Tag: Kanchipuram news

  • குளு குளு கரும்பு ஜூஸ்…! ஜூஸ் போட்டு கொடுத்த முன்னாள் அமைச்சர் வளர்மதி..!

    குளு குளு கரும்பு ஜூஸ்…! ஜூஸ் போட்டு கொடுத்த முன்னாள் அமைச்சர் வளர்மதி..!


    <div dir="auto" style="text-align: justify;">தேர்தல் முடிந்தால் விட்டுடுவோமா, கரும்பு ஜூஸ் போட்டு கொடுத்து மக்களின் தாகத்தை தனித்த முன்னாள் அமைச்சர் வளர்மதி. சாலை ஓர கடை போல் அமைத்து தண்ணீர் பந்தல் திறந்து வைத்த காஞ்சிபுரம் மாவட்ட அதிமுகவினர்.முன்னாள் அமைச்சர் வளர்மதி திறந்து வைத்த தண்ணீர் பந்தல்&nbsp; 5 நிமிடத்தில்&nbsp; காலி செய்த பொதுமக்கள்.</div>
    <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div>
    <h2 dir="auto" style="text-align: justify;">&nbsp;தமிழ்நாட்டு அரசியலில் பாரம்பரியம்</h2>
    <div dir="auto" style="text-align: justify;">
    <p style="text-align: justify;">தமிழரின் பாரம்பரியத்தில் ஒன்றாக தண்ணீர் பந்தல் &nbsp; திறக்கும் நடைமுறை பண்டைய காலத்தில் இருந்து &nbsp;வருகிறது. பண்டைய காலத்தில் பொதுமக்கள், ஊரில் இருந்த முக்கிய &nbsp;நபர்கள் இதுபோன்ற தண்ணீர் பந்தல்களை திறப்பது வழக்கம். &nbsp;அதன் ஒரு பகுதியாக கோடை காலங்களில் தமிழ்நாட்டை சேர்ந்த பிரதான அரசியல் கட்சிகள் தண்ணீர் பந்தலை திறப்பது &nbsp;என்பது&nbsp; பாரம்பரியமாக பார்க்கப்படுகிறது. &nbsp;அந்த வகையில் தமிழ்நாடு அரசியலில் முக்கிய கட்சியாக இருக்கும் அதிமுக சார்பில், தண்ணீர் பந்தங்களை &nbsp;திறக்க எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி கே பழனிச்சாமி நிர்வாகிகளுக்கு உத்தரவு பிறப்பித்தார். &nbsp;இதன் அடிப்படையில் தமிழ்நாடு முழுவதும் அதிமுகவினர் தண்ணீர் பந்தலை திறந்து வருகின்றனர்.</p>
    <p><br /><img src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/25/1fcb14cb1374ba53cc2be809d3960ae21714043072206113_original.jpg" width="865" height="487" /></p>
    <h2 style="text-align: justify;">&nbsp;அதிமுக சார்பில் தண்ணீர் பந்தல்<br /><br /></h2>
    <div dir="auto" style="text-align: justify;">அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றம் கழகம் சார்பில் கோடை வெயிலில் பொதுமக்கள் தாகத்தை தீர்க்க தண்ணீர் பந்தல் திறக்க பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்த நிலையில் காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில், காஞ்சிபுரம் மாவட்ட அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் சோமசுந்தரம் ஏற்பாட்டில் கோடை வெயிலில் தாகத்தை தீர்க்க தர்பூசணி பழம், வெள்ளரிப்பழம், பனை நுங்கு, கரும்பு ஜூஸ், கீரக்காய், கூழ், மோர், பழச்சாறு போன்றவை சாலை ஓர கடை போல் அமைத்து பந்தலில் இளநீர், நுங்கு, ஈச்சம்பழம், வாழைப்பழம் தொங்கவிட அலங்கரிக்கப்பட்ட தண்ணீர் பந்தலை முன்னாள் அமைச்சர் வளர்மதி&nbsp; பங்கேற்று தண்ணீர் பந்தலை திறந்து வைத்தார்.</div>
    <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div>
    <div dir="auto" style="text-align: justify;">
    <h2><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/25/e0df47a1676fd6328ac0a02d000a4b891714043143271113_original.jpg" width="756" height="425" /></h2>
    </div>
    <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div>
    <h2 dir="auto" style="text-align: justify;">&nbsp; " பழக்க தோஷத்துல பண்றாங்கப்பா "</h2>
    <div dir="auto" style="text-align: justify;">தண்ணீர் பந்தலை திறந்து உடனே பொதுமக்கள் முந்தி அடித்துக்கொண்டு தண்ணீர் பந்தலுக்கு அமைக்கப்பட்டிருந்த கீரணிப்பழம், தர்பூசணி பழம், குளிர்பானம், கீரைக்காய் போன்றவை பொதுமக்கள் பையில் அள்ளிக் கொண்டும், மூட்டை கட்டி பொதுமக்கள் ஐந்தே நிமிடத்தில் தண்ணீர் பந்தலில் காலி செய்தனர். தேர்தல் சமயத்தில் கட்சியினர் காய்கறி விற்பது, இளநீர் விற்பது, தோசை சுட்டுக் கொடுப்பது, ஆம்லெட் போட்டுக் கொடுப்பது, பூ கட்டி கொடுப்பது, என பல்வேறு வகையில் நூதன முறையில் பிரச்சாரம் மேற்கொண்டனர். தற்போது முன்னாள் அமைச்சர் அதே பாணியில் மக்களுக்கு ஜூஸ் போட்டு கொடுத்து வாக்குகளை சேகரித்துள்ளார்.</div>
    <div dir="auto" style="text-align: justify;"><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/25/dcc59a7e29a13f041c6f5448d3c826141714043222117113_original.jpg" width="796" height="448" /></div>
    <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div>
    <div dir="auto" style="text-align: justify;">வாக்கு சேகரித்த பழக்க தோஷத்தில் அமைச்சர் செய்தாராம் என சில பொதுமக்கள்&nbsp; சிரித்துக்கொண்டே அங்கிருந்து சென்றனர். அதேபோன்று பிரம்மாண்டமாக ஏற்பாடு செய்யப்பட்டு இருந்த &nbsp;குளிர்ச்சியான பழங்கள் உள்ளிட்ட பொருட்களை வாங்கும் விழாவும் மேகலகமாக நடத்திவிட்டு அங்கிருந்து அதிமுகவினர் கலந்து சென்றனர். பொதுமக்களும் &nbsp;அதிமுக &nbsp;கட்சித் தொண்டர்களும் தங்களுக்கு தேவையான பழங்கள் &nbsp;ஆகியவற்றை மூட்டை கட்டிக்கொண்டு மகிழ்ச்சியுடன் வீடு திரும்பினர். பொதுமக்கள் மற்றும் அதிமுக கட்சித் தொண்டர்கள் போட்டி &nbsp; போட்டு கொண்டு அங்கிருந்து பொருட்களை &nbsp; அள்ளிக் கொண்டு சென்றது அங்கு இருந்தவர்களிடையே நகைப்பை ஏற்படுத்தியது.</div>
    </div>

    Source link

  • தெருக்கூத்து கலைஞர்கள், 30 அடி உயர மாலை,150 கிலோ எடையுள்ள ரோஜா பூ..! அசத்தும் திமுக..!

    தெருக்கூத்து கலைஞர்கள், 30 அடி உயர மாலை,150 கிலோ எடையுள்ள ரோஜா பூ..! அசத்தும் திமுக..!


    <p style="text-align: justify;">காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் க. செல்வம் வாலாஜாபாத் பகுதியில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்&nbsp;</p>
    <h2 dir="ltr" style="text-align: justify;">மக்களவைத் தேர்தல்</h2>
    <p dir="ltr" style="text-align: justify;">மக்களவைத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி நடைபெற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு, முக்கிய அரசியல் கட்சியினர் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.&zwnj; கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல் பிரச்சாரம் களைகட்ட துவங்கி உள்ளது. அந்த வகையில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில், திமுக வேட்பாளர் க. செல்வம் காஞ்சிபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாலாஜாபாத் ஒன்றிய பகுதிகளில் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.</p>
    <p style="text-align: justify;"><br /><img src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/15/789eee489bdb2b7d37a7cd325ed4a0541713190732123739_original.jpg" /></p>
    <h2 dir="ltr" style="text-align: justify;">200 கிலோ எடை மாலை</h2>
    <p dir="ltr" style="text-align: justify;">வாலாஜாபாத் ஒன்றியத்துக்கு உட்பட்ட ஈஞ்சம்பாக்கம், புதுப்பாக்கம், வேளியூர், கோவிந்தவாடி, படு நெல்லி, புரிசை, வளத்தூர், பரந்தூர், சிறுவாக்கம், காரை உள்ளிட்ட முப்பதற்கும் மேற்பட்ட பகுதிகளில் வாகன பரப்புரையில் ஈடுபட்டார். முன்னதாக படுநெல்லி பகுதியில் கிரேன் மூலம் சுமார் 30 அடி உயர உள்ள&nbsp; 200 கிலோ எடை மாலையை கிரேன் உதவியுடன் வேட்பாளருக்கு அணிவித்து உற்சாக வரவேற்பை அளித்தனர். தொடர்ந்து வேட்பாளருக்கு தெருக்கூத்து கலைஞர்கள் நடனமாடி, வேட்பாளரை வரவேற்றது மட்டுமில்லாமல் நூதன முறையில் உதயசூரியன் சின்னத்திற்கு தெருக்கூத்து கலைஞர்கள் மூலம் வாக்குகளை சேகரித்தனர். தொடர்ந்து காரை கிராமத்தில், வேட்பாளருக்கு இரண்டு ஜேசிபி மூலம் 150 கிலோ எடையுள்ள ரோஜா பூக்களை தூவி, பூ மழை மூலம் வேட்பாளருக்கு வரவேற்பு அளித்தனர்.</p>
    <p dir="ltr" style="text-align: justify;">&nbsp;</p>
    <p dir="ltr" style="text-align: justify;"><br /><img src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/15/5917ac229453eeb4dded49c8794205191713190759660739_original.jpg" /></p>
    <p dir="ltr" style="text-align: justify;">தொடர்ந்து திமுக கலரில் காகிதப்பூ மழையும் பெய்தது. மேலும் 100-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனத்தில் வந்த கூட்டணி கட்சியினர் மற்றும் திமுக தொண்டர்கள் வேட்பாளருக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்குகளை கேட்டனர்.</p>
    <h2 dir="ltr" style="text-align: justify;">சுகர் பேஷண்ட்</h2>
    <p dir="ltr" style="text-align: justify;">தொடர்ந்து பொதுமக்கள் மத்தியில் பேசிய வேட்பாளர் க. செல்வம், திமுக அரசு இரண்டு ஆண்டுகளில் ஏராளமான சாதனைகளை செய்துள்ளது. மகளிர் உரிமைத் தொகை, காலை சிற்றுண்டி உள்ளிட்ட மக்கள் நல திட்ட பணிகளை தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் செய்து வருகிறார். தற்பொழுது பிரதமர் தேர்தல் என்பதால் இந்தியா கூட்டணியை சேர்ந்த ஒருவர் பிரதமராக நீங்கள் எனக்கு வாக்களிக்க வேண்டும். பத்தாண்டுகளாக மோடி இந்தியாவிற்கு எதுவும் செய்யவில்லை, கேஸ் மானியம் தற்பொழுது வழங்கப்படுவதே இல்லை ஆனால் இந்தியா கூட்டணி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் சிலிண்டர் விலை 500 ரூபாய்க்கு குறைய வாய்ப்புள்ளதாகவும் தெரிவித்தார். தொடர்ந்து நேரமாகிக் கொண்டிருக்கிறது வாகனத்தில் இருப்பவர்கள் எல்லாம் " சுகர் பேஷண்ட் " நீங்களும் சென்று சீக்கிரம் சாப்பிடுங்கள் என தெரிவித்து அங்கிருந்து சென்றார் .</p>
    <p style="text-align: justify;"><br /><br /><img src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/04/15/8cc52219a4e020871906df7ea450a4771713190788243739_original.jpg" /><br /><br /></p>
    <h2 dir="ltr" style="text-align: justify;">தொடரும் பிரச்சாரங்கள்&nbsp;</h2>
    <p dir="ltr" style="text-align: justify;">தொடர்ந்து காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் முக்கிய அரசியல் கட்சியினர் பல்வேறு வழிகளில் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.&zwnj; வேட்பாளர்கள் பிரச்சாரத்தை தவிர்த்து, வேட்பாளருக்கு ஆதரவாக கூட்டணி கட்சியினர் மற்றும் கட்சியின் நட்சத்திர பேச்சாளர்கள் பிரச்சாரம் மேற்கொண்டு வருவது பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இதுபோக நிர்வாகிகள் வீடு தோறும் சென்று துண்டு பிரசுரங்களை வழங்கியும் பிரச்சாரத்தை தீவிர்படுத்தி உள்ளனர். தேர்தலுக்கு சில நாட்களே உள்ள நிலையில், இறுதி நேர பிரச்சாரத்திற்கும் அரசியல் கட்சியினர் தயாராகி வருகின்றனர். இதனால் காஞ்சிபுரம் தொகுதி முழுவதும் தேர்தல் திருவிழா களைகட்ட துவங்கி உள்ளது. இதுபோக இரவு நேரங்களில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில், முக்கிய அரசியல் கட்சி சார்பில் பிரச்சார பொதுக்கூட்டங்களும் நடைபெற்று வருகிறது. பிரச்சார பொதுக்கூட்டங்களில் பிரதான கட்சியை சார்ந்த நட்சத்திர பேச்சாளர்கள், கட்சித் தலைவர்கள் ஆகியோர் கலந்துகொண்டு வேட்பாளருக்கு ஆதரவாக வாக்குகளை சேகரித்து வருகின்றனர்.&nbsp;</p>
    <p style="text-align: justify;">&nbsp;</p>

    Source link

  • Lok Sabha Election: ஓட்டு போடுங்க ஹோட்டல்ல ஆஃபர்ல சாப்பிடுங்க..! செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் அதிரடி..!

    Lok Sabha Election: ஓட்டு போடுங்க ஹோட்டல்ல ஆஃபர்ல சாப்பிடுங்க..! செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் அதிரடி..!


    <p style="text-align: justify;">மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் வாக்களித்துவிட்டு, கையில் மை இருந்தால் மறுநாள் ஓட்டல்களில் 5 சதவீத தள்ளுபடி வழங்கப்படும் என செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.</p>
    <h2 style="text-align: justify;"><strong>100 சதவீத வாக்குப்பதிவு:</strong></h2>
    <p style="text-align: justify;">மக்களவைத் தேர்தல் வருகின்ற ஏப்ரல் மாதம் 19ஆம் தேதி நடைபெற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு 18 வயது நிரம்பிய அனைத்து வாக்காளர்களும் தவறாமல் தேர்தல் நாளான ஏப்ரல் 19 அன்று தங்கள் பகுதியில் உள்ள வாக்கு சாவடிக்கு சென்று 100 % வாக்களிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.</p>
    <p style="text-align: justify;">அந்த வகையில், செங்கல்பட்டு மாவட்டத்தில் ஏப்ரல் 19 அன்று வாக்காளர்கள் வாக்கு அளித்து விரல்களில் வைக்கப்பட்ட மை அடையாளத்தை செங்கல்பட்டு மாவட்டம் மற்றும் மாமல்லபுரத்தில் உள்ள உணவகங்களில் ஏப்ரல் 20-ம் தேதி சாப்பிட செல்லும் போது காண்பித்தால், 5% விழுக்காடு தள்ளுபடி செய்யப்படும் என்று செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகம் மற்றும் மாவட்ட உணவக உரிமையாளர்கள் சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளதாக வாக்காளர்களுக்கு அறிவுறுத்தல் கொடுக்கப்பட்டுள்ளது. வாக்காளர்கள் அனைவரும் இம்மாவட்டத்தில் 100% வாக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்பதையும் உறுதிப்படுத்திட வேண்டும் என்றும் மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சி தலைவர் அருண் ராஜ் தெரிவித்துள்ளார்.&nbsp;</p>
    <p style="text-align: justify;">பொதுமக்கள் வாக்கு செலுத்த வேண்டியதன் அவசியத்தை உணர்த்துவதற்காக, மாவட்ட நிர்வாகம் எடுத்துள்ள இந்த ஊக்குவிக்கும் முயற்சிக்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.&nbsp;</p>
    <p style="text-align: justify;">&nbsp;</p>
    <p style="text-align: justify;">&nbsp;</p>

    Source link

  • Lok Sabha Election 2024 Kanchipuram DMK candidate G Selvam went on an agricultural tractor to collect votes – TNN

    Lok Sabha Election 2024 Kanchipuram DMK candidate G Selvam went on an agricultural tractor to collect votes – TNN


    காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதி 2024  (Kanchipuram Lok Sabha Constituency 2024 )
    காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் ( Kancheepuram Lok Sabha constituency ) 1951 ஆம் ஆண்டு ஒரு தேர்தல் நடைபெற்றது.  அதன் பிறகு செங்கல்பட்டு தொகுதியாக இருந்து வந்தது. 2008ஆம் ஆண்டில் செய்யப்பட்ட தொகுதி மறுசீரமைப்பின்போது இந்தத் தொகுதி புதியதாக உருவாக்கப்பட்டது. அதன் பிறகு 2009 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை தேர்தல் நடைபெற்று வருகிறது. இத்தொகுதியானது தனித்தொகுதி ஆகும். செங்கல்பட்டு நாடாளுமன்ற தொகுதியாக இருந்தபொழுது, இடம் பெற்றிருந்த சட்டமன்றத் தொகுதிகள் – திருப்போரூர் (தனி), செங்கல்பட்டு, மதுராந்தகம், அச்சரப்பாக்கம் (தனி), உத்திரமேரூர், காஞ்சிபுரம். இதனையடுத்து காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியாக மறுசீரமைக்கப்பட்டு, காஞ்சிபுரம், உத்திரமேரூர், மதுராந்தகம் (தனி ) , செய்யூர் (தனி), திருப்போரூர் மற்றும் செங்கல்பட்டு ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியாக மறுசீரமைக்கப்பட்டது.

    களத்தில் இருக்கும் வேட்பாளர்கள்
    காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில் திமுக சார்பில் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் க. செல்வம், அதிமுக சார்பில் பெரும்பாக்கம் இராஜசேகர் , பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் ஜோதி வெங்கடேசன் , நாம் தமிழர் கட்சி சார்பில் சந்தோஷ் குமார் உள்ளிட்ட 11 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இதில் பிரதான கட்சிகளை சார்ந்த திமுக ,அதிமுக, பாமக ஆகிய கட்சிகள், தொகுதி முழுவதும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதியில் தேர்தல் திருவிழா களைகட்ட தொடங்கியுள்ளது .

    திமுக வேட்பாளர் வாக்கு சேகரிப்பு
    செங்கல்பட்டு மாவட்டம் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் செல்வம் அவர்கள் கருங்குழி, மொறப்பாக்கம், தண்டலம், கழனிபாக்கம் வேடந்தாங்கல் ஆகிய பகுதிகளில்  அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்பொழுது தண்டலம் பகுதியில், விவசாய டிராக்டரில் சென்றபடி வாக்கு சேகரித்தார் . 

    அப்போது அவர் பேசுகையில், “நான் வேட்பாளராக வரவில்லை ஒரு விவசாயியாக வந்துள்ளேன் நானும் ஒரு சிறு கிராமத்தில் பிறந்த விவசாயி குடும்பத்தில் பிறந்து தான் நான் இந்த நிலைமைக்கு வந்துள்ளேன்” எனக் கூறி உதயசூரியன் சின்னத்தில் வாக்கு சேகரித்தார் அப்பொழுது அவருக்கு மாலை அணிவித்தும் ஆரத்தி எடுத்தும் வரவேற்புரைத்தனர். இந்த நிகழ்ச்சியில் காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட  செயலாளர் கா. சுந்தர் எம்எல்ஏ அச்சிறுபாக்கம் வடக்கு ஒன்றிய கழகச் செயலாளர் ஜி.தம்பு உள்ளிட்ட இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
    தொடரும் பிரச்சாரங்கள் 
    தொடர்ந்து காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் முக்கிய அரசியல் கட்சியினர் பல்வேறு வழிகளில் பிரச்சாரங்களை மேற்கொண்டு வருகின்றனர்.‌ வேட்பாளர்கள் பிரச்சாரத்தை தவிர்த்து, வேட்பாளருக்கு ஆதரவாக கூட்டணி கட்சியினர் மற்றும் கட்சியின் நட்சத்திர பேச்சாளர்கள் பிரச்சாரம் மேற்கொண்டு வருவது பொதுமக்களிடையே வரவேற்பை பெற்றுள்ளது. இதுபோக நிர்வாகிகள் வீடு தோறும் சென்று துண்டு பிரசுரங்களை வழங்கியும் பிரச்சாரத்தை தீவிரப்படுத்தி உள்ளனர் .

    தேர்தலுக்கு சில நாட்களே உள்ள நிலையில், இறுதி நேர பிரச்சாரத்திற்கும் அரசியல் கட்சியினர் தயாராகி வருகின்றனர். இதனால் காஞ்சிபுரம் தொகுதி முழுவதும் தேர்தல் திருவிழா களைகட்ட துவங்கி உள்ளது. இதுபோக இரவு நேரங்களில் காஞ்சிபுரம் நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில், முக்கிய அரசியல் கட்சி சார்பில் பிரச்சார பொதுக்கூட்டங்களும் நடைபெற்று வருகிறது. பிரச்சார பொதுக்கூட்டங்களில் பிரதான கட்சியை சார்ந்த நட்சத்திர பேச்சாளர்கள், கட்சித் தலைவர்கள் ஆகியோர் கலந்துகொண்டு வேட்பாளருக்கு ஆதரவாக வாக்குகளை சேகரித்து வருகின்றனர். 

    மேலும் காண

    Source link

  • Kanchipuram Government Union Angampakkam Middle School and Secondary School Student feast – TNN

    Kanchipuram Government Union Angampakkam Middle School and Secondary School Student feast – TNN


    காஞ்சிபுரம் அரசு ஒன்றிய அங்கம்பாக்கம் நடுநிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு தலைவாழை இலையில் அறுசுவை விருந்து பரிமாறப்பட்டது. 
    அரசுப் பள்ளிகள் மாணவர் சேர்க்கை
    காஞ்சிபுரம் (Kanchipuram News): தமிழ்நாட்டில் செயல்பட்டு வரும் பல அரசு பள்ளிகள் இந்திய அளவில் முன்மாதிரியாக செயல்பட்டு வருகின்றன. அரசும் அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரிக்க வேண்டும் என பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. பொதுவாக மாணவர்கள் சேர்க்கை ஜூன் மாதத்தில் துவங்கும் நிலையில் கடந்த சில ஆண்டுகளாகவே, மாணவர் சேர்க்கை முன்னதாக துவங்கி நடைபெற்று வருகிறது.

    மாணவர் சேர்க்கை
    இந்த ஆண்டு மாணவர் சேர்க்கை மார்ச் 1ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. 5 வயது நிறைவடைந்த குழந்தைகள் பள்ளிக்கு செல்லாமல் இருப்பதை தவிர்க்க அனைத்து குழந்தைகளின் விவரங்கள் அடிப்படையில் அவர்களை பள்ளியில் சேர்க்க ஆசிரியர்கள் முனைப்பு காட்ட வேண்டும். குறிப்பாக அரசு பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க வலியுறுத்தி துண்டு பிரசுரங்களை ஆசிரியர்கள் விநியோகிக்க வேண்டும். அதேபோன்று அரசு பள்ளி மாணவர் சேர்க்கை குறித்த விழிப்புணர்வு பேரணியும் நடத்திட வேண்டும் என பள்ளிக்கல்வித்துறை சார்பில் வேண்டுகோள் விடப்பட்டுள்ளது.
     

    பள்ளிக்கல்வித்துறை சார்பில் கோரிக்கை
    மேலும் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசு பள்ளிகளிலும் மாணவர் சேர்க்கை நடத்துவதற்கு தேவையான விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ள அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் குழுக்களை அமைத்து அதன் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். பள்ளி மேலாண்மை குழுக்கள் மூலமாகவும் அந்த பகுதியில் உள்ள மாணவர்களை அரசு பள்ளிகளில் சேர்க்க உரிய விழிப்புணர்வு மேற்கொள்ள வேண்டும். கோடை விடுமுறைக்கு முன்பாகவே பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடத்துவதற்கான முகாம்களை நடத்த வேண்டும் என கோரிக்கையும் தமிழ்நாடு அரசு சார்பில் வைக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் காஞ்சிபுரத்தில் சேர்ந்த பல்வேறு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க சிறப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    அங்கம்பாக்கம் அரசு பள்ளி மாணவர்களுக்கு இன்ப அதிர்ச்சி
    காஞ்சிபுரம் ஒன்றியம் அங்கம்பாக்கம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 125, மாணவ-மாணவியர் படித்து வருகின்றனர். அப்பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு பள்ளி தலைமையாசிரியரும் ஆசிரியர்களும் இணைந்து கல்வி ஆண்டின் இறுதியில் வடை பாயாசம் மற்றும் இனிப்புடன் தலைவாழை இலை விருந்து வைப்பது வாடிக்கை. இந்த ஆண்டும் பள்ளியில் படிக்கும் அனைத்து மாணவர்களுக்கும் இல்லம் தேடிக்கல்வி தன்னார்வலர்கள் ஊராட்சியில் பணியாற்றும் தூய்மைக்காவலர்கள், காலை உணவுத்திட்டம் மற்றும் சத்துணவுத்திட்ட பணியாளர்கள் அனைவருக்கும் இனிப்புடன் விருந்து வைக்கப்பட்டது.
    இவ்விருந்தில் பள்ளி தலைமையாசிரியர் தணிகை அரசு ஊராட்சி மன்ற தலைவர் ஏழுமலை அறிவியல் ஆசிரியர் சேகர் கணித ஆசிரியை லதா இடைநிலை ஆசிரியர்கள் சீனிவாசன் கலைவாணன் பொற்கொடி ஆகியோர் பங்கேற்றனர். சமீபத்தில் சந்திராயன் 3 விண்ணில் ஏவப்பட்ட பொழுது, ஸ்ரீஹரி கோட்டாவிற்கு பள்ளிசையை சேர்ந்த மாணவர்களை தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் அழைத்து சென்றிருந்தார். தொடர்ந்து இதுபோன்று மாணவர்களை கவரும் வகையில், பல்வே‌று புதிய மாற்றங்களை பள்ளி ஆசிரியர்கள் செய்து வருவது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் இயற்கையாகவே படிப்படியாக பள்ளியில் பயிலும் மாணவர்களில் எண்ணிக்கை அதிகரித்து வருவதாகவும் ஆசிரியர்கள் தகவல் தெரிவிக்கின்றனர். 

    மேலும் காண

    Source link

  • திமுக மேயருக்கு எதிராக களம் இறங்கிய திமுக கவுன்சிலர்கள் ..! காஞ்சி மாநகராட்சியில் நடப்பது என்ன ?

    திமுக மேயருக்கு எதிராக களம் இறங்கிய திமுக கவுன்சிலர்கள் ..! காஞ்சி மாநகராட்சியில் நடப்பது என்ன ?


    <div dir="auto" style="text-align: justify;"><span style="color: #ba372a;"><strong>காஞ்சிபுரம் மாநகராட்சியில் துணை மேயர், மூன்று மண்டல குழு தலைவர்கள், 20 திமுக கவுன்சிலர்கள் உட்பட 30க்கும் மேற்பட்ட கவுன்சிலர்கள்&nbsp; உள்ளிருப்பு போராட்டம்</strong></span></div>
    <h2 dir="auto" style="text-align: justify;">காஞ்சிபுரம் மாநகராட்சி</h2>
    <div dir="auto" style="text-align: justify;">
    <div dir="auto" style="text-align: justify;">காஞ்சிபுரம் மாநகராட்சி 51 வார்டுகளை கொண்டது. காஞ்சிபுரம் மாநகராட்சியில் மாநகராட்சி மேயராக திமுகவைச் சார்ந்த, மகாலட்சுமி யுவராஜ் பதவி வகித்து வருகிறார். காஞ்சிபுரம் மாநகராட்சியில் கடந்த ஒரு ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு சர்ச்சைகள் எழுந்த வண்ணம் உள்ளன. அவ்வப்பொழுது ஆளுங்கட்சி கவுன்சிலர்களே மேயர் செயல்பாட்டிற்கு எதிராக போர் கொடி தூக்குவது அதேபோன்று எதிர்க்கட்சி கவுன்சிலர்கள் தொடர்ந்து பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபடுவது என்பது தொடர்கதை ஆகியுள்ளது.</div>
    <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div>
    <h2 dir="auto" style="text-align: justify;"><strong> 21 தீர்மானங்கள் ரத்து&nbsp;</strong></h2>
    <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div>
    <div dir="auto" style="text-align: justify;">இந்தநிலையில், காஞ்சிபுரம் மாநகராட்சியின் ஆணையராக கடந்த சில மாதங்களுக்கு முன்பு செந்தில் முருகன் நியமிக்கப்பட்டார். செந்தில் முருகன் கவுன்சிலர்களுக்கு உரிய மரியாதை தருவதில்லை என எதிர்கட்சி கவுன்சிலர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அதேபோன்று திமுக கவுன்சிலர்களையும் அவர் மதிப்பதில்லை என இன்று நடந்த மாதாந்திர கூட்டத்தில் திமுக கவுன்சிலர்கள் தொடர்ந்து கூச்சலிட்டதால், இன்று நிறைவேற்றப்பட இருந்த 21 தீர்மானங்கள் அனைத்தையும் ரத்து செய்யப்படுவதாக மேயர் மகாலட்சுமி அறிவித்து கூட்டத்தை பாதியிலேயே முடித்தார்.</div>
    <div dir="auto" style="text-align: justify;"><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/12/fc46a5e5f478b57336ac6bc37839de3b1710234351980113_original.jpg" /></div>
    <h2 dir="auto" style="text-align: justify;"><strong>பாதாள சாக்கடை திட்டம்</strong></h2>
    <div dir="auto" style="text-align: justify;">கூட்டம் முடிந்த பிறகும் திமுக கவுன்சிலர்கள் வெளியேறாமல் இருக்கையில் அமர்ந்து தொடர்ந்து உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தொடர்ந்து வீடு கட்டுவதற்கான அனுமதி பெறுவதில் அதிகாரிகள் லஞ்சம் பெறுவதாகவும், வார்டுகளுக்கு மக்கள் பிரச்சினைகளுக்கு முக்கியத்துவம் தராமல் இது போன்று வீடு கட்ட அனுமதி தருதல் , புதிய வீட்டுமனைகள் உருவாக்க அனுமதி வழங்குதல் உள்ளிட்ட பணிகள் மட்டும் நடைபெறுவதாகவும் குற்றச்சாட்டை முன் வைத்துள்ளனர். நேற்று புதிதாக 250 கோடி மதிப்பீட்டில் பாதாள சாக்கடை திட்டம், அவசர அவசரமாக நேற்று பூமி பூஜை செய்யப்பட்டதாகவும், இவற்றுக்கு மாமன்ற உறுப்பினர்களுக்கு எந்தவித தகவலும் தரப்படவில்லை எனக் கூறி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.</div>
    <h2 dir="auto" style="text-align: justify;"><strong>துணை மேயர் குமரகுருநாதன்</strong></h2>
    <div dir="auto" style="text-align: justify;">இந்தப்போராட்டத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த துணை மேயர் குமரகுருநாதன் மற்றும் மூன்று மண்டல தலைவர்களும் அவர்களுடன் 20 திமுக கவுன்சிலர்களும் கலந்து கொண்டிருப்பது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இவர்களுக்கு ஆதரவாக அதிமுக , பாமக மற்றும் பாஜகவை சேர்ந்த பத்திற்கும் மேற்பட்ட கவுன்சிலர்களும் கலந்து கொண்டுள்ளனர் . இதன் காரணமாக காஞ்சிபுரம் மாநகராட்சி பரபரப்புடன் காணப்படுகிறது.</div>
    <div class="yj6qo" style="text-align: justify;"><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/12/dd8ae5c1057e0f953de5bf3efb7a21651710234370796113_original.jpg" /></div>
    <div class="adL" dir="auto" style="text-align: justify;">
    <h2 style="text-align: justify;">&nbsp;தொடரும் பிரச்சினைக்கு காரணம் என்ன ?</h2>
    <p style="text-align: justify;">கடந்த சில மாதங்களாகவே, &nbsp;மாநகராட்சி மேயர் மற்றும் கவுன்சிலர்களுக்கு இடையே உரசல் அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. &nbsp;தொடர்ந்து கவுன்சிலர்கள் மெய்யருக்கு எதிராக &nbsp;குரல் கொடுத்து வருவதால், சில மாதங்களுக்கு முன்பு கூட&nbsp; கவுன்சிலர்கள் மற்றும் &nbsp;மேயர் ஆதரவாளர்களுக்கு இடையே &nbsp;சமாதானம் ஏற்படுத்த அதிகாரப்பூர்வமற்ற &nbsp;சமாதான பேச்சு வார்த்தையும் நடந்தேறியது. இதன் பிறகு பிரச்சினை தீரும் என &nbsp;நினைத்த நிலையில் மீண்டும் பிரச்சனைகள் எழுந்துள்ளன. ஒருபுறம் எதிர்க்கட்சி கவுன்சிலர்கள் அடிப்படை வசதிகள் செய்து தரவில்லை, உரிய மரியாதை கொடுப்பதில்லை, தங்கள் வார்டுகளுக்கு எந்தவித அரசு நல திட்ட பணிகளையும் மேற்கொள்வதில்லை என்ற குற்றச்சாட்டை முன்வைத்து போராடும் நிலையில், தற்பொழுது திமுக கவுன்சிலர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருவது &nbsp;மேயர் தரப்புக்கு தலைவலியை அதிகரித்துள்ளது. இன்று நடைபெறும் உள்ளிருப்பு போராட்டத்தில் கூட, அதிமுக கவுன்சிலர்கள் &nbsp;முறைகேடுகளை தடுக்க வேண்டுமென பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.</p>
    </div>
    </div>

    Source link

  • சலவைத் தொழிலாளி மகன் நீதிபதியாக தேர்வு…சாதித்தது எப்படி ? 

    சலவைத் தொழிலாளி மகன் நீதிபதியாக தேர்வு…சாதித்தது எப்படி ? 


    <p style="text-align: justify;"><strong>சிவில் நீதிபதியாக தேர்வு பெற்றுள்ள காஞ்சிபுரம் சலவை தொழிலாளி மகன் பாலாஜி, நேர்மையாக வழக்குகளை விரைந்து முடிக்கும் வகையில், செயல்பாடுகள் இருக்கும் எனத் தெரிவித்துள்ளார்.</strong></p>
    <p style="text-align: justify;"><strong>தமிழ்நாடு கல்வியும்&nbsp;</strong></p>
    <p style="text-align: justify;">தமிழ்நாடு கல்வியில் மிகச்சிறந்த மாநிலமாக இந்திய அளவில் திகழ்ந்து வருகிறது. குறிப்பாக பள்ளி படிப்பை மேற்கொள்ளும் மாணவர்கள், மேல் படிப்பை தொடர்வதில் சிறந்த மாநிலமாக தமிழ்நாடு விளங்கி வருகிறது. தொடர்ந்து தமிழ்நாட்டில் சாதாரண அரசு பள்ளிகளில் படித்தும், படிப்பை மட்டுமே நம்பி முன்னேறிய பல ஆளுமைகள் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். இதனால் தொடர்ந்து தமிழ்நாட்டில் கல்வி மூலமாக சாதனை மேற்கொள்ளும் நபர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் காஞ்சிபுரம் நகரத்தில் மிகவும் எளிய குடும்பத்தைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் சிவில் நீதிபதியாக தேர்ச்சி அடைந்திருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.</p>
    <p><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/20/e1acdaa6fb597b9dbc0df34171d091bf1708404118018739_original.jpg" /></p>
    <p style="text-align: justify;"><strong>விடாப்பிடியாக படித்த பாலாஜி</strong></p>
    <p style="text-align: justify;">காஞ்சிபுரம் சேக்குப்பேட்டை சாலியர் தெற்கு தெருவில் வசிக்கும் சலவை தொழிலாளி மகன் சிவில் நீதிபதியாக தேர்வு பெற்றுள்ளது காஞ்சிபுரத்தில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. சலவை தொழிலாளியான கணேசன் – மேகலா தம்பதியரின் இரண்டாவது மகனான பாலாஜி சிறுவயதிலே படிப்பின் மீது ஆர்வம் உள்ள நபராக இருந்துள்ளார். காஞ்சிபுரத்தில் தனது பள்ளிப்படிப்பை நிறைவு செய்த நிலையில், அதனை &nbsp;தொடர்ந்து வழக்கறிஞராக வேண்டும் என எண்ணிய பாலாஜி சென்னை அம்பேத்கர் சட்டக் கல்லூரியில் சட்டம் பயின்றுள்ளார்.</p>
    <p><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/20/9be8cd6905a564fb822c2197dfccc15d1708404146501739_original.jpg" /><br /><strong>சாதித்துக் காட்டிய பாலாஜி</strong></p>
    <p style="text-align: justify;">சட்டப்படிப்பில் தேர்ச்சி பெற்ற நிலையில் காஞ்சிபுரம் நீதிமன்றத்தில் வழக்கறிஞர் சுகப்பிரியன் என்பவரிடம் பணிபுரிந்து வந்தார். குடும்ப நிலையை கருத்தில், கொண்டு அரசு சிவில் தேர்வினை எதிர்கொள்ளும் வகையில் தன்னை தயார் செய்து கொண்டு கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற முதன்மை தேர்வில் 12,500 பேர் தேர்வு எழுதிய நிலையில் இவர் தேர்ச்சி பெற்று நவம்பர் மாதம் நடைபெற்ற இறுதி தேர்விலும் 472 நபர்களில் ஒன்றாக தேர்ச்சி பெற்றுள்ளார்.</p>
    <p><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/20/c0162c44684ba3df879b4cd7cf4ec27e1708404227261739_original.jpg" /><br /><strong>சிவில் நீதிபதியாக தேர்ச்சி</strong></p>
    <p style="text-align: justify;">அதனைத் தொடர்ந்து ஜனவரி 30 ஆம் தேதி நடைபெற்ற நேர்முகத் தேர்வில் சிறப்பாக செயல்பட்டு கடந்த 11ஆம் தேதி வெளியான முடிவுகளின்படி 237 நபர்களில், இவர் சிவில் நீதிபதியாக தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து பெரும் மகிழ்ச்சி அடைந்து அவரது குடும்பம் மட்டும் உள்ளது. காஞ்சிபுரத்தை சேர்ந்த இளைஞர் சிவில் நீதிபதியாக தேர்ச்சி அடைந்திருப்பது காஞ்சி மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.&nbsp;</p>
    <p><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/20/5f1f50edc9c6a5a959fb0ccd7af0b9ce1708404257094739_original.jpg" /></p>
    <p style="text-align: justify;"><strong>நேர்மை மட்டுமே லட்சியம்</strong></p>
    <p style="text-align: justify;">இதுகுறித்து பாலாஜி நம்மிடம் கூறுகையில், சீனியர் வழக்கறிஞர்கள் பலர் தனக்கு அறிவுரை வழங்கியதாகவும், அவர்களின் வழிகாட்டுதலுடன் படித்ததாகவும் தெரிவித்தார். தேர்வில் வெற்றி பெற நாள் ஒன்றுக்கு எட்டு மணி நேரம் வரை படிப்பிற்காக செலவு செய்ததாக கூறுகிறார் பாலாஜி. நீதிபதி தேர்வில் தேர்ச்சி பெற்றது குறித்து நம்மிடம் கூறுகையில், நாள்தோறும் 8 மணி நேரம் இத்தேர்விற்காக பயிற்சி மேற்கொண்ட நிலையில் வெற்றி பெற்றுள்ளதாகவும், தனது பனிக்காலத்தில் நேர்மையாகவும் வழக்குகளை விரைந்து முடிக்கும் நிலையை கையாளுவேன். இளம் வழக்கறிஞர்கள் காவல் நிலையம் செல்லாமல் நீதிமன்றத்தில் வழக்குகளை நேர்மையாக முடிக்க வேண்டும் என்பதே தனது ஆசை என தெரிவிக்கிறார் நீதிபதி பாலாஜி.</p>

    Source link

  • Pugar petti kanchipuram Residents of Thandalam Anugiragam Avenue have petitioned the District Collector demanding road and drinking water facilities

    Pugar petti kanchipuram Residents of Thandalam Anugiragam Avenue have petitioned the District Collector demanding road and drinking water facilities


    7 ஆண்டுகளுக்கு முன்பு போடப்பட்ட சாலை தற்போது வரை சீரமைக்கப்படவில்லை எனவும்,பல முறை மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என பொதுமக்கள் குற்றச்சாட்டு
     

    காஞ்சிபுரம் ( Kanchipuram News ) காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள மக்கள் நல்லுறவு மைய கூட்டரங்கில் பிரதி வாரம் திங்கட்கிழமை மக்கள் குறைத்தீர் நாள் முகாம் நடைபெறுகிறது. இதில் பலதரப்பட்ட மக்கள் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மனு அளித்து வருகின்றனர். அந்த வகையில் நேற்று தண்டலம் அனுகிரகா அவென்யூ விரிவில் சாலை, கால்வாய் மற்றும் குடிநீர் வசதி செய்து தரக் கோரி பகுதிவாசிகள் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகனிடம் மனு அளித்தனர்.
     
     

    File Photo

    இந்த மனுவில் பகுதிவாசிகள் தெரிவித்ததாவது:
     
    காஞ்சிபுரம் மாவட்டம், குன்றத்தூர் வட்டம், தண்டலம் கிராமத்தில் உள்ள அனுகிரகா அவென்யூ விரிவு என்ற நகரில் கடந்த 12 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். பாலாஜி தெரு, பத்மாவதி தெரு, அலமேலு தெரு மற்றும் பேசில் கோல்ட் தெரு ஆகிய 4 தெருக்களை உள்ளடக்கி உள்ள இந்த நகரில் சுமார் 400-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

     
    இந்நிலையில் 7 ஆண்டுகளுக்கு முன்பு ஒரே ஒரு முறை மட்டுமே சாலை போடப்பட்டுள்ளது. இந்த சாலையும் 5 ஆண்டுகளாக இயற்கை சீற்றங்களாலும், வாகன போக்குவரத்தினாலும் முற்றிலும் சேதமடைந்ததாக தெரிவிக்கின்றனர். மேலும், கால்வாய் வசதி இல்லாத காரணத்தால் வீடுகளில் இருந்து வெளியேறும் நீரானது சாலைகளின் நடுவே தேங்குகிறது.
     
    இதனால் சாலை சேதமடைவது மட்டுமின்றி கொசுக்களும் அதிகளவில் உற்பத்தியாகின்றன. இதனால் பொதுமக்கள் மற்றும் குழந்தைகளுக்கு டெங்கு, மலேரியா மற்றும் டைஃபாய்டு உள்ளிட்ட காய்ச்சல் ஏற்பட்டு அவதிக்குள்ளாகி வருவதாகவும் கூறப்படுகிறது.
     
     


    File Photo

    இதனைத் தொடர்ந்து குடியிருப்புகளின் அருகே பொது கால்வாய் உள்ளதால் அந்த கால்வாய் நீரானது குடிநீரில் கலந்து குடிநீர் மாசுபடும் சூழலும் உருவாவுதாகவும் தெரிவிக்கின்றனர். சாலை, குடிநீர் மற்றும் கால்வாய் வசதி உள்ளிட்ட வசதிகளை செய்து தரக் கோரி கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு குடியிருப்போர் நல சங்கம் ஒன்றை அமைத்து அதன் மூலமாக ஊராட்சி மன்றத் தலைவர், அரசு அலுவலர்கள், அமைச்சர் உள்ளிட்ட பலரை நேரில் சந்தித்து மனு அளித்தும் தற்போது வரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. எனவே, அடிப்படை வசதிகளான சாலை, கால்வாய் மற்றும் குடிநீர் வசதிகளை உடனடியாக சரி செய்து தர கோரி மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி மோகனிடம் மனு அளித்தனர்.

     

    Pugar Petti: ABP NADU-இன் புகார் பெட்டி: நீங்களும் ரிப்போர்ட்டர் ஆகலாம்; இருக்கும் இடத்தில் சமுதாய நலப்பணி!
    உங்கள் கண்முன்னே நடக்கும் அநியாயங்களைத் தட்டிக்கேட்கத் தயக்கமாக இருக்கிறதா? காலங்காலமாக மாறவே மாறாத ஒன்றை, நாம் என்ன செய்து மாற்றத்தைக் கொண்டு வந்துவிட முடியும் என்று மலைப்பாக இருக்கிறதா? ஆன்லைன் வெளியில் நடக்கும் மோசடிகள் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறதா?
    கவலையே வேண்டாம். 
    சமுதாயத்தின் தேவைகளையும் பிரச்சனைகளையும் தீர்க்கக் காத்திருக்கிறது புகார் பெட்டி. ABP NADU தொடங்கியுள்ள புகார் பெட்டி, அரசுக்கும் மக்களுக்கும் இடையிலான இணைப்புப் பாலமாகச் செயல்பட உள்ளது. மக்கள் தங்களைச் சுற்றிலும் நடக்கும் முறைகேடுகளை,  நீண்ட நாட்களாகத் தீர்க்கப்படாத குறைகளை புகார் பெட்டி மூலம் தீர்க்கலாம். சமூகத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சியில் நம்முடைய பங்கு சிறிதேனும் இருக்க வேண்டும் என்று யோசிப்பவரா நீங்கள்? நீங்களும் புகார் பெட்டியை அணுகலாம்.
    நீங்கள்  ABP NADU-ன் 6382219633 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு, புகைப்படங்களுடன் பிரச்சினைகள் குறித்து சில வரிகளில் அனுப்பி வைக்கலாம். வீடியோ எடுத்தும் பிரச்சினைகளைப் பேசி அனுப்பலாம். pugarpetti@abpnetwork.com என்ற இ-மெயில் முகவரிக்கும் மேலே சொன்னவாறு அனுப்பலாம்.

    மேலும் காண

    Source link

  • kanchipuram book fair 2024 Starts today In Kanchipuram 9th february to 19 th february 2024 at kanchipuram collector office ground TNN

    kanchipuram book fair 2024 Starts today In Kanchipuram 9th february to 19 th february 2024 at kanchipuram collector office ground TNN


    காஞ்சிபுரம் மாவட்டம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக அண்ணா காவல் அரங்கம் மைதானத்தில் இரண்டாவது மாபெரும் புத்தக திருவிழா- 2024 09.02.2024 முதல்  19.02.2024 வரை 11 நாட்கள் நடைபெறவுள்ளது.
    காஞ்சிபுரம் புத்தக திருவிழா 2024 ( kanchipuram book fair 2024 )
    காஞ்சிபுரம் மாவட்ட மக்கள் மற்றும் பள்ளி, கல்லூரி மாணவ/ மாணவியர்கள் பயன்பெறும் வகையில் மாவட்ட நிர்வாகம் மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர் பதிப்பாளர் சங்கம் மற்றும் பதிப்பாளர் சங்கம் (bapasi) இணைந்து, நடத்தும் இரண்டாவது மாபெரும் புத்தக திருவிழா-2024 தொடங்கப்படவுள்ளது. இப்புத்தக திருவிழா 09.02.2024 முதல் 19.02.2024 வரை 11 நாட்கள் நடைபெறுகின்றது. புத்தக திருவிழா நாள்தோறும் காலை 10 மணிக்கு தொடங்கி இரவு 9 மணி வரை நடைபெறவுள்ளது. இதில் தென்னிந்தியா முழுவதிலும் இருந்து பல்வேறு பதிப்பாளர்கள் மற்றும் புத்தக வெளியீட்டாளர்கள் கலந்து கொள்ளும் வகையில் 100 அரங்குகள் அமைக்கப்பட்டு, சுமார் 50,000 தலைப்புகளில் பல இலட்சக்கணக்கான புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டவுள்ளன. இப்புத்தக கண்காட்சி அறிவு பசிக்கு மாபெரும் விருந்தாகும், இப்புத்தக கண்காட்சியில் பல எழுத்தாளர்கள் படைப்புகளும் இடம் பெறுகின்றன.
    கலந்து கொள்ளும் சிறப்பு விருந்தினர்கள் ?
    மேலும் புத்தக திருவிழாவிற்கு சிறப்பு சேர்க்கும் வகையில் முதல் நாள் துவக்க விழாவினை தொடர்ந்து, 2-வது நாள் ஆயிஷா இரா.நடராஜன் மற்றும் .எம்.பி.நாதன் அவர்களின் சொற்பொழிவுகளும், 3-வது நாள் சியாமளா ரமேஷ்பாபு அவர்களின் சொற்பொழிவும், சூப்பர் சிங்கர் மற்றும் இசைப் பள்ளி குழுவினரின் இசை நிகழ்ச்சிகளும், 4-வது நாள் திருப்பூர் கிருஷ்ணன் அவர்களின் சொற்பொழிவும், பட்டிமன்றம் ராஜா அவர்களின் தலைமையில் பட்டிமன்றமும், 5-வது நாள் எஸ். ராமகிருஷ்ணன் மற்றும் திரைக்கலைஞர் பொன்வண்ணன் ஆகியோரின் சொற்பொழிவுகளும், 6-வது நாள் விழாவில் இயக்குநர் அஜயன் பாலா மற்றும்  பர்வீன் சுல்தானா ஆகியோரின் சொற்பொழிவுகளும், 7-வது நாள் விழாவில் கோபிநாத் அவர்களின் நீயா நானா நிகழ்ச்சியும், ஈரோடு மகேஷ் அவர்களின் பட்டிமன்றம் நிகழ்ச்சியும், 8-வது நாள் விழாவில் கு.சிவராமன் மற்றும் பேராசிரியர் கு.ஞானசம்பந்தம் ஆகியோரின் சொற்பொழிவுகளும், 9-வது நாள் விழாவில் மோகனசுந்தரம் மற்றும் பாவலர் அறிவுமதி ஆகியோரின் சொற்பொழிவுகளும்,  10-வது நாள் விழாவில் கவிஞர் மனுஷ்ய புத்திரன் சொற்பொழிவு மற்றும் கலக்கப்போவது யாரு குழுவினரின் நகைச்சுவை நிகழ்ச்சிகளும், 11-வது நாள் புத்தகத் திருவிழாவின் நிறைவு நாள் விழா என 11 நாட்கள் சிறப்பாக நடைபெறவுள்ளன.
    புத்தகத் திருவிழா செயல்படும் நேரம் ?
    மேலும் புத்தகத் திருவிழாவில் தினந்தோறும் காலை 10 மணி முதல் பிற்பகல் 03 மணி வரை பள்ளி, கல்லூரி மாணவ/மாணவியர்களுக்கான பல்வேறு போட்டிகளும், பிற்பகல் 03 மணி முதல் மாலை 04 மணி வரை பள்ளி, மாணவ/மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகளும், மாலை 04 மணி முதல் மாலை 05 மணி வரை கல்லூரி மாணவ/மாணவியர்களின் கலை நிகழ்ச்சிகளும், மாலை 05 மணி முதல் 06 மணி வரை நாட்டுப்புறக் கலை நிகழ்ச்சிகளும், மாலை 06 மணி முதல் இரவு 09 மணி வரை சிறப்பு அழைப்பாளர்களின் கருத்துரை மற்றும் பல்வேறு கலை நிகழ்ச்சிகளும் நடைபெறவுள்ளது. மாபெரும் இப்புத்தக திருவிழா பொதுமக்கள் மற்றும் மாணவ /மாணவியர்களிடையே வாசிப்பு திறனை உருவாக்கிட 09.02.2024 முதல் 19.02.2024 வரை 11 நாட்கள் நடைபெறவுள்ளன. புத்தக ஆர்வலர்கள் மாணவ/ மாணவியர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டு பயன்பெறுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது.

    மேலும் காண

    Source link

  • காஞ்சியில் கவுன்சிலர்கள் இரண்டு நாள் தொடர் போராட்டம்..! மயங்கி விழுந்த பெண் கவுன்சிலர்..! 

    காஞ்சியில் கவுன்சிலர்கள் இரண்டு நாள் தொடர் போராட்டம்..! மயங்கி விழுந்த பெண் கவுன்சிலர்..! 


    <p style="text-align: justify;"><strong>காஞ்சிபுரம் மாநகராட்சியின் முறைகேடுகளை கண்டித்து நுழைவு வாயிலில் எதிர்க்கட்சி கவுன்சிலர்கள் குழந்தைகளோடு குடும்பத்துடன் இரவு முழுவதும் பாய், தலையனையுடன் உறங்கி போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.</strong></p>
    <p style="text-align: justify;"><strong>காஞ்சிபுரம் மாநகராட்சி</strong></p>
    <p style="text-align: justify;">காஞ்சிபுரம் மாநகராட்சியில் 51 வார்டுகள் உள்ளது. மாநகராட்சியில் 32 திமுக, வி.சி.க 1 , சுயேச்சைகள் 3 என 37 உறுப்பினர்களும், அதிமுக 8 தமிழ் மாநில காங்கிரஸ் 1 , பிஜேபி 1 பாமக 2 ,சுயேச்சைகள் 1 என மொத்தம் 14 எதிர்க்கட்சி மாமன்ற உறுப்பினர்களும் உள்ளனர். நிர்வாக பணிக்காக மாநகராட்சி நான்கு மண்டலங்களாக பிரிக்கப்பட்டு பொது மக்களுக்கு தேவையான குடிநீர், சாலை வசதி, தெரு விளக்கு ,பாதாள சாக்கடை , குப்பைகளை கையாளுவது உள்ளிட்ட சேவைகள் மேற்கொள்ளப்படும் என &nbsp;தெரிவிக்கப்பட்டது.&nbsp;</p>
    <p><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/06/5d24a484e14e34cfdad4a952eaf0e4a21707215231881739_original.jpg" /></p>
    <p style="text-align: justify;"><strong>எதிர்க்கட்சி மாமன்ற உறுப்பினர்கள் போர் கொடி</strong></p>
    <p style="text-align: justify;">எதிர்க்கட்சி மாமன்ற உறுப்பினர்களின் வார்டுகளுக்கு, எந்தவித மேம்பாட்டு பணிகளும் செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு தொடர்ந்து எழுந்து வருகிறது. மேலும் கடந்த இரண்டு மாதங்களாக மாமன்ற உறுப்பினர்களின் மாதாந்திர கூட்டமும் முறையாக நடைபெறவில்லை. அதுமட்டுமல்லாமல், &nbsp;திமுக கட்சியை சேர்ந்த மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ் அவர்களின் ஒரு தலைப்பட்சமான நிர்வாகத்தை கண்டித்தும் எதிர்க்கட்சி மாமன்ற உறுப்பினர்கள் ஆணையர் செந்தில்குமார் இடம் மனு அளித்தனர்.</p>
    <p><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/06/4c1cd81ce6ffa3a15b99c5c41bf27fff1707215294711739_original.jpg" /></p>
    <p style="text-align: justify;">&nbsp;</p>
    <p style="text-align: justify;"><strong>கவுன்சிலர்கள் குற்றச்சாட்டு</strong></p>
    <p style="text-align: justify;">எதிர்க்கட்சியை சேர்ந்த 14 வார்டுகளிலும் இதனால் வரையில் &nbsp;எந்த அடிப்படை பணிகளும் செய்யாமல் &nbsp;வார்டுகளை புறக்கணித்து மக்கள் மத்தியில் அதிமுக உள்ளிட்ட எதிர்கட்சி மாமன்ற உறுப்பினர்களுக்கு அவப்பெயரை வாங்கித் தர திமுகவும் மாமன்ற ஊழியர்களும் முயற்சிப்பதாக அதிமுக மாமன்ற உறுப்பினர்கள் குற்றம் சுமத்துகிறார்.</p>
    <p style="text-align: justify;">&nbsp;</p>
    <p><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/06/8f25a16c81bf100ae13565c88a0d300e1707215322920739_original.jpg" /></p>
    <p style="text-align: justify;">காஞ்சிபுரம் மாநகராட்சியின் பல்வேறு முறைகேடுகள் ஈடுபடுவதாக கோரி, &nbsp;அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சி மாமன்ற உறுப்பினர்கள் காலை முதல் கூறி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டு வந்ததால் மாநகராட்சி பரபரப்பாக ஏற்படுத்தியது.</p>
    <p style="text-align: justify;"><strong>விடிய விடிய நடைபெற்ற போராட்டம்</strong></p>
    <p style="text-align: justify;">மேலும் மாலையுடன் போராட்டத்தில் இருந்து பின்வாங்கி செல்வார்கள் என எதிர்பார்த்த நிலையில், &nbsp;மாநகராட்சி ஆணையர் தற்போது வரை பேச்சுவார்த்தை நடந்ததால் அதிமுக, பாஜக , தமிழ் மாநில காங்கிரஸ் மற்றும் சுயேச்சை உள்ளிட்ட எதிர்க்கட்சி கவுன்சிலர்கள் 9 கவுன்சிலர்கள் தங்கள் குழந்தைகளுடன் குடும்பத்தாருடன் நுழைவாயிலில் &nbsp;உறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.</p>
    <p><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/06/c7418e501b9edf8506e993b9511ee4731707215351668739_original.jpg" /></p>
    <p style="text-align: justify;">&nbsp;</p>
    <p style="text-align: justify;">இந்தநிலையில் காலை அதிகாரிகள் பேச்சுவார்த்தைக்கு வராததால் தொடர்ந்து போராட்டம் நடைபெற்று வந்தது. இந்தநிலையில் மதியம் மேயர் மற்றும் ஆணையர் ஆகியோர் பேச்சுவார்த்தைக்கு, வந்த பொழுது பாஜகவை சேர்ந்த பெண் கவுன்சிலர் மயங்கி விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பெண் கவுன்சிலர் ஒருவர் மயங்கி விழுந்ததை எடுத்து அவரை காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கவுன்சிலர்கள் போராட்டமும் பெண் கவுன்சிலர் மயங்கி விழுந்த சம்பவம் காஞ்சிபுரத்தில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.</p>

    Source link

  • மீண்டும் பேருந்துகள் ஓடாதா ? –  போக்குவரத்து சங்கங்கள் எடுக்கக்கூடிய முடிவு என்ன ?

    மீண்டும் பேருந்துகள் ஓடாதா ? – போக்குவரத்து சங்கங்கள் எடுக்கக்கூடிய முடிவு என்ன ?


    <p style="text-align: justify;">நாளை நடைபெறும் பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை என்றால் கலந்து ஆலோசனை செய்து போராட்டத்தை துவக்குவோம் என அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் கமலக்கண்ணன் கூறியுள்ளார்.</p>
    <p style="text-align: justify;">காஞ்சிபுரம் பேருந்து நிலையத்தில் உள்ள போக்குவரத்து பணிமனை முன்பாக, அண்ணா தொழிற்சங்க பேரவை மற்றும் கூட்டமைப்பு சங்கங்களில் வாயிற் கூட்டம் நடைபெற்றது. போக்குவரத்து தொழிலாளர்களின் 15 வது ஊதிய உயர்வு ஒப்பந்தம் நடைபெறாததும் , ஓய்வு பெற்ற தொழிலாளர்களின் அகவிலைப்படி உயர்வு மற்றும் நிலுவைத் தொகை மற்றும் பென்ஷன் வழங்காததை கண்டித்து இந்த கூட்டம் நடைபெற்றது.</p>
    <p style="text-align: justify;">&nbsp;</p>
    <p><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/06/f1c080a5ab3c137dbfd96255d603b6341707211673690739_original.jpg" /></p>
    <p style="text-align: justify;">இதில் அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் கமலக்கண்ணன் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார். இந்தக் கூட்டத்தில் தமிழ் மாநில காங்கிரஸ், தேமுதிக, பாமக, புரட்சி பாரதம், விசிக, பாஜக ஆகிய தொழிற்சங்கங்களை சேர்ந்த நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.&nbsp;</p>
    <p><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/06/c3f0d399a04a9b43329fefe9a342bb3d1707211694383739_original.jpg" /></p>
    <p style="text-align: justify;">அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் கமலக்கண்ணன் செய்தியாளர்களை சந்தித்த பொழுது தெரிவித்ததாவது: கடந்த முறை போராட்டம் நடைபெற்ற பொழுது <a title="பொங்கல் பண்டிகை" href="https://tamil.abplive.com/pongal-celebrations" data-type="interlinkingkeywords">பொங்கல் பண்டிகை</a> முன்னிட்டு நீதிமன்றம் அறிவுறுத்தலின்பேரில் போராட்டத்தை வாபஸ் பெற்றோம். எங்களின் கோரிக்கையை நியாயமானது என்று நீதிமன்றமும் தெரிவித்து இருந்தது. அதன் பிறகு நடைபெறும் பேச்சுவார்த்தையில் முக்கிய அதிகாரிகள் கலந்து கொள்வது கிடையாது.</p>
    <p><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/02/06/1609b61f1f6b5750758465e24830cad21707211715775739_original.jpg" /><br />கலந்து கொள்ளும் அதிகாரிகளிடம் தங்கள் கோரிக்கைகளை கூறினால் அதை மேல் இடத்தில் கூறுகிறார்கள். ஒரு பேச்சுவார்த்தை நடைபெற வேண்டும் என்றால், ஒரு குழு அமைக்கப்பட வேண்டும். அதே போன்று அமைச்சரும் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்வது கிடையாது. நாளை நடைபெற உள்ள பேச்சுவார்த்தையில் அமைச்சர் கலந்து கொள்ளாததால், முடிவுகள் எட்டப்படுவது சந்தேகம். நாங்கள் ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு நிலுவைத் தொகையை கேட்கிறோம் நாங்கள் எதுவும் கூடுதலாக கேட்கவில்லை. புதிதாக வேலைக்கு ஆட்கள் எடுக்கக் கூறுகிறோம். இதை கூட இந்த அரசு செவி சாய்க்காமல் இருப்பது மிகவும் கண்டனத்திற்குரியது. நாளை தினம் பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படவில்லை என்றால் கலந்து ஆலோசனை செய்து போராட்டத்தை துவக்குவோம் என இந்த தருணத்தில் தெரிவித்துக் கொள்கிறேன்</p>

    Source link

  • காஞ்சியில் செல்வ விநாயகர் ஆலய கும்பாபிஷேகம்..! பக்தி பரவசத்தில் பக்தர்கள்..!

    காஞ்சியில் செல்வ விநாயகர் ஆலய கும்பாபிஷேகம்..! பக்தி பரவசத்தில் பக்தர்கள்..!


    <div dir="auto"><span style="color: #007319;"><strong>காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட விளகொடி கோவில் தோப்பு தெரு பகுதியில் உள்ள ஸ்ரீ செல்வ விநாயகர்&nbsp; கோயில் 15 ஆண்டுகளுக்கு பிறகு இன்று வெகு விமரிசையாக மஹா கும்பாபிஷேகம் நடைபெற்றது</strong></span></div>
    <div dir="auto">&nbsp;</div>
    <h2 dir="auto"><span style="color: #007319;"><strong><span style="color: #000000;">ஸ்ரீ செல்வ விநாயகர்&nbsp; கோயில்</span> </strong></span></h2>
    <div dir="auto">காஞ்சிபுரம் மாநகராட்சிக்கு உட்பட்ட விளகொடி கோயில் தோப்பு தெரு உள்ள ஸ்ரீ செல்வ விநாயகர் கோயில் சிதலமடைந்து இருந்த நிலையில் கோயில் நிர்வாகி சார்பில் கோவில் புரணைப்பு பணிகள் நிறைவடைந்த நிலையில் 15 ஆண்டுகளுக்கு பின் பூர்ண கும்ப மகா கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது.&nbsp; இத்திருக்கோவிலில் இன்று மஹா கும்பாபிஷேகம் விழாவனது வெகு விமரிசையாக நடைபெற்றது.</div>
    <div dir="auto">&nbsp;</div>
    <figure class="image"><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/24/6e8779023ba24fbc4a4865f47409624f1706090180858113_original.jpg" alt="ஸ்ரீ செல்வ விநாயகர்&nbsp; கோயில்" />
    <figcaption>ஸ்ரீ செல்வ விநாயகர்&nbsp; கோயில்</figcaption>
    </figure>
    <p>&nbsp;</p>
    <div dir="auto" style="text-align: justify;">கும்பாபிஷேக விழாவையொட்டி கோயில் அருகாமையில் உள்ள வளகத்தில் யாக சாலை அமைக்கப்பட்டு பூஜை, கோ பூஜை, லஷ்மி ஹோமம், விசேஷ திரவ்ய ஹோமம் பூர்ணாஹதி நடைபெற்று. இன்று காலை கஜ பூஜை, அஸ்வ பூஜைகள் செய்து மஹா பூர்ணாஹதி தீபாரதனைகள் நடைபெற்றது. அதன்பின் ராஜ கோபுரம், விமானங்களுக்கு&nbsp; பல்வேறு நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் ஊற்றப்பட்டு மஹா கும்பாபிஷேகமானது&nbsp; வெகு விமரிசையாக நடைபெற்றது.&nbsp;</div>
    <h2 dir="auto" style="text-align: justify;"><strong>புனித நீர் ஊற்றப்பட்டது</strong></h2>
    <div dir="auto" style="text-align: justify;">அதன்பின் அருள்மிகு ஸ்ரீ செல்வ விநாயகர் சுவாமிக்கு சிறப்பு தீப தூப தீபாராதனைகளும், சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இந்த கும்பாபிஷேக பெரு விழாக்காண மேலும் சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேகம் நடைபெற்று கலசத்தில் ஊற்றப்பட்ட புனித நீரை பக்தர்கள் தெளித்து கொண்டனர். பொதுமக்கள் அனைவருக்கும் அருட் பிரசாதங்களும், அன்னதானங்களும் வழங்கப்பட்டது. மஹா கும்பாபிஷேக பெரு விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் விழா குழுவினர் வெகு சிறப்பாக நடைபெற்றது.</div>
    <div dir="auto" style="text-align: justify;">&nbsp;</div>
    <div dir="auto"><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/24/750e872016f8f8e9736672fbeafc19b31706090256991113_original.jpg" /></div>
    <div dir="auto" style="text-align: justify;">
    <div dir="auto">&nbsp;</div>
    <div dir="auto"><strong>கும்பாபிஷேகம் என்றால் என்ன ?</strong></div>
    <div dir="auto">&nbsp;</div>
    <div dir="auto">கும்பாபிஷேகம் (அ) குடமுழுக்கு விழா ( அ ) நன்னீராட்டு பெருவிழா, ஒவ்வொரு இந்து கோவிலிலும் 12&nbsp; ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்த வேண்டும் என நம்பப்படுகிறது. இவ்வாறு கும்பாபிஷேகம் நடைபெறும் பொழுது கோவில் கருவறையில் உள்ள கடவுள்களுக்கு சக்தி புதுவிக்கப்படுவதாகவும், தெய்வத்தன்மை அதிகரிக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை. குடத்தில் பல்வேறு நீர் நிலைகளில் கொண்டுவரப்பட்ட நீரை நிரப்பி பல்வேறு மூலிகைகள் ஆன்மீகச் சார்ந்த பொருட்கள் கலக்கப்பட்டு, சில நாட்கள் மாபெரும் யாகம் வளர்க்கப்படும்.</div>
    <div dir="auto"><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/24/87634505cdb510c8bab7de8d9d0f425f1706090290287113_original.jpg" /></div>
    <div dir="auto">&nbsp;</div>
    <div dir="auto">எவ்வாறு வளர்க்கப்படும் யாகசாலையில், பல்வேறு ஆன்மீகப் பொருட்கள் மூலம் வேள்வி வளர்க்கப்பட்டு மந்திரங்கள் உற்சவிக்கப்படும். இவ்வாறு கூறப்படும் மந்திரத்தால் புனித நீர் சக்தி பெறுவதாக நம்பப்படுகிறது. இந்த புனித நீரை கோபுரத்தில் உள்ள கலசத்தின் மீது, குறிப்பிட்ட நன்னாளில் ஊற்றும் பொழுது அந்த கலசங்கள் சக்தி பெற்று, அதன் மூலம் கருவறையில் உள்ள தெய்வத்திற்கு சக்தி கிடைக்கும் என்பது நம்பிக்கை. கும்பாபிஷேகத்தை வருடத்திற்கு மூன்று முறை நேரில் கண்டால் ஒரு கோவில் கட்டியதற்கு சமம் என நம்பப்படுகிறது. இந்த பொண் மக்கள் மீது தெளிக்கப்படும் பொழுது, பாவங்கள் நீங்கி மனது நிம்மதி அடையும் என பக்தர்கள் நம்புகின்றனர்.</div>
    </div>
    <div class="yj6qo" style="text-align: justify;">&nbsp;</div>
    <div class="adL" dir="auto" style="text-align: justify;">&nbsp;</div>

    Source link