<p style="text-align: justify;"><strong>கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் பங்குனி மாத திருவிழாவை முன்னிட்டு பஞ்ச மூர்த்திகள் சுவாமி திருவீதி உலா நடைபெற்றது.</strong></p>
<p style="text-align: justify;"> </p>
<p style="text-align: justify;"> </p>
<p><strong><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/19/0faeb52b4a6e2a991431d5e2ee3d16fd1710835340471113_original.jpeg" /></strong></p>
<p style="text-align: justify;"> </p>
<p style="text-align: justify;">தென் தமிழகத்தில் புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, ஸ்ரீ சௌந்தரனாகி உடனுறை ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு கொடியேற்றத்துடன் நாள்தோறும் நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் பஞ்சமூர்த்தி என்று அழைக்கப்படும் கற்பக விநாயகர், வள்ளி, தெய்வானை சமேத ஆறுமுக சுவாமி, அலங்காரவல்லி, சௌந்தரநாயகி, கல்யாண பசுதீஸ்வரர் உள்ளிட்ட சுவாமிகளுக்கு சிறப்பு பொருட்களால் அபிஷேகம் நடைபெற்று அதன் தொடர்ச்சியாக சுவாமிகளுக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்த பிறகு வெள்ளி ரத வாகனத்தில் ஆலயத்திலிருந்து மேள தாளங்கள் முழங்க சுவாமிகள் திருவீதி உலா சிறப்பாக நடைபெற்றது.</p>
<p style="text-align: justify;"> </p>
<p><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/19/025b0b9faf202cf4d3db39a92095eea11710835360191113_original.jpeg" /></p>
<p style="text-align: justify;"> </p>
<p style="text-align: justify;">பஞ்ச மூர்த்திகள் திருவீதி உலா முக்கிய வீதியில் வழியாக வலம் வந்த பிறகு மீண்டும் ஆலயம் குடி புகுந்தது. ஆலயம் குடி புகுந்த பஞ்சமூர்த்தி சுவாமிகளுக்கு கும்ப ஆலாத்தியுடன் மகா தீபாராதனை காட்டினார். அதைத் தொடர்ந்து அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியின் ஏற்பாட்டை அருள்மிகு ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலய செயல் அலுவலர் மற்றும் பணியாளர்கள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர்.</p>
<p style="text-align: justify;"><strong>கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் சுவாமி அதிகார நந்தி வாகனத்திலும், அம்பிகை அன்ன பறவை வாகனத்திலும் திருவீதி உலா காட்சி.</strong></p>
<p style="text-align: justify;"> </p>
<p style="text-align: justify;"> </p>
<p style="text-align: justify;"> </p>
<p><strong><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/19/c3efd6aa198600f33d50f26178d607f41710835419428113_original.jpeg" /></strong></p>
<p style="text-align: justify;"> </p>
<p style="text-align: justify;">தென் தமிழகத்தில் புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, ஸ்ரீ சௌந்தரநாயகி உடனுறை ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் பங்குனி மாத உத்திரத்தை முன்னிட்டு கொடியேற்றத்துடன் நாள்தோறும் பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் அதிகார நந்தி வாகனத்திலும், மற்றும் அம்பிகை அன்னப்பறவை வாகனத்திலும் திருவீதி உலா காட்சி அளித்தனர். </p>
<p style="text-align: justify;"> </p>
<p style="text-align: justify;"> </p>
<p><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/03/19/c683c5771be309a3926204f315911e4d1710835615836113_original.jpeg" /></p>
<p style="text-align: justify;"> </p>
<p style="text-align: justify;"> </p>
<p style="text-align: justify;">இந்நிகழ்ச்சியை முன்னிட்டு சுவாமிகளுக்கு சிறப்பு பொருட்களால் அபிஷேகம் நடைபெற்ற அதன் தொடர்ச்சியாக ஆலயம் மண்டபத்தில் சுவாமிக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்த பிறகு கல்யாண பசுபதீஸ்வரர்வை அதிகார நந்தி வாகனத்திலும், அம்பிகையை அன்னப்பறவை வாகனத்திலும் கொலுவிருக்க செய்தனர். அதை தொடர்ந்து ஆலயத்தின் சிவாச்சாரியார் மகா தீபாராதனை காட்டிய பிறகு ஆலயத்தில் இருந்து மேள தாளங்கள் முழங்க புறப்பட்ட சுவாமியின் திருவீதி உலா முக்கிய வீதியில் வழியாக வலம் வந்த பிறகு மீண்டும் ஆலயம் குடி புகுந்தது. கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்று வரும் பங்குனி மாத திருவிழாவின் அதிகார நந்தி வாகன திருவீதி உலாவை காண ஏராளமான பக்தர்கள் வழியிலும் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய செயல் அலுவலர் மற்றும் பணியாளர்கள் சார்பாக சிறப்பாக செய்திருந்தனர்.</p>
<p style="text-align: justify;"> </p>
<p style="text-align: justify;"> </p>
<p style="text-align: justify;"> </p>
<p style="text-align: justify;"> </p>
<p style="text-align: justify;"> </p>
Tag: Kalyana Pasupadeeswarar Temple
கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் பஞ்ச மூர்த்திகள் சுவாமி திருவீதி உலா

Flag hoisting ceremony at Sri Kalyana Pasupadeeswarar Temple in honor of Panguni Uttram | பங்குனி உத்திரம்! கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் கொடியேற்ற விழா

கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் பங்குனி உத்திரத்தை முன்னிட்டு கொடிமரத்தில் பஞ்ச மூர்த்தி சுவாமிகள் முன்னிலையில் கொடியேற்றம் நடந்தது. இதில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர்.
பங்குனி உத்திரம்:
தென் தமிழகத்தில் புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, ஸ்ரீ சௌந்தரனாகி உடனுறை ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் பங்குனி மாத திருவிழாவை முன்னிட்டு முக்கிய நிகழ்வாகஆலய கொடிமரத்தில் கொடியேற்ற விழா சிறப்பாக தொடங்கியது. இந்நிகழ்ச்சியை முன்னிட்டு அதிகாலை ஆலய நடை திறக்கப்பட்டு அதன் தொடர்ச்சியாக விநாயகர் ,வள்ளி, தெய்வானை சமேத ஆறுமுக சுவாமி மற்றும் ஸ்ரீ அலங்கார வள்ளி , ஸ்ரீ சௌந்தரநாயகி, ஸ்ரீ பசுபதீஸ்வரர் உள்ளிட்ட பஞ்ச மூர்த்தி சுவாமிகளுக்கு சிறப்பு பொருட்களால் அபிஷேகம் நடைபெற்று அதன் தொடர்ச்சியாக பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அறிவித்து பின்னர் ஆலயத்தின் சிவாச்சாரியார்கள் பிரத்தியேக யாகசாலை அமைத்து யாக வேள்வி நடத்தினர்.சிறப்பு அபிஷேகம்:
அதைத் தொடர்ந்து யாக வேள்வியில் பூஜிக்கப்பட்ட புனித தீர்த்தத்தை ஆலய கொடிமரத்தில் சிறப்பு அபிஷேகம் நடத்தி அதன் தொடர்ச்சியாக கொடி மரத்திற்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்து, சந்தன பொட்டிட்டு, மேள தாளங்கள் முழங்க கொடியேற்ற விழா சிறப்பாக தொடங்கியது. அதன் தொடர்ச்சியாக கொடி மரத்திற்கு பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன், மகா தீபாராதனை நடைபெற்றது.தொடர்ந்து கூடியிருந்த அனைத்து பக்தர்களுக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது. கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் பங்குனி மாத உத்தரத்தை முன்னிட்டு நடைபெற்ற கொடியேற்ற விழா நிகழ்ச்சியை காண கரூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதியில் இருந்து ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலயம் வருகை தந்து நிகழ்ச்சியை சிறப்பித்தனர். இந்த நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய செயல் அலுவலர் மற்றும் பணியாளர்கள் உள்ளிட்டோர் சிறப்பான முறையில் ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
வீதி உலா:
பங்குனி உத்திர கொடியேற்ற விழாவை முன்னிட்டு நாள்தோறும் சுவாமி திருவீதி விழா நடைபெற உள்ளது . அதிலும் குறிப்பாக ஸ்ரீ விநாயகர், ஸ்ரீ வள்ளி, ஸ்ரீ தெய்வானை சமேத ஸ்ரீ ஆறுமுக சுவாமி, ஸ்ரீ அலங்காரவல்லி, ஸ்ரீ சௌந்தரநாயகி, ஸ்ரீ கல்யாண பசுதீஸ்வரர் (பஞ்சமூர்த்தி) திருவீதி உலா மாலை நடைபெற உள்ளது. அதன் தொடர்ச்சியாக சுவாமி முக்கிய வீதியில் வழியாக வலம் வந்த பிறகு இரவு ஆலயம் குடி புகுவார். இந்த சிறப்பு நிகழ்ச்சியின் ஏற்பாட்டையும் ஆலய சிவாச்சாரியார்கள் மற்றும் ஆலய நிர்வாகிகள் சிறப்பான முறையில் ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.மேலும் காண
மார்கழி பிரதோஷம்; கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலய நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம்

<p style="text-align: justify;"><strong>மார்கழி மாத பிரதோஷத்தை முன்னிட்டு கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் நந்தி பகவானுக்கு சிறப்பு பொருட்களால் அபிஷேகம் மற்றும் வெள்ளி கவச அலங்காரத்தில் சுவாமி பக்தர்களுக்கு காட்சியளித்தார்.</strong></p>
<p style="text-align: justify;"> </p>
<p style="text-align: justify;"> </p>
<p><strong><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/10/79d95922109a0dc1d31ef8aa4b32e47e1704867986877113_original.jpeg" /></strong></p>
<p style="text-align: justify;">தென் தமிழகத்தில் புகழ்பெற்ற அருள்மிகு ஸ்ரீ அலங்காரவல்லி, ஸ்ரீ சௌந்தரநாயகி உடனுறை ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் மார்கழி மாத பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு என்னை காப்பு சாற்றி, பால், தயிர், பஞ்சாமிர்தம்,தேன், நெய், இளநீர், எலுமிச்சை சாறு, திருமஞ்சள், மஞ்சள், சந்தனம், அபிஷேக பொடி, அரிசி மாவு, பன்னீர்,விபூதி உள்ளிட்ட பல்வேறு வாசனை திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.</p>
<p style="text-align: justify;"> </p>
<p><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/10/380e23f46345e5a2606d7b9e15a995851704868081883113_original.jpeg" /></p>
<p style="text-align: justify;">அதைத் தொடர்ந்து நந்தி பகவானுக்கு பட்டாடை உடுத்தி, வண்ண மாலைகள் அணிவித்த பிறகு, வெள்ளிக்கவசம் சாத்தப்பட்டது. அதன் தொடர்ச்சியாக ஆலயத்தின் சிவாச்சாரியார் உதிரி பூக்களால் நந்தி பகவானுக்கு சிறப்பு அர்ச்சனை செய்தார். பின்னர் நந்தி பகவானுக்கு தூப தீபங்கள் காட்டப்பட்டு, நெய்வேதியம் சமர்ப்பிக்கப்பட்டு, பஞ்ச கற்பூர ஆலாத்தியுடன் மகா தீபாராதனை நடைபெற்றது.</p>
<p style="text-align: justify;"> </p>
<p><br /><img style="display: block; margin-left: auto; margin-right: auto;" src="https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/01/10/73e5d26645b8d69fd6c487ec973b46a01704868100876113_original.jpeg" /></p>
<p style="text-align: justify;"> </p>
<p style="text-align: justify;">கரூர் கல்யாண பசுபதீஸ்வரர் ஆலயத்தில் நடைபெற்ற மார்கழி மாத பிரதோஷ நிகழ்ச்சியை காண கரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் இருந்து ஏராளமான ஆன்மீக பக்தர்கள் ஆலயம் வருகை தந்து சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியின் ஏற்பாட்டை ஆலய செயல் அலுவலர் மற்றும் பணியாளர்கள் சார்பாக சிறப்பாக செய்தனர்.</p>
<p style="text-align: justify;"> </p>
<p style="text-align: justify;"> </p>
<p style="text-align: justify;"> </p>
<p style="text-align: justify;"> </p>
<p style="text-align: justify;"> </p>



