Tag: #tamilnadu
-

மேயர் ப்ரியா VS தவெக பெண் எம்எல்ஏ பல்லவி இடையே மோதல்: அரசு விழாவில் பதற்றம் – ACTPnews.com
2026 சட்டமன்ற தேர்தலில் சென்னை திருவிக நகர் தொகுதியில் தவெக சார்பில் பல்லவி போட்டியிட்டு வெற்றி பெற்றார். இந்த நிலையில் திருவிக நகர் தொகுதிகுட்பட்ட பகுதியில் புதிதாக கட்டப்பட்ட அரசு பள்ளிகள் திறப்பு விழா நடைபெற்றது. இதில் முதல் நிகழ்ச்சியாக புளியந்தோப்பில் உள்ள உருது பள்ளி புதிய கட்டிடத்தை மேயர் ப்ரியா ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். அப்போது தவெக பெண் எம்எல்ஏ பல்லவி தனியாக கத்திரிகோல் வைத்து தனியாக ரிப்பன் வெட்டினார். இதை தொடர்ந்து, பள்ளிக்கு…
-

மகளிர் தினத்தில் நள்ளிரவில் மத்திய அரசு கொடுத்த பரிசு: சமையல் சிலிண்டர் விலை ரூ.60 உயர்வு – ACTPnews.com
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலை உயர்வு மற்றும் அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் மற்றும் சமையல் கேஸ் சிலிண்டர் விலைகள் நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. இதில் சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை மாதத்தின் முதல் தேதியில் எண்ணெய் நிறுவனங்கள் மாற்றம் செய்து வருகின்றன. இந்நிலையில், 14.2 கிலோ எடை கொண்ட கியாஸ் சிலிண்டரின் விலையை மத்திய அரசு நள்ளிரவில் திடீரென ரூ.60 உயர்த்தி இல்லதரசிக்கு அதிர்ச்சியை…
-

“இது உனக்குத் தேவையா” ஈரான் மீது போர் தொடர்ந்தால் நஷ்டம் அமெரிக்காவுக்கு தான்: ரூ.18.87 லட்சம் கோடி செலவாகும் என கணிப்பு – ACTPnews.com
கடந்த சனிக்கிழமை முதல் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் கூட்டுப் படைகள் நடத்தி வரும் தாக்குதலில், ஈரானின் உச்சத்தலைவர் காமேனி உட்பட 700-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாகக் கூறப்படுகிறது. இதற்குப் பதிலடியாக, இஸ்ரேல் மற்றும் மத்திய கிழக்கில் உள்ள அமெரிக்கப் படைத்தளங்கள் மீது ஈரான் ஏவுகணைத் தாக்குதல்களைத் தீவிரப்படுத்தியுள்ளது. போரின் முதல் நாளில் மட்டும் அமெரிக்கா சுமார் 779 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ. 6,900 கோடி) செலவிட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்தப் போர் நீண்ட…
-

என்னம்மா இப்படி பண்றீங்கம்மா! தொகுதி மாறி நன்றி சொன்ன தவெக அமைச்சர் – ACTPnews.com
தமிழகத்தில் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலில் தவெக அதிக இடங்களில் வெற்றி பெற்றது. கம்யூ, காங்கிரஸ் உள்ளிட்ட சில கட்சிகளுடன் ஆதரவுடன் கூட்டணி அமைச்சரவை தவெக அமைத்துள்ளது. முதலமைச்சர் விஜயின் நெருங்கிய நண்பரும், நடிகருமான ஸ்ரீநாத், நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில், தூத்துக்குடி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அவர், விஜயின் அமைச்சரவையில் மீன்வளத் துறை அமைச்சராக உள்ளார். அமைச்சர் ஸ்ரீநாத், தொகுதி மாறிச் சென்று வாக்காளர்களுக்கு நன்றி தெரிவித்த வீடியோ, சமூக வலைத்தளங்களில் வைரலாகி நெட்டிசன்கள் கலாய்த்து…
-

இந்தியாவில் 4 நாட்களில் 1,400 விமானங்கள் ரத்து: மத்திய கிழக்கு நாடுகளுக்கு செல்ல முடியாமல் பயணிகள் தவிப்பு – ACTPnews.com
ஈரான் மீது இஸ்ரேல் மற்றும் அமெரிக்க ராணுவம் கடந்த 28ம் தேதி அதிரடி தாக்குதல் நடத்தியது. இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் மீதும் மத்திய கிழக்கில் அமெரிக்க படைத்தளங்கள் அமைந்துள்ள நாடுகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் வளைகுடா நாடுகள் மற்றும் மத்திய கிழக்கில் பதற்றமான சூழ்நிலை நிலவி வருவதால் இந்த நாடுகள் தங்களது வான்வழியை மூடியுள்ளன. இந்நிலையில், மத்திய கிழக்கில் நிலவி வரும் போர் பதற்றத்தால் வளைகுடா நாடுகளுக்கான விமான சேவை…
-

ராஜினாமா கடிதம் வரவே இல்லை… ட்விஸ்ட் கொடுத்த நயினார்..! – ACTPnews.com
பாஜக மாநில முன்னாள் தலைவர் அண்ணாமலை பாஜகவில் இருந்து விலகி, புதிய கட்சியை தொடங்க உள்ளதாக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக பிரதமர் மோடியிடன் பேச அண்ணாமலை அப்பாயின்மெண்ட் கேட்டுள்ளதாகவும், அவரை சந்தித்த பிறகு அதிகாரப்பூர்வமாக அண்ணாமலை பாஜகவில் இருந்து விலகுகிறாரா இல்லையா என்று தெரிந்துவிடும் என்று கூறப்படுகிறது. இத்தகையச் சூழலில், அண்மையில் திருநெல்வேலியில் செய்தியாளர்களிடம் பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், அண்ணாமலைக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்ததோடு, ”புதிய கட்சி தொடங்குவது குறித்து…
-

“கிழவியை கூட விட்டு வைக்கலயாடா” 90 வயது மூதாட்டிக்கு நடந்த அவலம், கூட்டு பாலியல் வன்கொடுமை செய்த 4 பேர் – ACTPnews.com
மத்தியப் பிரதேச மாநிலம் காண்ட்வா மாவட்டத்தில் உள்ள கிராமம் ஒன்றில் 90 வயது மூதாட்டி தனது வீட்டில் தனியாக வசித்து வந்தார்.கடந்த மார்ச் 6 நள்ளிரவு நேரத்தில் மூதாட்டி வீட்டில் தூங்கிக்கொண்டிருந்தபோது, முகமூடி அணிந்த நான்கு பேர் வீட்டின் கதவை உடைத்து உள்ளே நுழைந்துள்ளனர். தனியாக இருந்த மூதாட்டியை அவர்கள் நால்வரும் கொடூரமாக கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இதன் பின்னர் மூதாட்டியை கட்டிலுடன் கிணற்றில் வீச முயன்றனர். அப்போது, மூதாட்டியின் அலறல் சத்தம் கேட்டு அக்கம்…
-

“பஞ்சாயத்து ஓவர்” ஹார்மூஸ் நீரிணை வழியில் இந்திய சரக்கு கப்பல்களுக்கு அனுமதி: ஈரான் அமைச்சர் தகவல் – ACTPnews.com
ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியதைத் தொடர்ந்து, பாரசீக வளைகுடாவை அரபிக் கடலுடன் இணைக்கும் ஹார்மூஸ் நீரிணையை மூடுவதாகவும், தடையை மீறிச் செல்லும் எண்ணெய்க் கப்பல்கள் தாக்கி அழிக்கப்படும் என்றும் ஈரான் எச்சரிக்கை விடுத்தது. இந்த நிலையில், துபையிலிருந்து குஜராத் துறைமுகம் நோக்கி வந்துகொண்டிருந்த தாய்லாந்து எண்ணெய்க் கப்பல் ஹார்மூஸ் நீரிணையைக் கடக்கும்போது ஏவுகணை வீசி ஈரான் தாக்குதல் நடத்தியது. தொடர்ந்து, அடுத்தடுத்து பிரிட்டன், ஜப்பான் சரக்கு கப்பல்கள் மீதும் தாக்குதல் நடத்தியதால் ஹார்மூஸ் நீரிணை பகுதியில்…
-

Hard Disk-கள் திருட்டு, சிபிஐ விசாரணை தேவை: எடப்பாடி வலியுறுத்தல் – ACTPnews.com
சென்னை அண்ணாசாலையில் தமிழ்நாடு மின்வாரிய தலைமையகம் செயல்பட்டு வருகிறது. இந்த தலைமை அலுவலகத்திலிருந்து டெண்டர், கொள்முதல் மற்றும் விசாரணை தொடர்பான முக்கிய ரகசியத் தகவல்கள் அடங்கிய 20-க்கும் மேற்பட்ட ஹார்டு டிஸ்க்குகள் திருடப்பட்டுள்ளதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, நிலக்கரி கொள்முதல் தொடர்பான தகவல்கள் திருடப்பட்டு இருக்கலாம் என அதிகாரிகள் புகாரில் தெரிவித்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக சிந்தாதிரிப்பேட்டை காவல் நிலையத்ல் மின்வாரிய உதவி செயற்பொறியாளர் மலர்விழி புகார் அளித்துள்ளார். இது குறித்து திருட்டு வழக்குப்…
-

கும்பமேளா புகழ் மோனலிசா முஸ்லிம் இளைஞருடன் திடீர் காதல் திருமணம் – ACTPnews.com
12 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் மகா கும்பமேளா கடந்த ஆண்டு ஜனவரி மாதம் 13-ம் தேதி தொடங்கி பிப்ரவரி 26 வரை உத்தரபிரதேசம் மாநிலம் பிரயாக் ராஜில் நடைபெற்றது. 40 நாட்கள் நடைபெற்ற இந்த கும்பமேளாவில் பாசிமணி விற்ற இளம்பெண் மோனலிசா ஒரே நாளில் வைரலானார். அவரது கண்களும், சிரிப்பும், முகத்தோற்றமும் பலரையும் கவர்ந்தது. ஒரு வீடியோவால் நாடுமுழுவதும் கவனிக்கப்பட்டார் மோனலிசா. ஆனால், அதேசமயம் அவரது அழகு ஆபத்தாகவும் மாறியது. பலரும் மோனலிசாவை தொந்தரவு செய்ய ஆரம்பித்தனர்.…
-

ஈரான் புதிய உச்ச தலைவர் பற்றி தகவல் கொடுத்தால் 10 மில்லியன் டாலர் பரிசு: அமெரிக்கா அறிவிப்பு – ACTPnews.com
பிப்ரவரி 28 அன்று போரின் போது கொல்லப்பட்ட முன்னாள் உச்ச தலைவர் அயதுல்லா அலி காமேனியின் மகன் மோஜ்தபா காமேனி உட்பட பல முக்கிய தலைவர்களை ‘ஈரானிய பயங்கரவாதத் தலைவர்கள்’ என்று குறிப்பிட்டு அமெரிக்க பாதுகாப்புத் துறை வெளியிட்ட எக்ஸ் பதிவிட்டுள்ளது. அந்த பதிவில் , “இந்த நபர்கள் ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் (IRGC) பல்வேறு படைப்பிரிவுகளை கட்டளையிட்டு வழிநடத்துகிறார்கள். இது உலகம் முழுவதும் பயங்கரவாதத்தைத் திட்டமிடுகிறது. இவர்களை பற்றிய தகுதியான தகவல்கள் அளித்தால் 10…
-

இந்தியா கூட்டணி “கதம் கதம்” ஜூன் 8-ம் தேதி கூட்டத்தில் பங்கேற்பு இல்லை: திமுக அறிவிப்பு – ACTPnews.com
இது குறித்து திமுக வெளியிட்டுள்ள அறிக்கையில்: டெல்லி “கான்ஸ்டிடியூஷன் கிளப்பில்” வருகின்ற ஜூன் 8-ஆம் தேதி நடைபெறும் “இந்தியா” கூட்டணிக் கட்சிகளின் கூட்டத்திற்கு வருமாறு திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. திராவிட முன்னேற்றக் கழகத்தைப் பொறுத்தவரை நீட் தேர்வு, தொகுதி மறுசீரமைப்பு, அவசர அவசரமாகத் தேர்தல் நேரத்தில் திணிக்கப்பட்ட SIR, தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கைகள், ஒரே நாடு ஒரே தேர்தல், வக்பு சட்டம், FCRA சட்டத் திருத்தம் உள்ளிட்ட ஜனநாயகத்திற்கும், மதச்சார்பின்மைக்கும், மாநில உரிமைகளுக்கும் எதிரான…
-

உலகநாடுகள் நிம்மதி பெருமூச்சு : ஹோர்மூஸ் நீரிணை அமெரிக்கா, இஸ்ரேல் நாட்டுக் கப்பல்களுக்கு மட்டும் தடை – ஈரான் புதிய அறிவிப்பு – ACTPnews.com
ஈரான் மீது அமெரிக்காவும் இஸ்ரேலும் இணைந்து தாக்குதல் நடத்தி வரும்நிலையில், ஈரானும் உரிய பதிலடி கொடுத்து வருகிறது. மேலும், இதன் ஒரு பகுதியாக, ஹோர்முஸ் நீரிணையையும் ஈரான் மூடியுள்ளது. இந்த வழித்தடத்தில்தான், உலகளாவிய எண்ணெய் விநியோகத்தில் ஐந்தில் ஒரு பங்கு என்றளவில் நடைபெறுகிறது. அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடனான போருக்கு மத்தியில் அந்நாட்டுக் கப்பல்கள் மற்றும் அவர்களின் நட்பு நாடுகளின் கப்பல்களுக்கு மட்டும் ஹோர்முஸ் நீரிணை வழியே அனுமதி இல்லை என ஈரான் அறிவித்துள்ளது. மேலும், நீரிணை வழியே…
-

டெல்லி செங்கோட்டை மியூசியமில் இருந்து நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் தொப்பி திருட்டு – ACTPnews.com
2019-ஆம் ஆண்டு ஜனவரி 23-ஆம் தேதி நேதாஜி ஜெயந்தி அன்று, சந்திரகுமார் போஸ் மற்றும் அவரது குடும்பத்தினர் முன்னிலையில் நேதாஜியின் தொப்பி பிரதமர் மோடியிடம் நேரடியாக வழங்கப்பட்டது. பிரதமர் மோடி அந்தத் தொப்பியைப் பெற்றுக்கொண்டு, செங்கோட்டையில் உள்ள நேதாஜி மியூசியத்தின் நுழைவு வாயிலில் இருந்த ஒரு கண்ணாடி பெட்டியில் வைத்தார். சமீபத்தில் Open Platform for Netaji – OPN அமைப்பின் உறுப்பினர் வழக்கறிஞர் நவீன் பாமல் மியூசியத்திற்கு சென்றபோது, அந்தத் தொப்பி அங்கிருந்து காணாமல் போயிருப்பதைக்…
-

சிறப்பு மருத்துவ படிப்பு இடங்கள் சரண்டர்: உதயநிதிக்கு அமைச்சர் அருண்ராஜ் விளக்கம் – ACTPnews.com
இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் அருண்ராஜ் தனது எக்ஸ் தளப்பக்கத்தில், உயர் சிறப்பு ( Super speciality) மருத்துவ இடங்களை பொறுத்த மட்டில், தமிழ்நாட்டில் மொத்தம் உள்ள 422 இடங்களில், 219 இடங்கள் நம் மாநில மருத்துவர்களுக்கும்( state quota) மீதமுள்ள இடங்கள் All India Quota விற்கும் ஒதுக்கப்பட்டதாகும். கடந்த ஆண்டுகளில் கலந்தாய்வு முடிந்தபின் state quota வில் நம் அரசு மருத்துவர்கள் கொண்டு நிரம்ப முடியாத இடங்கள் அனைத்தும் All India Quota விற்கு …
-

98-வது ஆஸ்கார் விருதுகள் கோலாகலம்: அதிக விருதுகளை தட்டி சென்ற அவதார், ஒன் பேட்டில் ஆப்டர் அனதர், சின்னர்ஸ் – ACTPnews.com
98-வது ஆஸ்கர் விருதுகள் வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில், ஹாலிவுட்டில் உள்ள டால்பி தியேட்டரில் இந்திய நேரப்படி, இன்று (மார்ச் 16) அதிகாலை 4.30 மணிக்கு கோலாகலாமாக தொடங்கியது. இந்த ஆண்டு ஆஸ்கார் நிகழ்ச்சியை இந்தியாவை சேர்ந்த பான் உலக நட்சத்திர நடிகை பிரியங்கா சோப்ரா தொகுத்து வழங்கி வருகிறார். ஹாலிவுட் பிரபலங்களான ராபர்ட் டவுனி ஜூனியர், வில் ஆர்னெட் ஆகியோருடன் இணைந்து பிரியங்கா மேடையைப் பகிர்ந்து கொண்டுள்ளார் ஆஸ்கார் விருது வழங்கும் விழாவில்…
-

விமான சீட் இனி தனியாக கட்டணம் வசூலிக்கக்கூடாது: விமான போக்குவரத்து அமைச்சகம் – ACTPnews.com
சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் (DGCA) மூலம் அமைச்சகம் பின்வரும் வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது; நியாயமான அணுகலை உறுதி செய்வதற்காக, எந்தவொரு விமானத்திலும் குறைந்தபட்சம் 60% இருக்கைகள் இலவசமாக ஒதுக்கப்பட வேண்டும். ஒரே PNR-இல் பயணிக்கும் பயணிகள் ஒன்றாக, முன்னுரிமையாக அருகருகே உள்ள இருக்கைகளில் அமர வைக்கப்பட வேண்டும். விளையாட்டு உபகரணங்கள் மற்றும் இசைக்கருவிகளை எடுத்துச் செல்வதற்கு, பொருந்தக்கூடிய பாதுகாப்பு மற்றும் செயல்பாட்டு விதிமுறைகளுக்கு உட்பட்டு, வெளிப்படையான மற்றும் பயணிகளுக்கு உகந்த முறையில் வசதி செய்து தரப்பட வேண்டும்.…
-

தவெக கூட்டணிக்கு பெயர் வைத்த பிரவீன் சக்கரவர்த்தி: “அதிக பிரசங்கித்தனம்” என மா.கம்யூ விமர்சனம் – ACTPnews.com
தமிழக சட்டமன்றத் தேர்தலில் மயிலம் தொகுதியில் வெற்றி பெற்ற அதிமுகவின் சி.வி.சண்முகம் தனது ராஜ்யசபா எம்.பி. பதவியை ராஜினாமா செய்தார். இதனால் தமிழகத்தில் 2 ராஜ்யசபா சீட் காலியானது. சட்டமன்றத்தில் அதிக எம்எல்ஏக்களை கொண்ட ஆளும் தவெகவை ராஜ்யசபா எம்பி பதவி கிடைக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. இந்நிலையில், கூட்டணி கட்சியான காங்கிரஸ் கேட்டுக்கொண்டதன் பேரில் ராஜ்யசபா எம்பி பதவிக்கான இடத்தை தவெக அக்கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. அதன்பேரில், காங்கிரஸ் சார்பில் பிரவீன் சக்கரவர்த்தி அந்த இடத்திற்கு போட்டியிடுவார் என…
-

நீங்கள் யார் பக்கம் தான் இருக்கீங்க? இஸ்லாமிய நாடுகளுக்கு ஈரான் கேள்வி – ACTPnews.com
அணு ஆயுதங்கள் வைத்திருப்பதாக கூறி ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் ராணுவம் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தி வருகிறது. தலைநகர் டெஹ்ரானை குறிவைத்து நடத்திய இந்த தாக்குதலில் ஈரானின் உச்சப்பட்ச தலைவர் அயத்துல்லா அலி காமேனி உள்பட முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டனர். இதனை தொடர்ந்து அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அதனுடன் நட்புக் கொண்டுள்ள கத்தார், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், பஹ்ரைன் உள்ளிட்ட நாடுகள் மீது ஈரான் ராணுவம் போர் அறிவித்து தாக்குதல் நடத்தி வருகிறது.…
-

முதல்வர் விஜய் தலைமையில் அமைச்சரவை கூட்டம்: டாஸ்மாக்,பட்ஜெட்,மகளிர் உரிமை குறித்து ஆலோசனை – ACTPnews.com
தமிழக சட்டசபை தேர்தல் முடிந்த கடந்த மாதம் (மே) 4-ந்தேதி முடிவுகள் வெளியானது. அதில் த.வெ.க. கட்சி வெற்றி பெற்றது. கடந்த மாதம் 10-ந்தேதி முதல்வராக விஜய் மற்றும் 9 அமைச்சர்கள் பதவியேற்றனர். அதனைத் தொடர்ந்து 23 த.வெ.க. மற்றும் கூட்டணி கட்சியான காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் அமைச்சர்களாக பதவியேற்றனர். அதன் பின்னர் வி.சி.க. மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சிளும் அமைச்சரவையில் இணைந்து கொண்டது. இந்த நிலையில் தற்போது புதிதாக அமைந்திருக்கும் த.வெ.க. மற்றும் கூட்டணி…
-

ஹார்முஸ் நீரிணை கைப்பற்ற அமெரிக்க அழைப்பு நிராகரிப்பு: அதிபர் டிரம்ப் அப்செட் – ACTPnews.com
அமெரிக்காவின் அழைப்பை உலக நாடுகள் நிராகரித்தால் அதிபர் டிரம்ப் கடும் அப்செட்டில் இருக்கிறார். இந்த விவகாரம் குறித்து அவர் கூறுகையில்: ஹார்முஸ் நீரிணை பாதுகாப்பு விவகாரத்தில் எங்களுக்கு உதவ யாரும் தேவையில்லை. நாங்கள் உலகின் வலிமையான தேசம். உலகில் உள்ல நாடுளிலேயே மிகவும் வலிமையான ராணுவத்தை நாங்கள் கொண்டுள்ளோம். கூட்டு பாதுகாப்பு என்ற கருத்து இருந்தபோதிலும் நேட்டோ அமைப்பின் உறுப்பினர்கள் உதவவில்லை. ஹார்முஸ் நீரிணை வழியாக நடைபெறும் கப்பல் போக்குவரத்தின் சுதந்திரத்தை பாதுகாப்பதில் உதவுவதற்கு உலக நாடுகள்…
-

இந்தியாவில் வேலையில்லா திண்டாட்டம் அதிகரிப்பு : 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலை இல்லை, ஆய்வில் அதிர்ச்சி தகவல் – ACTPnews.com
‘இந்தியாவின் வேலைவாய்ப்பு நிலை’ குறித்து கா்நாடகத்தின் பெங்களூரைச் சோ்ந்த அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகம் ஆய்வில் ஈடுபட்டது. இந்த ஆய்வில் நாடு முழுவதும் 20 முதல் 29 வயதுக்குள்பட்ட 6.3 கோடி பட்டதாரிகளில், சுமாா் 1.1 கோடி போ் வேலையில்லாமல் இருப்பது தெரிய வந்தது.15 முதல் 25 வயது வரையிலான இளம் பட்டதாரிகள் இடையே வேலை வாய்ப்பின்மை 40 சதவீதமாகவும், 25 முதல் 29 வயது பிரிவினரிடையே 20 சதவீதமாகவும் உள்ளது. உயா்கல்வி படிப்பவர்களின் எண்ணிக்கை ஆண்டுக்கு ஆண்டு…
-

The Real பாஜக –B team… அதிகாரப்பூர்வமாக அறிவித்த அண்ணாமலை..! – ACTPnews.com
அண்ணாமலை.. முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி.. ரஜினிகாந்தின் ஆதரவாளர்… பாஜக மாநில முன்னாள் தலைவர்.. என பல்வேறு அடையாளங்களை கொண்டவர். திமுக ஆட்சியில், தமிழ்நாட்டில் திமுகவிற்கு மிகப்பெரிய சவாலாக இருந்தவர் அண்ணாமலை. DMK files, செந்தில்பாலாஜி மீதான குற்றச்சாட்டு, திமுகவில் குழப்பத்தை ஏற்படுத்துவது, என டெல்லி கொடுத்த வேலையை கனக்கச்சிதமாக செய்தவர் அண்ணாமலை. திமுக வெறுப்பை தவெக கையில் எடுப்பதற்கு முன்பே அதற்கான அடித்தளத்தை ஆழமாக போட்டவர் அண்ணாமலை என்று சொன்னால் அது மிகையாகாது. ஒருவகையில் திமுக ஆட்சி கவிழ…
-

டிரம்ப் – நெதன்யாகு இடையே மோதல்: அமெரிக்கா இஸ்ரேல் உறவில் விரிசல் – ACTPnews.com
கடந்த பிப்ரவரி 28-ம் தேதி முதல் ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் படைகள் கூட்டாக இணைந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. இதற்கு பதிலடி தரும் வகையில் ஈரானும் அமெரிக்காவின் நட்பு நாடுகள் மற்றும் இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் மேற்காசியாவில் போர் பதற்றம் ஏற்பட்டுள்ளது. ஈரான் தங்கள் நாடு மீதான தாக்குதலுக்க பதிலடி கொடுக்கும் வகையில், சவுதி, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளில் உள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களை குறிவைத்து தாக்குதல் நடத்தி வருகிறது.…
-

அரசு ஊழியர்கள் ஜீன்ஸ், டி-ஷர்ட் அணிய தடை: வழிகாட்டு நெறிமுறை வெளியீடு – ACTPnews.com
இது தொடர்பாக தலைமைச் செயலாளர் சஞ்சய் குப்தா வெளியிட்டுள்ள விரிவான வழிகாட்டுதலின்படி, அனைத்து அரசு ஊழியர்களும் கண்ணியமான, சுத்தமான மற்றும் தொழில்முறை சார்ந்த ஃபார்மல் ஆடைகளை மென்மையான வண்ணங்களில் அணிய வேண்டும். அலுவலகத்தில் இருக்கும் போதோ அல்லது நீதிமன்றத்தில் ஆஜராகும் போதோ கேஷுவல் அல்லது பார்ட்டி உடைகளை அணியக் கூடாது. ஆண் ஊழியர்கள் காலர் வைத்த சட்டை மற்றும் பேன்ட் அணிய வேண்டும். ஷூ, செருப்பு போன்ற பொருத்தமான காலணிகளை அணிய வேண்டும். பெண் ஊழியர்கள் புடவை,…
-

ஜூன் 18-ல் கூடுகிறது தமிழக சட்டசபை: என்ன உரை நிகழ்த்த போகிறார் ஆளுநர் ? – ACTPnews.com
சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த சபாநாயகர் ஜே.சி.டி. பிரபாகர், தமிழ்நாடு சட்டப்பேரவைக் கூட்டம் வரும் ஜூன் 18-ஆம் தேதி (வியாழக்கிழமை) காலை 10 மணிக்குத் தொடங்கும் என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தார். கூட்டத்தொடரின் முதல் நாளில் மரபுப்படி தமிழக ஆளுநர் உரையாற்ற உள்ளார். ஆளுநர் தனது உரையில் அரசின் புதிய திட்டங்கள், கொள்கை முடிவுகள் மற்றும் முக்கிய அறிவிப்புகள் குறித்த வழிகாட்டுதல்களை வெளியிடுவார். ஆளுநர் உரை முடிந்ததும் அன்றைய தினத்திற்கான பேரவை நடவடிக்கைகள் ஒத்திவைக்கப்படும். பேரவை எத்தனை நாட்கள் நீடிக்கும்…
-

ஈரான் மீதான தாக்குதல் 5 நாட்கள் நிறுத்தம் : அமெரிக்க அதிபர் டிரம்ப் அறிவிப்பு – ACTPnews.com
மேற்காசிய நாடான ஈரான் மீது அமெரிக்கா – இஸ்ரேல் இணைந்து கடந்த மாதம், 28ம் தேதி போர் தொடுத்தன. இதில் ஈரானின் உச்ச தலைவர் அயதுல்லா கமேனி கொல்லப்பட்டார். இதையடுத்து, இஸ்ரேல் மற்றும் மேற்காசியாவில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்களை குறிவைத்து, ஈரான் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது. சர்வதேச எண்ணெய் கப்பல்கள் போக்குவரத்திற்கு பயன்படுத்தும் ஹார்முஸ் ஜலசந்தி கடல் பகுதியையும் ஈரான் மூடியதால், உலகெங்கும் எரிபொருளுக்கு தட்டுப்பாடு ஏற்பட துவங்கியுள்ளது. மேலும், பெட்ரோல், டீசல் உள்ளிட்டவற்றின்…
-

ரூ.200 கோடி பங்களா கணக்கில் காட்டவில்லை: பாஜக தலைவர் வேட்புமனு நிராகரிக்க காங்கிரஸ் வலியுறுத்தல் – ACTPnews.com
கேரள சட்டப்பேரவைத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் 9 ஆம் தேதி நடைபெறவுள்ளது. வேட்புமனுத் தாக்கல் நிறைவடைந்த நிலையில், பாஜக சார்பில் நேமம் தொகுதியில் போட்டியிட ராஜீவ் சந்திரசேகர் வேட்புமனுத் தாக்கல் செய்துள்ளார்.அவர் தாக்கல் செய்த பிரமாணப் பத்திரத்தின்படி, அவருக்கு அசையும் மற்றும் அசையா சொத்துகளின் மதிப்பு ரூ. 93 கோடிக்கும் அதிகம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், ராஜீவ் சந்திரசேகருக்கு சுமார் ரூ. 107 கோடி அளவிலான கடன், அவரது மனைவிக்கு சுமார் ரூ. 1.62 கடனும்…
-

அண்ணாமலை புதிய கட்சி அறிவிப்பு: மாணிக்கம் தாகூர், எஸ்.வி.சேகர் அட்டாக் – ACTPnews.com
இதுகுறித்து காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் தளபதிவில், 2002 முதல் 2026 வரை அனைத்து கூட்டணிகளையும், அரசியல் பரிசோதனைகளையும் செய்து பார்த்தும் தமிழ்நாட்டில் வேரூன்ற முடியாத RSS-BJP அமைப்பின் புதிய திட்டம் தயாராகிவிட்டதா? அமித் ஷாவின் அனுமதியுடன், மோடியின் ஆசீர்வாதத்துடன், BJP மற்றும் RSS பெயர்கள் இல்லாத ஒரு புதிய அரசியல் முகமூடி. பெயர் மட்டும் புதிதாக இருக்கலாம். கொள்கை, கட்டுப்பாடு, நோக்கம் அதே பழையதா? தமிழ்நாட்டு மக்களை ஏமாற்றுவதற்கான “Plan B” ஆக…
-

ஈரான் மீது தொடர்ந்து தாக்குதல் நடக்கும் என இஸ்ரேல் அறிவிப்பு:நெதன்யாகு டிரம்ப் மோதல் உச்சகட்டம் – ACTPnews.com
ஈரான் மீது கடந்த 28-ம் தேதி முதல் அமெரிக்க, இஸ்ரேல் தாக்குதல் நடத்தி வருகிறது. ஈரானும் பதிலுக்கு அமெரிக்கா, இஸ்ரேல் மற்றும் அதன் தளங்கள் அமைந்த பகுதிகள் மீது கடுமையாக தாக்குதல் நடத்தியது. போரை முடிவுக்கு கொண்டு வர இந்தியா, சீனா, ரஷ்யா உள்ளிட்ட நாடுகளும். ஐ.நா., உலக சுகாதார அமைப்பு போன்ற சர்வதேச அமைப்புகளும் முயற்சி செய்து வருகின்றன.. இந்த போரின் காரணமாக உலக நாடுகள் கடும் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகின்றன. உலக நாடுகள்…
-

டெல்லி காங்கிரசு தலைமை அலுவலகத்தை காலி செய்ய மத்திய பாஜக அரசு நோட்டீஸ் – ACTPnews.com
1978 முதல் கடந்த 48 ஆண்டுகளாக டெல்லியில் உள்ள அக்பர் சாலையில் உள்ள பங்களா கட்டிடத்தில் காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகம் செயல்பட்டு வருகிறது. 2025ம் ஆண்டு ஜனவரியில் ITO அருகே உள்ள ‘இந்திரா பவன்’ என்ற புதிய கட்டிடத்திற்கு காங்கிரஸ் தலைமையகம் மாற்றப்பட்டது. இருந்த போதிலும் அக்பர் சாலை அலுவலகத்தை காங்கிரசு தொடர்ந்து பயன்படுத்தி வருகிறது. 1977 தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்து கட்சி உடைந்தபோது, இந்திரா காந்திக்கு ஆதரவாக இருந்த ஜி.வெங்கடசாமி தனது இந்த…
-

செல்வபெருந்தகைக்கு விரைவில் கல்தா ?: காங் தலைவர் பதவிக்கு கடும் போட்டி – ACTPnews.com
நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் திமுகவுடன் காங்கிரஸ் கூட்டணி அமைக்க செல்வபெருந்தகையே காரணம். தேர்தல் நேரத்திலேயே செல்வபெருந்தகை மீது டெல்லி காங்கிரஸ் தலைமைக்கு கடும் கோபம் இருந்தது. அதன் வெளிப்படாக தேர்தலுக்கு பிறகு தலைவர் பதவியில் இருந்து விலகுவேன் என செல்வபெருந்தகை கூறி வந்தார். சட்டமன்ற தேர்தலில் திமுக- காங்கிரசு கூட்டணி படுதோல்வியை சந்தித்தது. தவெகவுடன் கூட்டணி வைத்திருந்தால் 20 தொகுதிகள் வரை காங்கிரசு வெற்றி பெற்று இருக்கும், அதனை தடுத்தவர் செல்வபெருந்தகை என அவர் மீது…
-

அமெரிக்க உலகெங்கிலும் அமைதியைச் சீர்குலைக்கின்றன: வடகொரியா கிம் ஜாங் சாடல் – ACTPnews.com
வட கொரியாவில் நடைபெற்ற அதிபர் தேர்தலில் அதிபர் கிம் ஜோங் உன்-னின் தொழிலாளர் கட்சி, ஏறக்குறைய முழுமையான ஆதரவுடன், 99.93 சதவிகித வாக்குகளையும் அனைத்து இடங்களையும் கைப்பற்றி அமோக வெற்றி பெற்றது. அனைவரும் வியக்கும் விதமாக இந்தத் தேர்தலில் 99.99 சதவிகித வாக்குகள் பதிவாகியிருந்தன. அதில், அதிபராகவுள்ள கிம் ஜோங் உன்னின் தொழிலாளர் கட்சி 99.93 சதவிகித வாக்குகளையும் முழு ஆதரவையும் பெற்று மீண்டும் அதிபராகத் தேர்வாகவுள்ளதாக வடகொரிய அரசு ஊடகமான கே.சி.என்.ஏ தெரிவித்துள்ளது. அதிபராக பதவியேற்ற…
-

மீண்டும் லாக்டவுன்? மாநில முதல்வர்களுடன் பிரதமர் மோடி நாளை அவசர ஆலோசனை – ACTPnews.com
ஈரான், அமெரிக்க போரின் காரணமாக உலகம் முழுவதும் கேஸ் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் வரத்தும் வெகுவாக குறைந்துள்ளது. இதனால் உலக நாடுகள் பொருளாதார நெருக்கடியை சந்தித்து வருகின்றன. எரிபொருள் தட்டுப்பாட்டால் உலகின் முதல் நாடாக பிலிப்பைன்ஸ் அரசு அவசர நிலை பிரகடனம் செய்துள்ளது இந்நிலையில், மேற்கு ஆசியாவில் நிலவி வரும் போர் பதற்றங்கள் மற்றும் அதன் தாக்கம் குறித்து ஆலோசிக்க, பிரதமர் நரேந்திர மோடி நாளை மாலை அனைத்து மாநில முதலமைச்சர்களுடன் காணொலி வாயிலாக ஆலோசனை…
-

உதயநிதி வியூக வகுப்பாளர் சுனில் கன்கோலு திடீர் விலகல்: காங் உடன் பேச்சுவார்த்தை, தடை போடும் ஜான் ஆரோக்கியசாமி – ACTPnews.com
தி.மு.க., கட்சிக்கு ஸ்டாலினின் குடும்ப உறுப்பினர், ‘பென்’ நிறுவனம் மூலம் கட்சியின் வியூகங்கள் வகுத்து வந்தார். தேர்தல் உள்பட கட்சி தொடர்பாக அனைத்து பணிகளையும் பென் நிறுவனமே மேற்கொண்டு வந்தது. ஆனால் உதயநிதி பென் நிறுவனத்திற்கு மாற்றாக தனது தனியாக ஒரு வியூக வகுப்பாளரை நியமித்து இருந்தார். கர்நாடகாவைச் சேர்ந்த சுனில் கன்கோலுவை, உதயநிதிக்கு வியூக வகுப்பாளராக கடந்த 4 வருடங்களாக செயல்பட்டு வந்தார். தெலுங்கானா, கர்நாடாக சட்டமன்ற தேர்தல்களில் காங்கிரசுக்கு சுனில் தேர்தல் வியூக பணிகளை…
-

அமெரிக்க எஃப்-18 போர் விமானத்தை சுட்டு வீழ்த்திய வீடியோ வெளியிட்ட ஈரான் – ACTPnews.com
கடந்த 28-ம் தேதி ஈரான் மீது அமெரிக்க, இஸ்ரேல் படைகள் தாக்குதல் நடத்தின. இதற்க பதிலடி கொடுக்கும் வகையில் ஈரான் வளைகுடா நாடுகளில் அமைந்துள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் உள்ளிட்ட கட்டமைப்புகள் மீது ஈரான் தாக்குதல் நடத்தி வருகிறது.இந்த தாக்குதலில் சவுதி அரேபியா, கத்தார் உள்ளிட்ட நாடுகளின் முக்கிய கட்டமைப்புகள் பலத்த சேதமடைந்துள்ளன. அதுமட்டுமின்றி இந்த போரின் காரணமாக கேஸ், பெட்ரோல், டீசல் உள்ளிட்டவை உலகம் முழுவதும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் உலக பொருளாதாரம் முடங்கியுள்ளது. இதன்…
-

“உஷாரா இருங்க யாரும் மிஸ் பண்ணிடாதீங்க” மக்கள் தொகை கணக்கெடுப்பு நாளை முதல் துவக்கம் – ACTPnews.com
தமிழகத்தில் பொதுமக்கள் தங்களது சுய விபரங்களை, ஜூலை 17 முதல் 31ம் தேதி வரை பிரத்யேக இணையதளத்தில் பதிவு செய்யலாம். வீடு தேடி வரும் நேரடி கணக்கெடுப்பு, ஆக., 1 முதல் 30ம் தேதி வரை நடக்கிறது. புதுச்சேரியில், சுய விபர பதிவு, மே 17 முதல் 31ம் தேதி வரையிலும், வீடு தேடி வரும் கணக்கெடுப்பு, ஜூன் 1 முதல் 30ம் தேதி வரையிலும் நடக்கிறது. இந்த கணக்கெடுப்பின் அனைத்து பணிகளையும் அடுத்த ஆண்டு மார்ச்…
-

திமுக தயவில் தான் விஜய் ஆட்சி நடத்துகிறார்: ஸ்டாலின் பேச்சு – ACTPnews.com
சென்னை அண்ணா அறிவாலயத்தில் மாற்றுக்கட்சியினர் திமுகவில் இணையும் விழா நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான மாற்று கட்சியினர் தங்களை திமுக-வில் இணைத்து கொண்டனர்.இந்த நிகழ்ச்சியில் பேசிய திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், இங்கே நம்முடைய கஜா என்கிற கஜேந்திரன் தலைமையிலே வந்து சேர்ந்திருக்கக்கூடிய நீங்களெல்லாம் வந்திருப்பதைப் பார்த்து நான் மகிழ்ச்சியடைகிறேன். பெருமைப்படுகிறேன். ஆகவே, நீங்கள் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. இப்போ ஆட்சி நடப்பதே நம்முடைய தயவில்தான் நடந்து கொண்டிருக்கிறது என்பதையும் மறந்துவிடக்கூடாது. திமுக-வை பொறுத்த வரை எப்போதுமே வெற்றி, தோல்வி…
-

4 லிட்டர் பெட்ரோல் பதுக்கியவருக்கு 21 நாட்கள் சிறை : எந்த நாட்டில் தெரியுமா ? – ACTPnews.com
ஈரான் மீது இஸ்ரேல், அமெரிக்க கடந்த 28-ம் தேதி தாக்குதல் நடத்தியது. இதன் காரணமாக ஹோர்முஸ் நீரிணையில் கப்பல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்க்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் சிலிண்டர் உள்பட பெட்ரோல்,டீசல் பெரும் பற்றாக்குறை நிலவி வருகிறது. இதன் காரணமாக இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாட்டைத் தவிர்க்க அந்நாட்டு அரசு எரிபொருள் பதுக்கலுக்குத் தடை விதித்துள்ளது. எரிபொருள் விநியோகத்துக்காக பிரத்யேக ‘கியூ.ஆர்.’ குறியீடு அடிப்படையிலான முறையை இலங்கை அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. கடந்த…
-

ஆர்வத்துடன் வாக்களிக்கும் மக்கள் : கேரளா 33.30, புதுச்சேரி 37.06, அசாம் 38.98 சதவிகிதம் வாக்குபதிவு – ACTPnews.com
கேரளம், புதுச்சேரி மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களில் நடைபெறும் சட்டமன்றத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இன்று காலை 7 மணிக்கு தொடங்கி உற்சாகமாக நடைபெற்று வருகிறது. மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள ஆயிரக்கணக்கான வாக்குச்சாவடிகளில் பொதுமக்கள் வரிசையாக நின்று தங்கள் ஜனநாயகக் கடமையை நிறைவேற்றி வருகின்றனர். காலை முதலே பெண்கள், முதியோர், இளைஞர்கள் என அனைத்து தரப்பினரும் ஆர்வத்துடன் வாக்களிக்க வருகின்றனர். குறிப்பாக, முதல் முறை வாக்களிக்கும் இளைஞர்கள் அதிக உற்சாகத்துடன் பங்கேற்று இந்த 3 மாநிலங்களிலும் பார்க்க முடிகிறது. …
-

திருப்பரங்குன்றம் தீபம் பழைய நடைமுறை பின்பற்றப்படும்: அமைச்சர் நிர்மல்குமார் உறுதி – ACTPnews.com
மதுரையில் நிருபர்களிடம் பேட்டியளித்த அமைச்சர் நிர்மல்குமார்: திருப்பரங்குன்றம் விவகாரத்தில் ரொம்ப தெளிவாக சொல்லியாச்சு, மக்கள் அமைதியை விரும்புகிறார்கள். திருப்பரங்குன்றம் தீபம் ஏற்றும் விவகாரத்தில் 2 ஆண்டுக்கு முன் பின்பற்றப்பட்ட நடைமுறையே தொடரும் இதில் எந்த மாற்றமும் செய்யப்படாது. இங்கிருக்கும் மக்கள் விருப்புமும் இது தான். மக்களின் விருப்பத்திற்கு ஏற்றால் போலதான் அரசின் கொள்கையும் இருக்கும். இதில் எந்த மாற்றுக் கருத்தும் கிடையாது. இதில் யாரும் எந்த மதவாத சக்தியும் உள்ளே வந்து அரசியல் செய்ய 100 சதவீதம்…
-

போலி சான்றிதழ் சிக்கலில் கும்பமேளா பிரபலம்.. போக்சோ வழக்கில் சிக்கிய கணவர்! – ACTPnews.com
உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த மோனலிசா போஸ்லே, கடந்த ஆண்டு கும்பமேளாவில் வைரலாகித் திரைப்பட வாய்ப்புகளைப் பெற்றார். இவர் முகமது ஃபர்மான் என்ற இளைஞரைக் காதலித்து, பெற்றோரின் எதிர்ப்பையும் மீறி கடந்த மார்ச் 11-ஆம் தேதி கேரளாவில் திருமணம் செய்துகொண்டார். இந்தத் திருமணத்தில் கேரளாவின் முக்கிய அரசியல் தலைவர்கள் பலரும் கலந்துகொண்டனர். அப்போது மோனலிசாவுக்கு 18 வயது பூர்த்தியாகிவிட்டதாகக் கூறப்பட்டதை அடுத்து, காவல்துறை அவர்களை ஒன்றாகச் செல்ல அனுமதித்தது. இந்நிலையில், தேசிய பழங்குடியினர் ஆணையம் நடத்திய அதிரடி விசாரணையில்…
-

தரை வழித்தாக்குதல் நடத்தினால் அமெரிக்க வீரர்கள் சவப்பெட்டிக்கு செல்வார்கள் : ஈரான் எச்சரிக்கை – ACTPnews.com
ஈரான், இஸ்ரேல் மற்றும் அமெரிக்கா இடையிலான போர் ஒரு மாதத்தை எட்டியுள்ளது.இந்த நிலையில், அமெரிக்கா, தரைவழித் தாக்குதலை தொடங்க கூடுதலாக 10 ஆயிரம் ராணுவ வீரர்களை மத்திய கிழக்கு பகுதிகளுக்கு அனுப்பி வருவதாகவும், ஐக்கிய அரபு அமீரகத்தின் உதவியுடன் ஈரான் மீது அமெரிக்கா ஒரு தரைவழித் தாக்குதல் நடத்தவும் திட்டமிட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து, தெஹ்ரானை இலக்காகக் கொண்ட இராணுவ நடவடிக்கையிலும் அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுக்கு ஆதரவளிக்க வேண்டாம் என்றும் வளைகுடா நாடுகளை ஈரான் ஜனாதிபதி மசூத்…
-

“UPI transaction” இனி ரூ.10 ஆயிரம் மேல் பணம் அனுப்ப முடியாது? RBI முக்கிய முடிவு – ACTPnews.com
ரொக்க பணபரிவர்த்தனைக்கு பதிலாக ஆன்லைன் பண பரிவர்த்தனை நாளுக்கு நாளுக்கு அதிகரித்து வருகிறது. பல்வேறு ஆப்கள் மூலம் UPI transaction என்பது தற்போது நடந்து வருகிறது. வங்கிகள் மற்றும் ஏடிஎம் பயன்பாடு என்பது படிபடியாக குறைந்து வருகிறது. என்ன தான் தொழில்நுட்பம் வளர்ந்து வந்தாலும், அதற்கேற்ப முறைகேடுகளும் அதிகரிக்க தொடங்கிவிட்டது. ஆன்லைனில் பணமோசடி என்பதும் தினந்தோறும் அதிகரிக்க தொடங்கி இருக்கிறது. ஆன்லைன் பணமோசடியை தடுக்க பல்வேறு நடவடிக்கைகளை அரசுகள் மேற்கொண்டாலும், அதனை தடுப்பது கடினமாக வருகிறது. இதன்…
-

வேலை தேடும் இளைஞர்கள் கவனத்திற்கு… சென்னையில் ஜூன் 10இல் தொழில் பழகுநர் முகாம்… | சென்னை செய்திகள்
Last Updated:Jun 04, 2026 6:37 PM IST தேர்வு செய்யப்படும் பயிற்சியாளர்களுக்கு தேசிய அளவிலான தொழில் பழகுநர் சான்றிதழுடன் குறைந்தபட்சமாக ரூ.8,000 முதல் அதிகபட்சமாக ரூ.18,000 வரை மாதாந்திர உதவித்தொகையும் வழங்கப்படும். வேலை தேடும் இளைஞர்கள் கவனத்திற்கு… சென்னையில் ஜூன் 10இல் தொழில் பழகுநர் முகாம்… சென்னை மாவட்டத்தில் தொழில்திறன் மேம்பாட்டுக்கான முக்கிய முயற்சியாக தேசிய தொழில் பழகுநர் (Apprenticeship) முகாம் ஜூன் 10 ஆம் தேதி நடைபெற உள்ளது. ஆர்.கே. நகர் அரசினர் தொழிற்பயிற்சி…
-

‘ஹார்முஸ் நீரிணை’ வழியாக செல்லும் கப்பல்களுக்கு கட்டண வசூல்: டாலருக்கு பதில் ரியாலுக்கு அனுமதி – ACTPnews.com
கடந்த மாதம் 28-ம் தேதி முதல் ஈரான் மீது அமெரிக்க, இஸ்ரேல் இடையே கடும் போர் நடந்து வருகிறது. ஹார்முஸ் நீரிணை வழியாகத்தான் உலக நாடுகளுக்கு தேவையான 20 சதவீத கச்சா எண்ணெய் மற்றும் 25 சதவீத இயற்கை எரிவாயு கொண்டு செல்லப்படுகிறது. இந்த முக்கியத்துவம் வாய்ந்த கடல் பகுதியை தனது ராணுவ கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் ஈரான், அங்கு பாதுகாப்பு மற்றும் வழிகாட்டுதல் சேவைகளை வழங்கி வருகிறது. ஈரான் நாடாளுமன்ற பாதுகாப்பு குழு ‘ஹார்முஸ் நீரிணை மேலாண்மை…
Latest News

Stay Connected
Kadıköy Su Kaçağı Tespiti Profesyonel ekipman kullandılar. https://vplesson.com/
Kadıköy Mutfak Su Kaçağı Tespiti Termal kamera görüntüleriyle güven verdiler. https://arboreo.co/
Great content! Keep up the good work!
suwnqfdzwkfrpdzlkrqyyvtllwevwz
Search the Archives
Access over the years of investigative journalism and breaking reports










Ümraniye Zemin Altı Su Kaçağı Tespiti Nokta atışı kaçak bulma yaptılar. https://amano.lk/