண்டும் இந்தியாவில் நரேந்திர மோடி ஆட்சி வரவேண்டும் என செங்கோல் உடன் வருகை தந்து சிறப்பு பூஜைகள் செய்து வழிபாட்டார்.

    இதைத் தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், தமிழகம் முழுவதும் அனைத்து சிவ ஆலயங்களும் சிவ செங்கோல் வழிபாடு நடைபெற்று வருகிறது என்றார்.

    மீண்டும் மோடி வேண்டுமோடி என்று பதவி ஏற்க வேண்டும் என்று நாங்கள் செங்கோல் வழிபாடு செய்து வருகிறோம். மீண்டும் பாராளுமன்றத்தில் செங்கோல் நிறுவி தமிழர்களுக்கும் செங்கோல் ஆதினத்திற்கும் மிகவும் பெருமை செய்து உள்ளார்கள் பாரத பிரதமர் மோடியும் அமிர்தாவும். நம் நாட்டில் உள்ள அனைத்து அரசுகளும் செங்கோலை மையமாக வைத்து ஆட்சி செய்து உள்ளார்கள்.

    உலகத்திலேயே நீதி சட்டம் ஜனநாயகம் அடிப்படையில் தலைசிறந்த நாடாக மோடி தலைமையில் இந்தியா இருக்கிறது. உலக நாடு முழுவதும் தொற்று காலங்களில் துன்பத்தில் இருக்கும் போது இந்தியாவில் இருந்துதான் அவர்களுக்கான கொரோனா தடுப்பூசி அனுப்பி வைக்கப்பட்டது.

    ஜி 20 மாநாட்டிற்கு இந்தியா தலைமையேற்றுள்ளது. இதனால் அனைத்து மதத்தினரும் அனைத்து ஜாதி சான்றோர்களும் அனைவருக்கும் பொதுவான ஜனநாயக நாடாக இந்த நாடு இருக்கிறது.

    செங்கோல் இருக்கும் வரை யாருக்கும் அநீதி ஏற்பட வாய்ப்பு இல்லை. இங்கு உள்ள கிறிஸ்தவர்கள் இஸ்லாமியர்கள் அனைவருமே பாரத தாயின் குழந்தைகள். எல்லோரும் இந்த சொங்களை ஏற்றுக் கொள்வார்கள். யாருக்கும் அச்சுறுத்தலோ பாகுபாடு இல்லாமல் எல்லா மதத்திற்கும் பொது சிவில் சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது.

    மணிப்பூர் நடைபெற்று வருவது தவறு. அந்த தவறுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. காங்கிரஸ் கட்சி காலத்தில் 16 பெண்கள் நிர்வாணமாக வந்து போராட்டத்தில் பங்கேற்றனர். குக்கி இன மக்கள் அவர்கள் இந்தியர்கள் கிடையாது. அவர்கள் பர்மாவிலிருந்து இங்கு வந்தவர்கள். அவர்கள் அங்குள்ள தமிழர்களை தாக்கினார்கள். மணிப்பூர் மக்கள் அனைவரும் ஒற்றுமையாக தான் இருக்கிறார்கள். இந்த ஒற்றுமையை சிலர் வேண்டுமென்று தூண்டி விடுகிறார்கள்.

    பெண்களுக்கு எதிராக கொடுமை நடந்தால் அவர்களின் மீது மரண தண்டனை விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவிலிருந்து ஊடுருவி கம்யூனிஸ்டுகள் கிறிஸ்துவ மிஷன் இதனை தூண்டி விடுகிறார்கள்.

    நாடாளுமன்றத்தில் உள்துறை அமைச்சர் அமித்ஷா பதில் சொல்ல வந்த அவரை பதில் சொல்ல விடாமல் தடுக்கப்பட்டு வருகிறது. தொடர்ந்து இந்த அரசு மீது நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. இது தொடர்பாக நாங்கள் சந்திக்க தயார்.

    இங்குள்ள திமுக கட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை. இங்கு உள்ள பெண்களுக்கு திமுக அரசு பாதுகாப்பு தரட்டும்.

    மோடிக்கு எதிரான பிரச்சாரங்கள் தமிழகத்தில் கொண்டுவரப்படுகிறது. தமிழகத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை இருக்கிறது. திமுக கட்சியில் மகளிர் சென்று கேட்டுப் பாருங்கள். தமிழகத்தில் பாதுகாப்பு இருக்கிறதா என கேளுங்கள் பெண்களுக்கான உரிமை தொகை என்பது எல்லாருக்கும் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. தற்போது பல விதிமுறைகள் அதற்கு கடைபிடிக்கப்படுகிறது. ஒவ்வொரு வேலையும் தமிழக முதலமைச்சர் மாற்றி மாற்றி பேசுவார் தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் இரட்டை வேடம் போட்டு வருகிறார்.

     

    கிறிஸ்துவர்களுக்கு மட்டும்தான் கனிமொழி எம்.பி.யாக இருக்கிறார். மற்ற இந்துக்களுக்கு எதிராக செயல்பட்டு வருகிறார். கனிமொழி தான் தொழில் வளத்தை தடுப்பது மின்சாரத் தயாரிப்பை எதிர்ப்பது வளர்ச்சி திட்டங்களுக்கு எதிராக எதிர்ப்பது ஸ்டெர்லைட், கூடங்குளம் உள்ளிட்ட திட்டங்களுக்கு எதிராக எதிர்ப்பு தெரிவிப்பது இவர்களுக்கு வேலையாக உள்ளது.

    மணிப்பூர் பெண்களுக்கு எதிராக மெழுகுவர்த்தியை தூக்கிக்கொண்டு கனிமொழி வருவார். தென் மாவட்டங்களில் கிறிஸ்துவ மக்களின் அடிமையாக கனிமொழி இருக்கிறார. திமுக அரசு கொள்ளிக்கட்டையால் தலையால் சொரிகிறது. இதற்கான பாதிப்பு அவர்களுக்கே தெரியும். இவ்வாறு அர்ஜுன் சம்பத் தெரிவித்தார்.