Tag: mamitha baiju

  • Cinema Headlines today april 13th today Tamil cinema news vijay the greatest of all time goat bhavana mamitha baiju

    Cinema Headlines today april 13th today Tamil cinema news vijay the greatest of all time goat bhavana mamitha baiju


    நாளை சம்பவம்.. வெறித்தனமான அப்டேட் கொடுத்த VP … கோட் படத்தின் முதல் பாடல் நாளை ரிலீஸ்
    நாளை தமிழ் புத்தாண்டை நாளில் தி கோட் படத்தின் அப்டேட் வெளியாவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்து வரும் தி கோட் திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளது.  பிரஷாந்த், பிரபுதேவா, லைலா , சினேகா, மோகன், பிரேம்ஜி, வைபவ் எனப் பலர் இப்படத்தில் நடித்து வருகிறார்கள். யுவன் இசையமைத்துள்ளார். இந்நிலையில் தற்போது தி கோட் படத்தின் முதல் பாடல் நாளை தமிழ் புத்தாண்டு நாளில் வெளியாகும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது
    ஷூ திருடிய டெலிவரி பாய்க்கு ஆதரவு தெரிவித்த நடிகர் சோனு சூட் – குவியும் கண்டனங்கள்
    இந்தி,  தமிழ், தெலுங்கு, கன்னடம் என பல மொழிகளில் நடித்து இந்தியத் திரையுலகில் பிரபல நடிகராக வலம் வருபவர் சோனு சூட். எனினும் தன் நடிப்பைத் தாண்டி கொரோனா பெருந்தொற்று காலம் தொடங்கி தன் உதவிப் பணிகளுக்காக சோனு சூட் பெரிதும் அறியப்பட்டு வருகிறார். இந்நிலையில் இணையத்தில் வைரலான ஷூ திருடிய நபருக்கு ஆதரவாக சோனு சூட் தற்போது பதிவிட்டுள்ளது கலவையான விமர்சனங்களைப் பெற்று வருகிறது.
    விஜய் கட்டிய சாய்பாபா கோயிலில் தரிசனம்.. ஷோபா சந்திரசேகர் பற்றி ராகவா லாரன்ஸ் பகிர்ந்த தகவல்!
     நடிகர் விஜய் தன் தாய் ஷோபா சந்திரசேகருக்காக கட்டிக் கொடுத்துள்ள சாய்பாபா கோயிலுக்குச் சென்று நடிகர் ராகவா லாரன்ஸ் தரிசனம் செய்துள்ளார். சென்னை, கொரட்டூரில், 8 கிரவுண்ட் நிலத்தில் நடிகர் விஜய் தன் அம்மாவுக்காக சாய்பாபா கோயிலைக் கட்டிக் கொடுத்துள்ளார். இந்நிலையில் நடிகர் ராகவா லாரன்ஸ் இந்த சாய்பாபா கோயிலை நடிகர் விஜய்யின் தாய் ஷோபாவுடன் சென்று பார்வையிட்டு வீடியோ பகிர்ந்துள்ளார்.
    என்னைவிட அழகான பெண்கள் இருக்கிறார்கள்… தன்னடகத்தோடு பதில் சொன்ன ராஷ்மிகா மந்தனா
    தன்னைவிட எத்தனையோ அழகான, திறமையான பெண்கள் இருந்தும் இந்த வாய்ப்பு தனக்கு கிடைத்திருப்பதாக நடிகை ராஷ்மிகா மந்தனா மனம் திறந்து பேசியுள்ளார். கன்னட சினிமா  தொடங்கி, தெலுங்கு, இந்தி எனப் பயணித்து இந்திய சினிமாவில் நேஷனல் க்ரஷ் எனும் அடைமொழியுடன் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருபவர் நடிகை ராஷ்மிகா மந்தனா. பாக்ஸ் ஆஃபிஸிலும் இவரது திரைப்படங்கள் வசூல் சாதனை படைத்து வருகின்றன. இந்நிலையில் திரையுலகில் தன்னுடைய இடம், தனக்கு கிடைத்துள்ள வாய்ப்பு ஆகியவை பற்றி ராஷ்மிகா தற்போது பேசியுள்ளார்.
    பாலாவுடன் பணியாற்றியது பாக்கியம்.. நிறைவடைந்த வணங்கான் ஷூட்டிங்: அருண் விஜய் நெகிழ்ச்சி!
    பாலா -அருண் விஜய் காம்போவில் உருவாகி வந்த வணங்கான் திரைப்படத்தின் ஷூட்டிங் நேற்று நிறைவடைந்தது. சூர்யா நடிக்கவிருந்து பின் அருண் விஜய்க்கு இந்த வாய்ப்பு வந்து, பல சர்ச்சைகளைக் கடந்து தற்போது வெற்றிகரமாக எடுத்து முடிக்கப்பட்டுள்ள திரைப்படம் வணங்கான். ஜி.வி.பிரகாஷ் இப்படத்துக்கு இசையமைத்துள்ளார்.
     

    மேலும் காண

    Source link

  • Premalu actress Mamitha Baiju is to pair up with vishnu vishal in her next film

    Premalu actress Mamitha Baiju is to pair up with vishnu vishal in her next film


    மலையாள திரைப்படங்கள் ரசிகர்கள் மத்தியில் என்றுமே நல்ல ஒரு வரவேற்பை பெரும். அந்த வகையில் சமீபத்தில் வெளியான ‘மஞ்சும்மல் பாய்ஸ்’ படம் அமோகமான வரவேற்பை பெற்றது. அதை தொடர்ந்து மலையாளத்தில் வெளியான ‘பிரேமலு’ திரைப்படம் சக்கை போடு போட்டு வருகிறது. தென் மாவட்ட ரசிகர்களை ஒட்டுமொத்தமாக கவர்ந்த இப்படத்தை ஏற்கனவே தெலுங்கில் வெளியிடும் உரிமையை எஸ்.எஸ்.ராஜமௌலியின் மகன் கார்த்திகேயா பெற்றுள்ளார். அதை தொடர்ந்து தமிழிலும் டப்பிங் செய்யப்பட்டு மார்ச் 15ம் தேதி வெளியாக உள்ளது என தகவல்கள் தெரிவிக்கின்றன. இப்படம் தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் நல்ல ஒரு வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    ‘பிரேமலு’ படத்தின் ஹீரோயின் மமிதா பைஜு தான் தற்போது இளைஞர்களின் கனவு கன்னியாக இருந்து வருகிறார். ஏற்கனவே இவர் ஜி.வி. பிரகாஷ் நடிப்பில் வெளியான ‘ரிபெல்’ படத்தில் நடித்திருந்தார். அது மட்டுமின்றி இயக்குநர் பாலாவின் ‘வணங்கான்’ படத்தின் ஹீரோயினாக மமிதா பைஜு நடித்து வந்தார். படப்பிடிப்பின்போது பாலா தன்னை அடித்ததாக சர்ச்சையை ஏற்படுத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி பின்னர் முடிவுக்கு வந்தது. 
    ஆரம்ப காலகட்டத்தில் சிறுசிறு கதாபாத்திரங்களில் நடித்து வந்த மமிதா பைஜு, பிரேமலு படத்திற்கு பிறகு மிகவும் ஏராளமான படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். பொதுவாகவே மலையாள நடிகைகள் பலரும் தமிழ் சினிமாவில் மிகவும் பிரபலமான நடிகைகளாக வலம் வந்துள்ளனர். அந்த வரையில் மமிதா பைஜுவும் இடம்பெறுவர் என எதிர்பார்க்கப்படுகிறது. 

    அந்த வகையில் விஷ்ணு விஷாலை வைத்து ஏற்கனவே ராட்சன், முண்டாசுப்பட்டி உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குநர் ராம்குமார் மீண்டும் அவரை வைத்து ஒரு காதல் கலந்த ஃபேண்டஸி படம் ஒன்றை இயக்க உள்ளார். அப்படத்தில் நடிகர் விஷ்ணு விஷால் ஜோடியாக மமிதா பைஜு ஒப்பந்தமாகியுள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு கொடைக்கானலில் நடைபெற்று வருகிறது என்ற தகவலை விஷ்ணு விஷால் தனது சோசியல் மீடியா பக்கம் மூலம் பகிர்ந்துள்ளார்.
     கேரளாவின் கோட்டயம் பகுதியில் பிறந்த மமிதா பைஜு தற்போது கொச்சியில்  வசித்து வருகிறார். சிறு வயது முதலே நடனத்தின் மீது மிகுந்த ஆர்வம் கொண்டிருந்த மமிதாவுக்கு சிறு சிறு கதாபாத்திரங்களில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. சைக்காலஜி படிப்பை முடித்துள்ள மமிதா தமிழ் படங்களையும் அதிக அளவில் விரும்பி பார்ப்பாராம். அதனால் தமிழ் படங்களில் நடிப்பதில் எந்த ஒரு பிரச்சனையும் இல்லை என தெரிவித்துள்ளார். விரைவில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகையாக மமிதா பைஜு வலம் வருவார் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.     

    மேலும் காண

    Source link

  • Premalu Movie Review in tamil Naslen K. Gafoor and Mamitha Baiju Gireesh premalu malayalam Movie Review Rating

    Premalu Movie Review in tamil Naslen K. Gafoor and Mamitha Baiju Gireesh premalu malayalam Movie Review Rating


    கடந்த பிப்ரவரி 9 ஆம் தேதி மலையாளத்தில் வெளியாகிய படம் பிரேமலு. கிரீஷ் ஏ.டி இப்படத்தை இயக்கியுள்ளார். மமிதா பைஜு மற்றும் நஸ்லென் கே கஃபூர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்கள். இவர்களுடன் ஷியாம் மோகன், மீனாக்‌ஷி ரவீந்திரன், மேத்யு தாமஸ் உள்ளிட்டவர்கள் இணைந்து நடித்துள்ளார்கள். ஃபகத் ஃபாசில் இப்படத்தை தயாரித்துள்ளார். பிரேமலு படத்தின் முழு விமர்சனத்தைப் பார்க்கலாம்.

    பிரேமலு
    இயக்குநர் கிரீஷ் இயக்கத்தில் முன்னதாக வெளியான சூப்பர் ஷரண்யா படத்திற்கும் பிரேமலு படத்திற்கும் சில தொடர்புகளைப் பார்க்கலாம். இரண்டு படங்களின் முக்கிய கதாபாத்திரங்களின் இயல்பும் ஒன்று போல தான். கூச்ச சுபாவம் கொண்ட பெரியளவில் சாமர்த்தியங்களை வெளிப்படுத்தாதவர்களே  இப்படத்தின் கதாபாத்திரங்கள். இவர்கள் தெரியாமல் தங்களுடைய இயல்பில் இருந்து செய்யும் பல செயல்கள் நமக்கு நகைச்சுவையானதாக இருக்கும்.
    அடிக்கடி தவறு செய்பவர்களாகவும் தங்களுடைய நண்பர்களால் கேலி செய்யப்படுபவர்களாக நமது நட்பு வட்டத்தில் ஓரமாக இருப்பவர்களையே தனது படத்தின் முக்கிய கதாபாத்திரங்களாக மாற்றுகிறார் இயக்குநர் கிரீஷ்.இரண்டு படத்திற்கும் இருக்கும் ஒரு வித்தியாசம் என்றால் சூப்பர் ஷரண்யா படம்  கதாநாயகியை மையப்படுத்தியது என்றால் பிரேமலு படத்தில் ஒரு ஆணை மையப்படுத்தி இருக்கிறது.
    கதை

    குறைவான மதிப்பெண்கள் பெற்றதால் கேரளாவில் இருந்து தமிழ்நாட்டில் சேலத்தில் ஒரு சுமாரான கல்லூரியில் தனது படிப்பை முடித்துச் செல்கிறான் சச்சின். நான்கு ஆண்டுகளாக ஒருதலையாக காதலித்து வந்த பெண்ணிடம் ஒருவழியாக தைரியத்தை வரவழைத்து காதலை சொல்லி அவளால் நிராகரிக்கப்படுகிறான். எப்போதும் முட்டிக்கொண்டே இருக்கும் பெற்றோர்கள், சலிப்படைந்த தனது ஊரை விட்டு எப்படியாவது லண்டனுக்குச் சென்று தனது இந்த மிடில் கிளாஸ் வாழ்க்கையில் இருந்து விடுபட நினைக்கிறான். ஆனால் விதி அவனை விஸா கிடைக்காமல் தனது நண்பனுடன் கேட் பரீட்சைக்கு ஹைதராபாதில் கோர்ஸ் சேர வைக்கிறது.
    மறுபக்கம் ஹைதராபாதில் பெரிய சாஃப்ட்வேர் கம்பெனியில் வேலைக்கு சேர்கிறார் ரீனு. புதிதான வேலை, நண்பர்கள், கை நிறைய சம்பளம் என வாழ்க்கையை புதிதாக தொடங்கும் ரீனுவுக்கு ஒரே ஆசைதான். நல்ல பொறுப்பான, செட்டில் ஆன ஒரு ஆணை திருமனம் செய்துகொண்டு 30 வயதிற்குள் குழைந்தை பெற்றுக்கொள்ள வேண்டும்.
    லட்சியத்தோடு இருக்கும் ரீனுவும் இலக்கற்று சுற்றும் சச்சினும் சந்தித்துக் கொள்கிறார்கள். பார்த்த மாத்திரத்தில் ரீனு மீது காதல் வயப்படுகிறான் சச்சின். இவர்கள் இருவரும் சேர்ந்தார்களா? இல்லை இந்த முறையும் ஒன் சைட் லவ்வராகவே இருந்தானா சச்சின்? என்பதே பிரேமலு படத்தின் கதை.
    புதுசா என்ன இருக்கு 
    கதை என்னமோ தமிழ். இந்தி, மலையாளம் , கன்னடம் என உலகத்தின் எல்லா மொழிகளிலும் எடுக்கப்பட்ட அதே பழையக் கதைதான். ஒன் சைட் லவ்வர்ஸூக்கு இருக்கும் ஏக்கம், எல்லாவற்றையும் கூடவே இருந்து சகித்துக் கொள்ளும் நண்பன், மிடில் கிளாஸ் வாழ்க்கை, காதலிக்கும் பெண்ணின் அலுவலகத்தில் கூட வேலை செய்யும் பாய் பெஸ்டி, என இதுவரை நாம் பார்த்த எல்லா எமோஷன்களும் இப்படத்தில் இருக்கின்றன.
    ஆனால் எதையுமே ஹைலைட் செய்யாமல் எல்லாவற்றையும் இயல்பாக நடக்கவிட்டு திரையரங்கத்தை கலகலவென சிரிப்பொலிகளால் நிறப்புகிறார்கள். நகைச்சுவையிலும் எழுதி மனப்பாடம் செய்த நகைச்சுவைத் துணுக்குகளாக இல்லாமல் எதார்த்த வாழ்க்கையில் வெளிப்படும் அபத்தமான உணர்ச்சிகளை, தருணங்களையே நகைச்சுவையாக மாற்றியிருக்கிறார்கள். இடையிடையில் செல்வராகவன் , யுவன் ஷங்கர் ராஜா மீது இயக்குநருக்கு இருக்கும் ஆதர்சமும் வெளிப்படுவது தமிழ் ரசிகர்களை படத்துடன் இன்னும் ஒன்ற வைக்கிறது.
    நடிகர்கள் ஒவ்வொருவரும் கதையின் இந்த இயல்போடு ஒன்றி தங்களது கேரக்டருக்கு நியாயம் சேர்க்கிறார்கள். ஒரே விஷயத்தை திரும்பத் திரும்பப் பார்ப்பது சில இடங்களில் சலிப்பாக இருக்கும் காட்சிகளில் கூட சிரிப்பிற்கு குறைவிருக்கவில்லை. பின்னணி இசையும் பாடல்களும் பார்வையாளர்களை கவர்கின்றன. இந்த காதலர் தினத்தில் சிங்கிளாக இருக்கிறோமே என்று வருத்தப்படுபவர்களுக்கு ஒரு நல்ல ஆறுதல் பிரேமலு.

    மேலும் காண

    Source link