Tag: siragadikka aasai next week promo

  • Siragadikka Aasai Promo: முத்து மீனா மீது காட்டும் அக்கறை.. வியந்துபோன ஸ்ருதி ரவி : சிறகடிக்க ஆசை ப்ரோமோ

    Siragadikka Aasai Promo: முத்து மீனா மீது காட்டும் அக்கறை.. வியந்துபோன ஸ்ருதி ரவி : சிறகடிக்க ஆசை ப்ரோமோ


    <p>சிறகடிக்க ஆசை சீரியலின் அடுத்த வாரத்திற்கான ப்ரோமோ குறித்துப் பார்க்கலாம்.&nbsp;</p>
    <p>மீனா உள்ளிட்டவர்கள் மாலைக் கட்டிக் கொண்டு இருப்பதால் வீட்டில் உள்ள அனைவரும் தூங்காமல் இருக்கின்றனர். மனோஜ் அரை தூக்கத்தில் விஜயாவிடம் &rdquo;நைட்டுக்குள்ள எல்லா மாலையும் கட்டி முடிச்சிடுவாங்களா?&rdquo; என கேட்கிறார். அதற்கு மீனா &rdquo;கண்டிப்பா எல்லா மாலையும் கட்டி முடிச்சிடுவோம்&rdquo; என சொல்கிறார். வெளியே குல்ஃபி ஐஸ் விற்கும் சத்தம் கேட்கிறது. உடனே ஸ்ருதி &rdquo;ஹேய் எதோ பெல் சவுண்ட் கேட்குது&rdquo; என்கிறார்.</p>
    <p>ரவியும் ஸ்ருதியும் சென்று குல்ஃபி வாங்கி வருகின்றனர். &rdquo;எல்லோரும் குல்ஃபி சாப்பிடலாமா?&rdquo; என ஸ்ருதி கேட்கிறார். பின் அனைவரும் குல்ஃபி சாப்பிடுகின்றனர். சீதா மீனாவிடம் ஒரு குல்ஃபி கொடுத்து சப்பிட சொல்கிறார். &rdquo;டைம் ஆயிடுச்சி இல்ல சீதா சீக்கிரம் மாலையை கட்டணும்&rdquo; என்கிறார் மீனா. பின் முத்து மீனாவுக்கு குல்ஃபியை ஊட்டி விடுகிறார். இதைப் பார்த்து ஸ்ருதியும் ரவியும் சந்தோஷப்படுகின்றனர்.</p>
    <p>பின் அனைவரும் தூங்கி விடுகின்றனர். மீனா மட்டும் தூங்காமல் மாலை கட்டிக் கொண்டு இருக்கிறார். முத்து பாதி தூக்கத்தில் எழுந்து மீனாவிடம் &rdquo;இன்னும் முடியலயா?&rdquo;என கேட்கிறார். அதற்கு மீனா &rdquo;இல்லிங்க இன்னும் முடியல இன்னும் கொஞ்சம் மாலை தான் கட்டணும்&rdquo; என சொல்கிறார்.</p>
    <p>பின் முத்து மீனாவுக்கு டீ போட்டு எடுத்து வந்து, &rdquo;இந்தா குடிச்சிட்டு வேலையைப் பாரு&rdquo; என சொல்லி கொடுக்கிறார். &rdquo;நல்லா இருக்கா?&rdquo; என முத்து கேட்கிறார். &rdquo;ம்&rdquo; என மீனா சொல்கிறார். முத்து &rdquo;எனக்கே இப்போதான் நியாபகம் வருது நான் சர்க்கரையே அதுல போடல&rdquo; என முத்து சொல்கிறார். அதற்கு மீனா &rdquo;நீங்க காட்டுற அக்கறை இனிப்பா&rdquo; இருக்கு என சொல்கிறார். இத்துடன் ப்ரோமோ நிறைவடைகிறது.&nbsp;</p>
    <p>நேற்றைய எபிசோடில், &rdquo;நீ உள்ள போமா இங்க நெடியா இருக்கும்&rdquo; என விஜயா ஸ்ருதியிடம் சொல்கிறார். &rdquo;எனக்கு மாலை கட்ட கத்துக்கணும்&rdquo; என ஸ்ருதி சொல்கிறார். பின் மீனா ஸ்ருதிக்கு மாலைக் கட்ட கத்துக் கொடுக்கிறார். ஆனால் ஸ்ருதிக்கு மாலைக்கட்ட வரவில்லை. உடனே இப்போ &rdquo;மீனாவுக்கு டப்பிங் பேச வராது இல்ல அந்த மாதிரி தான் இதுவும்&rdquo; என அண்ணாமலை சொல்கிறார். அதற்கு ஸ்ருதி அப்டியெல்லாம் இல்ல அங்கிள் &rdquo;நான் மீனாவை ஒரு நாள் டப்பிங் பேச வச்சேன்&rdquo; என ஸ்ருதி சொல்கிறார். உடனே ரவியும் &ldquo;ஆமாப்பா அண்ணி சூப்பரா பேசி இருந்தாங்க&rdquo; என்கிறார்.&nbsp;</p>
    <p>பார்வதி வீட்டுக்கு வருகிறார். அவரிடம் மீனாவின் மாலை ஆர்டர் குறித்து விஜயா கிண்டலடித்துப் பேசுகிறார். அனைவருக்கும் ரவி சமைப்பதாக சொல்லுகிறார். சமைக்க தேவையான பொருட்களை வாங்கி வர மனோஜை அனுப்புகின்றனர். இத்துடன் நேற்றைய எபிசோட் நிறைவடைந்தது.&nbsp;</p>
    <p>&nbsp;</p>

    Source link

  • vijay tv siragadikka aasai serial february 19th to 24th promo | Siragadikka Aasai: சிட்டி வைத்த ட்விஸ்ட்.. காரை விற்ற முத்து

    vijay tv siragadikka aasai serial february 19th to 24th promo | Siragadikka Aasai: சிட்டி வைத்த ட்விஸ்ட்.. காரை விற்ற முத்து


    சிறகடிக்க ஆசை சீரியலின் அடுத்த வாரத்திற்கான ப்ரோமோ வெளியாகி உள்ளது.
    முத்து கார் ஷெட்டுக்கு சென்று ”என்னடா எல்லாம் சோகமா இருக்கிங்க?” என்று தனது நண்பர்களிடம் கேட்கிறார். அதற்கு செல்வம், ”அந்த சிட்டி வந்துட்டு போனாண்டா” என்கிறார். ”ஏண்டா ஏதாவது வந்து பிரச்சனை பண்ணானா?” என முத்து கேட்கிறார். அதற்கு செல்வம் ”3 நாளுல நாங்க எல்லோரும் வாங்கின காச மொத்தம் கொடுக்கணுமாம் இல்லனா எல்லாக் காரையும் தூக்கிட்டு போய்டுவானாம்” என கூறுகிறார். முத்து சிட்டியின் அலுவலகத்துக்கு சென்று ”சண்டை என்கூட தான் பசங்கள விட்டுடு” என சொல்கிறார். அதற்கு சிட்டி ”என்ன எல்லோர் முன்னாடியும் அடிச்சி அவமானப்படுத்தின இல்ல அதுக்கு பதிலடி கொடுக்க வேண்டாம்” என்கிறார். ”என் கால்ல விழுந்து மன்னிப்பு கேளு உன் ஃப்ரண்டுங்க பக்கமே நான் வர மாட்டேன்” என்கிறார் சிட்டி. இதனையடுத்து சிட்டி கார் ஷெட்டுக்கே சென்று முத்து நண்பர்களின் காரை எடுக்க நிற்கிறார். அப்போது அங்கு வரும் முத்து, ”கார்த்தி இப்டி வா” என கூப்பிட்டு பணம் கொடுக்கிறார். அதை செல்வம் வீடியோ எடுத்துக் கொண்டு இருக்கிறார். ”ஏண்டா 3 4 லட்சம் இருக்கும் போல ஏதுடா இவ்வளவு காசு” என கேட்கிறார் செல்வம். பின் முத்து கெத்தாக நடந்து செல்கிறார். முத்து தனது காரை விற்றே இந்த பணத்தை கொடுத்ததாக தெரிகிறது. இத்துடன் ப்ரோமோ நிறைவடைகிறது.
    தற்போது கதைக்களம் ரவுடி சிட்டியை மையமாக வைத்து நகர்கிறது. அடுத்த வரத்திற்கான ப்ரோமோவில் முத்து தனது காரை வேறு விற்றுள்ளார். இதனால் முத்து விஜயா முன்பு அவமானப்பட்டு நிற்பதை போன்று அடுத்த வார கதை இருக்கும் என எதிர் பார்க்கப்படுகின்றது. 
    சிறடிக்க ஆசை சீரியல் தொடங்கியது முதலே விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. அதேப்போன்று எதார்த்தமான கதைக்களம் தான் இந்த சீரியலுக்கு ப்ளஸ் ஆக பார்க்கப்படுகிறது. பிள்ளைகளுக்குள் வேறுபாடு காட்டும் அம்மா, பண ஆசை பிடித்த மாமியாராக இந்த சீரியலில் வரும் விஜயா தனது சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். 
    ஹீரோவின் அப்பாவாக வரும் சுந்தரராஜனும் தனது எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி வருகிறார். நாயகி, நாயகன் என இந்த சீரியலில் வரும் அனைவருமே நடிப்பில் ஸ்கோர் செய்து வருகின்றனர். ஒரு குடும்பத்தில் நடக்கும் சின்ன விஷயங்கள் எப்படி விஷ்வரூபம் எடுக்கிறது என்பதையும் இந்த சீரியல் கதை வெட்ட வெளிச்சம் போட்டு காட்டுகிறது. 
    மேலும் படிக்க 
    Nawazuddin Siddiqui: ரஜினி படத்தில் வசனம் புரியாம நடிச்சேன்: சம்பளம் வாங்கியதால் குற்றவுணர்ச்சி: நவாசுதீன் சித்திக் கவலை!
     

    மேலும் காண

    Source link