Tag: pongal festival 2024

  • Thai Pongal 2024 Villupuram Shopping Street Is Busy Ahead Of Thai Pongal Mattu Pongal

    Thai Pongal 2024 Villupuram Shopping Street Is Busy Ahead Of Thai Pongal Mattu Pongal

    விழுப்புரம்: தை பொங்கலை முன்னிட்டு விழுப்புரம் வணிக வீதியில் புத்தாடைகள் மற்றும் மாடுகளுக்கு தேவையான வண்ண வண்ண கயிறுகள், பூக்கள் வாங்குவதற்கு மக்கள் கூட்டம் அலைமோதியது. தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை நாளை கொண்டபட உள்ளதால் பொதுமக்கள் பொங்கல் பண்டிகையை கொண்டாடுவதற்கு தயாராகி வருகின்றனர்.

    இந்த நிலையில் பொங்கலை முன்னிட்டு விழுப்புரம் வணிக வீதியான எம்.ஜி சாலையில் உள்ள கடைகளில் பொதுமக்கள் பொருட்களை வாங்குவதற்கு அதிகம் ஆர்வம் காட்டி வருகின்றனர், பொங்கல் பண்டிகை என்றாலே சிறப்பு வாய்ந்தது கிராமப்புறம் தான், கிராமப்புறத்தில் குடும்பத்தினர்கள் ஒன்று கூடி பொங்கலிட்டு தைப்பொங்களை கொண்டாடுவதற்கும் மாடுகளுக்கு கொம்பு சீவி வண்ண அலங்காரங்கள் தீட்டி வழிபடுவர்.

    இதற்காக எம்.ஜி சாலையில் உள்ள வணிக கடைகளில் மாடுகள் கழுத்தில் அணிவதற்கு  வண்ண வண்ண கயிறுகள், கழுத்து மணிகள், மூக்கணாங்கயிறுகள் உள்ளிட்ட பொருட்களை அதிகளவில் வாங்கிச் சென்றனர் இதே போன்று பூக்களை வாங்குவதற்கும், புத்தாடைகள் வாங்குவதற்கும் இந்த பகுதியில் மக்கள் அதிகமாக திரண்டதால் விழுப்புரம் – புதுச்சேரி சாலையில் வாகன போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது, பொங்கல் பண்டிகை முன்னிட்டு அசம்பாவிதங்கள் ஏற்படாமல் இருக்க போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர், குற்ற செயலை தடுப்பதற்கு வணிக விதிகள் முழுவதும் சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

    தை மாதம் ஏன் முக்கியமானதாக பார்க்கப்படுகிறது?
    தை மாதத்தை பொதுமக்கள் ஒவ்வொரு ஆண்டும் மிக முக்கியமான மாதமாகவும், நன்மை தரும் மாதமாகவும் பார்ப்பார்கள். இந்த மாதத்தில்தான் தங்கள் வாழ்க்கையில் பல நல்ல மாற்றங்கள் நிகழும் என்றும், தங்கள் பிரச்சினைகள் தீரும் என்றும் மக்கள் நம்புகின்றனர். 
     

    நெல், கரும்பு, மஞ்சள் போன்றவற்றை அறுவடை செய்யும் காலம் இது. இந்த மாதத்தில் நிச்சயதார்த்தம், திருமணங்கள் மற்றும்  புது வீடு பால் காய்ச்சுதல் போன்ற நற்காரியங்களை மக்கள் அதிகளவில் செய்வர். 
     

    Source link

  • Pongal 2024 Students Put Up Samattva Pongal At The College Gate In Villupuram College Administration Denied Permission

    Pongal 2024 Students Put Up Samattva Pongal At The College Gate In Villupuram College Administration Denied Permission

    விழுப்புரம் : பொங்கல் திருநாளையொட்டி, இன்று முதல் பள்ளி, கல்லுாரிகளுக்கு விடுமுறை விடப்பட்டது. இதையொட்டி, முன்னதாக, மாணவ, மாணவிகள் தாங்கள் பயிலும் கல்லுாரிகளில் மாணவ, மாணவிகள், பேராசிரியர்களோடு சமத்துவ பொங்கல் வைத்து வழிப்பட்டு வருகின்றனர்.
    இதில், விழுப்புரம் அறிஞர் அண்ணா அரசு கலை மற்றும் அறிவியில் கல்லுாரியில் ஆண்டுதோறும் மாணவர்கள் சமத்துவ பொங்கல் வைத்து வழிபடுவது வழக்கம். இந்த கல்லுாரி நிர்வாகம் மூலம் இன்று சமத்துவ பொங்கல் வைக்க அனுமதி கோரிய நிலையில், மாணவ, மாணவிகள்  காலை 9.00 மணிக்கு கல்லுாரிக்கு வந்தனர். ஆனால், கல்லுாரி வளாகத்தின் கேட் மூடப்பட்ட நிலையில், நிர்வாகம் மூலம் பொங்கல் வைப்பதற்கான அனுமதியும் மாணவர்களுக்கு மறுக்கப்பட்டது.

    இதையடுத்து, மாணவ, மாணவிகள் ஒன்று சேர்ந்து கல்லுாரி கேட்டிற்கு வெளியே பானையில் தீயை மூட்டி பொங்கல் படையிலிட்டு வழிபட்டனர். பின், மாணவ, மாணவிகள் பொங்கலோ, பொங்கல் என கோஷங்கள் எழுப்பியதோடு, கல்லுாரி கேட்டிற்கு வெளியே சாலையில் செல்பி புகைப்படங்கள் எடுத்து மகிழ்ந்தனர்.
    தமிழர் திருநாள் 
    தமிழர் திருநாளான பொங்கலை உலகெங்கும் உள்ள தமிழ் மக்கள் வெகு விமரிசையாக கொண்டாடுவது வழக்கம். தமிழர் வாழும் அனைத்து இடங்களிலும் வெகு சிறப்பாக கொண்டாடப்படும் பண்டிகையில் ஒன்று இந்த தை பொங்கல். சூரிய கடவுளுக்கும், இயற்கைக்கும் நன்றி செலுத்தும் விதமாக இந்த பண்டிகை தமிழ்நாட்டில் கொண்டாடப்பட்டு வருகிறது.
    தை மாதத்தின் முதல் நாள் பொங்கல் கொண்டாடப்படுகிறது. இந்த பண்டிகைக்கு முதல் நாள் புது பானை, புத்தாடை வாங்குவார்கள். வீட்டின் வாசலில் பொங்கல் கோலம் போடுவார்கள். வீட்டின் முன் புது அடுப்பு வைத்து, புது பானையில் புது அரிசி இட்டு முற்றத்தில் பொங்கல் வைப்பார்கள். புதிய பானைக்கு புதிய மஞ்சளை காப்பாக அணிவர். பொங்கலுக்கு புதிய கரும்பு, புதிய காய்கறிகள் என அனைத்தையும் புதியவற்றையே பயன்படுத்துவார்கள். பானையில் மஞ்சள், குங்குமம் வைத்து பொங்கலிட ஆரம்பிப்பார்கள். பொங்கல் பொங்கி வரும்போது குடும்பத்தில் உள்ள அனைவரும் பொங்கலோ! பொங்கல் என்று மகிழ்ச்சியுடன் வரவேற்பார்கள்.
    பொங்கல் பொங்கியதும் அதை சூரிய பகவானுக்கும், கால்நடைக்கும் படைத்து விட்டு பின்பு உண்பார்கள்.

    Source link

  • பொங்கல் பரிசு தொகுப்பு; விழுப்புரத்தில்  முதன்மைச் செயலர் நேரில் ஆய்வு

    பொங்கல் பரிசு தொகுப்பு; விழுப்புரத்தில் முதன்மைச் செயலர் நேரில் ஆய்வு


    <p style="text-align: justify;">விழுப்புரம் மாவட்டம், வானூர் வட்டம், நெசல் கிராமம், ஒழுந்தியாம்பட்டு கிராமம் மற்றும் விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட வார்டு எண் 14-இல் உள்ள நியாயவிலைக்கடை ஆகிய நியாய விலைக்கடைகளில், தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாடும் விதமாக குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000/- ரொக்கப்பணம் மற்றும் பொங்கல் பரிசுத்தொகுப்புடன் வேட்டி, சேலை வழங்கப்பட்டு வருவதை முதன்மைச் செயலர்/ஆணையர், உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை மற்றும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஹர் சஹாய் மீனா, &nbsp;மாவட்ட ஆட்சியர் சி.பழனி தலைமையில் நேரில் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.</p>
    <p style="text-align: justify;">முதன்மைச் செயலர்/ஆணையர், உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை மற்றும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் அவர்கள் தெரிவிக்கையில், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழ்நாட்டில் உள்ள அனைத்து தரப்பு மக்களும் தமிழர் திருநாள் பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாடும் விதமாக அனைத்து குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு தலா 01 கிலோ பச்சரிசி, 01 கிலோ சர்க்கரை, ஒரு முழுக் கரும்பு மற்றும் ரூ.1,000/- ரொக்கப்பணத்துடன் வேட்டி, சேலை வழங்கிட உத்தரவிட்டார்கள். அதனடிப்படையில், இன்றைய தினம் தமிழ்நாடு முதலமைச்சர், சென்னையில் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் திட்டத்தினை தொடங்கி வைத்ததை தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் அனைத்து நியாய விலைக்கடைகள் மூலமாக, குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசித்தொகுப்பு வழங்கும் பணிகள் சிறப்பாக நடைபெற்றுகொண்டிருக்கிறது.</p>
    <p style="text-align: justify;">தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, விழுப்புரம் மாவட்டத்தில், பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணிகள் குறித்து அறிந்து கொள்ளும் வகையில், வானூர் வட்டம், நெசல் கிராமம், ஒழுந்தியாம்பட்டு கிராமம் மற்றும் விழுப்புரம் நகராட்சிக்குட்பட்ட வார்டு எண் 14-இல் உள்ள நியாய விலைக்கடைகளில் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு, ரூ.1,000/- ரொக்கப்பணம் மற்றும் வேட்டி, சேலை வழங்கப்படுவது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஆய்வின் போது, டோக்கனில் குறிப்பிட்ட வரிசை எண் அடிப்படையில் பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கப்படுகிறதா, பொங்கல் பரிசுத்தொகுப்பில் உள்ள அரிசி, சர்க்கரையின் அளவு மற்றும் தரம், கரும்பின் தரம் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது என முதன்மைச் செயலர்/ஆணையர், உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை மற்றும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஹர் சஹாய் மீனா தெரிவித்தார்.</p>
    <p style="text-align: justify;"><strong>மாவட்ட அளவிலான அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம்</strong></p>
    <p style="text-align: justify;"><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/10/4498307c65be638417f42d70934fcb7e1704899123979113_original.jpg" /></p>
    <p style="text-align: justify;">தொடர்ந்து, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், அனைத்துத்துறைகளின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சித் திட்டப்பணிகள் மற்றும் மக்களுடன் முதல்வர் திட்டத்தின்கீழ், பெறப்பட்ட கோரிக்கை மனுக்களின் நிலை குறித்து மாவட்ட அளவிலான அலுவலர்களுடன் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது. இந்த ஆய்வுக்கூட்டத்தில், விழுப்புரம் மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாம்களில், துறை வாரியாக கிடைக்கப்பெற்ற மனுக்களின் எண்ணிக்கை விவரம், துறை வாரியாக தீர்வு காணப்பட்ட கோரிக்கை மனுக்களின் எண்ணிக்கை விவரம், துறை வாரியாக நிலுவையில் உள்ள மனுக்களின் எண்ணிக்கை விவரம் குறித்து கேட்டறியப்பட்டது. மேலும், முதல்வரின் முகவரித் திட்டத்தின்கீழ், பெறப்பட்ட மனுக்கள்மீது மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள், தீர்வுகள் குறித்து கேட்டறியப்பட்டது.</p>
    <p style="text-align: justify;">மேலும், வீட்டுமனைப்பட்டா, பட்டா மாற்றம், இலவச வீட்டுமனைப்பட்டா, முதியோர் உதவித்தொகை, சாதிச்சான்று, விதவைச் சான்று, கலைஞர் மகளிர் உரிமைத்திட்டம், முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம், புதுமைப்பெண் திட்டம் உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. மக்களுடன் முதல்வர் திட்டத்தின்கீழ், பெறப்பட்ட கோரிக்கை மனுக்களின் மீது துறை சார்ந்த அலுவலர்கள் அனைவரும் உடனடி தீர்வு காண்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும். இதுமட்டுமல்லாமல், மனுக்களின் நிலை குறித்து மனுதாரருக்கு தெரியப்படுத்திட வேண்டும். மேலும், மனுக்கள் தீர்வு காண்பதற்கான இடர்பாடுகள் மற்றும் சிக்கல் குறித்தும் உரிய அறிக்கையினை சமர்ப்பித்திட வேண்டும். எனவே, அனைத்துத்துறை சார்ந்த அலுவலர்கள் ஒருங்கிணைந்து செயல்பட்டு அனைத்து கோரிக்கை மனுக்களுக்கும் உடனடி தீர்வு காண வேண்டும் என முதன்மைச் செயலர்/ஆணையர், உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை மற்றும் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் ஹர் சஹாய் மீனா தெரிவித்தார்.</p>

    Source link

  • Pongal 2024 1090 Special Buses On The Occasion Of Pongal Festival Villupuram Government Transport Corporation – TNN | பொங்கல் விழாவை முன்னிட்டு 1090 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

    Pongal 2024 1090 Special Buses On The Occasion Of Pongal Festival Villupuram Government Transport Corporation – TNN | பொங்கல் விழாவை முன்னிட்டு 1090 சிறப்பு பேருந்துகள் இயக்கம்

    விழுப்புரம்: பொங்கல் விழாவை முன்னிட்டு 1090 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.
    இது குறித்து விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
    பொங்கல் 2024 பண்டிகை மற்றும் வார இறுதி விடுமுறை நாட்களில் பயணிகள் அதிக அளவில் புழக்கம் இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் வருகிற 12.01.2024. 13.01.2024 மற்றும் 14.01.2024 ஆகிய நாள்களில் சென்னை, கோயம்பேடு பேருந்து நிலையம் மற்றும் அமைக்கப்பட உள்ள தற்காலிக பேருந்து நிலையத்திலிருந்து பிற ஊர்களுக்கு செல்ல ஏதுவாக விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பாக கூடுதலாக 12.01.2024 அன்று 539 சிறப்பு பேருந்துகள் 13.01.2024 மற்றும் 14.01.2024 அன்று 1090 சிறப்பு பேருந்துகள் திருச்சி, சேலம், கள்ளக்குறிச்சி, விருத்தாச்சலம், திருவண்ணாமலை, போளூர், ஓசூர், வேலூர், ஆரணி, திருப்பத்தூர் மற்றும் புதுச்சேரி ஆகிய ஊர்களுக்கு இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
    மேலும், பயணிகள் சிதம்பரம், தர்மபுரி, ஓசூர், நெய்வேலி, புதுச்சேரி, சேலம், திருவண்ணாமலை, திருச்சி, வேலூர் ஆகிய ஊர்களுக்கு செல்ல https://www.tnstc.in/home.html என்ற இனையத்தில் முன் பதிவு செய்து பயன்படுத்திக் கொள்ளலாம். மேலும், பயணிகள் அடர்வு குறையும் வரை தேவைக்கு ஏற்ப பேருந்துகளை இயக்கிடவும், பேருந்து இயக்கத்தினை மேற்பார்வை செய்திடவும் அதிகாரிகள் பணி அமர்த்தப்பட்டு உள்ளனர், இவ்வாறு தெரிவித்துள்ளனர்.
    போக்குவரத்து தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் 
    தமிழக போக்குவரத்து கழகத்தில் பணிபுரியக்கூடிய போக்குவரத்து தொழிலாளர்கள் பஞ்சப்படி வழங்க வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தினை அமல்படுத்த வேண்டும், சம்பள உயர்வு வழங்கவேண்டும் என்பன 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று இரண்டாவது நாளாக  வேலை நிறுத்தபோராட்டத்தில் ஈடுபட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

    Source link