Tag: l murugan

  • கள்ளக்குறிச்சி சம்பவம்… முதல்வர் பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டும்… எல்.முருகன் வலியுறுத்தல்…

    கள்ளக்குறிச்சி சம்பவம்… முதல்வர் பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டும்… எல்.முருகன் வலியுறுத்தல்…

    கள்ளக்குறிச்சி சம்பவம் தொடர்பாக தமிழக முதல்வர் பொதுவெளியில் மன்னிப்பு கேட்க வேண்டும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் வலியுறுத்தியுள்ளார்.

    கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன். கள்ளக்குறிச்சி சம்பவம் குறித்து கடும் விமர்சனங்களை முன்வைத்தார். திமுகவையும், காவல்துறையையும் கடுமையாக அவர் குற்றம்சாட்டினார்.

    கள்ளக்குறிச்சியில் நிகழ்ந்துள்ள இந்த சம்பவம் தமிழக அரசியல் வரலாற்றில் மிகப்பெரிய கரப்பு தினம் என்று தெரிவித்துள்ள எல்.முருகன், இந்த சம்பவத்தை யாராலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று கூறியுள்ளார். இந்த சம்பவம், திமுக அரசின் கையாளாகாத்தனத்தை காட்டுவதாகவும், போலி திராவிட மாடல் ஆட்சி என்றும் கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார்.

    திமுக ஆட்சிக்கு வந்த‍தும் மதுவிலக்கு கொண்டுவரப்படும் என்று கூறினார்கள் என்றும், ஆனால், பல இடங்களில் மதுக்கடைகள் கூடுதலாக திறக்கப்பட்டுள்ளதாகவும் குற்றம் சாட்டினார். தமிழக அரசு இந்த சம்பத்திற்கு பொறுப்பேற்க வேண்டும் என வலியுறுத்தியுள்ள மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் பதவி விலக வேண்டும் என வலியுறுத்தினார்.

    இந்த அரசு கள்ளச்சாராயத்திற்கு துணை போகின்ற அரசாக இருப்பதாகவும், உயிர்களை எடுக்கின்ற அரசாகவும் இருப்பதாக பகிரங்கமாக குற்றம் சாட்டிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாத இந்த சம்பவம் என்பதால், பொதுவெளியில் முதல்வர் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

    சம்பவம் நடந்து பலமணி நேரம் ஆகியும், முதலமைச்சர் ஸ்டாலின் நிகழ்விடத்திற்கு சென்று பாதிக்கப்பட்ட மக்களை ஏன் பார்க்கவில்லை என்று கேள்வி எழுப்பிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், பாதிக்கப்பட்டோரை பார்க்க முடியாத முதல்வர் என்று விமர்சித்தார். சிபிசிஐடி விசாரணை என்பது சம்பவத்தை மூடி மறைக்கின்ற செயலாக பார்ப்பதாகவும், மரக்காணம் சம்பவத்திலும் அப்படித்தான் நடந்த‍தாகவும் எல்.முருகன் கூறினார்.

    தமிழ்நாட்டில் போதை பழக்கம் அதிகரித்துள்ளதாகவும், ஆனால், இந்த விவகாரங்கள் குறித்து திமுக கூட்டணிக் கட்சியினர் யாரும் வாய் திறக்கவில்லை என்றும் வேதனை தெரிவித்துள்ள எல்முருகன், திமுக அரசின் மீது விமர்சனங்களை முன்வைக்க அவர்கள் தயங்குவதாகவும் குற்றம் சாட்டினார்.

  • In the Rajya Sabha election to be held on February 27, It is reported that L. Murugan will contest bjp releases second candidate list

    In the Rajya Sabha election to be held on February 27, It is reported that L. Murugan will contest bjp releases second candidate list


    மத்திய அமைச்சர் எல். முருகன் எம்.பி பதவிக்காலம் வரும் ஏப்ரல் மாதம் முடிவடைய உள்ள நிலையில் மீண்டும் போட்டியிடுவார் என பாஜக தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.

    BJP releases another list of candidates for the Rajya Sabha Biennial elections.Union Minister L Murugan from Madhya PradeshUnion Minister Ashwini Vaishnaw from Odisha pic.twitter.com/gE7m8geLCu
    — ANI (@ANI) February 14, 2024

    15 மாநிலங்களில் உள்ள 56 ராஜ்யசபா இடங்களுக்கு தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அனைத்து தொகுதிகளுக்கும் வருகின்ற பிப்ரவரி 27 ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இந்த அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டது. உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, பீகார், மேற்கு வங்கம், மத்தியப் பிரதேசம், குஜராத், ஆந்திரப் பிரதேசம், தெலங்கானா, ராஜஸ்தான், கர்நாடகா, உத்தரகாண்ட், சத்தீஸ்கர், ஒடிசா, ஹரியானா மற்றும் ஹிமாச்சலப் பிரதேசம் ஆகிய 15 மாநிலங்களில் ராஜ்யசபா தேர்தல் நடைபெறவுள்ளது. 27 ஆம் தேதி தேர்தல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில், நாளை வரை வேட்பமனு தாக்கல் நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து 16 ஆம் தேதி வேட்பமனு மீதான பரிசீலனை நடைபெறும். விண்ணப்பதாரர்கள் பிப்ரவரி 20 ஆம் தேதி வரை தங்களது பெயர்களை திரும்பப் பெறலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    இந்நிலையில் இந்த தேர்தலில் மீண்டும் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் மத்தியப் பிரதேசத்தில் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது மத்திய பிரதேச மாநிலத்தில் இருந்து மாநிலங்களவை உறுப்பினராக உள்ளார் எல். முருகன். மத்திய அமைச்சர் எல். முருகன் எம்.பி பதவிக்காலம் வரும் ஏப்ரல் மாதம் முடிவடைய உள்ள நிலையில் மீண்டும் போட்டியிடுவார் என பாஜக தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னாள் பாஜக மாநிலத் தலைவர் எல்.முருகன் வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் நீலகிரி தொகுதியில் போட்டியிடுவார் என கூறப்பட்டு வந்த நிலையில் மீண்டும் மாநிலங்களவை உறுப்பினராகிறார். அதே சமயம் ரயில்வே துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் ஒடிசாவில் இருந்து போட்டியிடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
    கடந்த 2021 ஆம் ஆண்டு தேர்தலில் தாராப்புரம் தொகுதியில் போட்டியிட்டு எல்.முருகன் தோல்வியடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பின் மத்திய இணை அமைச்சரானதும் 2021 ஆம் ஆண்டு எம்.பியாக தேர்வானார் எல்.முருகன்.
    முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்கின் (ராஜஸ்தான்) பதவிக்காலமும் இந்த ஆண்டு ஏப்ரலில் முடிவடைகிறது. ஏப்ரல் 2, 2024 அன்று, உத்தரப் பிரதேசத்தில் இருந்து 10, மகாராஷ்டிரா மற்றும் பீகாரில் இருந்து தலா 6, மத்தியப் பிரதேசம் மற்றும் மேற்கு வங்கத்தில் இருந்து தலா 5, குஜராத் மற்றும் கர்நாடகாவிலிருந்து தலா 4, ஆந்திரா மற்றும் தெலுங்கானா மற்றும் சத்தீஸ்கர், ஹரியானாவில் இருந்து தலா 3 , இமாச்சலப் பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த 1 ராஜ்யசபா எம்.பி., ஓய்வு பெறுகின்றனர்.
     

    மேலும் காண

    Source link

  • Union Minister L Murugan says DMK is unable to tolerate that a minister from a downtrodden community is a minister | அமைச்சராக பட்டியலினத்தவர் இருப்பதை தி.மு.க.வால் சகிக்க முடியவில்லை

    Union Minister L Murugan says DMK is unable to tolerate that a minister from a downtrodden community is a minister | அமைச்சராக பட்டியலினத்தவர் இருப்பதை தி.மு.க.வால் சகிக்க முடியவில்லை


    கடந்த பிப்ரவரி 1ஆம் தேதி, நாடாளுமன்றத்தில் மத்திய இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து, குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்தில் பல்வேறு விவகாரங்கள் குறித்து பேசப்பட்டு வருகிறது. அந்த வகையில், வெள்ள பாதிப்புக்கு உள்ளான தமிழ்நாட்டுக்கு தேசிய பேரிடர் நிவாரண நிதியிலிருந்து நிதி வழங்க வேண்டும் என திமுக நாடாளுமன்ற உறுப்பினர்கள் கோரிக்கை விடுத்தனர். 
    நாடாளுமன்றத்தில் நடந்தது என்ன?
    அப்போது பேசிய தி.மு.க. நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர். பாலு, தமிழ்நாட்டிற்கான வெள்ள நிவாரண நிதியை வழங்குவதில் மத்திய அரசு பாரபட்சம் காட்டுவதாக குற்றம் சாட்டினார். உடனே, மத்திய இணையமைச்சர் எல். முருகன் குறுக்கிட்டு பேசினார்.  இதனால் ஆவேசமடைந்த டி.ஆர். பாலு, “எம்.பி., ஆக இருக்கவே எல். முருகன் தகுதியற்றவர். அவருக்கு ஒழுக்கமாக இருப்பது எப்படி என கற்றுக் கொடுங்கள்” என ஆவேசமாக பேசினார். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவரை எப்படி தகுதியற்றவர் என கூறலாம் என, மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி உள்ளிட்ட பாஜக உறுப்பினர்கள் டி.ஆர். பாலுவிற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 
    இதனால், திமுக உறுப்பினர்களும் எழுந்து நின்று பாஜக உறுப்பினர்களுக்கு எதிராக ஆவேசமாக பேச தொடங்கினர். இதனால், திமுக மற்றும் பாஜக உறுப்பினர்கள் இடையே ஏற்பட்ட கடும் வாக்குவாதத்தால், மக்களவையில் சிறிது நேரம் அமளி ஏற்பட்டது. தொடர்ந்து, தமிழ்நாட்டிற்கு மத்திய அரசு வெள்ள நிவாரண நிதி ஒதுக்காததை கண்டித்து, திமுக எம்.பிக்கள் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர்.
    மத்திய அமைச்சர் எல். முருகனை திமுக அவமதித்ததா?
    மக்களவையில் என்ன நடந்தது என்பது குறித்து ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திற்கு விளக்கம் அளித்த மத்திய இணையமைச்சர் எல். முருகன், “பட்டியலின சமூகத்தை சேர்ந்தவர் அமைச்சராக இருப்பதை திமுகவால் சகித்து கொள்ள முடியவில்லை. இதனால்தான், என்னையும் எனது சமூகத்தையும் அவமானப்படுத்த இழிவான, நாடாளுமன்றத்தில் பயன்படுத்தக்கூடாத வார்த்தைகளை பயன்படுத்தி உள்ளார்” என்றார்.
    இதற்கு எதிர்வினையாற்றி திமுக நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஆ .ராசா, “தேசிய பேரிடர் நிவாரண நிதியின் கீழ் ஏதேனும் தொகை வெளியிடப்படுமா என்று மத்திய உள்துறை இணை அமைச்சரிடம்  கேள்வி எழுப்பினேன். மத்திய இணை அமைச்சர் பதில் அளிக்காமல் பொறுப்பற்று பேசினார். எங்களுக்கு கொஞ்சம் கோபம் வந்துவிட்டது. 
    இந்த விவாதத்தின் போது, ​​டி.ஆர்.பாலு சில கேள்விகளைக் கேட்க விரும்பினார். அவரை பேச விடாமல், மற்றொரு மத்திய இணை அமைச்சரும் பாஜக தலைவருமான எல். முருகன் தடுத்தார். எனவே, நீங்கள் (எல் முருகன்) தமிழ்நாட்டிலிருந்து உறுப்பினராக இருக்க தகுதியற்றவர். ஏனெனில் நீங்கள் மாநில நலனுக்கு எதிரானவர் என தெரிவித்தோம்” என்றார்.
     

    மேலும் காண

    Source link

  • PM Modi Celebrates Pongal In Union Minister L Murugan House Says Spirit Of Pongal Evokes Ek Bharat Shrestha Bharat

    PM Modi Celebrates Pongal In Union Minister L Murugan House Says Spirit Of Pongal Evokes Ek Bharat Shrestha Bharat

    சாதி, மதம், இனம் என அனைத்து வேறுபாடுகளையும் கடந்து தமிழர் அனைவரும் கொண்டாடும் தைத்திருநாள் பொங்கல் பண்டிகை நாளை உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. பழையன கழிதலும் புதியன புகுதலும் என்பதன் அடிப்படையில் பழைய பொருட்களை எல்லாம் ஒழித்து இன்று போகிப் பண்டிகை கொண்டாடப்பட்டது.
    பொங்கல் விழாவில் பங்கேற்ற பிரதமர் மோடி:
    இந்த நிலையில், மத்திய மீன்வளம், கால்நடை வளர்ப்பு மற்றும் பால் வளத்துறை இணை அமைச்சர் எல். முருகன் வீட்டில் இன்று பொங்கல் பண்டிகை வெகு விமரிசையாக கொண்டாடப்பட்டது. டெல்லியில் உள்ள அவரது வீட்டில் கொண்டாடப்பட்ட பெங்கல் விழாவில் பிரதமர் மோடி, தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
    தமிழர் பாரம்பரிய முறைப்படி வேட்டி, சட்டை அணிந்து பொங்கல் விழாவிற்கு பிரதமர் மோடி வருகை தந்தார். பெங்கல் விழாவில் பங்கேற்று பேசிய பிரதமர் மோடி, “ஒற்றுமையின் உணர்வுபூர்வமான தொடர்பை பாஜக அரசின் காசி – தமிழ் சங்கமம், காசி – சௌராஷ்டிர சங்கமம் ஆகிய திட்டங்களில் காணலாம். இந்த திட்டங்களில் புவியியல் ரீதியாக தனித்தனியான பகுதிகளுக்கு இடையேயான தொடர்புகளை கொண்டாட முடியும்.
    இந்த ஒற்றுமை உணர்வுதான் 2047ஆம் ஆண்டுக்குள் வளர்ந்த பாரதத்தைக் கட்டமைக்க மிகப்பெரிய சக்தியாகும். டெல்லி செங்கோட்டையில் நான் முன்னிறுத்திய ‘ஐந்து உறுதிமொழிகள்’ நாட்டின் ஒற்றுமையை வலுப்படுத்த முக்கிய அம்சம் ஆகும்” என்றார்.
    திருக்குறளை மேற்கோள் காட்டிய பிரதமர் மோடி:
    தள்ளா விளையுளும் தக்காரும் தாழ்விலாச் செல்வரும் சேர்வது நாடு என்ற திருக்குறளை மேற்கோள் காட்டி பேசிய பிரதமர் மோடி, “பொங்கலின் போது, ​​கடவுளுக்கு புதிய பயிர் அளிக்கப்படுகிறது. இதன் மூலம் பாரம்பரியத்தின் மையப்புள்ளியாக விவசாயிகளை முன்னிறுத்துகிறது. தினை பற்றி ஒரு புதிய விழிப்புணர்வு மக்களிடையே ஏற்பட்டுள்ளது. பல இளைஞர்கள் தினைகளை வைத்து ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை தொடங்கியுள்ளனர். 
    தினை விவசாயத்தை மேற்கொள்ளும் மூன்று கோடிக்கும் அதிகமான விவசாயிகள் தினையை ஊக்குவிப்பதன் மூலம் நேரடியாக பயனடைந்தனர். இந்தியாவின் ஒவ்வொரு பண்டிகைக்கும் கிராமப்புறம், பயிர் மற்றும் விவசாயிக்கும் தொடர்புள்ளது. பொங்கல் திருநாளில் தேசத்தின் ஒற்றுமையை வலுப்படுத்த அனைவருக்கும் அழைப்பு விடுக்கிறேன்” என்றார்.

    #WATCH | Prime Minister Narendra Modi takes part in the #Pongal celebrations at the residence of MoS L Murugan in Delhi. Puducherry Lt Governor and Telangana Governor Tamilisai Soundararajan also present here. pic.twitter.com/rmXtsKG0Vw
    — ANI (@ANI) January 14, 2024

    பாஜக மேலிட நிர்வாகிகள், பிரபலங்கள், ஊடகவியலாளர்கள் ஆகியோரை தவிர நடிகை மீனாவும் இந்த பெங்கல் விழாவில் கலந்துகொண்டார். குறிப்பாக, நடிகை மீனாவுக்கு முதல் வரிசையில் இடம் ஒதுக்கப்பட்டது அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. 

    Source link

  • உதயநிதி ஸ்டாலின் கத்துக்குட்டியாக இருக்கிறார்… கடுமையாக விமர்சித்த எல்.முருகன்…

    உதயநிதி ஸ்டாலின் கத்துக்குட்டியாக இருக்கிறார்… கடுமையாக விமர்சித்த எல்.முருகன்…

    அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அரசியலில் கத்துக்குட்டியாக இருக்கிறார் என்று மத்திய இணை அமைச்சர் எல். முருகன் விமர்சித்துள்ளார்.

    கோவை – பொள்ளாச்சி இடையே முன்பதிவு இல்லாத ரயில் சேவை துவக்க விழா, கோவை ரயில் நிலையத்தில் நடைபெற்றது.இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கலந்து கொண்டு, ரயில் சேவையை கொடியசைத்து துவக்கி வைத்தார்.

    பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய எல்.முருகன், கோவை – பொள்ளாச்சி இடையே முன்பதிவில்லா ரயில் சேவை வேண்டும் என்ற மக்களின் நீண்ட நாள் கோரிக்கை, ஒரே மாதத்தில் மிக வேகமாக மத்திய ரயில்வே அமைச்சரால் நிறைவேற்றி தரப்பட்டுள்ளது என்றார்.

    இந்தாண்டு பட்ஜெட்டில் ரூ.6,000 கோடி ரயில்வே துறைக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், தமிழகத்தில் 10 புதிய வழித்தடங்ககள் கொடுக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

    காங்கிரஸ் ஆட்சியில் வெறும் ரூ.800 கோடி தான், 2009 முதல் 2014 ஆம் ஆண்டு வரை ரயில்வே துறைக்கு ஒதுக்கப்பட்டதாக குற்றம் சாட்டிய எல்.முருகன், சென்னையில் இருந்து கோவைக்கும், சென்னையிலிருந்து திருநெல்வேலிக்கும் வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டு வருவதாக பெருமிதம் தெரிவித்தார்.

    விரைவில் கோவையிலிருந்து பெங்களூருக்கு வந்தே பாரத் ரயில் இயக்கப்பட உள்ளதாகவும், தமிழகத்தில் கோயம்புத்தூர், மேட்டுப்பாளையம், உதகை, திருப்பூர், சேலம் உட்பட 75 ரயில் நிலையங்கள் அம்ருத் பாரத் திட்டத்தின் கீழ் மேம்படுத்தப்பட உள்ளதாகவும் கூறினார்.

    அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கருணாநிதி கிடையாது என்ற அவர், உதயநிதி அரசியலில் கத்துக்குட்டியாக இருப்பதாக விமர்சித்தார். பக்குவப்பட்ட தலைவராக இருக்க வேண்டும் என அறிவுறுத்திய எல்.முருகன், மத்திய அரசுடன் இணக்கமாக செயல்படுவதால் தமிழக அரசுக்கு தான் நல்ல பலன் கிடைக்கும் என்றார்.