Tag: Sabarimala Ayyappan temple

  • Sabarimala Ayyappan Temple: சபரிமலையில் ஆரட்டு விழா.. நிறைவுக்கு வரும் 10 நாள் கொண்டாட்டம்..

    Sabarimala Ayyappan Temple: சபரிமலையில் ஆரட்டு விழா.. நிறைவுக்கு வரும் 10 நாள் கொண்டாட்டம்..


    <p>பங்குனி உத்திர விழாவை ஒட்டி இன்று சபரிமலை ஐயப்பன் கோயிலில் ஆரட்டு விழா நடைபெறுகிறது.&nbsp;</p>
    <p>கேரள மாநிலம் பத்தினம்திட்டாவில் அமைந்துள்ளது சபரிமலை. உலகப்புகழ்பெற்ற சபரிமலை கோயிலில் ஐயப்பனை தரிசனம் செய்ய ஆண்டுதோறும் கோடிக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம். சபரிமலை அய்யப்பன் கோயிலில் மண்டல மற்றும் மகரஜோதி பூஜையை தவிர்த்து ஒவ்வொரு மாதமும் குறிப்பிட்ட நாட்களுக்கு நடை திறக்கப்பட்டு பூஜைகள் நடத்தப்படும். இதனை தவிர்த்து விஷு, ஓணம் பண்டிகை உள்ளிட்ட விஷேச நாட்களுக்கும் நடை திறக்கப்படும். ஆனால் கார்த்திகை மாதம் மற்றும் மகரஜோதி பூஜைக்கு ஏராளமான பக்தர்கள் பல்வேறு இடங்களிலிருந்து வருகை தருவார்கள்.</p>
    <p>இதனை தொடர்ந்து பங்குனி உத்திர விழா விமர்சையாக நடைபெறும். பங்குனி உத்திர விழாவை ஒட்டி மார்ச் 13 ஆம் தேதி நடை திறக்கப்பட்டது. 14 ஆம் தேதி முதல் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டனர். தினசரி காலை நிர்மால்ய தரிசனம், கணபதி ஹோமம், நெய் அபிஷேகம், உஷ பூஜை, சகஸ்ர கலச பூஜை, உச்ச பூஜை, தீபாராதனை, புஷ்பாபிஷேகம், அத்தாழ பூஜை உள்பட பல்வேறு பூஜைகள் நடைபெறுகிறது. மேலும் பங்குனி உத்திர திருவிழா 16 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாள் திருவிழா கொண்டாட்டத்தில் சிறப்பம்சமாக உத்சவ பூஜை நடைபெறுகிறது. இன்று பங்குனி உத்திர திருவிழா அதாவது 10 ஆம் நாளான இன்று ஐயப்பனுக்கு சிறப்பு பூஜையாக பம்பையில் ஆரட்டு விழா நடைபெறும். இதனை தொடர்ந்து இன்று மாலை கொடி இறக்கப்படும். பின்&nbsp;வழக்கமான இரவு பூஜை நடத்தப்பட்டு நடை அடைக்கப்படும். பங்குனி உத்திர திருவிழாவிற்கான ஏற்பாடுகள் அனைத்தும் திருவாங்கூர் தேவஸ்தான போர்டு மேற்கொள்கிறது.</p>
    <p>மண்டல பூஜை மற்றும் மகர ஜோதியை தொடர்ந்து அதிக நாட்கள் நடை திறக்கப்படிருப்பதே இந்த காலகட்டம் தான். பங்குனி மாதம் முடிந்து சித்திரை மாத பூஜைக்காக ஏப்ரல் 10 ஆம் தேதி முதல் 18 ஆம் தேதி வரை நடை திறக்கப்பட்டிருக்கும். இதில் முக்கிய விஷேச நாளான சித்திரை விஷு ஏப்ரல் 14 ஆம் கொண்டாடப்படுகிறது குறிப்பிடத்தக்கது.</p>
    <p>&nbsp;இந்த பூஜைகளை நேரில் கண்டு ஐயப்பனை தரிசனம் செய்ய இணையதளம் மூலமாக பக்தர்கள் பதிவு செய்து கொள்ளலாம். இதனை தொடர்ந்து, ஆன்லைனில் முன்பதிவு செய்யாத பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கும் வகையில், நிலக்கல் மற்றும் பம்பையில் உடனடி முன்பதிவு செய்யும் வசதியும் செய்யப்பட்டுள்ளது என தேவசம்போர்டு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள்&nbsp;<a href="https://sabarimalaonline.org/#/login">https://sabarimalaonline.org/#/login</a>&nbsp;எனும் இணையதள முகவரியில் தரிசனத்திற்கான முன்பதிவை மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>

    Source link

  • Sabarimala Temple: | Sabarimala Temple:

    Sabarimala Temple: | Sabarimala Temple:


    Sabarimala Temple: மாசி மாத பூஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை வரும் 12ஆம் தேதி மாலை திறக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 
    சபரிமலை ஐயப்பன் கோயில்:
    கேரளாவில் அமைந்துள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் உலகப்புகழ்பெற்றது ஆகும். சபரிமலைக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் மாலை அணிந்து ஐயப்பனை தரிசனம் செய்ய வருவது வழக்கம்.  கார்த்திகை மாதத்தில் மட்டும முதல் நாள் தொடங்கி மண்டல பூஜை காலம் வரை 41 நாட்கள் ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டிருக்கும்.
    மார்கழி மாதத்திலும் தை மாதத்திலும் மகர விளக்கு பூஜைக்காக கோயில் நடை திறக்கப்பட்டிருக்கும். பங்குனி மாத ஆராட்டு விழாவும், சித்திரை மாத விஷூகனி காணும் விழாவும் கோயிலில் சிறப்பாக நடைபெறும். அந்த வகையில், சபரிமலை ஐயப்பன் கோயிலில் கடந்த நவம்பர் 17ஆம் தேதி  தொடங்கிய மண்டல பூஜை டிசம்பர் மாதம் 27ஆம் தேதியுடன் நிறைவடைந்தது. அதன்பிறகு, இரண்டு நாட்களுக்கு பிறகு மகரவிளக்கு பூஜைக்காக டிசம்பர் 30ஆம் தேதி திறக்கப்பட்டு, கடந்த மாதம் 20ஆம் தேதி நடை சாத்தப்பட்டது. 
    மாசி மாத பூஜை:
    கடந்த சபரிமலை சீசனின்போது முன் எப்போது இல்லாத அளவுக்கு கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த ஆண்டு மண்டல, மகர விளக்கு பூஜைக்கு 50 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர்.  இதனால்,  நடப்பு  2023-24ஆம் ஆண்டு மண்டல, மகர விளக்கு பூஜை காலங்களில் வந்த மொத்த வருவாய் ரூ.357,47,71,909 என்று தேவசம்போர்டு தெரிவித்துள்ளது. 
    இந்த நிலையில், மாசி மாத  ஜைக்காக சபரிமலை ஐயப்பன் கோயில் நடை வரும் 13ஆம் தேதி முதல் பிப்ரவரி 18ஆம் தேதி வரை திறக்கப்பட்டிருக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 13ஆம் தேதி மாலை 5.30 மணிக்கு கோயில் நடை திறக்கப்படும். அன்று எந்த பூஜைகளும் நடைபெறாது.
    மீண்டும்  பிப்ரவரி 14ஆம் தேதி காலை கோயில் நடை திறக்கப்பட்டு, பூஜைகள் நடத்தப்படும். பிப்ரவரி 14ஆம் தேதி காலை ஐந்து மணிக்கே பிறகே பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். வழக்கமான பூஜைகளுக்கு பிறகு வரும் 18ஆம் தேதி இரவு ஹிரிவராசனம் பாடல் இசைக்கப்பட்டு கோயில் நடை சாத்தப்பட உள்ளது.
    யாரெல்லாம் அனுமதி?
    இந்த பூஜைகளை நேரில் கண்டு ஐயப்பனை தரிசனம் செய்ய இணையதளம் மூலமாக பக்தர்கள் பதிவு செய்து கொள்ளலாம். இதனை தொடர்ந்து, ஆன்லைனில் முன்பதிவு செய்யாத பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கும் வகையில், நிலக்கல் மற்றும் பம்பையில் உடனடி முன்பதிவு செய்யும் வசதியும் செய்யப்பட்டுள்ளது என தேவசம்போர்டு சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. பக்தர்கள் https://sabarimalaonline.org/#/login எனும் இணையதள முகவரியில் தரிசனத்திற்கான முன்பதிவை மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    மேலும் படிக்க
    GSLV-F14: பிப்.17ம் தேதி விண்ணில் பாய்கிறது GSLV-F14 விண்கலம் – இஸ்ரோவின் புதிய இலக்கு என்ன?

    மேலும் காண

    Source link

  • Sabarimala Temple Has Received Income Of Rs 357 Crore During The Mandal And Magara Vilaku Pooja This Year

    Sabarimala Temple Has Received Income Of Rs 357 Crore During The Mandal And Magara Vilaku Pooja This Year

    Sabarimala Temple: சபரிமலை ஐயப்பன் கோயிலில் நடப்பாண்டு மண்டல, மகர விளக்கு பூஜை காலங்களில் ரூ.357.47 கோடி வருமானம் கிடைத்துள்ளதாக தேவசம்போர்டு தெரிவித்துள்ளது. 
    சபரிமலை ஐயப்பன் கோயில்:
    கேரளாவில் அமைந்துள்ள சபரிமலை ஐயப்பன் கோயில் உலகப்புகழ்பெற்றது ஆகும். சபரிமலைக்கு ஆண்டுதோறும் லட்சக்கணக்கான பக்தர்கள் மாலை அணிந்து ஐயப்பனை தரிசனம் செய்ய வருவது வழக்கம்.  கார்த்திகை மாதத்தில் மட்டும முதல் நாள் தொடங்கி மண்டல பூஜை காலம் வரை 41 நாட்கள் ஐயப்பன் கோயில் நடை திறக்கப்பட்டிருக்கும்.
    மார்கழி மாதத்திலும் தை மாதத்திலும் மகர விளக்கு பூஜைக்காக கோயில் நடை திறக்கப்பட்டிருக்கும். பங்குனி மாத ஆராட்டு விழாவும், சித்திரை மாத விஷூகனி காணும் விழாவும் கோயிலில் சிறப்பாக நடைபெறும்.  அந்த வகையில், நவம்பர் 17ஆம் தேதியில் இருந்து டிசம்பர் 27ஆம் தேதி வரை மண்டல பூஜைக்காக நடை திறக்கப்பட்டது.
    அதன் பிறகு, டிசம்பர் 30ஆம் தேதி முதல் ஜனவரி 15ஆம் தேதி வரை மகர விளக்கு பூஜைக்காக  திறக்கப்பட்டது. இதனை அடுத்து, நாளை கோயில் நடை அடைக்கப்படுகிறது. 
    5 லட்ச பக்தர்கள் தரிசனம்:
    மண்டல மற்றும் மகர விளக்கு சீசன் நிறைவாக இன்று நெய்யபிஷேகம் நடைபெற்றது.  நெய்யபிஷேகத்திற்கு பிறகு இன்று இரவு அத்தாள பூஜை நடைபெற உள்ளது. இந்த பூஜைக்கு பின் மாளிகப்புரம் மணிமண்டபத்தில் இருந்து ஐயப்ப ஊர்வலம் நடைபெறுகிறது. ஐயப்பனின் இந்த வீதி உலா சரம்குத்தி வரை சென்று பின்பு மீண்டும் சன்னிதானம் வருகிறது.
    ஐயப்பன் கோயிலில் நாளை இரவு 10 மணி வரை மட்டுமே பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட உள்ளனர். அதன்பின்பு, அரிவராசனம் பாடி நடை அடைக்கப்பட உள்ளது. நடப்பாண்டு சபரிமலை ஐயப்பன் கோயிலில் வழக்கத்தை விட பக்தர்கள் கூட்டம் அதிகளவு காணப்பட்டது.
    குறிப்பாக, லட்சக்கணக்கான பக்தர்கள் அடுத்தடுத்த நாட்களில் குவிந்ததனர். இதையடுத்து, பக்தர்களின் வசதிக்காக கூடுதல் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டது. நடப்பு  2023-24ஆம் ஆண்டு மண்டல, மகர விளக்கு பூஜை காலங்களில் வந்த மொத்த வருவாய் ரூ.357,47,71,909 என்று தேவசம்போர்டு தெரிவித்துள்ளது.
    எத்தனை கோடி ரூபாய் வருவாய்?
     கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பக்தர்களின் வருகையும் அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு சீசனில் 44 லட்ச பக்தர்கள் சாமி தரிசனம் செய்த நிலையில், இந்த ஆண்டு கூடுதலாக 5 லட்ச பக்தர்கள் சாமி தரிசனம் செய்துள்ளனர். 
    பக்தர்கள் காணிக்கையாக அளித்த பொருட்கள், நாணயங்கள் ஆகியவை கணக்கிடவில்லை என்றும் கணக்கிட்டால் மேலும் ரூ.10 கோடி வருமானம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தேவசம்போர்டு தெரிவித்துள்ளது.
    மேலும், அரவணை மூலம் ரூ.146.99 கோடியும், அப்பம்  மூலம் ரூ.17.64 கோடியும், பக்தர்களின் காணிக்கையும் சேர்த்து ரூ.357.47 கோடி வருமானம் கிடைத்துள்ளது. கடந்த ஆண்டு மகர, மண்டல பூஜை காலங்களில் ரூ.347.12 கோடி கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது. 

    Source link

  • Sabarimala: ”சாமியே சரணம் ஐயப்பா” – சபரிமலையில் இன்று மகரஜோதி தரிசனம்.. குவிந்த பக்தர்கள்..!

    Sabarimala: ”சாமியே சரணம் ஐயப்பா” – சபரிமலையில் இன்று மகரஜோதி தரிசனம்.. குவிந்த பக்தர்கள்..!


    <p>சபரிமலையில் ஐயப்பன் கோயிலில் மண்டல மற்றும் மகர விளக்கு பூஜையின் சிகர நிகழ்ச்சியான மகர ஜோதி தரிசனம் இன்று நடைபெறுகிறது.&nbsp;</p>
    <h2><strong>சபரிமலை சீசன்</strong></h2>
    <p>கேரளா மாநிலம் பத்தினம் திட்டாவில் சபரிமலை ஐயப்பன் கோயில் அமைந்துள்ளது. உலக அளவில் புகழ் பெற்ற இந்த கோயிலுக்கு ஆண்டுதோறும் பல்வேறு இடங்களில் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவது வழக்கம். ஒவ்வொரு தமிழ்மாத பிறப்பன்றும் நடை திறக்கப்பட்டு சில நாட்கள் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுபவர். அதேசமயம் கார்த்திகை, மார்கழி மாதம் சபரிமலை சீசன் என்பதால் அங்கு மண்டல பூஜை மற்று மகரவிளக்கு பூஜைக்காக நடை திறக்கப்படுவது வழக்கம்.&nbsp;</p>
    <p>இந்த 2 மாதங்களில் மொத்தம் 41 நாட்கள் நடை திறக்கப்பட்டு இருக்கும். மண்டல பூஜைக்காக கடந்த நவம்பர் 16 ஆம் தேதி நடை திறக்கப்பட்டது. கடந்த ஆண்டுகளில் கொரோனா தொற்று காரணமாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதால் குறைவான அளவே பக்தர்கள் வருகை தந்தனர். ஆனால் நடப்பாண்டு எங்கு பார்த்தாலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இதனால் பக்தர்கள் வசதிக்காக பல்வேறு ஏற்பாடுகளை திருவாங்கூர் தேவஸ்தானமும், கேரள அரசும் செய்து வருகிறது.</p>
    <h2><strong>மகர ஜோதி தரிசனம்</strong></h2>
    <p>மண்டல பூஜை முடிந்து டிசம்பர் 30 ஆம் தேதி சபரிமலை நடை மீண்டும் திறக்கப்பட்டு பக்தர்கள் தரிசனத்துக்காக அனுமதிக்கப்பட்டு வந்தனர். கிட்டதட்ட 18 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்யும் அளவுக்கு எங்கு திரும்பினாலும் பக்தர்கள் கூட்டமாகவே காணப்படுகிறது. இந்த காலக்கட்டத்தின் சிகர நிகழ்ச்சியான மகர ஜோதி தரிசனம் இன்று நடைபெறுகிறது. இதனை முன்னிட்டு கடந்த 2 நாட்களாக தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு தலைமையில், மேல் சாந்தி மகேஷ் நம்பூதிரி முன்னிலையில் சுத்தகிரியை பூஜை நடைபெற்றது. முதல் நாளில் பிரசாத சுத்தி பூஜை, வாஸ்து ஹோமம், புண்ணியாகம், வாஸ்து பலி, ரக்சா கலச பூஜை ஆகியவையும், 2ஆம் நாளான நேற்று சது சுத்தி, தார மற்றும் பஞ்சகம் பூஜை நடைபெற்றது.</p>
    <p>தொடர்ந்து இன்று அதிகாலை 2.46 மணிக்கு நடை திறக்கப்பட்டு மகர சங்கரம சிறப்பு பூஜையும், சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதேசமயம் மகர விளக்கு பூஜையின் போது அய்யப்பனுக்கு அணிவிக்கப்படும் தங்க திருவாபரணங்கள் 3 சந்தன பெட்டிகளில் பந்தளம் அரண்மனையில் பாதுகாப்பாக வைக்கப்பட்டு இருக்கும். அவை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் &nbsp;கொண்டு வரப்பட்டு இன்று மாலை 6.30 மணிக்கு சபரிமலைக்கு கொண்டு செல்லப்படும்.</p>
    <p>அங்கு சாமிக்கு தங்க ஆபரணங்கள் அணிவிக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டு தீபாராதனை காட்டப்படும். அந்த சமயத்தில் பொன்னம்பல மேட்டில் ஐயப்பன் பக்தர்களுக்கு ஜோதி வடிவில் காட்சி தருவார். இதனை காணும்போது சபரிமலையே சரண கோஷத்தில் மூழ்கும். மகர ஜோதி தரிசன நாளில் பக்தர்கள் கூட்டத்தை குறைக்கும் பொருட்டு சில நாட்களுக்கு முன்பு ஸ்பாட் புக்கிங் நிறுத்தப்பட்டது. அதேசமயம் முன்பதிவு ஜனவரி 14 மற்றும் 15 ஆம் தேதிகளில் வெகுவாக குறைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p>
    <p>&nbsp;</p>
    <p>&nbsp;</p>

    Source link