Tag: missing

  • நிலச்சரிவில் புதைந்த 2000 பேர்… 7900 பேரை வெளியேற்றும் அரசு… எங்கே தெரியுமா?

    நிலச்சரிவில் புதைந்த 2000 பேர்… 7900 பேரை வெளியேற்றும் அரசு… எங்கே தெரியுமா?

    ப‍ப்புவா நியூ கினியா நாட்டில் ஏற்பட்ட நிலச்சரிவில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரோடு புதைந்த நிலையில், 7900 பேரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    ஆஸ்திரேலியாவுக்கு வடக்கு பகுதியில் உள்ள மிகப்பெரிய தீவு நாடான ப‍ப்புவா நியூ கினியாவில் கடந்த 24ஆம் தேதி வெள்ளிக்கிழமை மிகப்பெரிய அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இதில், நூற்றுக்கணக்கான வீடுகள் மண்ணில் புதைந்தன. ஆரம்பத்தில் நூற்றுக்கணக்கில் உயிரழப்பு ஏற்பட்டிருப்பதாக கணிக்கப்பட்டது.

    ஆனால், மண்ணை தோண்ட தோண்ட சடலங்களாக கிடைத்த‍தால், எத்தனை பேர் புதையுண்டார்கள் என்ற கேள்வி எழுந்தது. 650க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஐ.நா அவைக்கு, ப‍ப்புவா நியூ கினியா நாட்டின் தேசிய பேரிடர் ஆய்வு மையம் ஒரு கடிதம் எழுதியுள்ளது.

    அதில், கடந்த 24 ஆம் தேதி நிகழ்ந்த மிகப்பெரிய நிலச்சரிவில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மண்ணில் உயிரோடு புதைந்துள்ளதாக அதிர்ச்சியூட்டும் தகவலை தெரிவித்துள்ளது. பல அடி உயரத்திற்கு மண் குவிந்துள்ளதால், அவற்றை அகற்றிவிட்டு தேடும் பணி மிகவும் கடினமாக இருப்பதாகவும், பல்வேறு தரப்பினர், தொடர்ந்து தேடும் பணியில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மீட்புப் பணிக்கு கூடுதலாக படைகள் தேவைப்படுவதாகவும், நிலச்சரிவில் புதைந்த வீடுகளை முழுமையாக சோதனை செய்த பின்னரே எத்தனை பேர் உயிரிழந்திருக்கிறார்கள் என்ற முழு விவரம் தெரிய வரும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், அந்த பகுதியில் அடுத்த‍டுத்து பாறைகள், வெடிக்கும் சத்தம் கேட்பதாகவும், துப்பாக்கி சுடுவது போன்று பலத்த சத்தம் கேட்டு வருவதகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    மீண்டும் மிகப்பெரிய நிலச்சரிவு ஏற்பட வாய்ப்பு இருப்பதால், ஆபத்து ஏற்படும் என கணிக்கப்படும் பகுதிகளில் வசிக்கும் மக்கள் சுமார் 7900 பேரை வெளியேற்றும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாக அறிவித்துள்ளனர். மீண்டும் மற்றொரு நிலச்சரிவு ஏற்பட்டால், அது மிகப்பெரிய பாதிப்பாக மாறும் என்றும் அச்சம் தெரிவித்துள்ளனர்.

  • ஆன்லைன் மோசடியில் பணத்தை இழந்தவர்களுக்கு மீண்டும் கிடைத்த பணம் – கவனமாக இருங்கள்

    ஆன்லைன் மோசடியில் பணத்தை இழந்தவர்களுக்கு மீண்டும் கிடைத்த பணம் – கவனமாக இருங்கள்

    கரூர் மாவட்டத்தில் ஆன்லைன் மோசடியில் பணத்தை இழந்தவர்களுக்கும், தொலைத்த செல்போன் மீட்டு உரியவரிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
     

     
    கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில், கடந்த எட்டு மாதங்களாக, கரூர் மாவட்டத்தில் ஆன்லைன் மோசடியில் பணத்தை இழந்தவர்களுக்கும், செல்போனை தொலைத்தவர்களுக்கும் மீட்டு வழங்கும் நிகழ்ச்சி கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரபாகர் தலைமையில் நடைபெற்றது.
     

     
    இந்த நிகழ்ச்சியில் க்ரைம் பிரான்ச் காவல் ஆய்வாளர் அம்சவேணி, ஏடிஎஸ்பி பிரேம் ஆனந்த், காவல் உதவி ஆய்வாளர் சுதர்சன் உள்ளிட்ட காவல்துறை அதிகாரிகள், பணத்தை தொலைத்த பொது மக்கள் என 50க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.  இந்த நிகழ்வில் ஆன்லைனில் பணம் மோசடியில் பணத்தை இழந்த ஏழு பேருக்கு ரூபாய் ஒரு கோடியே 7 லட்சத்து 5 ஆயிரத்து 5 ரூபாய் மதிப்பிலான பணம் மீட்கப்பட்டு, உரியவர்களுக்கு ஒப்படைக்கப்பட்டது.
     

     
    அதே போல ரூபாய் 23 லட்சம் மதிப்பிலான 123 செல்போன்களை தொலைத்தவர்களுக்கு, அவர்களது செல்போனை மீட்டு உரியவரிடம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரபாகர் ஒப்படைத்தார். மேலும், இனிவரும் காலங்களில் இது போன்ற சம்பவங்களில் அஜாக்கிரதையாக இருக்காமல், கவனமாக இருக்க வேண்டும் என ஆலோசனையும் வழங்கினார்.
     
     
     

    Source link