Tag: Prime Minister Narendra Modi

  • I.N.D.I. Aliance Leaders Were Like 3 Monkeys Of Gandhiji’: PM Modi In Bengal Slams Mamata Govt Over Sandeshkhali

    I.N.D.I. Aliance Leaders Were Like 3 Monkeys Of Gandhiji’: PM Modi In Bengal Slams Mamata Govt Over Sandeshkhali


    PM Modi: மேற்குவங்கத்தில் நடைபெற்ற பாஜக பொதுக்கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, I.N.D.I.A. கூட்டணி தலைவர்களை கடுமையாக விமர்சித்துள்ளார்.
    மேற்குவங்கத்தில் பிரதமர் மோடி:
    மேற்கு வங்க மாநிலம் ஹூக்ளி மாவட்டத்தின் ஆரம்பாக் பகுதியில் ரூ.7,200 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வெள்ளிக்கிழமை அடிக்கல் நாட்டினார். இந்தியன் ஆயில் நிறுவனத்தின் ரூ.2,790 கோடி மதிப்பிலான  518 கிமீ தூரத்திற்கான ஹால்தியா-பரௌனி கச்சா எண்ணெய் குழாய்  திட்டத்தையும் தொடங்கி வைத்தார். இந்த பைப்லைன் ஆனது பீகார், ஜார்கண்ட் மற்றும் மேற்கு வங்கம் வழியாக, பராவ்னி, போங்கைகான் மற்றும் கவுஹாத்தி ஆகிய சுத்திகரிப்பு ஆலைகளுக்கு குறைந்த செலவிலும் மற்றும் சுற்றுச்சூழலுக்கு பாதுகாப்பான முறையிலும் கச்சா எண்ணெயை கொண்டு செல்வதற்கு உதவுகிறது.
    மம்தா பானர்ஜியை கடுமையாக சாடிய மோடி:
    திட்டங்களை தொடங்கி வைத்து பேசிய பிரதமர் மோடி, “சந்தேஷ்காலியின் சகோதரிகளுக்கு திரிணாமுல் காங்கிரஸ் செய்ததை நாடே பார்க்கிறது. நாடு முழுவதும் கோபத்தில் உள்ளது. சந்தேஷ்காலியில் நடந்த சம்பவத்தால் ராஜா ராம் மோகன் ராயின் ஆன்மா வேதனை அடைந்திருக்க வேண்டும். ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் மேற்கு வங்க மக்களுக்கு துரோகம் செய்துள்ளது. மக்கள் உரத்த குரலில் பேசுகிறார்கள்.  அவர்களுக்கு பாஜக வேண்டும். சந்தேஷ்காலியில் பெண்களுக்கு எதிரான அட்டூழியங்களை விட சிலரின் வாக்கு முக்கியமா என்று மேற்கு வங்காள மக்கள் தங்கள் முதலமைச்சர் மம்தா பானர்ஜியை  கேட்கிறார்கள்.

    #WATCH | PM Modi attacks TMC on Sandeshkhali issue while addressing a public rally in West Bengal’s Arambagh He says, “…’Har chot ka jawab vote se dena hai’. Today, the people of West Bengal are asking their CM ‘Didi’- is the vote of some people more important than atrocities… pic.twitter.com/5yjJWVgxx6
    — ANI (@ANI) March 1, 2024

    I.N.D.I.A. கூட்டணி கட்சி தலைவர்கள் மீது பாய்ச்சல்:
      I.N.D.I.A. கூட்டணியின் உயரிய தலைவர்கள் அனைவரும் சந்தேஷ்காலி சம்பவத்தில் அமைதியாக இருந்தனர். காந்தியின் மூன்று குரங்குகளைப் போல இந்திய அணித் தலைவர்கள் தங்கள் கண்களையும், காதுகளையும், வாயையும் மூடிக் கொண்டுள்ளனர் . அவர்கள் பாட்னா, பெங்களூரு, மும்பை மற்றும் எங்கும் கூட்டங்களை நடத்துகிறார்கள். ஆனால் காங்கிரஸுக்கும் இடதுசாரிகளுக்கும் வங்காளத்தில் திரிணாமுல் அரசைக் கேள்வி கேட்க தைரியம் இல்லை. அவர்கள் சந்தேஷ்காலியின் பக்கம் முகத்தைத் கூட திருப்பவில்லை.
    இது வங்காளத்திற்கும், அதன் கலாச்சாரத்திற்கும், பாரம்பரியத்திற்கும் அவமானம் இல்லையா? இதுதான் இந்தியக் கூட்டத்தின் உண்மை. அவர்கள் ஊழல்வாதிகள், குடும்ப மற்றும் சமாதான அரசியலில் நம்பிக்கை கொண்டவர்களைக் காப்பாற்றுகிறார்கள். திரிணாமுல் காங்கிரஸ் ஊழலின் புதிய மாதிரியை அமைத்துள்ளது. அந்த கட்சி தலைவர்களின் வீடுகளில் கண்டெடுக்கப்பட்ட நோட்டுக் கட்டுகளைப் பார்த்தீர்களா? சினிமாவில் கூட இவ்வளவு பணத்தைப் பார்த்திருக்கமாட்டீர்கள்” என பேசியுள்ளார். முன்னதாக, பாஜக ஆட்சி அமைந்த பிறகு முன்னெடுக்கப்பட்ட பல்வேறு வளர்ச்சி திட்டங்களையும் பிரதமர் மோடி பட்டியலிட்டு பேசியது குறிப்பிடத்தகக்து.

    மேலும் காண

    Source link

  • உச்ச நீதிமன்றத்தின் வைர விழா கொண்டாட்டம்.. நாளை உரையாற்றுகிறார் பிரதமர் மோடி..!

    உச்ச நீதிமன்றத்தின் வைர விழா கொண்டாட்டம்.. நாளை உரையாற்றுகிறார் பிரதமர் மோடி..!


    <p><em><strong>உச்சநீதிமன்றத்தின் டிஜிட்டல் அறிக்கைகள், டிஜிட்டல் நீதிமன்றங்கள் 2.0 மற்றும் உச்சநீதிமன்றத்தின் புதிய இணையதளம் போன்ற பல்வேறு தொழில்நுட்ப முயற்சிகளை பிரதமர் தொடங்கி வைக்கிறார்.&nbsp;</strong></em></p>
    <p>இந்திய உச்ச நீதிமன்றம் ஜனவரி 28 ஆம் தேதி அதன் நிறுவப்பட்ட வைர விழாவைக் கொண்டாட உள்ளது. 1950ஆம் ஆண்டு ஜனவரி 28ஆம் தேதி உச்ச நீதிமன்றக் கட்டிடம் எதுவும் இல்லாததால், இந்திய உச்ச நீதிமன்றம் நாடாளுமன்றக் கட்டிடத்தில் திறக்கப்பட்டது.</p>
    <p>1950ஆம் ஆண்டு அசல் அரசியலமைப்பு இந்திய தலைமை நீதிபதி மற்றும் ஏழு நீதிபதிகளை மட்டுமே கொண்டிருந்தது.&nbsp;அதைத் தொடர்ந்து, நாடாளுமன்றம் 1950-ல் இருந்து நீதிபதிகளின் எண்ணிக்கையை 6 முறை அதிகரித்து 2019-ல் தற்போதைய பலமாக 34 ஆக உயர்த்தியுள்ளது.</p>
    <p>உச்ச நீதிமன்றத்தின் 75 ஆண்டுகள் நிறைவடைந்ததையடுத்து, ஜனவரி 28ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை (நாளை) உச்ச நீதிமன்றத்தில் வைர விழா கொண்டாடப்பட உள்ளது. அதன் நினைவாக நாளை கூடுதல் கட்டிட வளாக ஆடிட்டோரியத்தில் நடைபெறும் கொண்டாட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார். இந்த விழாவில் மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் கலந்து கொள்கிறார்.</p>
    <p>உச்ச நீதிமன்றத்தின் 75-வது ஆண்டை தொடங்கி வைக்கும் பிரதமர், உச்சநீதிமன்றத்தின் டிஜிட்டல் அறிக்கைகள்,டிஜிட்டல் நீதிமன்றங்கள் 2.0 மற்றும் உச்சநீதிமன்றத்தின் புதிய இணையதளம் உள்ளிட்ட மக்களை மையமாகக் கொண்ட தகவல் மற்றும் தொழில்நுட்ப முன்முயற்சிகளைத் தொடங்கி வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் பார்வையாளர்கள் மத்தியில் அவர் உரையாற்றுகிறார்.</p>
    <p>உச்ச நீதிமன்ற டிஜிட்டல் அறிக்கைகள் உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை நாட்டின் மக்களுக்கு இலவசமாகவும், மின்னணு வடிவத்திலும் கிடைக்கச் செய்வதே. டிஜிட்டல் அறிக்கைகளின் முக்கிய அம்சமாகும். இதன்படி, 1950ம் ஆண்டு முதல் உச்ச நீதிமன்ற அறிக்கைகளின் 36,308 வழக்குகளை உள்ளடக்கிய அனைத்து 519 தொகுதிகளும், &nbsp;டிஜிட்டல் வடிவத்தில், புக்மார்க் செய்யப்பட்ட, பயனருக்கு ஏற்றதாக மற்றும் திறந்த அணுகலுடன் கிடைக்கும்.</p>
    <p>மின்-நீதிமன்றங்கள் திட்டத்தின் கீழ் மின்னணு வடிவத்தில் நீதிமன்ற பதிவுகளை மாவட்ட நீதிமன்ற நீதிபதிகளுக்கு கிடைக்கச் செய்வதற்கான ஒரு முயற்சியே டிஜிட்டல் நீதிமன்றங்கள் 2.0 என்பதாகும். &nbsp;இது நிகழ்நேர அடிப்படையில் பேச்சு மொழியை எழுத்து வடிவில் &nbsp;படியெடுக்கும் வகையில் செயற்கை நுண்ணறிவு &nbsp;பயன்பாட்டுடன் இணைக்கப்பட்டுள்ளது.</p>
    <p>உச்ச நீதிமன்றத்தின் புதிய இணையதளத்தையும் பிரதமர் தொடங்கி வைப்பார். புதிய இணையதளம் ஆங்கிலம் மற்றும் இந்தி மொழிகளில் இருமொழி வடிவத்தில் பயனருக்கு ஏற்றவகையில் மறுவடிவமைப்பு செய்யப்பட்டுள்ளது.</p>
    <p>&nbsp;</p>

    Source link

  • Mumbai Trans Harbour Link: கடலில் கட்டப்பட்ட இந்தியாவின் மிக நீளமான பாலம்! இன்று திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி!

    Mumbai Trans Harbour Link: கடலில் கட்டப்பட்ட இந்தியாவின் மிக நீளமான பாலம்! இன்று திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி!


    <p>கடலில் கட்டப்பட்ட இந்தியாவின் மீக நீளமான பாலத்தினை பிரதமர் நரேந்திர மோடி இன்று திறந்து வைக்கிறார். நகர்ப்புற போக்குவரத்து உள்கட்டமைப்பு மூலம் மக்கள் பயன்படுத்தும் பாதையை எளிதாக்குவதற்காக, பிரதமர் மோடி முன்மை டிரான்ஸ்- ஹார்பர் இணைப்பு பாலத்தை திறந்து வைக்கிறார்.&nbsp;</p>
    <h2><strong>மிக நீளமான கடல்பாலம்:</strong></h2>
    <p>இந்த பாலத்திற்கு &lsquo;அடல் பிஹாரி வாஜ்பாய் செவ்ரி – நவ ஷேவா அடல் சேது&rsquo; என பெயரிடப்பட்டுள்ளது. இந்தியாவின் மிக நீளமான இந்த கடல் பாலத்தை 17,840 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ளது.&nbsp;</p>
    <p>மகாராஷ்டிரா மாநிலம் நாசிக்கில் இன்று (ஜனவரி 12ம் தேதி) 27வது தேசிய இளைஞர் விழாவில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைக்கிறார். இந்த பாலத்திற்கு 2016 டிசம்பரில் பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். இது இந்தியாவின் மிக நீளமான பாலம் மற்றும் இந்தியாவின் மிக நீளமான கடல் பாலமாகும், இந்த பாலம் சுமார் 21.8 கி.மீ நீளம் கொண்டது. இதன் நீளம் கடலில் 16.5 கி.மீ மற்றும் நிலத்தில் சுமார் 5.5 கி.மீ தூரமும் கொண்டது.&nbsp;</p>
    <h2><strong>எதோடு எது இணைகிறது..?&nbsp;</strong></h2>
    <p>இது மும்பை சர்வதேச விமான நிலையம் மற்றும் நவி மும்பை சர்வதேச விமான நிலையத்தை ஒன்றாக இணைக்கிறது. மேலும், மும்பையிலிருந்து புனே, கோவா எளிதாக சென்று பயண நேரத்தை குறைக்கலாம் என்று கூறப்படுகிறது. இதன் மூலம் மும்பை துறைமுகம் மற்றும் ஜவஹர்லால் நேரு துறைமுகம் இடையேயான தொடர்பையும் மேம்படுத்தும் என்று அதிகாரப்பூர்வ அறிக்கை கூறுகிறது.</p>
    <p>தொடர்ந்து, ‘கிழக்கு ஃப்ரீவேஸ் ஆரஞ்சு கேட்’ மற்றும் மரைன் டிரைவை இணைக்கும் சாலை சுரங்கப்பாதைக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டுகிறார். 9.2 கிமீ நீளம் கொண்ட இந்த சுரங்கப்பாதை ரூ.8,700 கோடி செலவில் கட்டப்பட்டு மும்பையில் குறிப்பிடத்தக்க உள்கட்டமைப்பு மேம்பாடு ஆகும்.</p>
    <p>சூர்யா பிராந்திய குடிநீர் திட்டத்தின் முதல் கட்டத்தையும் இன்று பிரதமர் மோடி நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். 1,975 கோடி ரூபாய் செலவில் உருவாக்கப்பட்ட இந்தத் திட்டம், மகாராஷ்டிராவின் பால்கர் மற்றும் தானே மாவட்டங்களுக்கு குடிநீர் விநியோகத்தை வழங்குகிறது. இதன் மூலம் சுமார் 14 லட்சம் மக்கள் பயனடைவார்கள் என்று கூறப்படுகிறது. மேலும் பல ரயில்வே திட்டங்களையும் இன்று பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார்.</p>
    <p>தொடர்ந்து, ‘சாண்டா குரூஸ் எலக்ட்ரானிக்ஸ் ஏற்றுமதி செயலாக்க மண்டலம்’- சிறப்பு பொருளாதார மண்டலம் (SEEPZ)க்கான ‘பாரத் ரத்னம்’ (மெகா காமன் ஃபெசிலிடேஷன் சென்டர்) ஆகியவற்றையும் பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.&nbsp;</p>
    <h2><strong>பாலத்தின் ஸ்பெஷல்:&nbsp;</strong></h2>
    <p>இந்த மும்பை டிரான்ஸ் ஹார்பர் இணைப்பில் கார்கள், டாக்சிகள், இலகுரக வாகனங்கள், மினி பஸ்கள் மற்றும் இரண்டு அடுக்கு கொண்ட பஸ்கள் போன்ற வாகனங்களின் வேக வரம்பு மணிக்கு 100 கிலோமீட்டராக இருக்கும். பாலத்தில் ஏறும்போதும் இறங்கும்போதும் வாகனங்களின் வேக வரம்பு மணிக்கு 40 கி.மீ.&nbsp;மும்பை டிரான்ஸ் ஹார்பர் இணைப்பானது மும்பையில் உள்ள செவ்ரியில் தொடங்கி ராய்காட் மாவட்டத்தின் உரான் தாலுகாவில் உள்ள நவா ஷேவாவில் முடிவடைகிறது.</p>
    <p>மோட்டார் சைக்கிள்கள், மொபெட்கள், ஆட்டோக்கள், டிராக்டர்கள், விலங்குகள் இழுத்துச் செல்லப்படும் வாகனங்கள் மற்றும் மெதுவாக நகரும் வாகனங்கள் ஆகியவற்றுக்கு அனுமதி கிடையாது. இதன் திறப்பு விழாவிற்குப் பிறகு, மும்பை மற்றும் நவி மும்பை இடையேயான தூரத்தை வெறும் 20 நிமிடங்களில் கடக்கலாம். இதற்கு முன்னதாக இந்த பயண நேரம் 2 மணி நேரமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.&nbsp;</p>
    <p>&nbsp;</p>

    Source link