Tag: Nepotism

  • Actor Uday Kiran committed suicide due to nepotism like Sushant Singh Rajput hero of the film K. Balachander
    Actor Uday Kiran committed suicide due to nepotism like Sushant Singh Rajput hero of the film K. Balachander


    நெப்போடிசம் உலக அளவில் அனைத்து இடங்களிலும் காணப்படுகின்றது. குறிப்பாக பணம் அதிகம் புழங்கும் அரசியல் மற்றும் சினிமாவில்தான். இதனாலே இந்த இரண்டு துறைகளிலும் நெப்போடிசம் எப்போதும் ஓங்கே இருக்கின்றது. இந்திய அரசியலில் நெப்போடிசத்தை எதிர்த்து அரசியல் கட்சி தொடங்கியவர்கள் இறுதியில் நெப்போடிசத்திற்கு இரையாகிப்போன வரலாறு தொடங்கி கண் முன் வாழும் சாட்சியங்கள் வரை உள்ளனர். 
    அதேபோல் சினிமாவில் நெப்போடிசம் என்பதும் பல நல்ல நடிகர்களை சினிமாவில் இருந்து வெளியேற்றி அவர்களை தற்கொலைக்கு ஆளாக்கியுள்ளது. இதற்கு சிறந்த உதாரணம் என்றால், பாலிவுட் சினிமாவில் வளர்ந்து வந்த நாயகன் சுஷாந்த் சிங். இவர் கடந்த 2020ஆம் ஆண்டு தற்கொலை செய்துகொண்டார். இவரது தற்கொலைக்கு முக்கிய காரணமாக கூறப்பட்டது, பாலிவுட் சினிமாவில் ஆதிக்கம் செலுத்திய நெப்போடிசம்தான். ஹிந்தி சினிமா முழுக்க முழுக்க கான்கள் மற்றும் கபூர்களின் கரங்களில் இருந்தது, இருக்கின்றது. இவர்களுக்கு அடுத்து இந்த சினிமா இவர்களின் வாரிசுகள் வசம் வரவேண்டும் என்ற நிலையை ஆதிக்கம் செலுத்திவரும் கான்களும், கபூர்களும் தொடர்ந்து ஏற்படுத்தி வருகின்றனர். 
    தற்கொலை செய்துகொண்ட சுஷாந்த் சிங் மிகத் திறமையான நடிகர். இவர் நடித்த பல படங்கள் பாலிவுட்டில் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் வெற்றி பெற்றது. இவரது நடிப்பில் இந்தியா முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்று மெகா ஹிட் கொடுத்த படம் என்றால் அது எம்.எஸ். தோனி அண்டோல்டு ஸ்டோரி படம்தான். இந்த படத்தில் தோனியாகவே வாழ்ந்திருந்தார் சுஷாந்த். ரசிகர்களை தோனியின் அருகில் அழைத்துச் சென்றது மட்டும் இல்லாமல், தோனியை ரசிகர்களுக்கு மேலும் நெருக்கம் ஆக்கியது சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் நடிப்பு. இவரது தற்கொலை இந்தியா முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இன்னும் சொல்லப்போனால் இது தற்கொலையே இல்லை கொலை என பலரும் இன்று வரை பொதுவெளியில் கூறிவருகின்றனர். 
    வட இந்திய சினிமா என்றாலே ஹிந்தி சினிமா மட்டும்தான் என்ற நிலை உருவாகியுள்ள நிலையில், தென்னிந்திய சினிமாக்கள் தமிழ் சினிமா, மலையாள சினிமா, கன்னட சினிமா மற்றும் தெலுங்கு சினிமா எனவகைப்பட்டுள்ளது. இப்படியான நிலையில் தென்னிந்தியாவில் நெப்போடிசத்தினால் ஒரு நடிகர் தற்கொலை செய்துள்ளார் என்று கூறினால் நம்புவீர்களா? ஆமாம். 
    தெலுங்கு சினிமாவில் இன்றைக்கு ஆதிக்கம் செலுத்தி வருவது, சிரஞ்சீவி, நாகர்ஜுனா, வெங்கடேஷ், என்.டி.ஆர் மற்றும் தில் ராஜூ குடும்பங்களின் கரங்களில் உள்ளது. இவர்கள் கண் அசைவில்தான் அனைத்துமே நடைபெற்று வருகின்றது. இவர்கள் ஆதிக்கத்திற்கு மத்தியில், சித்திரம் என்ற படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் எண்ட்ரி கொடுத்தவர் உதய் கிரண். இவர் எந்த சினிமா பின்புலமும் இல்லாதவர். இவரது படங்கள் தொடர்ந்து ஹிட் அடிக்க, தெலுங்கு சினிமாவே திரும்பிப் பார்த்தது. இதனால் இவரை தனது மகளுக்கு திருமணம் செய்து வைக்க சிரஞ்சீவி முடிவெடுக்கின்றார். ஆனால் இந்த திருமணத்திற்கு பின்னால் இருக்கும் சூழ்ற்சியை தெரிந்து கொண்ட உதய் கிரண், திருமணத்தை நிச்சயதார்த்தத்துடன் நிறுத்துகின்றார். 
    இதன் பின்னர் இவரை தெலுங்கு சினிமா உலகம் ஓரம் கட்டியது. இதனால் இவருக்கு அட்வான்ஸ் கொடுத்த தயாரிப்பாளர்களே அட்வான்ஸை திருப்பி வாங்கிக்கொண்டனர். இப்படியான நிலையில், உதய் கிரண் கடந்த 2014ஆம் ஆண்டு தற்கொலை செய்துகொண்டார். இவர் கே.பாலச்சந்தர் இயக்கிய அவரது 101வது மற்றும் கடைசி தமிழ் திரைப்படமான பொய் படத்தில் நடித்துள்ளார். 
     

    மேலும் காண

    Source link

  • RJ Balaji: கோலிவுட்டிலும் நெப்போடிஸம்! விஜய் சேதுபதி போன்றவர்கள் எங்களை ஊக்குவிக்கிறார்கள் – ஆர்.ஜே.பாலாஜி
    RJ Balaji: கோலிவுட்டிலும் நெப்போடிஸம்! விஜய் சேதுபதி போன்றவர்கள் எங்களை ஊக்குவிக்கிறார்கள் – ஆர்.ஜே.பாலாஜி


    <p>கோலிவுட்டில் நெப்போடிஸம் குறித்து நடிகர் ஆர்.ஜே பேசியுள்ள கருத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p>
    <h2><strong>ஆர்.ஜே பாலாஜி</strong></h2>
    <p>எல்.கே.ஜி , மூக்குத்தி அம்மன், ரன் பேபி ரன் உள்ளிட்டப் படங்களில் நடித்த ஆர்.ஜே பாலாஜி தற்போது சிங்கப்பூர் சலூன் படத்தில் நடித்துள்ளார். ஆர்.ஜே&nbsp;<span class="Y2IQFc" lang="ta">பாலாஜி, சத்யராஜ், லால், கிஷன் தாஸ், மீனாட்சி சவுத்ரி, அன் ஷீத்தல், தலைவாசல் விஜய், ஜான்&nbsp;<a title="விஜய்" href="https://tamil.abplive.com/topic/vijay" data-type="interlinkingkeywords">விஜய்</a>, ரோபோ சங்கர் உள்ளிட்டவர்கள் இந்தப் படத்தில் நடித்துள்ளார்கள். </span><span class="Y2IQFc" lang="ta">விவேக் மெர்வின் இசையமைத்து ஐசரி கணேஷ் இந்தப் படத்தை தயாரித்துள்ளார். </span></p>
    <p><span class="Y2IQFc" lang="ta">சிங்கப்பூர் சலூன் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. வரும் ஜனவரி 25 ஆம் தேதி இப்படம் திரைக்கு வர இருக்கிறது.&nbsp; சொந்தமாக சலூன் கடை வைத்து ஒரு சிறந்த ஹேர் ஸ்டைலிஸ்ட் ஆக வேண்டும் என்று ஆசைப்படும் ஒருவன் எதிர்கொள்ளும் சவால்களை மையமாக வைத்து இந்தப் படம் எடுக்கப் பட்டுள்ளது.</span></p>
    <p><span class="Y2IQFc" lang="ta">தற்போது ஆர்.ஜே. பாலாஜி சிங்கப்பூர் சலூன் படத்தின் ப்ரோமோஷன் வேலைகளில் பிஸியாக இருந்து வருகிறார். படம் குறித்தும் தனது சினிமா கரியர் குறித்தும் பல்வேறு கருத்துக்களை அவர் பகிர்ந்துகொண்டு வருகிறார். அவற்றில் சிலவற்றைப் பார்க்கலாம்.</span></p>
    <h2><strong><span class="Y2IQFc" lang="ta">இந்தியன் 2 இல் நடிக்க மறுத்தது ஏன் ?</span></strong></h2>
    <p><span class="Y2IQFc" lang="ta"><a title="கமல்ஹாசன்" href="https://tamil.abplive.com/topic/kamal-haasan" data-type="interlinkingkeywords">கமல்ஹாசன்</a> நடித்து ஷங்கர் இயக்கியுள்ள இந்தியன் 2 படத்தில் ஆர். ஜே பாலாஜி நடிக்க இருந்த நிலையில் பின் இந்தப் படத்தில் அவர் நடிக்காமல் போகும் சூழல் ஏற்பட்டது. இதுகுறித்து பேசிய ஆர். ஜே பாலாஜி&nbsp; &ldquo; இந்தியன் 2 படத்திற்கான நடிகர்களைத் தேர்வு செய்யும்போது இயக்குநர் ஷங்கர் எனக்கு ஃபோன் செய்தார், மற்ற கதாபாத்திரங்களுக்கு எல்லாம் தான் ஆடிஷன் வைத்து நடிகர்களை தேர்வு செய்திருப்பதாகவும் ஒரு கதாபாத்திரத்தில் மட்டும் முதலில் இருந்து என்னுடைய பெயரை எழுதியிருப்பதாக தெரிவித்தார்.</span></p>
    <p><span class="Y2IQFc" lang="ta"> நானும் அந்தப் படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்தேன். ஆனால் இந்தியன் 2 படத்தின் வேலைகள் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது. இதற்கிடையில் நான் எல்.கே ஜி படத்தை இயக்கிவிட்டேன். இந்தியன் 2 படத்தின் படப்பிடிப்பு தொடங்கியபோது ஷங்கர் என்னை அழைத்தார். அப்போது நான் என்னுடைய கரியரை திட்டமிட்டிருந்த நிலையில் இந்த கதாபாத்திரத்தில் நடிப்பது சரியாக இருக்காது என்று அவரிடம் சொன்னேன். அவரும் என்னைப் புரிந்துகொண்டு படம் தாமதமானது தன்னுடைய பொறுப்பு என்று எடுத்துக் கொண்டார். எனக்கு ஆல் தி பெஸ்ட் சொல்லிவிட்டு ஃபோனை வைத்தார்.&rsquo; என்று அவர் தெரிவித்தார்.</span></p>
    <h2><strong><span class="Y2IQFc" lang="ta">இவன் சும்மாவே பேசுவான்</span></strong></h2>
    <p><span class="Y2IQFc" lang="ta">திரைத்துறையில் நெப்போடிஸம் குறித்து பேசிய போது ஆர்.ஜே பாலாஜி இப்படி கூறினார் &ldquo; நெப்போடிஸம் பாலிவுட்டில் மட்டுமில்லை&nbsp; எல்லா இடத்திலும் இருக்கிறது. தெலுங்கு சினிமாவில் நெப்போடிஸம் இருக்கிறது. இங்கு தமிழ் சினிமாவில் நெப்போடிஸம் இருக்கிறது. நான் எல்.கே.ஜி படத்தை இயக்கும் போது அந்தப் படத்தின் தயாரிப்பாளரிடம் நிறைய பேர் ஃபோன் செய்து &ldquo;இவன் எல்லாம் சும்மாவே பேசுவான் இவனை எதுக்கு ஹீரோ ஆக்குறீங்க&rdquo; என்று நிறைய பேர் சொல்லியிருக்கிறார்கள். </span></p>
    <p><span class="Y2IQFc" lang="ta">அப்படி சொன்னவர்கள் எல்லாம் ஏதோ ஒரு நடிகரோ? அல்லது தயாரிப்பாளரின் குழந்தைகள். இதை எல்லாம் கடந்து&nbsp; எந்த விதமான பின்னணியும் இல்லாமல் இங்கு நிறைய நபர்கள் இருக்கிறார்கள். விஜய் சேதுபதி எந்த விதமான சினிமா பின்புலத்தையும் சேர்ந்தவர் இல்லை . அவர்களைப் போன்றவர்கள் தான் என்னை மாதிரியான ஆட்கள் தொடர்ந்து சினிமாவில் முயற்சி செய்வதற்கு ஊக்கமளிக்கிறது &ldquo; என்று அவர் கூறினார்.</span></p>

    Source link