Tag: Theni

  • nomination of DMK candidate A raja Nilgiris constituency in the Lok Sabha elections has been accepted after being put on hold | Lok Sabha Election 2024: நீலகிரி மக்களவை தொகுதி! ஆ.ராசா மனு நிறுத்தி வைக்கப்பட்ட பின்பு ஏற்பு

    nomination of DMK candidate A raja Nilgiris constituency in the Lok Sabha elections has been accepted after being put on hold | Lok Sabha Election 2024: நீலகிரி மக்களவை தொகுதி! ஆ.ராசா மனு நிறுத்தி வைக்கப்பட்ட பின்பு ஏற்பு


    மக்களவை தேர்தலில் நீலகிரி தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் ஆ.ராசாவின் வேட்பு மனு நிறுத்தி வைக்கப்பட்ட பின் ஏற்கப்பட்டுள்ளது. 
    வேட்புமனுத் தாக்கல்:
    மக்களவை தேர்தல் அடுத்த மாதம் 19 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான ஆயத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கட்சிகள் தரப்பில் பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதேபோல் தேர்தல் ஆணையமும் தேர்தல் பணிகள் மேற்கொண்டு வருகிறது.
    இந்நிலையில் மார்ச் 20 ஆம் தேதி வேட்புமனு தாக்கல் தொடங்கியது. நேற்று மாலை 3 மணிவரை வேட்புமனு தாக்கல் செய்யலாம் என தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது. தமிழ்நாட்டில் இருக்கும் 39 தொகுதிகளில் சுமார் 1403 பேர் வேட்புமனு தாக்கல் செய்தனர். மார்ச் 25 ஆம் தேதி பங்குனி உத்திரம் என்பதால் பெரும்பாலான கட்சி வேட்பாளர்கள் அன்றைய தினம் வேட்பமனு தாக்கல் செய்தனர். நேற்று கடைசி நாள் என்பதால் தாக்கல் செய்யாத கட்சி உறுப்பினர்கள் வேட்புமனு தாக்கல் செயதனர்.
    ஆ.ராசா மனு நிறுத்திவைப்பு:
    இந்நிலையில் இன்று வேட்பாளர் மனு மீதான பரிசீலனை நடைபெற்று வருகிறது. தேர்தல் அதிகாரிகள் வேட்புமனு மீது பரிசீலனை செய்து ஆவணங்களை சரிபார்த்து மனு ஏற்கப்படும். அந்த வகையில் நீலகிரி தொகுதியில் திமுக தரப்பில் போட்டியிடும் ஆ. ராசாவின் வேட்புமனு நிறுத்திவைக்கப்பட்டது. அதேசமயம், நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் எல் முருகனின் வேட்பு மனு மற்றும் நாம் தமிழர் கட்சி வேட்பாளர் ஜெயக்குமாரின் வேட்பு மனு ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது. 
    ஏற்பு:
    நீலகிரி தொகுதியில் மொத்தம் 33 வேட்பாளர்கள் மனு தாக்கல் செய்துள்ளனர். அந்த மனுக்கள் மீதான பரிசீலனை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. திமுக வேட்பாளர் ஆ.ராசா சமர்ப்பித்த பிரமாண பத்திரத்தில் சில பிழைகள் உள்ளதாக கருத்துக்கள் எழுந்த நிலையில், அவரது வேட்புமனு நிறுத்திவைக்கப்பட்டது. ஆனால் அதனை சரிபார்த்து வேட்பமனு ஏற்கப்படும் என தகவல்கள் வெளியானது.
    நீலகிரி தொகுதியில் திமுக, அதிமுக வேட்பாளர்கள் மனு நிறுத்தி வைக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. ஆனால் ஆவணங்கள் சரிபார்க்கப்பட்டு திமுக வேட்பாளர் ஆ.ராசாவின் மனு ஏற்கப்பட்டுள்ளது.  அதேபோல், கோவை மாவட்டத்தில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலையின் மனு ஏற்க கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில் அவரது மனு ஏற்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டதிலும் அமமுக கட்சி வேட்பாளர் டிடிவி தினகரன் மனு நிறுத்தி வைக்கப்பட்ட பின்பு வேட்புமனு ஏற்கப்பட்டுள்ளது. அ.ம.மு.க.வினரே தங்களது தினகரனின் பிரமாணப் பத்திரத்தை ஒரு முறை சரிபார்க்க கால அவகாசம் வேண்டும் என்று கேட்ட காரணத்தால் அவரது மனு காலதாமதத்திற்கு பிறகு ஏற்கப்பட்டது.

    மேலும் காண

    Source link

  • "அரசு நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைக்கவில்லை" பிச்சை எடுக்க போவதாக தோல்பாவைக் கூத்துக் கலைஞர் வேதனை!

    "அரசு நிகழ்ச்சியில் வாய்ப்பு கிடைக்கவில்லை" பிச்சை எடுக்க போவதாக தோல்பாவைக் கூத்துக் கலைஞர் வேதனை!


    <p><span style="background-color: #ffffff;"><span style="background-color: #c2e0f4;"><strong>&rdquo;</strong><em>தமிழகத்தில் விரல்விட்டு எண்ணும் அளவிற்கு தான் தோல்பாவைக் கூத்துக் கலைஞர்கள் உள்ளனர். இப்படியான கலைஞர்களை அரசு ஊக்கிவித்து வாய்ப்பு வழங்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கைவிடுத்தனர்</em><strong>&rdquo;.</strong></span></span></p>
    <p><span style="background-color: #bfedd2;"><strong>அ</strong></span>ருகிவரும் கலைகளின் வரிசையில் தோல்பாவைக் கூத்துக் கலையும் ஒன்று. தென் மாவட்டங்களில் மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர், கன்னியாகுமரி மற்றும் தஞ்சாவூர் உள்ளிட்ட சில மாவட்டங்களில் மட்டும் தோல்பாவைக் கூத்துக் கலையை அரிதாக பார்க்க முடிகிறது. அப்படியான கலையை தன் குடும்பத்துடன் தாங்கிப் பிடித்து அதனை வாழ்வாதாரமாக கொண்டு செல்பவர் தான் தேனி மாவட்டத்தைச் சேர்ந்த&nbsp; முத்து லெட்சுமண ராவ் (67).</p>
    <p style="text-align: center;"><br /><img src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/16/fb04ae928fbae0de4c00dd5acb5f1f8f1708090627392184_original.jpeg" /></p>
    <h2><strong>5வது தலைமுறை:</strong></h2>
    <p>இவர் 5-வது தலைமுறையாக இந்த தொழிலை செய்துவருகிறார். தனது நான்கு மகன்களுக்கும் &nbsp;தொழிலை கற்றுக் கொடுத்து அவர்களையும் இதே தொழிலில் ஈடுபட செய்துவருகிறார். தோல்பாவைக் கூத்தின் மூலம் தனது குடும்பத்தில் 20 பேர் வயிறு பிழைக்கின்றனர் என்று நிம்மதி பெருமூச்சுவிட்டார். ஆனால் தனது தொழிலை விரிவுபடுத்த அரசு கலைப் பண்பாட்டுத் துறை மூலம் வாய்ப்புகள் வழங்கப்படாமல் புறக்கணிக்கப்படுகிறது, என்று நம்மிடம் வருத்தம் தெரிவித்தார். மேலும் முத்து லெட்சுமண ராவ் கண்ணீரை துடைத்தபடி நம்மிடம் பேசினார்.</p>
    <p style="text-align: center;"><br /><img src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/16/95415496af223a88c5f2b34fd65745341708090704859184_original.jpeg" /></p>
    <h2><strong>கிராமிய கலைஞர்கள்:</strong></h2>
    <p>சென்னை சங்கமம் என்ற பெயரில் தமிழ்நாடு அரசு கலை நிகழ்ச்சிகளை நடத்தி வருகிறது. ஆனால் எனக்கு கலை பண்பாட்டுத்துறை சார்பாக வாய்ப்புகளே வழங்கப்படாமல் இருக்கிறது. தேனி மாவட்டம் தேவதானபட்டியில் வசித்து வருகிறேன். மாவட்டத்தில் வேறு சில கிராமிய கலைஞர்களுக்கு தொடர்ந்து வாய்ப்பு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் எனக்கு அரசு சார்பாக வாய்ப்புகள் வழங்கப்படாமல் புறக்கணிப்படுகிறேன். இதனை தேர்வு கமிட்டி செய்கிறதா? இல்லை கலைப் பண்பாட்டுத்துறை புறக்கணிக்கிறதா? என்று தெரியவில்லை.</p>
    <p style="text-align: center;"><br /><img src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/16/bcef4bfe985355a1e17d825d4ff14f3c1708090805848184_original.jpeg" /></p>
    <p>இன்று பிப்ரவரி 17 மற்றும் 18-ம் தேதி சென்னை சங்கமம் கிராமிய நிகழ்ச்சி நடக்கிறது. இதிலும் என்னை புறக்கணித்துள்ளனர். என்னை சிறப்பு பார்வையாளராக பார்க்க அழைத்துள்ளனர். நானும் கலைஞன் தான் எனக்கும் வயிறு இருக்கிறது. நானும் பிழைக்க வேண்டாமா? தென்மாவட்ட பகுதியில் எங்கள் குடும்பம் மட்டும் தான் தோல்பாவைக் கூத்தை செய்து வருகிறோம். இப்படி இருக்க எங்களுக்கு வாய்ப்பு வழங்காதது வேதனையின் உச்சம். எனவே அதிகாரிகள் எனக்கும் அரசு நிகழ்ச்சியில் அவ்வப்போது வாய்ப்பு கொடுக்க வேண்டும். இதனை வலியுறுத்தி மதுரை தமுக்கத்தில் நடைபெறும் அரசு கலைநிகழ்ச்சியில் பிச்சை எடுத்து அறவழி போராட்டம் நடத்த உள்ளேன்&rdquo; என்று தெரிவித்தார்.</p>
    <p style="text-align: center;"><br /><img src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/16/89ec41c48e6ea9a6f8d00cf79b7670ce1708090863630184_original.jpeg" /></p>
    <p><br />இது குறித்து மதுரை கலைப் பண்பாட்டுத்துறை உதவி இயக்குநர் கோபால கிருஷ்ணனிடம் பேசினோம்," நான் மதுரைக்கு பணிமாறுதலில் வந்து 3 மாதம் தான் ஆகிறது. முத்து லெட்சுமண ராவ் அவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படதாதது குறித்து ஆய்வு செய்கிறேன். தற்போது நடைபெற உள்ள <span style="background-color: #bfedd2;">நம்ம ஊர் திருவிழாவில்</span> பங்கேற்பாளர்கள் லிஸ்ட் சென்னையில் இருந்து வந்ததுள்ளது. எனவே அடுத்த, அடுத்த நிகழ்ச்சியில் கண்டிப்பாக தோல்பாவைக் கூத்து கலைஞர் முத்து லெட்சுமண ராவிற்கு வாய்ப்பு வழங்க முயற்சி எடுக்கிறேன்" என நம்பிக்கை தெரிவித்தார்.&nbsp;</p>
    <p>தமிழகத்தில் விரல்விட்டு எண்ணும் அளவிற்கு தான் தோல்பாவைக் கூத்துக் கலைஞர்கள் உள்ளனர். இப்படியான கலைஞர்களை அரசு ஊக்கிவித்து வாய்ப்பு வழங்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கைவிடுத்தனர்.</p>
    <p>மேலும் செய்திகள் படிக்க இங்கே கிளிக் செய்யவும் – <a title="Alipur Fire Accident: அதிகரித்த பலி எண்ணிக்கை – டெல்லி தீ விபத்தில் 11 பேர் உடல் கருகி பலியான சோகம்" href="https://tamil.abplive.com/news/india/delhi-alipur-fire-accident-at-least-7-people-dead-investigation-going-167776" target="_blank" rel="noopener">Alipur Fire Accident: அதிகரித்த பலி எண்ணிக்கை – டெல்லி தீ விபத்தில் 11 பேர் உடல் கருகி பலியான சோகம்</a></p>

    Source link