Tag: Special Bus

  • Special Buses: சொந்த ஊருக்கு பயணம் மேற்கொள்ளும் மக்களே..! இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்.. முழு விவரம்..

    Special Buses: சொந்த ஊருக்கு பயணம் மேற்கொள்ளும் மக்களே..! இன்று முதல் சிறப்பு பேருந்துகள் இயக்கம்.. முழு விவரம்..


    <p>தமிழ்நாடு அரசின் மாநில பேருந்து போக்குவரத்து சேவை என்பது பொதுமக்களின் தினசரி வாழ்வில் தவிர்க்க முடியாததாக உள்ளது. வழக்கமாக இயக்கப்படும் பேருந்துகளுடன், அவ்வப்போது பண்டிகை காலம், சிறப்பு விடுப்புகள் போன்ற காலங்களில் பொதுமக்களின் தேவைக்கேற்ப கூடுதல் பேருந்துகள் இயக்கப்படும்.&nbsp;</p>
    <p>குறிப்பாக&nbsp;<a href="https://tamil.abplive.com/pongal-celebrations" data-type="interlinkingkeywords">பொங்கல்</a>, தீபாவளி, கோடை விடுமுறை, ரம்ஜான் மற்றும் கிறிஸ்துமஸ் போன்ற முக்கிய விழாக்களின் போது, பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்வதற்கு ஏதுவாக அரசு தரப்பில் கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும். அந்த வகையில் தற்போது வார இறுதி, சிவராத்திரி மற்றும் முகூர்த்த நாட்கள் ஆகியவை ஒன்று சேர்ந்து வருவதை கருத்தில் கொண்டு, இந்த வாரத்தில் மாநிலத்தில் பல்வேறு முக்கிய நகரங்களில் இருந்து கூடுதலாக சிறப்பு பேருந்துகள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.&nbsp;</p>
    <p>இது தொடர்பான தமிழ்நாடு போக்குவரத்து கழகம் தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், &ldquo;08/03/2024 (வெள்ளிக்கிழமை சிவராத்திரி முகூர்த்தம்) 09/03/2024 (சனிக்கிழமை) மற்றும் 10/03/2024 (ஞாயிறு) வார விடுமுறை நாட்களை முன்னிட்டு சென்னையிலிருந்தும் இதர இடங்களுக்கும் மற்றும் பிற இடங்களிலிருந்தும் கூடுதலான பயணிகள் தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>
    <p>இதனை கருத்தில் கொண்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் தினசரி இயக்கப்படும் பேருந்துகளுடன் கூடுதலாக சிறப்பு பேருந்துகளை இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. சென்னை கிளாம்பாக்கத்திலிருந்து திருவண்ணாமலை, திருச்சி, கும்பகோணம், மதுரை, திருநெல்வேலி, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோயம்புத்தூர், சேலம், ஈரோடு, திருப்பூர் ஆகிய இடங்களுக்கு 07/03/2024 (வியாழக்கிழமை) அன்று 270 பேருந்துகளும் 08/03/2024 (வெள்ளிக்கிழமை) அன்று 390 பேருந்துகளும், 09/03/2024 (சனிக்கிழமை) 430 பேருந்துகளும் மற்றும் சென்னை கோயம்பேட்டிலிருந்து நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு 08/03/2024 மற்றும் 09/03/2024 (வெள்ளி மற்றும் சனிக்கிழமை) அன்று 70 பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.</p>
    <p>எனவே, தினசரி இயக்க கூடிய பேருந்துகளுடன் கூடுதலாக 07/03/2024 (வியாழக்கிழமை) அன்று 270 சிறப்பு பேருந்துகளும் 08/03/2024 (வெள்ளிக்கிழமை) அன்று 390 பேருந்துகளும் மற்றும் 09/03/2024 (சனிக்கிழமை) அன்று 430 பேருந்துகளும், கோயம்பேட்டிலிருந்து 70 பேருந்துகளும் மேற்கூறிய இடங்களிலிருந்தும் மற்றும் பெங்களூர், திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களிலிருந்தும் பல்வேறு இடங்களுக்கும் 200 சிறப்பு பேருந்துகளும் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது.&nbsp;மேலும் ஞாயிறு அன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூர் திரும்ப வசதியாக பயணிகளின் தேவைகேற்ப அனைத்து இடங்களிலிருந்தும் சிறப்பு பேருந்துகள் இயக்கிட திட்டமிடப்பட்டுள்ளது.</p>
    <p>இந்நிலையில், வியாழக்கிழமை அன்று 9,096 பயணிகளும் வெள்ளிக்கிழமை 7,268 பயணிகளும் சனிக்கிழமை 3,769 பயணிகளும் மற்றும் ஞாயிறு அன்று 9,011 பயணிகளும் முன்பதிவு செய்துள்ளனர். இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளதால் தொலைதூர பயணம் மேற்கொள்ள இருக்கும் பயணிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு தங்களது பயணத்திற்கு&nbsp;www.tnstc.in&nbsp;மற்றும் Mobile App மூலம் முன்பதிவு செய்து பயணிக்க கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்&rdquo; என குறிப்பிடப்பட்டுள்ளது. &nbsp;</p>
    <p>&nbsp;</p>
    <p>&nbsp;</p>

    Source link

  • Thai amavasai 2024: ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் காட்சியளித்த மேல்மலையானூர் அங்காளம்மன்

    Thai amavasai 2024: ராஜராஜேஸ்வரி அலங்காரத்தில் காட்சியளித்த மேல்மலையானூர் அங்காளம்மன்


    <p style="text-align: justify;"><strong>விழுப்புரம்:</strong> விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த மேல்மலையானூர் அருள்மிகு அங்காள பரமேஸ்வரி அம்மன் ஆலயம் 2000 ஆண்டுகள் பழமையான பிரசித்தி பெற்ற கோவிலாகும். இத்திருத்தலத்தில் மாதந்தோறும் அமாவாசை தினத்தில் நள்ளிரவில் ஊஞ்சல் உற்சவம் நடைபெறுவது வழக்கம். இந்நிலையில் தை மாத அமாவாசையை முன்னிட்டு மூலவர் அம்மனுக்கு பால், தயிர், நெய், பஞ்சாமிர்தம் உள்ளிட்ட பொருட்களை கொண்டு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து உற்சவர் அங்காளம்மன் <strong>ராஜராஜேஸ்வரி</strong> அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகிறார்.</p>
    <p style="text-align: justify;">அமாவாசை தினம் என்பதால் காலை முதல் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். இதனை தொடர்ந்து இன்று நள்ளிரவில் அங்காளம்மனை ஊஞ்சலில் அமரவைத்து தாலாட்டு பாடல்கள் பாடப்படும். தை அமாவாசை முன்னிட்டு பாதுகாப்பு பணியில் விழுப்புரம் மாவட்ட காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.</p>
    <p style="text-align: justify;"><strong>தை அமாவாசை – சிறப்பு பேருந்து&nbsp;</strong></p>
    <p style="text-align: justify;">தை அமாவாசையை முன்னிட்டு இன்று (வெள்ளிக்கிழமை) பக்தர்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தின் விழுப்புரம் கோட்டத்தின் சார்பில் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலுக்கு சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது, அதன்படி கிளாம்பாக்கத்தில் இருந்து மேல்மலையனூருக்கு 210 சிறப்பு பஸ்களும், காஞ்சிபுரத்தில் இருந்து 30 பஸ்களும், வேலூரில் இருந்து 15 பஸ்களும், விழுப்புரத்தில் இருந்து 20 பஸ்களும், புதுச்சேரியில் இருந்து 20 பஸ்களும், திருவண்ணாமலையில் இருந்து 20 பஸ்களும், திருக்கோவிலூரில் இருந்து 10 பஸ்களும், கள்ளக்குறிச்சியில் இருந்து 5 பஸ்களும், ஆரணி, ஆற்காடு, திருப் பத்தூர் ஆகிய இடங்களில் இருந்து 10 பஸ்களும் இயக்கப்பட உள்ளன.</p>
    <p style="text-align: justify;">மேலும் 11-ந் தேதியன்று சுபமுகூர்த்த தினம் என்பதால் வார இறுதி நாட்களான 10, 11-ந் தேதிகளில் பொதுமக்கள், கிளாம்பாக்கத்தில் இருந்து விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், திருவண்ணாமலை, போளூர் ஆகிய இடங்களுக்கு அதிகளவில் பயணம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு ஏதுவாக விழுப்புரம் அரசு போக்குவரத்துக்கழகத்தின் சார்பில் கூடுதலாக 200 சிறப்பு பஸ்களை மேற்கண்ட வழித்தடங்களில் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.</p>
    <p style="text-align: justify;"><strong>முன்பதிவு</strong>&nbsp;</p>
    <p style="text-align: justify;">எனவே பயணிகள் https://www.tnstc.in/home.html இணையதளம் மூலம் முன்பதிவு செய்து இந்த சிறப்பு பஸ்களை பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும் பயணிகளின் கூட்டம் குறையும் வரை தேவைக்கு ஏற்ப பஸ்களை இயக்க ஏற்பாடு செய்யவும், பஸ் இயக்கத்தை மேற்பார்வை செய்திடவும் அதிகாரிகள் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். இந்த தகவலை அரசு போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குனர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.</p>

    Source link

  • Thai amavasai 2024: தை அமாவாசை முன்னிட்டு மேல்மலையனூருக்கு 200 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

    Thai amavasai 2024: தை அமாவாசை முன்னிட்டு மேல்மலையனூருக்கு 200 சிறப்பு பேருந்துகள் இயக்கம்


    <p style="text-align: justify;"><strong>தை அமாவாசை&nbsp;</strong></p>
    <p style="text-align: justify;">தை அமாவாசையை முன்னிட்டு நாளை (வெள்ளிக்கிழமை) பக்தர்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகத்தின் விழுப்புரம் கோட்டத்தின் சார்பில் மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலுக்கு சிறப்பு பஸ்கள் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது, அதன்படி கிளாம்பாக்கத்தில் இருந்து மேல்மலையனூருக்கு 210 சிறப்பு பஸ்களும், காஞ்சிபுரத்தில் இருந்து 30 பஸ்களும், வேலூரில் இருந்து 15 பஸ்களும், விழுப்புரத்தில் இருந்து 20 பஸ்களும், புதுச்சேரியில் இருந்து 20 பஸ்களும், திருவண்ணாமலையில் இருந்து 20 பஸ்களும், திருக்கோவிலூரில் இருந்து 10 பஸ்களும், கள்ளக்குறிச்சியில் இருந்து 5 பஸ்களும், ஆரணி, ஆற்காடு, திருப் பத்தூர் ஆகிய இடங்களில் இருந்து 10 பஸ்களும் இயக்கப்பட உள்ளன.</p>
    <p style="text-align: justify;">மேலும் 11-ந் தேதியன்று சுபமுகூர்த்த தினம் என்பதால் வார இறுதி நாட்களான 10, 11-ந் தேதிகளில் பொதுமக்கள், கிளாம்பாக்கத்தில் இருந்து விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர், சிதம்பரம், விருத்தாசலம், திருவண்ணாமலை, போளூர் ஆகிய இடங்களுக்கு அதிகளவில் பயணம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கு ஏதுவாக விழுப்புரம் அரசு போக்குவரத்துக்கழகத்தின் சார்பில் கூடுதலாக 200 சிறப்பு பஸ்களை மேற்கண்ட வழித்தடங்களில் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.</p>
    <p style="text-align: justify;"><strong>முன்பதிவு</strong>&nbsp;</p>
    <p style="text-align: justify;">எனவே பயணிகள் https://www.tnstc.in/home.html இணையதளம் மூலம் முன்பதிவு செய்து இந்த சிறப்பு பஸ்களை பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும் பயணிகளின் கூட்டம் குறையும் வரை தேவைக்கு ஏற்ப பஸ்களை இயக்க ஏற்பாடு செய்யவும், பஸ் இயக்கத்தை மேற்பார்வை செய்திடவும் அதிகாரிகள் பணியமர்த்தப்பட்டு உள்ளனர். இந்த தகவலை அரசு போக்குவரத்துக்கழக மேலாண் இயக்குனர் ராஜ்மோகன் தெரிவித்துள்ளார்.</p>

    Source link

  • Pongal Special Bus: பொங்கல்  முன்னிட்டு சேலம் கோட்ட போக்குவரத்து கழகம் சார்பில் 400 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

    Pongal Special Bus: பொங்கல் முன்னிட்டு சேலம் கோட்ட போக்குவரத்து கழகம் சார்பில் 400 சிறப்பு பேருந்துகள் இயக்கம்


    <p style="text-align: justify;">தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் விடுமுறை தினங்கள் மற்றும் பண்டிகை நாட்களில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றது. அதன்படி இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சேலம் கோட்டமானது, சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களை உள்ளடக்கியது. இந்த மாவட்டங்களில் மொத்தம் 1,900 பேருந்துகள் தினசரி இயக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் வரும் 15 ஆம் தேதி பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுவதை முன்னிட்டு, சேலம் கோட்டம் சார்பில் இன்று (12 ஆம் தேதி) முதல் 18 ஆம் தேதி வரை 400 சிறப்பு பேருந்துகள், மாற்று பேருந்துகள், தடை நீட்டிப்பு மற்றும் வழிபட பேருந்துகள் மூலம் கூடுதல் நடைகள் இயக்கப்படுகிறது.&nbsp;</p>
    <p style="text-align: justify;"><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/12/73101cb8aa9dcf024c59c594c3e17d1e1705034379015113_original.jpg" alt="" width="720" height="540" /></p>
    <p style="text-align: justify;">இந்த சிறப்பு பேருந்துகள் சேலம் புதிய பேருந்து நிலையம், பெங்களூர், சென்னை கோயம்பேடு, ஓசூர், கோவை, திருப்பூர், திருவண்ணாமலை, சிதம்பரம் உள்ளிட்ட பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்படுகிறது. சேலம், நாமக்கல், தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களில் இருந்து அனைத்து முக்கிய நகரங்களுக்கும் சிறப்பு பேருந்துகள் கூடுதலாகவும் மற்றும் புறநகர் வழித்தட பேருந்துகள் மூலம் கூடுதல் நடைகளும் இயக்கப்படவுள்ளது. இம்மாவட்டங்களில் நகர பகுதியில் இன்று (12 ஆம் தேதி ) முதல் 18 ஆம் தேதி வரை பயணிகள் கூட்டத்திற்கு ஏற்ப இரவு முழுவதும் டவுன் பேருந்துகள் இயக்கப்படுகிறது. இன்று முதல் 18 ஆம் தேதி வரை அனைத்து முக்கிய டவுன் பேருந்து நிலையங்களில் இருந்து போக்குவரத்து கண்காணிக்கவும் மற்றும் சீர்படுத்தவும் அலுவலர்கள் 24 மணி நேரமும் பணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.</p>
    <p style="text-align: justify;"><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/12/5a807c7054336616af449d39f6416a321705034310093113_original.jpg" alt="" width="720" height="540" /></p>
    <p style="text-align: justify;">சென்னையில் இருந்து சேலம், நாமக்கல், ஓசூர், தர்மபுரி, மேட்டூருக்கும், சேலத்தில் இருந்து சென்னை, மதுரை, கர்நாடக மாநிலம் பெங்களூருக்கும், ஓசூரில் இருந்து சென்னை, திருச்சி, மதுரைக்கும், நாமக்கல்லில் இருந்து சென்னைக்கும், திருச்சியில் இருந்து ஓசூருக்கும், திருவண்ணாமலையில் இருந்து பெங்களூருக்கும், ஓசூரில் இருந்து சேலம், புதுச்சேரி, கடலூருக்கும், சேலத்தில் இருந்து சிதம்பரம், காஞ்சிபுரத்துக்கும், ஈரோட்டில் இருந்து பெங்களூருக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது. அரசு விரைவு போக்குவரத்து கழக முன்பதிவு மையம், இணையதளம் மற்றும் ஆப் மூலம் முன்பதிவு செய்யப்பட்டு வருகிறது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ள சிறப்பு பேருந்துகளில் பயணிகள் பயணிக்க மிகுந்த ஆர்வம் காட்டி வருகின்றனர். பொங்கல் சிறப்பு பேருந்துகள் அறிவிக்கப்பட்டு சில மணி நேரங்களில் டிக்கெட்டுகள் முன்பதிவிற்கு பொதுமக்கள் புக்கிங் செய்து வருகின்றனர்.</p>

    Source link

  • Bus Workers Strike Withdraw Passengers Expectation Special Bus Announcemnet

    Bus Workers Strike Withdraw Passengers Expectation Special Bus Announcemnet

    தமிழ்நாட்டில் கோலாகலமாக கொண்டாடப்படும் பண்டிகைகளில் ஒன்று பொங்கல் பண்டிகை. தொடர் விடுமுறை என்பதால் வெளியூர்களில் படித்து வரும் மாணவர்கள், வேலை பார்த்து வரும் இளைஞர்கள் உள்ளிட்டோர் பலரும் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று பொங்கல் பண்டிகையை கொண்டாடுவது வழக்கம்.
    வேலை நிறுத்த போராட்டம்:
    சென்னை, கோவை, மதுரை, திருச்சி, சேலம், திருநெல்வேலி, திருப்பூர் உள்ளிட்ட பல நகரங்களில் இருந்து லட்சக்கணக்கானோர் சொந்த ஊர்களுக்கு படையெடுப்பார்கள். இதற்காக பொதுமக்கள் ரயில்களை காட்டிலும் பேருந்துகளையே அதிகளவில் பயன்படுத்துகின்றனர். இந்த நிலையில், அண்ணா தொழிற்சங்கம் உள்பட 23 தொழிற்சங்கங்கள் நேற்று முதல் கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    இதனால், கடந்த 2 நாட்களாக வேலைக்குச் செல்பவர்கள், சொந்த காரணங்களாக பேருந்துகளில் பயணிப்பவர்கள் உள்பட பலரும் மிகுந்த சிரமத்தை சந்தித்து வருகின்றனர்.  பொங்கல் பண்டிகைக்காக நாளை முதல் சொந்த ஊர்களுக்கு செல்ல மக்கள் தயார் ஆவார்கள். இதற்காக ஏற்கனவே அரசு மற்றும் தனியார் பேருந்துகளில் முன்பதிவு நடைபெற்றுள்ளது. அரசு சார்பில் போதியளவு பேருந்துகள் இயக்கப்படுகிறது என்று கூறினாலும் பல இடங்களில் மக்கள் மணிக்கணக்கில் பேருந்துகளுக்காக காத்திருக்கும் அவலம் நீடித்தது. இந்த நிலையில், நீதிமன்றத்தின் அறிவுரை, பொதுமக்கள் சிரமம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் வரும் 19ம் தேதி வரை தற்காலிக வாபஸ் பெறுவதாக போக்குவரத்து சங்கங்கள் அறிவித்துள்ளது.
    தற்காலிக வாபஸால் மக்கள் நிம்மதி:
    வழக்கமாக, பொங்கல் பண்டிகையின்போது வழக்கமாக இயங்கும் பேருந்துகளை காட்டிலும் ஆயிரக்கணக்கில் பேருந்துகள் கூடுதலாக இயக்கப்படுவது வழக்கம். அவ்வாறு பேருந்துகள் இயக்கப்பட்டாலுமே பல இடங்களில் பயணிகள் பேருந்துகள் கிடைக்காமல் அவதியுறும் சம்பவங்களும் அரங்கேறி வருவது நிகழ்வதுண்டு. இந்த நிலையில், ஓட்டுநர்களும், நடத்துனர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருவது பயணிகளை பீதிக்குள்ளாக்கியுள்ளது.
    போராட்டம் தற்போது வாபஸ் பெறப்படுவதாக அறிவித்தாலும், பொங்கலுக்கு எத்தனை சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது? என்ற தகவல் கூட இதுவரை மாநில அரசால் வெளியிடப்படவில்லை. வழக்கமாக விழா நாட்களில் பன்மடங்கு கட்டணம் வசூலிக்கும் ஆம்னி பேருந்துகள், தற்போது முதலே அதிக கட்டணத்தை வசூலிப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
    பேருந்துகள் இயக்க வீதம்:
    இதனால், போக்குவரத்து தொழிலாளர்களின் போராட்டத்திற்கு விரைவில் முற்றுப்புள்ளி வைத்து வழக்கம்போல பேருந்துகள் இயங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர். தமிழ்நாடு அரசுறு வெளியிட்ட செய்திக்குறிப்பில் மொத்தம் இயக்கப்பட வேண்டிய 16 ஆயிரத்து 28 பேருந்துகளி்ல் 15 ஆயிரத்து 722 பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாகவும், 98.09 சதவீத பேருந்துகள் இயக்கப்பட்டு வருவதாகவும், அரசு விரைவு போக்குவரத்து கழக பேருந்துகள் 100 சதவீதம் இயக்கப்பட்டு வருவதாகவும் அரசு தெரிவித்துள்ளது.
    தற்போது 19ம் தேதி வரை மட்டுமே போராட்டம் வாபஸ் என்று போக்குவரத்து சங்கங்கள் அறிவித்துள்ள நிலையில், போக்குவரத்து தொழிலாளர்களின் கோரிக்கைகளை பரிசீலித்து அதற்கு தமிழக அரசு நிரந்தர தீர்வு காண வேண்டும் என்றும் பயணிகளும், சமூக ஆர்வலர்களும் அறிவுறுத்தியுள்ளனர். போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்த அறிவிப்பை தற்காலிக வாபஸ் பெற்றுள்ளதால், இன்று மாலை அல்லது நாளை சிறப்பு பேருந்துகள் அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    மேலும் படிக்க: TN Bus Strike: போக்குவரத்து பணியாளர்கள் ஸ்ட்ரைக் – எந்தெந்த மாவட்டங்களில் எவ்வளவு பேருந்துகள் இயக்கம்! முழு விபரம்
    மேலும் படிக்க: TN Bus Strike: பொங்கல் பண்டிகை வருது.. ஸ்டிரைக் எல்லாம் தேவையா? – போக்குவரத்து ஊழியர்களுக்கு உயர்நீதிமன்றம் கேள்வி..!

    Source link