Tag: Siddaramaiah

  • " ரூபாய் 20 கோடி பணம் தரலனா பேருந்து, ரயிலில் குண்டுகள் வெடிக்கும்" மெயிலில் வந்த மிரட்டலால் பரபரப்பு!

    " ரூபாய் 20 கோடி பணம் தரலனா பேருந்து, ரயிலில் குண்டுகள் வெடிக்கும்" மெயிலில் வந்த மிரட்டலால் பரபரப்பு!


    <p>அரசியல் தலைவர்கள், தொழிலதிபர்களுக்கு கொலை மிரட்டல் விடுவது தொடர்கதையாகி வருகிறது. சமீபத்தில், பிரதமர் மோடி, உத்தர பிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத்திற்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.</p>
    <h2><strong>வெடிகுண்டு மிரட்டலால் கர்நாடகாவில் பரபரப்பு:</strong></h2>
    <p>பிரதமர், உ.பி. முதலமைச்சரை கொலை செய்துவிடுவேன் எனக் கூறி பிரபல ஊடகம் ஒன்றுக்கு மாணவர் ஒருவர் மெயில் அனுப்பியிருந்தார். இந்த நிலையில், கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, துணை முதலமைச்சர் டி.கே. சிவகுமார், கர்நாடக உள்துறை அமைச்சர் ஜி. பரமேஸ்வரா உள்ளிட்டவர்களுக்கு இ-மெயில் மூலம் கொலை மிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.</p>
    <p>Shahidkhan10786@protonmail.com என்ற மின்னஞ்சல் முகவரியைப் பயன்படுத்தி அடையாளம் தெரியாத நபர் மிரட்டல் விடுத்துள்ளார். அந்த மெயிலில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டுள்ளது, "படத்திற்கு முன்பு வரும் டிரெய்லரைப் பற்றி உங்கள் எண்ணங்கள் என்ன? நீங்கள் எங்களுக்கு 2.5 மில்லியன் டாலர்களை (20 கோடி ரூபாய்க்கு மேல்) வழங்கவில்லை என்றால், கர்நாடகம் முழுவதும் பேருந்துகள், ரயில்கள், கோயில்கள், ஹோட்டல்கள் மற்றும் பொது இடங்களில் வெடிகுண்டுகள் வெடிக்கும்.</p>
    <p>உங்களுக்கு ஒரு டிரெய்லரைக் காட்ட விரும்புகிறோம். அம்பாரி உத்சவ் பேருந்தை வெடிக்க வைக்க போகிறோம். அம்பாரி உத்சவ் பேருந்து குண்டுவெடிப்புக்குப் பிறகு, சமூக வலைதளங்களில் எங்கள் கோரிக்கைகளை எழுப்புவோம். உங்களுக்கு அனுப்பப்பட்ட மின்னஞ்சலின் ஸ்கிரீன் ஷாட்களை சமூக ஊடகங்களில் பதிவேற்றும். அடுத்த, வெடிகுண்டு எங்கு வெடிக்கும் என்பதி பற்றிய தகவலை ட்வீட் செய்வோம்"</p>
    <h2><strong>பதற்றத்திற்கு காரணமான இ-மெயில்:</strong></h2>
    <p>இது தொடர்பாக பெங்களூரு நகர குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். முன்னதாக, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உத்தரபிரதேச முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் ஆகியோரை கொலை செய்து விடுவேன் என மிரட்டும் வீடியோவை சமூக வலைதளங்களில் வெளியிட்டதற்காக முகமது ரசூல் கதாரே என்ற ஒருவரை கர்நாடக போலீசார் கைது செய்தனர்.&nbsp;</p>
    <p>கர்நாடக மாநிலம் யாத்கிரியில் உள்ள சுர்பூர் காவல் நிலையத்தில் எஃப்ஐஆர் பதிவு செய்யப்பட்ட பிறகு, முகமது ரசூல் கதாரே கைது செய்யப்பட்டார். இதுகுறித்து பாஜக மூத்த தலைவரும் வழக்கறிஞருமான நளின் கோலி கூறுகையில், "பாகிஸ்தான் ஜிந்தாபாத் என்று கூற விரும்புபவர்களும், பிரதமர் மோடிக்கு உயிருக்கு அச்சுறுத்தல் விடுப்பவர்களும், உணவகத்தில் வெடிகுண்டுகளை வைப்பவர்களும், கர்நாடகாவில் திடீரென வரத் தொடங்கியுள்ளனர். கர்நாடக காவல்துறையும் மற்ற ஏஜென்சிகளும் விசாரணை செய்து செய்கின்றன. ஆனால் இவை அனைத்திற்கும் பின்னால் உள்ள மனநிலை என்ன?" என்றார்.</p>
    <p>பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபே என்ற உணவகத்தில் கடந்த வெள்ளிக்கிழமை குண்டு வெடித்தது. இதில் 9 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.</p>
    <p>&nbsp;</p>

    Source link

  • "மேகதாதுவில் அணை கட்ட அனைத்தும் தயார்" கர்நாடக சட்டப்பேரவையில் சித்தராமையா அதிரடி!

    "மேகதாதுவில் அணை கட்ட அனைத்தும் தயார்" கர்நாடக சட்டப்பேரவையில் சித்தராமையா அதிரடி!


    <p>காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கர்நாடக அரசு முயற்சி மேற்கொண்டு வருகிறது. அவ்வாறு அணை கட்டினால் தமிழ்நாட்டுக்கு வரும் தண்ணீர் பாதிக்கப்படும் எனக் கூறி தமிழக அரசு இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இதை பொருட்படுத்தாத கர்நாடக அரசு மேகதாது அணையை கட்டியே தீருவோம் என தொடர்ந்து அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வர, தமிழக அரசும் அதை எதிர்த்து &nbsp;சட்டரிதியான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறது.</p>
    <h2><strong>தொடர் சர்ச்சையை கிளப்பும் மேகதாது அணை:</strong></h2>
    <p>இப்படிப்பட்ட சூழலில்தான், கர்நாடகாவில் கடந்தாண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் மீண்டும் ஆட்சியை பிடித்தது. பாஜகவை தொடர்ந்து கர்நாடகாவில் ஆட்சி அமைத்த காங்கிரஸ் அரசும், மேகதாது விவகாரத்தில் தீவிரமாக உள்ளது. இந்த நிலையில், காவிரியின் குறுக்கே மேகதாதுவில் அணையை கட்ட அனைத்தும் தயார்நிலையில் உள்ளதாக கர்நாடக அரசு பட்ஜெட் தாக்கலின்போது அறிவிப்பு வெளியிட்டிருப்பது மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.</p>
    <p>2024-25 நிதியாண்டுக்கான பட்ஜெட்டில் மேகதாது மட்டும் இன்றி கலசா – பந்தூரி, மேல் கிருஷ்ணா, மேல் பத்ரா மற்றும் எட்டிஹனோல் உள்பட பல்வேறு பாசன, குடிநீர் திட்டங்கள் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.&nbsp;</p>
    <p>சட்டப்பேரவையில் பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, "காவிரி ஆற்றின் குறுக்கே லட்சிய திட்டமான மேகதாது அணை மற்றும் குடிநீர்த் திட்டத்தைச் செயல்படுத்த தனித் திட்டப் பிரிவு மற்றும் இரண்டு துணைப் பிரிவுகள் ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளது.&nbsp;</p>
    <h2><strong>கர்நாடக <a title="பட்ஜெட்" href="https://tamil.abplive.com/topic/budget-2024" data-type="interlinkingkeywords">பட்ஜெட்</a>டில் வெளியான முக்கிய அறிவிப்பு:</strong></h2>
    <p>இந்த திட்டத்திற்கு தேவைப்படும் நிலத்தை கண்டறிய ஆய்வு நடத்தப்படும். மரங்களை எண்ணும் பணி ஏற்கனவே தொடங்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடமிருந்து அனுமதியை பெற்ற பிறகு, பணிகளை முன்கூட்டியே தொடங்க முன்னுரிமையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும்.</p>
    <p>கலசா – பந்தூரி நாலா மாற்றுத் திட்டத்தின் கீழ் 3.9 டிஎம்சி தண்ணீரைப் பயன்படுத்துவதற்கான விரிவான திட்ட அறிக்கைக்கு மத்திய நீர் ஆணையம் அனுமதி வழங்கியுள்ளது. தேசிய வனவிலங்கு வாரியத்தின் வன அனுமதியை எதிர்பார்த்து மாநில அரசு டெண்டர் செயல்முறையைத் தொடங்கியுள்ளது.</p>
    <p>இருப்பினும், மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்ற தேசிய வனவிலங்கு வாரியக் கூட்டத்தில், வன அனுமதி வழங்கப்படாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது" என்றார்.</p>
    <p>இதுதொடர்பான அறிவிப்பு வெளியானதில் இருந்தே தமிழ்நாட்டில் இருந்து கர்நாடக அரசுக்கு கடும் எதிர்ப்புகள் குவிந்த வண்ணம் உள்ளது. கர்நாடகாவின் செயல்பாட்டிற்கு தமிழ்நாடு அரசு உரிய பதிலடி தர வேண்டும் என அரசியல் கட்சிகள் கோரிக்கை வைத்து வருகிறது.&nbsp;</p>
    <p><strong>இதையும் படிக்க: <a title="Tirupati Lion Kills: செல்ஃபி எடுக்க ஆசைப்பட்ட விபரீதம்.. துரத்தி துரத்தி தாக்கிய சிங்கம் : திருப்பதியில் அதிர்ச்சி சம்பவம்" href="https://tamil.abplive.com/news/india/lion-kills-man-who-entered-enclosure-for-taking-selfie-in-tirupati-zoological-park-167781" target="_blank" rel="dofollow noopener">Tirupati Lion Kills: செல்ஃபி எடுக்க ஆசைப்பட்ட விபரீதம்.. துரத்தி துரத்தி தாக்கிய சிங்கம் : திருப்பதியில் அதிர்ச்சி சம்பவம்</a></strong></p>

    Source link

  • Karnataka Government Announces Old Pension Scheme Benefits For 13000 Employees Siddaramaiah NPS

    Karnataka Government Announces Old Pension Scheme Benefits For 13000 Employees Siddaramaiah NPS

    கர்நாடக மாநிலத்தில் 2006ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் தேதிக்குப் பிறகு பணியில் சேர்ந்த அனைவரும் புதிய ஓய்வூதியத் திட்டத்தில் இருந்து பழைய ஓய்வூதியத் திட்டத்திற்கு மாறிக் கொள்ளலாம் என்று அம்மாநில முதல்வர் சித்தராமையா அறிவித்துள்ளார். புதிய அறிவிப்பின்படி கர்நாடகத்தில் 13 ஆயிரம் பேர் பழைய ஓய்வூதியத் திட்டத்தில் சேர தகுதி பெற்றுள்ளனர்.
    கர்நாடகத்தில் காங்கிரஸ் கட்சி ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்படும் என்று சட்டப்பேரவைத் தேர்தலின்போது காங்கிரஸ் கட்சி வாக்குறுதி அளித்திருந்தது. அதை நிறைவேற்ற வேண்டும் என்று அம்மாநில அரசு ஊழியர் சங்கத்தினர், கடந்த சில நாட்களுக்கு முன் முதலமைச்சர் சித்தராமைய்யாவைச் சந்தித்து வலியுறுத்திய நிலையில், கர்நாடக அரசு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
    6ஆவது மாநிலமாக கர்நாடகம்
    கடந்த சில மாதங்களில் ராஜஸ்தான், மேற்கு வங்கம், ஜார்க்கண்ட், சத்தீஸ்கர், பஞ்சாப் ஆகிய மாநிலங்களில் மீண்டும் பழைய ஓய்வூதியத் திட்டம் செயல்படுத்தப்பட்டது. இந்த மாநிலங்களைத் தொடர்ந்து ஆறாவது மாநிலமாக கர்நாடகத்தில் பழைய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த புதிய அறிவிப்பின்படி கர்நாடகத்தில் 13 ஆயிரம் பேர் பழைய ஓய்வூதியத் திட்டத்தில் சேர தகுதி பெற்றுள்ளனர்.

    2006 ಏಪ್ರಿಲ್‌ ಪೂರ್ವ ನೇಮಕಾತಿ ಅಧಿಸೂಚನೆಯಾಗಿ 2006 ರ ನಂತರ ನೇಮಕಾತಿಗೊಂಡ ರಾಜ್ಯ ಸರ್ಕಾರದ ಸುಮಾರು 13,000 ಸರ್ಕಾರಿ ನೌಕರರಿಗೆ ಹಳೆ ಪಿಂಚಣಿ ಯೋಜನೆ ವ್ಯಾಪ್ತಿಗೆ ಒಳಪಡಿಸಿ ಆದೇಶ ಹೊರಡಿಸಲಾಗಿದೆ.ಚುನಾವಣೆಗೂ ಪೂರ್ವದಲ್ಲಿ ಎನ್.ಪಿ.ಎಸ್ ನೌಕರರು ಮುಷ್ಕರು ಮಾಡುವ ವೇಳೆ ಸ್ಥಳಕ್ಕೆ ಭೇಟಿನೀಡಿ ನಾವು ಅಧಿಕಾರಕ್ಕೆ ಬಂದ ನಂತರ ಬೇಡಿಕೆ… pic.twitter.com/IJTzZACw2R
    — Siddaramaiah (@siddaramaiah) January 24, 2024

    இதுகுறித்து அவர் கூறும்போது, தேர்தலுக்கு முன்னதாக அரசு ஊழியர்கள் புதிய ஓய்வூதியத் திட்டத்தை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது ஆட்சிக்கு வந்தால் பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவோம் என்று உறுதி அளித்திருந்தேன். இப்போது இதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளேன். இந்தத் திட்டத்தின்கீழ் 13 ஆயிரம் ஊழியர்களின் குடும்பங்கள் பயன்பெறும் என்று தெரிவித்துள்ளார்.
    ஓய்வூதியத் திட்டங்கள்: என்ன வித்தியாசம்?
    பழைய ஓய்வூதியத் திட்டத்தின்கீழ் அரசு ஊழியர்கள் ஓய்வுபெற்ற பிறகு, மாதாந்திர ஓய்வூதியம் வழங்கப்படும். இந்தத் தொகை கடைசியாக அவர் வாங்கிய ஊதியத்தில் சுமார் பாதியளவுக்கு இருக்கும்.
    புதிய ஓய்வூதியத் திட்டத்தின்கீழ், ஊழியர்களின் ஊதியத்தில் ஒரு குறிப்பிட்ட தொகை, ஓய்வூதியத் தொகையில் பங்களிக்கும். அதன் அடிப்படையில், ஒருமுறை மொத்தத் தொகை அளிக்கப்படும்.
    தமிழ்நாட்டில் என்ன நிலைமை?
    முன்னதாக இந்தியாவில் 2004ம் ஆண்டு ஜனவரி ஒன்றாம் தேதியில் இருந்து புதிய ஓய்வூதியத் திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது. நாட்டின் நிதிநிலையைக் கருத்தில் கொண்டு, இந்த முடிவு எடுக்கப்பட்டது. நாட்டிலேயே முதல்முறையாக தமிழ்நாட்டில் 2003ஆம் ஆண்டு ஏப்ரல் ஒன்றாம் தேதியில் இருந்து புதிய ஓய்வூதியத் திட்டம் அமல்படுத்தப்பட்டது.  
    பழைய ஓய்வூதியத் திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் வலியுறுத்தி, ஜாக்டோ ஜியோ அரசு ஊழியர்கள் – ஆசிரியர்கள் அமைப்பு, பிப்ரவரி 26ஆம் தேதி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட உள்ளது குறிப்பிடத்தக்கது.

    Source link