<p><strong>Toll Plaza Fee: </strong>தமிழ்நாட்டில் ஐந்து சுங்கச்சாவடிகளில் கட்டணம் ஏப்ரல் 1ஆம் தேதி முதல் உயர்த்துவதாக தேசிய நெடுஞ்சாலை ஆணையம் அறிவித்துள்ளது.</p>
<h2><strong>5 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு:</strong></h2>
<p>இந்தியாவின் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் ஒவ்வொரு ஆண்டும் சுங்கக் கட்டணம் உயர்த்தப்படுகிறது. அதில், முதன்மையாக உள்ள சுங்கச்சாவடிகளுக்கு ஏப்ரல் மாதமும், அதன்பிறகு மீதமுள்ள சுங்கச்சாவடிகளுக்கு செப்டம்பர் மாதமும் கட்டணம் உயர்த்தப்படும்.</p>
<p>இதன் அடிப்படையில் கடந்த 2023ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 26 சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு அமல்படுத்தப்பட்டது. இந்த நிலையில், மீண்டும் சுங்கச்சாவடி கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 5 சுங்கச்சாவடிகளில் கட்டணத்தை உயர்த்துவது தொடர்பான அறிவிப்பை தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் வெளியிட்டுள்ளது. தமிழகத்தில் உள்ள 5 சுங்கச்சாவடிகளில் வரும் ஏப்ரல் 1ம் தேதி நள்ளிரவு 12 மணி முதல் சுங்க கட்டண உயர்வு அமலுக்கு வரும் என தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் அறிவித்துள்ளது.</p>
<h2><strong>எங்கெங்கு தெரியுமா?</strong></h2>
<p>இதன்படி அரியலூர் மாவட்டம் மணகெதி, திருச்சி மாவட்டம் கல்லக்குடி, வேலூர் மாவட்டம் வல்லம், திருவண்ணாமலை மாவட்டம் இனம்கரியாந்தல், விழுப்புரம் மாவட்டம் தென்னமாதேவி ஆகிய சுங்கச்சாவடிகளில் கட்டணத்தை உயர்த்துவதாக தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் தெரிவித்துள்ளது. </p>
<p>மணகெதி சுங்கச்சாவடியில் ஒருமுறை பயணம் செய்வது மற்றும் ஒரே நாளில் திரும்பி வருவதற்கான பயண கட்டணம் ரூ.5 முதல் 15 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. மாதாந்திர பாஸ்கட்டணம் அதிகபட்சமாக 300 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. கல்லக்குடி சுங்கச்சாவடியில் ஒருமுறை பயணம் செய்வது மற்றும் ஒரே நாளில் திரும்பி வருவதற்கான பயண கட்டணம் ரூ.5 முதல் 20 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது.</p>
<p>மாதாந்திர பாஸ்கட்டணம் அதிகபட்சமாக 400 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. வல்லம், இனம்கரியாந்தல், தென்னமாதேவி, சுங்கச்சாவடியில் ஒருமுறை பயணம் செய்வது மற்றும் ஒரே நாளில் திரும்பி வருவதற்கான பயண கட்டணம் ரூ.5 முதல் 10 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது. மாதாந்திர பாஸ்கட்டணம் அதிகபட்சமாக 100 ரூபாய் வரை உயர்த்தப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>
<p>அடுத்த மாதம் நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில், சுங்கக் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. தேர்தலையொட்டி திமுக மற்றும் அதிமுக என இரு கட்சிகளும் சுங்கச்சாவடி கட்டணம் ரத்த செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தனது தேர்தல் அறிக்கையில் இரு கட்சிகளுக்கு அறிவித்திருந்தன. இப்படியான சூழலில், சுங்கச்சாவடி கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. </p>
<hr />
<p>மேலும் படிக்க</p>
<p class="abp-article-title"><a title="CM Stalin: " href="https://tamil.abplive.com/news/tamil-nadu/tm-krishna-conferred-kalanidi-title-in-karnatic-music-cm-stalin-wishes-to-tm-krishna-174371" target="_self">CM Stalin: "இசையிலும் குறுகிய அரசியலைக் கலக்க வேண்டாம்" டி.எம்.கிருஷ்ணாவுக்கு குரல் கொடுத்த ஸ்டாலின்!</a></p>
<p class="abp-article-title"><a title="Mahua Moitra Raid: மஹுவா மொய்த்ரா வீட்டில் ரெய்டு.. லஞ்சம் பெற்ற புகாரில் சிபிஐ அதகளம்!" href="https://tamil.abplive.com/news/india/cbi-raids-expelled-trinamool-congress-mp-mahua-moitra-kolkata-home-in-cash-for-query-case-174381" target="_self">Mahua Moitra Raid: மஹுவா மொய்த்ரா வீட்டில் ரெய்டு.. லஞ்சம் பெற்ற புகாரில் சிபிஐ அதகளம்!</a></p>
<div class="abp-article-byline"> </div>
Tag: toll plaza

Toll Plaza Fee: தமிழ்நாட்டில் 5 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்வு! எங்கெங்கு தெரியுமா? – புதிய கட்டணம் இதுதான்!

Chengalpattu District Consumer Court Imposes A Fine Of Rs.50 Thousand On Paranur Toll Booth For Charging Extra Fee
கூடுதல் கட்டணம் வசூலித்த பரனூர் சுங்கச்சாவடிக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து செங்கல்பட்டு மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
செங்கல்பட்டு ( Chengalpattu News ) : தேசிய நெடுஞ்சாலைகளில் சுங்கச்சாவடி என்பது மிக முக்கிய பங்காற்றி வருகிறது. தேசிய நெடுஞ்சாலையில், பிற சாலைகள் என்றும் தரத்துடன் அமைக்கப்படும். இதனால் சுங்க கட்டணம் செலுத்த வேண்டிய அவசியமாகிறது. ஆரம்பத்தில் பொதுமக்களுக்கு, வாகன ஓட்டிகளுக்கும் வரப்பிரசாதமாக அமைந்த, இந்த சுங்கச்சாவடிகள் வாகனங்கள் பெருக தலைவலியை உருவாக்கியது. சில ஆண்டுகளுக்கு முன்பு சுங்க கட்டணம் செலுத்துவதற்கு நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய சூழலும் ஏற்பட்டது. ஆன்லைன் மூலமாக பணம் செலுத்தக்கூடிய ஃபாஸ்ட் டேக் (fastag ) முறையை அறிமுகப்படுத்தியது. இந்த முறை மூலம் காத்திருக்காமல் வேகமாக செல்வதை உறுதி செய்ய முடியும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால் சில சமயங்களில் நெட்வொர்க் பிரச்சனையால், ஃபாஸ்ட் டேக் வேலை செய்யாமல் இருப்பதாக வாடிக்கையாளர்கள் அவ்வபோது குற்றச்சாட்டை முன் வைத்தும் வருகின்றனர். அதுபோன்ற சமயங்களில் இரண்டு மடங்கு பணம் நேரடியாக வசூலிக்கப்படுவதாகவும் வாகன ஓட்டிகள் குற்றச்சாட்டை முன் வைக்கின்றனர்.
செங்கல்பட்டு பரனுர் சுங்கச்சாவடி – Paranur Toll Plaza
செங்கல்பட்டில் ஒரு சம்பவம்
செங்கல்பட்டு மாவட்டம் மப்பேடு பகுதியை சேர்ந்தவர் தனசிங். இவருக்கு சொந்தமாக ஒரு டெம்போ வேன் உள்ளது. அந்த அந்த டெம்போ வேனை வைத்து அவர் சுய தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் கடந்த 29-06-2021 அன்று சேலையூரில் உள்ள ஒரு வீட்டை காலி செய்து அதில் உள்ள பொருட்களை ராமநாதபுரம் மாவட்டம், மண்டபத்தில் உள்ள ஒரு வீட்டில் வைக்க சவாரி வந்துள்ளது. அதன்படி தனசிங் அன்றைய தினமே தனியார் வங்கி கணக்கில் 2 ஆயிரம் ரூபாய் பாஸ்டேக் ரீச்சார்ஜ் செய்துள்ளார்.
செங்கல்பட்டு பரனுர் சுங்கச்சாவடி – Paranur Toll Plaza
பரனூர் சுங்கச்சாவடி
பின்னர் சேலையூரிலிருந்து செங்கல்பட்டு அடுத்த பரனூர் சுங்கச்சாவடி வழியாக கடந்து மண்டபம் சென்று அங்குள்ள வீட்டில் சாமான்களை இறக்கி விட்டு மீண்டும் அவர் வந்த வழியே வீடு நோக்கி வந்துள்ளார். அப்போது பரனூர் சுங்கச்சாவடியில் ஃபாஸ்ட் டேக் வேலை செய்யவில்லை என கூறி இருமடங்கு தொகையை வசூலித்து உள்ளனர். இதனால் அதிர்ச்சி அடைந்த தன்சிங் சம்மந்தப்பட்ட வங்கியை தொடர்பு கொண்டு கேட்டபோது ஃபாஸ்ட் டேக் நன்றாகவே உள்ளது. இதில் எந்த கோளாறும் இல்லை என விளக்கம் அனுப்பி உள்ளனர்.
மாவட்ட நுகர்வோர் குறைத்தீர் ஆணையம்
செங்கல்பட்டு மாவட்ட நுகர்வோர் நீதிமன்றம்
இதனையடுத்து மன உலைச்சல் அடைந்த தனசிங் பரனூர் சுங்கச்சாவடி மீது செங்கல்பட்டு மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் கடந்த 06-09-2022 அன்று வழக்கு தொடர்ந்தார். இந்நிலையில் வழக்கினை விசாரித்த நுகர்வோர் கோர்ட் தலைவர் காசி பாண்டியன், உறுப்பினர்கள் ஜவகர், விமலா ஆகியோர் தீர்ப்பளித்தனர். அந்த தீர்ப்பில் ஃபாஸ்ட் டேக்கில் போதிய பணம் இருந்தும் கூடுதல் கட்டணம் வசூலித்த குற்றத்திற்காக பரனுர் சுங்கச்சாவடிக்கு ரூபாய் 50 ஆயிரம் அபராதமும், வழக்கு செலவுக்கு ரூ.10 ஆயிரம் வழங்கவும் உத்தரவிட்டனர்.
தூத்துக்குடியில் சுங்கக் கட்டணத்திற்கு திடீர் விலக்கு… ஆனால் யாருக்கு இந்த விலக்கு? முழு விவரம்
தூத்துக்குடி மாவட்டத்தில் சுங்கச் சாவடிகளில் 31ஆம் தேதி வரை, நிவாரணப் பொருட்களை கொண்டு செல்லும் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிப்பதில் இருந்து விலக்கு அளித்து மாவட்ட ஆட்சியர் லட்சுமிபதி உத்தரவிட்டுள்ளார்.
தூத்துக்குடி மாவட்டத்தில் 17 மற்றும் 18ஆம் தேதிகளில் பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தால், பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதைத் தொடர்ந்து, தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து நிவாரண பொருட்கள் கொண்டுவரப்படுகின்றன.
இதனால், நிவாரணப் பொருட்கள் கிடைப்பதற்கு ஏதுவாக, தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று 24 ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை சுங்கச்சாவடிகளில் சுங்க கட்டணங்களுக்கு விலக்கு அளித்து மாவட்ட ஆட்சித் தலைவர் லட்சிமிபதி உத்தரவிட்டுள்ளார்.
நிவாரண பொருட்கள் கொண்டு வருவதற்காக தூத்துக்குடி மாவட்டத்திற்கு வரும் வாகனங்களுக்கும், நிவாரணப் பொருட்களுடன் செல்லும் வாகனங்களுக்கும், தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள மூன்று சுங்க சாவடிகளில் சுங்க கட்டணம் செலுத்தாமல் செல்லலாம்.


