Tag: Srilankan Navy

  • Fisherman Arrest: தமிழ்நாடு மீனவர்கள் 5 பேர் இலங்கை கடற்படையினரால் கைது..

    Fisherman Arrest: தமிழ்நாடு மீனவர்கள் 5 பேர் இலங்கை கடற்படையினரால் கைது..


    <p>இலங்கைக்கு பீடி இலை&nbsp; கடத்தியதாக தூத்துக்குடி இனிகோ நகர் , சிலுவை பட்டிமற்றும்&nbsp; லூர்தம்மாள் புரம்பகுதியைச் சேர்ந்த அஸ்வின், அபிஷ்டன், மரிய அந்தோணி, டிஜோ ,காட்வே உள்ளிட்ட ஐந்து மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து, இலங்கை கல்பட்டியில் உள்ள கடற்படை தளத்தில்&nbsp; விசாரணைக்காக வைத்துள்ளனர்.</p>
    <p>தமிழ்நாடு மீனவர்கள் 5 பேர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தற்போது கல்பட்டியில் உள்ள கடற்படை தளத்தில் வைத்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. &nbsp;</p>
    <p>இந்திய கடல் எல்லைக்குள் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் அவ்வப்போது கைது செய்யப்படுவது தொடர்ந்து வருகிறது.&nbsp;எல்லை தாண்டி மீன்பிடிப்பது, கடத்தல் விவகாரம் தொடர்பாக தமிழ்நாடு மீனவர்கள் கைது செய்யப்படுகின்றனர். இந்நிலையில், &nbsp;இலங்கைக்கு பீடி இலை&nbsp; கடத்தியதாக தூத்துக்குடி இனிகோ நகர் , சிலுவை பட்டிமற்றும்&nbsp; லூர்தம்மாள் புரம்பகுதியைச் சேர்ந்த அஸ்வின், அபிஷ்டன், மரிய அந்தோணி, டிஜோ, காட்வே உள்ளிட்ட ஐந்து மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்து இலங்கை கல்பட்டியில் உள்ள கடற்படை தளத்தில்&nbsp; விசாரணைக்காக வைத்துள்ளனர்.</p>
    <p>நெல்லை மாவட்டம் கூந்தங்குழி கடற் பகுதியில் இருந்து பைபர் படகு மூலம் சுமார் 2 டன் பீடி இலைகளை ஏற்றிக்கொண்டு தூத்துக்குடி இனிகோநகர் பகுதியை சேர்ந்த மீனவர்கள் இலங்கை கடற்பகுதியை நோக்கி சென்று கொண்டு இருந்துள்ளனர். அப்போது கன்னியாகுமரி கடல் பகுதியில் தெற்கே ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த இலங்கை கடற்படையினர் பீடி இலையை கடத்திச் சென்ற பைபர் படகை சுற்றி வளைத்து இலங்கை கடற்படை தளத்திற்கு அழைத்துச் சென்றனர்.</p>
    <p>தற்போது இலங்கை கல்பட்டி கடற்படை தள முகாமில் வைத்து இலங்கை கடற்படையினர் பிடி இலை கடத்திய மீனவர்களிடம் நடத்திய விசாரணையில் கடத்தலில் ஈடுபட்டது தூத்துக்குடி இனிகோ நகர் பகுதியை சேர்ந்த அஸ்வின், அபிஷ்டன் ,மரிய அந்தோணி மற்றும் லூர்தம்மாள் புரம் பகுதியைச் சேர்ந்த காட்வே சிலுவைப் பட்டியை சேர்ந்த டிஜோ என்பது தெரியவந்தது.&nbsp; இது தொடர்பாக இலங்கை கடற்படையினர் பீடி இலை கடத்தலில் ஈடுபட்டதாக மீனவர்களிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்டதாக 5 பேர் மீதும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.</p>

    Source link

  • Fisherman Arrest: தொடரும் அட்டூழியம்.. 19 மீனவர்களை சிறைப்பிடித்த இலங்கை கடற்படையினர்..

    Fisherman Arrest: தொடரும் அட்டூழியம்.. 19 மீனவர்களை சிறைப்பிடித்த இலங்கை கடற்படையினர்..


    <p>ராமேஸ்வரம் மீனவர்கள்&nbsp;&nbsp; 19 பேர் மற்றும் இரண்டு விசைப்படகுகளையும் இலங்கை கடற்படையினர் சிறைப்பிடித்துள்ளனர்.</p>
    <p>இந்திய கடல் எல்லைக்குள் மீன்பிடித்துக் கொண்டிருக்கும் தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் அவ்வப்போது கைது செய்யப்படுவது தொடர்ந்து வருகிறது. மேலும், தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி வந்து மீன்பிடிப்பதாக கூறி, அவர்களின் படகுகளை உடைத்து வலைகளை அறுப்பதையும் வாடிக்கையாக இலங்கை கடற்படையினர் கொண்டுள்ளனர். தமிழக மீனவர்களின் விலை உயர்ந்த விசைப் படகுகளையும் இலங்கை கடற்படையினர் பறிமுதல் செய்து வருகின்றனர். இந்த சம்பங்களை தடுத்து நிறுத்துமாறு, தமிழக அரசுக்கும், மத்திய அரசுக்கும் மீனவ சங்கங்கள் தொடர்ந்து கோரிக்கை &nbsp;அளித்த போதிலும், இதுபோன்ற விரும்பத்தகாத சம்பவங்கள் தொடர்ந்து நிகழ்ந்த வண்ணமே உள்ளது.&nbsp;&nbsp;</p>
    <p>&nbsp;ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்திலிருந்து&nbsp; நேற்று காலை 500-க்கும் மேற்பட்ட விசைப்படகுகளில்&nbsp; 2,500 க்கு மேற்பட்ட மீனவர்கள்&nbsp; மீன் பிடிக்க கடலுக்கு சென்று&nbsp; கச்சத்தீவு மற்றும் நெடுந்தீவு இடையே&nbsp; மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது அப்பகுதிக்கு ரோந்து வந்த இலங்கை கடற்படை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கூறி இரண்டு விசைப்படகையும் அதிலிருந்து 19 மீனவர்களையும் கைது செய்து விசாரணைக்காக காங்கேசன் கடற்கரை முகாமிற்கு அழைத்து சென்று உள்ளனர்.&nbsp; இது போன்ற பிரச்சனைகள் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதால் மீனவர்கள் கவலை தெரிவித்துள்ளனர். இந்த பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் எனவும் கோரிக்கை முன்வைக்கின்றனர்.</p>
    <p>இதேபோல் கடந்த வாரம் ராமேஸ்வரத்தை சேர்ந்த 6 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்யப்பட்டனர். கடந்த 2 வாரங்களாக சுமார் 30 மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.</p>
    <p>இதனை தொடர்ந்து, இந்தியா – இலங்கை நாடுகளுக்கு இடையேயான கூட்டு நடவடிக்கைக்&zwnj; குழுவின்&zwnj; மூலம்&zwnj; மீனவர்&zwnj; பிரச்சினையைத்&zwnj; தீர்ப்பதற்கும்&zwnj; இலங்கைக்&zwnj; கடற்படையினரால்&zwnj; கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களையும்&zwnj;, அவர்களது மீன்பிடிப்&zwnj; படகுகளையும்&zwnj; விடுவித்திடவும்&zwnj; விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வலியுறுத்தி, மத்திய வெளியுறவுத்&zwnj; துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு, தமிழ்நாடு முதலமைச்சர்&zwnj; ஸ்டாலின்&zwnj; கடிதம்&zwnj; அனுப்பினார்.</p>
    <p>இது தொடர்பான கடிதத்தில், சமீப காலமாக தமிழ்நாடு மீனவர்கள்&zwnj; தொடர்ந்து இதுபோன்று இலங்கைக்&zwnj; கடற்படையினரால்&zwnj; கைது செய்யப்படுவது கவலையளிப்பதாக உள்ளது என்றும்&zwnj;, இத்தகைய போக்கு பதட்டமான சூழ்நிலையை உருவாக்கும்&zwnj; என்பதால்&zwnj;, இதில்&zwnj; ஒன்றிய அரசு உடனடி கவனம்&zwnj; செலுத்த வேண்டிய அவசியம்&zwnj; ஏற்பட்டுள்ளதாகவும்&zwnj; முதலமைச்சர்&zwnj; தனது கடிதத்தில்&zwnj; குறிப்பிட்டுள்ளார்&zwnj;.</p>

    Source link