Tag: கங்கனா ரனாவத்

  • Subash Chandra Bose grand nephew Chandra kumar bose slams Kangana Ranaut first pm issue

    Subash Chandra Bose grand nephew Chandra kumar bose slams Kangana Ranaut first pm issue


    சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் நேருதான் என்று நேதாஜி சுபாஷ் சந்திர போஸின்  பேரன் தெரிவித்துள்ளார். மேலும், முதல் பிரதமர் நேதாஜிதான் என்ற கங்கனாவின் கருத்துக்களை மறுத்து, கடுமையாக விமர்சனம் வைத்துள்ளார். 
    மக்களவை தேர்தல்:
    நாடாளுமன்றத்தின் 18வது மக்களவைக்கான தேர்தல் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி தொடங்கி,  ஜூன் 1 ஆம் தேதி நிறைவடைகிறது. தேர்தலுக்கு சில நாட்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தீவிரமாக பரப்புரையை மேற்கொண்டு வருகின்றனர். தேர்தல் பரப்புரை மற்றும் கூட்டங்களில் அரசியல் கட்சியினர் சிலர் பேசுவது பெரும் சர்ச்சைகளையும் ஏற்படுத்துகிறது என்றே சொல்லலாம். 
    சில தினங்களுக்கு முன்பு, நடிகையும் பாஜக கட்சியின் மக்களவைத் தொகுதி வேட்பாளருமான கங்கனா ரனாவத் பேசியது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இவர், செய்தி தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த போது, சுதந்திர நாட்டின் முதல் பிரதமர் சுபாஷ் சந்திர போஸ் என குறிப்பிட்டு பேசினார். இக்காட்சியை சமூக வலைத்தளங்களில் பலரும் பகிர்ந்து, கேலி செய்தனர். 
    Power Pages-4: இந்தியாவில் தேர்தலை நடத்த முடியாது என்ற உலக நாடுகள்.. திருவிழா போல் நடத்திய நேருவின் கதை தெரியுமா!
    மறுக்கும் கங்கனா:
    ஆனால், பலரும் விமர்சித்ததை தொடர்ந்து, தான் பேசியது சரிதான் என்றும், ஒரு பதிவையும், ஸ்கீர்ன் சாட்டையும் சமூக வலைதளங்களில் பதிவிட்டிருந்தார். அதில், சுபாஷ் சந்திர போஸ் 1943 ஆண்டு சிங்கப்பூரில் இருந்து சுதந்திர இந்தியாவுக்கான அரசாங்கத்தை அமைத்தார் என்றும்,  தானே அந்த அரசாங்கத்தின் பிரதமர் என்றும் அரசாங்கத்தின் தலைவர் என்றும் அறிவித்து கொண்டார் என்றும் அறிவித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    All those who are giving me gyan on first PM of Bharata do read this screen shot here’s some general knowledge for the beginners, all those geniuses who are asking me to get some education must know that I have written, acted, directed a film called Emergency which primarily… pic.twitter.com/QN0jD3rMfu
    — Kangana Ranaut (Modi Ka Parivar) (@KanganaTeam) April 5, 2024

    இந்நிலையில் கவனிக்க வேண்டிய இரண்டு விசயம் என்னவென்றால், முதலாவதாக சுபாஷ் சந்திர போஸ் சிங்கப்பூரில் சென்று அரசாங்கத்தை அமைத்து, தனக்குத்தானே அறிவித்தார் என்று சிலர் கூறுகின்றனர், சிலர் சிங்கப்பூரில் உள்ள மக்களால் பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டார் என்றும் சிலர் கூறுகின்றனர். இதிலிருந்து இந்தியாவுக்கான பிரதமராக அதிகாரப்பூர்வமாக, இந்தியாவிலுள்ள மக்களாலும், அப்போதிருந்து காங்கிரசாலும் அறிவிக்கப்பட்டாரா என்றால் இல்லை என்று பதில். 
    இரண்டாவதாக, கங்கனா ராவத் கூறியது, சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் என்று. ஆனால், சுதந்திரம் அடைந்த பின் முதல் பிரதமர் நேரு தான் என்பது அதிகாரப்பூர்வமாகவும், இந்திய மக்களாலும் பிரதரமராக நேரு ஏற்றுக்கொள்ளப்பட்டார் என்பது அனைவரும் அறிந்தது.
    போஷின் பேரன் கருத்து:
    இந்நிலையில், சுபாஷ் சந்திர போஸின் பேரன், சந்திர போஸ் கருத்து தெரிவித்துள்ளார். அவர் தெரிவித்துள்ளதாவது, “சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் நேருதான், அதுதான் வரலாறு. அதை யாரும் மாற்ற முடியாது. நேதாஜி மற்றும் நேரு இடையே கருத்துக்கள் ரீதியான வேறுபாடுகள் கொண்டிருந்தாலும் பரஸ்பரம் மரியாதை கொண்டிருந்தனர். நேதாஜியை வைத்து, நேரு மற்றும் காங்கிரஸ் கட்சியை விமர்சிக்க பயன்படுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாது. 

    No one should distort history for their political ambition! @narendramodi @AmitShah @JPNadda @KanganaTeam pic.twitter.com/x5hHXDGk6O
    — Chandra Kumar Bose (@Chandrakbose) April 7, 2024

    கங்கனா ராவத் திறமை வாய்ந்த நடிகை. ஆனால், அவர் வரலாறு குறித்தான தகவலை தெளிவாக தெரிந்து கொள்ள வேண்டும், வாட்சப் பல்கலைக்கழத்தில் இருந்து தவிர்த்து பேச வேண்டும் என விமர்சித்துள்ளார். இந்திய சுதந்திர போராட்டத்தின் போது இருந்த காங்கிரஸ் குறித்தான உண்மையை உணர்ந்து கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார்.  
    இதுபோன்று கங்கனா ராவத் பேசுவது முதல் முறையா என்றால், இல்லை. பிரதமர் மோடி பதவியேற்றபின்புதான் இந்தியாவுக்கு உண்மையான சுதந்திரம் கிடைத்தது என்று தெரிவித்தது கடுமையான விமர்சனத்துக்குள்ளானது.

    மேலும் காண

    Source link

  • Kangana Ranaut explains about not acceptance to dance in ambani wedding ceremony slams actors

    Kangana Ranaut explains about not acceptance to dance in ambani wedding ceremony slams actors


    இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவரான முகேஷ் அம்பானியின் மகன் ஆனந்த் அம்பானி – ராதிகா மெர்ச்சன்ட் திருமணத்திற்கு முன்னதான கொண்டாட்டம் கடந்த மார்ச் 1-ஆம் தேதி முதல் மார்ச் 3-ஆம் தேதி வரை மிகவும் பிரமாண்டமாக குஜராத் மாநிலத்தின் ஜாம்நகரில் நடைபெற்றது. 
    இந்திய திரையுலக பிரபலங்கள், கிரிக்கெட் வீரர்கள், முக்கிய புள்ளிகள் மட்டுமின்றி சர்வதேச அளவிலான தொழில் அதிபர்கள், பிரபலங்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம், விருந்து, கலை நிகழ்ச்சி என மூன்று நாட்களும் விழாக்கோலம் போல காட்சி அளித்தது ஜாம்நகர். 

    பச்சன் குடும்பத்தினர், ஷாருக்கான், சல்மான் கான், ரன்வீர் கபூர், தீபிகா படுகோன், ராணி முகர்ஜி, ரஜினிகாந்த், அட்லீ, ராம் சரண் உள்ளிட்ட  ஏராளமான பிரபலங்கள் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் பல பிரபலங்கள் மேடையில் நடனமாடினார்கள். மிகவும் பிரபலமான பாடகி ரிஹானா, அம்பானி வீட்டு திருமண விழாவில் நடனமாட பல கோடிகளை சம்பளமாக பெற்றுள்ளார் என தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வெளியானது.
    பல விஷயங்கள் குறித்து மிகவும் வெளிப்படையாக விமர்சனம் செய்யும் நடிகை கங்கனா ரனாவத், அம்பானி மகன் திருமண கொண்டாட்டம் குறித்து போஸ்ட் ஒன்றை தன்னுடைய சோசியல் மீடியா பக்கம் மூலம் பகிர்ந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.
    “எத்தனை லட்சம் டாலர் கொடுத்தாலும் நான் திருமண நிகழ்ச்சிகளில் பாட மாட்டேன்” என மிகவும் பிரபலமான பாடகி லதா மங்கேஷ்கர் மறுத்த நிகழ்வை பகிர்ந்த கங்கனா ரனாவத் “நான் பண நெருக்கடியால் சிக்கி தவிக்கிறேன். லதா ஜீயும், நானும் ஏராளமான ஹிட் பாடல்களை வைத்து இருக்கிறோம்.
    ஆனால் அதற்காக எத்தனை ஆசைகாட்டி தூண்டிவிட்டாலும் ஒரு போதும் நான் திருமண நிகழ்ச்சிகளில் நடனமாடியது கிடையாது. எத்தனையோ குத்து பாடல்களுக்கு நடனமாட வாய்ப்புகள் வந்துள்ளது. ஆனால் அவற்றை எல்லாம் நான் தவிர்த்துவிட்டேன். புகழ் மற்றும் பணம் தேவையில்லை என சொல்வதற்கு வலிமையான பண்பும் கண்ணியமும் இருக்க வேண்டும்.

    ஏராளமான குறுக்கு வழிகள் இந்த உலகத்தில் இருந்தாலும் நேர்மையான முறையில் பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்பதை இன்றைய இளைய தலைமுறையினர் புரிந்து கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார் கங்கனா ரனாவத். அவரின் இந்த அதிரடியான பதிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 
    அம்பானி வீட்டு திருமண கொண்டாட்டத்தில் பிரபலங்கள் நடனமாடியதை கேலி செய்யும் வகையில் கங்கனா ரனாவத் இந்த போஸ்ட் பகிர்ந்துள்ளாரா என கேள்வி எழுப்பப்படுகிறது? 
    பொதுவாக அனைத்து பாலிவுட் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்கும் கங்கனா ரனாவத், அம்பானி இல்லத் திருமண கொண்டாட்டத்தில் கலந்து கொள்ளாததற்கு காரணம், அவர் அழைக்கப்படவில்லை எனக் கூறப்படுகிறது.    

    மேலும் காண

    Source link

  • mrunal thakur buy 2 flats belonged to Kangana Ranaut in Mumbai

    mrunal thakur buy 2 flats belonged to Kangana Ranaut in Mumbai


    சீதா ராமம் புகழ் நடிகை மிருணாள் தாகூர் (Mrunal Thakur) மும்பையில் பல கோடிகள் மதிப்பிலான புது வீடு வாங்கி செட்டில் ஆகியுள்ளார்.
    தென்னிந்திய சினிமாவின் டாப் நடிகை
    இந்தி சீரியல் உலகில் தன் நடிப்பு பயணத்தைத் தொடங்கி படிப்படியாக வளர்ந்து, தற்போது தென்னிந்திய சினிமாவின் உச்ச நடிகைகளுள் ஒருவராக வலம் வருகிறார் மிருணாள் தாகூர். பாலிவுட்டில் கடந்த சில ஆண்டுகளாகவே மிருணாள் ஹீரோயினாகவும் நல்ல கதாபாத்திரத் தேர்வுகளாலும் கவனமீர்த்து  வந்தாலும், “சீதா ராமம்” எனும் ஒற்றைப் படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவின் சென்சேஷன் கதாநாயகியாக மாறினார்.
    அடுத்தடுத்து நானியுடன் ஹாய் நன்னா, விஜய் தேவரகொண்டாவுடன் ஃபேமிலி ஸ்டார் என டோலிவுட் வட்டாரத்தில் மிருணாள் கலக்கி வரும் நிலையில். தொடர்ந்து சிவகார்த்திகேயன் ஜோடியாக தமிழ் சினிமாவிலும் அவர் அறிமுகமாக உள்ளதாகத் தகவல் வெளியாகி வருகின்றன. 
    கங்கனாவின் வீடு
    இந்நிலையில் நடிகை மிருணாள் தாகூர் தற்போது மும்பை, அந்தேரி பகுதியில் அருகருகே உள்ள இரண்டு அடுக்குமாடிக் குடியிருப்புகளை வாங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், 35 மாடிகளைக் கொண்ட அடுக்குமாடிக் குடியிருப்புகளில் அமைந்துள்ள இந்த வீடுகளுக்கான பத்திரப்பதிவினை கடந்த ஜன.25ஆம் தேதி மிருணாள் செய்துள்ளார். இந்த 2 வீடுகளும் ரூ.10 கோடிகள் மதிப்பிலானவை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
    மேலும், நடிகை கங்கனா ரனாவத்தின் சகோதரர் மற்றும் அப்பாவுக்கு இந்த அடுக்குமாடிக் குடியிருப்பினை தற்போது மிருணாள் தாகூர் வாங்கியுள்ளதாகவும், இந்த வீடுகளை தன் ரசனைப்படி தற்போது மிருணாள் புனரமைத்து வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
    காதல் கிசுகிசு
    மும்பையின் பரபரப்பான பகுதியில் பல கோடிகளில் வீடுகள் வாங்கி மிருணாள் செட்டில் ஆகியுள்ளது தற்போது சினிமா வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.
    சீதா மகாலட்சுமி கதாபாத்திரத்தில் ஹோம்லி லுக்கில் அசத்தி மிருணாள் ரசிகர்களைக் கவர்ந்திருந்தாலும், தற்போது கவர்ச்சியான கதாபாத்திரங்களிலும் வெரைட்டி காண்பித்து நடித்து வருகிறார். சமீபத்தில் பாலிவுட் உலகின் புகழ்பெற்ற ராப் பாடகரான பாட்ஷாவை மிருணாள் டேட்டிங் செய்து வருவதாகத் தகவல்கள் வெளியாகின. இணையத்தில் இவர்கள் இருவரும் இணைந்திருக்கும் புகைப்படங்கள் வைரலான நிலையில், இந்தத் தகவல் தவறானது எனப் பதிவிட்டு பாட்ஷா வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார். 
    மிருணாள் – விஜய் தேவரகொண்டா இணைந்து நடித்திருக்கும் ஃபேமிலி ஸ்டார் படம் இந்த ஆண்டு ஏப்ரல் 5ஆம் தேதி திரைக்கு வர உள்ள நிலையில், இப்படத்தின் பாடல்கள் வெளியாகி வரவேற்பைப் பெற்று வருகின்றன. இந்தியில் இவர் நடித்துள்ள பூஜா மேரி ஜான் திரைப்படமும் இந்த ஆண்டு வெளியாக உள்ளது.
    மேலும் படிக்க: Akaay: “அகாய்” என்றால் இதுதான் அர்த்தம்: அனுஷ்கா – விராட் கோலி மகனுக்கு இந்தப் பெயர் ஏன் தெரியுமா?
    Ranam Aram Thavarel Review: விறுவிறுப்பான க்ரைம் த்ரில்லர் கதை – வைபவின் ரணம் அறம் தவறேல் விமர்சனம் இதோ!

    மேலும் காண

    Source link

  • Kangana Ranaut co star Mallika Rajput sucide is suspicious

    Kangana Ranaut co star Mallika Rajput sucide is suspicious


    சமீப காலமாக திரைத்துறையை சேர்ந்த பலர் தற்கொலை செய்து கொள்ளும்  சம்பவங்கள் அடிக்கடி தலைப்பு செய்திகளில் இடம்பெற்று அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. அந்த வகையில் நடிகை கங்கனா ரனாவத் நடிப்பில் வெளியான ‘ரிவால்வர் ராணி’ படத்தில் அவருடன் உடன் நடித்ததன் மூலம் பிரபலமானவர் மல்லிகா ராஜ்புத். விஜயலட்சுமி என அழைக்கப்படும் மல்லிகா ராஜ்புத் ஒரு பாடகியாகவும் நடிகையாகவும் பிரபலமானவர். இவர் நேற்று தற்கொலை செய்து கொண்ட விவகாரம் திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை  ஏற்படுத்தியது.
     

    மல்லிகாவின் தற்கொலை :
    உத்திரபிரதேச மாநிலம் சுல்தான்பூரில் தன்னுடைய வீட்டில் உள்ள அறையில் மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டார் நடிகை மல்லிகா ராஜ்புத். அவருக்கு வயது 35. மல்லிகா ராஜ்புத் பெற்றோர்கள் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வந்து அவரின் உடலை மீது பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
     
    மல்லிகா ராஜ்புத் தயார் :
    மல்லிகா ராஜ்புத் தயார் சுமித்ரா சிங் இந்த சம்பவம் குறித்து பேசுகையில் வீட்டில் உள்ள அனைவரும் இரவு தூங்கி கொண்டு இருந்ததால் மல்லிகாவின் இந்த மரணம் எப்போது நடந்தது என தெரியவில்லை. அறையின் கதவு உள்பக்கமாக தாளிட்டு இருந்தது. நீண்ட நேரமாக மின்விளக்குகள் எரிந்து கொண்டே இருந்தால் வெகு நேரமாக கதவை தட்டியும் திறக்காததால், ஜன்னல் வழியாக பார்த்தேன். அப்போது அவள் மின்விசிறியில் தூக்கிட்டு நிலையில் இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்து என்னுடைய கணவரையும் மற்றவர்களை எழுப்பினேன் என அதிர்ச்சியுடன் அழுது கொண்டே தெரிவித்துள்ளார் மல்லிகாவின் தாயார் சுமித்ரா சிங். 
     

    மல்லிகா ராஜ்புத் யார் ?
    2014ம் ஆண்டு நகைச்சுவை கலந்த கிரைம் திரில்லர் திரைப்படத்தில் லீட் ரோலில் நடிகை கங்கனா ரனாவத் நடிக்க துணை கதாபாத்திரத்தில் மல்லிகா ராஜ்புத் நடித்திருந்தார். இவர் ஒரு சில பாடல்களை பாடி வீடியோக்களையும் வெளியிட்டுள்ளார். மறைந்த பாடகர் ஷான் எழுதிய யாரா துஜே பாடலின் இசை ஆல்பத்தில் தோன்றி இருந்தார். நடிப்பு, பாட்டு மட்டுமின்றி அரசியலிலும் இறங்கி பாரதிய ஜனதா கட்சியில் 2016ம் ஆண்டு இணைந்தார். பின்னர் இரண்டே ஆண்டுகளில் அந்த கட்சியில் இருந்து விலகினார்.  
    மல்லிகா ராஜ்புத் ஆன்மீகத்தில் சில நாட்கள் பயணித்தார். அது மட்டுமின்றி கதக் நடன பயிற்சியாளர் மற்றும் தனது சொந்த புத்தகங்களை கூட எழுதியுள்ளார். இப்படி பன்முக திறைமையாளராக இருந்த மல்லிகா ராஜ்புத் மரணம் அனைவரையும் அதிர்ச்சி அடைய செய்துள்ளது. அவரின் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. பிரேத பரிசோதனையின் அறிக்கை வந்த பிறகே மல்லிகாவின் இறப்புக்கான காரணம் தெரிய வரும் என போலீஸ் தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    மேலும் காண

    Source link

  • Kangana Ranaut : என்னுடைய கற்பனைக்கு உயிர் கொடுத்துவிட்டார்.. ராமர் சிலையை வடிவமைத்த சிற்பிக்கு கங்கனா பாராட்டு 

    Kangana Ranaut : என்னுடைய கற்பனைக்கு உயிர் கொடுத்துவிட்டார்.. ராமர் சிலையை வடிவமைத்த சிற்பிக்கு கங்கனா பாராட்டு 


    <p>Ram Temple : அயோத்தியில் வரும் ஜனவரி 22-ஆம் தேதி ராமர் கோயில் திறப்பு விழா பிரதமர் மோடி தலைமையில் மிகவும் கோலாகலமாக நடைபெற உள்ளது. &nbsp;இந்த நிகழ்வில் பல துறைகளை சேர்ந்த ஏராளமான பிரபலங்கள் கலந்துகொள்ள உள்ளனர். அயோத்தியில் ராமரின் குழந்தை வடிவிலான சிலை பிரதிஷ்டை செய்ய உள்ள நிலையில் ஏராளமான வழிபாடுகள் மற்றும் நிகழ்வுகள் நாள்தோறும் நடைபெற்று வருகிறது.&nbsp;</p>
    <h2><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/20/e143b8a71eb2ae62f9b581ff1aaab0191705749953744224_original.jpg" alt="" width="720" height="540" /><br />கங்கனாவின் பாராட்டு :</h2>
    <p>மைசூரைச் சேர்ந்த சிற்பி அருண் யோகிராஜ் தான் 300 கோடி ஆண்டுகள் பழமை வாய்ந்த கல்லில் ராமரின் சிலையை செதுக்கி வடிவமைத்துள்ளார். ராமரின் சிலையின் புகைப்படத்தை பார்த்த நடிகை கங்கனா ரனாவத் தனது சோசியல் மீடியா பக்கம் மூலம் குறிப்பு ஒன்றை பகிர்ந்துள்ளார். "நான் எப்போதுமே சிறு வயதில் ராமர் இப்படித்தான் இருப்பார் என கற்பனை செய்துள்ளேன். என்னுடைய கற்பனை அப்படியே உயிர்ப்பித்துள்ளது" என குறிப்பிட்டதுடன் ராமரின் திருவுருவ சிலையை வடிவமைத்த சிற்பி அருண் யோகிராஜை டேக் செய்து பாராட்டியுள்ளார்.</p>
    <p>"மயங்க வைக்கும் அளவுக்கு எவ்வளவு அழகாக ராமரின் சிலையை நீங்கள் வடிவமைத்துள்ளீர்கள். இதுவும் பகவான் ராமரின் ஆசீர்வாதம். அவர் உங்களுக்கு தெய்வீக தரிசனம் தந்து ஆசீர்வதிப்பார்" என குறிப்பிட்டு பாராட்டி இருந்தார்.&nbsp;</p>
    <p><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/20/83dd8037ccbd57858e3ae8baf821dccd1705750081966224_original.jpg" alt="" width="720" height="540" /><br />அயோத்தியில் நடைபெற இருக்கும் ராமர் கோயில் திறப்பு விழாவில் பங்கேற்க நடிகை கங்கனா ரனாவத்திற்கும் அழைப்பு வந்துள்ளது. அதையும் அவர் ஏற்கனவே தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்து இருந்தார்.&nbsp;</p>
    <h2>கங்கனாவின் அறிமுகம் :</h2>
    <p>ஒரு மருத்துவராக வேண்டும் என ஆசைப்பட்ட கங்கனா பின்னர் நடிப்பை தேர்ந்து எடுத்து 2006ம் ஆண்டு வெளியான ‘கேங்க்ஸ்டர்’ படம் மூலம் திரையுலகிற்குள் நடிகையாக அறிமுகமானார். முதல் படத்திலேயே தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியதற்காக சிறந்த பெண் அறிமுக நடிகைக்கான பிலிம்பேர் விருதையும் பெற்றார்.&nbsp;</p>
    <p><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/20/1110902dd5fda8fbf8d4a79f5eb337141705749967685224_original.jpg" alt="" width="720" height="540" /></p>
    <p><br />மிகவும் பிரபலமான பாலிவுட் நடிகையாக வலம் வரும் கங்கனா ரனாவத் தற்போது ‘எமர்ஜென்சி’ திரைப்படத்தில் மறைந்த பிரதமர் இந்திரா காந்தியின் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் மூலம் இயக்குநராகவும் களம் இறங்கியுள்ளார் நடிகை கங்கனா. இந்தியாவில் அவசர கால நிகழ்வுகளை ஆராயும் படமாக இது உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் நடிகர் மாதவனுடன் இணைந்து சைக்கலாஜிக்கல் திரில்லர் திரைப்படம் ஒன்றில் நடிக்க உள்ளார் கங்கனா ரனாவத்.&nbsp;</p>
    <h2>சந்திரமுகி 2 :</h2>
    <p>’தாம் தூம்’ படத்தில் ஜெயம் ரவி ஜோடியாக நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமான கங்கனா, &nbsp;கடந்த செப்டம்பர் மாதம் பி. வாசு இயக்கத்தில் நடிகர் ராகவா லாரன்ஸ், வடிவேலு, ராதிகா சரத்குமார், மஹிமா நம்பியார், ஸ்ருஷ்டி டாங்கே, லட்சுமி மேனன் உள்ளிட்ட ஏராளமானோரின் நடிப்பில் வெளியான ‘சந்திரமுகி 2’ படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியான இப்படம் கலவையான விமர்சனங்களை பெற்றது.</p>

    Source link

  • Kangana Ranaut: பில்கிஸ் பானு கதையை படம் பண்ண நான் ரெடி.. ஆர்வம் காட்டும் கங்கனா.. டென்ஷனான நெட்டிசன்கள்

    Kangana Ranaut: பில்கிஸ் பானு கதையை படம் பண்ண நான் ரெடி.. ஆர்வம் காட்டும் கங்கனா.. டென்ஷனான நெட்டிசன்கள்


    <p>2002ம் ஆண்டு குஜராத் கலவரத்தால் ஐந்து மாத கர்ப்பிணியாக இருந்த 21 வயதான பில்கிஸ் பானுவை கொடூர கும்பல் ஒன்று கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்தது. அந்த கொடூர சம்பவம் ஒட்டுமொத்த நாட்டையும் உலுக்கி எடுத்தது.&nbsp;</p>
    <p>பில்கிஸ் பானு தனக்கு நேர்ந்த வன்கொடுமைக்கு எதிராக சட்டத்தின் மூலம் போராடினர். அதன் மூலம் அந்த கொடூர கும்பலை சேர்ந்த 11 குற்றவாளிகளுக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது சி.பி.ஐ சிறப்பு நீதிமன்றம். குற்றவாளிகள் மேல்முறையீட்டு செய்தபோதும் உச்ச நீதிமன்றம் அந்த மனுவை தள்ளுபடி செய்தது.&nbsp;</p>
    <p>&nbsp;</p>
    <p><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/10/f1eb23e073ae7098ced89445d113a8841704900075196224_original.jpg" alt="" width="720" height="540" /><br />15 ஆண்டுகால தண்டனையை அனுபவித்த குற்றவாளிகளின் வேண்டுகோளை மீண்டும் ஒரு முறை பரிசீலிக்குமாறு குஜராத் அரசிடம் அறிவுறுத்தியது நீதிமன்றம். அந்த வழக்கை விசாரிக்க குழு ஒன்றை அமைத்து அதன் மூலம் அந்த 11 குற்றவாளிகளை கடந்த 2022ம் ஆண்டு சுதந்திர தினமான ஆகஸ்ட் 15ம் தேதி விடுதலை செய்தது. வெளியில் வந்த குற்றவாளிகள் மாலைகள் அணிவித்து வரவேற்கப்பட்டனர். இந்த சம்பவத்திற்கு நாடு முழுவதிலும் இருந்து பெரும் கண்டங்கள் எழுந்தன.&nbsp;</p>
    <p><br />அதனால் கோபமடைந்த பில்கிஸ் பானு அந்த 11 குற்றவாளிகளின் விடுதலையை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்து நீதிக்காக போராடினார். அதன் அடிப்படையில் குஜராத் அரசின் முடிவை சில தினங்களுக்கு முன் ரத்து செய்த உச்சநீதிமன்றம், அவர்களை மீண்டும் சிறையில் அடைக்க உத்தரவிட்டது. உச்சநீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.&nbsp;</p>
    <p>&nbsp;</p>
    <p><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/10/6a1be0d1ece6959419765bb9f4246c2c1704900028192224_original.jpg" alt="" width="720" height="540" /></p>
    <p>&nbsp;</p>
    <p>அந்த வகையில் பெண்ணியம் குறித்து தொடர்ச்சியாக குரல் எழுப்பி வரும் கங்கனா ரனாவத்திடம் கேள்வி ஒன்றை எழுப்பியுள்ளனர் நெட்டிசன்கள். பில்கிஸ் பானுவின் வாழ்க்கையை ஒரு திரைப்படமாக ஏன் அவர் எடுக்க கூடாது என கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த கங்கனா ரனாவத் "நான் பில்கிஸ் பானுவின் கதையை படமாக எடுக்க வேண்டும் என ஆசைப்பட்டேன். கடந்த மூன்று ஆண்டுகளாக அதற்காக ஆய்வுகளை எல்லாம் மேற்கொண்டு கதையையும் தயார் செய்துவிட்டேன். ஆனால் இதில் அரசியல் ரீதியிலான பிரச்சினை இருப்பதால் நெட்ஃப்ளிக்ஸ், அமேசான் ப்ரைம் மட்டுமின்றி ஒரு சில தயாரிப்பு நிறுவனங்கள் கூட இந்த கதையை தயாரிக்க மறுப்பு தெரிவிக்கிறார்கள். மேலும் கங்கனா பிஜேபிக்கு ஆதரவு தெரிவிப்பதால் அவருடன் இணைய முடியாது என ஜியோ சினிமாஸ் நிறுவனுமும் கைவிரித்துவிட்டது. இப்படி இருக்கையில் எனக்கு வேறு வழி என்ன இருக்கிறது? என பதிலளித்துள்ளார்.&nbsp; ஆனால் இதற்கு நெட்டிசன்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.&nbsp;</p>
    <hr />
    <p><strong>மேலும் படிக்க: <a title="Meenakshi Ponnunga :கடத்தி கொல்லப்படும் ப்ரியா.. கைதாகும் ஷக்தி – மீனாட்சி பொண்ணுங்க சீரியல் அப்டேட்" href="https://tamil.abplive.com/entertainment/television/zee-tamil-meenakshi-ponnunga-serial-january-10th-episode-update-160953" target="_self">Meenakshi Ponnunga :கடத்தி கொல்லப்படும் ப்ரியா.. கைதாகும் ஷக்தி – மீனாட்சி பொண்ணுங்க சீரியல் அப்டேட்</a></strong></p>

    Source link

  • 12th Fail Movie Actor Vikrant Massey Says He Could Not Stop Crying Even After The Director Says Cut

    12th Fail Movie Actor Vikrant Massey Says He Could Not Stop Crying Even After The Director Says Cut

    12th ஃபெயில்
    கடந்த ஆண்டு அக்டோபர் 27ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகி வரவேற்பைப் பெற்ற திரைப்படம் 12th ஃபெயில். விது வினோத் சோப்ரா இந்தப் படத்தை இயக்கியிருந்தார். விகாந்த் மாஸ்ஸே, மேதா சங்கர், சஞ்ஜய் பிஷ்னாய் உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்திருந்தார்கள்.
    ஐ.பி.எஸ் அதிகாரி மனோஜ் குமாரை மையப்படுத்தி அனுராக் பாதக் எழுதிய புத்தகத்தை தழுவி இந்தப் படம் எடுக்கப்பட்டது. உணர்ச்சிகரமாக ஒரு படமாக எடுக்கப்பட்ட இப்படம் பாசிட்டிவான விமர்சனங்களை பெற்றது. சமீபத்தில் ஹாட்ஸ்டாரில் வெளியாகிய இந்தப் படம் பரவலான கவனம்  பெற்று வருகிறது. இப்படியான நிலையில் இந்தப் படத்தில் மனோஜ் குமாராக நடித்த விக்ராந்த் மாஸ்ஸே இந்தப் படத்தில் நடித்த அனுபவத்தைப் பற்றி பகிர்ந்துகொண்டுள்ளார்.
    கட் சொன்னபிறகும் அழுகையை நிறுத்தமுடியாது

    This scene still has my heart. Rona aa gaya tha. 🥹#12thFail is a Masterpiece.Mujhe abhi bhi Goosebumps aa rhe hai. 🔥#VikrantMassey You nailed it. 💯pic.twitter.com/WOiz4WP8Ev
    — Believer (@Believer2202) December 31, 2023

    Death In The Gunj, Lootera உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளவர் விக்ராந்த் மாஸ்ஸே. தனித்துவமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து  நடித்து வரும் விக்ராந்த், முன்னதாக நடித்த டெத் இன் தி கஞ்ச் படத்தில்  கவனம் ஈர்த்தார். இந்தப் படத்தில் தனது குழந்தைப் பருவத்தில் இருந்து மீளமுடியாமல் வளர்ந்த ஒரு மனிதனின் உளவியலை தனது நடிப்பில் வெளிப்படுத்தினார். இந்தக் கதாபாத்திரத்தில் நடித்தபின் தான் பெரும் மன உளைச்சலுக்கு ஆளானதாக அவர் தனது நேர்காணல் ஒன்றில் கூறியுள்ளார். மேலும் இதனை சரிசெய்ய தான் மனநல ஆலோசனை பெற்று வந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார். 
    சமீபத்தில் வெளியாகிய 12th ஃபெயில் படத்தைப் பொறுத்தவரை ஒரு நடுத்தர வர்கத்தைச் சேர்ந்த ஒருவர் படித்து ஐ,ஏ எஸ் அதிகாரி ஆவதன் போராட்டத்தை மிகவும் உணர்ச்சிவசமான  நடிப்பால் வெளிப்படுத்தியிருந்தார். இந்தப் படத்தில் தான் அழும் காட்சிகளில் நடித்துகொண்டிருந்தபோது டைரக்டர் கட் சொன்ன பிறகும் தன்னால் அழுகையை நிறுத்த முடியாமல் அழுகொண்டே இருந்ததாக அவர் தெரிவித்துள்ளார்.
    விக்ராந்தை பாராட்டிய கங்கனா ரனாவத்
    கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு நடிகர் விக்ராந்த் மற்றும் கங்கனா ரனாவத் இருவருக்கும் இடையில் நடந்த கருத்து மோதல் காரணமாக விக்ராந்தை கங்கனா கரப்பான்பூச்சி என்று திட்டியிருந்தார். இதனைத் தொடர்ந்து 12th ஃபெயில் படத்தைப் பார்த்த கங்கனா ரனாவத் விக்ராந்தின் நடிப்பை பாராட்டியதோடு மட்டுமில்லாமல், அவர் பார்க்க நடிகர் இர்ஃபான் கான் மாதிரி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும் இந்தி சினிமாவில் இர்ஃபான் கான் விட்டுச் சென்ற வெற்றிடத்தை விக்ராந்த் நிரப்புவார் என்று தான் எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

    Source link