Tag: rjd

  • பீகார் சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி! ஆட்சியை தக்கவைத்தார் நிதிஷ்குமார்!

    பீகார் சபாநாயகருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி! ஆட்சியை தக்கவைத்தார் நிதிஷ்குமார்!


    பீகாரில் இன்று அந்த மாநில சட்டசபையில் அந்த மாநில சபாநாயகரான, ராஷ்ட்ரியா ஜனதா தள கட்சியைச் சேர்ந்த அவத் பிஹாரி சவுத்ரிக்கு எதிராக தற்போதைய ஆளுங்கட்சியான ஐக்கிய ஜனதா தளம் – பா.ஜ.க. கூட்டணி நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தனர். மேலும், இது நிதிஷ்குமார் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பாகவும் இருந்தது. 
    சபாநாயகருக்கு எதிரான தீர்மானம் வெற்றி:
    இந்த நிலையில், இன்று அந்த மாநில ஆளுங்கட்சி சபாநாயகருக்கு எதிராக கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றது. இதனால், நிதிஷ்குமார் அரசு ஆட்சியை தக்க வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சபாநாயகருக்கு எதிராக 125 வாக்குகளும், அவருக்கு ஆதரவாக 112 வாக்குகளும் பதிவாகியது. முந்தைய ஐக்கிய ஜனதா தளம் – ராஷ்ட்ரிய ஜனதா தள ஆட்சியில் சபாநாயகராக பதவிவகித்து வந்த அவத் பிஹாரி, பா.ஜ.க. – ஜனதா தளம் கூட்டணி அமைத்த பிறகு தனது சபாநாயகர் பதவியை ராஜினாமா செய்ய தயக்கம் காட்டினார். 
    இதையடுத்து, சபாநாயகருக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. அந்த தீர்மானம் இன்று ஆளுங்கட்சியினரால் வெற்றி பெற வைக்கப்பட்டுள்ளது. இன்னும் சற்று நேரத்தில்  நிதிஷ்குமார் அரசு மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மக்களவைத் தேர்தல் தொடங்க இன்னும் ஓரிரு மாதங்களே உள்ள நிலையில், பா.ஜ.க.வை மிக கடுமையாக எதிர்த்து வந்த பீகார் முதலமைச்சர் நிதிஷ்குமார் திடீரென பிரதமர் மோடிக்கு ஆதரவாக மாறினர். அந்த மாநிலத்தில் ராஷ்ட்ரிய ஜனதா தளத்துடன் இணைந்து கூட்டணி ஆட்சியை நடத்தி வந்தவர், அந்த கூட்டணியில் இருந்து கடந்த ஜனவரி 28ம் தேதி பிரிந்து, அதே தேதியில் பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து பீகாரின் 9வது முதலமைச்சராக பொறுப்பு ஏற்றார்.
    தேஜஸ்வி யாதவ் கண்டனம்:
    இதனால், நிதிஷ்குமாரை ராஷ்ட்ரிய ஜனதா தளம் மிக கடுமையாக விமர்சித்தது. இன்று ராஷ்ட்ரிய ஜனதா தளத்தைச் சேர்ந்த அவத் பிஹாரி சபாநாயகர் பதவியில் இருந்து ஐக்கிய ஜனதா தளம் தனது புதிய கூட்டணியுடன் அவரை நீக்கியுள்ளனர். இதற்கு தேஜஸ்வி யாதவ் கண்டனம் தெரிவித்துள்ளார். நிதிஷ்குமார் ஏன் ராஜினாமா செய்தார்? என்பதை மக்களுக்கு கூற வேண்டும் என்றும் தேஜஸ்வி யாதவ் வலியுறுத்தியுள்ளார்.
    மேலும் படிக்க: கோவை குண்டுவெடிப்புக்கும் கொழும்பு குண்டுவெடிப்புக்கும் தொடர்பு என்ன? தொடரும் ரெய்டு.. என்ஐஏ பகீர்!
    மேலும் படிக்க: காலையிலே மகிழ்ச்சி! இந்திய கடற்படை முன்னாள் வீரர்கள் 8 பேர் விடுதலை – கத்தார் நீதிமன்றம்

    மேலும் காண

    Source link

  • Bihar Trust Vote Today Minor Hurdle For Nitish Kumar-BJP Combine

    Bihar Trust Vote Today Minor Hurdle For Nitish Kumar-BJP Combine


    வட இந்தியாவின் முக்கியமான மாநிலங்களில் ஒன்று பீகார் ஆகும். பீகாரில் ஐக்கிய ஜனதா தள கட்சி தலைவர் நிதிஷ்குமார், லாலு பிரசாத் யாதவின் ராஷ்ட்ரிய ஜனதா தளத்துடன் இணைந்து கூட்டணி அமைத்து ஆட்சி நடத்தி வந்தார்.
    பீகாரில் இன்று நம்பிக்கை வாக்கெடுப்பு:
    இந்த நிலையில், கடந்த 28ம் தேதி ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியுடன் கூட்டணியை முறித்துக் கொண்டு, பா.ஜ.க.வுடன் கூட்டணி அமைத்து 9வது முறையாக முதலமைச்சர் பதவியேற்றார். மக்களவைத் தேர்தல் இன்னும் ஓரிரு மாதங்களில் நடைபெற உள்ள நிலையில், நிதிஷ்குமாரின் நடவடிக்கை பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
    இந்த நிலையில், பீகாரில் இன்று நிதிஷ்குமார் அரசு மீது நம்பிக்கை வாக்கெடுப்பு நடைபெற உள்ளது. நிதிஷ்குமார் அரசு தங்களுக்கு 128 எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு இருப்பதாக தெரிவித்துள்ளனர். பீகார் மாநிலத்தில் மொத்தம் 243 உறுப்பினர்கள் உள்ளனர். ஆட்சியை பிடிப்பதற்கு அங்கு 128 எம்.எல்.ஏ.க்களின் ஆதரவு வேண்டும்.
    எம்.எல்.ஏ.க்களை தக்க வைக்கும் அரசியல் கட்சிகள்:
    பா.ஜ.க.வின் 78 உறுப்பினர்களும், நிதிஷ்குமாரின் ஜனதா தளம் 45 உறுப்பினர்களும், ஜிதன்ராம் மாஞ்சிஸ் இந்துஸ்தான் அவாம் மோர்ச்சா 4 எம்.எல்.ஏ.க்களும், ஒரு சுயேட்சை எம்.எல்.ஏ.வும் தங்களுக்கு ஆதரவாக இருப்பதாக தெரிவித்துள்ளனர். எதிர்க்கட்சியான ராஷ்ட்ரிய ஜனதா தளம் – காங்கிரஸ் கூட்டணி 114 எம்.எல்.ஏ.க்கள் தங்கள் வசம் இருப்பதாக தெரிவித்துள்ளனர்.
    நம்பிக்கை வாக்கெடுப்பு இன்று நடக்க உள்ள நிலையில், பீகாரில் அந்தந்த கட்சிகள் தங்களது எம்.எல்.ஏ.க்களை ஒரே இடத்தில் தங்க வைத்துள்ளனர். பாட்னாவில் நேற்று நடைபெற்ற ஐக்கிய ஜனதா தள கட்சி கூட்டத்தில் நிதிஷ்குமார் கட்சி எம்.எல்.ஏ.க்கள் 45 பேரில் 4 பேர் பங்கேற்கவில்லை. அவர்களை தொடர்பு கொண்டும் தொடர்பு கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
    பெரும் பரபரப்பு:
    அதேபோல, கயாவில் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் 78 எம்.எல்.ஏ.க்களில் 3 பேர் வரவில்லை என்று தெரியவந்துள்ளது. அவர்கள் வராததற்கு காரணம் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் ஐக்கிய ஜனதா தளம் – பா.ஜ.க. கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும் என்று அந்த மாநில துணை முதலமைச்சர் விஜய் சவுத்ரி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
    ராஷ்ட்ரியா ஜனதா தள எம்.எல்.ஏ. சேத்தன் ஆனந்த் காணவில்லை என்று தகவல் வெளியான நிலையில், அவர் தேஜஸ்வி யாதவ் வீட்டில் கிரிக்கெட் ஆடிக் கொண்டிருந்த வீடியோ வெளியாகி பரபரப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது. மக்களவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், பீகார் மாநிலத்தில் நடக்கும் இந்த அரசியல் சூழல் தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    மேலும் படிக்க: TN Assembly: ஆளுநர் உரையுடன் இன்று தொடங்குகிறது சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர்!
    மேலும் படிக்க: காலையிலே மகிழ்ச்சி! இந்திய கடற்படை முன்னாள் வீரர்கள் 8 பேர் விடுதலை – கத்தார் நீதிமன்றம்
     

    மேலும் காண

    Source link

  • கழிவறைகள் கழுவுவதாக கூறுவதா? தயாநிதிமாறனுக்கு பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் கண்டனம்…

    கழிவறைகள் கழுவுவதாக கூறுவதா? தயாநிதிமாறனுக்கு பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் கண்டனம்…

    பீகாரில் இருந்து தமிழகம் வருபவர்கள் கழிவறைகள் கழுவுவதாகக தயாநிதிமாறன் கூறிய கருத்துக்கு பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய திமுக எம் பி தயாநிதி மாறன், உத்தரப்பிரதேசம் மற்றும் பீகாரில் இருந்து தமிழ்நாட்டுக்கு வந்திருப்பவர்கள் கழிவறை கழுவுகின்றனர் என பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

    இந்நிலையில், ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சியின் தலைவரும், பீகார் மாநில துணை முதலமைச்சருமான தேஜஸ்வி யாதவ், திமுக என்பது கருணாநிதியின் கட்சி. திமுக என்பது சமூக நீதியில் நம்பிக்கை உள்ள கட்சி என்று கூறியுள்ளார்.

    அப்படிப்பட்ட கட்சியின் தலைவர்கள் உத்தரப்பிரதேசம் மற்றும் பீகார் மாநில மக்கள் பற்றி ஏதேனும் பேசியிருந்தால் அது கண்டனத்துக்குரியது என்றும் அதை ஏற்க முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.

    உத்தரப்பிரதேசம், பீகார் மாநில தொழிலாளர்களின் தேவை, நாடு முழுவதும் இருப்பதாக தெரிவித்துள்ள தேஜஸ்வி யாதவ், அப்படிப்பட்ட சூழ்நிலையில் உத்தரப்பிரதேசம் மற்றும் பீகார் தொழிலாளர்களை விமர்சித்தால் நாங்கள் கண்டனம் தெரிவிப்போம் என்று கூறியுள்ளார்.

    பீகார் மாநில மக்கள் இதர மாநில மக்களை மதிப்பதாக தெரிவித்துள்ள தேஜஸ்வி யாதவ், ஆனால் இத்தகைய விமர்சனங்களை ஏற்க முடியாது  என்றும், இத்தகைய கருத்துகளை தெரிவிப்பதை அனைத்து கட்சித் தலைவர்களும் தவிர்க்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.