Tag: minister masthan

  • Minister Gingee KS Masthan says Lets see how Sarathkumar’ 2 o clock dream will come true – TNN | சரத்குமார் 2 மணிக்கு கண்ட கனவு எப்படி பலிக்கும் என்பதை பார்க்கலாம்

    Minister Gingee KS Masthan says Lets see how Sarathkumar’ 2 o clock dream will come true – TNN | சரத்குமார் 2 மணிக்கு கண்ட கனவு எப்படி பலிக்கும் என்பதை பார்க்கலாம்

    விழுப்புரம்: சரத்குமார் ஏகப்பட்ட கனவு கண்டிறிக்கிறார். அவர் 2 மணிக்கு கண்ட கனவு எப்படி பலிக்கும் என்பதை பார்க்கலாம் என்றும் இரவு பகல் பாராமல் படத்தில் நடப்பது போன்றது அவரது கனவு என அமைச்சர் மஸ்தான் விமர்சனம் செய்துள்ளார்.
     
    புகைப்பட கண்காட்சி
     
    விழுப்புரம் புதிய பேருந்து நிலையத்தில் செய்தி மக்கள் தொடர்பு துறை மூலமாக கடந்த இரண்டரை ஆண்டுகளில் முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசால் கொண்டு வந்த திட்டங்கள் குறித்த புகைப்பட கண்காட்சியை சிறுபான்மையின நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் கலந்து கொண்டு துவக்கி வைத்து புகைப்பட கண்காட்சியை பார்வையிட்டார். புகைப்பட கண்காட்சியில் ஆட்சியர் பழனி திமுக சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன் உள்ளிட்ட அரசு துறை அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
     
    ஒவ்வொரு இல்லத்திலும் ஸ்டாலினின் குரல்
     
    அதனை தொடர்ந்து பேட்டியளித்த சிறுபான்மையின நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், தமிழகத்தில் கடந்த 30 ஆண்டுகளில் செய்ய வேண்டிய பணிகளை முதலமைச்சர் ஸ்டாலின் பதவியேற்ற மூன்றே ஆண்டுகளில் செய்து சாதனை படைத்துள்ளதாகவும், ஒவ்வொரு இல்லத்திலும் ஸ்டாலினின் குரல் ஒலிப்பதாகவும் எல்லோருக்கும் எல்லாம் என்ற அடிப்படையில் திட்டங்கள் சென்றடைவதாக தெரிவித்துள்ளார்.
     
    ஜாபர் சாதிக் விவகாரம் – சட்டம் தன் கடமையை செய்யும் 
     
    அதனை தொடர்ந்து பேசிய அவர் தமிழகம் மற்றும் புதுச்சேரியை ஸ்டாலின் பாதையில் கொண்டு செல்ல மக்கள் தயாராகி விட்டதாகவும், சட்டத்தை மதிக்கிறது தான் திமுகவின் அடிப்படை கொள்கை ஜாபர் சாதிக் விவகாரத்தில் சட்டம் தன் கடமையை செய்யும் என்றும் சட்டரீதியாக தான் எல்லாத்தையும் சந்திக்க வேண்டும் என முதலமைச்சரின் கருத்தாக உள்ளது என கூறினார்.
     
    2 மணிக்கு கண்ட கனவு எப்படி பலிக்கும்
     
    சரத்குமார் ஏகப்பட்ட கனவு கண்டிறிக்கிறார் அவர் 2 மணிக்கு கண்ட கனவு எப்படி பலிக்கும் என்பதை பார்க்கலாம் என்றும் இரவு பகல் பாராமல் படத்தில் நடப்பது போன்றது அவரது கனவு என அமைச்சர் மஸ்தான் தெரிவித்துள்ளார். 
     

    மேலும் காண

    Source link

  • என்னால் மூச்சு விட முடியல…என்ன காப்பாத்துங்க… மலேசியாவிலிருந்து கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்ட இளைஞர்

    என்னால் மூச்சு விட முடியல…என்ன காப்பாத்துங்க… மலேசியாவிலிருந்து கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்ட இளைஞர்


    <p style="text-align: justify;"><strong>கள்ளக்குறிச்சி:</strong> மலேசியாவில் வேலைக்கு சென்ற இடத்தில் உடல்நிலை சரியில்லாததால், தன்னை தாயகம் அழைத்து வர வேண்டுமென முதலமைச்சருக்கு கண்ணீர் மல்க வீடியோ வெளியிட்ட இளைஞர்.</p>
    <p style="text-align: justify;">கள்ளக்குறிச்சி மாவட்டம் ரிஷிவந்தியம் அருகே உள்ளது மண்டகப்பாடி கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் பிரவீன். இவர் கடந்த இரண்டாம் தேதி மலேசியாவில் வேலைக்கு சென்றுள்ளார். ஆனால் அங்கு வேலைக்கு சென்ற நாள் முதல் தனக்கு மலேசியாவின் தட்பவெப்ப நிலை ஒத்துப்போகவில்லை எனவும்,இதன் காரணமாக உடம்பில் கொப்பளங்கள் வருகிறது எனவும், மூச்சு திணறல் ஏற்படுகிறது என்றும்&nbsp; தமது பெற்றோர்களிடம் தெரிவித்த பிரவீன் குமார், மேலும் தன்னை உடனடியாக வீட்டிற்கு அழைத்து வரும்படி கூறியுள்ளார். ஆனால் ஏஜென்டு மூலமாக வேலைக்குச் சென்றதால் அழைக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனை அடுத்து தமிழ்நாடு முதலமைச்சருக்கும், வெளிநாடு வாழ் நலத்துறை அமைச்சருக்கும், தொகுதியின் சட்டமன்ற உறுப்பினருக்கும் கண்ணீர் மல்க வீடியோ ஒன்றை பதிவு செய்துள்ளார் இளைஞர் பிரவீன் குமார் .</p>
    <p style="text-align: justify;">அந்த வீடியோவில், தான் மலேசியாவிற்கு வேலைக்காக வந்ததாகவும் ஆனால் வந்த இடத்தில் தனக்கு உடல்நிலை சரியில்லை எனவும் உடலில் கொப்பளங்கள் வருகிறது எனவும் கூறி தன்னை உடனடியாக காப்பாற்ற வேண்டும் என ரிஷிவந்தியம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருக்கும், வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் மஸ்தான் அவர்களுக்கும், தமிழ்நாடு முதலமைச்சருக்கும் கண்ணீர் மல்க கோரிக்கை வைத்துள்ளார். இதே போல தனது மகனை மீட்டு தர வேண்டும் என பிரவீன் குமாரின் தாய் தந்தை ஆகிய இருவரும் கைகூப்பி மண்டியிட்டு வீடியோ ஒன்றையும் பதிவு செய்துள்ளனர். எனவே உடனடியாக சம்பந்தப்பட்ட துறை சார்ந்த அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு இளைஞரை மீட்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.</p>

    Source link

  • Minister Gingee Masthan says I appreciate AIADMK Edappadi Palaniswami opposition to CAA – TNN | எடப்பாடி பழனிசாமி சிஏஏ சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தற்கு நான் பாராட்டுகிறேன்

    Minister Gingee Masthan says I appreciate AIADMK Edappadi Palaniswami opposition to CAA – TNN | எடப்பாடி பழனிசாமி சிஏஏ சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தற்கு நான் பாராட்டுகிறேன்


    விழுப்புரம்: திண்டிவனம் அடுத்த ஓமந்தூரில் முன்னாள் தமிழக முதல்வர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாரின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது மணிமண்டபத்தில் உள்ள திருவுருவ சிலைக்கு அமைச்சர் மஸ்தான் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
    தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாரின் 130வது பிறந்த நாளை முன்னிட்டு அரசு சார்பில், இன்று காலை சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடு வாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் ஓமந்தூர் ராமசாமி ரெட்டியாரின் திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். இதில் பாராளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார், மாவட்ட ஆட்சியர் பழனி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் தீபக் சிவாச், கூடுதல் ஆட்சியர் சுருதன் ஜெய் நாராயணன், சார் ஆட்சியர் தில்யான் ஷி நிகம், திமுக மாவட்ட அவைத் தலைவர் சேகர், மாவட்ட பொருளாளர் ரமணன், மரக்காணம் ஒன்றிய குழு தலைவர் தயாளன், துணைத் தலைவர் பழனி மற்றும் ரெட்டி நல சங்க நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
    அமைச்சர்  செஞ்சி மஸ்தான் தெரிவிக்கையில்,
    விழுப்புரம் மாவட்டத்தில், சென்னை மாகாணம் முன்னாள் முதலமைச்சர் திரு.ஓமந்தூர் பி. ராமசாமி ரெட்டியார் அவர்களின் 130-வது பிறந்தநாள் விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. திண்டிவனம் வட்டம், ஓமந்தூர் கிராமத்தில் 1895ஆம் ஆண்டு பிறந்த திரு.ஓமந்தூர் பி.ராமசாமி ரெட்டியார் அவர்கள் சட்டம் பயின்று இளம் வயதிலேயே சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டார். சுதந்திர இந்தியாவின் சென்னை மாகாணத்தின் முதல் முதலமைச்சராக 1947 முதல் 1949 வரை பதவி வகித்தார்.
    விவசாயிகள் மற்றும் ஏழை, எளியோர் முன்னேற்றத்திற்காக சிந்தித்து உழைப்பு, நேர்மை, கண்டிப்பு கட்டுப்பாடு, விவசாயத்தில் ஆர்வம், சிக்கனம், சன்மார்க்கம், நீதி தவறாமை ஆகிய குறிக்கோளுடன் ஆட்சி நடத்தியவர் சட்டத்திற்கு முன் அனைவரும் சமம் என கருதியவர். எதையும் வெளிப்படையாகப் பேசும் துணிச்சல் மிக்கவர், சிறந்த எழுத்தாளர், சமூக சேவகர், நேர்மையும் துணிச்சலும் மிக்க கறைபடாத அரசியல்வாதியாகப் போற்றப்படும் இவர் 1970-ம் ஆண்டில் தனது 75-வது வயதில் காலமானார். தமிழக அரசு இவரது நினைவாக சொந்த ஊரான ஓமந்தூரில் மணிமண்டபம் அமைத்துள்ளது.
    தமிழ்நாடு அரசு அன்னாரது நினைவாக தபால் தலையும் வெளியிட்டுள்ளது. இன்றைய தினம், ஓமந்தூரில் சென்னை மாகாணம் முன்னாள் முதலமைச்சர் ஓமந்தூர் பி.ராமசாமி ரெட்டியார் அவர்களின் 130-வது பிறந்தநாளையொட்டி, மாவட்ட நிர்வாகத்தின் சார்பில், அன்னாரது திருவுருவச் சிலைக்கு மலர் மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது என சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் தெரிவித்தார். தொடந்து பேசிய அவர், “அதிமுக எடப்பாடி பழனிசாமி சிஏஏ சட்டத்திற்கு அன்றைக்கு ஆதரவு அளித்தார், தற்போதாவது மக்களின் நலனை கருத்தில் கொண்டு எதிர்ப்பு தெரிவித்தற்கு நான் பாராட்டுகிறேன்” என கூறினார்.
     

    மேலும் காண

    Source link

  • கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப்போட்டி அலங்கார ஊர்தி… கொடியசைத்து துவக்கி வைத்த அமைச்சர் மஸ்தான்

    கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப்போட்டி அலங்கார ஊர்தி… கொடியசைத்து துவக்கி வைத்த அமைச்சர் மஸ்தான்


    <p style="text-align: justify;">சிறுமான்மையினர் நலன்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், மாவட்ட ஆட்சித்தலைவர் டாக்டர் சி.பழனி தலைமையில், விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் இரா.இலட்சுமணன்&nbsp; முன்னிலையில், விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் பெருந்திட்ட வளாக உள்விளையாட்டரங்கில், தமிழ்நாட்டில் தேசிய அளவிலான கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப்போட்டிகள் நடைபெறவுள்ளதை முன்னிட்டு, பொதுமக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்திடும் விதமாக, விழுப்புரம் மாவட்டத்திற்கு வருகைபுரிந்த விழிப்புணர்வு அலங்கார ஊர்தியினை கொடியசைத்து துவக்கி வைத்து, விழிப்புணர்வு மாரத்தான் மற்றும் பல்வேறு போட்டிகளில் வெற்றிபெற்றவர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கினார்.</p>
    <p style="text-align: justify;">அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவிக்கையில், &nbsp;தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், அறிவினை வளர்க்கும் கல்வியினைப்போல், உடல்நலனை பாதுகாக்கும் விளையாட்டினை அனைவரும் பின்பற்றிட வேண்டும் என்று விளையாட்டுத்துறையில் பல்வேறு சிறப்புத்திட்டங்களை தொடர்ந்து செயல்படுத்தி வருகிறார்கள். இதுமட்டுமல்லாமல், தமிழ்நாட்டில் கிராமப்புறங்களில் உள்ள இளைஞர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி பயிலும் மாணவர்கள் அதிகளவில் விளையாட்டுப்போட்டிகளிலில் பங்கேற்றிடவும், தங்கள் விளையாட்டுத்திறனை மேம்படுத்திடும் வகையில், மாவட்டந்தோறும் விளையாட்ட மைதானம், நிதியுதவி போன்றவையும் வழங்கி வருகிறார்கள்.</p>
    <p style="text-align: justify;">மேலும், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் அவர்களின் முயற்சியினால், சர்வதேச மற்றும் தேசிய அளவிலான விளையாட்டுப்போட்டிகள் தமிழ்நாட்டில் நடத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம், தமிழ்நாட்டில் இளைஞர்கள் மற்றும் மாணவ, மாணவியர்கள் பெருமளவில் விளையாட்டுப்போட்டிகளில் பங்கேற்று சாதனை புரிந்து வருகிறார்கள்.</p>
    <p style="text-align: justify;">அதன் தொடர் நிகழ்வாக, 6வது கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டு போட்டிகள் தமிழ்நாட்டில் 2024 ஜனவரி 19 முதல் 31ஆம் தேதி வரை சென்னை, திருச்சி, மதுரை மற்றும் கோயம்புத்தூர் ஆகிய இடங்களில் நடைபெறவுள்ளது. இப்போட்டிகளில் களரிபயட்டு மற்றும் மல்லர்கம்பம் விளையாட்டுகள் திருச்சி மாநகரிலும் கூடைப்பந்து மற்றும் நாக்டா விளையாட்டுகள் கோயம்புத்தார் மாநகரிலும், கட்கா மற்றும் கோ-கோ விளையாட்டு போட்டுகள் மதுரை மாநகரிலும்,</p>
    <p style="text-align: justify;">சிலம்பம் விளையாட்டுப் போட்டிகள் அனைத்து போட்டிகள் நடைபெறும் இடங்களிலும் அறிமுகப் போட்டியாக நடைபெறவுள்ளது. இதரப் போட்டிகள் அனைத்தும் சென்னை மாநகரில் நடைபெறவுள்ளது. தேசிய அளவிலான கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் தமிழ்நாட்டில் நடைபெறுவதை பொதுமக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம் மாவட்டந்தோறும் விழிப்புணர்வு அலங்கார ஊர்தி கொண்டு செல்லப்பட்டு வருகிறது. அதனடிப்படையில் இன்றைய தினம், விழுப்புரம் மாவட்டத்திற்கு வருகை புரிந்த கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப்போட்டி – 2023 விழிப்புணர்வு அலங்கார ஊர்தி, பொதுமக்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர்களின் பார்வையிடும் விதமாக கொடியசைத்து துவக்கி வைக்கப்பட்டது.</p>
    <p style="text-align: justify;">மேலும், கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப்போட்டியின் டுழுபுழுஇ ஆயுளுஊழுவுஇ வுழுசுஊர் ரூ வுர்நுஆநு ளுழுNபு காட்சிப்படுத்தப்பட்டது. தொடர்ந்து, கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப்போட்டியினை முன்னிட்டு, விழுப்புரம் மாவட்டத்தில், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான விழிப்புணர்வு மாரத்தான் பள்ளிகள் அளவில் ஆண்கள், பெண்கள் என இரு பிரிவுகளாக கட்டுரைப்போட்டி, ஒவியப்போட்டி, குறள் ஒப்புவித்தல், பேச்சுப்போட்டி போன்ற விழிப்புணர்வு போட்டிகள் மற்றும் முதியவர்களுக்கான தடகளப்போட்டிகள் நடத்தப்பட்டது. இப்போட்டிகளில் வெற்றி பெற்று முதல் மூன்று இடங்களைப் பிடித்த 33 நபர்களுக்கு பரிசு மற்றும் பாராட்டுச்சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.</p>
    <p style="text-align: justify;">முதல்வர் விளையாட்டுப்போட்டிகளில் பங்கேற்கும் விளையாட்டு வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு தொடர் பயிற்சிக்கான சிறந்த பயிற்சி வல்லுநர்கள் மற்றும் பயிற்சிக்கான நிதியுதவியினை வழங்குவதோடு, விளையாட்டுத்திறனில் சிறந்து விளையாட்டு வீரர்களை தேசிய, சர்வதேச அளவில் நடைபெறும் போட்டிகளில் பங்குபெறுவதற்கு தேவையான வாய்ப்பினையும் ஏற்படுத்திக்கொடுத்து வருகிறார்கள். எனவே, விழுப்புரம் மாவட்டத்தினைச் சேர்ந்த இளைஞர்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவியர்கள் அனைவரும் கட்டாயம் தங்கள் திறனுக்கேற்ற விளையாட்டினை தேர்ந்தெடுத்து அதில் தங்கள் திறனை மேம்படுத்திக்கொண்டு, சர்வதேச மற்றும் தேசிய அளவிலான விளையாட்டுப்போட்டிகளில் பங்கேற்று வெற்றிபெற்று, விழுப்புரம் மாவட்டத்திற்கும், தங்கள் பெற்றோர்களுக்கும் பெருமை சேர்த்திட வேண்டும் என அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்தார்.</p>

    Source link

  • Minister Gingee Masthan Says People From All Walks Of Life Should Celebrate Pongal With Joy – TNN | அனைத்து தரப்பு மக்களும் பொங்கல் திருநாளை மகிழ்வுடன் கொண்டாட வேண்டும்

    Minister Gingee Masthan Says People From All Walks Of Life Should Celebrate Pongal With Joy – TNN | அனைத்து தரப்பு மக்களும் பொங்கல் திருநாளை மகிழ்வுடன் கொண்டாட வேண்டும்

    சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான், மாவட்ட ஆட்சியர் டாக்டர் சி.பழனி தலைமையில் விழுப்புரம் மாவட்டம், செஞ்சி ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஆலம்பூண்டி ஊராட்சி, செஞ்சி பேரூராட்சி, வல்லம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வல்லம் ஊராட்சி, மயிலம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட வெங்கந்தூர் ஊராட்சி, திண்டிவனம் நகராட்சி மற்றும் ஒலக்கூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சாரம் ஊராட்சி ஆகிய இடங்களில் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாடும் வகையில், குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000/- ரொக்கப்பணம் மற்றும் பொங்கல் பரிசுத்தொகுப்புடன் வேட்டி, சேலையினை வழங்கினார்.
    அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவிக்கையில்,
    முதல்வர் தமிழர் திருநாள் பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாடும் விதமாக அனைத்து குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பங்களுக்கு ரூ.238.00 கோடி மதிப்பீட்டில் தலா 01 கிலோ பச்சரிசி, 01 கிலோ சர்க்கரை, ஒரு முழுக் கரும்பு மற்றும் ரூ.1,000/- ரொக்கப்பணத்துடன் வேட்டி, சேலை வழங்கப்படும் என உத்தரவிட்டார்கள். அதனடிப்படையில், தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், சென்னை ஆழ்வார்பேட்டையில், தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாடும் வகையில் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000/- ரொக்கப்பணம் மற்றும் பொங்கல் பரிசுத்தொகுப்பினை வழங்கி, பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கும் திட்டத்தினை துவக்கி வைத்தார்கள்.
    அதனை தொடர்ந்து, தமிழ்நாடு முழுவதும் அனைத்து நியாய விலை கடைகளிலும், பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அந்த வகையில், இன்றைய தினம், விழுப்புரம் மாவட்டத்தில், செஞ்சி ஊராட்சி ஒன்றியம், ஆலம்பூண்டி ஊராட்சி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பு, ரூ.1,000/- ரொக்கப்பணம் மற்றும் வேட்டி, சேலை வழங்கப்பட்டுள்ளது.

    விழுப்புரம் மாவட்டத்தில், செஞ்சி வட்டத்தில், 207 நியாய விலைக்கடைகள் மூலமாக, 89,110 குடும்ப அட்டைதாரர்களுக்கும், கண்டாச்சிபுரம் வட்டத்தில், 78 நியாய விலைக்கடைகள் மூலமாக, 44,381 குடும்ப அட்டைதாரர்களுக்கும், மரக்காணம் வட்டத்தில், 73 நியாய விலைக்கடைகள் மூலமாக, 35,361 குடும்ப அட்டைதாரர்களுக்கும், மேல்மலையனூர் வட்டத்தில், 106 நியாய விலைக்கடைகள் மூலமாக, 41,700 குடும்ப அட்டைதாரர்களுக்கும், திருவெண்ணெய்நல்லூர் வட்டத்தில், 84 நியாய விலைக்கடைகள் மூலமாக, 44,092 குடும்ப அட்டைதாரர்களுக்கும், திண்டிவனம் வட்டத்தில், 216 நியாய விலைக்கடைகள் மூலமாக, 99,688 குடும்ப அட்டைதாரர்களுக்கும், வானூர் வட்டத்தில், 110 நியாய விலைக்கடைகள் மூலமாக, 52,730 குடும்ப அட்டைதாரர்களுக்கும், விக்கிரவாண்டி வட்டத்தில், 159 நியாய விலைக்கடைகள் மூலமாக, 82,571 குடும்ப அட்டைதாரர்களுக்கும், விழுப்புரம் வட்டத்தில், 221 நியாய விலைக்கடைகள் மூலமாக, 1,25,220 குடும்ப அட்டைதாரர்களுக்கும், 434 இலங்கை முகாம்வாழ் தமிழர் குடும்ப அட்டைதாரர்கள் என மொத்தம் 1,254 நியாய விலைக்கடைகள் மூலமாக, 6,15,287 குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா 01 கிலோ பச்சரிசி, 01 கிலோ சர்க்கரை, ஒரு முழுக் கரும்பு மற்றும் ரூ.1,000/- ரொக்கப்பணத்துடன் வேட்டி, சேலை வழங்கப்படவுள்ளது.
    தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், சென்னை மற்றும் தென்மாவட்டங்களில் வெள்ள பாதிப்புகள் ஏற்பட்டதால், அம்மாவட்ட மக்களின் வாழ்வாதாரம் மற்றும் நலனை காத்திடும் வகையில் நிதியுதவி, விவசாய பயிர்களுக்கு நிதியுதவி, கால்நடை பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதியுதவி என பல்வேறு நிதியுதவிகளை வழங்கி உள்ளார்கள். இப்படியொரு நிதிநெருக்கடி உள்ள நிலையிலும் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை ஏழை, எளிய மக்கள், நடுத்தர மக்கள், விவசாய பெருமக்கள் மற்றும் உழைக்கும் வர்கத்தினர் அனைவரும் மனமகிழ்வுடன் கொண்டாட வேண்டும் என்ற உயர்ந்த எண்ணத்தில், பொங்கல் பரிசுத்தொகுப்பு மற்றும் ரொக்கப்பணம் வழங்கப்படும் என அறிவித்தார்கள். இதன் மூலம், அனைத்து தரப்பு மக்களும் பொங்கல் திருநாளை சிறப்பாக கொண்டாடும் நிலை உருவாகியுள்ளது.

    முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்கள், ஆட்சிப் பொறுப்பிலிருந்தபொழுது, அனைத்து சமூகத்தினரும் ஒற்றுமையுடன் பொங்கல் திருநாளை கொண்டாட வேண்டும் என்ற நோக்கத்தில் சமத்துவ பொங்கல் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில்தான் அனைவரும் சமம் என்ற மனப்பான்மையுடன் அனைத்து தரப்பு மக்களும் பொங்கல் திருநாளை சிறப்புடனும், மனமகிழ்வுடன் கொண்டாட வேண்டும் என்ற நோக்கத்தில், பொங்கல் பரிசுத்தொகுப்பு வழங்கம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதுமட்டுமல்லாமல், பொங்கல் திருநாளை முன்னிட்டு, கலைஞர் மகளிர் உரிமைத்தொகையும் பொங்கல் தினத்திற்கு முன்பாகவே வழங்கப்படும் என அறிவித்துள்ளார்கள். தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் முக்கிய நோக்கம் அனைத்து தரப்பு மக்களும் பொங்கல் திருநாளை மகிழ்வுடன் கொண்டாடிட வேண்டும். எனவே, பொங்கல் பரிசுத்தொகுப்பு, வேட்டி, சேலை மற்றும் ரூ.1,000/- ரொக்கப்பணம் பெற்ற குடும்ப அட்டைதாரர்கள் தமிழர் திருநாளாம் பொங்கல் திருநாளை மனமகிழ்வுடன் சிறப்பாக கொண்டாடிட வேண்டும் என அமைச்சர் செஞ்சி.மஸ்தான் தெரிவித்தார்.

    Source link