<p>கேரள மாநிலம் பத்தினம்திட்டாவில் அமைந்துள்ளது சபரிமலை. உலகப்புகழ்பெற்ற சபரிமலை கோயிலில் ஐயப்பனை தரிசனம் செய்ய ஆண்டுதோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். சபரிமலை அய்யப்பன் கோயிலில் மண்டல மற்றும் மகரஜோதி பூஜையை தவிர்த்து ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட நாட்களுக்கு நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்படும். இதனை தவிர்த்து விஷு, ஓணம் பண்டிகை உள்ளிட்ட விஷேச நாட்களுக்கும் நடை திறக்கப்படும். ஆனால் கார்த்திகை மாதம் மற்றும் மகரஜோதி பூஜைக்கு ஏராளமான பக்தர்கள் பல்வேறு இடங்களிலிருந்து வருகை தருவார்கள்.</p>
<p>அதன்படி பங்குனி மாதம் மற்றும் உத்திர திருவிழாவை ஒட்டி சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று (13 ஆம் தேதி புதன்கிழமை) மாலை 5 மணிக்கு திறக்கப்படுகிறது. தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு முன்னிலையில் மேல்சாந்தி மகேஷ் நம்பூதரி நடையை திறந்து வைத்து தீப ஆராதனை காட்டுவார். இதனை தொடர்ந்து நாளை முதல் (14 ஆம் தேதி) வழக்கமாக சாமி தரிசனத்திற்காக பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். தினசரி காலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு, நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம், உஷ பூஜை, சகஸ்ர கலச பூஜை, உச்ச பூஜை, தீபாராதனை, புஷ்பாபிஷேகம், அத்தாழ பூஜை உள்பட பல்வேறு பூஜைகள் நடைபெறும். 18-ந் தேதி வரை 5 நாட்கள் தந்திரி மகேஷ் மோகனரு தலைமையில் படிபூஜை, உதயாஸ்தமன பூஜை, கலச பூஜை, களபாபிஷேகம் போன்ற சிறப்பு பூஜைகளும் நடைபெறும்.</p>
<p>மேலும் பங்குனி விழா வரும் 16 ஆம் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்குகிறது. அதனை தொடர்ந்து பத்து நாட்கள் வழக்கமான பூஜைகள் நடத்தப்படும். இவ்விழாவின் போது கூடுதல் சிறப்பாக உத்சவ பூஜை நடத்தப்படுகிறது. 10 ஆம் நாள் திருவிழாவின் போது ஐயப்பனுக்கு சிறப்பு பூஜையாக பம்பையில் ஆரட்டு விழா நடைபெறும். வரும் 25 ஆம் தேதி மாலை கொடி இறக்கப்பட்டு விழா நிறைவு பெரும். அதனை தொடர்ந்து வழக்கமான இரவு பூஜை நடத்தப்பட்டு நடை அடைக்கப்படும். பங்குனி உத்திர திருவிழாவிற்கான ஏற்பாடுகள் அனைத்தும் திருவாங்கூர் தேவஸ்தான போர்டு செய்து வருகிறது.</p>
<p>மண்டல மற்றும் மகர விளக்கு பூஜையை தொடர்ந்து அதிக நாட்கள் நடை திறக்கப்பட்டிருப்பது இதுவே ஆகும். இந்த ஆண்டு மகர விளக்கு பூஜைக்காக தினசரி வரும் பக்தர்களின் கூட்டம் ஒரு லட்சத்தை கடந்து பதிவானது. இதனால் சபரிமலையே ஸ்தம்பித்து போனது. இதனால் பல மணி நேரம் பக்தர்கள் காத்திருந்து சாமி தரிசனம் செய்ய நேரிட்டது. பக்தர்களுக்காக தரிசன நேரம் அதிகரிக்கப்பட்டது. ஸ்பாட் புக்கிங் போன்ற வசதிகள் ரத்து செய்யப்பட்டது. இதனை தொடர்ந்து தற்போது நாளை முதல் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.</p>
<p>இந்த பூஜைகளை நேரில் கண்டு ஐயப்பனை தரிசனம் செய்ய இணையதளம் மூலமாக பக்தர்கள் பதிவு செய்து கொள்ளலாம். இதனை தொடர்ந்து, ஆன்லைனில் முன்பதிவு செய்யாத பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கும் வகையில், நிலக்கல் மற்றும் பம்பையில் உடனடி முன்பதிவு செய்யும் வசதியும் செய்யப்பட்டுள்ளது என தேவசம்போர்டு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் <a href="https://sabarimalaonline.org/#/login">https://sabarimalaonline.org/#/login</a> எனும் இணையதள முகவரியில் தரிசனத்திற்கான முன்பதிவை மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
Tag: ஐயப்பன் கோயில்

Sabarimala: உத்திர திருவிழாவை ஒட்டி சபரிமலை கோயில் நடை திறப்பு.. சிறப்பு பூஜைகள் என்னென்ன? முழு விவரம்..

Kerala Sabarimala Ayyappan Temple Neyyabishegam Finish Today Know Details
கேரளாவில் அமைந்துள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் உலகப்புகழ்பெற்றது ஆகும். சபரிமலைக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் மாலை அணிந்து ஐயப்பனை தரிசனம் செய்ய வருவது வழக்கம். குறிப்பாக, மகர ஜோதி தரிசனத்தை காண்பதற்காக லட்சக்கணக்கான பக்தர்கள் சபரிமலையில் குவிவது வழக்கம்.
நெய்யபிஷேகம்:
நடப்பாண்டிற்கான மகர விளக்கு பூஜை கடந்த 15ம் தேதி நடைபெற்றது. இந்த நிலையில், மண்டல மற்றும் மகர விளக்கு சீசன் நிறைவாக இன்று நெய்யபிஷேகம் நடைபெறுகிறது. இன்று காலை 9 மணி வரை மட்டுமே நெய்யபிஷேகம் நடைபெற உள்ளது. நெய்யபிஷேகத்திற்கு பிறகு இன்று இரவு அத்தாள பூஜை நடைபெற உள்ளது. இந்த பூஜைக்கு பின் மாளிகப்புரம் மணிமண்டபத்தில் இருந்து ஐயப்ப ஊர்வலம் நடைபெறுகிறது. ஐயப்பனின் இந்த வீதி உலா சரம்குத்தி வரை சென்று பின்பு மீண்டும் சன்னிதானம் வருகிறது.
ஐயப்பன் கோயிலில் நாளை இரவு 10 மணி வரை மட்டுமே பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். அதன்பின்பு, அரிவராசனம் பாடி நடை அடைக்கப்பட உள்ளது. நடை அடைக்கப்பட்ட பின்பு மாளிகப்புரத்தில் குருதி சடங்குகள் நடைபெற உள்ளது. இதன்பின்பு, நாளை மறுநாள் காலை 5.30 மணிக்கு நடை திறக்கப்படும். இதையடுத்து, ஐயப்பனுக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற உள்ளது.
குவியும் பக்தர்கள்:
இந்த சிறப்பு பூஜைகளுக்கு பிறகு திருவாபரண ஊர்வலம் மீண்டும் பந்தளத்துக்கு புறப்பட உள்ளது. இதையடுத்து, காலை 6 மணிக்கு கோயில் நடை அடைக்கப்படும். அத்துடன் மகரவிளக்கு சீசன் நிறைவு பெறுகிறது. இன்று நெய்யபிஷேகம் நிறைவு நாள் என்பதால் ஐயப்பன் கோயிலில் பக்தர்கள் குவிந்து வருகின்றனர்.
நடப்பாண்டு சபரிமலை ஐயப்பன் கோயிலில் வழக்கத்தை விட பக்தர்கள் கூட்டம் அதிகளவு காணப்பட்டது. குறிப்பாக, லட்சக்கணக்கான பக்தர்கள் அடுத்தடுத்த நாட்களில் குவிந்ததனர். இதையடுத்து, பக்தர்களின் வசதிக்காக கூடுதல் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது.
முன்னதாக, நடப்பாண்டிற்கான மகர விளக்கு பூஜை கடந்தாண்டு நவம்பர் 16ம் தேதி தொடங்கியது. அன்றைய தினம் சபரிமலை கோயில் நடை திறக்கப்பட்டது. மண்டல பூஜைக்கான வழிபாடுகள் நடைபெற்ற பிறகு கடந்தாண்டு டிசம்பர் 27ம் தேதி மண்டல பூஜை சிறப்பாக நடைபெற்றது. பின்னர் அன்றைய தினம் கோயில் நடை அடைக்கப்பட்டது. பின்னர், கடந்தாண்டு டிசம்பர் 30ம் தேதி நடை திறக்கப்பட்டது.
மேலும் படிக்க: PM Modi TN Visit: மாலை 04.50-க்கு சென்னை வருகிறார் பிரதமர் மோடி – தமிழ்நாட்டில் 3 நாட்கள் பயணத்தின் முழு விவரம் இதோ..!
மேலும் படிக்க: Ayodhya Ram Temple: பாபர் மசூதி இடிப்பும் அயோத்தி ராமர் கோயிலும்- முக்கிய முகங்கள் இவர்கள்தான்!

Sabarimala: ”சாமியே சரணம் ஐயப்பா” – சபரிமலையில் இன்று மகரஜோதி தரிசனம்.. குவிந்த பக்தர்கள்..!
<p>சபரிமலையில் ஐயப்பன் கோயிலில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜையின் சிகர நிகழ்ச்சியான மகர ஜோதி தரிசனம் இன்று நடைபெறுகிறது. </p>
<h2><strong>சபரிமலை சீசன்</strong></h2>
<p>கேரளா மாநிலம் பத்தினம் திட்டாவில் சபரிமலை ஐயப்பன் கோயில் அமைந்துள்ளது. உலக அளவில் புகழ் பெற்ற இந்த கோயிலுக்கு ஆண்டுதோறும் பல்வேறு இடங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவது வழக்கம். ஒவ்வொரு தமிழ்மாத பிறப்பன்றும் நடை திறக்கப்பட்டு சில நாட்கள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுபவர். அதேசமயம் கார்த்திகை, மார்கழி மாதம் சபரிமலை சீசன் என்பதால் அங்கு மண்டல பூஜை மற்று மகரவிளக்கு பூஜைக்காக நடை திறக்கப்படுவது வழக்கம். </p>
<p>இந்த 2 மாதங்களில் மொத்தம் 41 நாட்கள் நடை திறக்கப்பட்டு இருக்கும். மண்டல பூஜைக்காக கடந்த நவம்பர் 16 ஆம் தேதி நடை திறக்கப்பட்டது. கடந்த ஆண்டுகளில் கொரோனா தொற்று காரணமாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் குறைவான அளவே பக்தர்கள் வருகை தந்தனர். ஆனால் நடப்பாண்டு எங்கு பார்த்தாலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் பக்தர்கள் வசதிக்காக பல்வேறு ஏற்பாடுகளை திருவாங்கூர் தேவஸ்தானமும், கேரள அரசும் செய்து வருகிறது.</p>
<h2><strong>மகர ஜோதி தரிசனம்</strong></h2>
<p>மண்டல பூஜை முடிந்து டிசம்பர் 30 ஆம் தேதி சபரிமலை நடை மீண்டும் திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்துக்காக அனுமதிக்கப்பட்டு வந்தனர். கிட்டதட்ட 18 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்யும் அளவுக்கு எங்கு திரும்பினாலும் பக்தர்கள் கூட்டமாகவே காணப்படுகிறது. இந்த காலக்கட்டத்தின் சிகர நிகழ்ச்சியான மகர ஜோதி தரிசனம் இன்று நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு கடந்த 2 நாட்களாக தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தலைமையில், மேல் சாந்தி மகேஷ் நம்பூதிரி முன்னிலையில் சுத்தகிரியை பூஜை நடைபெற்றது. முதல் நாளில் பிரசாத சுத்தி பூஜை, வாஸ்து ஹோமம், புண்ணியாகம், வாஸ்து பலி, ரக்சா கலச பூஜை ஆகியவையும், 2ஆம் நாளான நேற்று சது சுத்தி, தார மற்றும் பஞ்சகம் பூஜை நடைபெற்றது.</p>
<p>தொடர்ந்து இன்று அதிகாலை 2.46 மணிக்கு நடை திறக்கப்பட்டு மகர சங்கரம சிறப்பு பூஜையும், சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதேசமயம் மகர விளக்கு பூஜையின் போது அய்யப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க திருவாபரணங்கள் 3 சந்தன பெட்டிகளில் பந்தளம் அரண்மனையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருக்கும். அவை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு வரப்பட்டு இன்று மாலை 6.30 மணிக்கு சபரிமலைக்கு கொண்டு செல்லப்படும்.</p>
<p>அங்கு சாமிக்கு தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு தீபாராதனை காட்டப்படும். அந்த சமயத்தில் பொன்னம்பல மேட்டில் ஐயப்பன் பக்தர்களுக்கு ஜோதி வடிவில் காட்சி தருவார். இதனை காணும்போது சபரிமலையே சரண கோஷத்தில் மூழ்கும். மகர ஜோதி தரிசன நாளில் பக்தர்கள் கூட்டத்தை குறைக்கும் பொருட்டு சில நாட்களுக்கு முன்பு ஸ்பாட் புக்கிங் நிறுத்தப்பட்டது. அதேசமயம் முன்பதிவு ஜனவரி 14 மற்றும் 15 ஆம் தேதிகளில் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. </p>
<p> </p>
<p> </p>


