Tag: omni bus

  • தமிழக அரசின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்த உச்சநீதிமன்றம்…

    தமிழக அரசின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்த உச்சநீதிமன்றம்…

    வெளி மாநில ஆம்னி பேருந்துகளை இயக்குவதை தடுக்க கூடாது என தமிழ்நாடு அரசுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால உத்தரவிட்டுள்ளது.

    வெளி மாநிலங்களில் பதிவு செய்யப்பட்ட ஆம்னி பேருந்துகள் அதிக அளவில் தமிழ்நாட்டில் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், அவ்வாறு இயக்கப்படும் பேருந்துகளை தமிழ்நாடு பதிவெண்ணுக்கு மாற்ற வேண்டும் என்று அவகாசம் விதித்த தமிழ்நாடு அரசு, அவகாசம் முடிந்த பின்னர், பேருந்துகள் இயக்க அனுமதிக்கப்படாது என் திட்டவட்டமாக அறிவித்திருந்த‍து.

    இதுகுறித்து ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தியதோடு, தமிழ்நாட்டு பதிவெண்ணுக்கு மாற்றுவதற்கான பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்த‍னர். இந்த தடை உத்தரவால், ஆம்னி பேருந்துகளின் உரிமையாளர்கள் பொருளாதார ரீதியில் பாதிக்கப்படுவதோடு, தொழிலாளர்களும் கடும் பாதிக்கப்படுவார்கள் என்று ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கம் சார்பில் அரசுக்கு தெரிவிக்கப்பட்டிருந்த‍து.

    அதே நேரத்தில், தமிழ்நாடு அரசின் இந்த உத்தரவுக்கு எதிராக வெளிநாடு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கே.ஆர்.சுரேஷ்குமார் உள்ளிட்டோர், உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தனர். அந்த மனுவை, உச்சநீதிமன்ற நீதிபதிகள் பி.வி. நாகரத்னா, உஜ்ஜல் புயன் ஆகியோர் அடங்கிய கோடை விடுமுறை அமர்வு  விசாரித்தது.

    அப்போது, மனுதாரர்கள் சார்பில் ஆஜரான வழக்குரைஞர், வெளி மாநில ஆம்னி பேருந்துகளை தமிழகத்தில் பதிவு செய்யாமல் இயக்க விதிக்கப்பட்டுள்ள தடையால், வெளி மாநில ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக வாதிட்டார்.

    இந்த வாத‍த்தை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள், வெளிமாநில ஆம்னி பேருந்துகளை இயக்குவதை தடுக்க‍க் கூடாது என்று, இடைக்கால உத்தரவை பிறப்பித்து உத்தரவிட்டனர். மேலும், இந்த மனு தொடர்பாக, தமிழ்நாடு அரசு பதிலளிக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டு விசாரணையை தள்ளி வைத்தனர்.

  • ஆம்னி பேருந்துகள் கோயம்பேட்டில் பயணிகளை ஏற்றி இறக்கலாம்- உயநீதிமன்றம் அதிரடி உத்தரவு

    ஆம்னி பேருந்துகள் கோயம்பேட்டில் பயணிகளை ஏற்றி இறக்கலாம்- உயநீதிமன்றம் அதிரடி உத்தரவு


    மறுஉத்தரவு  வரும் வரை கோயம்பேடு ஆம்னி பேருந்துகளின் பணிமனைகளை பயன்படுத்தலாம் என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. 

    மேலும் காண

    Source link

  • ஆம்னி பேருந்து விவகாரம்; தமிழ்நாடு அரசு பதில்; தாம்பரம், போரூர், சூரப்பேட்டில் பயணிகளை இறக்கி ஏற்ற அனுமதி

    ஆம்னி பேருந்து விவகாரம்; தமிழ்நாடு அரசு பதில்; தாம்பரம், போரூர், சூரப்பேட்டில் பயணிகளை இறக்கி ஏற்ற அனுமதி


    ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் பயணிகளை கிளாம்பாக்கம் மட்டும் இல்லாமல், தாம்பரம், போரூர் மற்றும் சூரப்பேட்டில் இறக்கி ஏற்ற சென்னை உயர்நீதி மன்றம் அனுமதி அளித்துள்ளது. பெருங்களத்தூரில் பயணிகளை இறக்கிவிட மட்டுமே அனுமதி அளிக்கப்படும் எனவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. 
    கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஆம்னி பேருந்துகளுக்கான போதிய வசதிகள் செய்து கொடுக்கும் வரையிலும், கிளாம்பாக்கத்தில் மெட்ரோ ரயில் நிலையம் மற்றும் புறநகர் ரயில் நிலையம் அமைக்கப்படும் வரை ஆம்னி பேருந்துகள் கோயம்பேட்டில் இருந்தே இயக்கப்படும் என திட்டவட்டமாக ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் சார்பில் கடந்த ஜனவரி 20ஆம் தேதி தெரிவித்தனர். 
    ஆம்னி பேருந்துகளை கிளாம்பாக்கம் பேருந்து புதிய நிலையத்தில் நிறுத்த போதிய இட வசதி இல்லை. மேலும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் கட்டுமானப் பணிகளும் முழுமையாக முடிவடையவில்லை. கட்டுமானப்  பணிகள் முடிந்து ஆம்னி பேருந்துகள் வந்து செல்லவும், ஆம்னி பேருந்துகளை பயன்படுத்தும் பயணிகள் வந்து செல்லவும் ஏற்ற வசதி ஏற்படுத்தி தந்தால் மட்டுமே ஆம்னி பேருந்துகளை கிளாம்பாக்கதில் இருந்து இயக்குவோம் என திட்டவட்டமாக தெரிவித்தது மட்டும் இல்லாமல், அன்றைய தினமே கோயம்பேட்டில் இருந்து பயணிகளை ஏற்றும் முயற்சியில் ஈடுபட்டனர். ஆனால் அதற்கு மாநகராட்சி நிர்வாகம் அனுமதி அளிக்காததால், பயணிகள் கடும் சிரமத்திற்கு ஆளாகினர். 
    இந்நிலையில் இது தொடர்பாக ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் தரப்பில் தொடரப்பட்ட வழக்கு இன்று அதாவது பிப்ரவரி 7ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழ்நாடு அரசு தரப்பில் ஆம்னி பேருந்துகளுக்கு தாம்பரம், போரூர் மற்றும் சூரப்பட்டு உள்ளிட்ட இடங்களில் பயணிகளை இறக்கி ஏற்றவும், பெருங்களத்தூரில் பயணிகளை இறக்கி விடவும் மட்டும் அனுமதி அளிக்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது. 
    இதையடுத்து, ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் தரப்பில், சென்னை முழுவதும் ஆம்னி பேருந்துகளை இயக்க தங்களுக்கு அனுமதி அளிக்கப்பட வேண்டும் என தெரிவித்துள்ளனர். இதற்கு தமிழ்நாடு அரசு தரப்பில், தென் மாவட்டங்களுக்குச் செல்லும் பேருந்துகளின் வழிதட வரைபடங்களை சமர்ப்பிக்க வேண்டும் என கூறியுள்ளனர். தமிழ்நாடு அரசின் பதிலைக் கேட்ட நீதிபதிகள் வழக்கை வரும் வெள்ளிக்கிழமை அதாவது பிப்ரவரி 9ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 
     

    மேலும் காண

    Source link

  • கிளாம்பாக்கத்தில் மற்றொரு சிக்கல்.. ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சொல்வது என்ன? தொடரும் குழப்பம்..

    கிளாம்பாக்கத்தில் மற்றொரு சிக்கல்.. ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சொல்வது என்ன? தொடரும் குழப்பம்..


    <p style="text-align: justify;"><strong>கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்&nbsp;</strong></p>
    <p style="text-align: justify;">தென் மாவட்ட பயணிகளுக்கு என்று பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் &nbsp;பயன்பாட்டிற்கு வந்தது. இருந்தும் பல்வேறு சர்ச்சைகள் அவ்வப்பொழுது, கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் தொடர்பாக எழுந்த வண்ணம் உள்ளன . இந்த நிலையில் தமிழ்நாடு அரசு &nbsp;ஆம்னி பேருந்துகளும் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்திலிருந்து செல்ல வேண்டும் என உத்தரவிட்டுள்ள நிலையில், &nbsp;ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.</p>
    <p><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/03/bdf59206397b6b50632c8860ad2eb9071704247702595113_original.jpg" /></p>
    <p style="text-align: justify;"><strong>&nbsp;1600 பேருந்துகள் இயக்கப்படுகிறது</strong></p>
    <p style="text-align: justify;">இதுகுறித்து அனைத்து ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் &nbsp;சார்பில், அதன் தலைவர் அன்பழகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை தென் தமிழகம் செல்லும் அனைத்தும் ஆம்னி பேருந்துகள் &nbsp;பயன்படுத்திக் கொண்டுள்ளோம்.</p>
    <p style="text-align: justify;">கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் &nbsp;27 டிராவல்ஸ் அலுவலகங்களும், 77 பயணிகளை ஏற்றும் இடமும்,&nbsp; 67 ஆம்னி பேருந்துகள் நிறுத்தி வைப்பதற்கும் ஆக மொத்தம் 144 ஆம்னி பேருந்துகள் நிறுத்தும் இடங்களே கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தில் உள்ளன. தினசரி சாதாரண நாட்களில் 850 ஆம்னி பேருந்துகளும், வார இறுதி நாட்களில் 1250 ஆம்னி பேருந்துகளும் மற்றும் விழா காலங்களில் பயணிகளின் தேவைக்கேற்றவாறு 1600 வரை ஆம்னி பேருந்து இயக்கப்பட்டு வருகிறது.</p>
    <p style="text-align: justify;"><strong>44 ஆம்னி பேருந்துகள் மட்டுமே</strong></p>
    <p style="text-align: justify;">கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் 144 ஆம்னி பேருந்துகள் மட்டுமே நிறுத்த முடியும். இந்நிலையில் ஒட்டுமொத்த ஆம்னி பேருந்துகளையும் (தினசரி சுமாராக ஆயிரம் பேருந்துகள்) கிளாம்பாக்கத்தில் நிறுத்தி இயக்க சாத்தியக்கூறுகள் இல்லை. கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் அருகில் முடிச்சூர் ரோடு வரதராஜபுரத்தில் &nbsp;5 ஏக்கர் பரப்பளவில் அரசால் ஆம்னி பேருந்துகள் நிறுத்துவதற்காக பஸ் நிறுத்தும் இடம் வேலை நடைபெற்றுக் கொண்டுள்ளது. இந்த இடம் வேலை முடிவதற்கும் சுமாராக ஆறு மாதம் காலம் ஆகும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>
    <p style="text-align: justify;"><strong>90 நாட்களுக்கு &nbsp; முன்னே முன்பதிவு</strong></p>
    <p style="text-align: justify;">அந்த இடம் தயாராகும் வரை &nbsp;பேருந்துகளை &nbsp;கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையம் வரவேண்டிய சூழ்நிலை இருப்பதால் பயணிகளுடன் ஆம்னி பேருந்துகளை கோயம்பேடு இயக்குவதற்கு அரசு அனுமதி அளிக்க வேண்டும் என்று பல பலமுறை கோரிக்கை வைத்தும் CMDA நிர்வாகம் 1000 ஆம்னி பேருந்துகள் KCBTயில் பகலில் நிறுத்தி வைத்து பராமரித்து இரவில் இயக்குவதற்கு சாத்தியக்கூறுகள் பற்றி நாங்கள் பலமுறை கேள்விகளை எழுப்பியும் பதில் ஏதும் அளிக்காமல் போக்குவரத்து துறை சார்பாக சாத்தியம் இல்லாமல் 2002இல் உயர் நீதிமன்றம் விதித்த ஆணையை அவமதித்து 22.01.2024 அன்று ஆம்னி பேருந்துகள் 24.01.2024 முதல் சென்னை நகரத்திற்குள் வர அனுமதி இல்லை இரண்டு நாட்கள் மட்டும் கால வாசம் கொடுத்து சுற்றறிக்கை திடீரென அனுப்பப்பட்டுள்ளதால் ஆம்னி பேருந்துகளில் 30 முதல் 90 நாட்களுக்கு &nbsp; முன்னே முன்பதிவு செய்துள்ள ஆம்னி பேருந்து பயணிகளின் பயணங்கள் கேள்விக்குறியாகி பயணிகள் பல குழப்பங்களுக்கு ஆளாகியுள்ளனர்.</p>
    <p><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/12/31/2f6c1d47ee877bbc8c9f095d4aa284181703989674312113_original.jpg" /></p>
    <p style="text-align: justify;"><strong>எந்த பேச்சுவார்த்தையும் நடைபெறவில்லை</strong></p>
    <p style="text-align: justify;">இந்நிலையில் உயர் நீதிமன்ற ஆணையை மீறி சுற்றறிக்கை அனுப்பிய போக்குவரத்து துறைக்கு நீதிமன்ற அவமதிப்பு நோட்டீஸ் ஆம்னி பேருந்து உரிமையாளர் சங்கம் சார்பாக வழங்கப்பட்டுள்ளது. KCBTயில் ஆம்னி பேருந்துகள் இயக்குவது சம்பந்தமாக அரசு சார்பாக எங்களுடன் எந்த பேச்சு வார்த்தையும் நடைபெறவில்லை. கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்தில் 51 ட்ராவல்ஸ் அலுவலகங்களும், 80 &nbsp;பயணிகளை ஏற்றும் இடமும், &nbsp;320 பஸ் நிறுத்தி வைக்கும் இடம் &nbsp;ஆக மொத்தம் 400 ஆம்னி பேருந்துகள் நிறுத்துவதற்கான வசதி கோயம்பேடு ஆம்னி பேருந்து நிலையத்திலே உள்ளது.</p>
    <p><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/09/28/c510c4bff152098f0b336fc3b94f09281695871708730113_original.jpg" /></p>
    <p style="text-align: justify;">ஆகையால் மாண்புமிகு தமிழக முதல்வர் அவர்கள் தலையிட்டு ஆம்னி பேருந்துகளில் 30 முதல் 90 நாட்களுக்கு முன்னே முன்பதிவு செய்துள்ள பயணிகளின் பயணங்கள் &nbsp;தடைப்படாமல் இருக்க போக்குவரத்து துறை மற்றும் CMDA &nbsp;உத்தரவு வழங்குமாறு கேட்டுக்கொள்கிறோம் &nbsp;என தெரிவித்துள்ளார். &nbsp;இன்று முதல் ஆம்னி பேருந்துகள் கிளாம்பாக்கத்தில் இருந்து செல்ல வேண்டுமென &nbsp;அரசு சார்பில் அறிவித்துள்ள நிலையில், &nbsp;ஆம்னி பேருந்துகள் கோயம்பேட்டிலிருந்து இயக்க அனுமதி அளிக்க வேண்டும் என அதன் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளதால் பயணிகள் குழப்பம் அடைந்துள்ளனர்</p>

    Source link