Tag: ஆடு

  • Goat movie last schedule to complete within april 19 vijay to return for election

    Goat movie last schedule to complete within april 19 vijay to return for election


    கோட் படத்தின் இறுதிகட்ட படப்பிடிப்பு தற்போது ரஷ்யா நாட்டின் தலைநகரான மாஸ்கோவில் நடைபெற்று வருகிறது.
    மக்களவைத் தேர்தல் 2024
    தமிழ்நாட்டில்  நாடாளுமன்ற தேர்தல் ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 19 ஆம் தேதி நடைபெற இருக்கிறது. தேர்தல் நாள் நெருங்கி வரும் சூழலில் நடிகர் விஜய் கோட் படத்தின் படப்பிடிப்பிற்காக வெளிநாடு சென்றுள்ளது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் நடிகர் விஜய் தனது அரசியல் கட்சியின் பெயரை அறிவித்தார். இந்த நாடாளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என்றும் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலில் தனது கட்சி தமிழக வெற்றிக் கழகம் போட்டியிட இருப்பதாகவும் விஜய் தனது அறிக்கையில் தெரிவித்திருதார். தற்போது த.வி,க கட்சிக்கான உறுப்பினர் செர்க்கைகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. 
    மாஸ்கோவின் விஜய்
    தற்போது விஜய் வெங்கட் பிரபு இயக்கத்தில் கோட் படத்தில் நடித்து வருகிறார். ஏ.ஜி.எஸ் நிறுவனம் இந்தப் படத்தை தயாரிக்கிறது. பிரஷாந்த், பிரபுதேவா, லைலா, சினேகா, மோகன் உள்ளிட்டவர்கள் இப்படத்தில் நடித்து வருகிறார்கள். கடந்த ஆண்டு தொடங்கிய இப்படத்தின் படப்பிடிப்பு சென்னை , ஹைதராபாத், இலங்கை, தாய்லாந்து, இஸ்தான்புல் உள்ளிட்ட இடங்களில் நடைபெற்றது. தற்போது இறுதிக்கட்டமாக படப்பிடிப்பு ரஷ்யா நாட்டில் தலைநகரான மாஸ்கோவில் தொடங்கியுள்ளது. தேர்தல் நேரத்தில் விஜய் படப்பிடிப்புக்காக வெளி நாடு சென்றுள்ளது விஜய் வாக்களிபாரா இல்லையா என்கிற குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

    #TheGreatestOfAllTime – Next Schedule Begins in Russia.. 💥 Said to be the Final schedule.. 🤙First Single releasing on Coming Week..✌️#ThalapathyVijay | #VenkatPrabhu pic.twitter.com/ntLQMLeRFn
    — Laxmi Kanth (@iammoviebuff007) April 7, 2024

    கடந்த முறை விஜய் தனது சைக்கிளில் வந்து வாக்களித்தது பெரியளவில் வைரலானது. இந்த முறையும் அவர் அப்படி வருவார் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து கார்த்திருக்கிறார்கள். ஆனால் தேர்தல் நாளுக்குள் விஜய் இந்தியா வந்து சேர்வாரா என்கிற கேள்வி நீடித்து வருகிறது. இப்படியான நிலையில் வரும் ஏப்ரல் 19 ஆம் தேதிக்குள் கோட் படத்தின் படப்பிடிப்பு முழுவதுமாக முடிவடைந்துவிடும் என்றும் படப்பிடிப்பு முடிந்து விஜய் இந்தியா திரும்ப இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
    தளபதி 69
    கோட் படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்க இருக்கும் கடைசி படம் தளபதி 69. இப்படத்தை யார் இயக்கப் போகிறார் என்பது புதிராக இருந்து வருகிறது. ஒரு மாதத்திற்கு ஒருவர் இந்தப் படத்தை இயக்கப் போவதாக பலவிதமான தகவல்கள் வெளியானபடி இருக்கின்றன. தற்போது தளபதி 69 படத்தை எச் வினோத் இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த் தகவல் அதிகாரப் பூர்வமாக அறிவிக்கப் படாதது குறிப்பிடத் தக்கது.
     

    மேலும் காண

    Source link

  • actor sanjeev venkat shares his clash with actor vijay

    actor sanjeev venkat shares his clash with actor vijay


    சரியாக புரிந்துகொள்ளாமல் தான் விஜய்யிடன் கொஞ்சம் ஓவராக பேசிவிட்டதாக நடிகர் சஞ்சீவ் வெங்கட் தெரிவித்துள்ளார்.
    விஜய்யின் நெருங்கிய நண்பர்கள்
     தனக்கென ஒரு சிறிய நட்பு வட்டத்தைக் கொண்டிருப்பவர் நடிகர் விஜய் . சென்னை லயோலா கல்லூரியில் படித்த போது அவருடைய பேட்ச் மேட்களான சஞ்சீவ், ராம்குமார், ஸ்ரீநாத், மனோஜ், சுஜய் உள்ளிட்ட ஐந்து நபர்கள் விஜய்யின் நீண்ட கால நண்பர்களாக இருந்து வருகிறார்கள். இதில் சிலர் வேறு தொழில்கள் செய்துவரும் நிலையில் சஞ்சீவ் மற்றும் ஸ்ரீநாத் ஆகிய இருவரும் சினிமாவில் நடித்து வருகிறார்கள். விஜய்யுடன் சந்திரலேகா, புதிய கீதை, பத்ரி, நிலவே வா உள்ளிட்டப் படங்களில் இணைந்து நடித்துள்ளார். பல வருடங்களுக்கு பிறகு லோகேஷ் கனகராஜ் இயக்கிய மாஸ்டர் படத்தில் இணைந்து நடித்தார்கள்.
    சின்னத்திரையில் சஞ்சீவ்
    திரைப்படங்களில் வாய்ப்புகள் குறைந்ததும் நடிகர் சஞ்சீப் சின்னத்திரையில் தொடர்ச்சியாக நடிக்கத் தொடங்கினார். சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான மெட்டி ஒலி தொடரில் அறிமுகமாகிய சஞ்சீவ் அடுத்தடுத்து பல தொடர்களில் நடித்து சீரியல் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளார். சன் டிவியில் ஒளிபரப்பான திருமதி செல்வம் தொடர் இவருக்கும் ஒரு பெரிய பிரேக் ஆக அமைந்தது. தற்போது ஒளிப்பரப்பாகி வரும் வானத்தைப் போல தொடரில் நடித்து வருகிறார்
    விஜய்யின் நெருங்கிய நண்பர் என்பதாலோ என்னவோ சஞ்சீவின் நடிப்பு விஜய்யைப் போல் இருப்பதாக சமூக வலைதளங்களில் ட்ரோல் வீடியோக்கள் வெளியாகி வருகின்றன. இப்படியான நிலையில் சஞ்சீவ் சமீபத்திய பேட்டி ஒன்றில் பேசி சஞ்சீவ் இது குறித்து பேசினார்.’ நான் விஜய் மாதிரி நடிப்பதாக வரும் ட்ரோல்களைப் பார்க்கிறேன். விஜய் என்னிடம் இது பற்றி பேசியிருக்கிறார்.  நீ நடிப்பது , வசனம் பேசுவது எல்லாம் என்னை மாதிரியே இருக்கிறது ,  நீ தினமும் சீரியலில் நடிக்கிறாய் நான் வருடத்திற்கு ஒரு படம் நடிக்கிறேன். இதனால் பார்ப்பவர்கள் நான் தான் உன்னைப் பார்த்து நடிப்பதாக பேசப்போகிறார்கள்’ என்று ஜாலியாக தன்னிடம் சொன்னதாக சஞ்சீவ் தெரிவித்தார். தான் வேண்டுமென்றே விஜய் மாதிரி நடிக்கவில்லை என்றும் தான் எதார்த்தமாக நடிப்பது விஜய் மாதிரி இருப்பதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.
    கொஞ்சம் ஓவராக பேசிட்டேன்
    மேலும்  நடிகர் விஜய்க்கும் தனக்கும் இடையில் ஒருமுறை கருத்து வேறுபாடு ஏற்ப்பட்ட நிகழ்வையும் அவர் பகிர்ந்துகொண்டு இருக்கிறார். ஒரு முறை ஏதோ ஒரு விஷயத்தைப் பற்றி பேசிக் கொண்டிருக்கும்போது தான் அந்த உரையாடலை சரியாக புரிந்துகொள்ளாமல் விஜய்யிடம் கொஞ்சம் ஓவராக பேசிவிட்டதாக அவர் கூறினார். இதனால் கடுப்பான விஜய் உட்கார்ந்த இடத்தைவிட்டு சட்டென எழுந்து தான் கிளம்புவதாக சொல்லி அங்கிருந்து புறப்பட்டார் என்று அவர் கூறினார்.
    விஜய் கோபமடைந்தால் அவரிடம் இருந்து பெரிய வார்த்தைகள் எல்லாம் வராது சின்னதாக ஒரு ரியாக்‌ஷன் கொடுத்துவிட்டு அந்த இடத்தைவிட்டு அவர் சென்றுவிடுவார் . அந்த சம்பத்திற்கு பிறது ஒருமுறைக்கு பல முறை யோசித்தப் பின்பே தான் விஜய்யிடன் பேசுவதாக சஞ்சீவ் தெரிவித்துள்ளார்.

    மேலும் காண

    Source link

  • In Villupuram, the accused who stole a goat at night was caught red-handed by the police | Crime: விழுப்புரத்தில் இரவு நேரத்தில் ஆடு திருடிய ஆசாமி

    In Villupuram, the accused who stole a goat at night was caught red-handed by the police | Crime: விழுப்புரத்தில் இரவு நேரத்தில் ஆடு திருடிய ஆசாமி


    விழுப்புரம் : கண்டமங்கலத்தில் ஆட்டுப்பட்டியிலுள்ள இரும்பு ஷீட்டினை உடைத்து ஆறு ஆடுகளை திருடிய நபரை கண்டமங்கலம் போலீசார் கையும் களவுமாக கைது செய்து ஆறு ஆடுகளை பறிமுதல் செய்தனர்.
    ஆடுகளை திருடிய மர்ம நபர்
    விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலத்தில் ஆறுமுகம் என்பவர் ஆந்திராவிலிருந்து ஆடுகளை வாங்கி வந்து கண்டமங்கலம் புதுச்சேரி பகுதியில் செயல்படும் ஆட்டு கறி கடைகளுக்கு ஆடுகளை விற்பனை செய்து வருகிறார். இந்நிலையில் ஆந்திராவிலிருந்து இரண்டு தினங்களுக்கு முன் ஆடுகளை வாங்கி வந்த ஆறுமுகம், கண்டமங்கலத்திலுள்ள தனது ஆட்டுபட்டியில் விட்டு விட்டு, இரவு வீட்டிற்கு சென்றுள்ளார். அதிகாலை ஆட்டு பட்டிக்கு ஆறுமுகம் வந்து பார்த்தபோது ஆட்டுபட்டியின் கம்பிகளை உடைத்து உள்ளே இருந்த ஆறு ஆடுகளை மர்ம நபர்கள் திருடி சென்றது தெரிவந்தது.
    ஆடுகளை திருடிய ஆசாமி கைது
    இதனையடுத்து ஆடு திருட்டு சம்பவம் தொடர்பாக ஆறுமுகம் கண்டமங்கலம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தபுகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரனை செய்ததில் கண்டமங்கலத்தை சார்ந்த சுகுராஜ் என்ற நபர் ஆடுகளை திருடி சென்று அருகிலுள்ள திருபுவனையில் ஆட்டு கறி விற்பனை செய்யும் கடையில் இன்று ஆடுகளை விற்பனைக்காக கொண்டு சென்றபோது கையும் களவுமாக போலீசார் கைது செய்தனர்.  போலீசார் விசாரனையில் சுகுராஜ் கண்டமங்கலம் பகுதியில் தொடர்ந்து ஆடுகளை திருடி விற்பனை செய்து வந்தது விசாரனையில் தெரியவந்தது.

    மேலும் காண

    Source link

  • actor bose venkat criticizes actor vijay political entry

    actor bose venkat criticizes actor vijay political entry


    எந்த விதமான பொதுப்பணியிலும் அனுபவம் இல்லாமல் விஜய் அரசியலுக்கு வருவது குறித்து கேள்வி எழுப்பியுள்ளார் நடிகர் போஸ் வெங்கட்
    தமிழக வெற்றி கழகம்
     நடிகர் விஜய் தான் அரசியலுக்கு வருகைத் தருவதை கடந்த பிப்ரவரி 2ஆம் தேதி உறுதிபடுத்தினார். விஜய் மக்கள் இயக்கமாக இருந்த ரசிகர் அமைப்பை கட்சியாக பதிவு செய்த விஜய், தமிழக வெற்றி கழகம் என்று தனது  கட்சியின் பெயரையும் அறிவித்தார். சமீப காலமாக விஜய்யின் அரசியல் வருகை குறித்த பல்வேறு விவாதங்கள் நடைபெற்று வந்த சூழலில் விஜய் இதை உறுதிப்படுத்தியுள்ளார்.
    அவர் வெளியிட்ட நீண்ட அறிக்கை அரசியலில் தனது லட்சியம் என்னவென்பதை அவர் குறிப்பிட்டுள்ளார். வரும்  நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடவில்லை என்றும் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை என்றும், அவர் இந்த அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தார். அடுத்ததாக 2026ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலே தனது இலக்கு என்றும் கூறியிருந்தார். இதனைத் தொடர்ந்து தமிழ்நாடு  அரசியல் களத்தில் பல்வேறு விவாதங்கள் தொடங்கி உள்ளன.
    அடுத்த விஜயகாந்த் விஜய் தானா?
    விஜய் அரசியலுக்கு வரும் தகவல் வெளியானதில் இருந்து அவரை தேமுதிக தலைவர்  விஜயகாந்துடன் பலர் ஒப்பிட்டு பேசி வருகிறார்கள். நடிகர் விஜயகாந்த் தே.மு.தி.க. கட்சி தொடங்கி, பெரும் வரவேற்பை பெற்று  பின் பெரும் தொய்வை எதிர்கொண்டது. அதே போல் நடிகர் விஜய்யின் கட்சியும் பலத்த வரவேற்பும் நம்பிக்கையுடன் தொடங்கி இந்த தொய்வை சந்திக்க வாய்ப்பிருப்பதாக பலர் கருத்து தெரிவித்து வருகிறார்கள். ஆனால் விஜய்க்கு ஆதரவாக இருப்பவர்கள் நிச்சயமாக தமிழக அரசியல் களத்தில் விஜய் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவார் என்று கூறி வருகிறார்கள். 
    குறிப்பாக சினிமாவில் தற்போது உச்சத்தில் இருக்கும் விஜய் படவாய்ப்புகளை விட்டுவிட்டு அரசியலில் இறங்குவது அவருக்கு மக்களிடம் நல்ல ஆதரவை பெற்றுக் கொடுத்துள்ளது என்று சொல்லலாம்.
    விஜய் குறித்து போஸ் வெங்கட்
     நடிகர் விஜய் அரசியலுக்கு வருவது குறித்து நடிகரும் இயக்குநருமான போஸ் வெங்கட் தனியார் யூடியுப் சானல் ஒன்றில் பேசியுள்ளார். அதில் அவர் “   நான் பொதுவாழ்க்கையில் ஈடுபட இருக்கிறேன் என்றால் குறைந்தபட்சம் ஏதாவது வார்டில் செயலாளராக இருந்து மக்கள் பணி செய்திருக்க வேண்டும்.  ஒரு தலைமைப் பண்பு இருந்தால் மட்டுமே மக்களுக்கு நல்லது செய்ய முடியும் . என்னுடைய 19 வயதில் நான் ஆட்டோ சங்கத்திற்கு தலைவனாக இருந்தேன் , அந்த சங்கத்தைப் பற்றியும் அதன் நடைமுறைகள் பற்றியும் எனக்கு நன்றாகத் தெரியும்.
    அதே போல் நடிகர் விஜய்காந்த்  நடிகர் சங்கத்தின் தலைவராக இருந்தவர், விஜய்காந்த் பிறவியிலேயே அரசியல்வாதி. பிறவியிலேயே தலைமைப் பண்பு கொண்டவர். தான் தலைவராக இருந்த நடிகர் சங்கம் கஷ்டபட்டபோது அதற்காக பாடுபட்டு அதை மீட்டெடுத்தார். விஜய்காந்த் மாதிரி விஜய்  நடிகர் சங்கத்தின் பணியில் ஈடுபட்டிருக்கிறார் என்று சொல்ல முடியுமா? ஒன்றே ஒன்று சொல்கிறேன் விஜய் ஒரு முறை மேடை ஏறி பேசட்டு, அது வேறு யாராவது எழுதிக் கொடுத்து பேசினால் கூட பரவாயில்லை. அவருடைய நிலைப்பாடு என்ன என்பது தெரிந்துவிடும்” என்று போஸ் வெங்கட் கூறியுள்ளார்

    மேலும் காண

    Source link

  • actor vijay meet fans at goat movie shooting spot at puducherry tamizhaga vetri kazhagam

    actor vijay meet fans at goat movie shooting spot at puducherry tamizhaga vetri kazhagam


    கோட் படப்பிடிப்பு தளத்தில் நடிகரும், அரசியல் கட்சித் தலைவருமான விஜய்க்கு ஆரவாரம் எழுப்பி ரசிகர்கள் வரவேற்பு தந்த புகைப்படங்கள், வீடியோ வெளியாகியுள்ளது.
    அரசியல் வருகைக்கு இடையே படப்பிடிப்பு
    வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் விஜய் நடித்து திரைப்படம் கோட் (GOAT – Greatest Of All Time). இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது புதுச்சேரியில் நடைபெற்று வருகிறது. இதனிடையே விஜய் நேற்று முன் தினம் தன் அரசியல் எண்ட்ரி பற்றி அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டதுடன்,  தமிழக வெற்றி கழகம்” என கட்சியின் பெயரையும் பதிவு செய்து அறிவித்தார்.
    இதனைத் தொடர்ந்து விஜய்யின் அரசியல் வருகை தமிழ்நாடு தாண்டி பேசுபொருளாகியுள்ள நிலையில், அரசியல் தலைவர்கள், சினிமா வட்டாரத்தினர், ரசிகர்கள் என பலரும் வாழ்த்தையும் விமர்சனங்களையும் முன்வைத்து வருகின்றனர்.
    புதுச்சேரியில் சூழ்ந்த ரசிகர்கள்
    இந்நிலையில் புதுச்சேரியில் கோட் படப்பிடிப்புத் தளத்தில் விஜய் தன் ரசிகர்களை சந்தித்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன. புதுச்சேரி, முதலியார் பேட்டை ஏஎஃப்டி பஞ்சாலையில் கோட் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில், அங்கு அவரது ரசிகர்கள் சூழந்தனர்.
    இந்நிலையில் வெள்ளை ஷர்ட் அணிந்து கேரவேன் மேற்கூரையில் ஏறி தன் ரசிகர்களை நோக்கி கையசைத்து அவர்களை உற்சாகப்படுத்தினார் விஜய். தொடர்ந்து அங்கிருந்த ரசிகர்கள் ஆர்ப்பரித்து அவர் மீது பூக்களைத் தூவி வாழ்த்தினர். அரசியல் வருகையை அறிவித்த பின் முதன்முறையாக நடிகர் விஜய் பொதுவெளியில் தோன்றியிருப்பது குறிப்பிடத்தக்கது.
    ரசிகர்களுடன் செல்ஃபி!
     

    நெஞ்சில் குடியிருக்கும் தோழர்கள் ❤️#Thalapathy @actorvijay na❤️ @tvkvijayoffl pic.twitter.com/V5uTcKAf3m
    — Jagadish (@Jagadishbliss) February 4, 2024

    இந்நிலையில் “என் நெஞ்சில் குடியிருக்கும் தோழர்கள்” எனும் கேப்ஷனுடன் இந்த வீடியோவினை விஜய்யின் மேனேஜரும் மாஸ்டர் படத்தின் இணை தயாரிப்பாளருமான ஜெகதீஷ் பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் லைக்ஸ் அள்ளி வைரலாகி வருகிறது. 
    இந்நிலையில், தமிழ்நாடு வெல்கம்ஸ் டிவிகே விஜய் எனும் ஹேஷ்டேகையும் விஜய்யின் ரசிகர்கள் இணையத்தில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். 
    தமிழக வெற்றி கழகம்
    தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான விஜய்யின் அரசியல் வரவேற்பு எதிர்பார்த்த ஒன்று என்றாலும், இந்த அறிவிப்பு அரசியல், சினிமா தளங்களில் தற்போது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அரசியலில் எண்ட்ரி கொடுத்துள்ள விஜய்க்கு தமிழ்நாடு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
    வரும் 2024 மக்களவைத் தேர்தலில் தங்கள் கட்சி போட்டியிடப்போவதில்லை எனவும், அதே நேரத்தில் யாருக்கும் தாங்கள் ஆதரவு அளிக்கப் போவதில்லை என்பதையும் விஜய் ஏற்கெனவே தன் அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளார். இந்நிலையில், முன்னதாக “தமிழ்நாட்டு மக்களின் பேரன்போடு தான் முன்னெடுத்துள்ள அரசியல் பயணத்துக்கு வாழ்த்து தெரிவித்தவர்களுக்கு நன்றி” என விஜய் தெரிவித்துள்ளார்.

    மேலும் காண

    Source link

  • IN PICS Actor and Tamizha vetri kazhgam leader Vijay meets fans at GOAT shooting spot

    IN PICS Actor and Tamizha vetri kazhgam leader Vijay meets fans at GOAT shooting spot


    பொழுதுபோக்குVijay: “இது விளையாட்டு இல்ல, காலம் என்னை அங்கு நிறுத்தும்” – 13 ஆண்டுகளுக்கு முன்பு அரசியல் எண்ட்ரி பற்றி விஜய்!

    Source link