Tag: Vairamuthu

  • டீ மட்டும்தான் கொடுத்தாரு… ரஜினியை சந்தித்த வைரமுத்து பகீர் பதிவு…

    டீ மட்டும்தான் கொடுத்தாரு… ரஜினியை சந்தித்த வைரமுத்து பகீர் பதிவு…

    நடிகர் ரஜினிகாந்தை நேரில் சந்தித்த வைரமுத்து, அவருடனான கலந்துரையாடலை கவியாக வடித்துள்ளார்.

    அதில், 80 நிமிடங்கள் உரையாடியபோது, கிரீன் டீயைத் தவிர வேறு எந்த இடைஞ்சலும் இல்லை என்று பதிவிட்டுள்ளார். இதனை, டீ மட்டும்தான் ரஜினி கொடுத்தார் என வைரமுத்து சாடையாக கூறியிருப்ப்பதாக, பலர் விமர்சனம் செய்து வருகின்றனர்.

    நடிகர் ரஜினிகாந்த் உடனான சந்திப்புக்குப் பிறகு, வைரமுத்து வெளியிட்ட பதிவு இதோ…

    https://x.com/Vairamuthu/status/1855075536428495190?t=Yy_QG7qCJp3BUnP_SP2OBg&s=08

    கடிகாரம் பாராத
    உரையாடல்
    சிலபேரோடுதான் வாய்க்கும்

    அவருள் ஒருவர்
    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

    80நிமிடங்கள்
    உரையாடியிருக்கிறோம்

    ஒரே ஒரு
    ‘கிரீன் டீ’யைத் தவிர
    எந்த இடைஞ்சலும் இல்லை;
    இடைவெளியும் இல்லை

    சினிமாவின் அரசியல்
    அரசியலின் சினிமா
    வாழ்வியல் – சமூகவியல்
    கூட்டணிக் கணக்குகள்
    தலைவர்கள்
    தனிநபர்கள் என்று
    எல்லாத் தலைப்புகளும்
    எங்கள் உரையாடலில்
    ஊடாடி ஓய்ந்தன

    எதுகுறித்தும்
    அவருக்கொரு தெளிவிருக்கிறது

    தன்முடிவின் மீது
    உரசிப் பார்த்து
    உண்மை காணும்
    குணம் இருக்கிறது

    நான்
    அவருக்குச் சொன்ன
    பதில்களைவிட
    அவர் கேட்ட கேள்விகள்
    மதிப்புமிக்கவை

    தவத்திற்கு ஒருவர்;
    தர்க்கத்திற்கு இருவர்

    நாங்கள்
    தர்க்கத்தையே
    தவமாக்கிக் கொண்டோம்

    ஒரு காதலியைப்
    பிரிவதுபோல்
    விடைகொண்டு வந்தேன்

    இரு தரப்புக்கும்
    அறிவும் சுவையும் தருவதே
    ஆரோக்கியமான சந்திப்பு

    அது இது

    இவ்வாறு வைரமுத்து தனது எக்ஸ் தள பக்கத்தில் கவி பதிவிட்டுள்ளார்.

    அதில், 80 நிமிடங்கள் உரையாடியபோது, கிரீன் டீயைத் தவிர வேறு எந்த இடைஞ்சலும் இல்லை என்று பதிவிட்டுள்ளார். இதனை, டீ மட்டும்தான் ரஜினி கொடுத்தார் என வைரமுத்து சாடையாக கூறியிருப்ப்பதாக, பலர் விமர்சனம் செய்து வருகின்றனர்.

    நடிகர் ரஜினிகாந்த் உடனான சந்திப்புக்குப் பிறகு, வைரமுத்து வெளியிட்ட பதிவு இதோ…

    https://x.com/Vairamuthu/status/1855075536428495190?t=Yy_QG7qCJp3BUnP_SP2OBg&s=08

    கடிகாரம் பாராத
    உரையாடல்
    சிலபேரோடுதான் வாய்க்கும்

    அவருள் ஒருவர்
    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

    80நிமிடங்கள்
    உரையாடியிருக்கிறோம்

    ஒரே ஒரு
    ‘கிரீன் டீ’யைத் தவிர
    எந்த இடைஞ்சலும் இல்லை;
    இடைவெளியும் இல்லை

    சினிமாவின் அரசியல்
    அரசியலின் சினிமா
    வாழ்வியல் – சமூகவியல்
    கூட்டணிக் கணக்குகள்
    தலைவர்கள்
    தனிநபர்கள் என்று
    எல்லாத் தலைப்புகளும்
    எங்கள் உரையாடலில்
    ஊடாடி ஓய்ந்தன

    எதுகுறித்தும்
    அவருக்கொரு தெளிவிருக்கிறது

    தன்முடிவின் மீது
    உரசிப் பார்த்து
    உண்மை காணும்
    குணம் இருக்கிறது

    நான்
    அவருக்குச் சொன்ன
    பதில்களைவிட
    அவர் கேட்ட கேள்விகள்
    மதிப்புமிக்கவை

    தவத்திற்கு ஒருவர்;
    தர்க்கத்திற்கு இருவர்

    நாங்கள்
    தர்க்கத்தையே
    தவமாக்கிக் கொண்டோம்

    ஒரு காதலியைப்
    பிரிவதுபோல்
    விடைகொண்டு வந்தேன்

    இரு தரப்புக்கும்
    அறிவும் சுவையும் தருவதே
    ஆரோக்கியமான சந்திப்பு

    அது இது

    இவ்வாறு வைரமுத்து தனது எக்ஸ் தள பக்கத்தில் கவி பதிவிட்டுள்ளார்.

  • art literature jnanpith award boycott tamil vairamuthu post | ஞானபீட விருது…22 ஆண்டுகளாக தமிழ் புறக்கணிப்பு

    art literature jnanpith award boycott tamil vairamuthu post | ஞானபீட விருது…22 ஆண்டுகளாக தமிழ் புறக்கணிப்பு


    இலக்கிய ஆளுமைகளுக்காக இந்தியாவில் வழங்கப்படும் பெரும் அங்கீகாரமான ஞானபீட விருது, கடந்த 22 ஆண்டுகளாக தமிழை தவிர்த்து வருவது குறித்து கவிஞர் வைரமுத்து தனது எக்ஸ் தள பக்கத்தில் பகிர்ந்திருக்கிறார். 
    ஞான பீட விருது:
    உருது கவிஞரும், இந்தி சினிமா பாடலாசிரியருமான குல்சார் மற்றும் சமஸ்கிருத அறிஞர் ஜகத்குரு ராம்பத்ரச்சார்யா ஆகியோருக்கு 2023-ஆம் ஆண்டுக்கான ஞானபீட விருது அறிவிக்கப்பட்டுள்ளது. ஞானபீட தேர்வுக்குழு வெளியிட்ட அறிவிப்பினை அடுத்து, இலக்கிய ஆளுமைகள் இருவருக்கும் வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டு வருகின்றது. 
    கவிஞர் வைரமுத்துவும் தனது வாழ்த்தினை எக்ஸ் தள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் விருது பெற்ற கவிஞர், பாடலாசிரியர், எழுத்தாளர், என பன்முகம் கொண்ட குல்சாருக்கு வாழ்த்துகளை தெரிவித்திருக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்த படங்கள் பலவற்றில், தமிழில் வைரமுத்துவும், இந்தியில் குல்சாரும் பாடல் வரிகளை எழுதிய நிலையில் இருவரும் இணைந்து பணியாற்றி உள்ளனர். இதை தனது வரிகளில் நினைவு கூர்ந்துள்ளார். 
    தமிழ் மொழி புறக்கணிப்பு:
    கூடவே, ஞானபீட விருது கடந்த 22 ஆண்டுகளாக தமிழை புறக்கணித்து இருப்பது குறித்தும் வைரமுத்து அப்பதிவில் குறிப்பிட்டுள்ளார்.  அவர் பதிவிட்டுள்ளதாவது, ”சமஸ்கிருத மொழிக்காக சமய ஆளுமை ராம்பத்ராசாரியாவும் உருது மொழிக்காக இலக்கிய ஆளுமை குல்சாரும் இந்த ஆண்டு ஞானபீட விருதைப் பகிர்ந்துகொள்வது மகிழ்ச்சி தருகிறது.
    இரு பேராளுமைகளுக்கும் வாழ்த்துக்கள் ஜெயகாந்தனுக்குப் பிறகு ஞானபீடம் தமிழ்மொழியை 22ஆண்டுகள் தவிர்த்தே வருவது தற்செயலானதன்று என்று தமிழ்ச் சமூகம் கவலையுறுகிறது முழுத் தகுதிகொண்ட முதிர்ந்த பல படைப்பாளிகள் காலத்தால் உதிர்ந்தே போயிருக்கிறார்கள் வேண்டிப் பெறுகிற இடத்தில் தமிழ் இல்லையென்ற போதிலும் தூண்டிவிடுவது கடமையாகிறது” இவ்வாறு தெரிவித்துள்ளார். 
     

    சமஸ்கிருத மொழிக்காகசமய ஆளுமை ராம்பத்ராசாரியாவும்உருது மொழிக்காகஇலக்கிய ஆளுமை குல்சாரும்இந்த ஆண்டு ஞானபீட விருதைப்பகிர்ந்துகொள்வதுமகிழ்ச்சி தருகிறதுஇரு பேராளுமைகளுக்கும்வாழ்த்துக்கள்ஜெயகாந்தனுக்குப் பிறகுஞானபீடம்தமிழ்மொழியை 22ஆண்டுகள்தவிர்த்தே வருவதுதற்செயலானதன்று… pic.twitter.com/YLlP2kqykk
    — வைரமுத்து (@Vairamuthu) February 18, 2024

    மேலும் படிக்க
    Rashmika Mandana: விமானத்தில் தொழில்நுட்பக் கோளாறு: நூலிழையில் உயிர் தப்பிய ராஷ்மிகா: நடந்தது என்ன?
    Shaktimaan: அட… சக்திமானாக ரன்வீர் சிங்! கைகோர்க்கும் மின்னல் முரளி இயக்குநர்? வேற லெவல் தகவல்!
     

    மேலும் காண

    Source link

  • vairamuthu posted sad tweet about chennai udhayam theatre closing ceremony

    vairamuthu posted sad tweet about chennai udhayam theatre closing ceremony


    சென்னையின் பிரபலமான தியேட்டர்களில் ஒன்றான உதயம் தியேட்டர் மூடப்பட உள்ள நிலையில் இதுதொடர்பாக கவிப்பேரரசு வைரமுத்து ட்வீட் ஒன்றை வெளியிட்டுள்ளார். 
    பொதுவாக தமிழ்நாட்டில் எந்த ஊருக்கு சென்றாலும் அங்கிருக்கும் முக்கிய அடையாளங்களில் ஒன்றாக தியேட்டர்கள் திகழ்கின்றது என்பது மறுக்க முடியாத உண்மை. உணர்வுகளால் நம்மை கட்டிப்போட்ட பங்கு அந்த 3 மணி நேர காட்சிகளுக்கு உண்டு. அப்படிப்பட்ட தியேட்டர்கள் காலப்போக்கிற்கு ஏற்றவாறு அப்டேட் வெர்ஷனாக மாற்றப்பட்டாலும், பல பிரபல தியேட்டர்கள் திருமண மண்டபம், ஷாப்பிங் காம்ப்ளக்ஸ் ஆக கட்டப்பட்டது சோகத்திலும் சோகமான நிகழ்வு தான்.
    இப்படியான நிலையில் சென்னையின் முக்கிய அடையாளமாக கருதப்படும் உதயம் தியேட்டர் மூடப்படுவதாக தகவல் வெளியாகி திரையுலக ரசிகர்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. சென்னையின் மிக முக்கியப்பகுதியாக உள்ள அசோக் நகரில் உதயம், மினி உதயம், சந்திரன், சூரியன் என 4 ஸ்கிரீன்களுடன் கடந்த 1983 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த தியேட்டர் சென்னை மட்டுமல்லாது வெளியூரில் இருந்து வரும் மக்களுக்கு பட்ஜெட்டுக்கு ஏற்ற தியேட்டராகவும் திகழ்ந்தது. உண்மையில் இந்த தியேட்டரால் ஏழை, எளிய மக்கள் சினிமா பார்க்கும் கனவு  நிஜமானது என்பதே உண்மை.
    பல படங்கள் வெள்ளி விழா கொண்டாடிய தியேட்டர் மட்டுமல்லாமல் முன்னணி நடிகர்களின் படங்களின் ஷூட்டிங்கும் இந்த தியேட்டர் வளாகத்தில் நடைபெற்றுள்ளது. உதயம் தியேட்டர் என்றாலே கொண்டாட்டம் என்றிருந்த நிலையில் அந்த தியேட்டர் மூடப்படுவது மிகவும் வருந்ததக்க ஒன்றாகவே உள்ளது. இதன் அருகில் இருக்கும் உதயம் திருமண மண்டபம் உள்ளிட்ட இடங்களை பிரபலமான கட்டுமான நிறுவனம் விலைக்கு வாங்கி விட்டதாக கூறப்படுகிறது. விரைவில் உதயம் தியேட்டர் இடிக்கும் பணிகள் தொடங்கப்பட உள்ளது. 

    ஒரு கலைக்கூடம் மூடப்படுகிறது;இதயம் கிறீச்சிடுகிறதுமுதல் மரியாதை, சிந்து பைரவி,பூவே பூச்சூடவா, புன்னகை மன்னன்ரோஜா என்றுநான் பாட்டெழுதியபல வெற்றிப் படங்களைவெளியிட்ட உதயம் திரைவளாகம்மூடப்படுவது கண்டுஎன் கண்கள்கலைக் கண்ணீர் வடிக்கின்றனமாற்றங்களின்ஆக்டோபஸ் கரங்களுக்கு… pic.twitter.com/ckGwDDD6bC
    — வைரமுத்து (@Vairamuthu) February 15, 2024

     இந்நிலையில் 40 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த இந்த தியேட்டர் மூடப்படுவது திரைப்பிரபலங்கள், ரசிகர்கள் என பலரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் கவிப்பேரரசு வைரமுத்து உதயம் தியேட்டர் தொடர்பான பதிவு ஒன்றை தனது எக்ஸ் வலைத்தளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். 
    அதில்,
    “ஒரு கலைக்கூடம் மூடப்படுகிறது;  இதயம் கிறீச்சிடுகிறது.
    முதல் மரியாதை, சிந்து பைரவி, பூவே பூச்சூடவா, புன்னகை மன்னன் ரோஜா என்று நான் பாட்டெழுதிய பல வெற்றிப் படங்களை வெளியிட்ட உதயம் திரைவளாகம் மூடப்படுவது கண்டு என் கண்கள் கலைக் கண்ணீர் வடிக்கின்றனமாற்றங்களின் ஆக்டோபஸ் கரங்களுக்கு எதுவும் தப்ப முடியாது என்று மூளை முன்மொழிவதை இதயம் வழிமொழிய மறுக்கிறது இனி அந்தக் காலத் தடயத்தைக் கடக்கும் போதெல்லாம் வாழ்ந்த வீட்டை விற்றவனின் பரம்பரைக் கவலையோடு என் கார் நகரும்
    -நன்றி உதயம்” என தெரிவித்துள்ளார். 

    மேலும் படிக்க: Vijay – AjithKumar: தல – தளபதி ரசிகர்களே தயாரா? – ரீ-ரிலீஸ் ஆகும் காதலுக்கு மரியாதை,வாலி படங்கள்..!

    மேலும் காண

    Source link

  • 12b movie harris jayaraj music speciality behind the punnagai poove song

    12b movie harris jayaraj music speciality behind the punnagai poove song


    இசை பிரியர்கள் அனைவருக்கும் திரை இசை பாடல்கள் என்றால் மிகவும் பிடிக்கும். திரைப்பட பாடல்களை கேட்டு ரசிப்பவர்கள் பெரும்பாலானோர் என்றாலும் அதை விஷுவலாக பார்த்து ரசிப்பவர்கள் ஏராளம். அதற்காகவே பல திரைப்பட தயாரிப்பாளர்கள் ஒரு பாடலுக்காக பல மெனெக்கெடல்களை எடுத்து அந்த பாடலுக்கு மேலும் அழகு சேர்க்கிறார்கள்.
    ஒரு புன்னகை பூவே:படத்திற்காக பயன்படுத்தப்படும் பட்ஜெட்டை காட்டிலும் ஒரே பாடலுக்கு பல லொகேஷன்களில் ஷூட்டிங் செய்து பார்வையாளர்களை வியக்க வைப்பார்கள். ஒரு சிலரோ ஏராளமான வேரியேஷன்கள் பாடல்களில் கொண்டு வருகிறார்கள். ஒரு சிலர் அதை கவனித்து இருந்தாலும் பெரும்பாலானோர் அதை ரசிக்க மட்டுமே செய்வார்கள் தவிர அந்த காட்சியின் பின்னணியில் இருக்கும் அர்த்தத்தை புரிந்து பார்ப்பவர்கள் வெகு சிலரே. அப்படி ஒரு மெனக்கெடலுடன் எடுக்கப்பட்ட பாடல் தான் 12பி படத்தில் இடம்பெற்ற ‘ஒரு புன்னகை பூவே…’ பாடல். திரையில் நாம் பார்த்த காட்சிக்கு பின்னணியில் இவ்வளவு விஷயம் இருக்கிறதா என்ற சுவாரஸ்யமான தகவல் உங்களுக்காக…
     

    படமாக்கியது எப்படி?2001ம் ஆண்டு ஜீவா இயக்கத்தில் ஷ்யாம், சிம்ரன், ஜோதிகா, விவேக் உள்ளிட்டோரின் நடிப்பில் வெளியான சூப்பர் ஹிட் ரொமான்டிக் திரைப்படம் 12பி. ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் இப்படத்தில் இடம்பெற்ற  லவ் பண்ணு, சரியா தவறா, முத்தம் முத்தம் முத்தம்மா, பூவே வாய் பேசும் போது, ஜோதி நெறஞ்சவ, ஒரு பார்வை பார், ஓ நெஞ்சே என அனைத்து பாடல்களுமே இன்று வரை அனைவரின் பிளே லிஸ்ட்களிலும் இடம்பெற்றுள்ள சூப்பர் ஹிட் பாடல்கள். 
    “ஒரு புன்னகை பூவே… சிறு பூக்களின் தீவே…” என்ற பாடலை கே கே மற்றும் பிரசாந்தினி பாடி இருந்தனர். ஹாரிஸ் ஜெயராஜ் இசையில் வைரமுத்துவின் வரிகளில் இந்த பாடலை கேட்கவே மிகவும் அற்புதமாக  இருக்கும். இந்த பாடலின் மேக்கிங் சற்று வித்தியாசமாக இருக்க வேண்டும் என இயக்குநர் ஜீவாவும், டான்ஸ் மாஸ்டர் ராஜுசுந்தரமும் யோசித்த போது அவர்களுக்கு ஒரு ஐடியா கிடைத்துள்ளது. 
    சம்மர் சீசன், மழைக்காலம், இலையுதிர் காலம், ஸ்னோ சீசன் என நான்கு சீசனும் இடம் பெரும் வகையில் இந்த பாடல் அமைக்கப்பட்டு இருக்கும். ஒரு பாடலுக்காக இவ்வளவு மெனெக்கெட்டு எடுத்து இருக்கிறார்களா? என தோன்றும். இது எத்தனை பேர் கவனித்து இருப்பார்கள் என்பது தெரியாது என்றாலும் ஒரு பாடலுக்காக அவர்கள் எடுத்த இந்த மெனக்கெடல் பாராட்டிற்குரியது. இதே போல பல திரைப்படங்களிலும் பல பாடல்களின் பின்னணியிலும் ஏதாவது மறைந்து இருக்கும் ஸ்பெஷாலிட்டி இருக்கும். அவற்றை உற்று நோக்கும் போது தான் தெரியவரும். 

    மேலும் காண

    Source link

  • "இந்தி மொழி மீது அச்சம் இருக்கிறது"

    "இந்தி மொழி மீது அச்சம் இருக்கிறது"


    <p>"இந்தி மொழி மீது அச்சம் இருக்கிறது"</p>

    Source link

  • "இந்தி மொழி மீது வெறுப்பா?"

    "இந்தி மொழி மீது வெறுப்பா?"


    <p>"இந்தி மொழி மீது வெறுப்பா?"</p>

    Source link

  • "எங்களுக்கு தமிழும், ஆங்கிலமும் போதும்"

    "எங்களுக்கு தமிழும், ஆங்கிலமும் போதும்"


    <p>"எங்களுக்கு தமிழும், ஆங்கிலமும் போதும்"</p>

    Source link

  • Lyricist Vairamuthu Appreciated Society Of The Snow Movie | Vairamuthu: இந்த மாதிரியான படங்கள் தமிழில் எப்போது?

    Lyricist Vairamuthu Appreciated Society Of The Snow Movie | Vairamuthu: இந்த மாதிரியான படங்கள் தமிழில் எப்போது?

    கவிப்பேரரசு வைரமுத்து தன்னுடைய எக்ஸ் வலைத்தள பக்கத்தில் படம் ஒன்றை பார்த்தது குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். 
    தியேட்டர்கள், தொலைக்காட்சி சேனல்கள் தவிர்த்து உலக படங்களை காணும் இடமாக ஓடிடி தளங்கள் நல்ல வளர்ச்சியை பெற்றுள்ளது. குறிப்பாக கொரோனா காலக்கட்டத்திற்கு பிறகு உலக திரைப்படங்களை காணும் வாய்ப்பு அனைவருக்கும் அமைந்துள்ளது. அமேசான், நெட்பிளிக்ஸ், ஹாட் ஸ்டார், சோனி, ஆஹா, ஜீ 5, சன் நெக்ஸ்ட் என பல ஓடிடி தளங்கள் தமிழில் உள்ளது. வாடிக்கையாளர்களுக்கு ஏற்ப மாதம், ஆண்டு சந்தா அடிப்படையில் கட்டணமானது நிர்ணயிக்கப்படுகிறது. 
    இந்நிலையில் சொசைட்டி ஆஃப் தி ஸ்னோ கடந்த ஜனவரி 4 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியானது. 1972 ஆம் ஆண்டு ஆண்டில் உருகுவேயின் நிகழ்ந்த விமான விபத்தின் கொடூரமான பின்னணியை அடிப்படையாக கொண்ட உண்மைக் கதையாகும்.  உருகுவே ரக்பி அணியை சிலிக்கு அழைத்துச் செல்ல வாடகைக்கு எடுக்கப்பட்ட விமானம் ஆண்டிஸ் மலைகளின் மையப்பகுதியில் விபத்துக்குள்ளாது. இந்த விபத்தில் உயிர் பிழைத்த நபர்கள் உடனடியாக மீட்பு எதுவும் இல்லாமல் ஒரு பாழடைந்த டன்ட்ராவில் சிக்கித் தவித்தனர். இதனை மையமாக கொண்டு எடுக்கப்பட்டது.
    இந்த படத்தில்  என்ஸோ வோக்ரின்சிக், மாட்யாஸ் ரீகால்ட், அகஸ்டின் பர்டெல்லா, டியாகோ வெஜெஸி, எஸ்டெபன் குகுரிஸ்கா,  ரஃபேல் ஃபெடர்மேன் உள்ளிட்ட பலரும் நடித்தனர். ஜே ஏ பயோனா இயக்கியுள்ள இந்த படம் மிகப்பெரிய அளவில் பாராட்டைப் பெற்றுள்ளது. மைக்கேல் கியாச்சினோ இசையமைத்துள்ள இந்த படம் பெட்ரோ லுக் ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படம் ஓடிடி தளத்தில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.  இந்நிலையில் இந்த படம் தொடர்பாக கவிப்பேரரசு வைரமுத்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.

    ஒருஸ்பானிஷ் படம் பார்த்தேன்ஒரு பனிமலையில்விழுந்து உடைகிறது விமானம்விமானத்தின்உடைந்த கூடே கூடாரமாய்உயிர்காக்கப் போராடுகிறார்கள்பிழைத்தவர்கள்பசியின் உச்சத்தில்இறந்த பயணிகளின்இறைச்சியை உண்ணுகிறார்கள்இறுதியில்எப்படி மீட்கப்பட்டார்கள்என்பது கதை‘Society of the Snow’… pic.twitter.com/o84BLbuh9E
    — வைரமுத்து (@Vairamuthu) January 14, 2024

    அதில், “ஒரு ஸ்பானிஷ் படம் பார்த்தேன் ஒரு பனிமலையில் விழுந்து உடைகிறது விமானம். விமானத்தின் உடைந்த கூடே கூடாரமாய் உயிர்காக்கப் போராடுகிறார்கள் பிழைத்தவர்கள். பசியின் உச்சத்தில் இறந்த பயணிகளின் இறைச்சியை உண்ணுகிறார்கள். இறுதியில் எப்படி மீட்கப்பட்டார்கள் என்பது கதை ‘Society of the Snow’ படம் முடிவதற்குள் பனிக்கட்டி ஆகிவிடுகிறது ரத்தம். இப்படி ஒற்றைப் பொருள் குறித்த படங்கள் தமிழில் எப்போது?” என தெரிவித்துள்ளார்.

    மேலும் படிக்க: Guntur Kaaram Review: மாஸ் காட்டிய மகேஷ்பாபு.. வசூலை வாரி குவிக்கும் “குண்டூர் காரம்” படத்தின் விமர்சனம் இதோ..!

    Source link